-
#மனிதன்
"இந்த மனிதனின் இயல்பு ஆச்சரியமானது!
வாலிபப் பருவத்தில் உடல் தன் முழு பலத்துடனும் வீரியத்துடனும் இருக்கிறது;
ஆனால், மனமோ பலவீனமாகவும், அவசரப்படக்கூடியதாகவும், நிலையற்றதாகவும் இருக்கிறது.
வயது முதிரும்போது, உடல் பலவீனமடைந்து தளர்ந்து விடுகிறது;
ஆனால், மனமோ தன் பூரணத்துவத்தையும் முதிர்ச்சியையும் அடைகிறது.
எனவே, ஆரம்பத்தில் அறிவு உடலுக்குச் சரியான வழியைக் காட்டுவதில்லை;
முடிவில் உடலோ அறிவுக்குத் துணையாக இருப்பதில்லை.
இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, ஆரம்பத்திலும் சரி, முடிவிலும் சரி — தன் இறைவன் விரும்புவற்றை அடைவதற்காக முயற்சி செய்து வாழ்பவனே அருள் பெற்றவனும் பாக்கியவானும் ஆவான்."