Rationalist
ShareChat
click to see wallet page
@332020744
332020744
Rationalist
@332020744
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
அப்பாவ காணோம் என்பதோ? கணவனை காணோம் என்பதோ அல்ல இப்போது தமிழ்நாட்டின் பிரச்சனை. நாளை தமிழ்நாட்டின் கடற்கரையை காணோம் என்று சொல்லுகிற நிலைமை வந்துவிடக்கூடாது என்பது தான் முதன்மை பிரச்சனை? இன்று தமிழ்நாட்டில் அரசியல் விவாதங்கள் எதைச் சுற்றி நடக்கின்றன? நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது? யார் கூட்டணி அமைப்பார்கள்? என்பதைத்தான் பெரும்பாலான அரசியல் விவாதங்கள் ஆக்கிரமித்துள்ளன. ஒரு தரப்பு, ஒரு கட்சியின் தோல்வியை தமிழ்நாட்டின் தோல்வியாகக் கொண்டாடுகிறது. இன்னொரு தரப்பு, ஒரு கட்சியின் வெற்றியை தமிழ்நாட்டின் வரலாற்று முன்னேற்றமாகச் சித்தரிக்கிறது. ஆனால் இந்த அரசியல் சத்தங்களுக்கு நடுவே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினை கவனத்திற்கு வராமல் திட்டமிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அது தமிழகத்தின் 1,068 கிலோமீட்டர் நீளமான கடற்கரையும், அதனை ஒட்டியுள்ள 14 கடலோர மாவட்டங்களின் இயற்கை வளங்களும் குறித்த பிரச்சினை. இந்தியா–அமெரிக்கா இடையே 2026 மே 26 அன்று "Critical Minerals and Rare Earths Framework" என்ற மிக முக்கியமான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்ததின் முக்கிய நோக்கம் அரிய கனிமங்களான (Rare Earths) லித்தியம், கோபால்ட் போன்ற மூலப்பொருட்களின் விநியோகச் சங்கிலியை பாதுகாப்பதாகும். இவை EV பேட்டரிகள், செமிகண்டக்டர்கள், பாதுகாப்புத் துறை, ஏவுகணைகள், காற்றாலை, சோலார் தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு அவசியமானவை. ஒன்றிய அரசு இதை "இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான அவசியமான ஒப்பந்தம்" எனக் கூறுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை நீர்மூலமாக்கும். ஏனென்றால் இந்தியாவில் மோனசைட் (Monazite) உள்ளிட்ட அரிய கனிம வளங்கள் அதிகம் காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இல்மனைட், ருடைல், கார்னெட், மோனசைட் போன்ற கனிம வளங்கள் உள்ளன. இப்போது கையெழுத்தான ஒப்பந்தத்தில் "Mining, Processing, Recycling, Investments" என முழு செயல்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அல்ல; முதலீடு, அகழ்வு, சுத்திகரிப்பு அனைத்தும் இதில் அடங்குகின்றன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் ( இப்போதைக்கு) தமிழக கடற்கரையில் இருக்கும் வளங்களை தோண்டும், சுத்திகரிக்கும், எந்தவித தடங்கலும் இல்லாமல் அதானி துறைமுகம் மூலம் எடுத்துச் செல்லும். இதெல்லாம் இனி தான் நடக்கபோகின்றது என்று நினைக்க வேண்டாம். ஏற்கனவே இதற்கான வேலைகள் தொடங்கியாயிற்று. கன்னியாகுமரியை சுற்றியுள்ள கடற்கரை பகுதியில் இருக்கும் கனிமங்களை தோண்டி எடுக்கும் வேலையை இந்திய அரசின் நிறுவனமான IREL (Indian Rare Rarth Limited) தொடங்கிவிட்டது. இதில் சிறப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் தான் இந்த வேலையை ஒன்றிய அரசு செய்தது. இதற்கான சட்ட மசோதா 2025 இல் போடப்பட்டு 2026இல் சட்டமாகவே மாற்றப்பட்டுவிட்டது. இதன்படி 1. ஒரு நிறுவனத்திற்கு சுரங்க உரிமை இருந்தால், அதே அனுமதியில் லித்தியம், கிராபைட், நிக்கல், கோபால்ட் போன்ற Critical Minerals-ஐ கூடுதல் கட்டணமின்றி எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. 