ddd
ShareChat
click to see wallet page
@3198987041
3198987041
ddd
@3198987041
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
பெயரில் 'கரும்பு'... ஆனால் சர்க்கரை நோய் குணமாகும் அற்புதம்! திருவாரூர் மாவட்டம் வெண்ணியில், வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவில் அப்பர் மற்றும் சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். காவிரி தென்கரை ஸ்தலங்களில் 102 வது சிவதலம் ஆகும். கரும்பினை வில்லாகக் கொண்ட சிவபெருமான் கரும்பேஸ்வரர் ஆகவும், சௌந்தரநாயகி அம்மனாகவும் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோவில் சர்க்கரை நோயை குணப்படுத்தும் கோவிலாக விளங்கி வருகிறது. மூலவர் வெண்ணி கரும்பேஸ்வரர். அம்மன் சௌந்தரநாயகி. தலவிருட்சம் நந்தியாவட்டம். இங்கு இறைவன் கரும்பினை வில்லாகக் கொண்டு அம்பிகைக்கு காட்சியளித்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் இந்த கோவில் வெண்ணி என்ற ஊரில் அமைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் இங்கு வந்து வழிபட்டால், சர்க்கரை நோய் பூரண குணமாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில் ஆகும். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கோவில். கரிகால் சோழன் பாண்டிய மன்னனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்ற இடமாகும். முற்காலத்தில் மன்னருடன் இரண்டு முனிவர்கள் இங்கு உள்ள அடர்ந்த கரும்பு காட்டுக்குள் வந்தனர். அப்போது இங்குள்ள சிவன் கோவில் தலவிருட்சம் பற்றி இரண்டு முனிவர்களும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர். ஒருவர் தலவிருட்சம் கரும்பு என்றும் மற்றொருவர் நந்தியாவட்டை என்றும் கூறிக் கொண்டனர். இதைக் கேட்ட மன்னன் ஆச்சரியப்பட்டார். "இந்த இடத்தில் எந்த கோவிலும் இல்லையே பின்னர் எதற்காக நீங்கள் இருவரும் சண்டை போடுகிறீர்கள்?" என்று கேட்டார். அப்போது திடீரென ஒரு அசரீரி ஒலித்தது. "கரும்பு காட்டுக்குள் நான் சொரூபமாக இருக்கிறேன். எனது தலவிருட்சம் நந்தியாவட்டம்," என இறைவன் குரல் ஒலித்தது. இதைக் கேட்ட மன்னன் அந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்தார். பூமியை தோண்டிய போது லிங்க பானம் வெளிப்பட்டது. மன்னர் தோண்ட தோண்ட அந்த இடம் மிகவும் ஆழமாக சென்று கொண்டே இருந்தது. மன்னன் இந்த இடத்தில் 20 அடி உயரத்தில் கோவிலை கட்டினார். இறைவன் கருவறையில் கரும்பே உருவாக காட்சி தருகிறார். கரும்பு கட்டுகளை சேர்த்து வைத்தால் போல் உருவம் தென்படுகிறது. இங்குள்ள சிவன் திருவுருவம் மிகவும் அபூர்வமானது என்று கூறுகிறார்கள். இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் ஆனதும் அதனை ஒரு துணி கொண்டு ஒத்தி எடுத்து விடுவார்கள். பாம்பாட்டி சித்தர் மற்றும் காகபுஜண்டர் இங்குள்ள சிவன் சர்க்கரை நோயை தீர்க்கும் அற்புத சக்தி படைத்தவர் என தங்களது பாட்டில் எழுதி உள்ளனர். இங்கு வரும் பக்தர்கள் ரவையை வெல்லத்தில் கலந்து இங்கு உள்ள பிரகாரத்தில் தூவி விடுவார்கள். அதனை எறும்பு வந்து தின்றுவிடும். அதை இறைவன் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். அவ்வாறு அதை இறைவன் ஏற்றுக் கொண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக நம்பிக்கை. இங்குள்ள கருவறையில் நுழைவாயிலில் உள்ள நந்தி சிலை கற்சிலைக்கு பதிலாக வெண்கலத்தில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இந்த இடம் முழுவதும் கரும்பு காடாக இருந்தது. சமீப காலமாக நகரத்தார் இந்த கோவிலை கவனித்து வருகிறார்கள். இந்த வெண்ணீஸ்வரர் கோவில் தஞ்சையில் இருந்து 26 கிலோமீட்டர் மற்றும் நீடாமங்கலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கருவறையைச் சுற்றி ஒரு அகழி உள்ளது. இதிலிருந்து தான் நீரை எடுத்து சிவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அதை துணியால் ஒற்றி எடுத்து விடுவார்கள். கிழக்கு நோக்கி கரும்பேஸ்வரரும், தெற்கு நோக்கி அம்பாளும் அருள் பாலிக்கிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டி நிறைய பெண்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். அவர்கள் இங்கு உள்ள அம்மனுக்கு வளையல் சாற்றி நேர்த்திக் கடன் செய்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. எனவே, குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலுக்கு நிறைய பெண்கள் வருவது வழக்கம். காலை 7 மணி முதல் 12 மணி வரை, மதியம் 4 மணி முதல் 8 மணி வரை நடை திறந்து இருக்கும். நவராத்திரி ஒன்பது நாட்கள் சிறப்பாக நடைபெறும். பங்குனி மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி மூலவர் மீது விழும்படி கட்டப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிவனுக்கு சூரிய பூஜை நடைபெறுகிறது. சர்க்கரை நோயாளிகள் ஒரு முறை வந்து இங்கு ரவை சர்க்கரை கலந்து வழிபட்டால் அவர்களது சர்க்கரை நோய் பரிபூரணமாக குணமாகும் என்பது கண்கூடாக தெரிகிறது.🌹நமசிவாய🤘 #🕉️ஓம் நமசிவாயா
🕉️ஓம் நமசிவாயா - ShareChat
சிவ சிவ சில நேரங்களில்.... சில சிந்தனைகள்.... நமது பிறப்பு : பிறரால் தரப்பட்டது #🕉️ஓம் நமசிவாயா நமது பெயர் : பிறரால் தரப்பட்டது நமது கல்வி : பிறரால் தரப்பட்டது நமது சம்பளம் பிற வருமானம் : பிறரால் தரப்படுகிறது நமது மரியாதை : பிறரால் தரப்படுகிறது நமது முதல் மற்றும் கடைசி குளியல் : பிறரால் செய்யப்படுகிறது நமது இறப்புக்குப்பின் நமது சொத்துக்களும் உடைமைகளும் : பிறரால் எடுத்துக் கொள்ளப்படும் நமது உடல் எரியூட்டப்படுவதும் புதைக்கப்படுவதும் : பிறரால் செய்யப்படும் இத்தனையும் தெரிந்த பிறகும் நாம் தேவையற்ற அகந்தையுடனும் இறுமாப்புடனும் வாழ்கிறோம். ஏன்? ஏன்? ஏன்? ..
🕉️ஓம் நமசிவாயா - 5:28 PM VE RAC | 5:28 PM VE RAC | - ShareChat
நமசிவாய🙏🙏🙏 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
01:30
மகிழ்வித்து மகிழ் சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் அன்பும் துன்பமும் : மனிதப் பிறவி எடுத்ததன் பயனே அன்பு செலுத்துவதுதான். அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில், தாற்காலிகமாக இன்பம் கிட்டலாம். ஆனாலும் இவற்றில் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு செலுத்தும் போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும் பணச்செலவானாலும் இதெல்லாம் தெரிவதேயில்லை. அன்பின் ஆனந்தமும் நிறைவுமே இந்தத் துன்பத்துக்கெல்லாம் மேலாகத் தெரிகிறது. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே. அன்பு செலுத்தும்போது துன்பமே தெரிவதில்லை என்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு நாள் அன்பு செலுத்தப்பட்ட வஸ்துவே நமக்குப் பெரிய துன்பத்தைக் கொடுத்து விடுகிறது. நாம் ஒருவரிடம் அன்பு வைக்கிறோம். கடைசியில் ஒருநாள் அவர் நம்மைவிட்டுப் போயே போய் விடுகிறார். அல்லது நாமாவது அவரை விட்டு ஒருநாள் போகத்தான் போகிறோம். அப்போது, ‘ஐயோ, நம்மிடமிருந்து போய்விட்டாரே’ என்றோ, அல்லது ‘ஐயோ, நாம் இவரை விட்டுப் போகிறோமே’ என்றோ பெரிய துக்கம் உண்டாகிறது. இத்தனை காலமாக அன்பு தந்த ஆனந்தமும் நிறைவும் கடைசியில் பொய்யாகி, இந்தத் துன்பத்திலேயே முடிந்தது என்று மனசு கலங்குகிறோம். அன்பின் முடிவான பலன் துன்பம்தானா என்று பெரிய சலிப்பு உண்டாகி விடுகிறது. எத்தனைக்கெத்தனை அன்பு வைத்தோமோ, அத்தனைக்கத்தனை துன்பம் பிரிவின் போது உண்டாவதைப் பார்க்கிறோம். அன்பே செலுத்தாமல் சுய காரியவாதியாகவோ, அல்லது ஜடமாகவோ இருக்கிற ஜன்மாவே சிலாக்கியமானதோ என்று கூடத் தோன்றிவிடும். அப்படிப் பட்டவனுக்கு இந்தப் பிரிவுத் துன்பமே இல்லையல்லவா? ஆனால் உண்மையில் சுய காரியவாதி பாபத்தைத்தான் மூட்டைக் கட்டுகிறான். மனிதப் பிறவி எடுத்துவிட்டு, ஆனந்தம், நிறைவு முதலியன இல்லாமல் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதும் பிரயோஜனம் இல்லை. அன்பு செய்தாலும் முடிவில் துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசியே இல்லை. இப்படியானால் என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நம்முடைய அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வஸ்து இருந்து, அதனிடம் அன்பை வைத்து விட்டால் நாமும் அதுவும் ஒருநாளும் பிரியப் போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம். அதாவது, என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவிடம் அன்பைப் பூரணமாக வைத்துவிட வேண்டும். பரமாத்மா நம்மைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்து விடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க முடியும். அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒருநாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம். பரமாத்மாவிடம் அன்பை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டால் அவருக்கு வேறாக யாருமே இல்லை என்று தெரியும். மரணமடைகிற மனிதர்களாக எண்ணி, அதுவரை யாரிடமெல்லாம் துக்க ஹேதுவான அன்பை வைத்திருந்தோமோ அவர்களும்கூட இப்போது அழியாத பரமாத்ம ஸ்வரூபமாகவே தெரிவார்கள். இப்படி உலகம் முழுவதையும் பரமத்மாவாகவே பார்த்து அன்பு செலுத்த வேண்டும். அப்போது நம் அன்பு ஒரு நாளும் துக்கத்துக்கு மூலமாக ஆகாமலே இருக்கும். எல்லோரையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து அன்பு செலுத்த முடியாவிட்டாலும், ஆத்ம குணம் நிறைந்த பெரியவர்கள், நல்ல ஞானமும் அருளும் நிறைந்த ஸத்குரு ஆகியோரைப் பரமாத்மாவாகக் கருதி, அன்பு செலுத்துவது சுலபமாக முடிகிறது. அப்படிப்பட்டவர்களிடம் அன்பு வைத்து ஆத்மார்ப்பணம் செய்துவிட்டால் போதும். அவர்கள் மூலமாக பரமாத்மா நமக்கு அநுக்கிரகம் பண்ணி விடுவார். நம் அன்புக்குப் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, ‘பரமாத்மா வேஷமாகப் போட்டுக் கொண்ட ஒரு சரீரத்துக்குத் தான் அழிவு உண்டாயிற்று. இப்போது சரீரி பரமாத்மாவோடு ஒன்றாகிவிட்டார்’ என்ற ஞானத்தோடு பிரிவுத் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்போம். நம் அன்பு கொஞ்சம்கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈச்வரனிடம், ஸாதுக்களிடம் இந்த அன்பை அப்யசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுவே ஜன்மா எடுத்தன் பயன். இந்த உலகில் மனிதர்கள் முழுமையானவர்கள் இல்லை ! ஆனால் , அதில் ஆச்சரியம் ஒன்றுள்ளது .. இத்தனை குறைகளுக்குள்ளும் வாழ்க்கை தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் .. மனிதர்கள் அல்ல, பிரபஞ்சத்தின் சமநிலை. பிரபஞ்சம் ஒரு நுட்பமான கணக்கில் இயங்குகிறது. யாரை எப்போது சந்திக்க வேண்டும், யார் எவ்வளவு நேரம் நம் வாழ்க்கையில் இருக்க வேண்டும், யார் ஒரு பாடமாக மட்டும் வந்து போக வேண்டும் .. இதெல்லாம் , சாதாரண சம்பவம் அல்ல.. ஒவ்வொரு சந்திப்பும் ஒரு காரணத்திற்காகவே நடக்கிறது. யாராவது உன்னை காயப்படுத்தினால், பிரபஞ்சம் “நீ இன்னும் வலிமையாவாய்” என்று சொல்லும்.. யாராவது உன்னை உயர்த்தினால், “நீ இன்னும் மனிதத்துவத்தை நம்பு” என்று நினைவூட்டும்.. மனிதர்களின் நடத்தை மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பிரபஞ்சம் உனக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது என்பதை கவனிக்க கற்றுக்கொள் ! அப்போது , குற்றம் காணும் மனம் குறையும்.. புரிதல் அதிகரிக்கும் ! பிரபஞ்சம் ஒருபோதும் தவறாக மனிதர்களை உன் வாழ்க்கையில் அனுப்பாது ! அது எப்போதும் சரியான நேரத்தில், சரியான பாடத்தை மட்டும் அனுப்பும் ! புரியும் என்று நம்புகிறேன்🙏🏻📿... மகாபாரத போரில் எத்தனை வீரர்கள் உயிர் பிழைத்தார்கள் தெரியுமா? யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்},"இந்தப் போரில் நூற்று அறுபத்தாறு கோடியே, இருபதாயிரம்{166,00,20,000} பேர் கொல்லப்பட்டனர். தப்பிய வீரர்கள், இருபத்துநாலாயிரத்து நூற்று அறுபத்தைந்து{24,165} பேராவர்' என்றான். இறங்க வேண்டும். "மரணம்_எனக்கும்_வரும்" என்ற எண்ணம் தான்.. ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும். பணம் மீது தீராத வெறி, பதவி மீது தீராத வேட்கை, இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம். ஒரு பிரேதம் மண்ணில் அடக்கப்படும் போது .... வஞ்சம், பகை, ஈகோவையும் அத்தோடு மண்ணுக்குள் போட்டு அடக்க வேண்டும். மரணத்தின் எண்ணம், நம் இறையச்சத்தை அதிகரிக்கும். மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். காரணம், மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும் போது... நம் மனமும் அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது. மண்ணின்மரணம் நம்மைத் தாண்டி நிற்கும் உண்மை அழகு—அகந்தை, பணம், பதவி எல்லாம் மண்ணோடு போகும். அதை உணர்ந்தே வாழ்வோம், பிறருக்கு நல்லது செய்வோம். சூப்பர் சிந்தனை! #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏🏻 15. #புருஷோத்தம_யோகம். பாகம்_2 🙏 2. " அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர்விட்டு, கீழும், மேலும் படர்ந்திருக்கின்றன. மானுடவுலகில் வினையை விளைவிப்பனவாக, அதன் வேர்கள் கீழ் நோக்கிப் பரவியிருக்கின்றன". 🙏 விளக்கம்: சம்சாரமாகிய (உலக வாழ்க்கை) இப்பிரபஞ்சத்திற்கு, அரசமரமே சரியான உதாரணமாகிறது. அதன் கிளைகள் மேலும், கீழும் நாலாப்பக்கமும் பரவியிருக்கின்றன. இப்பிரபஞ்சம் என்னும் மரத்திற்கு மிக மேலானதாக இருக்கும் கிளைகள் பிரம்மாவும், பிரம்மலேகமும் ஆகும். கீழான கிளையோ மானுட உலகமும், அஃறிணை உயிர்களுமாகும். *ஞானத்திற்கு ஏற்ப மேலான பிறவியும், வெறும் கர்மத்திற்கேற்ப கீழானப் பிறவியும், ஞானமும், கர்மமும் கலந்திருப்பதற்கு ஏற்ப நடுத்தரமான மனிதப்பிறவியும், அமைகின்றன. கிளைகளில் சாரமிருந்தால் தான் அவைகள் தளிர்விடும். புலன்களின் வழியாக புலனின்பங்களில் உழலுவது இந்த சம்சாரத்திற்கும் தளிர்களாகின்றன. இந்த முக்குணங்களும் இருக்கும் வரை கிளைகள் தளிர்த்துக் கொண்டே தான் இருக்கும்; நமது பிறவியும் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும். செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள் ஈசுவரனிடமிருந்து பிரபஞ்சம் கீழே இறங்கி வந்திருப்பதால், ஈசுவரனே ஆணிவேர்; பூவுலகில் விதவிதமான கர்மங்களாகப் பரிணமித்து வருபவைகள், மரத்தின் சல்லி வேர்களைப் போன்றவை. சல்லி வேர்களை அவ்வப்போது வெட்டினால், மரம் நன்கு செழித்து வரும். அவ்வாறே பூவுலகில் நமது செயல்களைத் (கர்மங்களை) திருத்தியமைப்பதால், மனிதனும் ஒழுங்குப்படுகிறான். அவனுடைய இயல்பை மாற்றுவதற்குக் "கர்மம்" (செயல்கள்) பயன்படுகிறது. நல்லியல்பில் அல்லது கெட்ட இயல்பில் பந்தப்படுத்தி, மனிதனைப் பிறப்பு, இறப்பு மயமான பூவுலகில் பிடித்து வைத்திருப்பது "கர்மம்" என்கின்ற வேர். எனவே தான் சம்சாரம்(வாழ்க்கை) என்கிற பிரபஞ்சமாகிய மரத்தின் வேர் எங்கும் பரவியிருக்கின்றது! என்று சொல்கிறார்! 💕.. சூழ்நிலைகள் மாறலாம் மனிதன் மாறலாம் ஆனால் புரிந்து கொள்ள மனம் மட்டும் தடம் மாறுவதே இல்லை விட்டுக் கொடுப்பதில் இல்லை இன்பம் விட்டு விலகாமல் புரிந்து கொள்வது தான் இருக்கிறது அன்பு.... அந்தப் பைத்தியக்காரிடம் சொல்லுங்கள்./ #ஶ்ரீகிருஷ்ணபரமாத்மா #அர்ஜுனனிடம்.🙏. #ஶ்ரீகிருஷ்ணா_சரணம். 🙏🏻🙏 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat
நமசிவாய🤘🤘🤘 #🙏 ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
🙏 ஓம் நமசிவாய - ShareChat
02:00
ஏழு வகை நடனங்கள் புரியும் சப்த விடங்கத் தலங்கள்! 🌸 சைவ சமய மரபில் "விடங்கம்" என்றால் உளியால் செதுக்கப்படாதது என்று பொருள். மனித கரங்களால் செதுக்கப்படாமல், இயற்கையாகவே தோன்றிய ஏழு புனிதமான மரகத லிங்கங்களை, சோழ மன்னன் முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து பரிசாகப் பெற்று காவிரி டெல்டா பகுதிகளில் பிரதிஷ்டை செய்தார். இவையே சப்த விடங்கத் தலங்கள் என்று போற்றப்படுகின்றன.நமசிவாய🤘 #🙏 ஓம் நமசிவாய இந்த ஏழு ஊர்களிலும் ஈசன் வெவ்வேறு விதமான நடனங்களை (தாண்டவங்களை) ஆடுகிறார். அந்தத் தலங்களின் சிறப்புகள் இதோ: 📍 1. திருவாரூர் - வீதி விடங்கர்: இங்கு இறைவன் 'அசபா நடனம்' ஆடுகிறார். இது மனிதனின் மூச்சுக்காற்றின் அசைவை உணர்த்தும் நுட்பமான நடனம். 📍 2. திருநள்ளாறு - நாக விடங்கர்: இங்கு ஈசன் பித்தரைப் போல ஆடும் 'உன்மத்த நடனம்' ஆடுகிறார். இது மனக்கவலைகளை நீக்கும் வல்லமை கொண்டது. 📍 3. நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர்: கடல் அலைகள் ஓயாமல் வீசுவதைப் போன்ற 'வீசி நடனம்' இத்தலத்தின் சிறப்பு. 📍 4. திருக்காராயில் - ஆதி விடங்கர்: இங்கு இறைவன் ஒரு சேவல் நடப்பதைப் போன்ற பாவனையில் 'குக்குட நடனம்' ஆடுகிறார். 📍 5. திருக்குவளை - அவனி விடங்கர்: வண்டு மலரைச் சுற்றிச் சுற்றி வருவது போன்ற 'பிருங்க நடனம்' இங்கு நிகழ்த்தப்படுகிறது. 