
சேகர்
@2593507698
தேவைகளின் தேடல் களில்
ஓடிக் கொண்டிருப்பவன்..,
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
மூங்கிலுக்குள் கலவிசெய்த காற்று
இனிமையான ராகமாய் வெளியேற
மற்றவர்களை மயக்கும் இசையாகி
மீண்டும் காற்றில் கலந்ததே
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
எனக்கென வேண்டுதல் ஏதும்
இல்லை
உனக்கு தெரியும் என் தேவை
என்னவென்று
இருந்தாலும் உன் காலடியில்
தீபம் ஏற்றுகிறேன்
நீ என்னை மறவாதிருக்க ஒரு
அடையாளமாக
எல்லோரும் உன்னிடம் தானே
வேண்டுகிறார்கள் நான்
உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
மலர்களில் இருந்து குடித்த தேனை
தன் கூட்டில்
கொண்டு போய் சேமித்த தேனீக்கள்
தாங்கள் கொல்லப்படுவோம் அல்லது
விரட்டப்படுவோம் தேனுக்காக என்று
அறிந்திருந்தால் அவைகள் சேமிப்பை கைவிட்டிருக்கும்
எப்போதும் போல் மலர்களும் மனம் மாறவில்லை
தேனீக்களும் குனம் மாறவில்லை
இது கதையோ கவிதையோ இல்லை
உண்மை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
பசி வேண்டாம் தூக்கம் வேண்டாம்
சொந்த பந்தம் வேண்டாம் பகல் கூட வேண்டாமென
உன் அணைப்பில் ஒட்டி கிடக்கும்
போது இந்த
இரவு மட்டும் போதும் இவ்வுலகில்
எனக்கு என்ற
எண்ணம் தோன்றியது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
கொஞ்சம் வித்தியாசமாக
தெரிகிறாய் அதனால்
தானோ என்னவோ உன்னை
எனக்கு
ரொம்பப் பிடிக்கும் அதற்கு
மேல்
எதுவுமில்லையென சொல்லத்
தான்
நினைக்கிறேன் ஏனோ தெரியல
ஏதோ ஒன்னு தடுக்கிறது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
பூஞ்சோலை அழகாய் பூத்தது
அது
காவல் இன்றி கிடந்தது
அதில்
காற்று மோதிச் சென்றது
அதை
வாசம் கவ்விக்கொண்டது
நேராக
வண்டின் மூக்கில் நுழைந்தது
பசித்த
வண்டு வாசம் தேடி வந்தது
அந்த
அழகிய சோலையை கண்டது
உள்ளே
உற்சாகத்தோடு புகுந்தது
பூத்த மலரில் அமர்ந்தது
தேனை உண்டு மகிழ்ந்தது
வண்டமர்ந்து உண்டு சென்ற
மகிழ்சியில்
பூத்தது இன்னும் அழகாய்
சிரித்தது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
தோட்டத்தில் பூக்கள் எல்லாம்
சந்தோச நடனத்தில்
வண்டுகளின் பாடல்வேறு போதும்
வாட்டியதென
மாலை சூரியனும் இதை பார்த்த
படி
மெல்ல நகர்ந்து விட்டான் தூரத்தில்
எட்டிப் பார்த்த நிலவு மெல்ல
நிலைக்கு வந்தது
காலம் இரவுக்கு மாறியது
இது அன்றாட நிகழ்வு ஆனால்
இன்று தான் நான்
இதை கவனித்தேன் கவிதையாய்
அவள் வரவுக்கு பின்னே
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
நேற்றைய பொழுது ஏனோ
வெறுமனே கழிந்தது
எதிர்பார்ப்போடு விடிந்த தினம்
ஏமாற்றத்தோடு முடிந்தது
காரணம் தெரிந்தது கவிதை
மறந்தது
அவள் புன்னகையை காணாது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உறக்கம் இறக்கமின்றி என்னை
வதைத்தது
கண்ணுக்குள் அவள் பிம்பம்
இன்னும் கலையாமல்
கண்களைமூடி ஓய்வெடு என்று
கெஞ்சிப் பார்த்தேன்
அவள் கண்களில் சிரிப்பை கண்ட கண்கள்
உறங்குமா என என்னை கேட்டதும்
மௌனமாய் ஆமோதித்தேன்
உண்மை தான்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உன்னிடம் பெரிதாக அப்படி
என்ன கேட்டுவிட்டேன்
உன் இதயத்தில் கொஞ்சம்
இடம்
அன்பாய் நாலு வார்த்தைகள்
உன் அணைப்பில் சாய ஒரு
பக்க தோள்
மடிமீது தலைவைக்க உன்
அனுமதி
இவைகள் எல்லாம் உன்னால்
தர முடிந்தவரை தானே
வேறேதும் தேவையில்லை
இந்த உலகில் எனக்கு












