MT TV
18K views • 17 days ago
ஊமை வலிகள்.............
பேசத்தான் வார்த்தைகள்
இல்லாமல் இல்லை!
கேட்கத்தான்
ஆள் இல்லை...
என்றது மெளனம்!
சொல்ல ஆளில்லை
சிரித்தது பிரச்சனை!
சொல்லாத சொல்லுக்கு எஜமானன் மெளனம்!
சொல்லிய சொல்லுக்கோ எஜமானன் பிரச்சனை!
முடித்துவிட முயன்றது மெளனம்!
முடிவுக்கு முரண்டு பிடித்தது பிரச்சனை!
சுவராய் நின்றது மெளனம்!
சூழன்று அடித்தது பிரச்சனை!
அமைதி
காத்தது மெளனம்!
இறுதியில் ஆணவத்தில் வீழ்ந்தது பிரச்சனை!
அப்போதும்
தாங்கி பிடித்தது மெளனம்!
மெளனமே!
நீ ஊமை இல்லை!
ஆனாலும்
ஊமையாய் ஆனாய்!
உறவுகள் உடையாமல் இருக்க!
எனது
நண்பனின் கவிதை
ஜெ.லட்சுமி நாராயணன் #family #appa #life #Motivition dialogue #💞Feel My Love💖
144 likes
1 comment • 278 shares