ADITYA GURUJI
ShareChat
click to see wallet page
@2040552008
2040552008
ADITYA GURUJI
@2040552008
எல்லோரும் நன்றாக இருப்பீர்கள்
https://youtube.com/watch?v=OFIH-qzMHFg&si=htJZJjIWmrwsQSeS #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠
youtube-preview
https://youtube.com/watch?v=54XqE_xRHYk&si=gP2pq0t70uJXM93O #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍
youtube-preview
7 வருட மெமரி.. ☸️சிறுவயதில் தீய பழக்கத்திற்கு அடிமையானது ஏன்? - மாலைமலர் பதில்கள்- 227 (05.03.19)☸️ #adityaguruji #தீயபழக்கம் #TamilArticle #பலன்கள் #சிறுவயது #ஜோதிடம் 🍂ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888🍂 கிருஷ்ணன், திருச்சி. கேள்வி. 48 வயதில் கோடிக்கணக்கில் சம்பாதித்து அதனை இழந்தும் விட்டேன். ஐடி தொழிலில் சம்பாதித்த பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்து அனைத்தும் போய் விட்டது. அந்தத் தொழில் 2011ல் தொடங்கப்பட்டது. 2018ல் மூடி விட்டேன். 2014 க்குப் பிறகு வேலையும் இல்லை. ஏன் என் சம்பாத்தியம் 2014க்குப் பிறகு தடைபட்டது? மீண்டும் வேலை அல்லது தொழில் மூலம் வருமானம் வர வாய்ப்புள்ளதா? நான் தொழில் செய்தே இருக்கக்கூடாது என ஒரு ஜோதிடர் சொன்னார். மீண்டும் தொழில் செய்யலாமா? நல்ல வருமானம் வந்த காலத்தில் பெரும் தொகையை உறவினர்களுக்கு கொடுத்து உதவியிருக்கிறேன். அவர்கள் அதைத் தருகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பணம் கிடைக்குமா? பதில் (சிம்ம லக்னம், கும்ப ராசி, 1ல் கேது, 3ல் சுக், செவ், குரு, 4ல் சூரி, 5ல் புத, 7ல் சந், ராகு, 9ல் சனி, 4-12-1970 இரவு 11-9 திருச்சி) சிம்ம லக்னத்திற்கு சனி தசை நன்மைகளைச் செய்யாது என்பதை அடிக்கடி மாலைமலர் பதில்களில் சொல்லி வருகிறேன். அப்படி நன்மைகளைச் செய்ய வேண்டுமெனில் சனி ஒரு இக்கட்டான நிலைகளில் நல்ல சார அமைப்புடன் சுபத்துவமாக இருக்க வேண்டும். சிம்மத்திற்கு யோகாதிபதியான குருவின் தசையில் பெரும் பணம் சம்பாதித்து இருக்கிறீர்கள். இது சனி தசை சுயபுக்தி வரை நீடித்திருக்கிறது. சனி தசை, புதன் புக்தியில் தெரியாத தொழிலில் முதலீடு செய்து அத்தனை பணத்தையும் இழந்து விட்டீர்கள். சனி தசை சுக்கிர புக்தியில் தற்போது வருமானம் இன்றி இருக்கிறீர்கள். சிம்ம லக்ன அதிபதியான சூரியனுக்கு, சனியும், சுக்கிரனும் கடுமையான எதிரிகள். எனவே சனி தசை, சுக்கிர புக்தி முழுவதும் உங்களுக்கு வேலை தொழில் எதுவும் இல்லாத ஒரு நிலைதான் இருக்கும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு உங்களுக்கு நல்ல பலன் சொல்வதற்கில்லை. வரும் டிசம்பர் மாதம் ராகு புத்தி ஆரம்பித்ததும் மாற்றங்கள் ஏற்படும். ஏற்கனவே வேலை செய்த ஐடித் துறையில் வேலை கிடைக்கும். 2022ல் குரு புக்தி ஆரம்பித்ததும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். அதுவரை பண விவகாரத்தில் நல்ல பலன்கள் நடக்காது. கொடுத்த பணம் திரும்பி வருவதற்கும் உத்தரவாதம் இல்லை. வந்ததாலும் சிறுகச்சிறுக வந்து பிரயோஜனம் இல்லாமல் போகும். 