ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
ShareChat
click to see wallet page
@2085919184
2085919184
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
🇮🇳வாட்ஸ்அப் 9344138689
Health Mix Benefits | Complete Nutrition Drink | Tamil Health Tips | #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் - இனறுருலமீடப்ஸீ Natam ips சத்துமாவு உடலில் தேவையான புரதம் நார்ச்சத்து  யற்கை சக்தியை ஒரே நேரத்தில் கனிமங்கள் மற்றும் வழங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் வளர்ச்சி எடை நிலைத்தன்மை மற்றும் தினசரி சக்தி |8108|. தேவைக்கு சிறந்த ஆதரவாக செயல்படு காலை அல்லது மாலை நேரங்களில் எடுத்தால் நீண்டநேரம் பசியில்லாமல் வைத்திருக்கவும் உதவுகிறது இனறுருலமீடப்ஸீ Natam ips சத்துமாவு உடலில் தேவையான புரதம் நார்ச்சத்து  யற்கை சக்தியை ஒரே நேரத்தில் கனிமங்கள் மற்றும் வழங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் வளர்ச்சி எடை நிலைத்தன்மை மற்றும் தினசரி சக்தி |8108|. தேவைக்கு சிறந்த ஆதரவாக செயல்படு காலை அல்லது மாலை நேரங்களில் எடுத்தால் நீண்டநேரம் பசியில்லாமல் வைத்திருக்கவும் உதவுகிறது - ShareChat
அரசு நிறுவனங்களின் தரம் இப்போது மிகவும் மேம்பட்டுள்ளது, ஒரு ஐஏஎஸ் அதிகாரியே தன் குழந்தையை இங்கு சேர்க்கும்போது சாதாரண மக்களும் தயங்கத் தேவையில்லை" என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஐஐடி டெல்லியில் சிவில் இன்ஜினியரிங் முடித்து, 23 வயதிலேயே இந்திய அளவில் 27-வது ரேங்க் எடுத்து ஐஏஎஸ் ஆன இவர், அரசு அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காகத் தனது மகளைத் தனுஷ் சதுக்கம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். ​தனது நேர்மையான செயல்பாடுகளால் ஏற்கனவே பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள புல்கித் கார்க், சித்ரகூட் மாவட்டத்தின் டிஎம்-ஆக கடந்த 2025 அக்டோபரில் பொறுப்பேற்றார். ஹரியானா கிராமப்புற வங்கியில் மேலாளராக இருக்கும் தந்தைக்கும், எஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக இருக்கும் மனைவிக்கும் பெருமை சேர்க்கும் வகையில், வெறும் பேச்சோடு நிற்காமல் செயலிலும் காட்டிய இவரைப் பலரும் 'ரியல் ஹீரோ' எனப் போற்றி வருகின்றனர். பெரிய தனியார் பள்ளிகளைத் தேடி அலையும் இன்றைய சூழலில், ஒரு உயர்மட்ட அதிகாரி அரசுப் பள்ளி முறையை வலுப்படுத்த முன்னெடுத்திருக்கும் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠
📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠 - So "ஏன் கலெக்டர் புள்ளன்னா அங்கன்வாடில படிக்க கூடாதா?" கவர்மெண்டும் இப்ப தரமாதான் இருக்கு ணையத்தை கலக்கும் வைரல் ஐஏஎஸ்.!! So "ஏன் கலெக்டர் புள்ளன்னா அங்கன்வாடில படிக்க கூடாதா?" கவர்மெண்டும் இப்ப தரமாதான் இருக்கு ணையத்தை கலக்கும் வைரல் ஐஏஎஸ்.!! - ShareChat
மகேஷ் நாயக் என்பவரது மனைவி சுசித்ரா, குடும்பப் பிரச்சினைகளுக்காக ஜோதிடர் கமலாகர் பட் என்பவரை அணுகியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுசித்ரா தனது இரண்டு மகள்களுடன் ஜோதிடரின் வீட்டிலேயே குடியேறினார். அங்கு ஏற்பட்ட மன உளைச்சலால் மூத்த மகள் தனது தந்தைக்குத் தம்மைக் காப்பாற்றும்படி செய்தி அனுப்பியுள்ளார். இதையடுத்து மகேஷ் தனது மகளை மீட்டு, அண்ணன் வசந்த் நாயக் என்பவரது வீட்டில் தங்க வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சுசித்ரா, அவரது தந்தை லோகநாத் மற்றும் ஜோதிடர் கமலாகர் பட் ஆகியோர் அடியாட்களுடன் வசந்த் நாயக்கின் வீட்டிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டனர். சிறுமியைத் திரும்ப ஒப்படைக்குமாறு மிரட்டிய அவர்கள், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கினர். இதில் தனது தம்பியையும் அண்ணன் மகளையும் காப்பாற்ற முயன்ற வசந்த் நாயக் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சித்தாபுரா காவல்துறையினர், ஜோதிடர் கமலாகர் பட், சுசித்ரா உட்பட ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠 - ஜோதிடருடன் கள்ளக்காதல் . மகளை மீட்ட கணவன்.. ஆத்திரத்தில் வீடு புகுந்து அடியாட்கள் செய்த  வெறிச்செயல். நடுங்க வைக்கும் கொலை.!! ஜோதிடருடன் கள்ளக்காதல் . மகளை மீட்ட கணவன்.. ஆத்திரத்தில் வீடு புகுந்து அடியாட்கள் செய்த  வெறிச்செயல். நடுங்க வைக்கும் கொலை.!! - ShareChat
மேம்பாலத்தில் உயிர் துடித்த நொடிகள் கங்கையாற்றின் சீறிப்பாயும் நீரின் மேல் அமைந்த மேம்பாலத்தின் கைப்பிடிச் சுவரில் நின்றபடி, ஒரு பெண் தனது குழந்தையுடன் குதிக்கத் தயாராக இருந்துள்ளார். அந்த நொடிகளில் சிறிய தவறும் இருவரின் உயிரையும் பறித்திருக்கும். உடனடி நடவடிக்கையில் அதிகாரியின் துணிச்சல் அந்த வழியாக பணிக்குச் சென்றுகொண்டிருந்த டயல் 112 அவசரப்பிரிவு உதவி ஆய்வாளர் சிக்கந்தர் குமார் இதைக் கவனித்ததும் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். அவர் மிகச் சாமர்த்தியமாக பேச்சு கொடுத்து அந்தப் பெண்ணின் கவனத்தைத் திசைதிருப்பினார். வெளிநாட்டில் வேலை பார்த்த கணவன்! மருமகளின் அறைக்கு வந்த மாமியார்! கட்டிலுக்கு அடியில் கண்ட பேரதிர்ச்சி! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! 37 வினாடிகளில் உயிர்காக்கும் போராட்டம் பெண் நிலைதடுமாறி குதிக்க முயன்ற தருணத்தில், மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று உயிர்காக்கும் நடவடிக்கை மேற்கொண்டு தாய் மற்றும் குழந்தையை பாதுகாப்பாக இழுத்தார். இந்தச் சம்பவம் வெறும் 37 வினாடிகளில் நடந்தது. இந்த வீர காவல் அதிகாரியின் செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தப் பெண் ஏன் இப்படியொரு விபரீத முடிவை எடுத்தார் என்பது தெரியாத போதிலும், சரியான நேரத்தில் நடந்த இந்த மீட்பு சம்பவம் இரு உயிர்களுக்கும் புதிய வாழ்க்கையை அளித்துள்ளது. #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠
📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠 - வேண்டாம் எடுத்து 601860W கும்பிடுறேன்! குதிக்காதீங்க.... குழந்தையுடன் கங்கையில் குதிக்க முயன்ற தாய்! 37 விநாடிக்குள் நடந்த மேஜிக்! வைரலாகும் உயிர்காக்கும் போராட்ட வீடியோ. !! வேண்டாம் எடுத்து 601860W கும்பிடுறேன்! குதிக்காதீங்க.... குழந்தையுடன் கங்கையில் குதிக்க முயன்ற தாய்! 37 விநாடிக்குள் நடந்த மேஜிக்! வைரலாகும் உயிர்காக்கும் போராட்ட வீடியோ. !! - ShareChat
புர்கா அணிந்த பெண் ஒருவர், இந்துப் பெயர் கொண்ட ஆதார் கார்டை வைத்துப் பயணம் செய்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பேருந்துகளில் இருக்கும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் போலி அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அடையாள அட்டையில் இருக்கும் மத அடையாளத்திற்கும் அந்தப் பெண்ணின் தோற்றத்திற்கும் இடையே இருக்கும் முரண்பாடு தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. ​இந்தச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள், "இது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு அபராதம் கிடையாதா?" என்றும், "முறையான சோதனைகள் இல்லாமல் இலவசம் வழங்குவது எப்படிச் சரியாகும்?" என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் அந்த வீடியோ சமூக வலைதளங்களுக்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠
📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠 - "புர்கா போட்டுட்டு இந்து பேர்ல ஆதார் கார்டா?" இலவசமா பஸ்ல போக இப்படி ஒரு தில்லாலங்கடியா ? வைரலாகும் வீடியோ.!! "புர்கா போட்டுட்டு இந்து பேர்ல ஆதார் கார்டா?" இலவசமா பஸ்ல போக இப்படி ஒரு தில்லாலங்கடியா ? வைரலாகும் வீடியோ.!! - ShareChat
தற்போது உள்ள பெண்கள் தங்களது திறமைகளை சமையலறையில் மட்டும் கழித்து விடாமல் வீட்டை தாண்டி சிறு தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டி ஆண்களுக்கு சமமாக முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் தான் மத்திய அரசு 'லக்பதி தீதி யோஜனா' என்ற திட்டத்தினை கொண்டு வந்ததுடன் பெண்களை பொருளாதார ரீதியாக ஆண்களுக்கு இணையாக மேம்படுத்தும் நோக்கில் ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் கொடுக்கிறது. வங்கிகளின் மூலம் பெறப்படும் கடன்கள் பொதுவாக அதிக வட்டி விகிதங்களுடன் கிடைக்கும் நிலையில், 'லக்பதி தீதி யோஜனா' திட்டத்தின் கீழ், முழு வட்டி செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்வதால் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறத்துடிக்கும் பெண்கள் தங்களுக்கு தெரிந்த தொழில்களை நிறுவவும், லாபம் ஈட்டவும் உதவுகிறது. பெண்கள் 'லக்பதி தீதி யோஜனா' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட சுய உதவிக் குழுவில் (SHG) இணைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த திட்டம் சுய உதவிக் குழுக்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1200 தரும் அரசு: யாருக்கெல்லாம் கிடைக்கும்..? விண்ணப்பிப்பது எப்படி ? 18 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும். அரசாங்கம் இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு கடனை வழங்குவதுடன் நின்றுவிடாமல் அவர்களுக்கு தொழில் வெற்றியடைய தேவையான பயிற்சியையும் வழங்குகிறது. மேலும், பெண்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தையில் விற்பனை செய்வதற்கும், தங்கள் தொழில்களை தொழில் ரீதியாக நடத்துவதற்கான உதவிகளையும் அரசாங்கம் செய்கிறது. பெண்கள் மத்திய அரசு வழங்கும் இந்த உதவியைப் பயன்படுத்திக்கொண்டு ஊறுகாய்-அப்பளம் தொழில்கள், கைவினைப்பொருட்கள், பால் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், தையல், காளான் வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை கொண்டு சிறுதொழில்களை தொடங்கி பொருளாதார நிலையில் முன்னேற முடியும். மேலும் நிதி பற்றாக்குறையால் சொந்தமாக தொழில் தொடங்க முடியாத பெண்களின் கனவுகளை இந்த திட்டம் நனவாக்குகிறது. விண்ணப்பிப்பது எப்படி? * கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். * உள்ளூர் சுய உதவிக் குழு அலுவலகம், கிராமப்புற மேம்பாட்டுத் துறை அல்லது அருகிலுள்ள வங்கியில் ஆஃப்லைன் படிவங்களையும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது, நீங்கள் தொடங்க விரும்பும் வணிக வகையை விவரிக்கும் ஒரு சுருக்கமான வேலைத் திட்டத்தை அலுவலகத்தில் சமர்பித்தால் போதுமானது. மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா? தமிழக பெண்களுக்கு 'ஸ்வீட் நியூஸ்' சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி! மத்திய அரசின் 'லக்பதி தீதி யோஜனா' திட்டம் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி, அவர்களை பொருளாதார ரீதியில் நிலைநிறுத்தி சமூகத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாற்றும் என்பது நிச்சயம். பெண்களின் கனவுகளை நனவாக்கும் இந்த பொன்னான வாய்ப்பை பெண்கள் தவறவிடக்கூடாது. #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠
📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠 - 610 நியூஸ்.! பெண்கள் ரூ.5 குட் லட்சம் வட்டி இல்லா கடன் பெறலாம்! விண்ணப்பிப்பது எப்படி ? 610 நியூஸ்.! பெண்கள் ரூ.5 குட் லட்சம் வட்டி இல்லா கடன் பெறலாம்! விண்ணப்பிப்பது எப்படி ? - ShareChat
25 வயதான ராஜேஷ் என்பவருக்கும், சங்கீதா (21) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். வாழ்வின் வசந்த காலத்தைத் தொடங்க வேண்டிய வயதில், ஒரு இளம் தாய் இத்தகைய விபரீத முடிவை எடுத்திருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, ராஜேஷ் தனது வாழ்வாதாரமான சலூன் கடைக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் சங்கீதா மற்றும் அவரது மாமியார் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்த நிலையில், மாமியார் சங்கீதாவை அழைப்பதற்காக அவரது அறைக்குச் சென்றுள்ளார். அங்கு சங்கீதா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமா அல்லது குடும்பப் பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சங்கீதாவிற்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால், சட்ட விதிமுறைகளின்படி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, சங்கீதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். வாழ்க்கையில் சவால்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவது இயல்பானதுதான். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அன்பால் விட்டுக்கொடுத்துச் செல்லும் போது மட்டுமே மணவாழ்க்கை இனிமையாக அமையும். எத்தகைய கடினமான சூழலிலும், தவறான முடிவுகளைத் தேடிச் செல்லாமல், முதிர்ச்சியுடன் பிரச்சினைகளைக் கையாள்வதே சிறந்தது. தாயை இழந்து தவிக்கும் அந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது, இது போன்ற துயரங்கள் இனி நிகழாமல் இருக்க சமூக விழிப்புணர்வு அவசியமாகிறது. #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠
📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠 - சலூன் கடைக்குச் சென்ற படுக்கையறையில் கணவன். மருமகளை அந்த கோலத்தில் பார்த்து ஆடிப்போன மாமியார் . இறுதியில் நடந்த பகீர் சம்பவம் ! சலூன் கடைக்குச் சென்ற படுக்கையறையில் கணவன். மருமகளை அந்த கோலத்தில் பார்த்து ஆடிப்போன மாமியார் . இறுதியில் நடந்த பகீர் சம்பவம் ! - ShareChat
ஹோசனகல்லி கிராமத்தைச் சேர்ந்த நயனா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த ஜனவரி 30ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொள்ளேகாலில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. முந்தைய நாளான ஜனவரி 29ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அதே மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண விழாவையொட்டி திருமண மண்டபத்தில் தடபுடலாக நிகழ்ச்சிகள் நடந்தன. திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மணமகன் வீட்டார், கார்களில் திருமண மண்டபம் நோக்கி புறப்பட்டனர். மணமகன் ரவிஷ் மட்டும் தனியாக மாருதி ஸ்விப்ட் காரில் புறப்பட்டு மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தார் மணப்பெண் வீட்டார் திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை வருகைக்காக காத்திருந்தனர். தனியாக புறப்பட்டு வந்து கொண்டிருந்த ரவிஷின் காரை வழியில் மற்றொரு காரில் வந்து இடைமறித்த மர்ம நபர்கள், பயங்கர ஆயுதங்களால் ரவிஷை கடுமையாக தாக்கினர். அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ரவிஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளேகால் டவுன் போலீசில் ரவிஷ் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மணமகளான நயனாவின் காதலன் தர்ஷன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவிஷை தாக்கியது தெரியவந்தது. இதனை அறிந்த ரவிஷ் நயனாவை திருமணம் செய்ய மறுத்தார் . இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. நயனாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாகியிருந்த தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இதற்கிடையே தர்ஷன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். கைதான தர்ஷனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதன்படி பவுன்சர் ஆகவும், புத்தக விற்பனையாளராகவும் உள்ள தர்ஷனும், நயனாவும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் நயனாவுக்கு ரவிஷுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ரவிஷுடன் திருமணம் செய்ய முடியாது எனக்கூறி நயனா, அவரது காதலரான தர்ஷனிடம் தனது திருமணத்தை நிறுத்துமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் தர்ஷனோ, நீயே உனது வீட்டில் பேசி திருமணத்தை நிறுத்திவிடு என தெரிவித்துள்ளார். ஆனால் குடும்ப கௌரவம் பாதிக்கும் எனக் கூறிய நயனா அதற்கு மறுத்துள்ளார். மேலும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என தர்ஷனை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ரவிஷிடம் பேசுமாறு நயனா, ரவிஷின் மொபைல் எண்ணையும் தர்ஷனிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அதாவது ஜனவரி 29ஆம் தேதி அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரவிஷ் காரில் தனியாக புறப்பட்டு வந்த நிலையில், தர்ஷன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவிஷை தாக்கி கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நயனாவையும் அவரது காதலரான தர்ஷன் மற்றும் சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தர்ஷினின் நண்பர்கள் இருவரை வலை வீசி தேடி வருகின்றனர். கைதான நயனா, தர்ஷன் உள்ளிட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்காக புறப்பட்டு வந்து கொண்டிருந்த மணமகனை, மணமகள் காதலனை ஏவி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠
📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠 - 44 Accused Darshan and Nayana திருமணத்துக்காக காரில் வந்த மணமகனை கொல்ல காதலனை ஏவி முயன்ற மணப்பெண். சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவத்தின் பின்னணி ! 44 Accused Darshan and Nayana திருமணத்துக்காக காரில் வந்த மணமகனை கொல்ல காதலனை ஏவி முயன்ற மணப்பெண். சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவத்தின் பின்னணி ! - ShareChat
Light OFF பண்ணலாமா 😍 ? . #💘Love Quotes & Videos #💕 வாலெண்டைன் விரைவில் #💑🏻Celebrity ஜோடிகள் #💑திருமண ஜோடிகள் #💑கணவன் மனைவி காதல்💞
💘Love Quotes & Videos - ShareChat
00:57
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #🧘🏼மன அமைதிக்கான டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் | உங்கள் வாழ்வை ஆரோக்கியமாக மாற்ற தினசரி ஆரோக்கிய குறிப்புகள் 🌿
😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் - ரEIN இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 300 மணி கல்லீரலின் நேரம் இந்த நேரத்தில் நீங்கள் வரை உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது  கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. ரEIN இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 300 மணி கல்லீரலின் நேரம் இந்த நேரத்தில் நீங்கள் வரை உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது  கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. - ShareChat