பேசத் தெரியாத கற்கள் கூட
இங்கே கதறி அழுதிருக்கும்…
ரத்தம் சிந்திய தருணங்களை,
இழப்புகளின் சுவடுகளை சுமந்து.
வீரர்கள் விழுந்தார்கள்,
கனவுகள் உடைந்தன,
ஆனாலும்
தலையைக் குனியவில்லை
இந்த கருங்கல் நெஞ்சு.
காலம் காயப்படுத்தினாலும்,
மறக்க முயன்றாலும்,
மௌனமாக நின்று
எல்லாவற்றையும் சகித்தது —
ஒரு கோட்டை அல்ல…
ஒரு காயம்…
ஒரு நினைவு…
தமிழ்நாட்டின் மனசுக்குள்
என்றும் துடிக்கும்
வேலூர் கோட்டை #💝இதயத்தின் துடிப்பு நீ