📍 6. திருவாய்மூர் - நீல விடங்கர்: தாமரை மலர் மெல்லிய காற்றில் அசைந்தாடுவதைப் போன்ற 'கமல நடனம்' இத்தலத்தின் அழகு. 📍 7. வேதாரண்யம் - புவனி விடங்கர்: அன்னப் பறவை கம்பீரமாக அடி எடுத்து வைப்பதைப் போன்ற 'ஹம்சபாத நடனம்' இங்கு நிகழ்கிறது. ✨ சப்த விடங்கத் தலங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: இத்தலங்களில் வீற்றிருக்கும் இறைவனைத் தரிசிப்பது ஆன்மீக ரீதியாகவும், லௌகீக ரீதியாகவும் பெரும் நன்மைகளைத் தரும்: ✅ பாவ விமோசனம்: முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட இந்த லிங்கங்களை வணங்குவது தீராத வினைகளையும், முன்ஜென்ம பாவங்களையும் நீக்கும். ✅ தோஷ நிவர்த்தி: குறிப்பாகத் திருநள்ளாறு மற்றும் நாகப்பட்டினம் தலங்கள் நவகிரகத் தொடர்புடையவை என்பதால், ஜாதக ரீதியான தோஷங்கள் விலகும். ✅ மன அமைதி: பிரபஞ்ச இயக்கத்தைக் குறிக்கும் இந்த ஏழு வகை நடனங்களைச் சிந்திப்பது மனக் குழப்பங்களைத் தீர்த்து நிம்மதியைத் தரும். இந்த ஏழு தலங்களும் தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சார அடையாளங்கள். வாய்ப்புள்ளவர்கள் இந்த 'சப்த விடங்க யாத்திரை' மேற்கொண்டு எம்பெருமானின் பேரருளைப் பெறுங்கள்! 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏
🙏 ஓம் நமசிவாய - சப்த விடங்க தலங்கள் C ٦٥ திருவாரூர் வீதி விடங்கர் நாகைக்காரோணம் திருநள்ளாறு நாகவிடங்கர் சுந்தரவிடங்கர் (@reddhyumaaiin திருக்காராயில் ஆதிவிடங்கர் திருக்கோளிலி திருவாய்மூர் அவனிவிடங்கர் நீலவிடங்கர் [ reddiyuraanmigam [[|8 reddiyuraanmigam வேதாரண்யம் புவனிவிடங்கர் சப்த விடங்க தலங்கள் C ٦٥ திருவாரூர் வீதி விடங்கர் நாகைக்காரோணம் திருநள்ளாறு நாகவிடங்கர் சுந்தரவிடங்கர் (@reddhyumaaiin திருக்காராயில் ஆதிவிடங்கர் திருக்கோளிலி திருவாய்மூர் அவனிவிடங்கர் நீலவிடங்கர் [ reddiyuraanmigam [[|8 reddiyuraanmigam வேதாரண்யம் புவனிவிடங்கர் - ShareChat
திரு உத்தரகோசமங்கை,மரகத,நடராஜர்🙏 #🙏 ஓம் நமசிவாய
🙏 ஓம் நமசிவாய - ShareChat
01:01
ஆருத்ரா தரிசனம்🤘🤘🤘 #🙏 ஓம் நமசிவாய
🙏 ஓம் நமசிவாய - Boopathi Raja 1 88ee55so Word 1Sivan Teo உலகின் முதல் பிவள் கோயில் திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் 6lpr திருவாதிரை அபிஷேகம் 02.01.2026 மகா காலை எட்டு மிக்கு மேல் நடராஜருக்குசந்தனம் களலயப்பட்டு  அபிட நடபெறும்  ~  பிள்னா் அங்கநாள் முழுவநம் சற்களம் வெ்லாமல்  நடராஜா பாட்சி அளிப்பார  03.01.2026 திருவாதிரை அபிஷேகம்  பரியடகயத்திறகுமுள் ம்டும் பதசநகனம் சாக்கப்பட்டு  மmிக்கு கிருவாசிாக ரம்ந பபெறும் @0 Bரவுகோயியியதங் Oொளe பட்கர ஸ்க்கஅமபிட0 மழுபட சஈயியய ப்பட்டு பாரச ~  00 Reply Boopathi Raja 1 88ee55so Word 1Sivan Teo உலகின் முதல் பிவள் கோயில் திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் 6lpr திருவாதிரை அபிஷேகம் 02.01.2026 மகா காலை எட்டு மிக்கு மேல் நடராஜருக்குசந்தனம் களலயப்பட்டு  அபிட நடபெறும்  ~  பிள்னா் அங்கநாள் முழுவநம் சற்களம் வெ்லாமல்  நடராஜா பாட்சி அளிப்பார  03.01.2026 திருவாதிரை அபிஷேகம்  பரியடகயத்திறகுமுள் ம்டும் பதசநகனம் சாக்கப்பட்டு  மmிக்கு கிருவாசிாக ரம்ந பபெறும் @0 Bரவுகோயியியதங் Oொளe பட்கர ஸ்க்கஅமபிட0 மழுபட சஈயியய ப்பட்டு பாரச ~  00 Reply - ShareChat