A Mohan Raj
ShareChat
click to see wallet page
@19106433
19106433
A Mohan Raj
@19106433
SM Money Flow (Money Makes Money) MF Distributor
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக Good Morning🌞🙏 As long as you look for someone else to validate who you are by seeking their approval, you are setting yourself up for disaster. You have to be whole and complete in yourself. No one can give you that. You have to know who you are - what others say is irrelevant. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - Mohan Raj  Mutual Fund Distributor 9789971067 SM Money Flow Mo ne Y M ak e $ M o ne y நம்பு உன்னை போர்க்களத்தில் நீ உனக்கான மட்டும்தான் போராட வேண்டும் நிற்பவர்கள் எல்லாம் வேடிக்கை கூட பார்க்கும் கூட்டமே தவிர , உனக்காகக் களம் இறங்குபவர்கள் அல்ல! இனியகாலை வணக்கம் Mohan Raj  Mutual Fund Distributor 9789971067 SM Money Flow Mo ne Y M ak e $ M o ne y நம்பு உன்னை போர்க்களத்தில் நீ உனக்கான மட்டும்தான் போராட வேண்டும் நிற்பவர்கள் எல்லாம் வேடிக்கை கூட பார்க்கும் கூட்டமே தவிர , உனக்காகக் களம் இறங்குபவர்கள் அல்ல! இனியகாலை வணக்கம் - ShareChat
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக Good Morning🌞🙏 Remember: You are the writer of your own story, other people help you to open the next page. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - SM Mone Ffou Monc7 M ak c೩Mono v இனியகாலை வணக்கம் உதவி செய்யும் ஓடி ஓடி வரைதான் அனைவராலும் மதிக்க படுவாய் ( ஒரு முறை மறுத்து பார். அடுத்த நொடியே மறக்கப்படுவாய்   SM Mone Ffou Monc7 M ak c೩Mono v இனியகாலை வணக்கம் உதவி செய்யும் ஓடி ஓடி வரைதான் அனைவராலும் மதிக்க படுவாய் ( ஒரு முறை மறுத்து பார். அடுத்த நொடியே மறக்கப்படுவாய் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து பட்டினத்துப் பிள்ளையார் அருளிய கச்சி ஏகம்பம் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி* *திருஏகம்பமுடையார் திருவந்தாதி என்பது சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஒரு புகழ்பெற்ற சிற்றிலக்கியமாகும். இத்திருவந்தாதியின் 38 முதல் 44 வரையிலான பாடல்கள், சிவனும் பார்வதியும் இணைந்த மாதொருபாகன் (அர்த்தநாரீச்சுரர்) திருக்கோலத்தின் இயல்பை மிக அற்புதமாக விவரிக்கின்றன.* பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து பட்டினத்துப் பிள்ளையார் அருளிய திருஏகம்பமுடையார் திருவந்தாதி* மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய் கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்ற இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே. 1 ஏகம்பனே என்னை ஆள்பவ னேஇமை யோர்க்கிரங்கிப் போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும்ஐவாய் நாகம்பொன் னாரம் எனப்பொலி வுற்றுநல் நீறணியும் ஆகம்பொன் மாமலை ஒப்பவ னேயென்பன் ஆதரித்தே. 2 தரித்தேன் மனத்துன் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய் வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேஎன்றன் வல்வினையை அரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச் சிரித்தேன் உனக்கடி யாரடி பூணத் தெளிந்தனனே. 3 தெளிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடிவம் அளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச் செக்கர் ஒளிதரு மேனிஎம் ஏகம்ப னேஎன் றுகந்தவர்தாள் தளிதரு தூளிஎன் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே. 4 பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர் கற்றுகந் தேன்என் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின் பற்றுகந் தேறும் உகந்தவ னேபட நாகக்கச்சின் சுற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே. 5 அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக் கயற்கலரின் முடிநின்ற சூழ்முடி காண்பரி தாயிற்றுக் கார்முகிலின் இடிநின்ற சூழ்குரல் ஏறுடை ஏகம்ப யாம்எங்ஙனே வடிநின்ற சூலப் படையுடை யாயை வணங்குவதே. 6 வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர் இணக்கன்றி மற்றோர் இணக்கறி வோமல்லம் வல்லரவின் குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடின் அல்லால் கணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே. 7 நலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்கள்அன்பு கலந்தர னார்கச்சி ஏகம்பம் கண்டு கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய்தக்கன் வேள்வியெல்லாம் நிலந்தர மாகச்செய் தாயென்று பூசித்து நின்மின்களே. 8 மின்கள்என் றார்சடை கொண்டல்என் றார்கண்டம் மேனிவண்ணம் பொன்கள்என் றார்வெளிப் பாடுதம் பொன்அடி பூண்டுகொண்ட என்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான் தன்களென் றார்உல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே. 9 தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும் வன்மையிற் குன்றா மதிற்கச்சி ஏகம்பர் வண்கயிலைப் பொன்மயிற் சாயலும் சேயரிக் கண்ணும் புரிகுழலும் மென்மையிற் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே. 10 தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம் அடியார் மனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர் வான்கயிலைச் சினம்விட் டகலாக் களிறு வினாவியோர் சேயனையார் புனம்விட் டகலார் பகலாம் பொழுதும்நம் பூங்கொடியே. 11 பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சிஏ கம்பர்பொற்பார் கோங்கத் திருந்த குடுமிக் கயிலைஎம் பொன்னொருத்தி பாங்கொத் திருந்தனை ஆரணங் கேபடர் கல்லருவி ஆங்கத் திருந்திழை ஆடிவந் தாற்கண் டடிவருத்தே. 12 வருத்தம் தருமெய்யும் கையில் தழையும் வன்மாவினவும் கருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத் திருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத் துருத்தந் திருப்பதன் றிப்புனங் காக்கும் தொழில்எமக்கே. 13 எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை உம்மையும் மானிடம் இப்புனத் தேவிட்டு வந்தமைந்தர் தம்மையும் மானையும் சிந்தையும் நோக்கங் கவர்வஎன்றோ அம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே. 14 அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலையுள் எம்மையரம் பிருளைக் கரிமறிக் கும்இவர் ஐயர் உறுத்தியெய்ய வெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்கு மருளைத் தருசொல்லி எங்கோ விலையுண்டிவ் வையகத்தே. 15 வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள் ஐயார் வருகலை ஏனம் கரிதொடர் வேட்டையெல்லாம் பொய்யான ஐயர் மனத்தவெம் பூங்கொடி கொங்கைபொறாப் பையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே. 16 பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட் டுருமொத்த திண்குரற் சீயம் திரிநெறி ஓங்குவைவாய்ப் பொருமுத் தலைவேற் படைக்கம்பர் பூங்கயி லைப் புனத்துள் தருமுத் தனநகை தன்நசை யால்வெற்ப சார்வரிதே. 17 அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணிய அரிதன் திருவடிக் கர்ச்சித்த கண்ணுக் கருளுகம்பர் அரிதன் திருக்கங் குலியால் அழிந்த கயிலையல்லிங் கரிதென் றிருப்பதெம் பால்வெற்ப எம்மையர்க் கஞ்சுதுமே. 18 அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர் நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி ஏகம்பர் நீள்கயிலைக் குஞ்சரத் தாழ்வரை வீழநுங் கொம்புய்யக் கும்பமூழ்கும் வெஞ்சரத் தாரன வோஅல்ல வோஇவ் வியன்முரசே. 19 சேய்தந் தகைமை உமைகண வன்திரு ஏகம்பத்தான் தாய்தந்தை யாய்உயிர் காப்போன் கயிலைத் தயங்கிருள்வாய் வேய்தந்த தோளிநம் ஊச லொடும் விரை வேங்கைதன்னைப் பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட தோசைப் பகடுவந்தே. 20 வந்தும் மணம்பெறின் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம் முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேன்இழிச்சித் தந்தும் மலர்கொய்தும் தண்தினை மேயுங் கிளிகடிந்தும் சிந்தும் புகர்மலை கைச்சும்இச் சாரல் திரிகுவனே. 21 திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக் கிரியக் குறவர் பருவத் திடுதர ளம்வினையோம் விரியச் சுருள்முத லானும் அடைந்தோம் விரைவிரைந்து பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற தென்அங்குப் பேசுமினே. 22 பேசுக யாவரு மைக்கணி யார்என்று பித்தர்எங்கும் பூசுகை யார்திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத் தேசுகை யார்சிலை வெற்பன் பிரியும் பரிசிலர்அக் கூசுகை யாதுமில் லாக்குலை வேங்கைப் பெயர்நும்மையே. 23 பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப் பெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின் துயரால் வருந்தி மனமும்இங் கோடித் தொழுதுசென்ற தயரா துரையும்வெற் பற்கடி யேற்கும் விடைதமினே. 24 தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும் மும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலை அம்மைக் கருங்கண்ணி தன்னொடின் பந்தரும் தண்புனமே எம்மைக் கவலை செயச்சொல்லி யோவல்லி எய்தியதே. 