Rationalist
ShareChat
click to see wallet page
@332020744
332020744
Rationalist
@332020744
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
கவின் ஆணவப்படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய் எனும் முழக்கத்துடன் மே17 இயக்கத்தினரின் சாலைமறியலில், தன் மகள் காவலர்களால் இழுத்துச் செல்லப்படுகிறார். எந்த ஒரு தந்தைக்கும் இது வருத்தத்தை, கோபத்தை கொடுத்திருக்கும். தன் மகள் ஏன் போராட்டத்தில் இறங்கி அல்லல் படவேண்டுமென ஆதங்கம் வரும். ஆனால் சிவா திலீபன் அப்படியெல்லாம் கோபம் கொள்ளவில்லை. "மறியல் போராட்டத்திற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள்?" என்கிறார். இருநூறுக்கும் சற்று குறைவாக வந்திருந்தார்கள். கால அவகாசம் குறைவு, வேலைநாள் அதனால் திரட்ட இயலாமல் போய்விட்டது என்ற காரணத்தை அவரால் ஏற்க இயலவில்லை. பெருந்திரளாய் தமிழர்கள் திரளாமல் தீர்வு எப்படி கிடைக்கும் என அங்கலாய்த்தார். அந்த சாலை மறியல் சிவா திலீபன் அன்பு மகளான கோகிலாவின் திருமண காலகட்டத்தில் நடந்த போராட்டம். அதில் அவர் காயம்பட்டதெல்லாம் அவருக்கு கவலையளிக்கவில்லை. சாதியொழிப்பு போராட்ட களத்தில் முன்னனியில் தன்மகள் நிற்பதில் அவருக்கு பெருமை. தன் மகளுக்கு சாதி-மறுப்பு திருமணத்தை சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணமாக செய்துவைத்து தற்போது, ஓராண்டு கூட முடியவில்லை. தொடர்ச்சியாக நடந்த தூய்மைப்பணியாளர் போராட்டத்தில் அன்றாடம் மாலை முதல் இரவுவரை சிவா திலீபனின் இணையர் இசைமொழி பங்கெடுத்து நேரம் கழித்தே வீடுதிரும்புவார். மனைவி போராட்ட களம் சென்று வருவது அவருக்கு மனத்தடையை கொடுத்ததில்லை. எத்தனை பேர் ஆதரித்து வருகிறார்கள் என கேட்பார். பால-ஸ்*தீன ஆதரவு பேரணியே அவர் மிக மகிழ்வுடன் பங்கெடுத்த நிகழ்வு. ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கெடுத்த பேரணியில் பெருமையுடன் நடந்து வரும் படங்களை காணலாம். மாஞ்சோலை, அனகாபுத்தூர் வீடு இடிப்பு என நடந்த போராட்டங்களில் போதுமான மக்கள் பங்கேற்பு இல்லை என்பது அவருக்கு சோர்வை கொடுத்தது. மதவாதிகள், சாதியவாதிகளை எதிர்த்த போராட்டங்களில் பெருந்திரளாய் தோழர்கள் பங்கெடுப்பதில்லை என்பது அவர் மனதை துன்புறுத்தியது. தொடர்ந்து நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆளுனர் எதிர்ப்பு போராட்டம், நீட் எதிர்ப்பு என எவையும் கூர்மையடையவில்லை என்பதை அவர் தொடர்ந்து பேசி வந்திருந்தார். ரயில்வேயில் தமிழ் தொழிலாளர்களுக்கு வேலைகிடைப்பதில்லை என்பது குறித்து 2015ம் ஆண்டுவாக்கில் ஐ.சி.