Rationalist
ShareChat
click to see wallet page
@332020744
332020744
Rationalist
@332020744
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
#📺அரசியல் 360🔴 #📷நினைவுகள் #தமிழ்த்தேசியம் #📰தமிழக அப்டேட்🗞️ #தமிழ்நாடு தமிழருக்கே!
📺அரசியல் 360🔴 - ShareChat
01:19
தமிழரிடத்தில் தாய்த்தெய்வ வழிபாடுகள் மிகப்பழமையானது. இதன் நீட்சி இன்றும் தமிழரிடத்தில் உள்ளது. அம்மன் கோவில் திருவிழாக்களில், தமிழர் திருமணஙகளில் முளைப்பாரி போடுதல் ஒரு பண்பாடாக இன்றும் தொடர்கிறது. இது தாய்த்தெய்வ வழிபாட்டின் நீட்சியாக 'வளமைப் பண்பாடாக' இயஙகுகிறது. 'கிராம தேவதைகளான காளி, மாரி, பத்திரகாளி முதலான பெண் தெய்வஙகளை நோக்கி முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் ஒரு சடங்கு முளைப்பாரி ஆகும்.. தமிழ்நாட்டில் இப்பண்பாடு மிகப்பழமையானது என்பார் ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள். "..ஆரியரது வருகைக்கு முந்தைய தொன்மங்கள் 'வளமைப்பண்பாட்டை' அடிப்படையாகக் கொண்டவை. 'அணங்கு', 'முதுமகள்,' மூத்தோள்' என்பது இவற்றில் சில. இவை தமிழர் தொன்மங்கள். ஆரியரது தொன்மங்கள் வேதபுராணங்களை சார்ந்தவை. ஆரியரது கடவுள்கள் அரசவை சார்ந்தவையாக இயங்கின. இவை அரசன்-அரசவையின் வேள்விமுறை குறித்தவையாக இருந்தன, அதாவது அதிகாரத்திற்கான சடங்குகளாக இயங்கியவை எனலாம். அதனால் தான் ஆரியர்களின் கடவுள் தொன்மங்கள் வேதம்(வைதிக மரபு சார்ந்த) சார்ந்து அரசர்களுக்கான பாடல்களில் காணப்படுகின்றன.." என்கிறார் ஆய்வாளர் தேவ.பேரின்பன். அதாவது தமிழர்களின் தொன்மங்கள் பெண்களை முன்னிறுத்திய தாய்தெய்வ வழிபாட்டின் நீட்சியாகவும், இவற்றிற்கு முற்றிலும் வேறாக ஆரியர் தொன்மங்கள் வேத சடங்குகள்-வேள்விச் சடங்குகளாக அரசனுக்குரியதாக இயங்கின என்கிறார். எளியோர்களின் பண்பாடே இன்றுவரை தொடர்வதை காணலாம் என்பதே இதன் அடித்தளம்.. தமிழர் மரபில் தாய்த்தெய்வ வழிபாடு குறித்து பெரியரியவாதியும், தமிழ்த்தேசிய ஆய்வாளருமாம சி.ஆரோக்கியசாமி அவர்கள் இச்சிந்தனைகளை தொகுத்து நூலை வெளியிட்டுள்ளார்.. இவ்வாறாக தமிழர்களின் வழிபாட்டு முறையும், பண்பாட்டு முறையும் தனித்துவமானதாக, சமத்துவம் கொண்டவையாக இயங்கின. இவற்றை தின்று செரிக்கும் வகையிலன ஆதிக்கத்தையே ஆரிய-வழிபாட்டுக் கூறுகள் இருக்கின்றன. இவ்வாறாக ஆரிய-வேதத்தால் (வைதீகம்) ஆக்கிரமிக்கப்பட்டு சுவீகரிக்கப்பட்ட தமிழரின் தொல் தெய்வஙகள் இன்றும் பெருந்தெய்வக் கோயில் கருவறைகளுக்கு வெளியே தூண்களிலும், கோபுரங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் பல தெய்வங்கள் எளிய மக்கள் வழிபட்டு வந்தவை அல்லது இன்றும் வழிபடக்கூடியவை. ஆசீவக சாத்தனார்கள், ஐயனார்கள் இவ்வாறாக மாற்றப்பட்டனர் என்பார் சி.ஆரோக்கியசாமி அவர்கள். இவ்வாறாக தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றையும், அதன் பின்புலத்தையும், அதன் நீட்சிகளையும் அறிந்து கொள்ளவே மே17 இயக்கத்தால் 'தமிழ்த்தேசியப் பெருவிழா' கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் மார்ச் 07, 08 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநாடு நடக்க இருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரையும் அழைக்கிறோம். போலிகளை விரட்டியடித்து, ஆரியத்தை அழித்தொழித்து, தமிழ்த்தேசியத்தின் கொடி உயர்த்துவோம். விரைவில் மாநாட்டின் விவரங்கள் வெளியிடப்படும். தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தோழர்கள் அவசியம் பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம். #💪 மே17 இயக்கம் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம் - EU தப இபக்கம் EE-L பெருவிழா 2026 07,. 08 மார்ச் 2026 மே பதினேழு இபக்கம் 9884864010 |9444327010 EU தப இபக்கம் EE-L பெருவிழா 2026 07,. 08 மார்ச் 2026 மே பதினேழு இபக்கம் 9884864010 |9444327010 - ShareChat
எந்தப் படையினில் நீ இருந்தாலும் இனத்தை எதிர்த்திடாதே! - தமிழா, எதிரிக் குழைத்திடாதே! - உன் சொந்தத் தமையனைத் தம்பியைக் கொல்லவே சூழ்ச்சி நினைந்திடாதே! - பகைவன் சோற்றில் நனைந்திடாதே! பாவலரேறு பெருஞ்சித்திரனார் #தமிழ்த்தேசியம் #✍️பாவலரேறு பெருஞ்சித்திரனார்🎂🍰🍮 #தமிழின எதிரி RSS-பாஜக #தமிழ்நாடு தமிழருக்கே! #🎙️அரசியல் தர்பார்
தமிழ்த்தேசியம் - ShareChat
#தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #தோழர் திருமுருகன் காந்தி #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
தமிழ்த்தேசியம் - ShareChat
01:27
பாஜகவின் போலி தேசப்பற்று - உச்ச நீதிமன்றத்தின் செருப்படி தீர்ப்பு. ஒன்றிய அரசை பற்றி ஒரு வார்த்தை சொன்னால் கூட நம்மை தேசவிரோதிகள் என்று சொல்லும் இந்த சங்கிக் கும்பல்தான் உண்மையில் தேச விரோதக் கும்பல். இராணுவத்தில் பணியாற்றி காயம்பட்டு மாற்றுத்திறனாளியாக வாழ்க்கையை தொலைத்த போர் வீரர்களுக்கு ஓய்வுதியம் தராமல் ஒன்றிய அரசு இழுதடிக்கிறது. இத்தனைக்கும் ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் (Armed Forces Tribunal - AFT) ஓய்வுதியம் தர சொல்லி உத்தரவிட்டும் கூட மோடி அரசு அதை செய்ய மறுக்கிறது. ஆயுதப்படை தீர்ப்பாயம் என்பது தனியார் அமைப்பு அல்ல. இந்திய இராணுவத்தின் புகார்களை விரைந்து விசாரித்து முடித்து வைக்கும் பொருட்டும், பணியாளர்கள் தொடர்பான நியமனம், ஊதியம், ஒழுங்குமுறை மற்றும் ஓய்வூதியம் போன்ற விவகாரங்கள் குறித்து, 2007-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் 2009-ல் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் ஆகும். இது ஒரு நீதிபதியின் கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ நீதிமன்றமே ஆகும். அதாவது திருப்பரங்குன்றத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துங்கள் என்று சொல்லும் இதே பாஜக கும்பல் தேசத்திற்காக தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்று தேசப்பற்று பேசும் இதே பாஜக கும்பல் ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் அதுவும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் கொடுங்கள் என்று சொல்லக்கூடிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்குக்கு கொடுத்திருக்கும் தீர்ப்பில் "ராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியம் நீங்கள் கருணை அடிப்படையில் கொடுப்பதல்ல. அது அவர்களுக்கு உரிமையானது" என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்து பாஜக மோடி அரசை செருப்பால் அடித்திருக்கிறது. முன்னாள் ராணுவ வீரர்கள், அதுவும் மாற்றுத்திறனாளியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியத்தை மறுத்திருக்கும் பாஜக மோடி அரசு தனது போலி தேசப்பற்று முகத்திரை கிழிந்து அம்பலப்பட்டு நிற்கிறது. #🎙️அரசியல் தர்பார் #அரசியல் பித்தலாட்டம் :: #தமிழின எதிரி RSS-பாஜக #🚨கற்றது அரசியல் ✌️
🎙️அரசியல் தர்பார் - மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் கருணைத்தொகை அல்ல சுப்ரீம் கோர்ட்டு கருத்து  முடிந்தநிலையில், நீதிபதிகள் செய்ததற்கு தியாகம் தரப படும்அங்கீகாரம் அதைஅர பிஎஸ் நரசிம்மா , லோசக் புதுடெல்லி பிப்14- ஆகியோர் அடங்கிய  சின் கருணையை பொறுத்து வரதே முன்னாள் ராுவத்தின பரிசுத் அளிக்கப் படும் மத்தியஅரசின்மேல் அமாவு, ருக்கு மாற்றுத்திறனாளிகள் தொகைபாகவோ கருணைத முறையீட்டை தளளுபடி ஓய்வூதியம் அளிக்குமாறு மத் தொகையாகவோ கருதக்க செய்தது  அரசுக்கு ஆயுதப்படை திய ஈத அப்போது நீதிபதிகள் கூறி கள் தீர்ப்பாயம் உத்தரவிட்டு திரி மா எஜமானராக ருந்தது  எதிர்த்து பதாவது - இருக்க வேண்டிய மத்திய 9|60)8 மாற்றுத்திறனாளிகள்ஓய்வூ சுபாம் கோர்ட்டில் 0085 நியாயமாக அரசு, நடந்து தியம்என்பதுகருணையுடன் அரசு மேல்முறையீடு செய் வேண்டும் மகாளள தேசத் தரப்படுவது அல்ல வ்வாறு நீதிபதிகள் தது சூறி இந்த வழக்கு விசாரணை துக்கு சேவை செய்தபோது GUTI தினத்தந்தி 14/2/2026 மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் கருணைத்தொகை அல்ல சுப்ரீம் கோர்ட்டு கருத்து  முடிந்தநிலையில், நீதிபதிகள் செய்ததற்கு தியாகம் தரப படும்அங்கீகாரம் அதைஅர பிஎஸ் நரசிம்மா , லோசக் புதுடெல்லி பிப்14- ஆகியோர் அடங்கிய  சின் கருணையை பொறுத்து வரதே முன்னாள் ராுவத்தின பரிசுத் அளிக்கப் படும் மத்தியஅரசின்மேல் அமாவு, ருக்கு மாற்றுத்திறனாளிகள் தொகைபாகவோ கருணைத முறையீட்டை தளளுபடி ஓய்வூதியம் அளிக்குமாறு மத் தொகையாகவோ கருதக்க செய்தது  அரசுக்கு ஆயுதப்படை திய ஈத அப்போது நீதிபதிகள் கூறி கள் தீர்ப்பாயம் உத்தரவிட்டு திரி மா எஜமானராக ருந்தது  எதிர்த்து பதாவது - இருக்க வேண்டிய மத்திய 9|60)8 மாற்றுத்திறனாளிகள்ஓய்வூ சுபாம் கோர்ட்டில் 0085 நியாயமாக அரசு, நடந்து தியம்என்பதுகருணையுடன் அரசு மேல்முறையீடு செய் வேண்டும் மகாளள தேசத் தரப்படுவது அல்ல வ்வாறு நீதிபதிகள் தது சூறி இந்த வழக்கு விசாரணை துக்கு சேவை செய்தபோது GUTI தினத்தந்தி 14/2/2026 - ShareChat
பொள்ளாச்சி துப்பாக்கி சூடு பொய்யா? பராசக்தி படத்தில் காட்டப்படும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பொள்ளாச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்கவே இல்லை எனப் பலர் வாதிடுகின்றனர். ஏனென்றால் கூகுளிடம் சென்று பொள்ளாச்சி துப்பாக்கி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் சூடு தொடர்பான ஆவணங்கள் உண்டா என்றேன். உடனே அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என அது சாதித்தது. Anti Hindi Agitation Pollachi Police Gun firing. இணையம் முழுக்க தேடியதில் இந்தியன் எக்ஸ்பிரஸில் 1965 ல் Feb 13 