இப்படி இளநீர் குடிப்பது வாடிக்கையாக இருந்தாலும் அதை வித்தியாசமாக இப்படி பாயாசம் புட்டிங் செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை நாவை விட்டு நீங்காது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முழு இளநீர் - 1
தேங்காய் வழுக்கை -
துருவிய தேங்காய் - 1 கப்
கண்டன்ஸ் மில்க் - இனிப்பு சுவைக்கு ஏற்ப
கடற்பாசி - 5 கிராம்
தண்ணீர் - 100 மில்லி
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் துருவிய தேங்காயை மிக்ஸியில் அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடற்பாசியை தண்ணீரில் கழுவி பின் பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் சேர்த்து அதில் கடற்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். அது நன்கு கரைந்து கெட்டியான பதம் வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இப்போது இளநீரை ஒரு தட்டில் ஊற்றி அதில் சூடாக அப்படியே உருக்கிய கடற்பாசியை சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள்.
அந்த கலவையை அப்படியே ஆற விடுங்கள். ஃபிரிட்ஜில் கூட வைத்து எடுக்கலாம். அதை எடுத்ததும் ஜெல்லி ஸ்லைஸ் போல வர கத்தியால் மேலே கட்டம் கட்டமாக கோடு போட்டு அதை எடுக்கவும்.
இப்போது வழுக்கை தேங்காயுடன் கண்டன்ஸ் மில்க் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து அதை தேங்காய் பாலுடன் சேர்க்கவும். அதோடு இந்த ஜெல்லிகளையும் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
அவ்வளவுதான் இளநீர் புட்டிங் பாயாசம் தயார். கோடைக்கு இதமான பானமாக இருக்கும். #🍹 கோடைக்கால குளிர் பானங்கள் 🧊 #🏖️ சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்
பெங்களூர் வருதூர் லீவ் இன் உறவில் ரஞ்சிதா என்ற இளம் பெண் அவனு காதலால் காதலால் கழுத்து நெரித்துக் கொலை கொலை கடந்த மார்ச் 12 அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அய்யப்பா இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். கொலையை மறைக்க ரஞ்சிதா தற்கொலை செய்ததாக நாடகமாடிய அய்யப்பாவின் பொய் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், இது திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அய்யப்பா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #📢மார்ச் 17 முக்கிய தகவல்🫠
ஈரான் ஒரு மிகப்பெரிய வல்லரசு என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில், அவர்கள் வளைகுடா நாடுகள் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் இந்த அதிரடியான பதிலடி தாக்குதல் தங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பணியாமல், ஈரான் சரணடைவதற்கு பதிலாக திருப்பி தாக்கியிருப்பது அவர்களின் மிகப்பெரிய வலிமையை காட்டுகிறது என்று டிரம்ப் பாராட்டும் தொனியில் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஈரானின் இந்த தாக்குதல் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அமெரிக்கா அடுத்தகட்டமாக எத்தகைய ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரானின் வியூகங்களை முன்கூட்டியே கணிக்க தவறியதை ஒப்புக்கொள்ளும் வகையில் டிரம்பின் இந்த கருத்து அமைந்துள்ளது. #📢மார்ச் 17 முக்கிய தகவல்🫠 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #உலக செய்திகள் 👈👈
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இந்த தம்பதிக்கு 22 வயதில் கனகராஜ் மற்றும் பாலபாரதி என்ற இரண்டு மகன்கள். பாலச்சந்திரன் தொழில் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு, சென்னை பூந்தமல்லி அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு மிக்சர் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் கனகராஜ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளார். போதையில் அடிக்கடி சண்டை போட்டு ஊர் வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
இதனால், அவரை சொந்த ஊரான படர்ந்தபுளி கிராமத்திற்கே குடும்பத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, தந்தை வழி பாட்டியான மாடத்தி அம்மாளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி தனது பைக்கை பழுது நீக்க பணம் கேட்டு பாட்டியிடம் தங்க கம்மல் மற்றும் மோதிரத்தை கனகராஜ் பறித்துள்ளார். இது குறித்து மாடத்தி அம்மாள் தனது மகன் பாலச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 70 ஆயிரம் ரூபாய் கேட்ட மகனுக்கு ஜி-பே மூலம் இரண்டாயிரத்து 500 ரூபாயை பாலச்சந்திரன் அனுப்பியுள்ளார். மீதி பணத்தை பின்னர் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். அதைத் தொடர்ந்து கனகராஜ் தனது பாட்டியிடம் பறித்த தங்க மோதிரம் மற்றும் கம்மலை திருப்பிக் கொடுத்துள்ளார். மறுநாளே தான் கேட்ட பணத்தை அனுப்பி விடுங்கள் என்றும், இல்லாவிட்டால் பாட்டியை கொலை செய்துவிடுவேன் என்றும் பெற்றோருக்கு போன் போட்டு மிரட்டியுள்ளான்.
மேலும், போதைப் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜ், ஊருக்குள் பலரிடம் வம்பிழுத்து தகராறு செய்வதாக மூதாட்டி மாடத்தி அம்மாள் தனது மகனிடம் புலம்பியுள்ளார். அவனை தன்னால் பார்த்துக்கொள்ள முடியாது, உடனே சென்னைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், அன்று இரவே தனது மனைவியுடன் சொந்த ஊரான படர்ந்தபுளி கிராமத்திற்கு வந்துள்ளார். சென்னையில் இருந்து வந்த பெற்றோரிடம், ஞாயிற்றுக்கிழமை இரவில் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார் கனகராஜ்.
இது தொடர்பாக சண்டையிட்டு வெளியே சென்றவர் நள்ளிரவில் 12.15 மணிக்கு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது பைக்கை சரி செய்ய பணம் கொடுக்காமல் தூங்கிக்கொண்டு இருக்கீங்களா என்று கூறியபடி தந்தையிடம் மல்லுக்கட்டியுள்ளார். அப்பாவை ஏன் கீழே தள்ளி விட்டாய்? என்று கேள்வி கேட்ட தாயாரையும் தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், கம்பை எடுத்து கனகராஜ் தலையில் அடித்துள்ளார். உன் தொந்தரவு தாங்க முடியல… நீ ஒழிஞ்சால் தான் எங்களுக்கு நிம்மதி என்று சொல்லிக் கொண்டே கனகராஜ் தலையில் தொடர்ந்து தாக்கியுள்ளார். இருந்த போதிலும் கனகராஜ் மீண்டும் தந்தையை தாக்கப் பாய்ந்துள்ளார்.
: திருவிதாங்கூர் அரண்மனையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை திருட்டு... ஊழியர்களிடம் தீவிர விசாரணை...
அதில் கண்கள் சிவந்த பாலச்சந்திரன், கடும் ஆத்திரத்தில் அருகில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மகனின் தலையில் தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, பாலச்சந்திரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனகராஜ் மீது எட்டையபுரம் மற்றும் நாலட்டின் புதூர் காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
: சென்னையின் முக்கிய பகுதியில் என்கவுன்டர்.... பிரபல ரவுடி சுட்டுக்கொலை!
கஞ்சா போதைக்கு அடிமையான மகன், பைக் பழுது நீக்க 70 ஆயிரம் ரூபாய் கேட்டு தகராறு செய்த ஆத்திரத்தில், தந்தையே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு, கொலை செய்த சம்பவம் எட்டையபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📢மார்ச் 17 முக்கிய தகவல்🫠
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றும் முரளி வேணு என்பவருக்கும், அவரது மனைவி சத்தியவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று தங்களது திருமண நாள் என்பதால் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லுமாறு சத்தியவதி கேட்டுள்ளார். ஆனால், முரளி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டுத் தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். முன்னதாக, கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்ததற்காகவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்தியவதி, கணவருடன் வாழ்வதை விட சாவதே மேல் என விபரீத முடிவெடுத்துள்ளார்.
ஆத்திரத்திலும் வேதனையிலும் இருந்த சத்தியவதி, தனது ஐந்து வயது மகன் மற்றும் இரண்டு வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்ததில் சத்தியவதியும், ஐந்து வயது சிறுவன் ருத்ரனும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இரண்டு வயது பெண் குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன் முரளி வேணுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் #📢மார்ச் 17 முக்கிய தகவல்🫠
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை #👉வாழ்க்கை பாடங்கள்
பெண்கள் தலை நிறைய பூ சூடுவதால் உண்டாகும் நன்மைகள் 🌿🥰😄🥰🌿 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
பொண்ணுக்கு அவ்ளோ வெறி 🤣🤣🤣🤣 #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱 #💑கணவன் மனைவி காமெடி😂 #😂கல்யாண மீம்ஸ் #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰
தளபதியின் குணமே தனி தான்! எந்த இடத்திலும், யார் கூட இருந்தாலும் அவர் நடந்துக்கும் அந்த கண்ணியமான விதம் தான் அவர் மேல உள்ள மரியாதையை இன்னும் கூட்டுது. நிஜமாவே சொக்க தங்கம் தான்! ❤️✨ திரையில் எவர்கிரீன் சூப்பர் ஹிட் ஜோடி, நிஜத்தில் கண்ணியமான நட்பு. சும்மாவா இவருக்கு இத்தனை கோடி ரசிகர்கள்? தளபதி எப்பவுமே பக்கா ஜென்டில்மேன் தான்! 👑🔥 செயலால் மனதை வென்றவர் நம்ம தளபதி! இந்த ஒரு புகைப்படம் போதும் அவர் எந்த அளவுக்கு கண்ணியமானவர் என்று சொல்ல. Respect button for Thalapathy! 🫡❤️ GentlemanVijay #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #என் உயிர் தளபதி விஜய் #😍தளபதி 😍ViJaY💘 #vijay vs ajith # தளபதி வெறியன்
தாயை இழந்த தங்கைக்குத் தாயாகி, மடியில் சுமந்தபடி கல்விப் போரில் வெல்லத் துடிக்கும் இந்தச் சிறுமியின் பொறுப்புணர்வும், அர்ப்பணிப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இவள் ஒரு குட்டித் தாய்! இவளுக்கு ஒரு சல்யூட்! 🫡📚❤️ Viral Trending #📝என் இதய உணர்வுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴










