🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
ShareChat
click to see wallet page
@3454dsm
3454dsm
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - ShareChat
00:14
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
பொழுது போக்கு - ShareChat
00:12
அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள்.... தொண்ணூறு நாட்கள் வரை புதுப் பொண்ணு மாப்பிள்ளையாக வலம் வரலாம்...!!! உலக அழகியே மனைவி என்றாலும் உலகத்தின் ஆணழகனே புருஷன் என்றாலும் பார்க்கப் பார்க்க காதல் மட்டுமே என்றால் ஒரு நேரத்திற்குப் பிறகு தெவட்டத் தான் செய்யும். ஏனெனில் பழகப் பழக பாலும் புளித்து தயிர் ஆகத் தான் செய்யும்.புளித்து தயிர் ஆனாலும் பொறுத்திருந்தால் தயிர் வெண்ணெய் ஆகி இறுதியாக மணக்கும் நெய் ஆகும். இதுதான் காதலில் வாழ்க்கையைக் கரைத்து விடாமல் பொத்திப் பொத்தி பொறுத்துப் போய் காதலை விட அன்பு மட்டுமே வலுவானால் நெய் போல தாம்பத்யம் மணக்கும். புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சின்னச் சின்ன சண்டை வரத்தான் செய்யும். சண்டை வரும்.. அதை பூதாகரமாக்கி டைவர்ஸ் வரைக்கும் இழுத்துட்டுப் போய் விடுவதென்னவோ இரு வீட்டில் உள்ள பெற்றோர்களும் உறவினர்களுமே. புருஷன் பொண்டாட்டின்னா சண்டைலாம் வரத்தான் செய்யும்..அது உங்க பாடுன்னு கண்டுக்காம போறது தான் நல்ல பெற்றோருக்கு அழகு. அத விட்டுட்டு ஐயோ என் பொண்ணு எப்பேர்பட்ட குணவதி அவளுக்குப் போயி இப்படில்லாம் ஆகணுமா.. போயும் போயும் அவனுக்குழ் போயி கட்டி வச்சுட்டனேன்னு இவங்க அனத்தும் போது.. இதெல்லாம் அந்தப் பெண்ணுக்கு ''ஹப்பாடி நம்ம சைட் தப்பில்லன்னு நம்பிட்டாங்க''ன்ற மாதிரியான மனநிலை கொடுக்கும். அதே போலத் தான் பையன் வீட்டிலும் ரெண்டு பேர் வீட்லயும் ரெண்டு பேரையும் உயர்த்தி உயர்த்தி பேசி ஏதோ தனக்கு பொருத்தமில்லாதவங்களக் கட்டி வச்சுட்டதாகவும் இத்தனை நாள் சகித்து தியாக வாழ்வு வாழ்ந்ததாகவும் நம்ப வச்சிடுவாங்க. அந்த உயர்ந்த பிம்பத்திற்கும். ஒரு பாவப்பட்ட ஆள் என்ற கழிவிரக்கதிற்கும் ஆசைப்பட்டு இவங்களும் நம்ப ஆரம்பிச்சிடுவாங்க.. டைவர்ஸ் ஆகிடும்.. ஆனா அதுக்கப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த புத்தி வேலை செஞ்சு யோசிக்கும். அதான் நரகம். பொதுவா டைவர்ஸ் என்பதை எல்லாம் ரெண்டு பேரும் உக்காந்து பேசி செட்டே ஆகாதுன்னு தெரிஞ்ச அப்பறம் எடுக்க வேண்டிய முடிவு.. அதல்லாம மற்றவர்களும் பெற்றவர்களும் உங்கள் இணை குறித்து சொல்லும் குறைகளையும் உங்களைக் குறித்து சொல்லும் நிறைகளையும் மனதில் போட்டு ஒப்பிட்டுப் பிரியும் முடிவு எடுப்பதெல்லாம் மடத்தனம். நம்ம இணையும் பெர்பெக்ட் கிடையாது நாமளும் பெர்பெக்ட் கிடையாதுன்ற புரிதல் முதல்ல வேண்டும். அதற்கு அப்பறம் தான் ஒரு பிரச்சினைய அணுகனும். இந்த டைவர்ஸ் எண்ணங்களை கடந்து தான் எல்லாருமே இப்போது குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.இன்று அவரகள் ஆதர்ச தம்பதிகள்.இந்த நிலையை அடைவதற்கு அவர்கள் இருவரில் யாரோ ஒருவர் தான் காரணம். அட்ஜஸ்ட்மென்ட். அப்படி என்னத்துக்கு அட்ஜஸ்ட் செஞ்சு குடும்பம் நடத்தனும்ன்னு திமிராகக் கேள்வி வருதா? கல்யாணம் என்பதே அட்ஜஸ்ட்மென்ட்களால் ஆனது தான். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வக்கில்லன்னா என்னத்துக்கு கல்யாணம் முடிச்ச என்ற பதில் கிடைக்கும். உங்களால் யாரையும் அட்ஜஸ்ட் செஞ்சு போக முடியாது. சுயகவுரவம் அதிகமா இருக்கு அப்படில்லாம் நினைச்சிங்கன்னா.. very sorry அட்ஜஸ்ட் செய்யாம வெறும் சுயத்தை வச்சிக்கிட்டு இங்கு யாராலும் வாழவே முடியாது. ஏதாவது ஒரு வகையில் யாருக்காவது வளைந்து கொடுத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.. அதே வளைவை கல்யாணத்துக்கும் செய்ய முடியும் என்றால் மட்டுமே கல்யாணம் என்ற அமைப்பிற்குள் செல்லுங்கள்.. இல்லியா தனியா கெத்தா வாழ்ந்து பாருங்கள் அந்த வாழ்க்கை நரகம் என்பது போகப் போகப் புரியும். கேட்பார் பேச்சு கேட்காமல் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்து பாருங்கள் அது தான் சொர்க்கம். இதை நீட்டி யோசித்து நீடுழி வாழ்க... 😊😊😊 #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #💘Love Quotes & Videos #பொழுது போக்கு #உற்சாக பானம்
கதை சொள்ளரோம் - ೩೦' 39 ೩೦' 39 - ShareChat
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 *அறிஞர் அண்ணா* *நினைவு தினம்* *கவிதை ரசிகன்* குமரேசன் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 நடராஜன் முதலையாரும் பங்காரு அம்மையாரும் தாம்பத்திய தறியில் 1909 செப்டம்பர் 15 அண்ணாதுரை துணியை நெசவு செய்துக்கொடுத்தனர்..... உனது பெற்றோர்கள் நெசவாளர்கள் என்று தெரியும்... இப்படி ஒரு தரமான துணியை நெசவு செய்யக் கூடியவர்கள் என்று தெரிந்திருக்கவில்லை...... அன்று யாரும் அறிந்தார் இல்லை இந்தத் துணி 'இடைத்துணி'யாகாமல் 'கொடிதுணி'யாகும் என்று..... பச்சையப்பன் பள்ளியிலும் பச்சையப்பன் கல்லூரியிலும் படித்ததால் தான் என்னவோ நீ 'பச்சைத்தமிழனாய்' வாழ்ந்தாய்,....... நீ ஆங்கில ஆசிரியர் ஆனாய் இல்லை இல்லை... 'ஆங்கிலத்திற்கே ஆசிரியரானாய்.....!!' முடி சூடா 'ராஜாவாக' இருந்திருக்கிறாய் 'ராணி'யம்மையாரே உனக்கு வாழ்க்கைத் துணையாக வந்தார்..... !!!! உனக்கு 'ஒரு வாரிசு' கொடுக்க இறைவன் மறந்துவிட்டார்... அதனால் என்ன ? 'தமிழ்நாட்டையே' உனக்கு 'வாரிசாக்கி' விட்டாரே....!! ஆசிரியர் பேருந்தில் பயணம் செய்த நீ அதிலிருந்து இறங்கி பத்திரிக்கை ஆசிரியர் பேருந்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தாய் அதில் பயணியாக இருந்த நீ ஓட்டுநராகவே மாறிவிட்டாய்........... படிப்பாளி என்றுதான் நினைத்திருந்தார்கள்.... நீயே! எழுதி நியே! நடித்து நியே! நடத்திய நாடகங்கள் தான் நீ படைப்பாளியும் கூட என்று உலகிற்கு உரக்கச் சொன்னது....... எல்லோரும் திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதினர் கல்லாவை நிரப்புவதற்கு...... நீயோ ! கதை வசனம் எழுதினாய் உன் 'கொள்கைகளை' பரப்புவதற்கு...... உனது வேர்கள் ஆரம்பத்திலிருந்து நீதியைத் தேடிச் சென்றது அதனால் தான் முடிவில் நீதிக் கட்சியை அடைந்தது..... பெரியார் உன்னை கட்சியாளராகச் செதுக்கினார் நீயோ! திமுக கட்சியையே செதுக்கி விட்டாய்....!!! உனது கட்சிக்குக் கட்டுப்பாட்டை உடலாகவும் கடமையை உயிராகவும் கண்ணியத்தை ஆடையாகவும் கொடுத்து உயிர்த்தெழச் செய்தாய்..... மதராஸ் மாநிலத்திற்கு 'தமிழ்நாடு'என்று பெயர் சூட்டி தமிழை அலங்கரித்து அழகு பார்த்த தந்தை நீதானே..!!!. பெரியாருக்கு உனக்கும் கருத்து வேறுபாடு வந்தது.... அது பிள்ளைக்கும் பெற்றோருக்கும் வந்த கருத்து வேறுபாடு..... நீ ஒரு தீர்க்கதரிசி கொடியில் இரண்டு விரல்களைக் காட்டினாய் தமிழ்நாட்டுக்கு முதல்வர் பதவியேற்று இரண்டு ஆண்டில் நீ இறந்து விட்டாய்.... "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு" என்றாய்..... அதனால்தான் 'மாற்றான்' மனதிலும் நீ பூத்திருக்கிறாய்.... "கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு" என்றாய்.... அதனால் தான் உன் வார்த்தைகள் கூர்மையானதாக இருந்தது... "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்றாய் அதனால் தான் உன் இதயத்தில் இரண்டு 'இமயங்களையே !' சுமந்தாய்..... உன்னை அசிங்கப்படுத்த