#💖நீயே என் சந்தோசம்🥰 #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #💖நீயே என் சந்தோசம்🥰 #💑என் காதல் கணவா💞
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் வாய்மேடு ஊராட்சியில் ஏற்றப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடியினை திருடிச்சென்ற திருடர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டி கிளைத் தலைவர் V.செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னதாக கிளைச்செயலாளர் R.அறிவழகன் வரவேற்றார்.துணைத்தலைவர் T.விக்னேஷ் துணைச் செயலாளர் R.இராஜசேகரன் முன்னிலை வகிக்க மாவட்டத்தலைவர் M.ஜோதிபாசு ஒன்றியச்செயலாளர் C.பாலசுந்தரம் ஒன்றிய து.செயலாளர் A.லாடமுத்து வி.ச ஒன்றியச்செயலாளர் P.S.பன்னீர்செல்வம் DYFI-மு.ஒன்றியச்செயலாளர் A.வெற்றியழகன் வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் V.இளையபெருமாள் வி.ச ஒன்றியக்குழு N.கோபாலகிருஷ்ணன் K.குழந்தைவேலு மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் M.சுமதி ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் S.இராசகோபால் மாற்றுத்திறனாளிகள் சங்கம் V.வேதரெத்தினம், P.பொன்னுத்துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சகோதார அமைப்புகளின் நிர்வாகிகள் பிரதிநிதிகள் வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வாய்மேடு பவர்ஹவுஸ் பகுதியில் கண்காணிப்பு கேமராவும், உயர்கோபுர மின்விளக்கும் அமைத்திட கோரிக்கை வைக்கப்பட்டது. #📺அரசியல் 360🔴
விஜய்க்கு மறைமுக நெருக்கடி கொடுக்க நினைக்கிறதா ஒன்றிய அரசு ?
கந்தன் மலைக்கு தணிக்கைச் சான்று வழங்குவீர்கள் !
ஜனநாயகனுக்கு மறுப்பீர்களா ?
ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழை உடனே வழங்க வேண்டும்.
வாலிபர் சங்கம் வலியுறுத்தல் !
ஜனநாயகன் திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மத்திய தணிக்கை வாரியத்துக்கு தணிக்கைச் சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தணிக்கை வாரியம் 15 திருத்தங்கள் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அதை திரைப்படக்குழு தணிக்கை வாரியத்தின் பரிந்துரைகள் படி திருத்தங்களை செய்து மீண்டும் சமர்ப்பித்தாலும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இயக்குநரும் , தயாரிப்பாளரும் இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளனர்.
தணிக்கை வாரியம் கேட்ட திருத்தங்களைச் செய்த பிறகும் சிலர் வழங்கிய புகார்கள் காரணம் காட்டி சான்றிதழ் நிறுத்தப்பட்டது நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையின் துவக்கத்திலேயே ஏன் 9 ஆம் தேதியே தான் திரைப்படத்தை வெளியிட வேண்டுமா ? 10 ஆம் தேதி வெளியிட்டால் என்ன பிரச்சனை என கேட்டது பத்திரிக்கைகளில் செய்தியாக வந்தது. அதன் பின் நடந்த விசாரணைகளில் தணிக்கை வாரியம் யாரும் விரும்பும் நேரத்திற்குள் எல்லாம் தணிக்கை செய்து தர முடியாது , புகார் காரணத்தினால் மறு தணிக்கை செய்ய அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளனர்.
இது அரசியல் ரீதியில் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும் நிகழ்வைப் போல் இருக்கிறது. கந்தன் மலை போன்ற சமூக சீர்கேடான பிளவுவாத கருத்துகள் கொண்ட திரைப்படங்களுக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கும் தணிக்கை வாரியம் ஏன் “ ஜனநாயகன் “ திரைப்படத்தை முடக்க நினைக்கிறது என்ற கேள்வியை வாலிபர் சங்கம் எழுப்ப விரும்புகிறது. தனது அரசியல் வாழ்விற்கு முன்பாக தனது கடைசி திரைப்படம் என அறிவித்துள்ள விஜய் அவர்களுக்கு தணிக்கை வாரியம் கொடுக்கும் மரியாதை இது தானா ? என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவு அனைத்து குடிமக்களுக்குமான கருத்து மற்றும் கலை வெளிப்பாடுகளின் சுதந்திர உரிமையை பாதுகாக்கின்றது. அதனால் திரைப்படம் போன்ற கலை வடிவங்களும் இதன் கீழ் வருகின்றன.
மத்திய திரைப்படதொகுப்பு வாரியம் (CBFC) என்பது Cinematograph Act, 1952 இன் கீழ் விரும்பிய படைப்புக்களை மதிப்பாய்வு செய்து பொதுவில் காண்பிப்பதற்கான சான்றிதழ் வழங்குமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்தல் என்பது திரைப்படத்தோடு இருக்க வேண்டுமே அல்லாமல் அரசியல் தணிக்கையாக மாறிவிடக் கூடாது என சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
ஜனவரி 9 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என திரை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் , தற்போது இந்த திரைப்படக்குழு தொடர்ந்த வழக்கில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பினை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது அப்பட்டமாகவே விஜய் அவர்களை அடிபணிய வைப்பதற்கான முயற்சி தான் என்பது தெளிவாகிறது. இதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தணிக்கைகுழு சொல்லி படத்தில் 15 எடிட் செய்த பின்னும் U or u/A or A ஏதாவது ஒரு சான்று கொடுக்க வேண்டுமே தவிர மறுப்பது சரியா ?
உடனடித் தணிக்கையை மேற்கொண்டு 9 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை திரைப்படத் தணிக்கைத் துறை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். ஏற்கெனவே சுயேட்சையான நிர்வாக அமைப்புகளை தங்கள் அரசியல் வெறிக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசு , திரைப்படத் தணிக்கைத் துறையையும் அவ்வாறு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
செல்வராஜ்
மாநிலத் தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்
#ஜனநாயகன் #Jananaayagan #DYFI #📺அரசியல் 360🔴







