Jayakannan
ShareChat
click to see wallet page
@2687067730
2687067730
Jayakannan
@2687067730
I Love Sharechat :)
#🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:15
வாய்ப்புகளும் கிரகங்களும் .. இல்லாத வாய்ப்புகளை உருவாக்க தெரிந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். வந்திருக்கும் வாய்ப்பு கூட தெரியாதவர்கள் சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். வந்த வாய்ப்பையும் கெடுத்துக் கொள்பவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். வந்திருக்கக் கூடிய வாய்ப்பை பயன்படுத்து வதற்கும் வராத வாய்ப்பிற்காகவும் அவசரப் படுபவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். வந்திருக்கக் கூடிய வாய்ப்பின் தரத்தையும் வாய்ப்பு வராத பட்சத்தில் அதன் காரணத்தை சீர்தூக்கிப் பார்க்கத் தெரிந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். சரி தவறு என்கிற ஆராய்ச்சியில் இறங்காமல் வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்துபவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். ஒரு வாய்ப்பை பயன்படுத்து வதற்கு ஆயிரம் முறை குழம்பி அடுத்தவர் களையும் குழப்பி தீர யோசித்து தன்னிச்சையாக செயல்படு பவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். மகிழ்ச்சியை தரக்கூடிய எந்த ஒரு வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்பவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். தங்களுடைய கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்காத எந்த ஒரு நல்ல வாய்ப்புகளையும் சரியான வாய்ப்புகளையும் மட்டுமே பயன்படுத்து பவர்கள் குரு பகவானின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Astrologer JayaKannan Call or WhatsApp 7810022628 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ சுக்கிரன் கேது குரு சேர்க்கை..... சுக்கிரனை தாண்டிய நிலையில் கேது இருந்து ... கேதுவை தாண்டிய நிலையில் குரு இருந்து.? கேது தசை நடக்கும் ஜாதகருக்கு.. கேது தசையில் அபரிமிதமான செல்வத்தையும்... கேதுவிற்கு அடுத்து வரக்கூடிய சுக்கிர திசையில் .... சுக்கிரனின் ஆதிபத்திய காரகத்துவ வழிகளில். அபரிமிதமான துன்பத்தையும் தரும். எனவே... இந்த அமைப்பில் உள்ளவர்கள் கேது திசையின் மூலமாக கிடைக்கக்கூடிய செல்வத்தினால் மயங்கி கிடக்காமல்... அடுத்து வரக்கூடிய சுக்கிர திசை தரக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு உண்டான உபாயத்தையும் முன்னெச்சரிக்கையும் அறிந்து செயல்படும்போது சுக்கிர திசையில் உண்டாகக்கூடிய பாதிப்புகள் மிக மிக குறையும். பொதுவாக கேதுவிற்கு முன்னும் பின்னும் இருக்கக் கூடிய கிரகங்கள் எதுவாயினும்... கேதுவிற்கு முன் இருக்கக்கூடிய கிரகத்தின் தசா புக்தியில் கவனத்துடனும் சுதாரிப்புடனும் விழிப்புடனும் இருப்பதைப் பற்றி முன்னுரை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 22628
🚹உளவியல் சிந்தனை - ShareChat
