https://youtube.com/watch?v=GKjV7x0KqkA&si=drFLxkDwPmmZdZXH 🕉️✡️ சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை 2026 பற்றிய விளக்கம். ✡️🕉️
பராபவ தமிழ் வருஷம் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை
வேத தர்ம ஸாஸ்திரத்தில் க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் ஆகிய யுகங்களில் மனிதப் பிறவிகளாக பிறந்த எந்த வர்ணக் காரர்கள் சித்ரகுப்தனாக இருப்பார்கள் அவர்களுக்கு மட்டும் தான் தானங்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயத்தை தான் பதிவிட இருக்கின்றோம்.
இந்த வீடியோ பதிவானது சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தனாக கலியுகத்தில் வேதம் படித்த வேத தர்ம ஸாஸ்திரம் தெரிந்த ப்ராஹ்மண வர்ணக் காரர்களுக்கு தாங்கள் கொடுக்க கூடிய தஸ (10) தானங்களின் முழு பலன்கள் பற்றிய முழு விளக்கம்.
ஆகவே அடியேனுடைய அனைத்து அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து இந்நன்னாளில் அதன் ப்ரகாரம் கடைபிடித்து கொண்டு வேதம் படித்த வேத ஸாஸ்த்திரம் தெரிந்த ப்ராஹ்மணரை ஸ்ரீ சித்ரகுப்தராக வரித்து நினைத்து கொண்டு அவர்களுடைய பரிபூரண க்ருபா கடாக்ஷமானதும் பரிபூரண ஆசியும் பெற்று தாங்களுக்கும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தஸ (10) தானங்களின் பலன்கள்:
1. கோதானம் பசுமாடு தானமாக கொடுப்பதால் முப்பது முக்கோடி தேவர்கள் தேவதைகள் அனைத்து தெய்வங்களின் பரிபூரண க்ருபா கடாக்ஷமானதும் பரிபூரண ஆசியும் கிடைக்கும்.
2. பூதானம் பூமி தானம் கொடுப்பதால் நமது 07 தலைமுறை வரைக்கும் நமது சந்ததிகள் தனக்கென்று சொந்த கிரஹத்தில் இல்லத்தில் இருப்பார்கள்.
3. ஸ்வொர்ண தானம் தங்கத்தை தானம் செய்வதால் நம்மை பிடித்த தரித்திரம் நீங்கும்
4. ரஜத தானம் வெள்ளி தானம் செய்வதால் நமது குடும்பத்தில் அனைவருக்கும் நோய் நொடி இல்லாமல் இருக்கும்.
5. வஸ்த்திரம் தானம் உடுத்தி கொள்ள துணி தானம் செய்வதால் நமது குடும்பத்தில் உள்ள அனைவரின் பீடைகள் நீங்கும்.
6. தீர்த்த பாத்திரம் சொம்பு தானம் செய்வதால் நமது க்ரஹத்தில் இல்லத்தில் தினமும் புழங்குவதற்கு பாத்திரங்கள் தாராளமாக இருக்கும்.
7. தான்ய தானங்கள் செய்வதால் நமது 07 தலைமுறை வம்சாவழிகள் தான்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருப்பார்கள்.
8. ஆசனம் தர்பாசனம் மனப்பலகாய் தானம் செய்வதால் நமது பித்ருக்கள் முன்னோர்கள் நாம் அனைவரும் செய்த பாவங்கள் அனைத்தும் படிப்படியாக நீங்கும்
9. பாதரக்ஷை சத்ரம், சாமரம் (செருப்பு, குடை, விசிறி) தானம் செய்வதால் நமது குடும்பத்தில் உள்ள அனைவரின் ரோமத்தில் தோல் வியாதி ஆனது வராது.
10. புஸ்தகம் தானம் செய்வதால் நமது குழந்தைகளின் படிப்பானது, சொந்தமாக சுய தொழில் செய்பவர்களின் வியாபாரம் மிகவும் பிரமாதமாகவும் இருக்கும்.
மீண்டும் சொல்கிறேன் வேதம் படித்த வேத தர்ம ஸாஸ்திரம் தெரிந்த ப்ராஹ்மணருக்கு தானங்களை கொடுத்து தாங்கள் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி

