நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp #📺வைரல் தகவல்🤩
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
சர் வின்சென்ட் விகில்ஸ்வொர்த்
👉 1899ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பூச்சியினங்கள் குறித்த பல அரிய உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறிய சர் வின்சென்ட் விகில்ஸ்வொர்த் (Sir Vincent Wigglesworth) இங்கிலாந்தில் பிறந்தார்.
👉 இவர் பூச்சியியலராகவும், ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியராகவும் அறியப்படுகிறார். லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1964-ல் இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.
👉 1939-ல் இவர் எழுதிய 'தி பிரின்சிபல்ஸ் ஆஃப் இன்செக்ட் ஃபிசியாலஜி' (The Principles Of Insect Physiology) என்ற நூல் அத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இன்றியமையாத நூலாக கருதப்படுகிறது.
👉 இவர் பிப்ரவரி 11ஆம் தேதி 1994ஆம் ஆண்டு மறைந்தார்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/XOqGPp
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp #⚡ஷேர்சாட் அப்டேட்
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
ஸ்ரீமாவோ ரத்வத்தே டயஸ் பண்டாரநாயகே
👉 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ ரத்வத்தே டயஸ் பண்டாரநாயகே (Sirima Ratwatte Dias Bandaranaike) இலங்கையில் பிறந்தார்.
👉 இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர்.
👉 இவர் அக்டோம்பர் 10ஆம் தேதி 2000ஆம் ஆண்டு மறைந்தார்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/XOqGPp
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp #📺வைரல் தகவல்🤩
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
தீரன் சின்னமலை
👉 இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai) 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.
👉 இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.
👉 வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அப்போதிலிருந்து, 'சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.
👉 இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
👉 இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை 1805ஆம் ஆண்டு மறைந்தார்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/XOqGPp
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp #⚡ஷேர்சாட் அப்டேட்
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
சர்வதேச ஹைக்கூ கவிதை தினம்.!
👉 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி சர்வதேச ஹைக்கூ கவிதை தினம் அனுசரிக்கப்படுகிறது.
👉 இது ஹைக்கூ அறக்கட்டளையின் ஒரு முன்னெடுப்பாகும். ஹைக்கூ என்பது ஜப்பானியக் கவிதைகளின் ஒரு பண்டைய வடிவமாகும். இது மூன்று வரிகளைக் கொண்டுள்ளது.
👉 ஹைக்கூ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/XOqGPp
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp #📺வைரல் தகவல்🤩
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
உலக இரத்தம் உறையாமை தினம்.!
👉 உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக இரத்தம் உறையாமை தினம் ஏப்ரல் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
👉 மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது.
👉 இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருக்கும். இரத்தம் உறையாது.
👉 இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/XOqGPp
ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal
அருமையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி!!

தற்போது காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் அத்தகைய ஓட்ஸை எப்போதும் பாலுடன் சேர்த்து தான் சாப்பிடுவார;கள். ஆனால் அந்த ஓட்ஸை பலவாறு செய்து சாப்பிடலாம். இதில் காய்கள் சேர்த்து செய்வதால், இது இன்னும் ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும். இப்போது அந்த அருமையான வெஜிடபிள் ரொட்டியை எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
ஓட்ஸ் - 1 கப் (பொடி செய்தது)
கடலை மாவு - 3ஃ4 கப்
கேரட் - 1 (துருவியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பு+ன்
கொத்தமல்லிதழை - 3 டீஸ்பு+ன் (பொடியாக நறுக்கியது)
மல்லி தூள் - 1 டீஸ்பு+ன்
சீரகப் பொடி - 1 டீஸ்பு+ன்
மிளகாய் தூள் - 1ஃ2 டீஸ்பு+ன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1ஃ2 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
🍞 முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர்த்து, கோதுமை மாவு, ஓட்ஸ். கடலை மாவு, கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் பேஸ்ட், கொத்தமல்லிதழை, மல்லி தூள், சீரகப் பொடி, மிளகாய் தூள், உப்பு, தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவையை மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
🍞 பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்.
🍞 பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி தயார்!!!
#⚡ஷேர்சாட் அப்டேட்
வித்தியாசமான காஞ்சிபுரம் இட்லி !!

இட்லியில் எத்தனையோ வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் இட்லி. இந்த இட்லி மிகவும் ஆரோக்கியமானது, அதே சமயம் மிகுந்த சுவையுடையது. இது காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இங்கு அந்த வித்தியாசமான காஞ்சிபுரம் இட்லியை எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1ஃ2 கப்
கடலைப் பருப்பு - 1ஃ2 டீஸ்பு+ன்
தயிர் - 1 கப்
முந்திரி - 100 கிராம்
பச்சை மிளகாய - 3 (நறுக்கியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
இஞ்சி - 1 டீஸ்பு+ன் (நறுக்கியது)
மிளகுத் தூள் - 1ஃ2 டீஸ்பு+ன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பபிலை - சிறிது
நெய் - தேவையான அளவு
செய்முறை :
🍚 முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் கடலைப் பருப்பையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, கிரைண்டரில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
🍚 பின்பு அதனை 6 - 8 மணிநேரம் மாவைப் புளிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் தயிர், முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, மிளகு தூள், கறிவேப்பிலை, நெய், உப்பு மற்றும் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
🍚 இறுதியில் அந்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்தால், காஞ்சிபுரம் இட்லி தயார்!!!
#⚡ஷேர்சாட் அப்டேட்
#⚡ஷேர்சாட் அப்டேட் கிணற்று தவளை

