#🤱அன்னையர் தின வாழ்த்துக்கள்🥳 இன்று வரையிலும்
அவள் மேல்
காதல் கொள்கிறேன்..
நான் உதிரமாய் அவளிடம் உறவாடிய போதே
நான் ஆணா, பெண்ணா என்று அறியாமல் என்மேல்
காதல் கொண்டவள்..
என் உடலின் அத்தனை அசைவுகளையும் அழகாய்
புரிந்து கொண்டவள் அவள்...
என்னை காண
ஒவ்வொரு நாட்களையும்
எண்ணி எண்ணி என்மேல்
காதல் கொண்டவள் அவள்...
என் பஞ்சு மேனி மேல் அவளின் ஸ்பரிச விரல் நுணிகள் தீண்ட
நான் மெல்ல சிலிர்த்தேன்...
அத்தருணத்திலும் கண்களில் கண்ணீர் தவழ,
புன்னகை பூ பூத்து
என் மேல் காதல் கொண்டவள் அவள்...
என் மேல் உயிராகவும்,
எனக்கு மெய்யாகவும் வாழ்வதால் தான் அவளை உயிர் மெய் எழுத்தால் நித்தமும் அழைத்து காதல் கொள்கிறேன்...
ஆம் ,
அவள் தான் என் " அம்மா "....
இந்த மகனின் அன்பு "வாழ்த்துகள்"
#🤱அன்னையர் தின வாழ்த்துக்கள்🥳 அன்னையர் தின வாழ்த்துகள்!
அம்மா..
உடலுக்கு உயிர் தந்து
உலகம் காணச் செய்தவள்
தன் தூக்கம் மறந்து
பிள்ளை தூக்கம் கண்டவள்
பசியிலும் உழைப்பிலும்
பிள்ளையின் உயர்வை
முன்னிறுத்தி
உடலின் எத்தனை வலியிலும்
எல்லா வேலைகளையும்
செய்பவளைப்
புரிந்துகொண்ட பிள்ளைகள்
மட்டுமே
அவளுக்கு உதவிசெய்ய
முன்வருவார்கள்
நீங்கள் படித்து முடித்தபின்
எழுத்தில் மட்டும் அன்பைக்காட்டாமல்
சின்ன சின்ன வேலைகளில்
தாய்க்குத் துணையாக
இருங்கள்
வீட்டைச்சுத்தப்படுத்துதல்,துணிகளைத் துவைத்தல்,கடைக்குச் சென்று சாமான் வாங்கிவருதல் என
ஒவ்வொரு வீட்டுவேலையும்
செய்து கொடுங்கள்
முக்கியமாக அவள் மனம்
புண்படும்படியாகப் பேசாதீர்கள்
தவறே செய்தாலும் இதமாகச்
சுட்டிக்காட்டப் பழகுங்கள்.
மனிதநேயம் தழைப்பதைக்
காண்பீர்கள்.
#👌அருமையான ஸ்டேட்டஸ் ஒரு லவ்வர் Dmk supporter
ஒரு லவ்வர் Admk supporter
ஒரு லவ்வர் Ntk supporter
நான் Tvk supporter
இப்போ நான் யாருக்கு Support பண்ணுவேன்.
லவ் மட்டும் பண்ணாதிங்க ப்ரெண்ட்ஸ் ரொம்ப கஷ்டம்😔
#👌அருமையான ஸ்டேட்டஸ் *யாராக இருந்தாலும் ஏற்றதை ஆற்றுக*
நாள்:09.05.2026
நேரம்:காலை 11 மணி.
___________ எனும் நான்
சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலை நிறுத்துவேன் என்றும்
தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின் படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியல் அமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.
________ எனும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும் தெரிய வருவதுமான எந்த ஒரு பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்றும் உறுதிமொழிகிறேன்.
யார் அந்த எனும் நான்?
மே.04 இல் விடை.













