சூரியக் குடும்பம் ஒரே நேர்கோட்டில் பிப்ரவரி 28.கண்டு களியுங்கள் 👍👍
ஒரே நேர்கோட்டில் வரும் 6 கோள்கள்... வெறும் கண்ணால் பார்க்கலாம்; எப்போது தெரியுமா?
2026 பிப்ரவரி 28 அன்று வானில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு நிகழவுள்ளது. இந்தியாவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வியாழன், வெள்ளி, சனி உள்ளிட்ட கோள்களை எப்போது, எப்படிப் பார்க்கலாம்?
வானியல் ஆர்வலர்களே தயாராகுங்க! 2026 பிப்ரவரி மாத இறுதியில், நமது சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து கண்கவர் காட்சியை வழங்கவுள்ளன. இந்த அரிய 'கோள்களின் அணிவகுப்பை' (Planetary Parade) ரசிக்க பிப்.28, சனிக்கிழமை மாலை மிகச்சிறந்த நாளாகும். இந்திய வான்நோக்கியாளர்களுக்கு ஸ்பெஷல் நியூஸ், இந்த அற்புதக் காட்சியைக் காண நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டியதில்லை; சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பே இதைக் காணலாம். வானில் அணிவகுக்கப் போகும் அந்த 6 கோள்கள்: புதன், வெள்ளி, நெப்டியூன், சனி, யுரேனஸ் மற்றும் வியாழன்.
இந்த அணிவகுப்பிலேயே மிக எளிதாகத் தெரிவது வியாழன்தான். பிப்.28 மாலை வானில் மிக உயரத்தில் பிரகாசமாக ஜொலிக்கும். நகரத்தின் விளக்கு வெளிச்சத்திலும் வெறும் கண்ணால் பார்க்கலாம். தென்கிழக்கு திசையில் தேடினால் இந்த ஜாம்பவானைக் கண்டறியலாம். மேற்குத் திசையில் சூரியன் மறைந்த பிறகு வெள்ளி கோள் பிரகாசமாகத் தெரியும். அதற்கு அருகிலேயே புதன் கோளும் அமர்ந்திருக்கும். வெள்ளியை முதலில் கண்டுபிடித்தால், அது உங்களை புதனிடம் அழைத்துச் செல்லும். புதனைப் பார்க்க தட்டையான, தடைகள் இல்லாத மேற்கு அடிவானம் அவசியம்.
வெள்ளி மற்றும் புதனுக்குச் சற்று மேலே சனி கோள் தென்படும். வெறும் கண்ணால் பார்க்கலாம் என்றாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மிக வேகமாக மறைந்துவிடும் என்பதால், தாமதிக்காமல் உடனே பார்த்துவிட வேண்டும். இது வானில் உயரத்தில் இருப்பதால், வளிமண்டலத் தூசுகள் குறுக்கிடாது. வெறும் கண்ணால் பார்ப்பது கடினம் என்பதால், பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி (Telescope) வைத்திருந்தால் இதைக் கண்டுபிடிப்பது எளிது. நெப்டியூன் மிகத் தொலைவில் இருப்பதால் தொலைநோக்கி இன்றி பார்க்க முடியாது. மேலும், இது அடிவானத்திற்கு மிக அருகில் இருப்பதால், அனுபவம் வாய்ந்த வானியலாளர்கள் மட்டுமே இதைக் காண்பது பாதுகாப்பானது.
தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகள், லடாக், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில் வானம் தெளிவாக இருந்தால் இந்த ஊர்வலம் பிரமாதமாகத் தெரியும். சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருப்பவர்கள் கூட வெள்ளி, வியாழன், சனி ஆகியவற்றை எளிதாகக் காணலாம். மாலை 6:15 முதல் இரவு 8:00 PM வரை (இந்திய நேரப்படி) பார்க்கலாம். வெறும் கண்கள் போதும் (யுரேனஸிற்கு மட்டும் பைனாகுலர் தேவைப்படலாம்). சூரியன் முழுமையாக மறைவதற்கு முன் தொலைநோக்கி மூலம் மேற்கு திசையைப் பார்க்க வேண்டாம்; அது கண்களைப் பாதிக்கும். குறைந்தது 4 கோள்களை (வெள்ளி, புதன், சனி, வியாழன்) நிச்சயம் காணலாம். இதுவே ஒரு அரிய வாய்ப்புதான்.
நன்றி. தங்கள் கிருஷ்.. 🙏🙏.. #📱இந்திய டெக்னாலஜி & கேஜெட்ஸ்🎧 #🤩இன்றைய தொழில்நுட்பம்👨💻