உடல் முழுவதும் எண்ணெயை தடவி தரையில் படுத்து உருண்டாலும் ஒட்டுகிற மண் தான் உடலில் ஒட்டும். அதுபோல.... உங்களிடம் எவ்வளவோ திறமைகள் இருந்தாலும்.. அதற்குரிய நேரம் காலம் வரும் போது மட்டுமே நீங்கள் அங்கீகரிக்கப்படுவீர்கள்.. பல நல்ல வாய்ப்புகள் வாசல் தேடி வந்தாலும்... ஜாதகத்தில் யோகம் இல்லாதவர்கள் வந்திருக்கிற வாய்ப்புக்களையே வாய்ப்புக்காக வாசலில் காக்க வைத்து விடுவார்கள். ஜாதகத்தில் யோகங்கள் கொட்டிக் கிடந்தாலும்... சாதிப்பதற்கு உலகம் முழுவதும் வாய்ப்பு தேடி அலைந்தாலும்.... அதற்குரிய தசா புத்தி வரும்போது மட்டுமே யோகங்கள் முழு வடிவம் பெற்று... அதற்குரிய யோக பலன்கள் ஜாதகரிடம் வந்து சேரும்... அதுவரை பொறுமை நிதானம் அமைதி அவசியம்... பொதுவாக பொறுமையாக இருப்பதால்... கணவன் மனைவி இருவருக்கும் ஒரே தசா புத்தி அதாவது தசாசந்தியின் மூலம் அவதிப்படுபவர்களுக்கும் விமோசனம் கிடைக்கும்... ஏனெனில்.. கணவன் மனைவிக்கு ஒரே தசா புக்தியாக இருந்தாலும்.. சூரிய சந்திரனை தவிர மற்ற கிரகங்களுக்கு இருவேறு ஆதி பத்தியம் என்பதாலும்... கணவன் மனைவி இருவருடைய லக்னத்திற்கும்.. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஏதேனும் ஒரு ஆதிபத்தியம் நிச்சயமாக நன்மையை தரும் என்பதால் அதுவரை பொறுமையை கடைபிடித்தால் யாராக இருந்தாலும் பெருமை தானாக தேடி வரும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 226 28 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️
🚹உளவியல் சிந்தனை - Fellow M evaNadam CUev Copyright 0 DevaNadam Fellow M evaNadam CUev Copyright 0 DevaNadam - ShareChat
ஒரு விஷயத்தை உருவாக்குவது கடினம் அளிப்பது சுலபம். என்கிற அடிப்படையில்.. ஒருவருக்கு சுபத்துவத்தின் சுப பலன் நடக்க.... அதற்குரிய யோகங்கள் கூடி வர... கால தாமதமாகும். ஆனால் பாவத்துவத்தின் அசுபபலன் நடக்க.... காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதற்குரிய பலன் கிடைக்கும்.. உதாரணமாக... திருமண பந்தத்தில் சுபத்துவத்தின் மூலம் இருவர் இணைய ... காலதாமதம் ஆகவே செய்யும். இதுவே... பாவத்துவத்தின் மூலம் இருவர் இணைய... காலம் தாழ்த்தாமல் உடனடியாக இணைத்து வைக்கத் துடிக்கும்... அதன் பிறகு... கண்மூடி கண் திறப்பதற்குள் திருமணம் உட்பட அனைத்தையும் நடத்தி முடித்து வைக்கும்.. பொதுவாக... பாவத்துவத்தின் பலன் திருமணத்திற்கு மட்டுமல்ல தொழில் தொடங்குவது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது என்று அனைத்து முக்கியமான விஷயங்கள் வாயிலாக வேகவேகமாக செயல்பட்டு வாழ்க்கையையே பணயம் வைக்கும்படியாக ஆக்கி விட்டுச் செல்லும். சுருக்கமாக சுபத்துவத்தின் பொறுமை காத்திருப்பு போன்ற விஷயங்கள் பாவத்துவத்திற்கு தெரியாது அவசர அவசரமாக தேரை இழுத்து தெருவில் விடவே பார்க்கும்.. எனவேதான் முன்னோர்கள் பொறுமை கடலினும் பெரிது என்று கூறியுள்ளார்கள்.. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - ShareChat
லக்னத்தில் கேது உள்ளவர்களுக்கு... ஏன் தனிமை பிடித்துப் போகிறது. ஏன் துறவறத்தின் மீது ஆசை ஏற்படுகிறது. ஏன் சாமியாராக போவதில் ஆர்வம் ஏற்படுகிறது. ஏனெனில்... இவர்களுக்காக ஆசைப்பட்ட எதுவும் இவர்களுக்கு கிடைக்காததால். மற்றவர்களுக்காக உழைத்த இவர்களை அந்த மற்றவர்கள் ஒதுக்கியதற்காக. அதாவது.,. இவர்களுக்கு இருக்கக்கூடிய நல்ல குணநலன்களை அந்த மற்றவர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டு இவர்களை மறந்து விடுவது மட்டுமல்லாமல்... இவர்களுக்கு ஒரு விதமான அவப்பெயரை ஏற்படுத்தி இவர்களை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய முக்கிய காரணம். அதைவிட முக்கிய காரணம். அந்த மற்றவர்கள் மற்றவர்களாக இருந்தால் பரவாயில்லை. தாய் தகப்பன் சகோதரன் சகோதரி மனைவி மக்கள் என்று இருப்பதால்... வாழ்வில் வெறுமை ஏற்பட்டு யாருக்காக வாழ வேண்டும் யாருக்காக உழைக்க வேண்டும் யாருக்காக பணம் சம்பாதிக்க வேண்டும். யாருக்காக சொத்து சேர்க்க வேண்டும். என்கிற நீண்ட கேள்விகளுடன்... மேலே சொன்ன இந்த சிந்தனைகள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பாய் வந்துவிடுகிறது. பொதுவாக.... லக்னத்தில் கேது இல்லாத ஒரு சில நபர்களுக்கும் ..... இது போன்ற எண்ணம் வந்தாலும். லக்னத்தில் கேது உள்ளவர்களுக்கு இதுபோன்ற எண்ணம் வருவதற்குண்டான காரணம். இவர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலைகள்..... அதிகப்படியாகவே வரும். ..... இதற்கு..... ஜோதிட ரீதியான காரணம். கேது இருக்கும் பாவகத்தின் மீது நாம் அதிகம் பற்று வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அதில் தடையை ஏற்படுத்தி தலைகுனிவையும் ஏற்படுத்தி தன்னம்பிக்கையை இழக்க வைத்து தவிப்புகளை தந்து. தனிமையை நாடி ஓட வைப்பார். தனிமையில் வாழ ஆர்வத்தை தூண்டுவார். லக்னத்தில் கேது உள்ளவர்கள் இயல்பாய் வாழ என்ன செய்ய வேண்டும்.? தங்களுடைய வாழ்வில் எது நடந்தாலும் பரவாயில்லை. என்கிற .... இறை இயல்புடைய வாழ்வை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் கண்ணன் Call or WhatsApp 78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - ShareChat
மிகவும் சிரமப்பட்டு உயரத்தை அடைந்தவர்களும் உண்டு.. சிரமப்படாமல் உயரத்தை அடைந்தவர்களும் உண்டு.. எது எப்படி இருந்தாலும்... அடைந்த உயரத்தை.. தக்க வைத்துக் கொள்வது என்பது... யாராக இருந்தாலும்.. மிக மிக சிரமம்... அதையும் மீறி ஒருவர் தான் அடைந்த உயரத்தை தக்க வைத்துக் கொள்கிறார் என்றால்.!! அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு... அதாவது... லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பது.. தொடர்ந்து யோக தசாபுத்திகள் நடப்பது... பெரும்பாலான கிரகங்கள் புஷ்கர நவாம்ச நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது... நவாம்சத்தில் பெரும்பாலான கிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் இருப்பது.... லக்னத்திற்கு நன்மை செய்யாத கிரகமாக இருந்தாலும் ராசிக்கு நன்மை செய்யக்கூடிய கிரகமாக அமைந்து தசை நடப்பது.. லக்னத்திற்கு நன்மை செய்யாத கிரகத்தின் தசையாக இருந்தாலும் பாவத் பாவக அமைப்பில் நன்மை பெறுவது.. சாதாரண நன்மைகளை மட்டுமே செய்யக்கூடிய கிரகமாக இருந்து நீச்சபங்க ராஜ யோகத்தில் இருந்து தசை நடப்பது. மறைவு ஸ்தானங்களின் தசையாக இருந்தாலும் சுபத்துவத்தினாலும் பரிவர்த்தனையினாலும் விபரீத ராஜ யோக தசையாக அமைந்துவிடுவது. இது போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும்... அதில் குறிப்பாக... இறைவனின் அருள் முன்னோர்களின் ஆசிர்வாதம் தந்தையின் ஆசி... அதிர்ஷ்டம் ... பாக்கியம்... என்று அழைக்கக்கூடிய ... பாக்யாதிபதியான ஒன்பதாம் அதிபதி .... ஏதேனும் ஒரு வகையில் லக்னாதிபதியுடனும் லக்னத்துடனும் தொடர்பு பெற்று இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் .... தன்னுடைய அதாவது தான் அடைந்த உயரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளக்கூடிய அதிர்ஷ்டத்தையும் இறை அருளையும் பெற்றவராகிறார். லக்னாதிபதியுடனும் லக்னத்துடனும் தொடர்பு பெற்ற அந்த பாக்கியாதிபதி....!!! செவ்வாயாக இருந்தால்.? வேகம் சுறுசுறுப்பு மூலம் அதிர்ஷ்டத்தை தருவார். சுக்கிரனாக இருந்தால்.? அழகு மற்றும் கலை பொழுதுபோக்கு விஷயங்களின் மூலம் அதிர்ஷ்டத்தை தருவார். புதனாக இருந்தால்.? கல்வியறிவு எழுத்தறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம் அதிர்ஷ்டத்தை தருவார். சந்திரனாக இருந்தால்.? அன்பு கருணை மற்றும் தன்னலமில்லாத சேவையின் மூலம் அதிர்ஷ்டத்தை தருவார். சூரியனாக இருந்தால்.? அதிகாரம் ஆளுமையின் மூலம் அதிர்ஷ்டத்தை தருவார். குருவாக இருந்தால்.? சுய ஒழுக்கத்தின் தெளிந்த அறிவு ஆன்மீகம் மூலம் அதிர்ஷ்டத்தை தருவார். சனியாக இருந்தால்.? எளிமை உழைப்பு நேர்மை மக்கள் நலனில் அக்கரை மக்களின் தொடர் ஆதரவு ஆகியவற்றின் மூலம் அதிர்ஷ்டத்தை தருவார். பொதுவாக பாக்யாதிபதி என்பவர்... இயற்கை பாவ கிரகமாக இருந்தால்....? சுப கிரக பார்வை சுப கிரக சேர்க்கை பெற்று அதன்பின்.... லக்னத்துடனும் லக்னாதிபதியுடனும் தொடர்பு பெற்று இருப்பது அவசியம்.. என்பது குறிப்பிடத்தக்கது... உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️
🚹உளவியல் சிந்தனை - ShareChat
மாட்டு தொழுவத்தில் மாடு தின்பதற்கு இருக்கக்கூடிய வைக்கோலை போல ... வீடு முழுவதும் பணம் கொட்டி கிடந்தாலும்... அருகில் அமர்ந்து ஆத்மார்த்தமாக உரையாடுவதற்கு ஒருவரும் இல்லாமல் பணத்தைக் காக்கும் வாட்ச்மேனாக வைத்திருக்கக்கூடும். கீழே விழுந்த பணத்தை எடுக்க நேரமில்லாமல். பிசியான நபராக மாற்றி ... பீரோவில் பணத்தை வைக்க இடமில்லாமல்... எந்த இடத்தில் பணத்தை வைக்கலாம் என்று யோசிக்கும் அளவிற்கு... கோடிக்கணக்கான பண வருவாயை தரும். சிறு துளி பெருவெள்ளம் ஆவது போல... சிறிய கடனாக ஆரம்பித்து.. டாப் அப் முறையில் ஒன்றன்பின் ஒன்றாக கடன் வாங்க வைத்து பெருங்கடனாக மாறி மிகப்பெரிய கடன்காரராகவும் ஆக்கிவிடும்.. இதுபோன்று மூன்று வித பலன்களில் ஏதேனும் ஒன்று.... குரு கேது இணைவினால் மட்டுமின்றி... குரு கேது இருக்கும் டிகிரி அமைப்பினாலும்... சுப ஆதிபத்தியம் அசுப ஆதிபத்தியத்தை பொருத்தும் மாறுபடும்.. மேலும் சுருக்கமாக.. இவர்களின் சுபத்துவ பாவத்துவ அமைப்பை பொருத்து... மூன்றில் ஏதேனும் ஒரு பலன் நிச்சயமாக உண்டாகும்.... என்றாலும்... குறிப்பாக... பணத்தை மிதித்து பணத்தை தங்க விடாமல் ஆக்கிக் கொள்வதும். பணத்தை மதித்து பணத்தை தக்கவைத்து ஜாதகரோடு கூடவே தங்க வைத்துக்கொள்வதும்... லக்னாதிபதியின் வலுவை பொறுத்தும்.. லக்னம் லக்னாதிபதியின் சுபத்துவ பாவத்துவ அமைப்பின்படியும் அமையும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️
🚹உளவியல் சிந்தனை - ShareChat