Rationalist
ShareChat
click to see wallet page
@332020744
332020744
Rationalist
@332020744
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
#📺அரசியல் 360🔴 #📷நினைவுகள் #தமிழ்த்தேசியம் #📰தமிழக அப்டேட்🗞️ #தமிழ்நாடு தமிழருக்கே!
📺அரசியல் 360🔴 - ShareChat
01:19
தமிழரிடத்தில் தாய்த்தெய்வ வழிபாடுகள் மிகப்பழமையானது. இதன் நீட்சி இன்றும் தமிழரிடத்தில் உள்ளது. அம்மன் கோவில் திருவிழாக்களில், தமிழர் திருமணஙகளில் முளைப்பாரி போடுதல் ஒரு பண்பாடாக இன்றும் தொடர்கிறது. இது தாய்த்தெய்வ வழிபாட்டின் நீட்சியாக 'வளமைப் பண்பாடாக' இயஙகுகிறது. 'கிராம தேவதைகளான காளி, மாரி, பத்திரகாளி முதலான பெண் தெய்வஙகளை நோக்கி முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் ஒரு சடங்கு முளைப்பாரி ஆகும்.. தமிழ்நாட்டில் இப்பண்பாடு மிகப்பழமையானது என்பார் ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள். "..ஆரியரது வருகைக்கு முந்தைய தொன்மங்கள் 'வளமைப்பண்பாட்டை' அடிப்படையாகக் கொண்டவை. 'அணங்கு', 'முதுமகள்,' மூத்தோள்' என்பது இவற்றில் சில. இவை தமிழர் தொன்மங்கள். ஆரியரது தொன்மங்கள் வேதபுராணங்களை சார்ந்தவை. ஆரியரது கடவுள்கள் அரசவை சார்ந்தவையாக இயங்கின. இவை அரசன்-அரசவையின் வேள்விமுறை குறித்தவையாக இருந்தன, அதாவது அதிகாரத்திற்கான சடங்குகளாக இயங்கியவை எனலாம். அதனால் தான் ஆரியர்களின் கடவுள் தொன்மங்கள் வேதம்(வைதிக மரபு சார்ந்த) சார்ந்து அரசர்களுக்கான பாடல்களில் காணப்படுகின்றன.." என்கிறார் ஆய்வாளர் தேவ.பேரின்பன். அதாவது தமிழர்களின் தொன்மங்கள் பெண்களை முன்னிறுத்திய தாய்தெய்வ வழிபாட்டின் நீட்சியாகவும், இவற்றிற்கு முற்றிலும் வேறாக ஆரியர் தொன்மங்கள் வேத சடங்குகள்-வேள்விச் சடங்குகளாக அரசனுக்குரியதாக இயங்கின என்கிறார். எளியோர்களின் பண்பாடே இன்றுவரை தொடர்வதை காணலாம் என்பதே இதன் அடித்தளம்.. தமிழர் மரபில் தாய்த்தெய்வ வழிபாடு குறித்து பெரியரியவாதியும், தமிழ்த்தேசிய ஆய்வாளருமாம சி.ஆரோக்கியசாமி அவர்கள் இச்சிந்தனைகளை தொகுத்து நூலை வெளியிட்டுள்ளார்.. இவ்வாறாக தமிழர்களின் வழிபாட்டு முறையும், பண்பாட்டு முறையும் தனித்துவமானதாக, சமத்துவம் கொண்டவையாக இயங்கின. இவற்றை தின்று செரிக்கும் வகையிலன ஆதிக்கத்தையே ஆரிய-வழிபாட்டுக் கூறுகள் இருக்கின்றன. இவ்வாறாக ஆரிய-வேதத்தால் (வைதீகம்) ஆக்கிரமிக்கப்பட்டு சுவீகரிக்கப்பட்ட தமிழரின் தொல் தெய்வஙகள் இன்றும் பெருந்தெய்வக் கோயில் கருவறைகளுக்கு வெளியே தூண்களிலும், கோபுரங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் பல தெய்வங்கள் எளிய மக்கள் வழிபட்டு வந்தவை அல்லது இன்றும் வழிபடக்கூடியவை. ஆசீவக சாத்தனார்கள், ஐயனார்கள் இவ்வாறாக மாற்றப்பட்டனர் என்பார் சி.ஆரோக்கியசாமி அவர்கள். இவ்வாறாக தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றையும், அதன் பின்புலத்தையும், அதன் நீட்சிகளையும் அறிந்து கொள்ளவே மே17 இயக்கத்தால் 'தமிழ்த்தேசியப் பெருவிழா' கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் மார்ச் 07, 08 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநாடு நடக்க இருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரையும் அழைக்கிறோம். போலிகளை விரட்டியடித்து, ஆரியத்தை அழித்தொழித்து, தமிழ்த்தேசியத்தின் கொடி உயர்த்துவோம். விரைவில் மாநாட்டின் விவரங்கள் வெளியிடப்படும். தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தோழர்கள் அவசியம் பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம். #💪 மே17 இயக்கம் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம் - EU தப இபக்கம் EE-L பெருவிழா 2026 07,. 08 மார்ச் 2026 மே பதினேழு இபக்கம் 9884864010 |9444327010 EU தப இபக்கம் EE-L பெருவிழா 2026 07,. 08 மார்ச் 2026 மே பதினேழு இபக்கம் 9884864010 |9444327010 - ShareChat
திருச்சியில் சீமான் நடத்திய மாநாட்டின் பெயர் 'மாற்றத்திற்கான மாநாடு'. என்ன மாற்றம் என்று பல பேர் குழம்பி இருப்பீர்கள். அது வேறு ஒன்றும் இல்லை முற்றும் முழுதாக பிராமண கடப்பாரையை கவ்வி விட்டேன் என்கிற மாற்றத்தை அறிவிக்கும் மாநாடு தான் அது. ஏற்கனவே பெரியாரை இகழ்ந்து, பாரதியை தூக்கி பிடித்து, ஆர்எஸ்எஸ் புகழ் பாடி தான் ஒரு பிராமண அடி வருடி என்பதை நிரூபித்து விட்டார் என்றாலும், இந்த மாநாட்டின் வழியாக ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் அறிவித்திருக்கிறார் உதாரணத்திற்கு இரண்டு செய்திகள். 1. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு நீதிக்கட்சி, காமராஜர் எம்ஜிஆர் இப்போதைய திமுக அரசு என காலை உணவு, மதிய உணவு கொடுத்து அனைவரையும் படிக்க வைத்தார்கள். ஆனால் இந்த பிராமண கடப்பாறை சீமான் அதை நிறுத்தி விடுவாராம். இது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் இன் குரல் இல்லையா? 2. தமிழ் சமூகத்தின் மேன்மைக்காக போராடிய அனைத்து தலைவர்களையும் பெரியாரோடு ஒப்பிட்டு சமூகத்தை இரண்டாக பிளக்கும் வேலையை செய்த சீமான். இப்போது அயோத்திதாசரா அம்பேத்கரா என்கிற ஒரு கேடுகெட்ட வேலையை இந்த மாநாட்டின் வழி செய்திருக்கிறார். நாம் ஆரம்பத்திலேயே சொன்னது தான் பெரியாரை சாதிய வட்டத்துக்குள் அடைக்கும் சீமான். இதோடு நிற்கப் போவதில்லை அடுத்து யாரெல்லாம் ஆதிக்கத்திற்கு எதிராக தத்துவங்களை பேசினார்களோ அவர்கள் மீது அவதூறு பரப்புவார் என்று அந்த வகையில் இப்போது அம்பேத்கர் அவர்களை அயோத்திதாசர் ரோடு ஒப்பிட்டு அயோத்திதாசர் தமிழர் அம்பேத்கர் தமிழர் இல்லை என்கிற ஒரு கேடுகெட்ட வேலையை செய்ய தொடங்கி இருக்கிறார். அடுத்து மார்க்சை நோக்கி தான் இந்த சோம்பி சீமான் கூட்டம் வரும். சீமானின் நோக்கம் அனைவரையும் தமிழ் சமூகத்திலிருந்து அவர்களின் தத்துவத்தை நீக்கிவிட்டு பிராமண தத்துவத்தை தமிழ் மக்களின் மீது திணிக்கும் வேலைதான் இது. இதைத்தான் குருமூர்த்தியின் ஏற்பாட்டால் மிகத் தாராளமாக செலவு செய்து இந்த மாற்றத்திற்கான மாநாட்டில் செய்திருக்கிறார். ஆனால் இது எதைப் பற்றியும் தெரியாமல் விசில் அடிச்சான் குஞ்சுகளாகவும், தற்குறிகளாகவும் பார்த்தீர்களா எங்கள் மாநாட்டில் கொடி