25 இயங்கும் திரிபுரம் எய்தஏ கம்பர் எழிற்கயிலைத் தயங்கு மலர்ப்பொழில் காள்தையல் ஆடரு வித்தடங்காள் முயங்கு மணியறை காள்மொழி யீர்ஒழி யாதுநெஞ்சம் மயங்கும் பரிசுபொன் னார்சென்ற சூழல் வகுத்தெமக்கே. 26 வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம் மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக்கள்வாய் நெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவுகம்பர் தொகுப்பால் மணிசிந் தருவிக் கயிலைஇச் சூழ்புனத்தே. 27 புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்ற கனங்குழை யாள்தற் பிரிய நமக்குறும் கையறவால் மனங்குழை யாவரும் கண்களி பண்பல பாடுந்தொண்டர் இனங்குழை யாத்தொழும் ஏகம்பர் இக்கயி லாயத்துள்ளே. 28 உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம் கள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கன்றிக் கங்கையென்னும் வெள்ளம் பெரிய சடைத்திரு ஏகம்பர் விண்அரணம் தள்ளம் பெரிகொண் டமைத்தார் அடியவர் சார்வதன்றே. 29 அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதஅருவிக் குன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடைநிழற்கீழ் நின்றும் பொலியினும் கம்பர்நன் னீறு நுதற்கிலரேல் என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே. 30 நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம் வலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த் தாலும்வெற்பன் குலத்துமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித்தொழும் நலத்தமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே. 31 படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும் நடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும் கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள் உடையான் கழற் கன்ப ரேல்அவர் யாவர்க்கும் உத்தமரே. 32 உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி பத்துங்கை யான இருபதும் சோர்தர வைத்திலயம் ஒத்துங்கை யாலவன் பாடக் கயிலையின் ஊடுகைவாள் எத்துங்கை யான்என் றுகந்தளித் தார்கச்சி ஏகம்பரே. 33 அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு அம்பரம் கொள்வதொர் வேழத் துரியவன் தன்னுருவாம் எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தான்இடை யாதடைவான் நம்பரன் தன்னடி யார்அறி வார்கட்கு நற்றுணையே. 34 துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும் பணைத்தோள் அகலமும் கண்டத்து நீலமும் அண்டத்துமின் பிணைத்தா லனசடை யுந்திரு முக்கணும் பெண்ணொர்பக்கத் தணைத்தார் எழிற்கம்பர் எங்கள் பிரானார்க் கழகியவே. 35 அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம் பழகறி விற்பெரி யோர்தமைப் பற்றலர் பற்றும்அன்பின் குழகறி வேற்பினுள் ஒன்றறி யாரறி யாமைதெய்வம் கிழகெறி யப்பட் டுலந்தார் உலகிற் கிடந்தனரே. 36 கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு பால்மதியம் தொடக்குண் டிலங்கும் மலங்கும் திரைக்கங்கை சூடுங்கொன்றை வடக்குண்டு கட்டத் தலைமாலை வாளால் மலைந்தவெம்போர் கடக்கும் விடைத்திரு ஏகம்பர் கற்றைச் சடைமுடியே. 37 கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார் முற்றுற் றிலாமதி யின்கொழுந் தேகம்பர் மொய்குழலாம் மற்றைத் திசையின் மணிப்பொற் கொழுந்தத் தரங்கழுநீர் தெற்றிப் பொலிகின்ற சூட்டழ காகித் திகழ்தருமே. 38 தருமருட் டன்மை வலப்பால் கமலக்கண் நெற்றியின்மேல் திருமலர்க் கண்பிள வின்றிக ழுந்தழல் செல்வக்கம்பர் கருமலர்க் கண்இடப் பாலது நீலம் கனிமதத்து வருநுதற் பொட்டணங் குக்குயர்ந் தோங்கும் மலர்க்குழலே. 39 மலர்ந்த படத்துச்சி ஐந்தினும் செஞ்சுடர் மாமணிவிட் டலர்ந்த மணிக்குண் டலம்வலக் காதினில் ஆடிவரும் நலந்திரு நீள்வயி ரம்வெயிற் பாய நகுமணிகள் கலந்தசெம் பொன்மக ரக்குழை ஏகம்பர் காதிடமே. 40 காதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம் அங்குயர்ந்து போதலைக் கும்பனிப் பொன்மலை நீற்றின் பொலியகலம் தாதலைக் குங்குழல் சேர்பணைத் தோள்நறுஞ் சாந்தணிந்து சூதலைக் கும்முலை மார்பிடம் ஏகம்பர் சுந்தரமே. 41 தரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளரா உரம்பொற் புடைய திருவயி றாம்வலம் உம்பர்மும்மைப் புரம்பொற் பழித்தகம் பர்க்குத் தரத்திடு பூண்முலையும் நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்தே. 42 உடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சி வடத்தொரு கோவணந் தோன்றும் அரைவலம் மற்றையல்குல் தொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூநுண்டுகில் அடல்பொலி ஏறுடை ஏகம்பம் மேய அடிகளுக்கே. 