தடைகளை தகர்த்திடு
💪💪💪💪
உன்னை வென்று விட பலரிருக்கையில்
உன்னையே உணர்ந்து உண்மையைப் புரிந்திடு
கருப்பு ஆடுகள் நம்மைச்சுற்றி இருக்கையில்
தடைகளை தகர்த்திடு முன்னேற பழகிவிடு
போராட்டமே வெற்றின் முதல் படி
வெல்லும் வெறியை மனதில் கொண்டு
அனைவரும் செய்த தவறுகளை உணர்த்திடு
#என் காதல் கவிதை
நினைவெல்லாம் நீயே
❤️❤️❤️❤️❤️
மனதில் பூத்த மலர் நீயே
விழிகளில் குடியிருக்கும் காதல் நீயே
மௌனத்தால் கொள்ளும் உயிர் நீயே
கட்டி அணைத்திடும் அன்பானவள் நீயே
துன்பத்திலும் புன்னகைத்து வாழ்பவளும் நீயே
அன்பால் கொள்ளும்
நினைவெல்லாம் நீயே
#என் காதல் கவிதை
காதல் ஓவியம்
❤️❤️❤️❤️
காதலில் சரித்திரம் படைத்திட வாராயோ கண்ணே
எந்தன் ஓவியங்கள் பல அர்த்தங்கள் கூறுதே
உன்னையும் என்னையும் இணைத்திட கதை சொல்லுதே
இரவின் மடியில் உறங்கிட வருவாயா பெண்ணே
சிலைபோல் அருகில் நீயிருக்க உறக்கமில்லை கண்ணு
#என் காதல் கவிதை
நீயே என் காதல் சங்கீதம்
❤️❤️❤️❤️
காதலின் மொழிகள் கவிதை வரிகள்
வெள்ளைக் காகிதம் காதலுக்கு தூது
நீயே என் காதல் சங்கீதம்
உன்னை பாடிட எனக்குள் ஆனந்தமே
#என் காதல் கவிதை
இதில் 15 கவிதைகள் எழுதி இருக்கேன்
👇🏿👇🏿👇🏿👇🏿
கண்ணீர்
..........
நிம்மதியை தேடினேன்
கிடைக்கும் என்று நம்பிக்கையில்
கண்ணிர் பரிசளித்தது...
நாணல்
..........
கன்னம் சிவக்க
நாணல் நான் கண்டேன்
என்னை ரசிக்கையிலே...
என்னவள்
..............
மனதில் பதிந்தவள்
நிம்மதியே பறித்து சென்றவளை
மறுபடியும் காண்பேனா...
காதல்
......
கண்களை சிமிட்டாதடி
போதை ஏற்றும் விழிகளில்
அடிமையானது மனம்...
தோழன்
....,...
தோழனே கலங்காதே
கண்ணீர் துளிகள் விலைவுயர்ந்தது
காலம் உணர்த்தும்..
மாது
........
பூவுக்குள் வாசமுண்டு
பெண்ணுக்குள் மது உண்டு
சுவைத்தால் போதைவுண்டு...
காகிதம்
............
காகிதமும் காவியமாகும்
கண்ணா உந்தன் காதலால்
கவிதையும் இனிக்கிறது...
பிரிவு
............
பிரிந்து செல்லாதே
என்னுயிர் எடுத்துக் கொண்டு
ரணமாகி போவேனடி...
அன்பு
............
அன்பும் ரணமாகும்
அவள் காதல் பொய்யாகும்போது
கண்ணீரும் கசக்கிறது...
காதல்
.........
இதயம் துடிக்கிறது
பெண்ணே உன்னருகில் வந்தால்
மின்சாரம் பாய்கிறாதே...
காதல் மழை
........
குடையின்றி நனைகிறேன்
காதல் மழையில் அன்பே
உன்னை நினைத்து...
நானும் நீயும்
...........
மழையில் நனைந்தேன்
உன்னை மனதில் சுமந்துக்கொண்டு
உன்னுடன் நான்...
அழகி
...........
ஆசையாக பூச்சூடிட
அவள் கூந்தலில் நான்
பாவையவள் வேக்கத்தில்...
கனவு
........
கனவில் நனைகிறேன்
தூரிகையின் வெளிச்சத்தில் நானுறங்க
மரக்கிளையும் மெத்தையானது...
தாயன்பு
........
இன்பங்கள் கண்டதில்லை
தாய் அன்பு கிடைத்ததில்லை
அனாதைக்கு முகவரியேது
எம். அமுதா
#என் காதல் கவிதை
வென்று விடு என் மனதை
❤️❤️❤️❤️
உன்னிள் நானிருந்தால் காதல் கொள்
மனதில் எனக்கான இடம் கொடுத்து
வென்று விடு என் மனதை
#என் காதல் கவிதை
மௌனச்சிறை
👇👇👇👇
மனதில் உள்ளதை சொல்ல மறுக்கிறேன்
அரவணைக்க யாருமில்லை கண்ணீரும் சிரிக்கிறது
அலைகளின்றி மாட்டிக் கொண்டுத் தத்தளிக்கிறேன்
அன்புக்குக் கட்டுப்பட்டு நானிங்கு வாழ்கிறேன்
பொய்யானப் புன்னகையில் மனதில் வலிகளோடு
மௌனச்சிறையில் ஆயுள் கைதியாய் இன்று
#என் காதல் கவிதை
என்றும் பிரிவதற்கு காரணம் தேடாதே வாழ்ந்து காட்டு வாழ்க்கை அழகாகும்
#என் காதல் கவிதை
மௌனத்தின் ஓசை
❤️❤️❤️❤️
தூரத்தில் இருந்து ரசிப்பவளே
மௌனமாய் என்னை நேசிப்பவளே
மௌனத்தின் ஓசை கேக்குதிங்கு
எழுதிய கவிதை வரிகளில்
வெள்ளை காகிதமும் சொல்கிறது
உன் மனதோடு நானிருக்கேனென்று
#என் காதல் கவிதை
நெஞ்சோடு கலந்தவளே
❤️❤️❤️❤️
மூச்சு காற்றாய் இருப்பவளே
என்றும் நெஞ்சோடு கலந்தவளே
உள்ளத்தில் எப்போதும் நிறைந்தவளே
ஆழமாக நெஞ்சில் இருப்பவளே
தினந்தோறும் காதல் கொள்பவளே
அன்பாலே என்னை ஆள்பவளே
நீயின்றி நானில்லை என்னவளே
#என் காதல் கவிதை