கம்பம் எவ்வளவு உயரத்தில் கட்டி இருக்கிறோம். மேடை அலங்காரத்தை பார்த்தீர்களா? தண்ணீர் பாட்டல் ஒன்று கூட தொலையவில்லை என்று தற்குறி தம்பிகள் புலங்காயிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். தம்பிகளே அன்னார்ந்து நீங்கள் விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் உங்கள் சட்டப்பைக்குள் கையை விட்டு பணத்தை திருடும் திருடனை கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே! இப்போது சொல்லுங்கள் விஜய்யின் ரசிகர்கள் தற்குறிகளா அல்லது நீங்களா? #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழின எதிரி RSS-பாஜக #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழ்நாடு தமிழருக்கே!
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னும் இந்த தேகம் இருந்தொரு லாபமுண்டோ என்று பாடினான் புரட்சி பாவலன் பாவேந்தர் பாரதிதாசன் உலகத்தில் எந்த தேசிய இனமும் தன்னுடைய மொழியைகாக்க இத்தனை உயிர்களை ஈகம் செய்திருக்குமா என்றால் இல்லை... அப்படி ஒரு வீரியமான போராட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். அப்படிபட்ட தமிழர் நிலத்தில் இன்று இந்தியின் ஆதிக்கம் தலைதூக்குவதை தமிழர்கள் அனுமதிக்கமுடியாது.. மீண்டும் மொழிப்போரை மே பதினேழு இயக்கம் தொடங்கி வைத்துள்ளது. உலக தாய்மொழி நாளன்று எழும்பூர் இரயில் நிலையத்தில் மே பதினேழு இயக்கத்தின் இந்தி அழிப்பு போராட்டம் ஒரு துவக்கப்புள்ளி தமிழ்நாடெங்கும் தீ பரவட்டும் 🔥🔥 #தமிழ்வாழ்க #may17movement #💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே!
💪 மே17 இயக்கம் - Tl'! இந்திி lit E ;1 எழுஇயக்கம் MAY 00 04 ON தமிம்ாி  సశసని , ENT 600 எழும்பூர் சென்ை தவித்த அந்தியை م7  சுமக்குற் U   பாதச் -=1= வேண்டிய பத 5் இந்தயெனும் ணத்திற்கு அலங்காரம் செய்து வேடிக்கை பார்க்க EGMORE இயலுமா? CHENNAI மே பதினேழு இயக்கம் ٥7 Tl'! இந்திி lit E ;1 எழுஇயக்கம் MAY 00 04 ON தமிம்ாி  సశసని , ENT 600 எழும்பூர் சென்ை தவித்த அந்தியை م7  சுமக்குற் U   பாதச் -=1= வேண்டிய பத 5் இந்தயெனும் ணத்திற்கு அலங்காரம் செய்து வேடிக்கை பார்க்க EGMORE இயலுமா? CHENNAI மே பதினேழு இயக்கம் ٥7 - ShareChat
நேற்று மே 17 இயக்கத்தின் சார்பாக நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்காக காத்துக் கொண்டு இருந்த நேரம் அருகில் இருக்கிற தேநீர் கடையில் தேனீர் அருந்த நானும் தோழர் ஒருவரும் சென்றிருந்தோம். அப்போது அங்கே காவலுக்காக வந்திருந்த காவலர்களில் இருவர் தேநீர் அருந்த வந்தார்கள். எங்களைப் பார்த்ததும் எதுக்கு சார் இந்த போராட்டம் என்று கேட்டார்கள். காவலுக்காக வந்திருக்கிறீர்கள் என்ன போராட்டம் என்று எல்லாம் உங்களுக்கு சொல்ல மாட்டார்களா என்று கேட்டேன். இல்லை சார். திருமுருகன் காந்தி சார் வருகிறார் என்று மட்டும் தான் தெரியும். போராட்டம் எதற்கு என்னவென்று எல்லாம் சொல்ல மாட்டார்கள் என்று சொன்னார். சரியென்று நான் வேறு ஒன்றும் இல்லைங்க 80 வருடமாக தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். நாமும் ஒவ்வொரு முறையும் எதிர்க்கிறோம். ஆனாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல அவர்களை திருத்த முடியவில்லை. இப்போது தென்னக ரயில்வேயில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் இந்திக்கு முதன்மை கொடுத்து தமிழை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள். அதனால் இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டத்தை தான் இன்னைக்கி முன்னெடுக்கிறோம். தமிழ்நாட்டில் எதற்கு இந்தி என்று சொன்னேன். அவர் பாமரருக்கு உரிய பதிலான நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். தமிழ் வேண்டும் தான் சார். ஆனா நார்த் இந்தியாவில் வேலைக்கு போகும் போது இந்தி தெரியாமல் சிரமப்படுகிறோமே என்று கேட்டார். அதனால் வேலை கிடைக்காமல் போகிறதே சார் என்று அவருக்குள்ள அறியாமையால் இந்த கேள்வியை கேட்டார். நான் சொன்னேன் அதற்காகத்தான் சார் இந்த போராட்டம் என்று சொன்னேன். அவருக்கு புரியவில்லை என்னவென்று கேட்டார். பட்டியலில் உள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளையும் ஏற்றுக் கொண்டு விட்டால் எல்லா மொழிகளிலும் தேர்வு நடக்கும். அப்படி நடக்கும் போது எல்லா மொழி பேசுபவர்களும் போட்டி போட முடியும் யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்கள் முன்னே வரலாமே ஏன் இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அந்த மொழியை மட்டும் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்தி தான் இந்தியா என்றால் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மராத்தி குஜராத்தி இவர்களெல்லாம் இந்தியாவில் யார் என்று கேட்டேன். ஐரோப்பிய யூனியன் மொத்தம் 27நாடுகளைக் கொண்டது. அதில் 24 மொழிகளையும் அரசின் அலுவல் மொழியாக வைத்திருக்கிறார்கள். அவர்களால் அது முடியும் என்கிற பொழுது இந்தியாவால் ஏன் முடியவில்லை? இவர்களின் நோக்கம் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுப்பது அல்ல, இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் சமஸ்கிருதத்தை அனைவரும் படிக்கச் செய்து அதன் மூலம் பார்ப்பனர்களின் மொழி தான் சிறந்தது என்றும், அவர்களே சிறந்தவர்கள் என்றும் நம்மை நம்ப வைப்பதற்காக தான் இதை செய்கிறார்கள் என்றேன். அதனால் தான் இந்திக்காரர்களை பார்த்து பார்த்து தமிழ்நாட்டுக்கு அனுப்புகிறார்களோ போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாடு இந்திக்காரர்களின் நாடு ஆகிவிடும் போல இருக்கு சார். இங்க காவலுக்கு வந்த பிறகு தான் தெரிகிறது ஒரு நாளைக்கு எக்கச்சக்கம்பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள் சார் என்று சொல்லிவிட்டு, பையா எனக்கு ஒரு சாயா கொடு என்று சொன்னார். உடனே அருகில் இருந்த இன்னொரு காவலர் பாருங்கள் சார் எங்கள் வாயாலேயே சாயா என்று சொல்ல வைத்து விட்டார்கள். இப்படியே போனால் தமிழுக்குப் பதில் இந்தி தான் பேசணும் போல இருக்கு தமிழ்நாட்டிலேயே என்று வருத்தப்பட்டு விட்டு நாங்களும் நிறைய தெரிஞ்சுக்கணும் போல, இல்லன்னா என் வாயாலேயே