#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
அவன் செயல் அவன் மட்டுமே அறிந்த மகா ரகசியம்
அது எல்லோரும் காணும் படியான பேரதிசையம்
அழகை படைக்க ஆண்டவன் எப்படி
யோசிக்கிறான் என்று தெரியவில்லை
பட்டாம் பூச்சிகளின் சிறகில் அவன் தீட்டும்
வண்ணங்களை எப்படி முடிவு செய்கிறான்
பெரிய ஆச்சரியம் மட்டுமல்ல அதிசயமும் கூட
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
எதுவும் சிலகாலம் தான் மாறும்
மாற்றம் ஒன்றே மாறாதது என்று
சொல்லியதை
உண்மை என்றே நினைத்தேன்
உன் ஞாபகங்கள் அதை எனக்கு
பொய் என்று உணர்த்தியது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
மொட்டுகள் இதழ் விரித்து
சிரிக்கும் அழகாய்
வார்த்தைகள் உயிர் பெறும்
அதிசயம்
உன் அழகை சொன்னால்
மெய்யோடு உயிர் கலந்து
உயிர் மெய்யாகிறது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
மண்ணுக்குள் உறங்கிய விதை
கண் விழித்தது
போதும் உன் உறக்கம் என மழை
நீர் தெளித்து
எழுப்பிய காலதேவன் கட்டளைக்கு
கீழ்படிந்து
விழித்தெழுந்து சோம்பல் முறித்து
நிற்க
காதில் சொன்ன ரகசியம் தாங்கி
இலைவிட்டு
கிளை பரப்ப தயாரானது கவிதையாய்
இது நாள் வரை மண்ணில் உறங்கிய விதை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#அன்னையர்_தினம்
கொஞ்ச தூரம் நடந்து போக
வழியில் சிறிய
கல் என் கட்டைவிரல் நகத்தை
பெயர்த்தது
கண்களில் நீர் கோர்க்க
"அம்மா" என்று அலறினேன்
ஒருநாள் இரவில் திடீரென
குளிர் காய்ச்சல்
"அம்மா" "அம்மா" என்று
முனகினேன் போர்வைக்குள்
சுடச்சுட தோசையை தட்டில்
தொட்டதும் என்
"அம்மா" என் நினைவுக்கு வந்தாள்
இப்படி எங்கும் நிறைந்து
எனக்குள் பதிந்து போன
"அம்மா" வின்
பிள்ளையான எனக்கு இன்று
இரண்டு பிள்ளைகள்
அவர்களின் தகப்பன் நான்
#அன்னையர்_தின_வாழ்த்துகள்
அன்னையர்களுக்கு
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
நம்பினேன் கண்மூடித்தனமாக
உன் சொற்கள் வேதவாக்காகின
மறுப்பின்றி ஏற்றுக் கொண்டு
உன்னைத் தொடர்கிறேன் எப்படி வந்தது
நம்பிக்கை தெரியவில்லை என்னை
நானே கேட்டுக் கொள்கிறேன்
நீயோ அமைதியாக அரவணைத்து
கொள்கிறாய்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
எனக்குள் எப்படி வந்தாள்
என்னவெல்லாம் என்னிடம்
பேசினாள்
எங்கெல்லாம் என்னோடு
சுற்றினாள்
எல்லாமும் என் நினைவில்
இருப்பினும்
என்னை விட்டு ஏன் விலகினாள்
என்ற
காரணம் மட்டும் தெரியவில்லை
சரி போகட்டும் என கடந்து
போக முடியவில்லை
காரணம் அவளைத் தவிர
என் நினைவில் வேறெதுவும்
இல்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
அதோ ஒரு மேகம் அவசரமாக எங்கோ வேகமாக செல்கிறது
இரு இரு வருகிறேன் என பின் துரத்தும் மேகத்தை
திரும்பி கூட பாராமல் எங்கேப்போகிறது
சரி என்ன அவசரமோ அவசியமோ
தெரியவில்லை
நான் சொல்ல வந்ததை சொல்லாமல்
நின்று விட்டேன்
நான் சொல்லும் சேதி போய் சேருமா
என்ற சந்தேகத்தில்
என் சேதிக்காக காத்திருக்கும் கவிதை
ஏமாற்றத்துடன் நின்றிருப்பாள்
நான் என்ன செய்ய நிற்காமல் போகும் மேகக் கூட்டம்
எனக்கு உதவும் என்று நினைத்தேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
என்ன தேடுகிறாய் என் முகத்தில்
பாவங்களை சட்டென கிரகிக்கும்
உனக்கு
புரியவில்லையா இன்றைய என்
மனநிலை
திகையாதே உன்னிடம் கற்றதுதான்
விட்டுத்தள்ளு
நான் எப்பவும் போல சாதாரணமா கத்தான் இருக்கிறேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
வண்ண வண்ண உடை அணிந்து
பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி வலம் வந்தாலும்
மணக்கும் மலர்கள் இடம்பெயர்வது இல்லை ஆனாலும்
மலர்கள் மலடாவதில்லை பாட்டாம் பூச்சிகள்
உண்மையாய் காதலிப்பதால்













