S.ANTHONY✝️YESUMARY
பாத்திமா மாதா மற்றும் தேவ இரகசிய மாதா நாள்✨🌹*
*🌻“ இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் “* – லூக்காஸ் 1: 38
அன்று அதிகாலை 3.30 மணி இருக்கலாம்.. அல்லது அதற்கும் முன்பாக இருக்கலாம். ஏனென்றால் நம் தேவதாய் உயிர் வாழ எவ்வளவு நேரம் தூங்க வேண்டுமோ.. அவ்வளவு நேரம் தூங்கியிருக்கிறார்கள் என்று “ கடவுளின் மறைந்த நகரம் “ என்ற நூலிலே பார்க்கின்றோம்.. அந்த நேரம் ஒன்றரை மணி நேரம்தான் என்றும் அதில் குறிப்பிடுகிறார்கள்.. ஒரு வேளை அது இரண்டாம் சாமமாகக் கூட இருக்கலாம்..
அன்று வாழ்ந்த யூதர்களைப்போல…யூத பெண்களைப் போல மீட்பரின் வருகைக்காக அன்னையும் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்…
“ என் நேசத்திற்குரிய என் கடவுளே ! என் பிதாவே…! உலக மீட்பர் எப்போது வருவார்… அவர் சீக்கிரம் வர வேண்டுமே…உலக மக்களைக் காப்பாற்ற வேண்டுமே ! அவர்களை மீட்க வேண்டுமே ! இல்லாவிட்டால் எல்லோரும் அழிந்து போவார்களே ! அதை என்னால் தாங்க முடியாதே ! உம் மக்களை மீட்க சீக்கிரம் வாரும்…விரைந்து வாரும்.. ஏனென்றால் உம் மக்கள் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. கடவுளைப்பற்றிய அச்சமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்… கடவுள் சிந்தனை அவர்களுக்கு அற்றுப் போய்விட்டது.. கடவுளை மறந்து…விண்ணக செல்வங்களை மறந்து நிலை வாழ்வான மோட்சத்தை மறந்து உலகமே கதி என்று இருக்கிறார்கள்..
உலகமும் அதன் நிலையற்ற ஆசைகளும் அவர்களை பிண்ணிக் கொண்டிருக்கிறது…
ஓ இரக்குமுள்ள பிதாவே ! அவர்களை மன்னியும்…தாங்கள் செய்வது இன்னதென்று தெறியாமல் செய்கிறார்கள்.. அவர்களை தண்டித்து விடாதேயும்.. அன்று சோதோம், கொமாரா அழித்தது போல் அழித்துவிடாதேயும்… மக்கள் மீது இரக்கமாயிரும்…தயவாயிரும்.. அவர்களை மன்னியும்…அவர்கள் பாவத்திலிருந்து சுத்திகரிக்கபடவேண்டும் என்றால் மனுமகனின் இரத்தம் வேண்டுமே…அதற்கு மனுமகன் வரவேண்டுமே.. அவர் எப்போது வருவார்… நேரம் வர காலம் தாழ்த்தினால கோடிக்கணக்கான மக்கள் நரகத்தில் விழுவார்களே ! அதைப் பார்த்தால் என் நேசமுள்ள என் பிதாவே.. அதை உம்மால் தாங்க முடியாதே…அதை என்னாலும் தாங்க முடியாதே..
உம் சாயலகவும், பாவணையாகவும் படைக்கப் பட்ட மனிதன் நரகம் சென்றால் விண்ணகமே துக்கத்தில் வாடுமே… அது எதிரிக்கு கொண்டாட்டமாக இருக்குமே… கூடாது… வேண்டாம் என் பிதாவே ! சீக்கிரத்தில் உம்முடைய மீட்பு திட்டம் நிறைவேற வேண்டும்… என் மீட்பர் வர வேண்டும்..
அதற்காக நான் இப்போது செய்து வரும் ஜெப தவ ஒறுத்தல்கள்.. ஒரு வேளை இவை காணாதோ… அதை நான் இன்னும் அதிகரிக்க வேண்டுமோ… செய்வேன் என் பிதாவே.. இன்னும் அதிகமாக்குவேன்.. உமக்காக நான் எல்லாம் செய்வேன்… ஏனென்றால் நான் உன் பிள்ளை… பலி ஆன்மா.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்யும்.. எத்தகைய துன்பங்களையும் ஏற்கிறேன்.. உம் மகன் இவ்வுலகில் பிறக்க வேண்டும்… என் மீட்பர் வர வேண்டும் அதுவும் சீக்கிரத்தில் வர வேண்டும்… இந்த உலகைக் காக்க வேண்டும்… மக்களை பாவத்திலிருந்து மீட்க வேண்டும்…. என் பிதாவே இரக்கமாயிரும்… கிருபை கூறும் இந்த ஏழை உம் மகளின் குரலுக்கு செவி சாயும் – ஆமென்..
அன்னை இப்படி வேண்டினால் நம் பிதாவே கண்ணீர் விட்டிருப்பார்… இத்தகைய வேண்டுதல் கேட்கப்படாவிட்டால் எத்தகைய வேண்டுதல்தான் கேட்கப்படும்…அதுவும் தொடர்ச்சியாக..ஒரே கருத்திற்காக… பரித்தியாகத்தோடு…பலி ஆன்மாவாக…
அதை பிதா கேட்காமல் இருப்பாரா… என்ன…
அறை முழுவதும்… பிரகாசம் … ஒளி வெள்ளம்…. உன்னை விட்டால் இந்த புவியில் ஆளில்லையம்மா…. பரிசுத்தரை பெற பரிசுத்தமான பரிசுத்த உதிரம் கொண்ட நீதான்மா உன் பிதாவுக்கு வேண்டும்…
உன்னுடைய சம்மதம் வாங்க நம் பிதா என்னை அனுப்பிவிட்டார்…..
“ அருள் நிறைந்தவளே வாழ்க ! கர்த்தர் உம்முடனே ! “ கடவுளின் வாழ்த்தை தாங்ககியவராக கபிரியேல் தூதர்… வந்து விட்டார்… அறைமுழுவதும்…பிரகாசம்..
தொடர்ச்சியை பரிசுத்த வேதாகமத்தில் வாசித்து, தியானித்து இந்த தாய்க்கு ஆறுதல் கொடுப்போம்...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க ! #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்