தமிழ் எதற்கு அப்படின்னு சொல்ல வச்சிருவாங்க போல இருக்கு அப்படின்னு சொல்லிட்டு சரி சார் நான் கிளம்புறேன் என்று போய்விட்டார். இப்படி படித்தவர்களுக்கே நிறைய போதாமைகள் இருக்கிறது. இந்த போதாமைகளை பயன்படுத்தி தான் இந்தி என்னும் அரக்கியை தமிழ்நாட்டின் மீது திணிக்கிறது ஒன்றிய அரசு. ஆகவே எப்பாடுபட்டாலும் இந்தி திணிப்பை எதிர்த்தே ஆக வேண்டும். #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியம் #தோழர் திருமுருகன் காந்தி
🚨கற்றது அரசியல் ✌️ - कापणारण्णाम [014 தமிழ்நாடு Welave TAMIL தமிழருக்கே 17 HLLDJea we | ஜனய Leea MAY % Tamils Against | தமிழ்நா(ு 09 அS தமிழருக்க HINDHI 4585 Cueso தணிப்புச் எதிராக MPOSITION & ర V17V)VEMENT வட்டும் (l இயக்கம் సుగ  [ Amm Lolu 5ೆ Satham  Ooು कापणारण्णाम [014 தமிழ்நாடு Welave TAMIL தமிழருக்கே 17 HLLDJea we | ஜனய Leea MAY % Tamils Against | தமிழ்நா(ு 09 அS தமிழருக்க HINDHI 4585 Cueso தணிப்புச் எதிராக MPOSITION & ర V17V)VEMENT வட்டும் (l இயக்கம் సుగ  [ Amm Lolu 5ೆ Satham  Ooು - ShareChat
#🎥Trending வீடியோஸ்📺 #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #✍️மே17 இயக்கக் குரல்
🎥Trending வீடியோஸ்📺 - ShareChat
00:52
"ராமர் கோவிலில் ஏற்றப்பட்டிருக்கும் கொடியில் இடம்பெற்றிருக்கும் முத்திரை என்ன?" "தாமரை மலரில் அமர்ந்திருக்கும் கடவுளின் பெயர் என்ன?" கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்த NIFT நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை. இத்தேர்வுக்கு சென்றிருந்த தோழர் ஒருவர்தான் இத்தகவலை சொன்னார். கூடுதலாக இத்தேர்வுக்கென ஒதுக்கப்பட்ட தேர்விடம் மிகக் கொடுமையான தேர்விடம். வானகரம் அருகே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நடந்த தேர்வுக்கு காலை 8 மணிக்கே செல்ல வேண்டும். மாலை 4 மணி வரை தேர்வு. காற்று வசதி கூட இல்லாத அளவுக்கான ஒரு குடோன் போன்ற இடத்தில் தேர்வு. போதுமான அளவுக்கு குடிநீர் கூட இல்லை. தேர்வு முடிந்த வெளியில் வந்த தோழர் வாந்தி எடுக்குமளவுக்கு புழுக்கம் நிறைந்த ஒரு கொடும் கூடத்தில் தேர்வு நடந்திருக்கிறது. ஏற்கனவே 2016-ல், பாஜக ஆட்சிக்கு வந்த இரு வருடங்களில் NIFT தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவை சேர்ந்தவருமான சேத்தன் செள்ஹானை நியமித்தது. பேஷன் கல்வி மட்டுமின்றி கல்வித்துறைக்குமே கூட சம்பந்தமற்ற ஒருவரை NIFT-க்கு தலைவராக பாஜக நியமித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவரும் அதற்கேற்றார்போல 20% மட்டும்தான் NIFT-க்கு பணிபுரிவேன் என திருவாய் மலர்ந்தார். கடந்த 2022-ல் சென்னை NIFT தலைவர் அனிதா மீது தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்ட சம்பவம் நடந்தது. NIFT-ல் அனுமதிக்கப்படுவதற்கு என Domicile என ஒரு பிரிவை வைத்திருக்கின்றனர். State Domicile பிரிவில், சொந்த மாநிலத்திலுள்ள NIFT நிறுவனத்தில் இடம்பெறும் வாய்ப்பை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணாக்கர் பெற