
Jeslin Jaya Kumar Jeslin Jaya Kumar
@1457003628
पधारो सा! 2 करोड़ लोगां क परिवार म थांको बहुत बहुत
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் இரவு நேர வாழ்த்துக்கள்.
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
*நன்மையினால் நிரப்பும் தேவன்*
எனக்கு அன்பானவர்களே,
ஆம், தேவன் உங்களை ஆசீர்வதிக்க காத்திருக்கிறார். உங்களுக்குப் பெரிதான நன்மையை தந்து ஆசீர்வதிக்க அவர் விரும்புகிறபடியால், தம்மில் அடைக்கலம் கொள்ளும்படி அவர் உங்களை அழைக்கிறார். நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு பெரியவர்! தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கவே ஆண்டவர் விரும்புகிறார். உங்களை வாழ்க்கையில் செத்துப்போனவை என்று நினைக்கிறவற்றையும் ஜீவனோடு எழுப்ப ஆண்டவர் இன்றைக்கு ஆயத்தமாயிருக்கிறார். ஆகவே, சந்தோஷப்பட்டு களிகூருங்கள்!
லாசருவின் வாழ்க்கையில் தேவனுடைய உயிர்த்தெழுந்த வல்லமை வெளிப்பட்டதை வேதத்தில் காண்கிறோம். லாசரு மரித்துப்போனான்; அவனுடைய சகோதரிகள் இருவரும் அழுது தவித்தனர். 'மீண்டும் நம் சகோதரனை காணமுடியாது; அவன் வாழ்க்கை முடிந்துபோயிற்று' என்று அவர்கள் எண்ணினர். ஆனால் இயேசு வந்து லாசருவை மீண்டும் உயிரோடு எழுப்பினார். சுற்றிலுமிருந்த ஜனங்களும் லாசருவின் வாழ்க்கை முடிந்துபோயிற்று என்று எண்ணியிருக்கக்கூடும். ஆனால், ஆண்டவர் வித்தியாசமானதொரு திட்டத்தை வைத்திருந்தார். தம் பிள்ளைகளுக்கு நல்லவராக இருக்கவும், அவர்களை நன்மையினால் நிரப்ப அவர் விரும்பினார்.
நீங்கள் இன்று இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கலாம். 'உன் வாழ்க்கை முடிந்துபோயிற்று; இனி ஒரு நன்மையும் கிடைக்காது' என்று சுற்றியிருப்பவர்கள் கூறலாம். உங்களை பெற்றவர்கள் கூட அப்படிச் சொல்லக்கூடும். "நீ ஒன்றுக்கும் உதவாதவன்(ள்)" என்று மற்றவர்கள் உங்கள் காதுகேட்க சொல்லலாம். மனங்கலங்காதிருங்கள். எல்லா நன்மையையும் உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வதிக்க தாம் காத்திருப்பதாக தேவன் கூறுகிறார். ஆவர் எல்லாவற்றையும் உங்களுக்காக வைத்து வைத்திருக்கிறார். அவரில் அடைக்கலம் காணுங்கள்.
ஆமென் அல்லேலூயா!
🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் காலை நேர வாழ்த்துக்கள்.
*இனிமையான சுகந்த வாசனை!*
எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 2:15)என்று பவுல் எழுதுகிறார். இதற்கு முந்தைய வசனத்தில், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுகிறார். ஆண்டவர்தாமே நமக்காக இதைச் செய்கிறார். அவர் நம் கரங்களைப் பற்றி வெற்றிப் பவனியாக அழைத்துச் செல்கிறார். தேவன், உங்களை கிறிஸ்துவின் சுகந்த வாசனை என்று அழைக்கிறார். பழைய காலத்தில் பட்டணங்களை வெற்றிக் கொண்ட பிறகு, ராஜாக்கள் பெரிய ஊர்வலம் நடத்துவார்கள்; அப்போது தூபவர்க்கம் எரிக்கப்படும்; போரினால் ஏற்பட்ட அழிவுகள் காண்பிக்கப்படும்; கூட்டத்தினர் ஆரவாரிப்பார்கள். ஆனால், பவுல், நீங்களே தூபவர்க்கமாய், தேவனுக்கு முன்பாக எழும்பும் சுகந்தவாசனையாய் இருக்கிறீர்கள் என்கிறார்.
நீதியான வாழ்க்கை நடத்துவதின் மூலம், கிறிஸ்துவின் நற்கந்த வாசனையை பரப்பும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. நீதியான வாழ்க்கை நடத்துவது தெரிவல்ல; மாறாக, நமக்குள் தேவன் இருப்பதால் அத்தியாவசியமானதாகும். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆரோனும் ஆசாரியர்களும் பரிசுத்த தைலத்தினால் அபிஷேகிக்கப்பட்டார்கள். அந்த தைலம் அவர்கள் தலைகளில், தாடிகளில், அங்கிகளில் வழிந்தோடி சுகந்த வாசனையை கொடுத்தது. ஆகவேதான் கர்த்தர், "சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்" (எசேக்கியேல் 20:41)என்று கூறுகிறார். கர்த்தருக்குப் பயப்படும் பயம் சுகந்தவாசனையாய் இருக்கிறது என்றும் வேதம் கூறுகிறது (ஏசாயா 11:3). நாம் பயபக்தியாய் வாழ்ந்து, தேவனுக்கு பயப்படும்போது அவருக்கு பிரியமான வாசனையாக மாறுகிறோம்.
இயேசுவின் சுபாவத்தை காட்டும்படி வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவைப் போல வாழும்போது, இந்த உலகம் முழுவதற்கும் நாம் நற்கந்தமாக மாறுகிறோம். "பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல..." (நீதிமொழிகள் 27:9)என்று வேதம் அழகாக கூறுகிறது. ஆம், ஆண்டவர் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு உங்களை சந்தோஷத்தை, ஆறுதலை, சமாதானத்தை தரும் நற்கந்தமாக பயன்படுத்துவாராக. அவரது பிரசன்னத்தால் உங்களை நிரப்புவாராக; தேவன் அறிகிற அறிவினால் உங்களை நிரப்பி, தம்மைப்போல மாற்றுவாராக. ஆமென் அல்லேலூயா!
🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்












