*🛐 இணைந்து செபிப்போம்*
*ஆண்டவரே இயேசுவே, மீட்பை ஆடையாக அணிந்தவரே! உம்மைத் துதிக்கின்றேன். அரசர்களுக்கு எல்லாம் அரசரே! உம்மைப் புகழ்கின்றேன். சகலவிதமான வல்லமையோடு இருப்பவரே! உம்மை நன்றியோடு ஆராதிக்கின்றேன்.*
*“இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்று, இன்றைய இறைவார்த்தை மூலமாக, உமது நாமத்தின் வல்லமையை உணரச் செய்த தயவிற்கு நன்றி கூறுகின்றேன். இயேசுவே! என் பாவங்களை மன்னியும்; உமது நாமத்தை வீணாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக, மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன். என் பாவத்தை, உமது திருமுன் இருந்து மறைத்து விடும். அதனால், உமது தெய்வீக அன்பால் ஆசீர் நிறைந்து வாழ வரம் தாரும். “அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன்” என்று, உமது பரிசுத்த வார்த்தையால் என்னை திடப்படுத்தும். உமது அரவணைப்பை உணரச் செய்கின்றீரே, உமக்கு நன்றி அப்பா.*
*இயேசுவே! உமது தெய்வீக இரக்கத்திற்கு தகுதியுள்ளவனாக, என்னை இந்த நாளில் மாற்றவும்; பலரை உமது பக்கத்தில் அழைத்து வரவும், இயேசு என்ற நாமத்தை என் வாயார பரிசுத்தமாக உச்சரிக்கவும், வல்லமை தர வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்.*
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #பிரார்த்தனை #கர்த்தர் என் அடைக்கலம்


