
Jeslin Jaya Kumar Jeslin Jaya Kumar
@1457003628
पधारो सा! 2 करोड़ लोगां क परिवार म थांको बहुत बहुत
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் இரவு நேர வாழ்த்துக்கள்.
*தேவனுடைய வசனத்துக்கு நடுங்குங்கள்*
எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு, "அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்" (சங்கீதம் 107:20) என்ற வசனத்தை தியானிப்போம்.
நம்ப இயலாத அளவு வல்லமையான தம்முடைய வசனத்தை தேவன் அனுப்பியுள்ளார். தேவ வசனத்தை நீங்கள் தியானிக்கும்போது, சுகம் உள்பட அநேக ஆசீர்வாதங்களை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். "சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்" (ஏசாயா 66:2) என்று கர்த்தர் கூறுகிறார். பயபக்தியோடு ஆண்டவரைச் சேருகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். பழக்கவழக்கமாக வேதத்தை வாசிப்பதற்கு மாறாக அவருடைய வார்த்தையை கனம்பண்ணுவோம்; அதற்காக நேரம் ஒதுக்குவோம்; அது நமக்குள் ஆழமாக கிரியை செய்ய அனுமதிப்போம். 'கர்த்தருடைய வார்த்தைகளை உட்கொள்ளுங்கள்' என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறதால், அதை வேகவேகமாக வாசிப்பதற்குப் பதிலாக அவற்றை ஆழ்ந்து வாசிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனுடைய வசனத்தை நாம் பயத்தோடும், பயபக்தியோடும் வாசிக்கவேண்டும்.
நீங்கள் தேவனுக்கு பயந்து அவருடைய வசனத்துக்கு நடுங்கினால் என்ன நடக்கும்? "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு" (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, உங்களுக்கு வேண்டியவற்றை ஆண்டவரிடம் கேட்டு, "ஆண்டவரே, உம்முடைய வசனத்தில் நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி இந்த ஆசீர்வாதத்தை எனக்கு அருளிச்செய்யும்," என்று ஜெபியுங்கள். "விசுவாசம் கேள்வியினாலே வரும்," (ரோமர் 10:17) என்றும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
மார்த்தாளின் சகோதரியாகிய மரியாள், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளை கேட்க விரும்பினாள் (லூக்கா 10:42). அதன் மூலம் அவள் தன்னை விட்டு எடுபடாத 'நல்ல பங்கை' தெரிந்துகொண்டாள். அதேவண்ணம், தேவனுடைய வசனத்தை வாசிப்பதற்கும் அதை கடைப்பிடிப்பதற்கும் உங்களை அர்ப்பணிக்கும்போது, பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள்.ஆமென் அல்லேலூயா!
🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் காலை நேர வாழ்த்துக்கள்.
*கிருபை உங்களை அழைக்கிறது!*
எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவரின் ஆசீர்வாதத்தை தேடி நீங்கள் வந்திருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். காலைதோறும் அவரது இரக்கங்கள் புதிதாயிருக்கின்றன. இன்றைக்கு அவரது புதிய இரக்கத்தைக் குறித்து அறிந்துகொண்டு அதைப் பெற்றுக்கொள்ளபோகிறோம். "உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்" (ஏசாயா 43:1) என்று கர்த்தர் கூறுகிறார். ஆம், நீங்கள் அவருடையவர்கள். அவர் உங்களைப் பேர்சொல்லி அழைத்திருக்கிறார். ஆகவே, குற்றவுணர்வு அவரை விட்டு உங்களைப் பிரிக்காதிருக்கட்டும். "நான் எவ்வளோ தவறு செய்துவிட்டேன்," என்று கூறாதிருங்கள். உங்கள் பாவம் பெரிதென்ற பொய்யை நம்பாதிருங்கள். நீங்கள் தமக்குச் சொந்தமானவர் என்று ஆண்டவர் கூறுகிறார். அவர் உங்களை அன்போடும் கிருபையோடும் பேர்சொல்லி அழைக்கிறார்.
இந்த வல்லமையான வசனம், அவர் நம்மை மீட்டுக்கொண்டார் என்றும், தம்முடையவர்கள் என்று அழைப்பதாகவும் கூறுகிறது. நாம் எப்பொழுதும் தேவனுக்குச் சொந்தமானவர்களாக இருப்பதற்காக அவரை ஸ்தோத்திரிப்போம். அது, அவருடைய கிருபை; அவருடைய அன்பு. "முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" (எபேசியர் 2:13) என்று பவுல் நினைவுபடுத்துகிறார். என்ன ஒரு வாக்குத்தத்தம்! இயேசுவின் இரத்தத்தின் மூலம் நீங்கள் கிட்டிச்சேர்க்கப்பட்டீர்கள். பவுல் இதை அறிந்திருந்தார். அவர் ஆண்டவரின் ஜனங்களை துன்புறுத்தினார்; பாடுபடுத்தினார்; அவரை விசுவாசித்தவர்களை துரத்தினார். ஆனாலும் தேவனுடைய இரக்கத்திற்கு அவர் அப்பாற்பட்டவராயிருக்கவில்லை.
பவுல், இவை எல்லாவற்றையும் செய்திருந்தபோதிலும், ஆண்டவர் அவரை அழைத்து, புதிய பெயரைக் கொடுத்து, "பவுல், நீ என்னுடையவன்," என்று கூறினார். தம்முடைய இரத்தத்தினாலே ஆண்டவர் பவுலை கிட்டிச்சேர்த்தார். பவுல், புதிய மனுஷனாக மாறினார். அந்த தருணத்திலிருந்து தன் முழு உள்ளத்தோடும் பவுல், இயேசுவுக்காக ஓடினார். அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. இன்றைக்கு அதே மறுரூபமாகுதலை ஆண்டவர் உங்களுக்கு அளிக்கிறார். அன்பானவர்களே, எந்தக் குற்றமும் பெரிதானதல்ல. பழைய காலம் இருளானதல்ல. ஆண்டவர் உங்களை அழைக்கிறார். அவர் உங்களைப் பேர்சொல்லி அழைத்து மீட்கிறார்; உங்களை புதிய மனுஷனாக்குகிறார். இன்றைக்கு அவரிடம் உங்களை ஒப்படைப்பீர்களா?🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு









![⛪ வேளாங்கண்ணி சர்ச் - பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 - ShareChat ⛪ வேளாங்கண்ணி சர்ச் - பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_766170_26b2a793_1762991764838_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=838_sc.jpg)


