#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
எதிர் பாராத சில நிகழ்வுகள்
உன்னை சந்தித்தது போல
வாழ்க்கை யில் வாடிக்கை யான
ஒன்று என்று மறந்து விடுகிறது
கல்இடரி கால் கட்டைவிரல் நகம்
பெயர்ந்து
இரத்தம் வழிய தரும் வலியாய்
எதிர் பாரா தருணத்தில் உதரி
போன விலகல் தந்த வலி
கட்டைவிரல் காயம் ஆறிப்போகும்
விரைவில்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
என் மனதில் இருப்பதை மறைக்காமல்
சொல்லிவிட்டேன்
உன் மௌனம் என்னை குழப்புகிறது
ஆம் இல்லை என்ற இரண்டு வார்த்தைகளில்
எதேனும் ஒன்றை மட்டும் சொன்னால் போதும்
என் தவிப்பு நின்று போகும் வலியை
தராத
பதிலாக இருந்தால் மகிழ்வேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
வார்த்தைகள் உயிர் பெறுகிறது
உன்னை
மனதில் வைத்து எழுதும் போது
படிப்பவர்கள் கூட பரவசப்படுவதை
பார்க்கிறேன்
ஜடப் பொருள் கூட அழகாகிறது
கவிதையில் உவமையாக இடம்
பெறும்போது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
வாடினாலும் பூக்கள் எப்போதும்
நிறம் மாறுவதில்லை அது
மறைத்து வைத்திருக்கும் தேனோ
தேடினாலும் யார் கண்களுக்கும் தெரிவதில்லை ஆனால்
தேன் உண்ணும் வண்டுகளிடம்
அதன் ஜம்பம் பலிப்பதில்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உன் சந்திப்புக்கு பிறகு தான்
எனக்குள் மாற்றங்கள் யாரும்
சொல்லி வரவில்லை அதனால்
தானோ
உன்னை பார்த்துக் கொண்டே இருக்க தோனுது
நேரம் தவறினால் உன்னை
பார்க்க முடிவதில்லை
உனக்கென்று ஒருசில விதிகள்
இருப்பதால்
இருப்பினும் காத்திருந்து பார்க்க
நினைப்பதால்
காத்திருப்பு சுலபமானது உன்னை
பார்த்து விடுவோம் என்பதால்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
போனால் போகட்டும் என விட்டுவிட
ஜடப் பொருள் இல்லை உயிரோடு
உணர்வோடு
கலந்த பாசம் காட்டும் பைங்கிளியை
எப்படி விட்டு விட
என்னை விட்டுப் பறந்துபோனப்பின்
அன்று தோளில் சுமந்தேன் இன்று
நினைவில் சுமக்கிறேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
மேகத்தை விலக்கி எட்டிப் பார்த்து
சிரித்த நிலவு
நான் அழகா என ஒரு கேள்வி வைத்தது
அடடா நீ அழகென்று சொல்லி விட்டு
விட்டால் எப்படி
அழகிலும் அழகு பேரழகு என்றேன்
கவிதை யாய் இன்னும் ஒரு புன்னகை
சிந்தியது அழகாக
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
எல்லோருக்கும் அதிசயம் நிகழுமா
தெரியாது
எனக்கு நிகழ்ந்தது என்ன தெரியுமா
நான் உன்னை சந்தித்தது அதுதான்
இப்பொழுது என்னை வழி
நடத்துகிறது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
எதையோ சொல்லாமல் விட்டயோ
சரி இப்ப சொல் கேட்கிறேன்
இல்லை நீ சொன்னதை நான்
கவனிக்காமல் விட்டேனோ எதுவாக
இருந்தாலும்
பேசித்தீர்ப்போம் கோவம் வேண்டாம்
கொஞ்சும் கிளி அல்லவா நீ
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
என்னை பிடிக்கவில்லை என்று
நீ ஒதுக்கி வைக்கிறாய்
உன்னை பிடித்ததால் நான் ஒதுங்கி
நிற்கிறேன்
தொந்தரவாகிவிடக் கூடாதென நினைத்து
படித்து மகிழ மட்டும் இல்லை கவிதைகள்













