*#வடிவேலு*
இயேசு, "சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்," என்றார்.
ஆம், "வானங்களைச் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர், பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகப் படைத்து உருவேற்படுத்தினார். பூமி என்றைக்கும் நிலைத்திருக்கிறது." ஏசாயா45:18, பிரசங்கி1:4.
*#வரவிருக்கும்இராஜ்யம்* இயேசு பரலோகத்திலிருந்து பூமி திரும்பும்போது தீர்க்கதரிசிகள் உரைத்தபடி தேவன் எல்லாவற்றையும் மறுசீரமைப்பு செய்வார்.
இயேசு ஆதாமிற்கு பதில் தன்னுயிர் கிரயமாக கொடுத்ததால், ஆதாமினால் மரணம் அடையும் மனுக்குலம் அனைத்தும் இயேசு பூமி திரும்புகையில் பூமியில் உயிர்த்தெழும்! [1தீமோ2:4-6, 1கொரி15:21-22]
ஆம், பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய மரித்தோர் விழித்து எழுந்திருப்பார்கள். நியாயத்தீர்ப்பின் காலமாகிய ஆயிர வருட இராஜ்யத்தில் [உயிர்த்தெழுந்த] பூமியின் குடிகள் நீதி கற்றுக்கொள்வர். இயேசு தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார் [தானியேல்12:2, அப்போஸ்தலர்3:21, ஏசாயா26:9, வெளி2:26-27].
நீதி கற்றுக்கொண்டபின் அவர்கள் சோதிக்கப்படுவார்கள் [வெளி20:3]. அதில் தேறுபவர்கள் பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் [மத்தேயு25:34]. #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴


