மும்பையில் வேலை பார்த்துவிட்டு, கையில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் ஏறிய ஒரு சிறுவன்…அப்போது அங்கு வந்த TTE அவனிடம் டிக்கெட் கேட்டார். பயத்துடன் நின்ற அந்தச் சிறுவன், தன்னிடம் டிக்கெட் ஏதும் இல்லை என்று சொன்னான்.
“எங்கே செல்ல வேண்டும்?” என்று கேட்டபோது, “ரேபரேலி…” செல்ல வேண்டும் என பதிலளித்தான்.
அதோடு தனக்கு நேர்ந்த துயரத்தையும் பகிர்ந்தான்…வேலை பார்த்த இடத்தில் முதலாளி தன்னை கொடூரமாக அடித்ததாகவும், கையை சூடு வைத்து சுட்டதாகவும், வேலைக்கான சம்பளம்கூட தராமல் நடுத்தெருவில் துரத்திவிட்டதாகவும் கண்ணீருடன் கூறினான்.
இதைக் கேட்ட அந்த TTE அதிகாரி அவனை கண்டிக்கவில்லை… அபராதம் விதிக்கவில்லை…
மாறாக, பசியுடன் இருந்த அந்தச் சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, தன் சொந்தப் பணத்தில் டிக்கெட்டும் எடுத்து, கையில் செல்வுக்கு பணம் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்தார்.
வெளியே பார்க்குபோது நிறைந்த உலகமாகத் தெரிந்தாலும், ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வலியிலும் தனிமையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதரவற்ற அந்தச் சிறுவனுக்கு முகம் தெரியாத அந்த அதிகாரி காட்டிய கருணைதான் உண்மையான மனிதநேயம்.
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களின் எதிர்பாராத அன்புதான் இந்த உலகத்தை இன்னும் அழகாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ❤️
இந்த மனிதநேயம் மிக்க TTE அதிகாரிக்கு ஒரு ராயல் சல்யூட்..! 🙏 #சாதணை படைத்தவர்கள்💐 #தெரிந்து கொள்வோம்💐 #இன்றைய தேசிய செய்திகள்💐 #விழிப்புணர்வு பதிவு💐 #வித்தியாசமான தகவல்கள்💐