தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்.. 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்..
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் - இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.. சம்பவம் நடந்தது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்..
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் சிபிஐ 2427 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு மார்ச் 23 ஆம் தேதி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் கடந்த 2-ம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.. ஆனால் அன்றைய தினம் தீர்ப்பு விவரம் ஒத்திவைக்கப்பட்டது..
இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் 9 பேருக்கும் ஏப்ரல் 6, அதாவது இன்று கிழமை தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.. அப்போது " சாத்தான்குளம் வழக்கு அரிதினும் அரிதான வழக்கு.. இந்த வழக்கில் லாக் அப் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று மாநில அரசும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மத்திய அரசும் பரிந்துரைத்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்..
மேலும் " காவல்நிலைய மரணம் மிக கொடியது, தந்தையையும், மகனையும் இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.. காவல்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், இதை கொடுமையாகவே கருதப்படுகிறது.. எனவே சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது.. ஆனாலும் மரண தண்டனை தான் வழங்க வேண்டுமா என்பதையும் ஆலோசிக்க வேண்டி உள்ளது..
தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் காவல்துறை அதிகாரிகள் தாக்கி உள்ளனர். காவல்துறையினரின் செயலை வாசித்தாலே மனம் பதைபதைக்கிறது.. எனவே இதுபோன்ற காவல் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் அது மற்ற காவல்துறையினருக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தாது..
சட்டத்தை காப்பாற்ற வேண்டிய இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.. சாத்தான்குளம் சம்பவம் சமூகத்தின் வளர்ச்சியை ஒடுக்கும் வகையில் உள்ளது.. அதற்கு ஏற்றார் போல் இந்த தீர்ப்பு இருக்க வேண்டும்.. எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொருளாதார ரீதியிலும் தண்டனை இருக்க வேண்டும்.. எனவே இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.." என்று நீதிபதி தெரிவித்தார்..
மேலும் குற்றவாளிகளுக்கு அபராத தொகையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.. அதன்படி காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #சாத்தான்குளம் செய்திகள் #📰ஏப்ரல் 6 முக்கிய தகவல் 📺
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே முத்துரையைச் சேர்ந்த 42 வயதாகும் பிரகாஷ்ரெட்டி தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார் விவசாயியான இவருடைய மனைவி நவீனாவுக்கு 38 வயது ஆகிறது. இந்தத் தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளார். பிரகாஷ்ரெட்டிக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறதாம். அப்படி மது அருந்திவிட்டு வருவது தட்டி கேட்டால் மனைவியிடம் குடும்ப தகராறு ஈடுபடுவதும் பிரகாஷின் வாடிக்கையாம்.
நீலகிரியின் மிக அழகான நடுவட்டம் கிராமத்தில் பல 100 ஏக்கர் நிலம்.. வேல்முருகன் பொதுநல வழக்கு
அப்படித்தான்.. ஏப்ரல் நான்காம் தேதி இரவு விவசாயி பிரகாஷ்ரெட்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த நவீனா அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி ஒரே ஒரு அடி அடித்தார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் பிரகாஷ். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரகாஷ்ரெட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
கன்னியாகுமரியில் காதலிக்காக எந்த காதலனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன பெற்றோர்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரகாஷ்ரெட்டியின் தந்தை நாராயணரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நவீனாவைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பிரகாஷ்ரெட்டி மது குடித்துவிட்டு தினமும் நவீனாவை அடித்துத் துன்புறுத்தியதும், இதனால் ஆத்திரத்தில் அவர் பிரகாஷ்ரெட்டியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. மனைவியே கணவனைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #📰ஏப்ரல் 6 முக்கிய தகவல் 📺
NEW 🇮🇷🇺🇸: Iran’s Explosion Media has ALREADY Made a Lego Animation Video of the Current Situation in Iran and the F-15 Titled: Wait, we want to give you Kebab Iran’s meme game is NEXT LEVEL. JUST IN 🇮🇷🇺🇸: Despite CENTCOM Denying Iran Shot Down A U.S. F-15 FIghter Jet, there are Rescue Helicopters Looking for TWO PILOTS New York Times is also now confirming this hit on the F-15E fighter jet.. The fate of the crew is uknown, as rescue crews race to find them (video 1). Local Iranians are taking shots at these rescue planes and helicopters (video 2) #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱 #🙄வித்தியாசமான வீடியோக்கள்😂 #🤩இன்றைய காமெடி🤣 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🎥Trending வீடியோஸ்📺
**“Signalல நின்ற நேரமும் வீணாக்கல… 😅❤️
👉 பேனோட உயிரைக் கூட விடமாட்டாங்க. 🤣🔥”**
👉 சின்ன சின்ன கவனிப்புல தான்
👉 பெரிய அன்பு இருக்கும் 💑✨❤️
இந்த வீடியோ ஒரு அழகான மற்றும் மனதை கவரும் couple தருணத்தை காட்டுகிறது ❤️
பார்த்து enjoy பண்ணுங்க 😄
#😊Positive Stories📰 #🎥Trending வீடியோஸ்📺 #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 #💑திருமண ஜோடிகள்
ஈரான் சிறைபிடித்த அமெரிக்க F 15 விமானி, போர் கைதியாக ஈரானின் கையில்!
டிரம்ப் செய்த அடாவடிகள் அமெரிக்கா உலக அரங்கில் தலை குனிந்து நிற்கிறது #📰ஏப்ரல் 6 முக்கிய தகவல் 📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎥Trending வீடியோஸ்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😊Positive Stories📰
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்ததோடு மொத்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது...
21 வயதான ஒரு இளம்பெண் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் கடுமையான அசிடிட்டி மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போவதை உணர்ந்துள்ளார்.
மேலும் ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண செரிமானப் பிரச்சினை என்று குடும்பத்தினர் நினைத்த நிலையில், அவரது நிலைமை மிக விரைவாக மோசமடைந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் போன்ற சாதாரண அறிகுறியாகத் தெரிந்தது எப்படி ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றது என்பது குறித்த அச்சமும் விவாதமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த பெண் மிகவும் இளம் வயதினர் என்பதால், கிராம மக்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். நமது உடல் கொடுக்கும் சிறிய அறிகுறிகளைக் கூட அலட்சியப்படுத்தாமல், சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவதன் அவசியத்தை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. #📰ஏப்ரல் 6 முக்கிய தகவல் 📺
வாழப்பாடி அருகே துக்கியாம் பாளையம் கிழக்கு காட்டுப்பகுதியை சேர்ந்தவர் விண்ணப்பன் மகன் மணிகண்டன் (30).....
இவர் கட்டிட கொத்து வேலையில் மேஸ்திரியாக வேலை பார்த்து கொண்டு இருந்தவர். இவருக்கு கொட்டவாடி பகுதியைச் சேர்ந்த வினோதினி (28) என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கிருத்திகா (9) என்ற மனைவி உள்ளனர், இவர்களது மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக மனைவியுடன் கொட்டவாடியில் மனைவியின் அப்பா வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் எந்த ஒரு போன் காலும் வராததாலும், 22 ஆம் தேதி போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளதாலும் மனைவிக்கு சந்தேகம் எழுந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 1-4-2026 ஆம் தேதி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மணிகண்டன் மாயமாகியதாக வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அவரது தாய் ஜோதி, தந்தை சின்னப்பன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்ததில் கடந்த 23ஆம் தேதி தாய்க்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும்,மேலும் தாயிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு ஈடுபட்டதாகவும்,பணம் இல்லை என்று மகனை தள்ளி விட்டதாகவும், கீழே விழுந்ததில் தலையில் பின்புறம் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்ததாகவும், பின்பு தாயும் தந்தையும் அருகில் உள்ள வீரமுத்து என்பவர் உதவியுடன் தனது பாக்கு தோட்டத்தில் புதைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மருத்துவ குழுவினர் சேலம் உடற்கூறு ஆய்வு நிபுணர் கோகுல்ராஜ் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் இதில் வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் வாழப்பாடி வட்டாட்சியர் நாகலட்சுமி உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் போலீசார் சுகாதாரத் துறையினர் உடன் இருந்தனர் . இந்த வழக்கில் தாய் ஜோதியை வாழப்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்... #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📢 ஏப்ரல் 5 முக்கியதகவல்கள் 👍