எப் அப்ரண்டிஷ் போராட்டத்திற்கு மே17 தோழர்களுடன் சிவா பங்கெடுத்துள்ளார். தொடர்ந்து இரு ஆண்டுகளாக நடந்த போராட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் முன் தீக்குளித்து இறந்து போனார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கபப்ட்டு நடந்த போராட்டத்தில் மே17 இயக்கம் பங்கெடுத்திருந்தது. இவையனைத்தையும் சிவா திலீபன் நன்கு அறிந்தவர். இதேபோல ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தமிழர் வேலை பறிபோவது குறித்த போராடங்களில் அவர் பங்கெடுத்துள்ளார். பெருதிரளாய் தமிழர்கள் திரளாமல் போராட்டம் வெல்லாது என்பார். இறுதியாக தமிழ் மொழிக்காகவாவவது தமிழன் திரளமாட்டானா என கவலைகொண்டார். சிவா திலீபன் இறுதி ஊர்வலத்தில் அவரது இணையர் பேசும் போது சொன்ன வார்த்தைகள் இதை சுட்டிக்காட்டும், " நம் மொழிக்காககவாவது வர மாட்டீர்களா..." எனக் கேட்டார் தோழர் இசைமொழி . சிவா திலீபனின் மகள் கோகிலா இன்னும் மேலதிகமாக, தன் தந்தை பாசிசத்தை வெல்வதற்காக உயிரைக் கொடுத்துள்ளார். போலி தமிழ்த்தேசியவாதிகளை அம்பலப்படுத்த அவர் தன்னுயிர் ஈகம் செய்திருக்கிறார் என பதிவு செய்தார். இபப்டியான ஒரு சிந்தனையாளனுக்கு, களப்போராளிக்கு, குடும்ப தலைவனுக்கு, தமிழ் மொழி நேயனுக்கு, மொழிப்போர் கண்ட பெருவீரனுக்கு நினைவேந்தல் நிகழ்வும், படத்திறப்பும் நடக்க இருக்கிறது. இந்நிகழ்வில் பங்கெடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஒரு தன்னலமற்ற போராளிக்கு தமிழினம் மரியாதை செய்ய வேண்டிய நிகழ்வு. இந்நாளிலும் உங்களுக்கு தனிப்பட்ட பணிகள் முன்னிலை பெறுமென நீங்கள் நினைத்தால், உங்களை போன்றோரின் பங்கேற்பற்ற நிலையை எண்ணி வருந்தியே சிவா திலீபன் உயிர்விட துணிந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை பெருந்திரளாய் போராட்டங்களில் பங்கெடுத்திருப்பீர்களென்றால், சிவா திலீபன் நம்மோடு இன்று உரையாடிக் கொண்டிருப்பார். எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள் நடத்திய சமயத்தில் அதுகுறித்து பதிவுகளையோ, பகிர்வையோ கூட செய்யாத பலர் சிவா திலீபன் மரணம் தேவையற்றது, இறந்து சாதிக்க இயலாதென என்றெல்லாம் எழுதி பார்க்க முடிந்தது.. 'குடும்பம் உள்ளது, ஆகவே உயிர்விடாதீர்கள்' என பதிவு எழுதியவர்கள், இதே போல, போராட்ட நிகழ்வுகளை ஆதரித்து பதிவு செய்து, களத்தில் பங்கெடுத்திருந்தால் சிவா திலீபன் தன் குடும்பத்தோடு அன்றாட வாழ்வை தொடர்ந்திருப்பார். இதுவரை போராட்டங்கள், நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்காமல் அன்றாட வாழ்வில் மூழ்கி இருக்கும் நண்பர்களே, உங்களுக்காகவும் சேர்த்தே தனது வாழ்வை கொடுத்திருக்கிறார் சிவா திலீபன். அத்தகைய உன்னத மனிதனுக்கு மரியாதை செய்ய வாருங்கள். நாள் :29-03-2026 - ஞாயிறு நேரம்: மாலை 4:00 இடம்: முத்தமிழ்ப் பேரவை, அடையாறு பாலம் அருகில், அடையாறு-ஆர்.ஏ.புரம், சென்னை. எங்களது செய்திகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகவே இச்செய்திகளை உங்கள் பதிவில் பதிந்தும், பிற சமூகவளைதளமாகிய வாட்சப், எக்ஸ், இண்ஸ்டா வாயிலாகவும் பரப்புரை செய்ய வேண்டுகிறோம். திருமுருகன் காந்தி மே17 இயக்கம். #தமிழ்நாடு தமிழருக்கே! #மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் #மொழிப்போர் ஈகி சிவா திலீபன் #💪 மே17 இயக்கம் #இந்தி திணிப்பு
தமிழ்நாடு தமிழருக்கே! - பூங்கா ٤ ٧ " வல்லாதத Park தமி்ம இயக்கம் உடல் மப்ஊக்கு! உயிர்தமிழுக்கு! இந்தி பரிக! 0 தமிழ் வழ்க! மொழிப்போர் ஈகி தமிழ் மொழிநேயர் சிவா திலீபன் Bulwi நினைவேந்தல் CELEBRATION படத்திறப்பு நிகழ்வு TANIILS JUS २९ Ioni॰ २०२६ ஞாயிறு மாலலை 400 மணி முத்தமிழ்ப் பேரவை டிஎன்ராஜரத்தினம் அரங்கு அடைபாறு பாலம் அருகில் ஆர்ஏபுரம் அபைபாறு சென்பை மே பதினேழு இயக்கம் 0 17 El5till  9884864010 / 9444327010 பூங்கா ٤ ٧ வல்லாதத Park தமி்ம இயக்கம் உடல் மப்ஊக்கு! உயிர்தமிழுக்கு! இந்தி பரிக! 0 தமிழ் வழ்க! மொழிப்போர் ஈகி தமிழ் மொழிநேயர் சிவா திலீபன் Bulwi நினைவேந்தல் CELEBRATION படத்திறப்பு நிகழ்வு TANIILS JUS २९ Ioni॰ २०२६ ஞாயிறு மாலலை 400 மணி முத்தமிழ்ப் பேரவை டிஎன்ராஜரத்தினம் அரங்கு அடைபாறு பாலம் அருகில் ஆர்ஏபுரம் அபைபாறு சென்பை மே பதினேழு இயக்கம் 0 17 El5till  9884864010 / 9444327010 - ShareChat
மொழிப்போர் போராளி தோழர் சிவா திலீபன் ஈகியானார்! அன்னைத் தமிழ் காக்க ஆதிக்க இந்திக்கு எதிரான போரில் தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்! - மே பதினேழு இயக்கம் ஆதிக்க இந்திக்கு எதிராக மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வரும் ரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 11 அன்று சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர் சிவா திலீபன் எனும் சிவக்குமார் (வயது 55), ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என்று முழங்கியபடி ஓடும் ரயில் முன்பு பாய்ந்தார். படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் இருந்த தோழர் சிவா திலீபன் அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி இன்று (18-03-2026 புதன்கிழமை) இயற்கை எய்தினார். அன்னைத் தமிழ் காக்க ஆதிக்க இந்திக்கு எதிரான போரில் தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது. மே பதினேழு இயக்கத்தின் மூத்த தோழரான சிவா திலீபன் ஓர் சமரசமற்ற போராளி, தமிழினப் பற்றாளர், அன்னைத் தமிழை உயிரென நேசித்தவர், அடக்குமுறைக்கு அஞ்சா தமிழ்த்தேசிய செயல்வீரர், பெரியாரிய சிந்தனையாளர், அம்பேத்கரிய செயற்பாட்டாளர், மார்க்சியத்தை நேசித்தவர். மேதகு பிரபாகரனின் பற்றாளர், ஈழவிடுதலை நேசன். 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்ற தீவிர புலிகள் பற்றாளர். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம், மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட சூற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்றவர். நீட் எதிர்ப்பு, இட ஒதுக்கீட்டு உரிமை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட சமூகநீதி போராட்டங்களில் களம் கண்டவர். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாசிச பாஜக ஆட்சியை கண்டித்து, மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோதெல்லாம் அவருக்கெதிரான கருப்புக்கொடி போராட்டங்களில் பங்கெடுத்தவர். அப்படியாக மோடி திருச்சி வருகை தந்த மார்ச் 11 அன்று பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி அழிக்கும் போராட்டத்தில் பங்கெடுத்து, தாய் தமிழை காக்க தன் உயிரை ஈந்த முன்வந்தவர். தோழர் சிவா திலீபன் அவர்கள் 13 ஆண்டுகளாக மே பதினேழு இயக்கத்தில் துடிப்புடன் செயல்பட்டு வந்தவர். கடந்த 2017ம் ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மெரினா கடற்கரையில் நடத்த முற்பட்ட போது அரசின் அடக்குமுறையை சந்தித்தவர். அச்சமயத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களோடு சிறை சென்றவர். மே பதினேழு இயக்கத்தின் அனைத்து போராட்டத்திலும் தவறாது கலந்துகொண்டவர். அவர் மட்டுமல்லாது அவரது இணையர் தோழர் இசைமொழி எனும் கீதா அவர்களையும் மகள் கோகிலா அவர்களையும் அரசியல்படுத்தி தமிழினப் போராட்டக் களத்திற்கு அளித்தவர். ஆதிக்க இந்திக்கு எதிரான போராட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற தமிழ்த்தேசியப் பெருவிழா மாநாட்டில் இந்திக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்டு, தொடர்ச்சியான பரப்புரைகளை மேற்கொண்டது. ஒன்றிய அரசினால் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிக்கப்படுவதும், ஒன்றிய அரசுப் பணிகளில் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதும் என தமிழ்-தமிழர்கள் மீதான ஒன்றிய அரசின் பாரபட்சம் தீவிரமடைந்த நிலையில், மே 17 இயக்கம் ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டங்களை மேற்கொள்ளுமென அறிவித்தது. அதன்படி உலகத் தாய்மொழி நாளன்று (பிப். 21) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்தியது. அந்த போராட்டத்தின் போதும் தோழர் சிவா திலீபன் களத்தில் முன்னின்றார். அதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 11 அன்று, மொழிப்போர் தியாகி தாலமுத்து அவர்களின் நினைவு நாளில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை மேற்கொண்டது. அப்போது எதிர்பாராதவிதமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களுடைய தோழர் சிவா திலீபன், ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என்று முழங்கியபடி ஓடும் ரயில் முன்பு பாய்ந்தார். நொடிப் பொழுதில் நடந்தேறிய இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற தோழர்கள், கடுமையாக காயமடைந்திருந்த அவரை உடனடியாக மீட்டு அருகிலிருந்த இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற்று தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார். மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வருகை தந்து உயர் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்திச் சென்றார். முன்னதாக மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சிகிச்சையை மேற்பார்வையிட்டு சென்றார். மேலும், மதிமுக பொதுச்செயலாளர் ஐயா வைகோ மற்றும் பொருளாளர் தோழர் செந்திலதிபன், விசிக தலைவர் முனைவர் தொல். திருமாவளவளன் மற்றும் தோழர் வன்னி அரசு, தோழர் சிந்தனைச் செல்வன், சிபிஎம் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவஹிருல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அப்துல் சமது, தாம்பரம் யாக்கூப், @எஸ்டிபிஐ தமிழ்நாடு தலைவர் தோழர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தோழர் அன்சாரி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் தோழர் முகமது ஷெப்லி, தோழர் பிர்தவ்ஸ், திராவிடர் கழகத்தின் தோழர் அருள்மொழி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் தோழர் சுப.