இது எனக்கு மிகவும் பிடித்த இடம் காரணம்
30 வருடங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் எட்டாவது பிளட் பாரம் தூர்வாரும் பணி வேலை நான் செய்து கொண்டிருந்தேன்
அங்கு தங்கி இருந்து வேலை செய்தேன்
அப்போது என்னுடன் உடன் இருந்த வடநாட்டைச் சேர்ந்த ஒரு சிலர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது
வடக்கன் இஸ்லாத்தை பற்றி கொச்சையாக தவறாக அவனது மொழியில் பேசினான்
அதனால் மிகவும் எனக்கு கோபம் ஏற்பட்டு
அவனைக் கடுமையாக நான் தாக்கி விட்டேன்
அவர்கள் கும்பலாக எனக்கு எதிராக சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்கள்
நான் பயந்து போய் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
ஒரு வண்டி புறப்படும் நிலையில் இருந்தது
எங்கு போகிறது என்று தெரியவில்லை ஆனால் நான் டிக்கெட் எடுக்காமல்
அந்த வண்டியில் பயணித்தேன்
18 மணி நேரத்தில்
அந்த வண்டி மும்பை சென்றடைந்தது
என்னிடம் பணம் இல்லை
மொழி தெரியாது
ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லை
அப்போது அங்குள்ளவர்கள் எனக்கு காட்டிய வழிதான்
ஹாஜிஅலி தர்கா
அங்கு எனக்கு
தங்கும் இடம் கிடைத்தது
உணவு கிடைத்தது
மூன்று நாள் அங்கு இருந்தோன்
அந்த நன்றி கடனுக்காக தான் ஒவ்வொரு வருடமும் நான் அங்கு செல்கிறேன் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲துஆக்கள்🕋 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🎼இஸ்லாமிய பாடல்கள்🌙
01:09

