R.BABU
ShareChat
click to see wallet page
@23446003
23446003
R.BABU
@23446003
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
இன்று பௌர்ணமி சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயமே! பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும். சில விஷயங்கள் மனித அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. ஆன்மீகமோ? அறிவியலோ? இரண்டில் எதுவாக இருந்தாலும் பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப் படுத்துவதாக கூறப்படுகிறது. பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பௌர்ணமியில் விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது. பௌர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள். பௌர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பௌர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பௌர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள் ளனர். இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பௌர்ணமி நாளின் விரதமிருந்து பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது. பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பெளர்ணமி நாளில் வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும். பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும். பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும். வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம். பவுர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும். இந்நாளில் அம்பிகையை துதித்து விளக்கேற்றி, நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண் டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறிய வர்கள் அனைவரும் மன அமைதி பெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட் டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது. இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக் காக பல நன்மைகளால் அருள் புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங் களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார் கள். நன்றி #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:30
ஒரு அருமையான பதிவு #🌻வாழ்த்துக்கள்💐
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:15
😱😱😱தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் அதிரடியாக உயர்ந்ததால் பொதுமக்கள் ரோட்டிலும் மற்றும் வீட்டிலும் கவனமாக இருங்கள். திருடர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் ஜாக்கிரதையாக இருங்கள். #ஜாக்கிரதை
ஜாக்கிரதை - ShareChat
01:09
இன்று சனி மஹா பிரதோஷம். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் வரும் திரியோதசி திதியை தான் பிரதோஷ நாள் என்கிறோம். ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச் சிறப்பும் பலனும் உண்டு. அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும். சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். சனி பிரதோஷத்தின் சிறப்பு : சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும், சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவாலயங்களில் சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும். விரத முறை : வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு அணிந்து நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். பிரதோஷம் ஆரம்பம் முதல் பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்து, பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் சிவன்-பார்வதி புகைப்படத்தை வைத்து வழிபடலாம். பிரதோஷ பலன்கள் : பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால் சுபமங்கலம், நல்லெண்ணம், நல்லருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலனைக் கொடுக்கும். வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் நீங்க இந்நாளை தவறவிடாதீர்கள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இறைவன் அருள் பெறுவீர் நன்றி #🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐
🙏ஆன்மீகம் - ShareChat
01:05
ஓம் நமச்சிவாயா ஒரு அருமையான பதிவு #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
00:15
இன்று ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி.. பத்மநாப ஏகாதசி விஷ்ணுவின் அன்பையும் அன்பையும் விரும்பும் பக்தர்கள் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். கூடுதலாக, விரதத்தைக் கடைப்பிடிப்பது ஒருவருக்கு ஆசீர்வாதங்களையும் உலக இன்பங்களையும் வழங்குகிறது. பாபாங்குசா ஏகாதசி என்பது விஷ்ணுவின் அவதாரமான பத்மநாபரை வணங்குவதால், மக்கள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுபடவும், ஆசீர்வாதங்களைப் பெறவும் உதவும். பாபாங்குசா ஏகாதசி விரதம் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து ஒருவரை விடுவித்து முக்தி அடையும் என்றும் நம்பப்படுகிறது. பாப்பாங்குசா ஏகாதசி கதை விந்தியாசல மலையில் ஒரு காலத்தில் க்ரோதனன் என்ற இரக்கமற்ற வேட்டைக்காரன் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவரது வாழ்நாள் முழுவதும், அவர் பலவிதமான விளையாட்டு மற்றும் பறவைகளைப் பின்தொடர்ந்தார். இறுதியாக மரணம் வந்தபோது, ​​​​அவர் பயத்தில் மூழ்கி, அங்கீர ரிஷியை அடைந்தார். "வாழ்நாள் முழுவதும் பாவச் செயல்களைச் செய்ததால் நான் நரகத்திற்குச் செல்ல வேண்டும்" என்று க்ரோத்னா மகரிஷியிடம் அறிவித்தார். இரட்சிப்பைப் பெறவும், என் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கவும் அனுமதிக்கும் ஒரு முறையை தயவுசெய்து வழங்கவும்." அதன் பிறகுதான் அங்கீர ரிஷி பாபாங்குச ஏகாதசியின் முக்கியத்துவத்தை சொல்லி விரதம் இருக்க சொன்னார். விரதத்தின் பலன் காரணமாக பாவ புண்ணியங்கள் அனைத்தும் நீங்கி பைகுண்டத்தை அடைந்தார். ஏகாதசி என்றால், பதினோராவது திதி என்று பொருள். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்றால் பத்து. இது இரண்டும் சேர்ந்த நாள் ஏகாதசி. மாதந்தோறும் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி அல்லது பத்மநாபா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பாபாங்குசா ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது. ஏகாதசி விரதம் : ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக்கூடாது. அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். பலன்கள் : பாபாங்குசா ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் கைவரப்பெறும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ஐப்பசி ஏகாதசி நாளில், ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறை தெரியாமலோ, அல்லது மற்றவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்றோ, எப்படிச் செய்தாலும், இந்த விரதத்திற்கான பலன் கிடைக்கப்பெறும் என்பதே, பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மேன்மையாகும் ஒருவர் நீண்ட ஆயுள் பெறுவதற்கும், செல்வந்தர் ஆவதற்கும், உயர்குடியில் பிறப்பதற்கும், நோயற்று வாழ்வதற்கும், தான் செய்த புண்ணியங்களே காரணம். கருத்து என்னவெனில் கிருஷ்ணரின் பக்தித் தொண்டை அடைவது இந்த ஏகாதசியின் நேரடி பலன் ஆகும். நிலையற்ற ஜட சுகங்களைப் பெறுவது இந்த ஏகாதசியின் மறைமுக பலனாகும். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் : ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷமாகும். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும், சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். நன்றி #🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐
🙏ஆன்மீகம் - ShareChat
00:15
இன்று விஜயதசமி மறுபூஜை செய்ய உகந்த நேரம் காலை 08.00 முதல் 10.00 வரை மாலை 04.40 முதல் 07.00 வரை இரவு 08.15 முதல் 09.00 வரை பூஜை செய்யும் நேரம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது விஜயதசமி கொண்டாடுவது ஏன்? சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். விஜயதசமி என்றால் வெற்றியை தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரி வழிபாட்டின் இறுதி நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துர்க்கை ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10ஆம் நாளில் அவனை வெற்றிகொண்டாள். அந்த வெற்றியை குறிக்கும் தினமே விஜயதசமி ஆகும். புராணக்கதை பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தைக் கண்டு மனம் இறங்கிய பிரம்மதேவர், அசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான். பின்னர் தனக்கு மரணமில்லாத வரத்தை தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால், பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே, வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார். இதையடுத்து, தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும் என்ற வரத்தை மகிஷன் கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் ஆபத்து வர வாய்ப்பில்லை என்று எண்ணினான் மகிஷன். தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டனர். தேவியும் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க போர் செய்ய முற்பட்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தை அன்னைக்கு கொடுத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள். அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10ஆம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள் அன்னை. அந்த வெற்றி திருநாளையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம். அசுரனை வென்று அனைவருக்கும் நன்மையை அளித்த அன்னையை போற்றி வழிபட்டால் தீமைகள் ஏதும் நெருங்காது. விஜயதசமியன்று என்னென்ன தொடங்கலாம்? வித்யாரம்பம் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை கல்வி கற்க துவங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதுவது இயல்பே. அந்த விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள் தான் விஜயதசமி. விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு இசைக்கருவி இசைத்தல், நடனம் ஓவியம் போன்ற கலைகளை கற்க பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்று கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவிற்கு சிறப்பு தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையை பயிலுவார்கள். விஜயதசமி நாளில் 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு விஜயதசமியன்று வித்யாரம்பம் செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியை கோவில்களிலோ அல்லது வீட்டிலோ செய்யலாம். கோவில்களில் செய்யும் போது நல்ல நேரம் பற்றி யோசிக்க வேண்டாம். வீட்டில் செய்யும் போது நல்ல நேரம் பார்த்து இதை செய்ய வேண்டும். குருவின் பங்கு இதில் மிகவும் முக்கியம். குழந்தையை வீட்டில் அப்பா , தாத்தா அல்லது தாய்மாமாவின் மடியில் உட்கார வைத்து கொள்ள வேண்டும். ஒரு தட்டில் அரிசியை முழுவதுமாக தூவி வைக்க வேண்டும். குரு குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுத வைப்பார். குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் இந்த சுபநிகழ்ச்சி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமியன்று என்னென்ன தொடங்கலாம்? வித்யாரம்பம் செய்தல் புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல் புதிய தொழில் ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது நடனம், சங்கீதம் போன்ற கலைகளை கற்க ஆரம்பித்தல் இதுபோன்ற செயல்களை விஜயதசமி அன்று ஆரம்பித்தால் வெற்றியும், புகழும் கிடைக்கும். முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தகங்கள் இசைக்கருவிகள் மற்றும் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளை விஜயதசமி பூஜை முடிந்து உபயோகம் செய்வது சிறப்பு. நன்றி #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:15
செப்டம்பர் மாதம் வரும் பண்டிகை இது ஒரு அருமையான பதிவு #🌻வாழ்த்துக்கள்💐
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:15
இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பூஜை செய்ய உகந்த நேரம் காலை 09.15 முதல் 10.10 வரை பகல் 01.45 முதல் 03.10 வரை மாலை 04.00 முதல் 05.00 வரை இரவு 07.15 முதல் 10.00 வரை நவராத்திரி விழா நவராத்திரியின் கடைசி நாள் ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் ஞானத்தை வழங்குகின்ற சரஸ்வதிக்குரிய நாளாக வழிபடப்படுகிறது. ஆயுத பூஜை அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்வதற்காக கடும் தவம் இருந்து, ஒவ்வொரு தெய்வங்களி டம் இருந்து ஒவ்வொரு விதமான சக்தி வாய்ந்த ஆயுதங்களை பெற்றாள். போர்க்களத்திற்கு செல்வதற்கு முன், தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக அன்னை பராசக்தி தெய்வங்களி டம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்க ளை பூஜை செய்து வழிபட்டாள். அன்னை பராசக்தி ஆயுதங்களை வைத்து வழிபட்ட இந்நாளையே நாம் ஆயுத பூஜையாக கொண்டாடு கிறோம். இந்நாளில் நாமும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும். செய்யும் தொழிலில் நம்மை உயர்த்தும் ஆயுதங்களை இறைவனாக பாவித்து, அவற்றால் எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருக்க வழிபடுவதே ஆயுத பூஜை ஆகும். அதாவது வீட்டில் இருக்கும் இயந்திரங்களால் கத்தி, மிக்ஸி, Grinder) எவ்வித விபத்தும் ஏற்படக் கூடாது. தொழில் நிறுவனங்களி லும் இயந்திரங்களால் எவ்வித ஆபத்தும் யாருக்கும் ஏற்படக் கூடாது. மேலும், இயந்திரங்களும் பழுது இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று வேண்டி பூஜை செய்து வழிபட வேண்டும். வழிபடும் முறை : வீடு, கடை, வாகனங்களை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப் படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும். பூஜையின் போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு. ஆயுத பூஜையின் சிறப்பு : செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகர மாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும். ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வ மான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும். சரஸ்வதி பூஜை..!! கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாக கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. வழிபடும் முறை : ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம்புல், மலர் மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை படைக்க வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய் தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்ற வற்றை கொடுக்க வேண்டும். மறுநாள் காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும். மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். சரஸ்வதி பூஜையின் சிறப்பு : நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள் பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாள் கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். உறவுகள் நண்பர்கள் அனைவருக் கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். நன்றி #🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐
🙏ஆன்மீகம் - ShareChat
00:15
நவராத்திரி ஒன்பதாம் நாள் சித்திகளை அருளும் ஒன்பதாம் நாளான சாமுண்டி பூஜை அம்மன் வடிவம் : சாமுண்டி பூஜையின் நோக்கம் : சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல். அம்மன் வடிவம் : தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள். முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். மிகவும் சினம் கொண்டவள். தர்மத்தை காக்க கோபமாக இருப்பவள். தென்னாட்டில் ஒன்பதாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் : தீப துர்க்கை. யோகிகள் யோகத்தால் தவத்தை உணர்ந்து மெய்ஞானம் என்னும் ஞான ஒளியை அளித்து விளக்கு போல் இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்து செல்வதால் தீப துர்க்கை என்று அழைக்கப்படுகின்றாள். பூஜை விவரங்கள் அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : தாமரை அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : மரிக்கொழுந்து அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : வெள்ளை நிறம் அன்னையின் அலங்காரம் : சுபத்ராதேவி அலங்காரம் அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : வெண் மலர்கள். கோலம் : கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போட வேண்டும். நைவேத்தியம் : அக்கார வடிசல் குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 10 வயது குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : சௌபாக்கியம் உண்டாகும். பாட வேண்டிய ராகம் : வசந்தா நடனம் : கோலாட்டம் குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : திரட்டுப்பால் பலன்கள் : இஷ்ட சித்திகளை அருளக்கூடியவள். நன்றி #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat
00:59