ShareChat
click to see wallet page
search
சித்திரா பெளர்ணமி 1.5.2026 கடும் வெயில் காலத்தில் குளிர் நிலவுடன் வரும் நாள் சித்திரா பெளர்ணமி ...அன்றுதான் இந்திர லோக தலைவன் இந்திரன் மதுரை சொக்கரை வழிபட்டு பல வரங்களை பெற்றான் .அழகர் ஆற்றில் இறங்கி மதுரையை சொர்க்கமாக மாற்றும் நாள்...மதுரையின் ஆதி வழிபாடு மட்டுமல்ல தமிழின் ஆதி விழா சித்திரை திருவிழா . கோடிக்கணக்கான உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தன் அவதாரம் நாள்...கணக்கு எழுதுபவரின் பிறந்த நாள் என நமக்கு சூட்சுமமாக சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் ஒளிந்து இருக்கிறது பூர்வ புண்ணியாதிபதி சூரியன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார் பேரறிவு கிரகம் லக்னத்தில் இருக்கும் நாள் அறிவுக்கு பலம் கொடுக்கும் நாள் அல்லவா அன்றைய தினம் நம் அறிவுக்கண் பிரகாசம் அடையும் நாள்... மதுரையம்பதியில் சொக்கனை நாளை தரிசிப்பவர்கள் நாளை கிரிவலம் வந்து அண்ணாமலையானை பூசிப்பவர்கள் ,தாமிரபரணியில் குளித்து நெல்லையப்பனை காண்பவர்கள் ,கொடுமுடி மகுடேஸ்வரர் ,பவானி சங்கமேஸ்வரரை ,சென்னை கபாலீஸ்வரனை தரிசிப்பவர்கள் பெரும் புண்ணிய அதிர்ஷ்டக்காரர்கள் ...அவர்கள் மூளை திறன் பல மடங்கு பிரகாசிக்க போகிறது நாளை ஒரு வேளை உணவாவது பசித்தவர்களுக்கு கொடுங்கள் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு பேனா வாங்கி கொடுங்கள் முதியவர்கள் வெயிலில் நொந்து நடந்து செல்பவர்களுக்கு குடையோ செருப்போ வாங்கி கொடுங்கள் ஓம் நமச்சிவாய !!! ஓம் நமோ நாராயணா !!! #சித்ராபெளர்ணமி #🙏🏾சனி பகவான் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சதுர்த்தி விரதம் #🪔கார்த்திகை விரதம்🙏🏻 #🙏அயோத்யா ராமர் கோவில்
🙏🏾சனி பகவான் - ShareChat