https://youtube.com/shorts/i2fwk-phBsE?si=14W4le4CvR7pHcGK #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
கேது எனும் பாம்பு... மனிதர்களுக்கு கூற வரும் கருத்து...
ஆத்மாவை உடல் எனும் போர்வையைக் கொண்டு மறைத்துள்ள மனித உடலினால் ஆன மனித பொம்மைகளின் மீது ...பற்று வைக்காதே.
மனித வாழ்க்கை எனும் பொம்மலாட்டத்தின் மீது ஆசை கொள்ளாதே.
மாயை எனும் நுட்பத்தினால் உண்டாக்கப்பட்ட மனித உடலின் தன்மையின் உண்மையை அறிய முயற்சி செய்.
அதாவது நான் என்பது என்ன.?நான் யார்.?
நான் என்பது உடலா மனமா
என்னிடம் இருக்கக்கூடிய அறிவா செல்வமா இது போன்ற கேள்விகளுடன் நான் யார்.? என்பதிலிருந்து தொடங்கு.
மனித வாழ்க்கையின் தன்மையையும் அதற்குள் ஒளிந்திருக்கும் உண்மையை அறி.
அதாவது
நான் எங்கிருந்து வந்தேன்
ஏன் இவர்களுடன் இருக்கிறேன்
தனியாக எங்கே செல்ல போகிறேன்
என்னுடைய இந்த வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன.
சுடாமல் தீயை உணர முடியாது .
படாமல் காயம் ஏற்படாது.
காயம் உண்டாகாமல் காயத்திற்கு மருந்து தேட முடியாது.
கேள்வி கேட்காமல் பதில் கிடைக்காது.
மனித உடலினாலும் மனித வாழ்க்கையினாலும் உண்டாக்கப்பட்ட மாயையின் தன்மையை அறி.
முதலில் நம்பு.
நம்பி கெடு.
நம்பாமல் கெடாதே.
நம்பி கெட்டால் தான்
மனித பொம்மைகளின் உண்மை நிலவரம் தெரியும்.
உண்மை தெரிந்தால் தான்
ஞானம் பெற முடியும்.
ஞானம் பிறந்தால் தான்
பித்து பிடித்தவனை போல அலைந்து சித்தம் தெளிந்து
இனியொரு பிறவி வேண்டாம்
மோட்சம் தான் வேண்டும்
என்கிற தீவிரமான சிந்தனையாலும் பயிற்சியாலும் முயற்சியாலும்.
ஆத்மாவை எல்லை இல்லாத முடிவற்ற பிரபஞ்சத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.
மனிதனின் உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆத்மாவை உன்னைத் தவிர யாராலும் உணர்ந்து கொள்ள முடியாது.
ஏனெனில்..
பட்டால் தான் பாடம். கெட்டால் தான் ஞானம். அதை...உணர்ந்தால்தான் மோட்சம்.
பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கே பரிசு என்பது போல..
ஞானத்தை முகர்ந்து உணர்ந்து பித்து பிடித்து பைத்தியம் தெளிந்து பக்குவம் அடைந்தவர்களுக்கே மோட்சம்.
என்னுடைய முந்தைய பதிவில்
ராகு மனிதர்களைப் பற்றி கூறும் கருத்து என்கிற தலைப்பில் எழுதி உளளேன்.
அதையும் படித்தீர்களேயானால்
ராகுவின் பாவத்துவமும்
கேதுவின் சுபத்துவமும்
புரியவரும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
சுய ஜாதகத்தில் ஒரு யோகம் இருந்து....
அதற்குரிய தசா புத்தி வரவில்லை எனில்
யோகம் இருந்தும் பலன் இல்லை..
என்பதை அறிவீர்கள்...
ஆனால் அதே சமயம்
ஜாதகத்தில் ஒரு யோகம் இருந்து..
அதே யோகம் கோச்சாரத்திலும் உண்டாகும் போது.
குறிப்பிட்ட நாள் மாதம் வரை
யோகத்தினால் ஜாதகர்
பயனடைவார்.
உதாரணமாக...
சுய ஜாதகத்தில்
கேளயோகம்
கோடீஸ்வர யோகம்
என்று குறிப்பிடக்கூடிய..
குரு கேது இணவு உள்ளவர்களுக்கு...
அவர்களுக்கு நடக்கக்கூடிய தசா புக்தியின் காரணமாக
தடைபட்டாலும்.
கோச்சார ரீதியாக
குரு கேது இணையும்போது
அதற்குரிய பலனை ஜாதகர் அடைவார்.
இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது ....
உங்களுடைய சுய ஜாதகத்தில் குரு கேது குறிப்பிட்ட டிகிரி இடைவெளி அளவுடன் இருப்பது அவசியம்.
மேலும் குரு உங்களுடைய லக்னத்திற்கு
சுப ஆதிபத்தியத்திற்கு உரியவராக இருப்பதும் அவசியம்.
சுருக்கமாக...
உங்களுடைய சுய ஜாதகத்தில்
குரு கேது நல்ல ஸ்தானங்களில் இணைவு பெற்று....
ஏதேனும் ஒரு காரணத்தினால் அதற்குரிய பலனை அனுபவிக்காதவர்கள்
கோச்சாரத்தில் மீண்டும் அதே இடத்தில் குரு கேது இணையும்போது
அதற்குரிய பலனை
ஜாதகருக்கு
தந்தே தீருவார்கள்.
மற்றபடி....
சுய ஜாதகத்தில் உள்ள மற்ற யோகங்கள் மூலமாக ஜாதகருக்கு பலன் கிடைக்க..
கோச்சாரத்தில் அதே இடத்தில்
யோகம்....சுபத்துவமாக உருவாகும் போது
நிச்சயமாக அதற்குரிய யோக பலனை குறிப்பிட்ட காலத்திற்கு
ஜாதகருக்கு கிடைக்கும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
லக்னாதிபதியும்
ராசி அதிபதியும்
அமானுஷ்ய கிரகங்களான
ராகு கேதுவிற்கு
நட்பு கிரகமாக
அமைந்துவிட்டால்.?
சகல கிரக
குணநலன்களை
பற்றியும்...
சகல கிரகத்தை
பற்றிய அறிவும்
தெளிவும்
புரிதலும்
ஏற்பட்டு...
சகல கிரகங்களையும்
சமமாக பாவித்து
அவர்கள் தரும்
இன்ப துன்பத்தை
மனதார
ஏற்றுக்கொண்டு
வாழக்கூடிய
பக்குவத்தை தரும்.
அது மட்டுமல்ல...
சகலகிரகங்களுடன்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
போட்டதை போல
உரிமையுடன் பழக வைக்கும்.
மேலும்..
அமானுஷ்ய விஷயங்கள் அனைத்திலும்..
ஒரு வித புரிதல் ஏற்படும்.
ராகுவிற்க்கான....
நட்பு கிரகங்கள்: சனி, சுக்கிரன் மற்றும் புதன்.
பகை கிரகங்கள்: சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய்.
சம கிரகங்கள்: குரு (வியாழன்).
கேதுவிற்க்கான....
நட்பு கிரகங்கள்: சனி, சுக்கிரன் மற்றும் செவ்வாய். (சில குறிப்புகளில் புதனும் நட்பாகக் கருதப்படுகிறது).
பகை கிரகங்கள்: சூரியன் மற்றும் சந்திரன்.
சம கிரகங்கள்: குரு மற்றும் புதன்.
என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
ஒருவருடைய ஜாதகம் எந்த நிலையில் இருந்தாலும் பெரும் செல்வம் சேரும் காலம் எப்போது.?
கோச்சார குரு,கோச்சார சுக்கிரன், கோச்சார பௌர்ணமி சந்திரன்..
ஆகிய மூன்று கிரகங்களின் பார்வையும்
உங்களுடைய லக்னத்திற்கு
2 ஆம் அதிபதி அல்லது 11 ஆம் அதிபதி. கோச்சாரத்தில் எங்கிருந்தாலும். மேலும் ராசிக்கு அது எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கிறதோ.
அங்கு ...இந்த மூன்று சுப கிரக பார்வைகளும் ஒருசேர விழும்போது...
அந்த பாவகத்தின் வழியே...
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
உங்களுக்கு தேவைப்பட்டாலும் தேவைப்படாவிட்டாலும்
உங்களுக்கு நடந்து கொண்டிருக்க கூடிய தசா புக்தி சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்
இந்த காலகட்டத்தில்...
அபரிமிதமான பண வரவும் தன லாபமும் குறிப்பிட்ட நாட்களுக்கு கிடைக்கும்..
குறிப்பாக அன்றைய நாள். சம்பத்து தாரையாக இருந்தால்.?
சம்பவம் உறுதியாகி
கூடுதல் பலத்துடன்
நிச்சயிக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட
பெருமளவு...
தனசேர்க்கையும் தன லாபமும் நிச்சயமாக உண்டாகும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
ராகு எனும் பாம்பு...மனிதனைப் பற்றி கூறும் கருத்து .....
இரண்டு கால் ஜந்துவை நம்பாதே.. ஏனெனில்..
பாம்பைப் பார்த்த அடுத்த நொடியில் அவர்கள் நம்மை கொல்ல துடிப்பது போல் அவர்களின் ஆசையை தூண்டி அவர்களை நம்ப வைத்து கழுத்தை அறு..
பெரும்பாலும்...அவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று நடிப்பவர்கள்.
எனவே உன் பங்கிற்கு நீயும் தள்ளிவிடு.
மாய வலையில் சிக்க வைத்து சிக்கியவர்களை வலையுடன் சேர்த்து மலை உச்சியில் இருந்து தூக்கிப் போட்டாலும் அங்கிருந்து பாறையில் மோதி கீழே விழுந்து மண்டை உடைந்தாலும். கடலுக்குள் நீந்துவதாகவே காண்பித்துக் கொள்வார்கள்.
ஏனெனில் என்னை விட அவர்களுக்கு ஏதோ ஒன்றில் பற்று ஆசை
மிக மிக அதிகம்.
எனவே நானும் அவர்களுக்கு ஒத்து ஊதுவது போல.. அனைத்திற்கும் ஆசைப்பட வைத்து... அதற்காக எதை வேண்டுமானாலும் செய்து... இறைவனை இறுகப்பற்றிக்கொண்டே அனைத்தையும் செய்வேன்.
அதேபோல...
அவர்களைப் பீடித்து
செய்யவும் வைப்பேன்.
இப்படிக்கு
பாம்பு என்கிற ராகு
அடுத்த பதிவில் கேது எனும் பாம்பு மனிதனைப் பற்றி கூறும் கருத்தை பார்ப்போம்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
#🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
சுய ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்து ராகு தசையும் நடந்துகொண்டிருந்து.கோச்சார ராகு எங்கிருந்தாலும் கோச்சார ராகுவிற்கு குரு பார்வை கிடைக்கும் போது ஜாதகருக்கு பெருமைகளும் புகழும் பல சேரும். ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சமுதாயத்தில் ஆளுமை மிக்க நபராக வலம் வருவார்கள்.
சுய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு இருந்து. ராகு தசையும் நடந்து கொண்டிருந்து..கோச்சார ராகு எங்கிருந்தாலும் கோச்சார ராகுவிற்கு குரு பார்வை கிடைக்கும் போது ஜாதகருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும் கல்வி நிலைகளில் மேன்மை ஏற்படும்..அசையா சொத்துக்கள் வாங்கும் நிலை ஏற்படும். மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் பல நிகழும்.
சுய ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்து. ராகு தசையும் நடந்து கொண்டிருந்து.. கோச்சார ராகு எங்கிருந்தாலும். கோச்சார ராகுவிற்கு குரு பார்வை கிடைக்கும்போது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். பெரிய முயற்சி எதுவும் செய்யாமலேயே வெற்றியும் மகிழ்ச்சியும் தனலாபமும் உண்டாகும். தந்தையுடைய அன்பும் ஆதரவும் பெருகும்.சொத்துக்களில் இருக்கக்கூடிய வில்லங்கங்கள் சட்ட சிக்கல்கள் சுமூகமாக தீரும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும். ஏற்கனவே வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அங்கு அவர்களுக்கு தேவைப்படக்கூடிய அனைத்து வசதிகளும். எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். உயர் கல்வி படிக்கக் கூடிய ஆசை சர்வசாதாரணமாக நிறைவேறும்.
சுருக்கமாக.. வெற்றியும் புகழும் மகிழ்ச்சியும் தன லாபமும் சொத்து சேர்க்கையும் உண்டாகி ..
குலதெய்வ அருளுடன்
வளமும் நலமும் சேரும்.
#✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் 1,5,9 க்கு உரியவராக இருந்து.
ஏழரைச்சனி காலத்தில் சனிக்கு குருவின் பார்வை கிடைக்கும் காலத்தில் திருமணம் நடப்பது வீடு கட்டுவது போன்ற சுப காரியமும் நிகழும்.
உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் 6,8,12 க்கு உரியவராக இருந்து.
அஷ்டமச்சனி காலத்தில் சனிக்கு குருவின் பார்வை கிடைக்கும் காலத்தில். விபரீத ராஜயோகமாக செயல்பட்டு அதன் மூலம்....வெளிநாட்டு வேலை வாய்ப்பு செய் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படுவதும் உண்டு.
#🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
இளமை இருந்தும்,,தனிமையும் வறுமையும் தரும் வலியை.
ஆயிரம் உறவுகள் இருந்தும் முதுமையும் நோயும் தரும் வலியை.
எதிரி கூட தர மாட்டார்.
அதேவேளை...
இளமையில் இருக்கும் அனைவரும் வறுமையில் வாடி விடுவதும் இல்லை.
முதுமையில் இருக்கும் அனைவருக்கும் நோயினால் பாதிப்பு உண்டாவதும் இல்லை.
அனைத்துமே ...
அவரவர் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக அமைப்பினாலும் ..அதற்குரிய தசாபுத்தி வழியாகவும் நிகழ்கிறது...
பொதுவாக....
ஒருவரின் ஜாதகத்தில்,,யோக அமைப்பில் பல கிரகங்கள் இருந்தாலும்...
அந்த கிரகத்திற்குரிய தசா புக்தி வராத பட்சத்தில்...
அது
அவயோக ஜாதகமே.
அதேபோல....
ஒருவரின் ஜாதகத்தில்,, அவயோக அமைப்பில் பல கிரகங்கள் இருந்தாலும்.
அதற்குரிய தசா புத்தி
வராமல் இருக்கும் பட்சத்தில்
அது
யோக ஜாதகமே.
மேலும்..
அளவற்ற செல்வத்தையும் பெயரையும் புகழையும் வாரி வழங்குவது மட்டும்
யோக ஜாதகம் அல்ல.
அதற்குரிய வயதும்
ஆரோக்கியமான உடலும்
பக்குவப்பட்ட மனதும்
இருக்க பெற்றவர்களுக்கு அது பயன்படக்கூடிய யோகமாக செயல்படுகிறது.
உதாரணமாக...
இளமை ததும்பும் வயதில்
பக்குவம் தரக்கூடிய கேது திசை நடப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
அதேபோல...
முதுமையான காலத்தில்
நாளில் திக்பலம் அடைந்த சுக்கிர திசை நடந்தும் ஆகப்போவது ஒன்றுமில்லை.
பொதுவாக....
எந்த வயதில் எந்த தசாபுத்தி வரவேண்டும் என்பதும் நம் கையில் இல்லை..
யாவும்....
இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ....
வினைக்கு ஏற்ற விளைவுகளே.,
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை