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஆங்கிலத்தில் வெளிவந்த செய்தி குறிப்பை கண்டறிந்து அதன் செய்தியை முதன் முறையாக இங்கு தொகுத்து இட்டிருக்கிறேன். படித்த அறிந்து பகிர்ந்து உதவவும். இல்லையென்றால் எல்லாமே பொய்யென்று நிரூபணமாகிவிடும்‌ "தலைப்பு: கலவரத்தை ஒடுக்க ராணுவம் நடவடிக்கை (படக்குறிப்பு 2: வியாழக்கிழமையன்று ஆவடிக்கு அருகே வன்முறையாளர்களால் பயணிகள் இறக்கிவிடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயிலின் எஞ்சிய பாகங்கள் இவை.) பொள்ளாச்சியில் வன்முறை கும்பலின் வெறியாட்டம்: மீண்டும் போலீஸ் துப்பாக்கிச் சூடு; பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு இயந்திரத் துப்பாக்கிகளுக்கும், போலீஸ் தோட்டாக்களுக்கும் இதுவரை 46 உயிர்கள் பலியாகியுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று ராணுவம் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்தது. அங்கு நடத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், நான்கு வயதுக் குழந்தை உட்பட பத்து பேர் பலியாயினர். மாநிலத்தின் குறைந்தது 11 இடங்களில் இன்று நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 16 பேர் கொல்லப்பட்டனர். பாண்டிச்சேரியில் நேற்று இரவு 4 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தற்போதைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரும், சென்னிமலை, ஜோலார்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் ஆற்காடு ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு விடுத்த அழைப்பை ஏற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு (ஹர்த்தால்) கடைபிடிக்கப்பட்ட போதிலும், வட ஆற்காடு மாவட்டத்தில் ஆரணி மற்றும் பேர்ணாம்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் அகரமாங்குடி மற்றும் மன்னார்குடி, மதுரை மாவட்டத்தில் கூடலூர் ஆகிய இடங்களில் கலவரங்களும் துப்பாக்கிச் சூடும் அமைதியைக் குலைத்தன. பொள்ளாச்சியில் ராணுவம் மத்திய அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களின் சொந்த ஊரான பொள்ளாச்சியில், புதன்கிழமையன்று கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்தது. நகர் முழுவதும் தீ வைப்புச் சம்பவங்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததால், கோயம்புத்தூரிலிருந்து 7 லாரிகளில் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உடனடியாகக் களத்தில் இறக்கப்பட்டனர். மாநிலத்தில் ராணுவம் வரவழைக்கப்படுவது இதுவே முதல் முறை. அங்கு நடத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், நான்கு வயதுக் குழந்தை உட்பட பத்து பேர் பலியாயினர். சென்னையில் (மெட்ராஸ்) ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள தொலைபேசி பூத் ஒன்றிற்குத் தீ வைத்த கும்பலைக் கலைக்க, கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாகப் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. திருச்சியில் பதற்றம் திருச்சியில் பிற்பகலில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடந்ததையடுத்து, ராணுவம் நகரின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. அஞ்சல் நிலையத்திற்குத் தீ வைத்த கும்பலைத் தனது வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 17 வயதுச் சிறுவன் உட்பட இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். மற்றுமொரு இடத்தில் காவல் நிலையம் மற்றும் அஞ்சல் நிலையத்தைத் தாக்கிய கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ரயில்வே மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசம் பல புறநகர் ரயில் நிலையங்களில் ரயில்வே கேபின்கள் மற்றும் விலை உயர்ந்த சிக்னல் கருவிகள் அழிக்கப்பட்டுக் கிடந்தன. நேற்றுத் தாக்கப்பட்ட கோடம்பாக்கம் ரயில் நிலையம் இன்றும் தாக்குதலுக்கு உள்ளானது. புறநகர் ரயில் சேவையைச் சீரமைக்கக் குறைந்தது இரண்டு வாரங்களாவது ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர் (T.Nagar) பகுதிகளில் தபால் பெட்டிகள் மற்றும் தொலைபேசிப் பெட்டிகள் பெயர்த்து எடுக்கப்பட்டு நடுரோட்டில் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பல இடங்களில் பேருந்து நிறுத்தக் கம்பங்கள் மற்றும் மின் கம்பங்கள் பிடுங்கப்பட்டுச் சாலைத் தடைகளாகப் பயன்படுத்தப்பட்டன. கும்பல் ஒன்று என்ஜின் டிரைவர் மற்றும் ஃபயர்மேனைத் தாக்கிவிட்டு நீராவி என்ஜின் மீது கற்களை வீசியது. மற்றொரு கும்பல் பிரபல தமிழ் நாளிதழ் அலுவலகத்தின் மீதும், அதற்கு எதிரே இருந்த அஞ்சல் அலுவலகத்தின் மீதும் கற்களை வீசித் தாக்கியது. போக்குவரத்து முடக்கம் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகளை மறித்து, பயணிகளை கீழே இறங்கச் செய்துவிட்டு, பேருந்துகளை பணிமனைக்குச் செல்லுமாறு பணித்தனர். வால் டாக்ஸ் சாலையில் அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; பேருந்துகளுக்குத் தீ வைக்கவும் முயற்சி நடந்தது. கல்வீச்சு சம்பவங்களால் பல பேருந்துகள் சேதமடைந்தன, 6 பேருந்துகள் முழுமையாக அழிக்கப்பட்டன. இதனால் 10 முதல் 30 வரை இயக்கப்பட்ட மிகக் குறைந்த அளவிலான பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரால் சாலைத் தடைகள் காரணமாக உரிய நேரத்திற்குச் செல்ல முடியவில்லை; அவர்கள் சென்றடைவதற்குள் 4 அல்லது 5 குடிசைகள் எரிந்து நாசமாகின. போலீஸாரைக் கண்டதும் வன்முறையாளர்கள் தப்பியோடினர். போராட்டத்தைக் கைவிட மாணவர் சங்கம் முடிவு தமிழ்நாடு மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயற்குழு இன்று கூடி, தற்போதைய அனைத்துப் போராட்டங்களையும் நிறுத்தி வைக்கத் தீர்மானித்தது. அமைதியான முறையில் தொடங்கப்பட்ட போராட்டம் திடீரென வன்முறை மற்றும் ரத்தக் களரியாக மாறியதாலும், இன்று கடைபிடிக்கப்பட்ட முழு அடைப்பு வெற்றி பெற்றதாலும், முன்பு அறிவிக்கப்பட்ட அனைத்துப் போராட்ட நிகழ்ச்சிகளும் முடிவுக்கு வருவதாகக் குழு அறிவித்தது. மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களைப் போராட்டத்தைத் தொடர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது. பத்திரிகைகள் மற்றும் முக்கியத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும், மத்திய அமைச்சர்கள் திரு. சி. சுப்பிரமணியம் மற்றும் திரு. ஓ.வி. அழகேசன் ஆகியோரின் ராஜினாமா மற்றும் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு உறுதிமொழியால் ஏற்பட்ட திருப்திகரமான சூழலைக் கருத்தில் கொண்டும் மாணவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். செயற்குழுவின் இந்த முடிவைத் தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் பொதுக்குழு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது." இணையம் இல்லை என்று சொன்னாலும், இது வெறும் கதை அல்ல; நம் முன்னோர்கள் சிந்திய ரத்தம். தன் வீட்டு வாசலில் நின்ற 17 வயதுச் சிறுவன் முதல், விபரம் அறியாத 4 வயதுப் பச்சிளம் குழந்தை வரை, மொழிப் போரில் பலியான உயிர்களுக்கு, கறையான் அரித்த இந்த பழைய காகிதங்களே சாட்சி. பொள்ளாச்சியில் ராணுவம் இறக்கப்பட்டு, இயந்திரத் துப்பாக்கிகள் சொந்த மக்கள் மீதே முழங்கிய இந்த கோர சம்பவத்தை, 'இப்படி ஒன்று நடக்கவே இல்லை' என்று வரலாறு மறைக்கப் பார்க்கிறது. ஆனால், உண்மையை யாராலும் நிரந்தரமாகப் புதைக்க முடியாது. 1965-ல் சிந்திய ரத்தம் காய்ந்திருக்கலாம், ஆனால் அதன் வடுவும், வலியும் தமிழினத்தின் நினைவில் இருந்து என்றுமே அழியாது. வரலாறு என்பது வெற்றியாளர்களால் எழுதப்படுவது மட்டுமல்ல; அது இதுபோன்று தேடித் தொகுக்கப்பட வேண்டிய உண்மையும் கூட. ஆவணங்கள் இல்லையெனில், நம் தியாகங்கள் அனைத்தும் நாளடைவில் வெறும் கற்பனைக் கதைகளாகத் திரித்து எழுதப்பட்டுவிடும் போல. மறக்காமல் பகிருங்கள். நன்றி கட்டுரை: இராஜசேகரன் பாண்டுரங்கன் #பராசக்தி #Parasakthi #Pollachi #PollachiFiring #Congress #INC #DMK #TVK #tamilcinema #BJ #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 P #இந்தி எதிர்ப்பு #வரலாறு
இந்தி எதிர்ப்பு - Cmा நிணிக்காதே,  5اآۃ5آ ந்தியை {a Of Cmा நிணிக்காதே,  5اآۃ5آ ந்தியை {a Of - ShareChat
நீலகிரி மாவட்டம் மசினன்குடி பகுதியில் சீகூர் ஓடை ஓடுகிறது அதன் அருகே சலீம் அலியின் மாணவர் டேவிடர் 1964 ல் ஒரு வீட்டைக் கட்டுகிறார் அதற்கு 'சீட்டல் வாக்' என்று பெயர் சூட்டினார். மற்ற வீடுகளைப் போல அதற்கு வேலி போடவில்லை . யானைகளும் சிறுத்தைகளும் கடந்து போகும் பாதைக்கு நான் ஏன் வேலி போட வேண்டும்?" என்று கேட்டவர் அவர். இந்தச் சூழலில்தான் ஒரு குட்டி யானை அந்த வீட்டு வராண்டாவிற்கு அடிக்கடி வரத் தொடங்கியது. அவரோடு நெருங்கியது அவர் அளவில்லாத அன்பினை அதன்மேல் பொழிந்தார் மனிதர்கள் தங்களைத் துன்புறுத்த மாட்டார்கள் என்பதை அந்த யானை அங்கேதான் கற்றுக்கொண்டது. டேவிடரின் மகன் மார்க் , அந்த இளம் யானைக்கு 'ரிவால்டோ' என்று பெயரிட்டார். நாளடைவில் அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் ரிவால்டோ ஒரு 'செல்லப்பிள்ளை' ஆகிப்போனது. 2013-ம் ஆண்டு ரிவால்டோவின் வாழ்வில் ஒரு கருப்பு ஆண்டு. மார்க் டேவிடர் காலமானார். மார்க் இல்லாத அந்த வீட்டில், திறக்கப்படாத வாசலில் ரிவால்டோ பல மணி நேரம் திகைத்து நின்ற காட்சிகள் பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது. அதே காலக்கட்டத்தில், ஒரு வேட்டைக்காரனின் கண்ணியிலோ அல்லது காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியிலோ ரிவால்டோவின் தும்பிக்கை நுனி துண்டிக்கப்பட்டது. ஒரு யானைக்கு தும்பிக்கைதான் கை, மூக்கு, வாய் எல்லாம். தண்ணீர் குடிக்கவும், கிளைகளை ஒடிக்கவும் ரிவால்டோ பெரும் போராட்டத்தை சந்தித்தது. ஆனாலும், ரிவால்டோ காட்டை விட்டு விலகவில்லை. தும்பிக்கை காயத்தால் அவதிப்பட்ட ரிவால்டோவுக்கு மக்கள் வாழைப்பழங்களையும் உணவுகளையும் கொடுக்க ஆரம்பித்தனர். 50 வயதைக் கடந்த அந்த முதிய யானை, ஊருக்குள் வந்தாலும் ஒரு குழந்தையைக் கூட மிரட்டியதில்லை. காட்டின் ஆக்ரோஷமான குணம் அவனிடம் இல்லை; மாறாக ஒரு முதிர்ந்த மனிதனின் நிதானம் இருந்தது. வயது முதிர்வு மற்றும் சக யானைகளுடன் ஏற்பட்ட மோதலால் உடல் நலிவுற்ற ரிவால்டோ, கடந்த சில நாட்களாக நடக்க முடியாமல் போனது. வாழைத்தோட்டம் கிராமத்தில் படுத்த படுக்கையாக இருந்த ரிவால்டோவுக்கு வனத்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. இன்று காலை , நீலகிரி மலைகளின் காற்றோடு ரிவால்டோவின் மூச்சுக்காற்று கலந்துபோனது . ரிவால்டோவின் மரணம் ஒரு யானையின் இறப்பு மட்டுமல்ல. மனிதன் நினைத்தால் ஒரு காட்டு விலங்குடன் கூட அன்பால் பிணைக்கப்பட முடியும் என்பதற்கு ரிவால்டோ ஒரு வாழும் சாட்சியாக இருந்தது. மாவனல்லா மற்றும் பொக்காபுரம் காடுகள் இனி ரிவால்டோவின் கம்பீரமான பிளிறலைக் கேட்க முடியாது, ஆனால் ரிவால்டோ விட்டுச் சென்ற அந்த 'அமைதி' என்றும் அந்தப் பாதைகளில் உலவிக்கொண்டிருக்கும்.யான #🐘யானைகள்🐘 #சுற்றுச்சூழல் #📷நினைவுகள்
🐘யானைகள்🐘 - ShareChat
நாங்கள் மனிதர்களை நேசிக்கின்றோம், இயற்கையை நேசிக்கின்றோம் அதனால் போராடுகின்றோம்!!! #may17movement #ThirumuruganGandhi #valentinesday #காதல் #❤️எங்கேயும் காதல் #💗காதலர் தின வாழ்த்துக்கள்💕 #💪 மே17 இயக்கம் #தோழர் திருமுருகன் காந்தி
காதல் - ShareChat
00:42
#அறிஞர் அண்ணா #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #💪 மே17 இயக்கம்
அறிஞர் அண்ணா - மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி பெருமை சேர்த்தவர் சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்தவர் ஆரிய வைதீக புராணக் கதைகளை வாதத்திறமையால் அம்பலப்படுத்தியவர்  தன் சமூக நீதி மாநில உரிமை, மொழி உரிமை அரசியலை முன்னெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்களூக்கு வீரவணக்கம் (03 பிப்ரவரி 1969) மே பதினேழு இயக்கம் ull 17 TIuru' 9884864010 944327010 மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி பெருமை சேர்த்தவர் சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்தவர் ஆரிய வைதீக புராணக் கதைகளை வாதத்திறமையால் அம்பலப்படுத்தியவர்  தன் சமூக நீதி மாநில உரிமை, மொழி உரிமை அரசியலை முன்னெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்களூக்கு வீரவணக்கம் (03 பிப்ரவரி 1969) மே பதினேழு இயக்கம் ull 17 TIuru' 9884864010 944327010 - ShareChat
#🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #தோழர் திருமுருகன் காந்தி #💪 மே17 இயக்கம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🚨கற்றது அரசியல் ✌️ - எளிதான மௌனமும் அரிதான அமைதியம் க்களைவயற்கும உண்டெனில் கவலகளை உ தருணங்களில் மட்டுமே எளிதான மௌனமும் அரிதான அமைதியம் க்களைவயற்கும உண்டெனில் கவலகளை உ தருணங்களில் மட்டுமே - ShareChat