ShareChat
click to see wallet page
search
https://youtube.com/watch?v=5FLgSmPMYqs&si=_akXRBxlIuUAtiXh 🕉️✡️ பராபவ தமிழ் வருஷப் பிறப்பு தமிழ் புத்தாண்டு பண்டிகை நாளில் நாம் அனைவரும் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய முழு விளக்கம். ✡️🕉️ அனைவருக்கும் இனிய பராபவ தமிழ் வருஷப் பிறப்பு தமிழ் புத்தாண்டு பண்டிகை நல்வாழ்த்துக்கள் இனிய ஆசீர்வாதங்கள். பராபவ தமிழ் வருஷம் 5127 சித்திரை மாதம் 01/01/5127ம் நாள் 14/04/2026 செவ்வாய் கிழமை அன்று தான் பராபவ தமிழ் வருஷப் பிறப்பு தமிழ் புத்தாண்டு பண்டிகை. தமிழ் வருஷப் பிறப்பு தமிழ் புத்தாண்டு பண்டிகை நன்நாளில் நாம் அனைவரும் எதையெல்லாம் செய்ய வேண்டும்: இந்த வீடியோ பதிவினை அடியேனுடைய அனைத்து அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து அதன் ப்ரகாரம் பராபவ தமிழ் வருஷப் பிறப்பு தமிழ் புத்தாண்டு பண்டிகை நாளில் கடைபிடித்து கொண்டு அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முதலில் நாம் நமது குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிகாலை 03 மணி 00 நிமிடத்திற்கு எழுந்திருக்க வேண்டும். எழுந்த உடனேயே அனைவரும் அவரவர்களது காலைக் கடனை முடித்துக் கொண்டு தங்களது பூஜை அறையில் ஸ்வாமிக்கு விளக்கு ஏற்றி ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து அந்த கண்ணாடிக்கு முன்பாக அனைத்து விதமான பழங்கள், தொடுத்த புஷ்பம் பூமலர் தங்களிடம் உள்ள நகைகள் ஒரு ரூபாய், இரண்டு, ஐந்து, பத்து ரூபாய் நாணயங்களை வைத்து அவை அனைத்தையும் முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க வேண்டும். பிறகு அனைவரும் ஸ்நானம் செய்து விட்டு தங்களது கிரஹத்தில் இல்லத்தில் பூஜை செய்து முடித்து விட்டு தங்களது அருகாமையில் உள்ள கோயிலுக்கு காலை 05 மணி 00 நிமிடத்திற்குளாக செல்ல வேண்டும். முதல் தினமே தங்களது அருகாமையில் உள்ள கோயிலில் ஸ்வாமியை தொட்டு யார் பூஜை செய்கின்றாரோ அதாவது குருக்களோ, வைதீக ப்ராஹ்மணரோ, ப்ராஹ்மணரோ, பண்டாரமோ, பட்டாச்சாரியாரோ, பூசாரியோ யார் அந்த கோயிலில் ஸ்வாமிக்கு பூஜை செய்கின்றாரோ அவரிடம் சென்று சித்திரை மாதம் 01/01/5127ம் நாள் 14/04/2026 செவ்வாய் கிழமை அதிகாலை 03 மணி 00 நிமிடத்திற்கு தாங்கள் கோயிலை திறந்து வைத்து ஸ்வாமிக்கு பூஜை செய்து அலங்காரம் செய்து வைக்க வேண்டும் பக்தர்களாகிய நாங்கள் அதிகாலை 04 மணி 00 நிமிடம் முதல் ஸ்வாமியை தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்து விடுவோம் என்று தாங்கள் தான் அவர்களிடம் சொல்ல வேண்டும். தாங்கள் அனைவரும் அதிகாலையிலேயே தங்களது அருகாமையில் உள்ள கோயிலுக்கு சென்று இந்த பராபவ தமிழ் வருஷம் முழுவதும் தங்ஙளுக்கும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் ஸ்ரீ விக்னேஸ்வராதி ஸமஸ்த ஹரிஹர கோடி தேவர்கள், தேவதைகள், தங்களது குலதெய்வம், தங்களது இஷ்ட தெய்வம், ஸ்ரீ ஹிரண்யகர்பர், ஸ்ரீ உமா மஹேஸ்வரர், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர், அஷ்ட லக்ஷ்மி , ஸ்ரீ வாக்தேவி ஸமேத ஸ்ரீ பிருஹ்மா, ஆகியோரின் பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற்று தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள். 🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி