#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖
#💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰
இவனுங்க லூசா நாம லூசா இந்த நம்பர் பிளேட் யாராலும் கழட்ட முடியாதாம் அப்படின்னு இந்த செய்தி சொல்லுது.பின்னாடி உள்ள மட்கார்டை கழட்டிப்போட்டுட்டு புது நெம்பர் ப்ளேட் போடப்போறான்,திருட்டை தடுப்பது என்பது முட்டாள் தனமாக தெரியலையா,மக்களிடம் ஏதாவது ஒருவழியில் பணத்தை புடுங்க வேண்டும்.இப்படியே போனா என்றாவது ஒரு நாள் இந்தியா முழுவதும் மக்கள் போராடும் சூழ்நிலைக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்னுமில்லை ஏன்னா இங்கே ஓவ்வொருத்தனும் ரத்தத்தை சிந்தி சம்பாதிக்கிறான்,ஆனா நீங்க மக்களின் வாக்கை வாங்கிக்கொண்டு மக்களை வாட்டி வதைக்கிறீர்கள்,நீங்க உட்கார்ந்துக்கொண்டு கும்பலா கூடி ஒரு மசோதாவை நிறை வேற்றிவிட்டு வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது.இது உண்மையிலேயே
கொள்ளைதான் சமீபத்தில் ஒரு பேன் வாங்கப்போனேன் கிராம்டன் பெடரஷல் பேன் அதன் பில்லை பார்த்தேன் பேனின் விலை 3,305ரூபாய் ஆனா CENTRAL, STATE இவங்க இரண்டுபேரும் சேர்ந்து போட்ட வரி 635ரூபாய் இது பகல் கொள்ளை தானே, இந்த மாதிரி மக்களிடம் பணத்தை பல வகையில் புடுங்கப்படுகிறது,இப்ப நம்பர் ப்ளேட் இந்தியா முழுக்க 2019 முன்னால் வாங்கப்பட்ட வண்டிகள் கோடியை தாண்டும் இந்த நம்பர் ப்ளேட் மூலம் பல்லாயிரம் கோடி அரசுக்கு வருமானம் வரப்போகிறது.சிலபேர் அவன் உழைச்சி சம்பாதிச்ச காசுக்கு வரி கட்டி தான் சம்பளமே வாங்குவான்,அப்புறம் அவன் வரி கட்டின பணத்துலேயிருந்து செலவு செய்யும் ஒவ்வொன்றுக்கும் மறுடியும் வரியை கட்டி வாங்குறான்.
ஆனா அரசியல்வாதி மக்கள் பணத்தை சுரண்டி அதை எந்த வரியும் கட்டாமல் ஈசியா வெளிநாட்டுல ஆயிரகணக்கான கோடியை இன்வெஸ்ட் பன்னுறான் கேட்டா அந்த மாதிரியெல்லாம் கிடையாதுன்னு சொல்லுவானுங்க,சமீபத்தில் வடசென்னையில் ஒரு MLA போன தேர்தலில் மனு தாக்கலின் போது பிரமான பத்திரத்தில் 15 லட்சம் காட்டியதாக எதிர் கட்சிகள் பிரச்சாரத்தின் போது பேசியது,15 லட்சம் கணக்கு காட்டிய அதே நபர் இம்முறை தேர்தலின் போது 7கோடிக்கு மேல் கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது அப்ப இந்த 5ஆண்டுக்குள் 15 லட்சம் எப்படி ஏழுகோடிக்கு மேல் ஆகியதுன்னு IT யும் சரி தேர்தல் ஆணையமும் சரி கேள்வி கேட்காது,ஆனா பொது மக்களிடம் ஹெல்மெட் போடலையா நம்பர் ப்ளேட் இன்னும் மாற்றவில்லையான்னு சம்பாதிக்கிற சொற்ப பணத்தையும் புடுங்குது.கேட்டா சட்டம் பொதுன்னு கதை விடுவானுங்க.தூ............. #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖
*அரசியல் புரிதல்கள்..!*
*கப்ளிசேட்*
⚖️🔮
*அரசியல் புரிதல் -4*
*இங்கு யாரும் ஹீரோவும் இல்லை!*
*இங்கு யாரும் ஜீரோவும் இல்லை!*
இப்போதெல்லாம் மேல்மட்ட அரசியல் அசிங்கங்களில்
Star Hotel அறைகள்,
வெளிநாட்டு சரக்குகள்,
நடிகைகள்,
அம்மாளுக்கு வைர நகைகள்,
அம்மணிக்கு பிளாட் என லட்சங்களின் பட்டியல்கள்,
சாதாரண மனிதர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு
அதிகார சொர்க்கமாக அரசியல் மாறிவிட்டது.
அதனால்தான் சாகும்வரை அரசியலை விட்டு நகர மறுக்கிறார்கள்.
பல்லு விளக்காம கூட இருந்துருவேன்
ஆனா பதவி இல்லாம ஒரு நிமிசம் கூட இருக்கமுடியாது என்ற வசனத்தைப்போல
பதவி போதை என்பது அரசியல்
வாதிகளிடம் இருந்து பிரிக்க முடியாததாக மாறிவிட்டது.
இதில் அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் சாக்கடையை அள்ளி வீசிக் கொள்கிறார்கள்.
நீ யோக்கியனா?
நான் யோக்கியனா?
என ஊழல்வாதிகளின்
சண்டைகள் மக்களை முட்டாளாக்கி விடுகின்றன.
அப்போது அரசியலில் நல்லவர்களே இல்லையா?
லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள்
இல்லையா? எனில் நிச்சயமாக அங்கங்கே ஓரிருவர் இருக்கவே செய்கிறார்கள்.
ஆனால் தேர்தல் என்று வரும்போது
ஒவ்வொரு வேட்பாளரும் பல கோடிகளை செலவு செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் கட்டமைக்கப்
படுகிறது.
இன்றைக்கு தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால்
வெளிப்படையாக பல செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.
ஆனால்,ஓட்டிற்கு பணம், பரிசுப்பொருட்கள்,
தேர்தலின் போது
வேலை செய்பவர்களுக்கு
உடன் சுற்றுபவர்களுக்கு
தினக்கூலிகள்,
கூட்டம் கூட்ட ஒவ்வொரு நபருக்கும் பணம்,
சாப்பாடு, சாராயம் என வேட்பாளர்களின்
மறைமுக செலவுகள்
அதிகமாகின்றன.
இதற்காக வேட்பாளர்கள்
தங்கள் சொந்தப்
பணங்களை செலவு
செய்கிறார்கள்.
சொத்துக்களை விற்கிறார்கள்.
கடன் வாங்குகிறார்கள்.
பொதுவெளியில் வாங்குகிறார்கள்.
பெரு
முதலாளிகளிடம்
வாங்குகிறார்கள்.
தங்களின் கட்சி தலைமையிடம் வாங்குகிறார்கள்.
ஏதோ ஒரு வகையில் திரட்டப்பட்ட பணத்தை தேர்தல் பரப்புரைகள் மற்றும்
மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுவதற்கே
அதிகம் செலவு செய்கிறார்கள்.
பணமோ,
பரிசுப் பொருளோ
பெறாத வாக்காளர்,
உனக்கு வாக்களிக்காமல் எதிரணிக்கு வாக்களிப்பேன் என்னும் போது
வேட்பாளர் ஏதோ ஒருவகையில் முதலீடு செய்துவிட்டு மக்களின் பணத்திலேயே
சுரண்ட ஆரம்பிக்கிறார்?
இது யாருடைய குற்றமாகிப்
போகிறது?
இதனை மக்களுக்கு எப்படி புரியவைப்பது?
கொடுத்தாலும்,
கொடுக்கா
விட்டாலும்,
அவன் திருடத்தான்
போகிறான் என்ற மக்களின் மனநிலை
எப்போது மாறும்?
எப்படி மாறும்?
"ஒவ்வொரு வினைக்கும்(Action) சமமான எதிர்வினை
(Reaction )உண்டு"
என்ற நியூட்டனின் மூன்றாவது விதியைப் போல,
வேட்பாளரிடம் நீ வாங்கினால் உனக்கான வேலைக்கு நீயும் அதுபோலவே கொடுக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இதுபோல் நமது முழு அரசியலும் புளுத்துப்போய் இருக்கிறது.
இதில் சில இயக்கங்கள் ஊழலை ஒழிப்பேன் என்று கோஷமிட்டு விட்டு அண்ணாஹசாரே கோஷ்டியைப்போலஎப்படியோ விலை போய் விடுகிறார்கள்.
ஊழலை ஒழிப்பதற்கான நேர்மையான தீர்வுகள் ஒரு காலத்தில் கிடைக்கலாம்.
எப்போது என்பது யாருக்கும் தெரியாது.
இந்த சூழலில் வாக்காளர்கள் எப்படி சிந்திக்க வேண்டும்?
*தொடர்ந்து ஆறு நாட்கள் கொஞ்சம் அரசியல் பேசுவோம்..!*
⚖️🔮
*கப்ளிசேட்*
*19.04.26* #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰
#💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ





