ShareChat
click to see wallet page
search
சம்மர் லீவ் ஆரம்பித்ததும் எல்லா சர்ச்களிலும் சம்மர் கிளாஸ் தொடங்கி கன ஜோராக பைபிளை குழந்தைகள் மண்டைக்குள் திணிக்கும் வேலையை சரியாக செய்கின்றன மிஷனரி கும்பல்கள். அவர்கள் ஒரு விஷயத்தில் மிக தெளிவாக இருக்கிறார்கள். வழி தவறி வந்த ஆடுகள் மீண்டும் சரியான வழியில் மீண்டு தாய் மதம் திரும்பி விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் உபயோகிக்கும் யுக்திகள் இரண்டு. ஒன்று தங்கள் மத கோட்பாடுகளை விவரம் தெரிந்த நாள் முதலே அவர்களுக்குள் திணிப்பது. இரண்டாவது, பிற மதங்கள் குறிப்பாக இந்து மதம் மீது வெறுப்பு வரும் வகையில் இந்து தெய்வங்களை சாத்தான் என கூறி பயமுறுத்துவது, இந்து மத பற்று கொண்டவர்களை எதிரிகள் போன்ற தோற்றத்தை அவர்கள் மனதில் விஷம் போல ஊட்டுவது. ஞாயிற்றுகிழமையானால் சர்ச் ஜெபம் என பழக்கப்படுத்துவது, பின்னர் சண்டே கிளாஸ், சம்மர் கிளாஸ் என கடிவாளம் கட்டிய குதிரை போல தங்கள் மதத்திற்குள் மட்டுமே பயணிக்க கற்று கொடுக்கிறார்கள். அதையும் தாண்டி பிற மதங்கள் மீது பற்று வந்து விட கூடாது என்பதற்காகத்தான் கல்லை வணங்கும் சாத்தான்கள் கூட்டம் போன்ற அவதூறுகளை பிஞ்சுகள் மனதில் விதைப்பது. பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் ஊறிய எந்த ஒரு விஷயமும் அத்தனை எளிதில் மறந்து விடாது, நம்மையும் அறியாமல் அதன் மீது ஒரு ஓட்டுதல், பற்றுதல் இருந்து கொண்டே இருக்கும். தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்று சும்மாவா சொன்னார்கள். எனவேதான் அவர்கள் வழிபாட்டில் சப்பரம் தூக்குவது, ஊது பத்தி, மெழுகுவர்த்தி, மாலைகள் சகிதம் பூஜைகள் செய்வது, பொங்கல் வைப்பது என்று இந்து மத முறைகளை புகுத்தி எந்த விதத்திலும் அவர்கள் மனதில் ஒரு சலனம் ஏற்படாதவாறு பார்த்து கொள்கிறார்கள். மறந்தும் கூட அவர்கள் மூளையில் ஜெனிடிக்கலாக சேமிக்கப் பட்டிருக்கும் பழைய நியாபகங்கள்மீண்டும் நினைவுக்கு வந்து தாய் மதம் நோக்கி பார்வை மாறி விட கூடாது என்பதை மிக சரியாக கவனித்து உளவியல் ரீதியாக மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். மதம் மாறியவர்கள் உளவியல் ரீதியாக திடம் அற்ற மனதை கொண்டவர்கள். எளிதில் வசிய படுபவர்கள். அவர்களை எமோஷனலாக எளிதில் அவர்கள் மன பலத்தை அசைத்து விட முடியும். எனவேதான் மதம் மாற்றும் மிஷனரி கும்பல்கள் போடும் சிறிய தூண்டிலில் கூட சிக்கி கொள்கிறார்கள். ஒரு முறை சிக்கி கொண்டால் மீண்டும் தாய் மதம் பற்றிய சிந்தனை வராத அளவுக்குஅவர்கள் கை பிடிக்குள் வைத்திருக்கும் வித்தையும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இதனால் தான் கிருஸ்தவ, இஸ்லாமிய மத மக்களிடம் மத மாற்றம் இல்லை. அவர்கள், அவர்கள் மதங்களுக்குள் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். இத்தனை விஷயங்களிலும் இந்துக்கள் தவறுவதால் தான் இந்து மதத்தில் மத மாற்றம் அதிகமாக நடக்கிறது. இந்துக்களிடம் மத உணர்வு இல்லை, இந்து கலாச்சாரம், பண்பாடை காக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை, கட்டு கோப்பும் இல்லை. எனவேதான், இன்னும் திராவிட கூட்டத்திற்கு வாக்களித்து கொண்டிருக்கிறான். இந்துகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றால் நீ மதவாதி, மாமன் மச்சானாக இருக்கும் எங்களை பிரிக்க சூழ்ச்சி செய்கிறாயா என்கிறான். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சிறு வயதில் நம் மத கோட்பாடுகளையும், பண்பாடு கலாச்சாரத்தையும் அவர்களுக்கு கற்று கொடுக்காதது. சிறுபான்மையினர் வீட்டு பிள்ளைகள் பைபிள் கிளாசும் குரான் வகுப்பும் சென்று கொண்டிருக்கும் போது நம் வீட்டு பிள்ளைகள் பணத்தை வாரி இறைத்து, அபாக்கஸ் கிளாசும், ஸ்விம்மிங் கிளாசும், சம்மர் கோர்சும் சென்று கொண்டிருக்கிறது. கல்வி அவசியம்தான், ஆனால் அதை விட அவசியம் அடிப்படை வாழ்க்கை கல்வி. மார்க்கை அள்ளி குவிக்கும் எத்தனை இந்து குடும்ப குழந்தைகளுக்கு பகவத் கீதையில் நான்கு வரிகளாவது தெரியும், சின்ன சின்ன சுலோகங்கள் கூட தெரியாது. ஆனால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் பைபிள் வசனத்தை அழகாக ஒப்புவிக்கும், ஆராதனை ஜெப பாடல்களை தவறு இல்லாமல் பாடும். ஆனால் நம் வீட்டு பிள்ளைகள்...? இதை கோயில்களும், கோயிலை நிர்வகிக்கும் அரசும் செய்ய வேண்டும். கோயில் வருமானத்தில் கோயில்கள் தோறும் வேத வகுப்புகள் நடத்த வேண்டும். சமய வகுப்புகள் நடத்த வேண்டும். பரதம், சங்கீதம், வாத்தியங்களை இசைக்கும் முறை போன்ற பாரம்பரிய இந்து சமய கலைகளை கற்று கொடுக்க வேண்டும். விடுமுறை தினங்களில் குழந்தைகளை வைத்துஇசை கருவிகளுடன், பாடல்கள் பாட வைத்து கும்மி கோலாட்டம் போன்ற நடனங்கள் ஆட செய்ய வேண்டும். ஆனால் இதையெல்லாம் செய்யும் அரசும் அறநிலையத்துறையும் நமக்கு வாய்க்கவில்லை. கோயில் இடிப்பு, சனாதன ஒழிப்பு, விளக்குகள் அணைப்பு என்று அவர்களுக்கு நிறைய பணிகள் இருக்கிறது. எனவே நம்மால் முடிந்த அளவு நம் வீட்டிலாவது சொல்லி கொடுக்க வேண்டும். இந்து மத கோட்பாடுகள், பண்பாடு, கலாச்சாரம் பற்றி அவர்கள் மனதில் உரமூட்டி கொண்டே இருக்க வேண்டும். மத மாற்ற சிந்தனைகள் அவர்கள் மனதில் எழுந்து விடாத அளவிற்கு இந்து மத பிடிமானத்தை உருவாக்க வேண்டும். எத்தனை தூண்டில்கள் போட்டாலும், எத்தனை வலைகள் விரித்தாலும் அவர்கள் மனம் சலனப்பட்டு விடாத அளவிற்கு மன உறுதி படைத்தவர்களாக வளர்க்க வேண்டும். திராவிட சிந்தனை என்னும் கடவுள் மறுப்பு சாக்கடை அருகில் கூட சென்று விட கூடாது. அவர்களை போல பிற மதங்களை இழிவு படுத்த வேண்டாம், வெறுப்பை வளர்க்க வேண்டாம், ஆனால் அவர்களின் கவர்ச்சி காட்டி மயக்கி இழுக்கும் வித்தைகளை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். இந்த கோடை விடுமுறையில் இதை சபதமாகவே ஒவ்வொரு இந்து குடும்பங்களும் ஏற்போம். நம்மால் முடிந்த சின்ன சின்ன சுலோகங்கள் கற்று கொடுப்போம்.புராண கதைகளை சொல்லுவோம். நடனம், இசை, பாடல்கள் கற்க செய்வோம். நம் இந்து பண்பாடு கலாச்சாரத்தை சொல்லி கொடுப்போம். பட்டு பாவாடை சட்டை, தாவணி, சேலை போன்ற நம் பாரம்பரிய உடைகளையும், வளையல், பூ, பொட்டு போன்ற நம் பாரம்பரிய அலங்காரங்களுடன் கோயிலுக்கு அழைத்து செல்வோம். சிறு குழந்தைகளுக்கு பூ கட்ட சொல்லி கொடுத்து அதை சுவாமிக்கு சாற்ற கற்று கொடுக்கலாம் , கோயிலில் சுலோகங்கள் சொல்லி வழிபட கற்று கொடுக்கலாம். அருகில் உள்ள குழந்தைகளையும் கூப்பிட்டு வைத்து பல்லாங்குழி, தாயம் என விளையாட வைத்து அவர்களுக்கு வெற்றி தோல்வியை ஏற்று கொள்ளும் பக்குவத்தை வளர்ப்போம். நீட்டை கூட எதிர் கொள்ள முடியாத தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். கிடைத்திருக்கும் ஒரு மாத காலத்தை சரியாக உபயோகித்தாலே போதும், நம் குழந்தைகள் பக்குவபட்டு விடுவார்கள். அடுத்த ஒரு வருடத்தை கல்வியில் செலுத்த இந்த ஒரு மாத காலம் நல்ல பூஸ்ட்டராக இருக்கும். பெற்றோர்கள் ஒரு மாதம் சிரமம் பார்க்காமல் குழந்தைகளுக்காக நேரம் செலவிட்டே ஆக வேண்டும். எங்கேயாவது சம்மர் கிளாசில் தள்ளி விட்டு பொறுப்பற்று இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாளைய சமுதாயமும் பொறுப்பற்றுத்தான் இருக்கும். நம் பாரத கலாச்சாரம் தனித்துவமானது, அதை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை உணர்ந்து ஒவ்வொரு இந்து குடும்பங்களும் செயல்பட வேண்டும். இனி வரும் காலங்களில் நம்மை நாமே காத்து கொண்டால் தான் உண்டு. மத மாற்ற கும்பல் ஒரு புறம், கடவுள் மறுப்பு கூட்டம் இன்னொரு புறம், இந்து மதத்தை அழித்தே தீருவோம் என தீவிரவாத கும்பல் மற்றொரு புறம் என வெறி பிடித்த ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் இந்து மதம் சிக்கி கொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அடுத்தவர்களை நொந்து எந்த பயனும் இல்லை. நாம் சரியாக இருந்தாலே போதும், எந்த கொம்பனாலும் இந்து மதத்தை தொட்டு கூட பார்க்க முடியாது. நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் மற்றும் கவசம் இளைய தலைமுறை. அவர்களை சரியாக வளர்த்தாலே போதுமானது. கையில் இருக்கும் நூலை விட்டு விட்டு நாளை அவர்களை நொந்து எந்த பயனும் இல்லை. புரிந்து கொள்வோம், செயல்படுவோம் ... #🤩அசத்தலான போஸ்ட்🔥