
🌹🌹🌹BABU SAMPATH 🌹🌹🌹
@20858471
வீதியில் பிரார்த்தனை செய்தால், நம் விதியையும் மாற்
வேல மரத்தடியில் ஒரு வேதியன்: திருவேற்காடு உருவான கதை! 🌿🕉️
சென்னைக்கு அருகிலேயே இருந்து கொண்டு, பலரும் அறியாத ஒரு அற்புத ஆன்மீக ரகசியத்தைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது திருவேற்காடு. 'வேற்காடு' என்றால் வேல மரங்கள் நிறைந்த காடு என்று பொருள்.
சரி, இந்தத் தலத்திற்குப் பின்னால் இருக்கும் அந்த சுவாரஸ்யமான கதை என்ன?
✨ வேதங்களே வேல மரங்களாய்...
ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, நான்கு வேதங்களும் அழியாமல் இருக்க இறைவனிடம் தஞ்சம் புகுந்தன. ஈசனின் ஆணைப்படி, அந்த நான்கு வேதங்களும் இங்கே 'வெள்வேல' மரங்களாக உருமாறி நின்றன. வேதங்களே மரங்களாய் நின்றதால், இத்தல ஈசன் "வேதபுரீஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறார்.
✨ அகஸ்தியருக்குக் கிடைத்த அந்தப் பெரும் பாக்கியம்!
கயிலாயத்தில் சிவ-பார்வதி திருமணம் நடந்தபோது, உலகத்தை சமநிலைப்படுத்த அகத்திய முனிவர் தென்திசை நோக்கி வந்தார். அப்போது அவருக்குத் திருமணக் காட்சியைக் காண முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அவரது பக்திக்காக, இதோ இந்த திருவேற்காடு தலத்தில் இறைவன் தனது திருமணக் கோலத்தை அப்படியே காட்டியருளினார். இன்றும் கருவறையில் லிங்கத் திருமேனிக்கு பின்னால் அம்மையப்பனைத் திருமணக் கோலத்தில் நாம் தரிசிக்கலாம்! 😍
✨ விடந்தீண்டாப்பதி - ஒரு அபூர்வ அதிசயம்!
இந்த ஊரின் மற்றொரு பெயர் 'விடந்தீண்டாப்பதி'. அதாவது, இந்த ஊரின் எல்லைக்குள் எப்பேர்ப்பட்ட விஷப் பாம்புகளும் யாரையும் தீண்டுவதில்லை. ஒருமுறை ஆதிசேஷன் இறைவனை வழிபட்ட போது, இந்த எல்லைக்குள் இருப்பவர்களுக்குத் தான் எந்தத் துன்பமும் இழைக்க மாட்டேன் என வாக்கு கொடுத்தாராம். இன்றும் இப்பகுதியில் பாம்பு கடியால் மரணங்கள் ஏற்படுவதில்லை என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
✨ வழிபாட்டுச் சிறப்புகள்:
இங்குள்ள பாலாம்பிகை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் கைகூடும்.
இத்தலத்தின் விருட்சமான வேல மரத்தடியில் அமர்ந்து தியானிப்பது மன அமைதிக்கும், ஞானத்திற்கும் சிறந்தது.
63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த புனித பூமி இது.
நீங்களும் ஒருமுறை இந்த வேல மரத்தடி வேதியனைத் தரிசித்து, அந்தப் பழங்காலத்து அமைதியை உணர்ந்து பாருங்கள்! 🙏✨
#Thiruverkadu #Vedapureeswarar #SpiritualIndia #TamilNaduTemples #History #Atheeswarar #DivineTamilnadu #ஆன்மீகம் #திருவேற்காடு #சிவபெருமான் #வேதபுரீஸ்வரர் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
அற்புதமான வாழ்க்கை போதனை..
1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே..
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்❗
31. வாழ்வை கண்டு களி❗
32. ரசனையோடு வாழ்❗
33. வாழ்க்கை வாழ்வதற்கே❗
34. நான்கு நபர்களை புறக்கணி!
