மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் தொகுதி நகரத்துக்குட்பட்ட, பழனிக் கவுண்டன்புதூர், லட்சுமிபுரம் முதல் கூடலிங்கபுரம் வரை ரூ.5.49 கோடியில், தடுப்புச்சுவருடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டி துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுசாமி, நகர செயலாளர் திரு.ப.வெள்ளைச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul

