#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
அருகருகே நாம் இருந்தும்
நெருங்க முடியாது விலகி
நிற்கிறோம்
பிணக்கு என்பது எதுவும்
இல்லை பின்
எதனால் இந்த தொல்லை
விட்டுக்கொடுத்தல் விடை
பெற்றதால்
போதும் இந்த விபரீதம்
இனித் தொடர வேண்டாம்
இசைந்து செல்ல முடியும்
என்னால்
வாழ்வே இசையாகிவிடும்
தன்னால்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
கனவுகள் எல்லாம் நிஜமாகுமா
தெரியாது
சில நிஜங்கள் மட்டும் கனவாக
கலைவதை
கண்கூடாக கண்டப்பின் எதுவும்
இங்கே
நிரந்தரமில்லை என்று தெரிந்து
தெளிய நான் கொடுத்த விலையில்
அதிக மதிப்புடையது காலம் தான்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
கண்களை மூடிக் கொண்டு நடக்க
முடியுமா
வழியை பார்த்து நடக்கத்தானே
கண்கள்
இதுவரையில் இப்படியான சஞ்சலம்
ஏற்ப்பட்டதில்லையே
இன்று மட்டும் அதுவும் என் கண்களில்
நீ விழுந்த பிறகு
சிறகடிக்குதே மனம் உற்சாகத்தில் உன்னைப் பார்த்ததும்
அடடா இதற்கு தான் இங்கு வரவழைத்ததோ காலம் என்னை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
நேற்று தான் அவளைப்
பார்த்தேன்
எதோ ஒன்று எனக்குள்
நிகழ்ந்தது
இன்று அவள் தரிசனம்
கிடைக்குமா என்று
யோசித்தேன் கனவில்
வந்து என்
உறக்கத்தை கலைத்தாள்
நாளை அவளை சந்தித்தே
தீருவதென
தொலைந்த உறக்கத்தை
விட்டு விட்டு
அதற்கான வழியைத்
தேடினேன்
பொழுது விடிந்தது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
மழைத் துளிகள் ஒன்றாய்
இணைந்து
எனக்கெதிராய் கூட்டு சதி
செய்தது
சதியில் எளிதாக மாட்டிக்
கொண்டதால்
மழை என்னை நனைத்துப்
பார்த்தது
நனைத்துப் போன மழையை
நினைக்க
நனைந்தது சுகமாய் தான்
இருந்தது
வழியெங்கும் ஊடுருவிய
பார்வைகள் தான்
என்னைப் பாராபட்சமின்றி
துளைத்தது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உனக்கும் எனக்கும் இடையே
இடைவெளி
கொஞ்சம் கூடித்தான் போனது
என்ன செய்வது சுயநலம்
இன்றி இங்கு
எதுவுமே இயங்குவதில்லை
பிறகு
எப்படி காதலும் கத்தரிக்காயும்
என
சேர்ந்திருக்க முடியும் இடைவெளி
இன்றி
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
இன்று எதுவும் எழுத வேண்டாம்
என்ற
முடிவோடு இந்நாளை கடந்துவிட
நினைக்க
என் முன்னே அவள் வந்து நின்று
இன்று
என் நினைவு வரவில்லையா
உனக்கு என்றாள்
ஏன் என்ற வினாவோடு அவளைப்
பார்க்க
இவ்வளவு நேரம் வரை காத்திருக்க
நீ எதுவும் எழுதாமல்
இந்நாள் முடியப் போகிறதே அதன்
கேட்டேன் என்றாள்
அதோடு முடிக்கவில்லையவள் என்
கவிதைகளில்
எல்லாம் நீ மட்டுமே என்று சொன்ன
தெல்லாம்
பொய்தானே என்றும் கேட்டு வைத்தாள்
உண்மைதான் நான் சொல்லும்
பொய்யையெல்லாம் அவள் உண்மை
என்று
எடுத்துக்கொண்டால் நான் எப்படி
பொறுப்பாக முடியும்
கவிதையில் பொய் சகஜம் தானே
சொல்லுங்கள் கவிஞர்களே இவளிடம்
வேண்டாம் வேண்டாம் நானே சொல்லிக் கொள்கிறேன்
அவளைப் பார்த்ததும் உங்கள் புனைசுருட்டு வேலை
எனக்கு எதிராக மாறிவிடக் கூடும்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
நீ போகும் இடமெல்லாம் உன்னை
நிலவாய் தொடர்ந்திடுவேன்
என்னைவிட்டு விலகமுடியா காற்றாய்
உன்னோடு கலந்திருப்பேன்
ஊற்றாய் என் அன்பை உன் மீது பொழிந்திடுவேன்
நகமும் சதையுமாய் எப்போதும் உன்னோடு சேர்ந்திருப்பேன்
இன்னும் எப்படி எல்லாம் இருந்தால்
உனக்கு பிடிக்கும் என்பதை நீயும்
கொஞ்சம் சொல்லேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
தொலைவில் இருந்து ரசித்து
கொள்கிறேன்
நீ பார்க்காது போனாலும் அது
பற்றி கவலையில்லை
என் காதல் ஒருதலைக் காதல்
என்று சொன்னாலும்
பரவாயில்லை என் காதல்
உண்மை
இங்கே காத்திருத்தல் இல்லை
எனவே
பொய்கள் இங்கே தேவையில்லை
பொய்கள் இல்லை அதனால்
ஏமற்றம் இல்லை
இங்கே வலிகள் இல்லை காதல்
மட்டுமே உண்மை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
என்னை அழகுபடுத்திக் கொள்ள
நிறைய நேரம் செலவழிக்கிறேன்
காசைப் பற்றி கணக்கு கேட்காதிர்
அதை
நான் கணக்கில் கொள்வதில்லை
என்னைப் பொறுத்தவரை நான்
அழகாகத் தெரிய வேண்டும்
என்னழகைக் காட்டும் கண்ணாடியை
நான் நம்புவதில்லை
என்னைப் பார்த்ததும் இன்று நீ மிக
அழகாய் இருக்கிறாய் என்று
என்னவன் சொல்லும் போது அடுத்த முறை இன்னும்
மெனக்கெட வேண்டும் என்று கணக்கு போடும்
மனதை நினைத்து எனக்குள் நான்
சிரித்துக் கொள்வேன்













