#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
உன்னைப் பார்க்கையில் என்னை
இழக்கிறேன்
காரணம் கேட்டால் சொல்லத்
தெரியாது
தடுப்பணையில் இருந்து நிரம்பி
வெளியேறும் நீராய்
வெளிபட்டு விடுகிறேன் என் நிலை
மறந்து
இது என்ன மாயம் என்று தெரிய வில்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
நீண்ட இடைவெளிக்குப் பின்
எதிர்பாரா சந்திப்பு
திகைப்பும் சந்தேகமும் ஒரு சேர
நிஜம் எதிரில் என் நெஞ்சை
நிரப்பியது
இயல்புக்கு திரும்ப சில நொடிகள்
எடுத்தது
பட்டென்று சுதாரித்து அவசரத்தை துணைக்கழைத்து
நல விசாரிப்பு சம்பிரதாய அழைப்பு
என
முற்றுப்புள்ளியோடு நீ விடைபெற
எப்படி இது சாத்தியம் என்ற கேள்வியோடு
அன்றில்லா நிதானத்தோடு நான்
நகர மீண்டும்
மனதிற்குள் பெரிய வெற்றிடம் சில நேரங்களில் இப்படி
ஒரு சோதனை எதற்கென்றே புரிவதில்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
தடைகளை தாண்டி போக
பயிற்சி கொடுக்குது மண
வாழ்க்கை
சுதந்திரமாக நான் இருக்க
நினைக்கிறேன்
சுதந்திரமாக இருப்பதைப்
போல நடிக்கிறேன்
எனக்கு சுதந்திரம் என்பது
எப்போதும் இல்லையென
தடைகளை தாண்டி கற்றுத்
தெளிந்தேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
எங்கே உருவாச்சி தெரியாது
பயண நேரம் தெரியாது
கரையை தழுவி திரும்பும்
அலைகள்
பரிமாறிக்கொள்ளும் அன்பு
எதையும் எதிர்பார்த்து
காத்திருக்காமல்
திரும்பி செல்வது தான்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
உன்னைப் பார்த்ததும் நீ அழகுனு
தோனியதை சொல்லாது
மௌனமாய் செல்ல முயற்சித்து தோற்றேன்
உண்மையை ஏன் மறைக்க வேண்டும்
அடுத்து என்ன பேசுவது என்று
தான் தெரியவில்லை
மௌனமாய் அதை ஆமோதித்து
சென்றுவிட்டாய் நீயும்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
ஆத்திரத்தில் கொட்டிய
வார்த்தைகள்
கைவிட்டுப் போய்விடுமோ
என்பதன் வெளிபாடு
எப்படி எனக்குள் ஏற்பட்டது
இந்த குறைபாடு
எல்லாம் காதல் என்ற
ஒற்றை
வார்த்தையின் செயல்பாடு
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
பகல் இரவு வெறும்
கனவு
இமை மூடாது
எப்படி எனக் கேட்காதே
பொய்யில்லை உண்மை
நடையில் பெரிய வேகம்
இல்லை
அலைபாயாத பார்வை
எனக்கு முன்னால் நீ
வழிகாட்டியாக
நான் உன்னை தொடர
எப்படி உறங்குவேன்
இப்பொழுது புரிகிறதா
பகல்
இரவு வெறும் கனவு
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
என்னைத் தேடினான் போல
அவன்
எனக்கு தரவேண்டி அவன்
படைத்ததை
எப்படி என்னை தேர்வு செய்தான்
ஆச்சரியமாக இருக்கிறது
என் கை பிடித்து அழைத்து
போகாமல்
கண் முன்னே உன்னை நிறுத்தி
இவள் தான் உனக்கானவள் என்று
என் மனதில் எழுதிப் போனான்
விந்தையான அந்த இறைவன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
உண்மை என்ற நம்பிக்கையோடு
போய்க்கொண்டிருக்கும் போது
இல்லை அது போலி என்று காலம் உணர்த்தும் வரை
கண்மூடித்தனமான நம்பிக்கை
நம்மை வழிநடத்துகிறது அதுவே
பிறகு
பெரிய வலியைத் தருகிறது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
காமத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டு
காதல் இது என்று சொல்லி
சதைப் பசியெடுத்து திரியும்
உறவில்லை
மென்மையான உணர்வுகளுக்கு பின்னே
உறுதுணையாக நின்று ஒளிவு
மறைவை
நாடாத உன்னத உறவு இது