2. சுரங்கப்பரப்பு -ஆழமான (deep-seated) கனிமங்கள் கிடைத்தால்: Mining Lease-ஐ 10% வரை, Composite Licence-ஐ 30% வரை விரிவுபடுத்த புதிய கட்டணமின்றி அனுமதி. 3. ஒரு நிறுவனம் மாநில அரசிடம் அனுமதி கேட்டால் அதிகபட்சம் 30நாட்களுக்குள் அனுமதி கொடுப்பது கட்டாயம். 4. சுரங்கம் தோண்ட பொதுமக்களிடம் கருத்து கேட்க அவசியமில்லை. 5. சுரங்க நிறுவனத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு இழப்பீடு சம்பந்தப்பட்ட நிறுவனம் தர வேண்டியதில்லை என ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்காக பல திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டமாக்கிவிட்டார்கள். இன்று நாம் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் நாளை, நம் கடற்கரை கிராமங்கள் அழிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்க்கை சீரழிந்தால், அப்போதும் இப்படி சண்டையிட்டுகொண்டிருந்தால் எப்படி? ஒருவேளை தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கத்தான் தமிழ்நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்னவோ? ஆனால் இதுவெல்லாம் ஒருநாளும் ஒரு பயனையும் தராது. தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பது வெறும் ஆட்சிமாற்றம் அல்ல. அது நிலம், கடல், இயற்கை வளங்கள், மாநில உரிமைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது. நாளை "அப்பாவைக் காணோம்", "கணவனைக் காணோம்" என்று சண்டையிடும் நிலை மட்டுமல்ல; "தமிழ்நாட்டின் கடற்கரையைக் காணோம்" என்று தேடும் நிலை வராமல் தடுப்பதே இன்று நமக்கு முன் நிற்கும் மிகப்பெரிய அரசியல் பொறுப்பாகும். #geopolitics #புவிசார் அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு
geopolitics - நாளைதமிழ்நாட்டின் 1,068கி.மீ கடற்கரையை காணம்? நீனமஸர மாவட்டங்கள் இன்று விழித்தால் தான் நாளை காப்போம்! l மோனசைட் இல்மளைட், USA MINING  INDIA ருடைல் கார்ணெட் CRITICAL MINERALS PROCESSING  AND RARE EARTHS தமிழக கடற்கரையில் FRAMEWORK RECYCLING புதையல் அல்ல 0%2025 INVESTHENTS பேராபத்து! எல்லாம் இந்த ஓப்பந்தத்தில் எடுத்துச் செல்லும்! கனிமங்கள் தோண்டும் சுத்திகரிக்கும் இல்க்கு: நமது கடற்கரை! சட்ட திருத்தங்கள் 2025-26 மீனவனின் வாழ்வாதாரம் கூடுதல் கட்டமின்றி கனிமங்கள் அகழ்வு ர மக்களின் எதிர்காலம் 30% பரை விரிவாக்கம்  சரங்க பரப்பு 10% தமிழகத்தின் உரிமை! 30 நாட்களில் அனுமதி கட்டாயம் காப்போம்! பொதுமக்கள் =ரத்து தவையில்லை இயற்கையை இழப்பீடு பொறுப்பு நிறுவனத்துக்கு இவலம இழக்காதே! ஆட்சி மாற்றம் அல்ல. வாழ்வாதாரம் பாதுகாப்பதே நமது இலக்கு! நிலம் கடல் வளம் ன்று குரல் கொடுப்போம் நாளை கடற்கரை காப்போம்! நாளைதமிழ்நாட்டின் 1,068கி.மீ கடற்கரையை காணம்? நீனமஸர மாவட்டங்கள் இன்று விழித்தால் தான் நாளை காப்போம்! l மோனசைட் இல்மளைட், USA MINING  INDIA ருடைல் கார்ணெட் CRITICAL MINERALS PROCESSING  AND RARE EARTHS தமிழக கடற்கரையில் FRAMEWORK RECYCLING புதையல் அல்ல 0%2025 INVESTHENTS பேராபத்து! எல்லாம் இந்த ஓப்பந்தத்தில் எடுத்துச் செல்லும்! கனிமங்கள் தோண்டும் சுத்திகரிக்கும் இல்க்கு: நமது கடற்கரை! சட்ட திருத்தங்கள் 2025-26 மீனவனின் வாழ்வாதாரம் கூடுதல் கட்டமின்றி கனிமங்கள் அகழ்வு ர மக்களின் எதிர்காலம் 30% பரை விரிவாக்கம்  சரங்க பரப்பு 10% தமிழகத்தின் உரிமை! 30 நாட்களில் அனுமதி கட்டாயம் காப்போம்! பொதுமக்கள் =ரத்து தவையில்லை இயற்கையை இழப்பீடு பொறுப்பு நிறுவனத்துக்கு இவலம இழக்காதே! ஆட்சி மாற்றம் அல்ல. வாழ்வாதாரம் பாதுகாப்பதே நமது இலக்கு! நிலம் கடல் வளம் ன்று குரல் கொடுப்போம் நாளை கடற்கரை காப்போம்! - ShareChat
#🎥Trending வீடியோஸ்📺 #💪 மே17 இயக்கம் #🚨கற்றது அரசியல் ✌️ #தோழர் திருமுருகன் காந்தி
🎥Trending வீடியோஸ்📺 - ShareChat
01:25
#🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #தோழர் திருமுருகன் காந்தி
🚨கற்றது அரசியல் ✌️ - ந்தளய்தவருழ்த்துப் தமிழ்த்தவய்த் உஸந்ரை ஆாப்படித்து மே 3l, 2026 ஞாயிற்றுக்கிழமை பனகல் மாளிகை அருகில் சைதை சென்னை மணிக்கு காலை I0 ஆளுநரால் அவமதிக்கப்படும் தமிழ்மொழி! நேதாஜி தாகூர் நேரு ஆகியோரால் ஒதுக்கப்பட்ட, வங்காள பெருமை பேசும் 'வந்தே மாதரம் பாடலை ஏன் திணிக்கிறார் ஆளுநர் ? எமது நாட்டில் எமதுதமிழ்மொழி! தமிழ் மொழிவெல்க! C० १७ Cuc மே பதினேழு கயக்கம் 9884864010|9444327010 ந்தளய்தவருழ்த்துப் தமிழ்த்தவய்த் உஸந்ரை ஆாப்படித்து மே 3l, 2026 ஞாயிற்றுக்கிழமை பனகல் மாளிகை அருகில் சைதை சென்னை மணிக்கு காலை I0 ஆளுநரால் அவமதிக்கப்படும் தமிழ்மொழி! நேதாஜி தாகூர் நேரு ஆகியோரால் ஒதுக்கப்பட்ட, வங்காள பெருமை பேசும் 'வந்தே மாதரம் பாடலை ஏன் திணிக்கிறார் ஆளுநர் ? எமது நாட்டில் எமதுதமிழ்மொழி! தமிழ் மொழிவெல்க! C० १७ Cuc மே பதினேழு கயக்கம் 9884864010|9444327010 - ShareChat
பூஜை செய்த பார்ப்பான் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டியதால் அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பூஜை செய்ய தடை (பணியிடை நீக்கம் அல்ல). மேற்கொண்டு லஞ்சம் பெறாதபடி வேலை செய்யாமல் இருக்க உத்தரவு. ஆனால் மொட்டையடிக்கும் இடத்தில் பணம் கேட்டதால் இரண்டு மொட்டையடிக்கும் தொழிலாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு. இரண்டும் ஒரே விதமான குற்றம் தான். ஆனால் ஆளுக்கேற்றப்படி தண்டனை. மனுதர்மம் இப்படியாகத் தான் ஆட்சி செய்கிறது. இது தான் சநாதனம். #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁
🚨கற்றது அரசியல் ✌️ - 66Lరo பூஜை செய்யதடை! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட రuu ஆய்வில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றதை ஒப்புக்கொண்ட 66L6O ஐயருக்கு மறு உத்தரவு வரும் வரை & செய்ய தடை விதிக் ரத்து தொழில் உரிமம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்களிடம் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு பணியாளர்களின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதுடன், அவர்கள் தற்காலிகப் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர் 66Lరo பூஜை செய்யதடை! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட రuu ஆய்வில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றதை ஒப்புக்கொண்ட 66L6O ஐயருக்கு மறு உத்தரவு வரும் வரை & செய்ய தடை விதிக் ரத்து தொழில் உரிமம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்களிடம் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு பணியாளர்களின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதுடன், அவர்கள் தற்காலிகப் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர் - ShareChat
2029ல் செய்ய வேண்டிய மும்மொழிக் கொள்கை திணிப்பை 2026ல் ஏன் செய்கிறீர்கள் என அண்ணாமலை கேட்கிறார். அதாவது பாஜக அரசின் அமைச்சகத்தை கேள்விகேட்கிறாராம் vlog அண்ணாமலை. உண்மையான நிலவரம் என்ன? "..3 மொழிகளை ஒரு குழந்தை ஏன் கற்க வேண்டும்?.." என்பதுதான் மாணவர்களின் நியாயத்தை பேசும் உண்மையான கேள்வி. அதை கேட்கமாட்டார் vlog-அண்ணாமலை. மூன்று மொழி கோமாளித்தனத்தின் உண்மைத்தன்மையை பார்ப்போம். மூன்று மொழி கற்றல் என்பது, 1. மாணவனின் தாய்மொழி 2. ஆங்கிலம்/ப்ரஞ்ச் போன்றவை 3. ஏதேனும் ஒரு இந்திய மொழி "..நாங்கள் 'இந்தி'யை மட்டும் கற்க சொல்லவில்லை, எந்த இந்திய மொழியையும் கற்கலாம் எனச் சொல்கிறோம்.." என்கிறது அண்ணாமலை &கோ கம்பெனி. இதில் மூன்றாவதாக, இந்தியை தவிர வேறு என்ன மொழிகளை சொல்லித்தர வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன?. அசாமி, வங்காளி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, சந்தாலி, ஒடியா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எதையாவது 3வது மொழியாக தேர்ந்தெடுக்க ஆசிரியர் நியமனம் நடந்துள்ளதா? தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பள்ளிக்கூடம் இப்படி ஆசிரியர்களை நியமனம் செய்ததா? தமிழக பள்ளிக்கூடங்களில் 'இந்தி' ஆசிரியரை தவிர வேறு எந்த மொழி ஆசிரியரும் நியமனம் செய்யப்படவில்லை? இதை எப்படி உறுதியாக சொல்கிறாய் என Vlog அண்ணாமலை கேட்கலாம். அவருக்கான பதில், "...தமிழ் மொழியை கற்றுக்கொடுப்பதற்காக எத்தனை தமிழ் ஆசிரியர்களை பாஜக ஆளும் மாநிலங்களில் பணிநியமனம் செய்துள்ளார்கள்?.." உதாரணமாக, உ.பி, மகாராஷ்டிரா, பீகார், ம.பி, ஹரியானா, குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களின் பள்ளிகளில் எத்தனை நம்மூர் தமிழ் ஆசிரியர்கள் 3வது மொழியாக தமிழை கற்றுத்தர நியமிக்கப்பட்டுள்ளார்கள்? அப்படியான நியமனம் நடந்த நினைவு யாருக்காவது உண்டா. NEPபுதிய கல்விக்கொள்கையின் இலக்கின் படி 30:1 எனும் விகிதத்தில் 30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் எனும் இலக்கை கொண்டுள்ளதை வைத்து கணக்கிடுவோம். இந்தி பேசும் மாநிலங்களில் மொத்த மாணவர் எண்ணிக்கை 11.5 கோடி. இதில் மாணவர் ஆசிரியர் விகிதம் 30:1 என்பதை 300:1 என வைத்துக்கொண்டால் கூட ~3,82,000 தமிழ் ஆசிரியர்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே தேவைப்படுவார்கள். இந்த ஆசிரியர்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா என 6 மொழி ஆசிரியர்களாக பிரித்தால் கூட, தமிழ் மொழி ஆசிரியர்களாக ~64,000 தமிழாசிரியர்கள் உடனடியாக தேவை . இத்தனை தமிழ் ஆசிரியர்களை வட இந்தியாவில் நியமனம் செய்திருக்கிறார்களா? அல்லது இத்தனை தமிழ் படித்த ஆசிரியர்களுக்கு வேலைகிடைக்கும் என உத்திரவாதப்படுத்துவாரா vlog அண்ணாமலை? தமிழ் மொழியை வளர்க்கிறார் மோடி என ஒப்பாறி வைக்கும் சங்கிகள், ஏன் தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை? உண்மையில், இந்தி பேசும் மாநிலங்களில் 3வது மொழி என எதுவும் நடக்கப்போவதில்லை. தமிழக மாணவன் 3 மொழி என இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும். ஆனால் வடமாநிலத்தவனுக்கு எவ்வித கட்டாயமுமில்லை. தாய்மொழியும், ஆங்கிலமும் கற்றுக்கொண்டு வசதியாக மதிப்பெண் பெற்றுவிடுவான். 3 மொழி கற்பது என்பதெல்லாம், இந்தியை திணிக்கும் முயற்சி மட்டுமே.. இதை தற்போதே திணிப்பதைவிட 3 ஆண்டு கழித்து திணித்துக்கொள்ளுங்கள் என்கிறார் vlog அண்ணாமலை. பாஜக பித்தலாட்ட கூட்டத்தில் அண்ணாமலை மட்டும் வேறுமாதிரி இருப்பாரா என்ன? - #தோழர் திருமுருகன் காந்தி #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார்
தோழர் திருமுருகன் காந்தி - ShareChat
#🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #🎥Trending வீடியோஸ்📺 #தோழர் திருமுருகன் காந்தி
🎙️அரசியல் தர்பார் - ShareChat
01:33
தாய்த்தமிழ்தேசத்தில் அன்னைத் தமிழுக்கே முதலிடம். அன்னிய மொழிச்சடங்குகளை அனுமதியோம். ஆளுநர் எனும் கங்காணியினை கண்டிக்க ஒன்றுதிரள அழைக்கிறோம்.. 'வேடிக்கை பார்க்கும் தமிழினமே, வீதிக்கு வந்து போராடு!' எனும் முழக்கத்துடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு போராட்டத்தில் இணைவீர். இடம்: சைதை, பனகல் மாளிகை அருகில் நேரம்: காலை 10:00 மணி நாள் : 31-05-2026 மே பதினேழு இயக்கம் 9884864010 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #🎙️அரசியல் தர்பார்
🚨கற்றது அரசியல் ✌️ - தமிழ்த்தாய்வாழ்த்துப் பாடலைஅவமதிக்கும் B5ulul 470= ஆாப்பாடித்து 3100 2026 ஞாயிறு சைதை பனகல் மளிகை அருகில் சென்னை காலை 10:00 மணி ஆளுநரால் அவமதிக்கப்படும் தமிழ்மொழி! நேதாஜி தாகூர் நேரு ஆகியோரால் ஒதுக்கப்பட்ட, வங்காள பெருமை பேசும் ந்தேமாதரம் பாடலை ஏன் திணிக்கிறார் ஆளுநர்? எமதுநாட்டில் எமதுதமிழ்மொழி! தமிழ் மொழிவெல்க! tu17 ೩lbbu மேபதினேழு இயக்கம் 9884864010|9444327010 தமிழ்த்தாய்வாழ்த்துப் பாடலைஅவமதிக்கும் B5ulul 470= ஆாப்பாடித்து 3100 2026 ஞாயிறு சைதை பனகல் மளிகை அருகில் சென்னை காலை 10:00 மணி ஆளுநரால் அவமதிக்கப்படும் தமிழ்மொழி! நேதாஜி தாகூர் நேரு ஆகியோரால் ஒதுக்கப்பட்ட, வங்காள பெருமை பேசும் ந்தேமாதரம் பாடலை ஏன் திணிக்கிறார் ஆளுநர்? எமதுநாட்டில் எமதுதமிழ்மொழி! தமிழ் மொழிவெல்க! tu17 ೩lbbu மேபதினேழு இயக்கம் 9884864010|9444327010 - ShareChat
#📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #🎥Trending வீடியோஸ்📺 #அதிமுக #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📺அரசியல் 360🔴 - ShareChat
01:00
#🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #📺அரசியல் 360🔴
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
01:11
*தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிராகரிப்போம்! மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதித்திட்டம்! இந்தி பேசும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை நிரந்தர அடிமையாக்கும்! - மே பதினேழு இயக்கம்* மகளிருக்கான 33% இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற போர்வையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை முன்மொழிந்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்னிந்திய மாநிலங்களை அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். அதிக மக்கள்தொகை கொண்ட இந்தி பேசும் மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரித்து, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க இந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை முன்மொழியும் பாஜக அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 2002ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 84வது நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதா, முந்தைய நடைமுறையை பின்பற்றி, 1971 மக்கள்தொகை அடிப்படையில், தொகுதிகளை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், தொகுதிகளின் எல்லைகளை மட்டுமே மாற்றியமைத்தது. அந்த மசோதாவின்படி அடுத்த தொகுதி மறுசீரமைப்பு 2026 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றது. அதனடிப்படையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை கொரானாவை காரணம் காட்டி தவிர்த்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முன்வைத்து 131 வது சட்டத்திருத்த மசோதாவாக நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு திருத்த மசோதாவை இன்று (ஏப்ரல் 16, 2026) சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்கிறது. இது பாஜக அரசு மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் திட்டமாகும். ஒன்றிய அரசின் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தியதில் தமிழ்நாடு முன்னணியில் வகிக்கிறது. இதனால் நாட்டின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு பெரும்பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு அதிக வரிவருவாய் அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது. கல்வி, மருத்துவம், தொழில்துறை, பொருளாதாரம் என அனைத்திலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதேவேளை, இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள்தொகை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதோடு நாட்டை பின்னுக்கு இழுக்கின்றன. ஆனால், இந்தி பேசாத மாநிலங்களிடமிருந்து பெறப்படும் நிதியை இந்தி பேசும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து தமிழ்நாடு போன்ற மாநிலங்களை பொருளாதாரரீதியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் தற்போதைய நாடாளுமன்ற இடங்கள் 543 என்பதிலிருந்து 850 இடங்கள் வரை கூட்டப்படும். அதற்கேற்ற வகையிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அதிக இருக்கைகளைக் கொண்டு கட்டப்பட்டது. இதனை புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படும் போதே மே பதினேழு இயக்கம் எச்சரித்தது. நாடாளுமன்ற இடங்கள் அதிகரிக்கும் போது, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அதற்கேற்ப நாடாளுமன்ற தொகுதிகள் வழங்கப்படும். அதனடிப்படையில் தமிழ்நாட்டின் தற்போதைய 39 தொகுதிகள் 49 தொகுதிகளாக மாற்றப்படலாம். அதேவேளை தற்போது 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சுமார் 143 முதல் 152 இடங்கள் வரை கிடைக்கும். அதாவது நாடாளுமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தின் பலம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயரும். தமிழிநாட்டின் பலமோ குறிப்பிடத்தக்க அளவில் குறையும். இது தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திற்குமே பாதிப்பை உண்டுபண்ணுகிறது. இதன் மூலம், இந்தி பேசும் மாநிலங்களின் நாடாளுமன்ற பலம் 38.1%-லிருந்து 43.1% ஆக அதிகரிக்கிறது. ஆனால் தென்னிந்தியாவின் நாடாளுமன்ற பலம் 24.3%-லிருந்து 20.7% ஆக குறையும். இப்படியாக தென்னிந்தியாவின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் மாற்றப்படுவதால், இந்தி பேசாத மாநிலங்களின் தயவு இல்லாமலே எந்த ஒரு கட்சியும் இந்திய ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றலாம். அப்படியான சூழலில் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும். தமிழ்நாட்டின் உரிமைகளை பேச அனுப்பப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு எடுபாடாமல் போய்விடும். இந்தி பேசும் மக்களின் சட்டமே தமிழ்நாட்டின் சட்டமாக மாற்றப்படும். இவ்வளவு மோசமான ஒரு நடைமுறையை ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை முன்வைத்தே செயல்படுத்துகிறது. தமிழ்நாட்டின் நாடாளுமன்ற அரசியல் அதிகாரத்தை குறைப்பதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் நிரந்தர அடிமையாக மாற்றிவிட முயற்சிக்கிறது பாஜக. ஆனால், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுக இதுகுறித்த எவ்வித கவலையுமின்றி இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமை நிரந்தரமாக பறிபோகும் சூழலிலும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சிக்கு துணைபோகும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழின விரோத பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்துள்ள அதிமுக, நாதக போன்ற கட்சிகள் தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயக விரோதமானது. இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களும் உரிய அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும். மொழிவழி மாநிலங்களுக்கு ஒன்றியத்தில் சம விகிதத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமல்லாது, சமூக-பொருளாதார காரணிகளை உள்ளடக்கிய ஒரு மாற்று வழிமுறையே இதற்கு தீர்வை அளிக்கும். அப்படியான ஒரு வழிமுறைதான் மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்கும் நிதி ஆணையத்திற்கும் செயல்படுத்தப்பட வேண்டுமென கருதுகிறோம். தற்போதைய வடிவிலான தொகுதி மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ள இயலாதது. மக்கள் மன்றத்தில் நீண்டகாலத்திற்கு விவாதத்திற்கு உட்படுத்தி ஒரு தீர்வை எட்டும் வரை, 1971 மக்கள்தொகை அடிப்படையிலான முந்தைய நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தற்போதைய நடைமுறையின் போதாமை குறித்த எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லாதது. நிர்வாக வசதி என்ற பெயரில் நாடாளுமன்ற இடங்கள் கூட்டப்படுவதால் நிர்வாகத்திற்காகவே பெரும் நிதி செலவிடப்படும் நிலையை உண்டாக்கி விடும். ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு நிதி அளிக்கவே இயலாத சூழலில் இந்த முன்னெடுப்பு தமிழ்நாடு போன்ற மாநிலங்களையே பெருமளவில் பாதிக்கும். எனவே ஒன்றிய பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திரும்பப் பெறுவதோடு, மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை தற்போது இடங்களில் 50% என உயர்த்திட சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மே பதினேழு இயக்கம் 9884864010 #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 #🗞️இன்றைய தேர்தல் களம்🟠 #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #💪 மே17 இயக்கம் #🚨கற்றது அரசியல் ✌️
🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 - 16 ஏப்ரல் 2026 ٤٧ 1=IIIII1] தமிழ்நாட்டின் அரசியல் அதிகார்த்தை குறைக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிராகரிப்போம்! மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதித்திட்டம்! இந்தி பேசும் மாநிலங்கருக்கு தமிழ்நாடு உள்ளிட்ட f 17 Lufrll ' தென்னிந்திய மாநிலங்களை நிரந்தர அடிமையாக்கும்! பதினேழு இயக்கம் மே 9884864010 9444327010 16 ஏப்ரல் 2026 ٤٧ 1=IIIII1] தமிழ்நாட்டின் அரசியல் அதிகார்த்தை குறைக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிராகரிப்போம்! மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதித்திட்டம்! இந்தி பேசும் மாநிலங்கருக்கு தமிழ்நாடு உள்ளிட்ட f 17 Lufrll ' தென்னிந்திய மாநிலங்களை நிரந்தர அடிமையாக்கும்! பதினேழு இயக்கம் மே 9884864010 9444327010 - ShareChat