முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி தி.நகர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் ஜெ.கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டில் தென்மேற்கு போக் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள் 150 பேர் உள்பட 2000 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், தலா 500 நிதியுதவி வழங்கினோம்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், கோ.உதயசூரியன், இளைஞரணி பகுதி அமைப்பாளர் மு.ம.செந்தில்குமார், மாணவரணி பகுதி அமைப்பாளர் ஜி.பி.செந்தில்குமார், வட்டக்கழக நிர்வாகி லலிதாபுரம் என்.துரை உள்பட சென்னை மேற்கு மாவட்டக் கழகத்தினர் பலர் கலந்துகொண்டனர். #DMKYouthWing