மடையன்
சுயநலக்காரன்
முட்டாள்
ஓய்வாக இருப்பவன்
35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
பொய்யன்
துரோகி
பொறாமைக்கைரன்
மமதை பிடித்தவன்
36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
அனாதை
ஏழை
முதியவர்
நோயாளி
37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
மனைவி
பிள்ளைகள்
குடும்பம்
சேவகன்
38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
பொறுமை
சாந்த குணம்
அறிவு
அன்பு
39. நான்கு நபர்களை வெறுக்காதே!
தந்தை
தாய்
சகோதரன்
சகோதரி
40. நான்கு விசயங்களை குறை!
உணவு
தூக்கம்
சோம்பல்
பேச்சு
41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
துக்கம்
கவலை
இயலாமை
கஞ்சத்தனம்
42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
மனத்தூய்மை உள்ளவன்
வாக்கை நிறைவேற்றுபவன்
கண்ணியமானவன்
உண்மையாளன்
43. நான்கு விசயங்கள் செய்!
தியானம், யோகா
நூல் வாசிப்பு
உடற்பயிற்சி
சேவை செய்தல்
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள். #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
சற்குருவின் அற்புதங்கள் - 13
ஒரு நாள் என் மகள் ஆசையாக சாப்பிட பப்ஸ் கேட்க, அருகில் உள்ள பேக்கரியில் இருந்து காளான் பப்ஸ் வாங்கி கொடுக்க, அதை சாப்பிட்ட அன்றைய இரவே என் மகளுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.
டாக்டரிடம் மகளை அழைத்து சென்று காண்பித்த போது, ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக சொன்னார்.
உடனே என் மனைவி ஆழத் தொடங்க, நான் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன்,
" அனைத்தையும் நம் சற்குரு ஐயா பார்த்துக் கொள்வார் "
உடனே நானும் என் மனைவி சற்குரு ஐயாவை மனதார வேண்டிக்கொண்டு, மகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையை தொடங்கினோம்.
நான் என் மனதில் சற்குரு ஐயாவிடம்
"என் மகள் சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்தால், அரிசி ஒரு சிப்பம் அன்னதானத்திற்காக கணக்கன்பட்டி சற்குரு ஆலயத்திற்கு வாங்கி கொடுப்பதாக " வேண்டிக் கொண்டேன்.
சரியாக மூன்று நாட்களில் என் மகள் குணமடைந்து வீடு திரும்பினாள்.
சற்குரு ஐயாவிற்கு நன்றியை சொல்லி, உடனடியாக அரிசி ஒரு சிப்பமும், சமையல் எண்ணெய் 5 லிட்டர் கேனும் வாங்கி வீட்டில் வைத்தேன்.
ஒரு மாதம் கழிந்தது.
அன்னதானத்திற்கான பொருட்களை கணக்கன்பட்டி கொண்டு சேர்ப்பதற்கு எனக்கு நேரம் அமையவில்லை.
எவ்வளவோ முயன்றும் கணக்கன்பட்டிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.
அது சரி நம் சற்குரு ஐயா மனது வைத்தால் தானே நாம் செல்ல முடியும் அங்கே...
ஒரு நாள் ஐயா மனது வைத்தார்.
ஒருநாள் இரவு ஒரு மணிக்கு சவாரி எல்லாம் முடித்துக் கொண்டு வீட்டிற்கு போகலாம் என்று காரை வீட்டுக்கு திருப்பினேன்.
ஒருவர் போன் செய்து பஸ் ஸ்டாண்டில் இருந்து அவர் வீட்டிற்கு டிராப் செய்ய சொன்னார்.
சரி கடைசி சவாரி என்று எண்ணிக்கொண்டு, வீட்டில் அவரை இறக்கி விடும்போது அவர்,
" பொள்ளாச்சி வரை என் மனைவியை கொண்டு போய் விட்டுவிட்டு வர முடியுமா " ? என்று கேட்டார்.
அவர் மனைவியின் பாட்டி பொள்ளாச்சியில் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், உடனடியாக பொள்ளாச்சிக்கு அவர் மனைவி செல்ல வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.
நானும் உடனே சரி என்று ஒப்புக்கொண்டு,
" ஐயா ! காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வருகிறேன் "
என்று சொல்லி,
மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பி,
என் வீட்டிற்கு வந்து அரிசி சிப்பத்தையும், சமையல் எண்ணையையும், டிக்கியில் வைத்துக் கொண்டு வேகமாக வண்டிக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றேன்.
பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 65 கிலோமீட்டர் தூரம் தான். காரில் சென்றால் ஒரு மணி நேரம் தான்.
நம் சற்குரு ஐயா அவரை தரிசிப்பதற்கான சிக்னல் கொடுத்து விட்டார் என்பதை புரிந்து கொண்டேன்.
இரவோடு இரவாக அவர் மனைவியை பொள்ளாச்சியில் இறக்கி விட்டு விட்டு வண்டியை நேரே பழனிக்கு திருப்பினேன்.
இரவு முழுவதும் உறங்காததால், இடையே வந்த சிறிய உறக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, நம் சற்குரு ஐயாவை காணும் ஆவலோடு வேகமாக சென்றேன்.
கணக்கன்பட்டிக்கு சென்று முதலில் குளித்துவிட்டு, உடைமாற்றி, அன்னதானத்திற்கான பொருட்களை சற்குரு ஐயாவின் சன்னதியில் சேர்ப்பித்து விட்டு, மதியம் நடைபெறும் பூஜையை கண் குளிர கண்டு, என் மகளைக் காப்பாற்றிய சற்குரு ஐயாவை வணங்கி, கண்கள் நிறைந்த நீரோடு, நா தழுதழுக்க நன்றியை சொன்னேன் நம் சற்குருவிடம்...
சற்குருவின் அற்புதங்கள் தொடரும்...
பின்குறிப்பு :
அதன் பிறகு இன்று வரை பொள்ளாச்சிக்கு சவாரியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#பழனி
#கணக்கன்பட்டி
#மூட்டைசாமி
#சத்குரு
#சற்குரு
#அழுக்குமூட்டைசுவாமிகள்
#சற்குருஐயா
#சித்தர்கள்
#ஆன்மீகம்
#சித்தர்அதிசயம்
#சித்தர்கள்
#ஜீவசமாதி
#சித்தர்பீடம்
#பழனிசாமிசுவாமிகள்
#பழனிசித்தர்
#அழுக்குமூட்டைசித்தர்
#சாமி
#பழனிசாமி
#காளிமுத்து
#அன்னதானம்
#மூட்டைசித்தர்
#மூட்டைசாமி
#அழுக்குமூட்டைசாமி
#சித்தர்அற்புதம்
#சித்தர்தரிசனம்
#சித்தர்ரகசியம்
#சித்தர்வழிபாடு
#குருவழிபாடு
#சற்குருவழிபாடு
#குருவேசரணம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!
வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான்.
அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம்.
இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும்.
பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம்.
தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.
மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும்.
எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும்.
கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம்,
நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்று புராணங்கள் சொல்கின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு நல்ல விடிவு என்றே சொல்லலாம். #😔தனிமை வாழ்க்கை 😓 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
#ஓம் நமசிவாய போற்றி தமிழ் சிவன் கடவுள் stastus #🙏நமசிவாய ஓம்✨ #🙏🔱ஓம் சிவ சிவாய போற்றி🔱🙏🏼 #🙏சிவன் என்றும் சிவன்💫✨ ##கோயில்#கடவுள்#சிவன்#ஓம் முருகா#கணபதி போற்றி#அம்மன் துணை#ஆன்மீகம்#Bhakthi#Devotion#God
அனைவரும் வாராஹி அம்மன் வழிபாடு செய்யுங்கள் அன்னை லலிதாம்பிகை உத்தரவு உலக நன்மைக்காக வணங்க வேண்டும் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😔தனிமை வாழ்க்கை 😓
நடராஜர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.
ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் (CERN) நடராஜர்
சுவிட்சர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்பியல் ஆய்வுக்கூடமான CERN (European Organization for Nuclear Research) வளாகத்தில் ஒரு நடராஜர் சிலை உள்ளது.
அணுத் துகள்களின் இயக்கம் (Cosmic Dance of subatomic particles) நடராஜரின் நடனத்தோடு ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கருதுவதால், நவீன அறிவியலின் அங்கீகாரமாக இந்தச் சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது.
காலடியில் இருப்பது யார்?
நடராஜர் சிலையில் அவர் ஒரு சிறிய உருவத்தின் மீது நடனமாடுவது போல இருக்கும். அந்த உருவத்தின் பெயர் முயலகன் (Apasmara).
அவர் அரக்கன் அல்ல; அவர் அறியாமையின் (Ignorance) வடிவம்.
அறியாமையை முற்றிலுமாக அழித்துவிட முடியாது (அழித்தால் சமநிலை கெடும்), எனவே அதை அடக்கி ஆள வேண்டும் என்பதைக் குறிக்கவே நடராஜர் அதைத் தனது காலால் மிதித்துக் கொண்டிருக்கிறார்.
பஞ்ச சபைகளில் மற்ற நடராஜர் திருவுருவங்கள்
சிதம்பரம் தவிர மற்ற நான்கு சபைகளிலும் நடராஜர் வெவ்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறார்:
திருவாலங்காடு (இரத்தின சபை): இங்கு நடராஜரின் நடனம் 'காளி'யுடன் போட்டியிட்டு ஆடிய 'ஊர்த்துவ தாண்டவம்' (காலை மேலே தூக்கி ஆடும் நிலை) எனப்படுகிறது.
மதுரை (வெள்ளி சபை): பொதுவாக நடராஜர் இடது காலைத் தூக்கி ஆடுவார். ஆனால், பாண்டிய மன்னனின் வேண்டுதலுக்காகத் தனது வலது காலைத் தூக்கி ஆடி 'கால் மாறி ஆடிய படலம்' நிகழ்ந்த இடம் இது.
திருநெல்வேலி (தாமிர சபை): இங்குள்ள நடராஜர் தாமிரத்தால் ஆனவர், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டவர்.
குற்றாலம் (சித்திர சபை): இங்கு நடராஜர் சிலையாக இல்லாமல், ஓவியமாக (சித்திரமாக) வழிபடப்படுகிறார்.
அறிவியல் ரீதியான அமைப்பு
நடராஜர் சிலையைச் சுற்றியுள்ள அந்த நெருப்பு வளையம் (திருவாசி) பிரபஞ்சத்தின் எல்லையற்ற ஆற்றலைக் குறிக்கிறது. அவர் கையில் ஏந்தியுள்ள 'உடுக்கை' பிரபஞ்சத்தின் முதல் ஒலியான 'ஓம்' என்பதைப் பிரதிபலிக்கிறது. இது இன்றைய Big Bang தத்துவத்தோடு ஒப்பிடப்படுகிறது.
#natarajar #sculpture #nadarajar #😔தனிமை வாழ்க்கை 😓 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🙏 ஓம் சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவல்லே துணை 🙏1/4/26 புதன்கிழமை அன்று பௌர்ணமி சிறப்பு பூஜைகள்,சந்தன காப்பு தரிசனம்🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😔தனிமை வாழ்க்கை 😓
பொன்னானவர் மணியானவர்.
முத்தானவர் சொன்ன சொல்லானவர். பேச்சானவர் மூச்சானவர்
ஒன்றானவர் ஒவ்வொன்றானவர்.
ஒவ்வொரு பொருளானவர்
எனினும் தான் மட்டுமே தனக்கு நிகரானவர்.
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!! #😔தனிமை வாழ்க்கை 😓 #👌இந்த நாள் நல்ல நாள்🤝












