#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌸Happy Thursday
சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 36 வயதான எம்.ஆர்.பல்லவி வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டார். 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், நடிகர் விஜய் த.வெ.க. கட்சியைத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு கட்சித் தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. தேர்தல் பிரசாரத்தின்போது 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் முடிவுகளில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை விட 22,333 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பல்லவி அபார வெற்றி பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ.) பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, பல்லவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவரது குடும்பத்தினரும், த.வெ.க. தொண்டர்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், தனக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்து, மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த தனது தாய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக, தனது மகனுக்கு 'TVK' (டி.வி.கே.) என்று பெயரிட உள்ளதாக பல்லவி எம்.எல்.ஏ. நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். #கப் முக்கியம் பிகிலு 🏆 👑தளபதி🦁தமிழக வெற்றி கழகம் 💙🤍2026🎉🎉 #தமிழக வெற்றி கழகம் (TVK) #வருங்காலம் அரசியல் மாற்றம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டது. நேரடித் தாக்குதல்கள் குறைந்திருந்தாலும் முழுமையாக நிற்கவில்லை. அவ்வப்போது இரு தரப்புமே மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வந்தன. இதற்கிடையே இப்போது நிலைமை கையை மீறிச் செல்கிறது.
ட்ரோன் தாக்குதல்கள்
வளைகுடாவில் மெல்லத் திரும்பிய அமைதியைத் தவிடுபொடியாக்கும் வகையில் ஈரான் இன்று குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் மீது திடீரென ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத் சர்வதேச விமான நிலையம் பிரதானப் பகுதி மற்றும் டிப்ளமேட்டிக் பகுதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் விமான நிலைய வளாகம் கடுமையாகச் சேதமடைந்தது.
இந்தியர் பலி
இந்தக் கொடூரத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதற்கிடையே உயிரிழந்த நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இதை குவைத்தில் இருக்கும் இந்தியத் தூதரகமும் உறுதி செய்துள்ளது. அவர் விமான நிலையத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்தவர் என்றும் டிரோன் தாக்குதலில் அவர் உயிரிழந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மோசமான தாக்குதலில் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் உட்பட 63 பேர் படுகாயமடைந்துள்ளனர் என குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து குவைத் ஏர்போர்ட் தற்காலிகமாக மூடப்பட்டது. சில மணி நேரத்திற்குப் பிறகு நிலைமை சீரான பிறகே டெர்மினல் 4ல் இருந்து குவைத் ஏர்வேஸ் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
அமெரிக்க படைகள்
இதற்கிடையில், பஹ்ரைன் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது படைத்தளத்தை (US Fifth Fleet) குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஆனால், பஹ்ரைன் ராணுவம் ஈரானின் 3 ஏவுகணைகளையும் பல ட்ரோன்களையும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தித் தடுத்து நிறுத்தியுள்ளது. குவைத்தை நோக்கி வந்த ஈரானின் இரண்டு ஏவுகணைகள் நடுவானிலேயே உடைந்ததாகவும் சில இலக்குகளைத் தவறவிட்டும் விழுந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
மீண்டும் திடீரென வெடித்துள்ள இந்தப் போர் காரணமாகக் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக 2 சதவீதத்திற்கும் மேல் எகிறியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் மிக முக்கியமான 'ஹார்முஸ் ஜலசந்தி' பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும், இந்தியாவையும் நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பு
வளைகுடாவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பிற்கும், உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கும் இந்த வான்வழித் தாக்குதல்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. போர் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ.. அவ்வளவு சீக்கிரம் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.. பொருளாதாரப் பாதிப்புகளும் குறையும் என்பதால் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📢 ஜூன் 3 முக்கியதகவல்கள் 👍
மத்திய பிரதேசச் சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்....
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகத் தனது காதலனுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது கணவரிடம் வந்து அதே வீட்டில் காதலனையும் தன்னுடன் சேர்த்து வைத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார். இதற்கு கணவர் முற்றிலும் மறுப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கணவனின் இந்த மறுப்பால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவரது தலையை அடித்து உடைத்துவிட்டு, காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு அனுமதி வழங்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தை நாடியுள்ளார். 4 பிள்ளைகளின் தாயான அந்தப் பெண், கணவனைத் தாக்கியதோடு மட்டுமில்லாமல் காதலனை வீட்டுக்குள் கொண்டு வர போலீஸ் நிலையத்திற்கே சென்ற விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #கள்ளகாதல் விவகாரம் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அந்தோணி போதே சேர்ந்தவர் கங்கம்மா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்ன மல்லையா என்பவருக்கும் கடந்த சில வருடங்கள் முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் மட்டும் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இன்னும் இல்லையா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார....
எனவே கங்கம்மா அவரது மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த நரசிம்மலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
இந்நிலையில் அவ்வப்போது நரசிம்மலு கங்கம்மா வீட்டிற்கு வந்து தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் இதனை அறிந்த கங்கம்மாவின் மூத்த மகனான 15 வயதுடைய வீரேந்திரா அவரது தாயின் செயலை கண்டித்திருக்கிறார். இதனால் அச்சமடைந்த கங்கம்மா அவரது காதலன் நரசிம்மலுவுடன் சேர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 10 தேதி இரவோடு இரவாக வீரேந்திராவை கொலை செய்து யாருக்கும்தெரியாமல் உடலை சுடுகாட்டில் புதைத்திருக்கிறார். பின்னர் மறுநாள் மாலை காவல் நிலையத்திற்கு சென்று காலை முதல் மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீரேந்திராவை இரண்டு வருடங்களாக தேடி வந்த நிலையில் கங்கம்மா பணத்திற்கு ஆசைப்பட்டு நீதிமன்றத்தில் "இரண்டு வருடங்களாக போலீசார் மகனை கண்டுபிடிக்கவில்லை" என வழக்கு பதிவு செய்திருக்கிறார. இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கங்கம்மாவின் செல்போன் கால் ஹிஸ்டரி மூலம் போலீசாருக்கு கங்கம்மாவின் கள்ள காதல் குறித்து தெரியவந்தது. எனவே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்டமாககங்கம்மாவிடம் விசாரணை நடத்தியதில் அவரே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனை கொன்று நடனமாடியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வீரேந்திராவின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்த போலீசார் கங்கம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது அவருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கங்கம்மா நேரு முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கங்கம்மாவின் உடலை அடக்கம் செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான கள்ள காதலன் நரசிம்மலுவை தேடி வருகின்றனர். பெட்ரா தாயே கள்ளக்காதலை கண்டித்ததால் 15 வயது மகனை கொன்று புதைத்து இரண்டு வருடங்களாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
சம்சார சங்கீதம்', 'காலம் மாறிப்போச்சு', 'பொற்காலம்', 'வெற்றிக் கொடி கட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்த தமிழ்செல்வி, திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி முழுமையாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
அவரது கணவர் பிரேம்நாத், சினிமா துறையில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன், தற்போது தமிழ்நாடு மேடை நடனக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த தமிழ்செல்வியின் நினைவாக நடைபெற்ற படத்திறப்பு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் பேசிய அவர், மனைவியின் நினைவுகளை பகிர்ந்தபோது பலரையும் கண்கலங்க வைத்தார்.
வாழ்க்கை
தமிழ்செல்வியை பற்றி பேசிய பிரேம்நாத், "நான் சினிமாவுக்கு வந்தது என் தாய்மாமாவை நம்பித்தான். தமிழ்செல்வியும் சினிமாவில் இருந்ததால் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. ஆனாலும் குடும்பத்தினர் சம்மதத்துடன்தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியது அவருடைய விருப்பம். அதற்கு நான் முழு ஆதரவு கொடுத்தேன்" என்று கூறினார்.
அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற்று வருகிறார்.
புற்றுநோயை வென்றும் உயிரை பறித்த விதி
பிரேம்நாத் கூறிய தகவல்களின்படி, தமிழ்செல்விக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாம். ஆனால் உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டதால், அவர் முழுமையாக குணமடைந்ததாக மருத்துவர்களே ஆச்சரியப்பட்டதாக கூறியிருக்கிறார்.
அதன்பிறகு மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிய தமிழ்செல்வி, குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் கவனித்ததோடு, சொந்த ஊரான சிவகங்கை வரை காரை தானே ஓட்டி சென்று வந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருந்துள்ளார்.
தூக்கத்தில் பிரிந்த உயிர்
தமிழ்செல்வியின் இறுதி தருணங்களை நினைவு கூர்ந்த பிரேம்நாத், "அன்று கொஞ்சம் சோர்வாக இருப்பதாக சொன்னார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஒரு நாள் அட்மிட் ஆகி பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடலாம் என்று நினைத்தோம். நார்மல் வார்டில்தான் இருந்தோம். பேசிக்கொண்டே இருந்தவர், கொஞ்ச நேரம் படுத்துக்கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால் அதன் பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டது. மருத்துவர்கள் மைல்டு ஹார்ட் அட்டாக் என்று சொன்னார்கள்" என்று கண்ணீர் மல்க கூறினார். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #👉வாழ்க்கை பாடங்கள் #💪 தன்னம்பிக்கை #💪ஊக்குவிக்கும் கதைகள் #📝என் இதய உணர்வுகள்




![🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - 'CJood sAitennoon] பிற்பகல் வணக்கம் வெற்றி என்பது சோர்வில்லாத உழைப்பில் ள்ளது மதிய நேரச் @ சோர்வை விரடடுங்கள் இலக்கை அடையுங்கள் ! 'CJood sAitennoon] பிற்பகல் வணக்கம் வெற்றி என்பது சோர்வில்லாத உழைப்பில் ள்ளது மதிய நேரச் @ சோர்வை விரடடுங்கள் இலக்கை அடையுங்கள் ! - ShareChat 🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - 'CJood sAitennoon] பிற்பகல் வணக்கம் வெற்றி என்பது சோர்வில்லாத உழைப்பில் ள்ளது மதிய நேரச் @ சோர்வை விரடடுங்கள் இலக்கை அடையுங்கள் ! 'CJood sAitennoon] பிற்பகல் வணக்கம் வெற்றி என்பது சோர்வில்லாத உழைப்பில் ள்ளது மதிய நேரச் @ சோர்வை விரடடுங்கள் இலக்கை அடையுங்கள் ! - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_574610_95c01ed_1780558572226_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=226_sc.jpg)