வீரபாண்டியன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் தோழர் ஜக்கையன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் ஆட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன், மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் வெற்றிவேல் செழியன், மேலும் அம்மா அற்பதம்மாள், தோழர் பேரறிவாளன், தோழர் மன்சூர் அலிகான் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், ஆளுமைகள், தோழர்கள் நேரில் வந்திருந்திருந்து சிவா திலீபன் தோழரின் உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து சென்றனர். 8 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் தோழரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட மாரடைப்பு காரணமான இரவு 9:30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. தோழர் சிவா திலீபன் அவர்களை இழந்தது மே பதினேழு இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தாய்மொழி தமிழை காக்க ஆதிக்க இந்திக்கு எதிராக போராடிய தோழர் சிவா திலீபன் மொழிப்போர் ஈகியரில் ஒருவராகிப் போனார். அன்னை தமிழுக்காகப் போராடிய தோழர் சிவா திலீபன் இன்று தமிழ்ச் சமூகத்தின் சொத்தாகிவிட்டார். தமிழ் மொழிக்கான அவரது ஈகம் தமிழ் வாழும் வரை தமிழ்ச் சமூகத்தால் போற்றப்பட வேண்டும். தோழர் சிவா திலீபன் பற்ற வைத்த ஆதிக்க இந்திக்கு எதிரான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியது. தோழர் சிவா திலீபன் மூட்டிய நெருப்பை அணையவிடாமல் ஒவ்வொரு தமிழனும் பாதுகாப்போம். ஆதிக்க இந்தியை தமிழ்நாட்டை அகற்றுவதே தோழர் சிவா திலீபனின் ஈகத்திற்கு அளிக்கும் மரியாதையாகும். அதனை செய்துமுடிப்போம் என உறுதியேற்போம். கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்! வீரவணக்கம் வீரவணக்கம்! மொழிப்போர் ஈகி சிவா திலீபனுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்! மே பதினேழு இயக்கம் 9884864010 #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #தமிழ்நாடு தமிழருக்கே! #✍️மே17 இயக்கக் குரல் #இந்தி திணிப்பு
🚨கற்றது அரசியல் ✌️ - அன்னைத் தமிழை நேசித்து எதிர்த்து ஆதிக்க இந்தி திணிப்பை ٤ ٧ தமிழ் வாழ்க என முழக்கமிட்டு தன்னுயிர் கொடுத்த மொழிப்போர் ஈகி மே 17 இயக்கப் பொறுப்பாளர் தலீபன் தோழர் சிவ வீரவண்க்கம் பகசு மொழிப்போர் ஈகியர் நினைவிடம்  இறுதி நகழவு வள்ளலார் நகர் பேரூந்து நிலையம் பழைய வண்ணாரப்பேட்டை மெடரோர நாள் 19 மார்ச 2026 வியாடிக்கிழமை மாலை 4:00 மணி தமிழ் வாழ்க இந்தி வீழ்க! ஆதிக்க இந்தியை வெட்டிப்புதைக்க உறுதி ஏற்கிறோம் மே பதினேழு இயசக்கம் 9444327010 அன்னைத் தமிழை நேசித்து எதிர்த்து ஆதிக்க இந்தி திணிப்பை ٤ ٧ தமிழ் வாழ்க என முழக்கமிட்டு தன்னுயிர் கொடுத்த மொழிப்போர் ஈகி மே 17 இயக்கப் பொறுப்பாளர் தலீபன் தோழர் சிவ வீரவண்க்கம் பகசு மொழிப்போர் ஈகியர் நினைவிடம்  இறுதி நகழவு வள்ளலார் நகர் பேரூந்து நிலையம் பழைய வண்ணாரப்பேட்டை மெடரோர நாள் 19 மார்ச 2026 வியாடிக்கிழமை மாலை 4:00 மணி தமிழ் வாழ்க இந்தி வீழ்க! ஆதிக்க இந்தியை வெட்டிப்புதைக்க உறுதி ஏற்கிறோம் மே பதினேழு இயசக்கம் 9444327010 - ShareChat
#இந்தி திணிப்பு #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே! #💪 மே17 இயக்கம் #🚨கற்றது அரசியல் ✌️
இந்தி திணிப்பு - ٤٧   உறுதயேற்கறோம் ஆதக்க இந்தயை தமழ் வாழ்க! வெட்டிப் இந்தி ஒழிக! புதைப்போம்! மொழிப்போர் ஈகி சிவாதிலிபன் தோழர் அவாகபர்க்கு வீரவணக்கம் மே பதினேழு இயக்கம் 98848040i0 9444327OI0  ٤٧   உறுதயேற்கறோம் ஆதக்க இந்தயை தமழ் வாழ்க! வெட்டிப் இந்தி ஒழிக! புதைப்போம்! மொழிப்போர் ஈகி சிவாதிலிபன் தோழர் அவாகபர்க்கு வீரவணக்கம் மே பதினேழு இயக்கம் 98848040i0 9444327OI0 - ShareChat
#✍️மே17 இயக்கக் குரல் #💪 மே17 இயக்கம் #🚨கற்றது அரசியல் ✌️
✍️மே17 இயக்கக் குரல் - JUSIII புதிய தலைமுறை   ball న Aಖm      வாவ பமனuச்ய சிவா திலீபன் இறுதி ஊர்வலம் கலந்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கொண்டு பாய்ந்து படுகாயமடைந்ததில் உயிரிழந்த ரயிலில் மே 17 இயக்கத்தின் நிர்வாகி சிவா திலீபனின் இறுதி ஊர்வலம் மூலக்கொத்தளத்தில் நடைபெற்றது இறுதி ஊர்வலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வீரவணக்க முழக்கங்களுடன் பேரணியாகச் சென்றனர் 19.03.2026 Puthiyathalaimurai comn JUSIII புதிய தலைமுறை   ball న Aಖm      வாவ பமனuச்ய சிவா திலீபன் இறுதி ஊர்வலம் கலந்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கொண்டு பாய்ந்து படுகாயமடைந்ததில் உயிரிழந்த ரயிலில் மே 17 இயக்கத்தின் நிர்வாகி சிவா திலீபனின் இறுதி ஊர்வலம் மூலக்கொத்தளத்தில் நடைபெற்றது இறுதி ஊர்வலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வீரவணக்க முழக்கங்களுடன் பேரணியாகச் சென்றனர் 19.03.2026 Puthiyathalaimurai comn - ShareChat
#😅 தமிழ் மீம்ஸ் #🤭அரசியல் மீம்ஸ் #🤩இன்றைய காமெடி🤣 #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️
😅 தமிழ் மீம்ஸ் - எந்தகட்சி கூட்டணிலசேரனும்ன்றத டெல்லிலஉக்காந்துருக்கவன்முடிவு பண்றான் ஆட்சியாஇல்லையானாடெல்லில கூட்டணி ுக்கவன்பதில் சொல்றான் சரி டெல்லிலஇருக்கவன் EDயகாட்டி பயமுறுத்துறானுஎடுத்துகிட்டாகூட ப்ப EWS தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வருமானு கேட்டா "NDA" ஆட்சிக்குவந்தா கண்டிப்பாவரும்னுயூட்யூபர்பாண்டேபதில் சொல்றான் யாரு யாரோமுடிவு பண்ணி பதில் சொல்லிட்டு இருக்கான் கூட்டணிக்கு தலைமைனு சொல்லிட்டு யாருயாஇவன் உக்காந்துமிக்சர்தின்னுட்டு டம்மியா ுக்கான் எந்தகட்சி கூட்டணிலசேரனும்ன்றத டெல்லிலஉக்காந்துருக்கவன்முடிவு பண்றான் ஆட்சியாஇல்லையானாடெல்லில கூட்டணி ுக்கவன்பதில் சொல்றான் சரி டெல்லிலஇருக்கவன் EDயகாட்டி பயமுறுத்துறானுஎடுத்துகிட்டாகூட ப்ப EWS தமிழ்நாட்டுல நடைமுறைக்கு வருமானு கேட்டா "NDA" ஆட்சிக்குவந்தா கண்டிப்பாவரும்னுயூட்யூபர்பாண்டேபதில் சொல்றான் யாரு யாரோமுடிவு பண்ணி பதில் சொல்லிட்டு இருக்கான் கூட்டணிக்கு தலைமைனு சொல்லிட்டு யாருயாஇவன் உக்காந்துமிக்சர்தின்னுட்டு டம்மியா ுக்கான் - ShareChat
#தமிழின எதிரி RSS-பாஜக #இந்தி திணிப்பு #🚨கற்றது அரசியல் ✌️ #🎥Trending வீடியோஸ்📺 #✍️மே17 இயக்கக் குரல்
தமிழின எதிரி RSS-பாஜக - ShareChat
00:46
#🚨கற்றது அரசியல் ✌️ #✍️மே17 இயக்கக் குரல் #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழின எதிரி RSS-பாஜக #💪 மே17 இயக்கம்
🚨கற்றது அரசியல் ✌️ - CENTRAL | চুঁ ़ ٤ 8 = இந்தித்திணிப்புஎன்பது நடைமுறையில் சமஸ்கிருத திணிப்பே இந்தியஒன்றிய அரசின்திட்டங்கள் அனைத்திற்கும் இந்தியில் பெயர்வைக்கப்படுவதாக நாம் நினைக்கிறோம் ஆனால் அவைபெரும்பாலும் சமஸ்கிருதபெயர்களாகவே உள்ளன எடுத்துக்காடாகதண்ணீர்என்பதை இந்தியில் பானி பபHரி paanee என்றும் சமஸ்கிருதத்தில் ஜலம் (H Jalam) என்றும் அழைக்கிறார்கள் ஒன்றிய அரசின் நீர்வளத்துறையின் பெயரானமத்தியநீர் ஆணையம் என்பதை கேந்திரிய ஜல் ஆயோக்குசqஎ3eT kendreey jal aayog என்றும் அந்த மைச்சகத்தின்பெயரரான நீர்வள அமைச்சகத்தை ஜல் 69పలీ IoDgIIGట' (uIF aIf; HaITq - jal shakti mantraalayl 6r6rmlu அழைக்கின்றனர் இதில் வரும் ஜல் என்றசொல் இந்தி சொல் அல்ல. சமஸ்கிருத சொல் அதுமட்டும் அல்லாமல் ஒன்றியநீர்வளத்துறை அமைச்சகத்தின் இலச்சினையில் (Logo இருக்கும் "Water is light, essence and immortality" என்றபொருள்படும் வாசகம் முழுவதுமே சமஸ்கிருதவாசம் என்று AI சொல்கிறது இந்தித்திணிப்பைஎதிர்த்துநாம் நடத்தும் போராட்டங்களை பார்ப்பான் கும்பல் கடுமையாக எதிர்ப்பதான் காரணம் இப்பொழுது புரிகிறதா? CENTRAL | চুঁ ़ ٤ 8 = இந்தித்திணிப்புஎன்பது நடைமுறையில் சமஸ்கிருத திணிப்பே இந்தியஒன்றிய அரசின்திட்டங்கள் அனைத்திற்கும் இந்தியில் பெயர்வைக்கப்படுவதாக நாம் நினைக்கிறோம் ஆனால் அவைபெரும்பாலும் சமஸ்கிருதபெயர்களாகவே உள்ளன எடுத்துக்காடாகதண்ணீர்என்பதை இந்தியில் பானி பபHரி paanee என்றும் சமஸ்கிருதத்தில் ஜலம் (H Jalam) என்றும் அழைக்கிறார்கள் ஒன்றிய அரசின் நீர்வளத்துறையின் பெயரானமத்தியநீர் ஆணையம் என்பதை கேந்திரிய ஜல் ஆயோக்குசqஎ3eT kendreey jal aayog என்றும் அந்த மைச்சகத்தின்பெயரரான நீர்வள அமைச்சகத்தை ஜல் 69పలీ IoDgIIGట' (uIF aIf; HaITq - jal shakti mantraalayl 6r6rmlu அழைக்கின்றனர் இதில் வரும் ஜல் என்றசொல் இந்தி சொல் அல்ல. சமஸ்கிருத சொல் அதுமட்டும் அல்லாமல் ஒன்றியநீர்வளத்துறை அமைச்சகத்தின் இலச்சினையில் (Logo இருக்கும் "Water is light, essence and immortality" என்றபொருள்படும் வாசகம் முழுவதுமே சமஸ்கிருதவாசம் என்று AI சொல்கிறது இந்தித்திணிப்பைஎதிர்த்துநாம் நடத்தும் போராட்டங்களை பார்ப்பான் கும்பல் கடுமையாக எதிர்ப்பதான் காரணம் இப்பொழுது புரிகிறதா? - ShareChat
இன்று ஈரோடு... தமிழர்களுக்கு, ஒன்றிய அரசு பணியிடங்களில் வேலையை நிராகரிக்கும் பாஜக அரசு, இந்தியை, இந்தி நபர்களை தமிழர்கள் மீது திணிக்கிறது. தமிழர்களுக்கான பணியிடங்களில் வடநாட்டு இந்தி பேசும் மாநிலத்திலிருந்து ஆட்களை நியமனம் செய்கிறார்கள். இதையெதிர்த்த மே17 போராட்டம், தோழர் சிவா திலீபன் அவர்களின் விருப்பப்படி முழுவீச்சுடன் தொடர்கிறது. தமிழர்களே தயக்கம் ஏன்? தடைகளை உடைத்து அன்னைத் தமிழ் காக்க வாருங்கள்! #இந்தி திணிப்பு #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம்
இந்தி திணிப்பு - ஈரோடுசந்திப்பு ERODE JUNCTION 15L79= {ಘ  சந்திப்பு ஈாடு ERODEJUNCTION Pin.838992 SL;ITI9lr ஈரோடுசந்திப்பு ERODE JUNCTION 15L79= {ಘ  சந்திப்பு ஈாடு ERODEJUNCTION Pin.838992 SL;ITI9lr - ShareChat
#தமிழ்த்தேசியப்_பெருவிழா #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
தமிழ்த்தேசியப் - அறிஞர் அவையம் 07, 08 மார்ச் 2026 சனிக்கிழமை காலை  மலபா மூதவ் விகஎம் மகாஸ் மேட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில் பசைதாப்பேட்டை ಗfuultutuT ' 54[[]638[[ தா EEEIII பெருவிழா 2026 மே பதினேழு இயக்கம் t 17 BFan 9884864010|9444327010 அறிஞர் அவையம் 07, 08 மார்ச் 2026 சனிக்கிழமை காலை  மலபா மூதவ் விகஎம் மகாஸ் மேட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில் பசைதாப்பேட்டை ಗfuultutuT ' 54[[]638[[ தா EEEIII பெருவிழா 2026 மே பதினேழு இயக்கம் t 17 BFan 9884864010|9444327010 - ShareChat
#✍️மே17 இயக்கக் குரல் #📺அரசியல் 360🔴 #தமிழ்த்தேசியம் #தமிழ்நாடு தமிழருக்கே! #தோழர் திருமுருகன் காந்தி
✍️மே17 இயக்கக் குரல் - 1965-ஆம் ஆண்டு மொழிப்போரில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர் அண்ணாமலைப் மொழிப்போர் ஈகியர் இராசேந்திரன் அவர்களுக்கு E Lo sl  வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆதிக்க இந்தியை அழிக்கும் போராட்டம்! இந்திமொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் 01 [IL8, 2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 10. 00மணி சிதம்பரம் ரயில் நிலையம் சிதம்பரம் CHIDAMBARAM 008001 6 மே பதினேழு இயக்கம் u 17 ALuul 9884864010 9444327010 1965-ஆம் ஆண்டு மொழிப்போரில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர் அண்ணாமலைப் மொழிப்போர் ஈகியர் இராசேந்திரன் அவர்களுக்கு E Lo sl  வீரவணக்கம் செலுத்தும் விதமாக ஆதிக்க இந்தியை அழிக்கும் போராட்டம்! இந்திமொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் 01 [IL8, 2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 10. 00மணி சிதம்பரம் ரயில் நிலையம் சிதம்பரம் CHIDAMBARAM 008001 6 மே பதினேழு இயக்கம் u 17 ALuul 9884864010 9444327010 - ShareChat