ShareChat
click to see wallet page
search
100 அடியை கடந்த பாபநாசம் அணை பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக பொதிகை மலை திகழ்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி உயரத்தில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கிய பின்னர் தென்மேற்கு பருவ காற்றானது திருவனந்தபுரம் மாவட்டத்தை கடந்து உயரமான நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் மோதுகிறது. மேலும் ஈரப்பதமிக்க வலுவான மேகங்களை 5500-6000 அடி உயரமுள்ள நம் பொதிகை மலை தடுத்து மழையாக பொழிய வைக்கிறது. இதனால் மேற்கு தொடச்சி மலையில் கிழக்கு சரிவில் அமைந்துள்ள பாபநாசம் அணைக்கு நீர்வரத்து கடந்த 1 வாரமாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமாகவே இல்லையென்றாலும் திருவனந்தபுரத்தில் மழையே இல்லையென்றாலும் பாபநாசம் நீர்பிடிப்பு பகுதிகளில் தினசரி மழை பொழிகிறது அதற்கான காரணம் அரபிக்கடல் காற்றானது உயரமான பொதிகை மலையில் மோதி மேகங்களை உருவாக்கிறது. #🌀வானிலை தகவல்கள்🌨️