சீனிவாசன் தி
484 views • 6 hours ago
அகத்தியர் வாக்கு
Om Namah Shivayah | ஓம் அகத்தீசாய நம:
பலபடும். அங்கே நற்செயல்கள் அதிகமாகும். நற்செயல்கள் அதிகமாக, அதிகமாக அங்கே நல்லதொரு சமூக மனித இணைப்பும், பிணைப்பும் உருவாகும். அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த, உச்சக்கட்ட சமூக நலத்திலே பிறக்கின்ற குழந்தைகளும், உயர்வாகவே இருக்கும். ஆனால் சதா சர்வகாலமும் கோபமும், எரிச்சலும், மன உலைச்சலும், பிறர் மீது பொறாமையும், குற்றச் சாட்டுகளும் கொண்டு யார் வாழ்ந்தாலும், இந்த எண்ணப்பதிவு, வாரிசுக்காக, வாரிசு தோறும், வாரிசின் வழியாக, வம்சாவழியாக கடத்தப்பட்டு, கடத்தப்பட்டு, தீய பதிவுகள் எங்கெங்கும் ஆட்கொண்டு, அந்த தீய பதிவுகள் எல்லா மனத்திலும் நுழைந்து, தவறான செய்கைகளை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். எனவேதான் நல்லதை எண்ணி, நல்லதை உரைத்து, நல்லதையே செய்ய வேண்டும் என்று யாம் எம்மை நாடுகின்ற மாந்தர்களுக்கு என்றென்றும் கூறிக்கொண்டே இருக்கிறோம் அப்பா.
2. ஞானம்
இறையருளால் இயம்பிடுவோம் இத்தருணம். இறை வணங்கி அறம் புரிய என்றென்றும் நலமாம். இடைவிடாத பிரார்த்தனைகள் நலத்தை சேர்க்கும்.
அறிவு என்றால் என்ன? பலவற்றை அறிந்து கொள்வது அறிவு. புத்திசாலிதனம் என்றால் என்ன? நீ அறிந்து கொண்ட அறிவை நடைமுறையில் பயன்படுத்த தெரிந்து
SIDDHAR ARUT KUDIL TANJORE அதாவது, மின்சக்தி எனப்படுவது மிகவும் அதிர்சியைத் தரக்கூடியது. அதை தீண்டினால் உயிருக்கே ஆபத்தாகும் என்பது ஒருவன் அறிந்த அறிவு. ஆனால் அதை தீண்டக்கூடாது என்ற
உணர்வோடு அதனோடு அவன் ஒரு செயல்பாட்டை வைத்துக் கொண்டால் அது
புத்திசாலித்தனம்.
எனவே இந்த அறிவும் புத்திசாலிதனமும் எங்கு தோற்கிறதொ அங்கு ஞானம் பிறக்கிறது.
எனவே இந்த உலகிலே பார்க்கின்ற நிகழ்ச்சிகள், பொருள்கள் அனைத்தும் மனிதப் புலன்களுக்கு உட்பட்டெ இருக்கிறது. மனிதப் புலன்களுக்கு உட்படாத எத்தனையோ விசயங்கள் இருக்கிறது. மனிதனால் பார்த்து உணர முடியாத, கேட்டு உணர முடியாத, நுகர்ந்து உணர முடியத, தொட்டு உணர முடியத எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. அதை புரிந்து கொள்ளுதல், அதை அறிந்து கொள்ளுதல், அதை நோக்கி செல்லுதல். இது ஒருவகையான ஞானம், தெய்வீக ஞானம்.
அடுத்தது, மனத உடலோடு இருந்தாலும் உடல் சார்ந்த இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், உள்ளத்தை இறையை நோக்கி வைத்து பற்றற்று தெய்வீக விழிப்புணர்வோடு வாழ்ந்து, இந்த உடல் கூட ஒரு பாரம் போல் எண்ணி தன்னையே மூன்றம் மனிதனைப் போல் பார்த்து, நல்லதை மட்டும் எண்ணி, நல்லதே செய்து, நல்லதையே உரைத்து வாழ்வதே உண்மையான தெய்வீக ஞானம். அதை நோக்கி செல்ல நீ முயற்சி செய்யலாம்.
Copyright© 2012 by Sidhar Arut Kudil. Thanjavur. All rights reserved.
Page | 14 #🕉நமசிவாய வாழ்க #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼சிவன் - பார்வதி #🙏நமசிவாய ஓம்✨ #🙏🏼ஓம் நமசிவாய
10 likes
16 shares