முடியும். ஆச்சரியகரமாக பெரும்பாலான மாநிலங்களுக்கு இருக்கும் இந்த State Domicile பிரிவு, தமிழ்நாட்டுக்கு இல்லை. அதாவது தமிழ்நாட்டில் தேர்வு பெறும் மாணவ மாணவியர் தமிழ்நாட்டு NIFT-ல் சேரும் வாய்ப்பு இல்லை. இவர்களுக்கான இடம் அனைத்து இந்திய மாணவர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும். அது தமிழ் மாணவர்களுக்கு தமிழ்நாடாக இல்லாமல் போகும் வாய்ப்புகளே மிக மிக அதிகம். இதற்கு நேரடி அர்த்தம், சென்னை NIFT-ல் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதுதான். இன்னும் தெளிவாக சொல்வதெனில் தமிழ் மண்ணுக்குரிய Fashion என்பது, இந்திய Fashion கல்வியில் இருக்காது. இருந்தாலும் அது பார்ப்பனிய fashion ஆக இருக்கும். பொதுவாகவே ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்திய தேசிய திணிப்பும் தமிழ் மற்றும் தமிழ்நாடு மீதான பாரபட்சமும் காட்டப்படும் நிலை இருக்கும். ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு கூடுதலாக காவி திணிப்பும் நடந்தேறி வருகிறது. காவி திணிப்பு என்பது இட ஒதுக்கீடு மறுப்பு, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதான ஒடுக்குமுறை, பார்ப்பனிய சிந்தை, சாதிய அடுக்குமுறை, சிறுபான்மையினர் வெறுப்பு, தென்னிந்தியா-தமிழ்நாடு மீதான வன்மம் என்பதை அறிக! #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழின எதிரி RSS-பாஜக #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி - ShareChat
#தமிழின எதிரி RSS-பாஜக ## மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை😱 #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழின எதிரி RSS-பாஜக - ShareChat
01:07
#இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #தோழர் திருமுருகன் காந்தி #✍️மே17 இயக்கக் குரல்
இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் - உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டு ஆதிக்க இந்தியை Lహ Cu அழிக்கும் போராட்டம்! இந்திமொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் 2.022026 |0:000600 காலை எழும்பூர் இரயல் நலையம் சென்னை சென்னை எழும்பூர் CHENNAI EGMORE அதக்கம்2 மே பதினேழு இயக்கம் [u7 Bhl' 9884864010|9444327010 உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டு ஆதிக்க இந்தியை Lహ Cu அழிக்கும் போராட்டம்! இந்திமொழி ஆதிக்கத்தை அழிக்க அணிதிரள்வீர் 2.022026 |0:000600 காலை எழும்பூர் இரயல் நலையம் சென்னை சென்னை எழும்பூர் CHENNAI EGMORE அதக்கம்2 மே பதினேழு இயக்கம் [u7 Bhl' 9884864010|9444327010 - ShareChat
எந்தப் படையினில் நீ இருந்தாலும் இனத்தை எதிர்த்திடாதே! - தமிழா, எதிரிக் குழைத்திடாதே! - உன் சொந்தத் தமையனைத் தம்பியைக் கொல்லவே சூழ்ச்சி நினைந்திடாதே! - பகைவன் சோற்றில் நனைந்திடாதே! பாவலரேறு பெருஞ்சித்திரனார் #தமிழ்த்தேசியம் #✍️பாவலரேறு பெருஞ்சித்திரனார்🎂🍰🍮 #தமிழின எதிரி RSS-பாஜக #தமிழ்நாடு தமிழருக்கே! #🎙️அரசியல் தர்பார்
தமிழ்த்தேசியம் - ShareChat