🌟 ஒரு ஏரியில் ஒரு தவளை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வந்தது. மழை அதிகம் பெய்ததால் ஏரி நிறைந்து வழிந்தது. அந்த ஏரியில் நிறைந்திருந்த நீரானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. குளிரைத்தாங்கமுடியாத தவளை அருகில் இருந்த கிணற்றுக்கு சென்றது.
🌟 ஏனெனில் கிணற்று நீர் வெதுவெதுப்பாக இருக்கும் என்று நினைத்து கிணற்றுக்குள் குதித்தது. அந்த கிணற்றில் பல காலமாக ஒரு பெரிய தவளை வாழ்ந்து வந்தது. அந்த தவறை இந்த ஏரி தவளையை வரவேற்று நன்கு உபசரித்தது. ஆனால் அந்த கிணற்றுக்குள் இருந்த மற்ற தவளைகளுக்கு இந்த ஏரித்தவளையைப் பிடிக்கவில்லை.
🌟 அதனால் ஏரித்தவளையை கிணற்றில் இருந்த மற்ற தவளைகள் விரட்ட முடிவு செய்தன. ஏரித்தவளையும், கிணற்றில் இருந்த பெரிய தவளையும் பேசிக் கொண்டிருப்பதை மற்ற தவளைகள் பார்த்துக் கொண்டிருந்தன. அப்போது கிணற்று தவளை, ஏரி தவளையிடம் நண்பா! நீ இவ்வளவு நாட்களாக எங்கு தங்கியிருந்தாய் என்று கேட்டது.
🌟 அதற்கு ஏரி தவளை, நான் ஒரு பெரிய ஏரியில் தங்கி இருந்தேன் என்றது. ஏரியா? அப்படி என்றால் என்ன என்று கேட்டது கிணற்று தவளை. அதற்கு ஏரி தவளை, இந்த கிணற்றைப் போன்ற ஒரு பெரிய நீர் நிலை என்றும், அதில் மீன், ஆமை, முதலை போன்ற உயிரினங்கள் வசித்து வருவதாகவும் கூறியது.
🌟 அதற்கு கிணற்று தவளைகள், இந்த கிணற்றை விட பெரிய நீர் நிலை என்று ஒன்று இருக்க முடியாது. நீ பொய் சொல்கிறாய் என்று கூறி கேலி செய்தன. எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏரி ஒரு பெரிய நீர் நிலை என்பதை கிணற்று தவளைகள் நம்ப மறுத்தன. மேலும் ஏரித்தவளை பொய் சொல்கிறது என்று எண்ணி அந்த ஏரித்தவளையை தாக்க முற்பட்டன.
🌟 அப்போது கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்காக ஒரு பெண் நீர் இறைக்கும் வாலியை கிணற்றுக்குள் விட்டாள். முட்டாள்களிடம் வாக்குவாதம் செய்வதைவிட ஒதுங்கி செல்வதே மேல் என்று நினைத்த ஏரித்தவளை அந்த வாலிக்குள் தாவி குதித்து மேலே வந்து ஏரியை நோக்கி நடந்தது.
நீதி : முட்டாள்களிடம் வாக்குவாதம் செய்வதைவிட விலகிச் செல்வதே நல்லது.
இன்றைய திருக்குறள்

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
விளக்கம் :
ஒருவனை காணாத இடத்தில் பழித்துப் பேசி காணும்போது பொய்யாக நகைத்துப் பேசுதல் என்பது அறநெறிச் செயல்களை அழித்து பாவங்களைச் செய்தலைவிட தீமையானது ஆகும். அதாவது ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது ஆகும். புறங்கூறுதல் கீழ்த்தரமான செயல். புறங்கூறப்பட்டவன் எதிரில் வரும்போது அவனிடம் பொய்யாக நகைத்துப் பேசுதல் அதனினும் கீழ்த்தரமான செயலாகும் என்கிறது குறள்.
சொல் பொருள் :
அறனழீஇ - அறநெறிச் செயல்களை அழித்து
புறனழீஇப் - ஒருவர் இல்லாத இடத்தில் அவரை பழித்துப் பேசுதல்
பொய்த்து - நேரில் பார்க்கும் பொழுது பொய்யாக
அல்லவை - பாவங்களை
செய்தலின் - செய்தலைவிட
தீதே - தீமையானது
நகை - நகைத்துப் பேசுதல்
மோனை :
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
விளக்கம் :
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும். இது யாப்பிலக்கண வாய்ப்பாடு ஆகும். மோனை என்ற வார்த்தைக்கு முன்னிடம் என்பது பொருள். இக்குறளில் அறனழீஇ - அல்லவை ஆகியன மோனை ஆகும்.
எதுகை :
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
விளக்கம் :
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை என்பது இலக்கண விதி ஆகும். இக்குறளில் அறனழீஇ - புறனழீஇப், செய்தலின் - பொய்த்து ஆகியன எதுகை ஆகும்.
#⚡ஷேர்சாட் அப்டேட்