43 அடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந் திடிகுரற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின் அடியிடப் பாலது பஞ்சுற அஞ்சுஞ் சிலம்பணிந்த வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே. 44 தருக்கவற் றான்மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையை நெருக்கவற் றோட மழுவாள் விசைத்தது நெற்களென்றும் பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர் அத்தர்தம் பாம்புகளின் திருக்கவற் றாலிட் டருளும் கடகத் திருக்கரமே. 45 கரத்தத் தமருகத் தோசை கடுத்தண்டம் மீபிளப்ப அரத்தத்த பாதம் நெரித்திட் டவனி தலம்நெரியத் தரத்தத் திசைகளுக் கப்புறம் போர்ப்பச் சடைவிரித்து வரத்தைத் தருகம்பர் ஆடுவர் எல்லியும் மாநடமே. 46 நடனம் பிரான்உகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர் உடன்வந்து மூவா யிரவர் இறைஞ்சி நிறைந்தஉண்மைக் கடனன்றி மற்றறி யாத்தில்லை அம்பலம் காளத்தியாம் இடம்எம் பிரான்கச்சி ஏகம்பம் மேயாற் கினியனவே. 47 இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத் தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த முனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டிஅன்புக் கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே. 48 பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல் வரவித் தனையுள்ள தெங்கறிந் தேன் முன் அவர்மகனார் புரவித் தனையடிக் கக்கொடி தாய்விடி யாஇரவில் அரவித் தனையுங்கொண் டார்மட வார்முன்றில் ஆட்டிடவே. 49 இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண் டிடஅஞ் சுவர்மட வார்இரி கின்றனர் ஏகம்பத்தீர் படம்அஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற் படஅஞ் சுவர்எங்ங னேபலி வந்திடும் பாங்குகளே. 50 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:41
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக Good Morning🌞🙏 Time is the coin of your life. It is the only coin you have, and only you can determine how it will be spent. Be careful lest you let other people spend it for you. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - ShareChat
00:33
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக Good Morning🌞🙏 You cannot control what happens to you, but you can control your attitude towards what happens to you. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - ShareChat
00:09
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக Good Morning🌞🙏 Patience is a power... Patience is not an absence of action; rather it is "timing" it's waits on the right time to act, for the right principles and in the right way. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - சீவசிந்தனை வாழ்ககயை மாற்றும் ஏழு விஷயங்கள்ை!! இனிய காலை வணக்கம் 1 பேச கற்றுக்கொள் கெஞ்சாதே! 2 மதிஜ்காதவர்களிடம் இருற்து தூரமாக இரு! 3 புரியாத இடத்தில் அமைதியாக இரு! திருத்திக்கொள்! 4 தவறு நடந்தால் கத்தாதே 5 அதிகம் பேசாதே! அஸமதியாக வளர்ச்சி அபை 6 எதுவாச Qருந்நானும் தனிாகறியிர்ம்னம கற்றுக்கொள் ] சரத்திற்கு சாப்பிடு ரொத்திறகு தூங்கு! இீநமசிவாய LOnan R LLVHnಭDnouor 0740/71067 SM Money Flow  Mo noy Mak & & Mona y சீவசிந்தனை வாழ்ககயை மாற்றும் ஏழு விஷயங்கள்ை!! இனிய காலை வணக்கம் 1 பேச கற்றுக்கொள் கெஞ்சாதே! 2 மதிஜ்காதவர்களிடம் இருற்து தூரமாக இரு! 3 புரியாத இடத்தில் அமைதியாக இரு! திருத்திக்கொள்! 4 தவறு நடந்தால் கத்தாதே 5 அதிகம் பேசாதே! அஸமதியாக வளர்ச்சி அபை 6 எதுவாச Qருந்நானும் தனிாகறியிர்ம்னம கற்றுக்கொள் ] சரத்திற்கு சாப்பிடு ரொத்திறகு தூங்கு! இீநமசிவாய LOnan R LLVHnಭDnouor 0740/71067 SM Money Flow  Mo noy Mak & & Mona y - ShareChat
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக Good Morning🌞🙏 Great minds discuss ideas; average minds discuss events; small minds discuss people. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - ShareChat
00:09
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக Good Morning🌞🙏 When you angry COUNT to TEN before you speak. If very angry, COUNT to ONE HUNDRED. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - ShareChat
00:09
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக Good Morning🌞🙏 We don't develop courage by being happy every day. We develop it by surviving difficult times and challenging adversity. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - ShareChat
00:09
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து இளம்பெருமான் அடிகளார் அருளிய சிவபெருமான் திருமும்மணிக்கோவை* *சிவபெருமான் திருமும்மணிக்கோவை, பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஒரு புகழ்பெற்ற சைவ சமய நூலாகும். இந்நூலை இயற்றியவர் இளம்பெருமான் அடிகளார் ஆவார். திருமும்மணிக்கோவை என்பது ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூன்று பாவகைகள் மாறி மாறி வருமாறு முப்பது (30) பாடல்களைக் கொண்ட நூலாகும்.சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் பாடல்கள், பக்தர்களின் துயர் துடைக்கும் இறைவனின் கருணையை எடுத்துரைக்கின்றன.* பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து இளம்பெருமான் அடிகளார் அருளிய சிவபெருமான் திருமும்மணிக்கோவை* அகவல் முதல்வன் வகுத்த மதலை மாடத்து இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற் பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப் புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர் எறிவளி எடுப்பினுஞ் சிறுநடுக் குறாநின் அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை இலங்குவளைத் தனிப்போது விரித்த அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே. 1 வெண்பா மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின் கீறு தடுப்பக் கிடக்குமே - நீறடுத்த செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி எந்தாய்நின் சென்னி இடை. 2 கட்டளைக் கலித்துறை இடைதரில் யாமொன் றுணர்த்துவ துண்டிமை யோர்சிமையத் தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின் தொடைதரு துண்டங் கிடக்கினுந் தொண்டர் ஒதுக்கியிட்ட புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே. 3 அகவல் சடையே, நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே மிடறே, நஞ்சகந் துவன்றி அமிர்து பிலிற்றும்மே வடிவே, முளிஎரி கவைஇத் தளிர்தயங் கும்மே அடியே, மடங்கல்மதஞ் சீறி மலர்பழிக் கும்மே அஃதான்று, இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத் தலைமூன்று வகுத்த தனித்தாட் கொலையூன்று குடுமி நெடுவே லோயே. 4 வெண்பா வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த காலைநீர் எங்கே கரந்தனையால் -மாலைப் பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ இறைக்கூறாய் எங்கட் கிது. 5 கட்டளைக் கலித்துறை இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரசி புதுநீர் மணத்தும் புலியத ளேஉடை பொங்குகங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் றோட்டதிங்கள் செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே. 6 அகவல் வண்ணம், ஐஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை மஞ்சுமி விலகிப் பகல்செகுக் கும்மே என்னைப், பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள் நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே அஃதான்று, முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத் தேமுறு முதிர்சடை இறைவ மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே. 7 வெண்பா உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல் முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா இன்னநாள் கண்ட திவள். 8 கட்டளைக் கலித்துறை இவளப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல் அவளப்புத் தேளிர் உலகிற் கரசி அதுகொண்டென்னை எவளுக்கு நீநல்ல தியாரைமுன் எய்திற்றெற் றேயிதுகாண் தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே. 9 அகவல் கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து அயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின் அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல் யாமே கண்டதும் இலமே தாமா மூவா எஃகமும் முரணும் ஓவாது பயிற்றும் உலகமால் உளதே. 10 வெண்பா உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத வளரொளிதேய்ந் துள்வளைந்த தொக்கும் - கிளரொளிய பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார் கோதைப் பிறையின் கொழுந்து. 11 கட்டளைக் கலித்துறை கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின் செழுந்திரட் குன்றகஞ் சென்றடைந் தாலொக்குந் தெவ்வர்நெஞ்சத் தழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர் எழுந்திரட் சோதிப் பிழம்புமென் உள்ளத் திடங்கொண்டவே. 12 அகவல் கொண்டற் கார்எயிற்றுச் செம்மருப் பிறாலின் புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி வரையோன் மருக புனலாள் கொழுந இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின் நீறாடு பொலங்கழல் பரவ வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே. 13 வெண்பா நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிர ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண் ஏற்றரால் தீரும் இடர். 14 கட்டளைக் கலித்துறை இடர்தரு தீவினைக் கெள்கிநை வார்க்குநின் ஈரடியின் புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப் படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங் கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே. 15 அகவல் அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும் அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும் அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக் குறுநெடுந் தானை பரப்பித் தறுகண் மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க காய்சின அரவுநாண் பற்றி நீயோர் நெடுவரை நெளிய வாங்கிச் சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே. 16 வெண்பா ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம் ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்கு மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ மீதூரக் கண்சிவந்த வேந்து. 17 கட்டளைக் கலித்துறை வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்திகிரி ஏந்தற்கு மைத்துனத் தோழன்இன் தேன்மொழி வள்ளியென்னும் கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே. 18 அகவல் கொற்றத் துப்பில் ஒன்றை ஈன்ற துணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப் பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின் நேர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம் தவழ்தரு புனல்தலைப் படுநர் அவல மாக்கடல் அழுந்தலோ இலரே. 19 வெண்பா இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென் றுலகெலாஞ் சென்றுழல்வ ரேனும் -மலர்குலாம் திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே எங்கட் குறுந்தெரியின் ஈண்டு. 20 கட்டளைக் கலித்துறை ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள் வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார் பூண்டஒற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும் நீண்டஒற் றைப் பிறைக் கீளும்எப் போதும்என் நெஞ்சத்தவே. 21 அகவல் நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ யாதா கியதோ எந்தை நீதியென் றுடைதலை நெடுநிலா வெறியல் கடைதலென் றருளிச் சூடிய பொருளே. 22 வெண்பா பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும் அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத பான்மறா மான்மறிக்கைப் பைங்கட் பகட்டுரியான் தான்மறான் பைங்கொன்றைத் தார். 23 கட்டளைக் கலித்துறை தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க ஏரிள மென்முலைப் பொன்மலை யாட்டிக் கெற் றேயிவனோர் பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின் ஓரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே. 24 அகவல் உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும் இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை பயிற்று நாவலர்க் கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே. 25 வெண்பா எளியமென் றெள்கி இகழாது நாளும் அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தெளிவரிய வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய் கொள்கையிலை எம்மாற் குறை. 26 கட்டளைக் கலித்துறை குறையாப் பலிஇவை கொள்கஎன் கோல்வளை யுங்கலையும் திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில் பொறைபாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த இறைவா இடுபிணக் காடசெம் மேனிஎம் வேதியனே. 27 அகவல் வேதியர் பெரும விண்ணோர் தலைவ ஆதி நான்முகத் தண்ட வாண செக்கர் நான்மறைப் புத்தேள் நாட காய்சின மழவிடைப் பாகநின் மூவிலை நெடுவேல் பாடுதும் நாவலம் பெருமை நல்குவோய் எனவே. 28 வெண்பா எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச நனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக் கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற் போர்க்கையிலை பேசல்நீ பொய். 29 கட்டளைக் கலித்துறை பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை இந்நீள் கடைக்கென்று வந்தறி யீர்இனிச் செய்வதென்னே செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே. 30 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:41