நீங்கள் எந்த லக்னமாக இருந்தாலும்.
உங்களுடைய லக்னம் எந்த நிலையில் இருந்தாலும்.
அதாவது சுபத்துவமாகவோ பாவத்துவமாகவோ.?
உங்கள் லக்னாதிபதி எந்த நிலையில் இருந்தாலும்.
அதாவது சுபத்துவமாகவோ பாவத்துவமாகவோ.?
இருந்தாலும்...
உங்களுக்கு நடந்து கொண்டிருக்க கூடிய தசாநாதன்
எந்த நிலையில் உள்ளாரோ.?
அதன்படி..
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்...
அதன்படியே
நீங்கள் பயணிக்க
முடியும் என்பதால்...
அதன் வழியே உங்களுடைய பயணத்தை தொடர
முற்பட வேண்டும்...
உதாரணமாக....
லக்னத்தில் குரு அமர்ந்திருந்து லக்னாதிபதியின் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்.
உங்களுக்கு ராகு இரண்டில் அமர்ந்து திசை நடந்து கொண்டிருந்தால்...
பாவ வழிகளில் பணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான் அப்படி செய்ய மாட்டேன்
நான் மிகவும் நல்லவன்
என்று நீங்கள் பிடிவாதம்
கொண்டிருந்தால்..
அந்த ராகு திசை உங்களுக்கு மிகப்பெரிய துன்பத்தை ஏற்படுத்தும்.
அதேபோல உங்களுடைய லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்து.
சனி திசை நடந்து கொண்டிருந்தால்...
உழைப்பு உடற்பயிற்சி
போன்றவற்றில் ஈடுபட வேண்டும்..
எதிலும்
அதிக சுத்தத்தை
எதிர்பார்க்க கூடாது..
குறிப்பாக சொகுசு ஆடம்பரம் சோம்பேறித்தனத்தை
கைவிட்டு உழைப்பு உடற்பயிற்சிக்கு
முக்கியத்துவம் கொடுத்து முயற்சிக்க வேண்டும்...
அப்படி நான் இருக்க மாட்டேன்
என்னுடைய சுபாவம் அது கிடையாது
என்று இருந்தால்..
உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் அது துன்பத்தையே தரும்.
அதேபோல...
லக்னம் லக்னாதிபதி பாவத்துவம்
அடைந்திருந்து...
சுப ஸ்தானங்களில் அமர்ந்த
சுப கிரக தசா புத்தியின் போது..
நல்ல வழிகளிலேயே
வாழ்க்கையை
நகர்த்திக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாக...
லக்னம் லக்னதிபதி எந்த நிலையில் இருந்தாலும்..
தசை நடத்தக்கூடிய கிரகத்தின் வழியே சென்றால்
துன்பங்கள் இருக்காது.
இன்பமே சூழும்.
இந்த பதிவு
தோராயமான
புரிதலுக்கு மட்டுமே....
இதுவே இறுதி நிலை அல்ல.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78200 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள்
ராகு தான் காரணம்....
ஒரு தனிப்பட்ட நபரின்
வாழ்வில் நிகழக்கூடிய..
பொருளாதார உயர்வு
அதாவது..
சைக்கிள் டூவீலர் கார்
பங்களா எஸ்டேட் ..
உள்நாடு வெளிநாடுகளில் சொத்து போன்ற வகைகளில்
பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியின் மூலம்
சொத்து சேர்வதும்.
மற்றும்...
தான் வசிக்கும் தெருவில் கூட
யாருக்கும் தெரியாத நபராக இருக்கும் ஒருவரை...
உலகமே அன்னாந்து பார்க்கும் அளவிற்கு பிரபலப்படுத்தி...
தானே சற்றும் எதிர்பார்த்திடாத அனாயாசமான.... வகையில்
அசுர வளர்ச்சியை
தருவதும் ராகு தான்.
அதேபோல
நவீன உலகத்தின் அசுர வளர்ச்சிக்கும்
ராகு தான் காரணம்.
அதே சமயம்...
அசுர வீழ்ச்சிக்கும்.
ராகு தான் காரணம்.
ராகு நினைத்தால்...
ஒருவரை உச்சாணி கொம்பு வரை கொண்டு சென்று
ஒருவரை மகிழ்ச்சி
படுத்துவார்.
அதே நபரை
உச்சியில் இருந்து தள்ளிவிட்டு
ஒட்டுமொத்த மகிழ்ச்சியை தள்ளிவிட்டு...
பாடு பாடு என்று பாட தெரியாத ஒருவரை
பாடாய் படுத்தி.
படு....படு... என்று . துன்பத்தை
ஏற்படுத்தி விடுவார்.
இதற்கு காரணம்...
ராகு சுபத்துவம் பாவத்துவம் மட்டுமல்ல...
பொதுவாக ராகு
இரண்டு ஆதிபத்திய
வீடுகளின் பலன்களை
செய்யும்போதும்.
ராகுவிற்கு அடுத்து வரக்கூடிய
குரு தசை
சரியில்லாத பட்சத்திலும்.
லக்னாதிபதி வலுவில்லாத நிலையிலும்....
இது போன்று ராகு கொடுத்து கெடுத்து செல்வார்.
எனவே ராகு ஒருவருக்கு கொடுக்கும் நிலையில் இருந்து கொடுத்துக் கொண்டே இருந்தாலும்...
ராகுவின் இரு ஆதிபத்திய நிலைகளையும்.
லக்னாதிபதி வலுவினையும்.
அடுத்து வரக்கூடிய குரு தசா புத்தியின் தன்மையையும்
அறிந்து செயல்படும்போது
கெடு பலன்கள் பெருமளவு
குறைத்துக் கொள்வதற்கு
வாய்ப்புகள் உண்டு.
உங்கள் ஜாதக
நிலைபாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
கதை கதையாம் காரணமாம்.
இதனால் இது நடந்தது அதனால் அது நடந்தது
இவரால் இது நடந்தது
அவரால் அது நடந்தது
என்பதெல்லாம்
பிறர் மீது பழி போடக்கூடிய
தீய குணத்தினாலும்.
அல்லது
பிறரை பாராட்டக்கூடிய
நல்ல குணத்தினாலும்.
ஏற்படக்கூடிய
ஒருவித குருட்டு நம்பிக்கையின்
அடிப்படையிலும்..
சூழ்நிலையின் காரணமாக நம்ப வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே நிகழ்கிறது...
அனைத்துமே ....
அவனாலே...
அவன் மூலமே...
அவனால் மட்டுமே...
நடந்தது...
என்பது
இறைவன் மீதுள்ள
ஆழமான, உறுதியான ,
மாறாத , தீராத
நம்பிக்கையின் காரணமாக அமைகிறது.
அனைத்தும்
பிறப்பு ஜாதகத்தில்
உள்ள
கிரக அடைவின்படியும்.
தற்பொழுது ஜாதகருக்கு
நடந்து கொண்டிருக்க கூடிய
தசா புத்தியின் அடிப்படையிலும்.
தசாநாதன் ஜாதகத்தில்
இருக்கக்கூடிய அமைப்பிலும்.
தசாநாதன் கோச்சாரத்தில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்திலும்
ஒருவருக்கு ஒரு விஷயம்.
இறைவனின்
ஆசிர்வாதத்தின் படியும்.
இறைவனின் கட்டளைக்கு ஏற்றபடியும்.
அவரவர் ஊழ்வினையின் காரணத்தின் அடிப்படையிலும்.,
நடைபெறுகிறது.
என்பதை
ஜோதிடத்திலும் ஆன்மீகத்திலும்
ஆழமான
நம்பிக்கை
உள்ளவர்களின்
காரணமாக அமைகிறது.
இது இப்படி இருக்க..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில்..
அதாவது...
கதை கதையாம் காரணமாம்
என்கிற ரீதியில்...
அவரவர்
கதைக்கும்...
காரணத்திற்கும்...
ஏற்ற ...
தோரணத்தை...
வடிவமைத்துக் கொள்கிறார்கள்.
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள்
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628
#✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
#✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
உங்களுடைய அவ யோக தசா புத்தியிலும் அதிர்ஷ்டம் செழிப்பு மற்றும் பொருளாதார
மேன்மை ஏற்படும் காலம்..?
பொதுவாக
அவ யோகா தசா புத்தி என்றால்.?
சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை பெறாத ..
இயற்கை பாவ கிரகங்களின் தசா புத்தி.
அல்லது ...
இயற்கை சுப கிரகங்களாக இருந்தாலும்.!!
ஸ்தான பலம் பெறாமல்
பகை வீட்டில் அமர்ந்தும்
மறைவு ஸ்தானங்களில்
அமர்ந்தும்..
ராகு கேது உடன் கிரகணமாகி
சூரியனுடன் அஸ்தங்கதமாகி
நடைபெறக்கூடிய
தசா புத்தியே...
ஒரு கிரகம் இந்த நிலையில் இருந்து...
ஒருவருக்கு
அவயோகத் தசையாக செயல்பட்டாலும்...
இப்படிப்பட்ட தசா புத்தி
காலங்களிலும்..!!
மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், பொருளாதார மேன்மை,
நல்ல நல்ல வாய்ப்புகள், யோகங்கள், புகழ், வெற்றி,
வீடு வாகனம்,
சுப கரியங்கள்,
வேலை வாய்ப்புகள், தொழில் முன்னேற்றம்,
வியாபார வளர்ச்சி ...
போன்ற அனைத்து
நல்ல பலன்களை அனுபவிப்பதற்கு..
உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய
அவயோக தசா புத்திக்குறிய கிரகம் .
கோச்சாரத்தில்.....
உங்களுடைய
சுய ஜாதகத்தில் உள்ள லக்னத்திற்கு
பாக்கியாதிபதியின் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலமே அது.
இதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உண்டு...
உங்களுடைய பாக்கிய அதிபதி
உங்களுடைய ஜாதகத்தில்
கெடாமல் இருக்க வேண்டும்.
ஒருவேளை அது இயற்கை பாவ கிரகமாக இருந்தால்
சுப கிரகத்துடன் இணைந்தோ அல்லது சுப கிரக பார்வையை பெற்றிருந்தோ இருக்க வேண்டும்.
இது போன்று இருக்கும் பட்சத்தில்....
இந்த காலகட்டத்தை
பயன்படுத்திக் கொண்டு....
கேள்விக்குறியோடு
நகர்ந்து கொண்டு
செல்லும் வாழ்க்கையை.?
ஆச்சரியக்குறியோடு பயணிக்கலாம்.!!
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628
#astrologypredictions2026
#jayakannanastrologer
#AstrologyTips
#followersシ゚ #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள்
ராகு சனி போன்ற இயற்கை
பாவ கிரக திசையிலும்
லட்சாதிபதி ஆகலாம்.
ஞான காரகன்
கேது திசையிலும்
கோடீஸ்வரனாகலாம்.
குரு சுக்கிர திசையிலும்
குபேரனாகலாம்.
இவை அனைத்துமே
ஒருவருடைய ஜாதகத்தில்...
ஒரு கிரகம்
அவரவர்
லக்னத்திற்க்கு...
மேற்கண்ட
அதற்குரிய கிரகம்...
ஸ்தான பலத்திலோ.?
நட்பு வீட்டிலோ.?
கச்சிதமாக அமர்ந்திருக்க...
லக்னத்திற்கு யோகத்தைச் செய்யக்கூடிய கிரகத்துடன்
சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருக்க.!!
கூடவே வீடு கொடுத்தவனும் வலுத்திருக்க.!!
குறிப்பாக
அதற்குரிய கிரகத்தின்
தசா புக்தி காலகட்டத்தில்
சாத்தியமாகிறது.
இதனுடன் ....
மேலும்
லக்னாதிபதியும்
இரண்டாம் அதிபதியும்
பதினோராம் அதிபதியும்
தனகாரக கிரகமான குருபகவானும்
ஆடம்பரம் சொகுசு காமத்திற்க்கு
காரக கிரகமன சுக்கிரனும்
கெடாமல் இருக்க...
செல்வத்துடன் மகிழ்ச்சியும்
கிடைக்கப்பெற்று
மேலும் அதை அனுபவிக்கவும் செய்து
குறிப்பாக ..
இவை அனைத்தையும்
நிரந்தரமாக தக்க
வைத்துக் கொள்ளவும் முடியும்
என்பதால்...
ஜாதகருக்கு
லட்சம் கோடி குபேரசம்பத்து
என....
இவை அனைத்தும் கிடைக்கப்பெற்று
சகல சௌக்கியத்துடனான
வாழ்க்கையை வாழ்வதும்.
சாத்தியமே...
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா.!!
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது.!!
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள்
ஒரே குடும்பத்தில் பலருக்கு ஒரே நேரத்தில் ...
இயற்கை சுபகிரக திசைகள்
நடந்தால்..
அதாவது.
(குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன்) போன்ற கிரகத்தின் தசா புத்தி நடந்தால், அந்த குடும்பம்....
ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய எழுச்சியையும் மகிழ்ச்சியையும் சந்திக்கும்.
இதன் முக்கிய பலன்கள் பின்வருமாறு:
கூட்டு முன்னேற்றம்
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் துறையில் (வேலை, கல்வி, தொழில்) தனித்தனியாக வெற்றி பெறுவதால், ..
குடும்பத்தின் பொருளாதார நிலை மிக விரைவாக உயரும்.
மங்கல காரியங்கள்....
அதாவது..
வீடு கட்டுதல், திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தடையின்றி நடைபெறும்.
சுபகிரகங்களின் ஆதிக்கம் இருப்பதால், குடும்ப உறுப்பினர்களிடையே பகை நீங்கி, விட்டுக்கொடுக்கும் தன்மையும் அன்பும்
மன ஒற்றுமையும்
அதிகரிக்கும்.
குறிப்பாகச் சுக்கிர திசை பலருக்கு நடக்கும்போது, ஆடை ஆபரணச் சேர்க்கை மற்றும் ஆடம்பர வசதிகளோடு கூடிய
லட்சுமி கடாட்சமும்
பெருகும்.
குரு தசை போன்ற சுப திசைகள் நடக்கும்போது, குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்லுதல் மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல்
திருமணம் நடைபெறுதல்
குழந்தை பிறப்பது
போன்ற மங்களகரமான நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறும்.
எனினும் இதில்
கவனிக்க வேண்டியவை:
இயற்கை சுப கிரகங்களாக இருந்தாலும், அவை அந்தந்த நபரின் லக்னத்திற்கு பாவி ஆகவோ அல்லது 6, 8, 12 ஆகிய மறைவு வீடுகளில் இருந்தோ தசை நடத்தினால், பலன்கள் சற்று குறையவும் முற்றிலும் மாறுபடவும் வாய்ப்புண்டு..
எனினும்,...
அசுப கிரக திசைகள் அதாவது.... (ராகு, சனி போன்ற)
தசா புத்திகள் ஒரு குடும்பத்தில்
பலருக்கு நடக்கும்போது ஏற்படும் பாதிப்புகளை விட,
சுப கிரக திசைகள்
பெரிய தீமையை செய்து விடாது
அவற்றுடன் இதை
ஒப்பிட்டுப் பார்க்கையில்...
சுப கிரகங்களின் தசா புக்தி
நன்மையே பயக்கும்....
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்









