நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில் அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவோம்...!
த.பி.சொக்கலால் ராம்சேட் (T.P. Sokkalal Ramsait) என்பது தமிழகத்தின் புகழ்பெற்ற பீடி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சார்ந்த த.பி.சொக்கலிங்கம் என்பவரால் பம்பாயில் (மும்பை) இத்தொழில் தொடங்கப்பட்டு, பின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவடைந்தது.
முக்கூடலைச் சேர்ந்த த.பி.சொக்கலிங்கம், மும்பையில் இருந்த தம் தாய்மாமன்மார்களிடம் சென்று பீடி சுற்றும் தொழிலைக் கற்றார். பின்னர் சொந்தமாகத் தொடங்கி அதை வெற்றிகரமான நிறுவனமாக மாற்றினார்.
முக்கூடலைச் சேர்ந்தவர், த.பி.சொக்கலிங்கம். அவருடைய தாய் மாமன்மார்கள் பம்பாய் (இன்றைக்கு மும்பை) நகரில் வசித்து வந்தனர். .அவர்களைப் பார்ப்பதற்கு பம்பாய் சென்ற, சொக்கலிங்கம் அங்கு பிரபலமாக இருந்த பீடித் தொழிலைக் கற்றுக்கொண்டு வந்தார். பம்பாய் நகரில் அப்போது ஆண்கள் மட்டுமே பீடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கம்பெனிகளுக்கு நேரில் சென்று பீடிசுற்றும் வேலையை செய்துவந்தார்கள்....
சொக்கலிங்கம் அதில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்தார்.
பீடிசுற்றும் தொழிலை தனது சொந்தக் கிராமமான முக்கூடலில் முதல் முறையாக பெண்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். அவரவர் வீடுகளில் இருந்தபடியே பீடி சுற்றும் வேலையைச் செய்ய வழிவகை செய்தார்....
இப்போது வீட்டில் இருந்தபடி வேலை (ஒர்க் பிரம் ஹோம்) என்கிறார்களே, அதை தமிழ்நாட்டில் முதன்முதலில் அறிமுகம் செய்தவர் அவராகத்தான் இருக்கக்கூடும்!...
முக்கூடல் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பீடி சுற்றும் தொழில் பரவியது. வருமானம் கொட்டத் தொடங்கியது. அவர் பீடிச் சக்கரவர்த்தியாக உயர்ந்தார். சொக்கலிங்கமாக இருந்தவர் த.பி.சொக்கலால் சேட் என்று பெயர் பெற்றார். இவ்வாறு உழைப்பால் உயர்ந்த தொழில் அதிபர் சொக்கலால் 1942-ம் ஆண்டு தனது 54-வது வயதில் மரணம் அடைந்தார்....
முக்கூடல் டாக்கீஸ்: முக்கூடல் பகுதியில் மக்களுக்கு பொழுதுபோக்கு அளிக்கும் வகையில் 'த.பி.சொக்கலால் டாக்கீஸ்' (சினிமா தியேட்டர்) ஒன்றையும் அவர் நிறுவினார்.வணிக வளர்ச்சி: பின்னாளில் இந்நிறுவனம் டி.பி. சொக்கலால் ராம்சைட் ஃபேக்டரி (பிரைவேட்) லிமிடெட் என்ற பெயரில் விரிவடைந்தது.அதிபர் ஹரிராம் சேட்: சொக்கலால் ராம்சேட்டின் அதிபராக இருந்தவர் ஹரிராம் சேட் ஆவார்.
விளம்பர யுக்தி: இலங்கை வானொலியில் (Ceylon Radio) 'சொக்கலால் பீடி' விளம்பரங்கள் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம்.கல்விப்பணி: இந்நிறுவனம் சார்பில் முக்கூடல் பகுதியில் த.பி.சொக்கலால் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.
குடிசைத் தொழிலை நேர்மையாக செய்த காரணத்தினால் குபேரனாக வாழ்ந்தார் தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நாடார்களுக்கு எப்பவுமே தொழில் போட்டியாக இருப்பது உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்கள் அல்லது தாம் பிறந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் தொழில் போட்டியாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம் இதே போல தான் அந்த காலத்திலும் தபி சொக்கலால் ராம் சேட் அவருடைய முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவர் மீது ஒரு வழக்கு தொடுத்தார்கள் என்ன வழக்கு என்றால் தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் தயாரிக்கும் பீடி மட்டுமே சிறந்தது என்பது போல அவருடைய விளம்பரங்கள் இருக்கிறது இதனால் அவருடைய விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று சொல்லி சில நபர்கள் வழக்கு தொடுத்தார்கள் இவருடைய வழக்கு நடந்த காலம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம் அந்த ஆங்கிலேய நீதிபதிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை வழக்கு நடந்து கொண்டிருக்கிறது இறுதியாக நீதிபதி ஒரு முடிவெடுக்கின்றார் 10 கம்பெனிகளில் உள்ள பீடிகளை வாங்கி வரச் சொல்கிறார் ஒவ்வொரு கம்பெணியிலும் உள்ள பீடிகளில் ஒவ்வொன்றை எடுக்கிறார் அதில் உள்ள லேபிள்களை கிழிக்கின்றார் நீதிபதிக்கு மட்டும் எந்த பீடி எந்த கம்பெனியை சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்கிற அளவுக்கு அதில் ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்கிறார் தபி சொக்கலால் ராம்சேட் அவர்களை பார்த்து இந்த 10 பீடிகளில் உங்களுடைய கம்பெணி பீடி எது என்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா ? என்று கேட்க சரி என்று சொல்லுகின்றார் மேசையின் மீது பத்து பீடிகள் வைக்கப்படுகிறது த.பி.சொக்கலால் ராம்சேட் ஒரு பீடியை எடுத்து இது தான் எங்களுடைய பீடி என்று சொல்லுகிறார் நீதிபதி அதை வாங்கி பார்த்து சரி என்று ஒப்புக்கொள்கிறார் அந்த நீதிபதி தான் தபி சொக்கலால் ராம் சேட் அவர்களுக்கு பீடி சக்கரவர்த்தி என்று புகழ் சூட்டியவர்
பீடி சக்கரவர்த்தி அய்யா.த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு இன்று (ஜூன் - 22) நினைவு அஞ்சலி #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪இலட்சிய கனவு 💭 #👌அருமையான ஸ்டேட்டஸ்


