நட்பின் அழகு
❤️❤️❤️
நட்பின் அழகு நேர்மையில் உண்டு
பொய்யான முகங்கள் ஒற்றுமையைக் கெடுக்கும்
உண்மை ஏது அறிந்து நடப்போம்
கூடவே இருப்போம் நல்லதென்ன புரியவைப்போம்
மகிழ்ச்சியாக பழகுவோம் ஒன்றாக கூடியிருப்போம்
#என் காதல் கவிதை
சிறகடிக்கும் வண்ணப் பறவைகள்
❤️❤️❤️❤️
துள்ளிக் குதிக்கும் சின்னஞ் சிட்டுகள்
இறக்கையை விரித்து சிறகடிக்க ஆசையே
பெண்ணாக பிறந்து பூவாக வளர்ந்தே
துச்சமாய் நினைத்து காயப்படுத்தியது அன்று
வலிகளைக் கடந்து வாழ்ந்து காட்டியே
வீரப் பெண்மணியன போற்றி புகழ்கிறதே
சிறகடிக்கும் பறவைகளுக்கு சுதந்திரம் கிடைத்ததின்று
#என் காதல் கவிதை
ஒவ்வொரு நொடியும் விலை உயர்ந்தது என்னருகில் நீ இருப்பதால்
#என் காதல் கவிதை
கல்லுக்குள் ஈரமுண்டு
❤️❤️❤️❤️
கல்லுக்குள் ஈரமுண்டு உன்னில் பாசமுண்டு
கோபம் இருக்கும் இடத்தில் குணமுண்டு
அன்பு இருக்குமிடத்தில் பிரிவும் உண்டு
காலம் கடந்தாலும் பாசம் குறைவதில்லை
துன்பங்களை கண்டு ரசித்திட மனமில்லை
விழிகள் கசியும் கண்ணீரில் நான்கண்டேன்
#என் காதல் கவிதை
தொப்புள்கொடி உறவு
❤️❤️❤️❤️
பணத்திற்காக வரும் உறவுகள் ஏராளம்
பாசத்தில் வேசமும் நாவினில் தேன்துளியும்
பொய்யான மனிதர்கள் கூடயிருந்து குழிப்பறிக்கும்
தொப்புள்கொடி உறவு பெற்ற தாயே
எத்தனை பிள்ளைகள் பெற்றாலும் தன்னுயிரே
பெண்ணவள் இல்லையே நாம் ஏது
அவர்களைப் போற்றி புகழ்ந்திடும் இன்னாலே
தாயாகவும் வீரப் பெண்மணி ஆகவும்
நடைப் போடு இம் மண்ணிலே
#என் காதல் கவிதை
தனிமையின் வலி
💔💔💔
தனிமையின் பாடங்கள் வலியே
வலிகளின் கொடுமை பிரிவே
பிரிவின் கொடூரம் நானறியவில்லை
நானறியாததால் காதல் கொள்ளவில்லை
கொள்ளை அழகால் விலகியிருந்தேன்
விலகியதால் நீயாரென்று அறிந்தேன்
உன்னால் வந்து தனிமையால்
#என் காதல் கவிதை
பொன்னூஞ்சல்
🌺🌺🌺🌺
பட்டு வண்ண உடையணிந்து
அழகு தேவதைகள் வந்தாட
ஒற்றுமையாக சிரித்து உறவாடிட
மங்கையர்கள் வந்து ஆட்டமாட
பொன்னூஞ்சலில் விளையாடி மகிழ்ந்திட
பறந்து திரியும் பட்டாம்பூச்சிகளே
வண்ணங்கள் உங்களாலே வந்ததிங்கு
மகிழ்வானத் தருணம் இதவன்றோ
#என் காதல் கவிதை
பெண்ணே நீ முள்ளா மலரா
🌺🌺🌺🌺
பூவாக இருந்தாய் முள்ளாக மாறினாய்
பூமாதேவியாக நினைத்தேன் பூகம்பமாய் வெடித்தாய்
பாசத்தை காட்டினேன் விசத்தை விதைத்தாய்
என்மீது வெறுப்பு ஏனோ சொல்லடி
காதலித்த பாவமா இல்லை சாபமா
பெண்ணவள் மென்மையானவள் நினைத்து வாழ்கிறேன்
விலகிச் சென்ற ஒரு நொடியே
உனக்கு தனிமையை பரிசளித்து செல்ல
#என் காதல் கவிதை
பாலைவனப் பறவை
**********
தனிமை என்க்கு புதுசு இல்லை
காதலில் இது சாதாரணம் ஆனது
அன்புக்கு பெயர் பைத்தியம் என்பார்
அனுபவத்தில் வரும் வரிகள் கவிதையென்பார்
இறக்கையில்லா பறவை துணையின்றி தத்தளிக்கிறது
பசுமை நிறைந்த நந்தவனம் பாலைவனமானது
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமில்லா போனது
#என் காதல் கவிதை
மையல் விழியால் கொல்லாதே
❤️❤️❤️❤️
மையல் விழியால் பாக்குறியே
பார்வையால் கொத்தித் திங்குறியே
மனசு அலைபாய விடுறியே
ஓரப் பார்வையால் கொல்லுறியே
விழிகளால் போதை ஏத்திரியே
அம்மம்மா போதும் பொண்ணே
உன்னை ரசித்து வர்ணிக்க
இந்த சென்மம் போதாதடி
#என் காதல் கவிதை













