பெரம்பலூர் மாவட்டம் புதிய சேர்ந்தவர்கள் ஆரம்பத்தில், தனது மனைவியை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து தாக்கியதாக நாடகமாடிய ராஜ்குமார், விசாரணையின் முடிவில் தனது அண்ணி ஆனந்தியுடன் இருந்த கள்ளத்தொடர்புக்காக இந்தத் திட்டத்தைத் தீட்டியதை ஒப்புக்கொண்டார்.
மனைவியைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்ட ராஜ்குமார், ஆனந்தியின் உறவினரான தீபக் என்பவருக்குப் பணம் கொடுத்து, பிரவீணாவைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ராஜ்குமார், அவரது அண்ணி ஆனந்தி உள்ளிட்ட மொத்தம் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து #🔴இன்றைய முக்கிய செய்திகள் சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை பக்கம் நக்கம்பாடி பிரியாவின் கணவர் செல்வம் கடந்த பத்து ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், பிரியாவிற்கும் ராஜாவிற்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தனது கணவர் வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைக்கும் பணத்தை பிரியா ராஜாவிடம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (20.02.2026) இரவு ராஜாவின் வீட்டிற்குச் சென்ற பிரியாவிற்கும், ராஜாவுக்கும் இடையே பண விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அன்றிரவு அங்கேயே தங்கிய பிரியா, நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலையில் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், ராஜா தான் பிரியாவை அடித்துக் கொன்றுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட முயன்றனர். பிரியாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக ராஜாவைக் கைது செய்த போலீசார், இச்சம்பவத்தைச் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #🔴இன்றைய முக்கிய செய்திகள்
அந்தப் பொறாமைப் பார்வையைத் தான் நாம் கண் திருஷ்டி என்று கூறுகிறோம். திடீரென ஏற்படும் தலைவலி, உடல் சோர்வு, வீணான சண்டை சச்சரவுகள் எல்லாவற்றுக்கும் காரணம் இந்தத் திருஷ்டி தான் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
அறிவியல் இதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், உளவியல் ரீதியாக மற்றவர்களின் நெகட்டிவ் எனர்ஜி நம்மைப் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த எதிர்மறை ஆற்றலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள, பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் 6 முக்கியமான பொருட்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
1. கல் உப்பு!
பழங்காலம் முதலே கல் உப்புக்கு கெட்ட சக்திகளை ஈர்க்கும் தன்மை இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. உங்கள் வீட்டில் யாருக்காவது திருஷ்டி பட்டுவிட்டது என்று தோன்றினால், உடனே ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களை கிழக்கு முகமாக அமரவைத்து, தலையைச் சுற்றி வலது மற்றும் இடதுபுறமாக மூன்று முறை சுற்றி தண்ணீரில் கரைத்துவிடுவது நம் ஊர் வழக்கம். இது கண் திருஷ்டியை மட்டுமல்லாமல், உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலையும் முழுமையாக நீக்கிவிடும்.
2. எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய்!
புதிதாக வண்டி வாங்கினாலோ அல்லது புதுக்கடை திறந்தாலோ, முதலில் நாம் தேடுவது இந்த எலுமிச்சை மற்றும் மிளகாயைத்தான். ஒரு கருப்புக் கயிற்றில் இவற்றைச் சேர்த்து வாசல் படியில் தொங்கவிடுவதால், வீட்டுக்குள் நுழையும் கெட்ட எண்ணங்கள் வாசலோடு திரும்பிவிடும் என்பது ஐதீகம். மேலும், இவற்றிலிருந்து வெளிவரும் வாசம் காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மையும் கொண்டது.
3. கருப்புக் கயிறு!
இது ரொம்பவே சிம்பிளான, ஆனால் மிகவும் பவர்ஃபுல்லான ஒரு ட்ரிக். பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை பலரும் கைகளிலோ அல்லது கால்களிலோ கருப்புக் கயிறு கட்டுவதைப் பார்த்திருப்போம். கருப்பு நிறம் என்பது மற்றவர்களின் தீய பார்வையைத் தன்னுள் ஈர்த்து, நம்மை நோக்கி வரும் கெட்ட அதிர்வலையைத் தடுத்து நிறுத்தும் ஒரு கவசமாகச் செயல்படுகிறது.
4. நீல நிறக் கண் கல்!
இப்போதெல்லாம் பலரது கழுத்திலும், வீட்டு வாசலிலும், கார் கண்ணாடியிலும் நீல நிறத்தில் ஒரு கண் வரைந்த படிகக் கல்லைப் பார்க்க முடிகிறது. துருக்கி போன்ற நாடுகளில் உருவான இது, தற்போது நம்மூரிலும் ரொம்பவே ட்ரெண்ட் ஆகிவிட்டது. பிறரின் பொறாமைப் பார்வையை அந்த நீலக் கண் தன்னுள் இழுத்துக் கொண்டு, அதை அப்படியே திருப்பி அனுப்பிவிடும் என்பது நம்பிக்கை.
5. படிகாரம்!
படிகாரக் கல்லை ஒரு கருப்புத் துணியில் கட்டி வீட்டின் முன் தொங்கவிடுவது ஒரு சிறப்பான பாரம்பரிய வழக்கம். வீட்டிற்கு வரும் நபர்களின் பொறாமைப் பார்வை இந்தக் கல்லின் மீது படும்போது, அது அந்த எண்ணங்களை ஈர்த்துக்கொள்ளும். திருஷ்டி அதிகமாக இருந்தால், ஒரு கட்டத்தில் படிகாரம் தானாகவே வெடித்துச் சிதறிவிடும் என்று பாட்டிகள் சொல்லக் கேட்டிருப்போம்.
இளமை மாறாத சருமத்திற்கு 'கற்றாழை பவுடர்' - ஒரு இயற்கை அதிசயம்!
6. கற்றாழை!
வாசல் படியில் முள் நிறைந்த கற்றாழையை வேரோடு கட்டித் தொங்கவிடுவது பலரது வீடுகளில் இன்றும் நடக்கும் ஒரு விஷயம். இது பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், வீட்டைச் சுற்றி ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறது. கற்றாழை பல மாதங்கள் தண்ணீர் இல்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர்வாழும் தன்மை கொண்டது. அதே போல வீட்டின் மீது விழும் கண் திருஷ்டியையும் இது முழுமையாக உறிஞ்சிவிடும்.
நம் முன்னோர்கள் காரணமில்லாமல் எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, நமது வீட்டின் நிம்மதிக்காக இந்தச் சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறையாக வாழ்வோம் #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம் #கண் திருஷ்டி பரிகாரம் #கண் திருஷ்டி எப்படி தெரிந்துகொள்ள
இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு தாய் தன்னுடைய 18 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜோதிடம் கேட்க சென்றிருக்கிறார். அவர் தன்னுடைய குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றும் அதற்கு பரிகாரம் செய்யும்படியும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ராமகிருஷ்ணன் அந்த தாயிடம் இரண்டு குழந்தைகளையும் மானகிரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு பரிகார பூஜை செய்வதற்காக அழைத்து வரும்படி கூறியுள்ளார். இதை நம்பிய அந்த தாயார் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் ஜோதிடர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது தாயைஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறிவிட்டு அந்த இரண்டு குழந்தைகளையும் பூஜை செய்வதாக தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் இந்த தகவலை யாருக்கும் சொல்லக்கூடாது என்றும் அவ்வாறு சொன்னால் அவர்களின் தாய் மற்றும் தந்தை இறந்து விடுவார்கள் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இதை கேட்டு பயந்து போன இரண்டு குழந்தைகளும் யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டனர். பின்னர் சுமார் இரண்டு வருடங்கள் கழித்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது அப்போது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்களுக்கு பால்வினை நோய் இருப்பது தெரிய வந்தது.
எனவே அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் இது குறித்து விசாரித்த பொழுது ஜோதிடர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து அவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மாநகர காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஜோதிடர் ராமகிருஷ்ணனை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு. ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் கொடுத்த வழக்கில் நூறாண்டுகள் வீதம் இரண்டு பேருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனைவிதித்தார். அத்துடன் அபராதமாக தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 2 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிக்கும் தலா 10 லட்சம் வீதம் ரூ ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் தற்போது தான் முதல் முறையாக அதிகபட்ச தண்டனையாக ஒரு குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மீது இதேபோல் மற்றொரு வழக்கு உள்ளது அந்த வழக்கில் இன்று ( 24ம்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். 200 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ஜோதிடர் ராமகிருஷ்ணன் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #🔴இன்றைய முக்கிய செய்திகள்
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுப்பிரியா, பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை ரவி (55), கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது சாதாரண மரணம் என்று கருதப்பட்டாலும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு காதல் விவகாரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை விஷ்ணுப்பிரியாவின் தங்கை, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு தந்தை ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது மகளின் காதலைத் தடுக்க முயன்றதே அவரது உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தந்தையின் எதிர்ப்பால் ஆத்திரமடைந்த காதலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி, ரவி தனியாக இருந்த நேரத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள செம்பியம் காவல்துறையினர், தலைமறைவாக இருந்த காதலன் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்துள்ளனர். ஒரு சாதாரண குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நடிகையின் குடும்பத்திலேயே இப்படி ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்திருப்பது திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. #🔴இன்றைய முக்கிய செய்திகள்
மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை கவனித்துக் கொள்ளும் மகள்❤️❤️❤️❤️ #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #👨அன்புள்ள அப்பா #🤗குடும்ப பாசம் #👪என் பெற்றோர் #🎥Trending வீடியோஸ்📺
#காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #📝என் இதய உணர்வுகள்
இப்படி ஒரு சில பெண்கள்னால தான் மொத்த பெண்களோட மனமே காதுல போகுது... Trending viral News Today news # hot new speed news #❤️❤️❤️❤️😘😘😘💯💫💯🇮🇳🫂🫂💞💞💞❣️💞❣️ #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📝என் இதய உணர்வுகள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சேர்ந்தவர் இப்பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் பூபதி என்பவரின் இளைய மகள் கௌசிகா (17). இவரும் நெகமம் கம்பளாங்கரையைச் சேர்ந்த அபிஷேக் (24) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அபிஷேக் தனது பெற்றோருடன் சென்று பெண் கேட்டபோது, கௌசிகாவிற்கு திருமண வயது பூர்த்தியாகவில்லை என்பதால் தற்போது திருமணம் செய்து தர முடியாது என்று சிறுமியின் பெற்றோர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையிலும், அபிஷேக் தொடர்ந்து கௌசிகாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு கௌசிகாவின் வீட்டிற்குச் சென்ற அபிஷேக், மீண்டும் திருமணப் பேச்சை எடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கௌசிகாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த கௌசிகாவின் பாட்டி திருமாத்தாள் (65) மற்றும் அக்கா ஹரிதா (18) ஆகியோரையும் அபிஷேக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த கோரத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், கௌசிகா மற்றும் அவரது பாட்டி திருமாத்தாள் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கையில் பலத்த காயமடைந்த ஹரிதாவிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்ட இந்த சம்பவம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெகமம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளி அபிஷேக்கை உடனடியாகப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருதலைப்பட்சமான வற்புறுத்தலால் விளைந்த இந்த விபரீத முடிவு ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது #🔴இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இன்று தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14890 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 1,19,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேநேரம் வெள்ளியின் விலை சரிவை சந்தித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 290 ரூபாயக்கும், ஒருகிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 90ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ## புதிய உச்சத்தை அடைந்தது தங்கம் விலை 😱