2022 முதல் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள். ஆர். சுகில், தக்கலை. கேள்வி. ஏழைக் குடும்பத்தில் பிறந்து 23 வயதான நான் ஒரு கல்லூரியில் படித்து பிஇ பட்டம் பெற்றேன். கல்லூரிக்கு கட்ட வேண்டிய பணத்தில் 80 ஆயிரம் கடன் இருக்கிறது. பாக்கிப் பணம் கொடுக்காமல் எனது சான்றிதழை இரண்டு வருடமாக தர மறுக்கிறார்கள். பணத்தைக் கட்ட எனக்கு வழி இல்லை. இப்போது சாதாரண கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறேன். என் கடன் எப்போது தீரும்? சர்டிபிகேட் எப்போது கிடைக்கும்? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? பதில். (மீன லக்னம், தனுசு ராசி, 1ல் சுக், 2ல் சூரி, புத, கேது, 5ல் செவ், 8ல் ராகு, 9ல் குரு, 10ல் சந், 12ல் சனி, 20-4-1995. அதிகாலை 4-10 குமரி) மீன லக்னத்தில் பிறந்த உனக்கு, மூன்று வயதில் இருந்து எட்டுக்குடைய சுக்கிர தசையும், 29 வயது வரை 6-க்குடைய சூரிய தசையும் நடக்கிறது. இவர்கள் இருவரும் உச்சம் பெற்று இருக்கிறார்கள். பாபர்கள் உச்சம் பெற்று தசை நடத்துவது நன்மைகளைத் தராது. அதேநேரத்தில் லக்னாதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பதால் 29 வயதிற்கு பிறகு வரும் பத்தில் அமர்ந்த சந்திர தசை உனக்கு யோகத்தைச் செய்யும். 29 வயதிற்கு பிறகு அடுத்தடுத்து யோக தசைகள் வருவதால் மிகவும் நன்றாக இருப்பாய். சொந்த ஊரை விட்டு தூர இடங்களுக்குச் சென்று பொருள் சம்பாதிக்கும் ஜாதகம் உன்னுடையது. தற்போது உன்னுடைய தனுசு ராசிக்கு கடுமையான ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதால் வேலை விஷயத்திலும், கடன் விஷயத்திலும் நல்லவைகள் நடக்காது. 2019ல் உன்னுடைய கடனை அடைத்து சர்டிபிகேட் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. 40 வயதிற்குட்பட்ட தனுசு ராசிக்காரர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சிரமத்தில்தான் இருக்கிறீர்கள். பொறுமையாக இரு. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். 29 வயதிற்குப் பிறகு உன்னுடைய எதிர்காலம் கவலைப்படும்படியாக இருக்காது. லக்னம் வலுப்பெற்றதால் வருங்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள். எஸ். வின்சென்ட். கும்பகோணம். கேள்வி. கட்டிட வேலை பார்த்து வருகிறேன். இதைத் தவிர வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை. கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது. 500 ரூபாய் சம்பாதித்தாலும் மிச்சப்படுத்த முடியவில்லை. எங்கு சென்று கேட்டாலும் வேறு வேலை கிடைக்கவில்லை. மூன்று குழந்தைகள் இருக்கின்றன. எங்களில் யாருக்கும் ஜாதகம் கிடையாது. ஆனால் ராசி தெரியும். மூத்தவனுக்கு மேஷம், அடுத்த பெண்ணிற்கு விருச்சிகம், இளையவனுக்கு கன்னி, எனக்கு ரிஷபம், மனைவிக்கு மீனம். எங்களது கஷ்டம் எப்போது தீரும்? பதில். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் நான்கு பேருக்கு சனி நடந்து கொண்டிருப்பது குடும்பத் தலைவரின் வருமானத்தைப் பாதிக்கவே செய்யும். அதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் விருச்சிகம், மேஷ ராசியைக் கொண்டவர்கள் கடந்த சில வருடங்களாக கடுமையான பணப் பிரச்சினைகளையும், உடல், மனப் பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி எழுதுகிறேன். வரும் ஏப்ரல் முதல் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படும். இரண்டாவதாக செப்டம்பர் முதல் இன்னொரு நல்ல மாற்றம் ஏற்பட்டு, அடுத்த வருடம் முதல் நிரந்தர நல்ல வேலையும் கிடைத்து, சேமிக்கும் அளவிற்கு பணம் சம்பாதிப்பீர்கள். இனிமேல் குடும்பத்தில் கஷ்டங்கள் இருக்காது. வாழ்த்துக்கள். சுகந்தி, கரந்தை-2 கேள்வி. 15 வயதான மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். மார்க் கம்மியாக வாங்குகிறான். பாஸ் ஆவானா என்று தெரியவில்லை. இந்த வயதிலேயே மது, சிகரெட், பாக்கு பழக்கங்கள் இருக்கிறது. இந்தப் பழக்கத்தில் இருந்து எப்போது விடுபடுவான்? அதிகமாக கோபப்படுகிறான். அடுத்து அவனுக்கு எந்த வேலை அமைத்துத் தரலாம்? எந்த வேலை அவனுக்கு செட் ஆகும்? கணவரின் தொழில் நிலைமைகளும் சரியாக இல்லை. எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? பதில். (மீன லக்னம், கன்னி ராசி, 1ல் சுக், 2ல் செவ், ராகு, 4ல் சனி, 6ல் குரு, 7ல் சந், 8ல் கேது, 11ல் சூரி, புத, 9-2-2004 காலை 9-55 தஞ்சாவூர்) மகனது ஜாதகப்படி கல்விக்கு அதிபதியான புதன், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஆறாம் அதிபதியான சூரியனின் சாரம் பெற்று, அம்சத்தில் நீசமாகி உள்ளதால், படிப்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை. பாபத்துவ அமைப்புள்ள தசா புக்தி நடக்கும் போது ஒருவரின் நடவடிக்கைகள் வயதுக்கேற்ற வகையில் சரியாகவும் இருக்காது. மகனுக்கு எட்டில் இருக்கும் கேதுவின் சாரம் பெற்று, ராகுவுடன் இணைந்து பாபத்துவமான செவ்வாய் தசை நடைபெறுகிறது. அதனால் மகன் தகாத சேர்க்கையினால் கெட்ட பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டிருக்கிறார். செவ்வாய்க்கு குரு பார்வை இருப்பதால் எதுவும் எல்லை மீறாது. கவலை வேண்டாம். வீட்டில் தாய், தகப்பனுக்கு ஏழரை, அஷ்டமச்சனி நடக்கும் போது குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் இருக்காது. குழந்தைகள் மூலம் மன அழுத்தமும் இருக்கும். உங்களுக்கு சென்ற வருடம் வரை அஷ்டமச் சனி நடந்ததால் கணவர், குழந்தைகள் மூலம் நிம்மதி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மகனுடைய லக்னத்தை சனி பார்ப்பதால் இவன் நீண்டகாலத்திற்கு குடிப்பழக்கம் உள்ளவனாக இருப்பான். பத்தாம் வகுப்பு முடித்ததும், நிதானமாக செய்யக்கூடிய மெக்கானிசம் போன்ற தொழிற்கல்வி வகுப்புகளில் சேர்த்து விடவும். தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தை குரு பார்ப்பதால், படிப்பு வரவில்லை என்றாலும் ஏதாவது ஒரு தொழிலில் நல்ல விதமாக நிலைகொண்டு 30 வயதிற்கு மேல் வாழ்க்கையில் நன்றாகவே இருப்பான். பரிகாரம் எதுவும் தற்போது பலனளிக்காது. ஹேமமாலினி, சென்னை. கேள்வி. தங்களுடைய ஜோதிட அறிவுக்கு நான் பக்தை, அடிமை என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொன்னபடியே என்னுடைய தங்கை பெண்ணிற்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. ஆனால் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஒரு வாரத்தில் நிச்சயம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவசரப்படுத்தியதாலும், தங்களின் அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்காது என்பதாலும் மாப்பிள்ளை வீட்டார் பொருத்தம் பார்த்ததே போதும் என்று நிச்சயம் செய்து விட்டோம் .ஆனாலும் எனக்கு உங்களிடம் பொருத்தம் பார்க்கவில்லையே என்று உறுத்தலாக இருக்கிறது. இத்துடன் மாப்பிள்ளை, பெண்ணின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். பொருத்தம் சரியாக இருக்கிறதா? இருவரும் சந்தோஷமாக இருப்பார்களா? குறிப்பாக பையனின் ஆயுள் ஸ்தானம் நன்றாக இருக்கிறதா? எப்போது குழந்தை பிறக்கும்? நீங்கள் சொன்ன பிறகுதான் கல்யாண தேதியை முடிவு செய்ய வேண்டும். பதில். உலகில் உள்ள அத்தனை பேருக்கும் நான் பொருத்தம் பார்த்து சொல்ல முடியுமா? இது சாத்தியமா? உங்களின் கடிதம் என் பார்வைக்கு வருவதற்கு முன்னர் திருமணமே நடந்து முடிந்து விடலாம். பொருத்தம் பார்ப்பது போன்ற விஷயங்களுக்கு எனக்கு கடிதம் எழுதாதீர்கள். எல்லா இடங்களிலும் என்னை விட ஞானம் உள்ளவர்களும், அனுபவசாலியான ஜோதிடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரபலமாகி விட்டவர்கள் அனைவரும் முழுமையான ஜோதிடர்கள் இல்லை. பிரபலம் இல்லாமல் ஏதோ ஒரு மூலையில் அமைதியாக தொழில் செய்து கொண்டிருப்பதனால் ஒருவர் சிறிய ஜோதிடரும் இல்லை. மாப்பிள்ளை வீட்டார் அனுபவமுள்ள ஜோதிடரிடமே பொருத்தம் பார்த்திருப்பார்கள். பையனுக்கு மேஷ லக்னம், பெண்ணிற்கு துலாம் லக்னம் என்பதாலும், பையனுக்கும் பெண்ணுக்கும் ஒரே ராசிநாதன் என்பதாலும், பெண்ணிற்கு ஆறாம் அதிபதி தசை முடிந்து யோகாதிபதி சனியின் தசை நடப்பதாலும், இருவருக்கும் திருமணம் செய்யலாம். பையனின் ஜாதகப்படி எட்டுக்குடைய செவ்வாய் திக்பலத்துடன் உச்சம், ஆயுள்காரகன் சனி ஆட்சியாகி, பௌர்ணமி யோகத்தில் பிறந்து, தனித்த புதன் லக்னத்தில் திக்பலத்துடன் இருப்பதால் ஆயுள் குற்றமில்லை. இருவருக்கும் புத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டிருப்பதால், தாமத புத்திர பாக்கியம் உண்டு. வாழ்த்துக்கள். ✨அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888,044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻
🔍ஜோதிட உலகம் 🌍 - சிறு வயதில் தீயபழக்கத்திற்கு அடிமையானது 50? இதிக்கலைஆகுஆதிதீறகுருவி சிறு வயதில் தீயபழக்கத்திற்கு அடிமையானது 50? இதிக்கலைஆகுஆதிதீறகுருவி - ShareChat
https://youtube.com/live/PEzEaxnn-Mo?si=BAJTps5N0Wk1tpT_ #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍
youtube-preview
https://youtube.com/watch?v=XWPQYlT2mpU&si=1IQHrpQJ6GItIuXI #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍
youtube-preview
🌺ஆயுள் முடிவதை அறிய முடியுமா?...D-059🌺 #adityaguruji #ஆயுட்கலாம் #TamilArticle #பலன்கள் #ஜோதிடம் 🍂ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 8681 99 8888🍂 ஜோதிடத்தின் மூலக்கிரகமான புதன் இந்த ஜாதகத்தில் நீச்ச நிலையில் இருந்தாலும், சந்திரனுக்கு கேந்திரத்திலும், லக்ன கேந்திரத்திலும் இருக்கிறார். ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே இடத்தில் இருக்கும் வர்கோத்தம நிலை பெற்று, அம்சத்தில் குருவின் வீட்டில் சுபத்துவமாக இருக்கிறார். ஒரு கிரகம் நீச்சபங்கம் அடைவதையும், நீச்சத்தின் உயர்நிலையான நீச்சபங்க ராஜயோக நிலையை அடைவதையும் ஏற்கனவே நான் வேறுபடுத்திச் சொல்லியிருக்கிறேன். அதன்படி இங்கே புதன் தன்னுடைய நண்பரான உச்ச சுக்கிரனுடன் இணைந்து, நீச்சபங்க ராஜயோகம் எனும் உயர்நிலையை அடைந்திருக்கிறார். அதைவிட முக்கியமாக புதன், குருவின் வீட்டில் அமர்ந்து, சுக்கிரனோடு இணைந்து சுபத்துவம் அடைந்திருக்கிறார். ஒரு கிரகம் குரு, சுக்கிரன் இரண்டின் முழுத் தொடர்பையும் அடையுமாயின் அதன் சுப காரகத்துவத்தை முழுமையாகத் தரும் தகுதியைப் பெறும். புதனின் நீச்ச பங்கத்தில் இன்னொரு நல்நிலையாக புதனுக்கு வீடு கொடுத்த குரு, இங்கே சுக்கிரனுடன் பரிவர்த்தனை அடைந்து மறைமுக வலுப் பெறுகிறார். நீச்சமான ஒரு கிரகம் பங்கத்தை அடைவதற்காக ஜோதிடம் சொல்லும் விதிகளில் மிகப் பெரும்பாலானவைகளின்படி இந்த ஜாதகத்தில் புதன் நீச்சபங்க ராஜயோகம் என்ற நிலையை பெற்றிருப்பது சிறப்பு. ஒரு கிரகம் தனது முழுமையான காரகத்துவத்தை தர வேண்டுமெனில், தான் இருக்கும் பாவகத்தில் நல்லதொரு நிலையில் இருக்க வேண்டும் என்பதும் ஜோதிடத்தின் ஒரு விதி. அதன்படி இங்கே புதன், தான் உயிர் நண்பராக கருதும் சூரியனுடனும், தன்னை உயிர் நண்பராக கருதும் சுக்கிரனுடனும் இணைந்து நல்ல மனநிலையில் இருக்கிறார். எத்தனை சிறப்புகள் இருந்தாலும், அங்கே ஒரு துளியேனும் ஏதேனும் ஒரு குறை இருக்கும் என்ற நிலையில், இங்கே புதனுக்கு என்ன குறை இருக்கிறது என்பதைப் பார்த்தால், செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் புதனைப் பார்ப்பதை ஒரு குறையாகச் சொல்லலாம். மிதுன லக்னத்தின் கொடும் பாவியான செவ்வாய், இங்கே சனியின் பார்வையைப் பெற்று கடும் பாபத்துவம் அடைந்திருக்கும் நிலையில், தனது கடுமையான ஏழாம் பார்வையால் லக்னாதிபதி புதனைப் பார்த்திருப்பின் மேலே புதனுக்குச் சொன்ன அத்தனை சிறப்பு நிலைகளும் அடிபட்டுப் போய், செவ்வாய் பார்வையின் பாபத்துவம் தூக்கலாக அமைந்து பாதி சிறப்புகளை இங்கே புதன் இழந்து விட்டிருப்பார். ஆனால் செவ்வாயின் எட்டாம் பார்வைக்கு மிகப் பெரிய விசேஷம் கிடையாது. கிரகப் பார்வைகளின் வலிமையின்படி செவ்வாயின் ஏழாம் பார்வை 100 சதவிகித திறனையும், நான்காம் பார்வை 50 சதவிகித திறனையும், எட்டாம் பார்வை 25% திறனையும் மட்டுமே கொண்டிருக்கும். எனவே செவ்வாயின் எட்டாம் பார்வை இங்கே புதனின் சுபத்துவ மற்றும் நீச்சபங்க வலுவைக் குறைக்க முடியவில்லை. இத்தனை சிறப்புகளைப் பெற்றிருக்கும் புதனின் தசை என்னுடைய வாழ்நாளில் வராது என்பது ஒரு மிகப்பெரிய குறை. என்னதான் நிறைகளைக் கொடுத்தாலும் பரம்பொருள் “ஆட்டுக்கு வாலை” அளந்துதான் கொடுத்திருக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த புதனின் தசை எனது வாழ்நாளில் வந்திருக்குமாயின் என்னால் ஜோதிடத்தில் ஒரு மிகப்பெரிய நிலையை கடந்திருக்க முடியும். என் வாழ்நாளில் புதன்தசை நடந்திருந்தால், தசை நடக்கும் 17 வருடங்களும் ஜோதிடத்தின் மிகப்பெரிய உச்சநிலைக்கு என்னால் சென்றிருக்க முடியும். அது கூடாது என்பது பரம்பொருளின் விருப்பம். அதேநேரத்தில் எப்பொழுதெல்லாம் புதன் புக்தி என் வாழ்க்கையில் வருகிறதோ, அப்போதெல்லாம் ஏதேனும் ஒரு ஜோதிட உயர்நிலையை நான் எட்டியிருக்கிறேன். நான் பிறந்ததே கேது தசையின் இறுதிப்பகுதியான புதன் புக்தியில்தான். அதாவது மூல நட்சத்திரத்தின் கடைசி சில நிமிடங்களில் நான் பிறந்திருக்கிறேன். மூல நட்சத்திரத்தை ஒன்பது பங்குகள் ஆக்கும்பொழுது, அதாவது ஒரு நட்சத்திரத்தை ஒன்பது உப நட்சத்திரங்களாகப் பிரிக்கும்போது மூலத்தின் கடைசி உப நட்சத்திரமான, புதனின் பகுதியில்தான் நான் பிறந்திருக்கிறேன். லக்னம் திருவாதிரையில் அமர்ந்திருந்தாலும், லக்னத்தின் உப நட்சத்திரமும், ராகுவேயாகி, அந்த உப நட்சத்திரத்தின், உப-உப நட்சத்திரமும் என் ஜாதகப்படி புதனாகவே இருக்கிறது. ஆகவே மிகநுட்பமாக எனது லக்ன, ராசி நட்சத்திரங்களை பிளந்து கொண்டு சென்றாலும் அதனுடைய ஆழமான புதனின் பகுதியில்தான் நான் பிறந்திருக்கிறேன். எனவே எனக்கு ஜோதிடம் பிறவியிலேயே வந்ததும், நான் ஒரு ஜோதிடச் சூழலில் வளர்ந்ததும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. என்னுடைய 16, 17, 18 வயதுகளில் முதன்முதலாக சுக்கிர தசையில், புதன் புக்தி நடந்தது. அந்த வயதிலேயே நான் பலன் சொல்ல ஆரம்பித்திருந்தேன். அந்த மூன்று வருடங்களும் நான் ஜோதிடத்தில் முழுமையாக மூழ்கியிருந்த காலகட்டங்கள். முகநூலிலும், “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளிலும். எனது வீடியோக்களிலும் நான் குறிப்பிட்ட, எனது அனேக ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் என்னை சிலாகித்துச் சொல்லும், நான் “முதன்முதலாக ஜோதிடனாக உணர்ந்த” “தேள்கடி நிகழ்வு” எனது 21 வது வயதில் என் சூரியதசை, ராகு புக்தி, கேது அந்தரம், செவ்வாயின் சித்திரத்தில் நடந்தது. அன்றைய தின கோட்சார நிலையையும் கணக்கிட்டே என்னை இன்னும் இரு தினங்களில் தேளோ, பாம்போ தீண்டும் என்பதை உணர்ந்திருந்தேன். அதைச் சொல்லவும் செய்தேன். அன்றைய தினம் நண்பர்கள் ஜோதிடத்தையும், என்னையும் அளவுக்குமீறி கிண்டல் செய்திருந்த நிலையில், என்னையுமறியாமல் எனக்கு நானே கொடுத்துக் கொண்ட ஒரு சாபம் போல என்னிடம் இருந்து வந்த வார்த்தைகள் இவை. அன்றைய கோட்சார நிலையில், ராகு, செவ்வாயுடன் இணைந்து அல்லது வேறு ஏதோவகையில் மிகுந்த பாபத்துவம் அடைந்திருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது. சூரியதசையில், ராகு புக்தி எப்போதும் நல்ல பலன்களைத் தராது. எனது நினைவின்படி அன்றைய தினம் சந்திரனும், எனது லக்னாதிபதியான புதனும் கோட்சாரத்தில் நன்றாக இல்லை. எனவே விஷ ஜந்துக்களால் எனக்கு ஆபத்து என்பதை முன்னரே கணித்து அது எப்போது நடக்கும் என்ற ஒருவிதமான குறுகுறுப்பான மனநிலையில்தான் அப்போது நானிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் இரவானதும் நாங்கள் அமரும் குட்டிச்சுவரின் மீதோ அல்லது ஏதேனும் ஒரு இருட்டான பகுதியில் நடந்து செல்லும்போதோ விஷக்கடி இருக்கும் என்பதை எதிர்பார்த்தேன். ஆனால் அன்று இரவு தூங்கும்போது அது என் வீட்டிலேயே நடந்தது. இன்னும் சொல்லப் போனால் இதனையடுத்து நடைபெற்ற, சந்திரதசை, ராகு புக்தி கேது அந்தரத்திலும் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது. அன்றைய காலகட்டத்தில் வேறொரு நண்பர் என்னோடு ஜோதிடத்தை விவாதித்துக் கொண்டிருப்பார். இரவானதும் என்னுடன் வீடுவரை வந்து, வீட்டு வாசலிலும் வெகுநேரம் நின்று ஜோதிடத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்து விட்டு பிரிய மனமில்லாமல் அவர் வீட்டுக்குச் செல்வார். அன்றைய சந்திரதசை, ராகு புக்தி, கேது அந்தரத்தில் அந்த இடத்திலும் நாங்கள் விவாதித்த விஷயம், எங்கள் இருவரின் ஜாதகப்படியும். ஒரு விஷ ஜந்தைப் பார்க்க நேரிடும் என்பதுதான். அதன்படியே நாங்கள் இருவரும் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அப்போதுதான் வயல்வெளியாக இருந்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு நகர்ப்புறப் பகுதியான அந்த இடத்தில் எங்களுக்கு முன்னால், நட்டுவாக்கிளி எனப்படும் ஒரு மிகப்பெரிய விஷ ஜந்து மிக அருகில் ஊர்ந்து கடந்ததை நின்று வேடிக்கை பார்த்தோம். சில நிலைகளில் ஒவ்வொரு தசாவின் குறிப்பிட்ட புக்திகளிலும், ஒரு கிரகத்தின் குறிப்பிட்ட காரகத்துவம் நடப்பதை ஜோதிடத்தை அறிந்தவர்கள் உணரமுடியும். இது எனக்கான அனுபவம் மட்டுமல்ல. ஞானமுள்ள ஜோதிடர்களுக்கு, தங்களுக்கு நடக்கப் போவது ஓரளவுக்கு முன்கூட்டியே தெரியும் என்பது உண்மைதான். தனது பகுதியில் பிரபலமான தொழில்முறை ஜோதிடரான எனது சித்தப்பா, மருத்துவமனையில் இல்லாத நிலையில், அடுத்த வியாழன் தாண்டினால் எனது கண்டம் தாண்டி விடும் என்று சொல்லி செவ்வாய் அன்று மரணமடைந்தார். தன்னுடைய மரணத்தை முன்கூட்டியே கணித்த ஜோதிடர்கள் இங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள். எனது சந்திர தசையில், புதன் புக்தி நடக்கும் பொழுது எனக்கு சில மறக்க முடியாத ஜோதிட அனுபவங்கள் ஏற்பட்டன. அந்தநேரத்தில் என்னுடைய ஜோதிட ஆர்வம் மற்றும் கற்கும் திறன் மிக உச்ச நிலையில் இருந்தது. எந்த நேரமும் என்னுடைய சிந்தனை ஜோதிடத்தைப் பற்றி மட்டுமே இருந்து கொண்டிருந்த காலகட்டம் அது. தசாபுக்தி வருடங்களை பராசர மகரிஷி எவ்வாறு அமைத்திருக்கக் கூடும் என்பதைப் பற்றிய முழு ஆய்வில் நான் எந்த நேரமும் ஜோதிடக் கணக்குகளை போட்டுக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தேன். “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளிலும், “உங்கள் ஜாதகம் யோகஜாதகமா” கட்டுரைகளிலும் நான் எழுதிய சுப கிரக வரிசை, சனி, செவ்வாய் பற்றிய சூட்சும நிலைகள் அனைத்தும் அந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு தெரிய அனுமதிக்கப்பட்டது. செவ்வாய் தசையில், புதன் புக்தி என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலகட்டமாக இருந்தது. அதற்கு செவ்வாய் மற்றும் புதனின் சஷ்டாஷ்டக நிலையும் ஒரு காரணம். தவிர மிதுன லக்கினத்திற்கு செவ்வாய் ஒருபோதும் நன்மைகளைச் செய்வது இல்லை. அதுவும் அவர் ஆறாமிடத்து தொடர்புகளைக் கொண்டிருக்கும் நிலையில் மிகப்பெரிய கெடுதல்களைச் செய்வார். லக்னாதிபதியின் வலுவைப் பொருத்து ஒருவர் அந்த நிலையை எப்படி எதிர் கொள்வார், செவ்வாய் தரும் சங்கடங்களை அவரால் சமாளிக்க முடியுமா அல்லது துவண்டு போவாரா என்பதைச் சொல்ல முடியும். செவ்வாய் தசையின் 7 வருடங்களும் என் வாழ்க்கையின் இருண்ட காலகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் என்னுடைய தனுசு ராசிக்கு அஷ்டமச் சனியும் நடந்து கொண்டிருந்தது. ஆறாம் அதிபதியின் தசையும், அஷ்டமச் சனியும் சந்திக்கக் கூடாது என்பதும் ஒரு ஜோதிட விதி. சந்தித்தால் மிகப்பெரிய கெடுபலன்கள் இருக்கும் என்பதோடு வாய் விட்டு கதறும் சூழல்கள் இருக்கும் என்பதையும் நான் உணர்ந்திருந்தேன். அதன்படியே குருவின் பார்வை இல்லாத செவ்வாய், மூன்றாமிடத்தில் வக்கிர நிலையில், எட்டுக்குடைய அஷ்டமாதிபதி சனியின் பார்வையில் இருப்பதால், “காரஹோ பாவ நாஸ்தி” எனப்படும் சகோதரனால் விரயம் அல்லது சகோதரனே விரயம் என்ற நிலை இருப்பதை அறிந்து, என்னுடைய இளைய சகோதரர்கள் மூவரின் ஜாதகங்களையும் அலசி ஆராய்ந்து, அதில் இரண்டாவது சகோதரனின் ஆயுள் 33 வயதிற்குள் என்பதை உணர்ந்தேன். அப்போது அவருக்கு வயது 32. அன்றைய நாள் என் மனம் பட்டபாட்டை எந்த வகையிலும் சொல்ல முடியாது. என் சகோதரர்கள் மூவரிலும் நான் மிகவும் நேசிக்கும் தம்பி அவர். ஒரு ஜோதிடனாக இருப்பதன் மிகப் பெரிய சங்கடம் அதுதான். அப்போது அஷ்டமச் சனியும் நடந்து கொண்டிருந்ததால் என் மனம் ஒரு நிலையில் இல்லை. சில தினங்கள் கழித்து எனது ஜாதக அமைப்பையும், எனது தந்தையின் ஜாதக அமைப்பின்படி அவருக்கு அப்போது புத்திர சோகம் நிகழ இருப்பதையும், எனது தம்பியின் ஜாதக அமைப்பின்படி அவனது ஆயுள் பங்கம் அடையும் என்பதனையும் தயக்கத்துடன் ஜோதிடரான எனது தந்தையிடம் தெரிவித்தேன். பதற்றமான அவர் அந்தக் கணிதங்களையும், எனது பலனையும் விவரிக்கச் சொல்லிக் கேட்டார். அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888,044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும். #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠
🔍ஜோதிட உலகம் 🌍 - ஜோதிடம்எனும் மகாஅற்புதம்- D-059 எ்முை CU UT& '9661 9267 -- ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி ஜோதிடம்எனும் மகாஅற்புதம்- D-059 எ்முை CU UT& '9661 9267 -- ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி - ShareChat
https://youtube.com/watch?v=DEOGJRzLBLc&si=7C18X22ykHrWobID #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍
youtube-preview
https://youtube.com/watch?v=cN5v9Xi_zNw&si=H3oabZK6dNY0KRFk #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠
youtube-preview
https://youtube.com/watch?v=cN5v9Xi_zNw&si=SpzpaO__nOfNCuwJ #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍
youtube-preview