
Vignesh Anand on Instagram: "எளிய மக்கள் அறிவார்ந்த இடங்களுக்கு வருவதை எப்போதுமே தடுத்துப் பழகிய அந்த ஆரியப் பண்பாடு தான், இன்றும் நவீனத் திரையிட்டு 'இதற்குப் பதில் அதைச் செய்யலாம்' என்று வழிமாற்றத் துடிக்கிறது. ஏழைக்குக் கல்வி மறுத்த அதே ஆரியம், இன்று ஏழைக்குக் கிடைக்கும் தரமான நூலகக் கட்டமைப்பை 'வீண் செலவு' என்று சித்தரிக்கிறது. அறிவு என்பது சிலருக்கான ஏகபோக உரிமை அல்ல; அது அனைவருக்கும் பொதுவான ஆதித் தேவை! டாக்டர் சுவர்ணமால்யா அவர்கள் குறிப்பிட்டது போல, எத்தனையோ முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கும் (PhD Scholars), விளிம்பு நிலை மாணவர்களுக்கும் தங்களது வீட்டில் அமர்ந்து படிக்க முறையான இடவசதியோ, அமைதியோ கிடையாது. அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஒரு கண்ணியமான தளம் (Dignified Space). அது முதலமைச்சர் படைப்பகமாக இருந்தாலும் சரி , அண்ணா நூலகமாக இருந்தாலும் சரி , கலைஞர் நூலகமாக இருந்தாலும் சரி, பெரியார் நூலகமாக இருந்தாலும் சரி அது ஒரு மாபெரும் அறிவுத் திருக்கோவில்கள்."