அனுப்பிய வார்த்தைகளைக் கூட அலங்கரித்து திருப்பி அனுப்பி வைத்தாய் .... பலர் பேச ஆரம்பித்தால் உட்கார்ந்து இருப்பவர்கள் கூட எழுந்து சென்று விடுவார்கள் நீ பேச ஆரம்பித்தால் உட்கார்ந்து இருப்பவர்கள் கூட எழுந்து வருவார்கள்.... சொல்லுக்கு அகத்தியன் ஆனவன் கூட உன் சொல்லைக் கேட்டிருந்தால் உனக்கு ரசிகனாகி இருப்பான்...... நீ ஆங்கிலம் பேச ஆரம்பித்தால் ஆங்கிலேயர்கள் பேசுவது கூட உளறலாகத் தான் தெரியும்... தத்துவங்களை எல்லாம் வாயினால் மட்டும் சொல்லிக் காட்டவில்லை வாழ்த்தே காட்டியவன் நீ ! அதனாலேயே உனக்கு 'அறிஞர்' என்ற பட்டத்தை அளித்தார்களோ......? ஆசிரியராக... பத்திரிக்கையாளராக.... பத்திரிக்கை ஆசிரியராக.... சமுதாய சிந்தனை உள்ளவராக... சமூக ஆர்வலராக... நாடக ஆசிரியராக.... நடிகனாக... . நல்லவனாக.... கதையாசிரியராக.... தொண்டனாக.... கட்சித் தலைவனாக... அரசியல்வாதியாக.... இலக்கியவாதியாக..... மக்கள் பிரதிநிதியாக.... வசனக் கரத்தாகவாக.... முதல்வராக..... நீ அவதாரங்கள் எடுத்தாய்... அடேங்கப்பா...!!! உனக்கு முன்னால் ஆண்டவனே தோற்றுத்தான் போனான் அவதாரம் எடுப்பதில்....!!! அரசியல் இன்றி அரசாங்கம் இருந்தாலும் நீ இன்றி அரசியல் இல்லை.... வாழ்க உன் புகழ் ! வளர்க உன் பெருமை! *கவிதை ரசிகன்* 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 #💘Love Quotes & Videos
💘Love Quotes & Videos - ShareChat
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (04.02.2026)* ...................................................................... *"ஆசை, பேராசை என்றால் என்ன...?"* ................................................................................ ''ஆசை'' என்பது, தமக்கு எது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவடையாமல், மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசைதான் ''பேராசை...!" ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும்... அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்துவிடும். பயனற்றவை மீது வைக்கும் ஆசையே பேராசை எனப்படும். பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்பதில் அய்யமில்லை. ஆனால்!, அதைவிட இன்றியமையாதவை உள்ளன... பொருளாதாரத்திற்காக அந்த இன்றியமையாத ஒன்றை ஒருவன் புறக்கணித்து விட்டு பொருளாதாரத்தின் பின்னால் சென்றால் அவனுக்குப் பொருளாதாரத்தில் பேராசை உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்... ஒரு செயலில் ஈடுபடுவதால் ஒருவனுக்கு பணம் கிடைக்குமென்றால், அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான்... சமூகத்தைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்படும்போது, அதில் பங்கு பெறாவிட்டால், சமுதாயத்தை பாதிக்கும் என்ற நிலையில் பணம் திரட்டச் சென்றால் அதுவும் பேராசைதான்... குடும்பத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு உயர்தரமான சிகிச்சையளிக்க நம்மிடம் வசதி இருக்கும்போது, அரசாங்க மருத்துவ மனையில் சேர்த்தால் அதுகூட பேராசைதான்... சுருக்கமாகச் சொன்னால் பணத்தை விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய செயல்களுடன் பணம் மோதும்போது நாம் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே பேராசையாகும்... ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பத்து இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை அடைவதற்காக அவன் ஆசைப்பட்டால் தொகை பெரிதாக இருந்தாலும் அது பேராசையாகாது. இது நியாயமான ஆசைதான்... கூனிக்குறுகி கும்பிடு போட்டால் பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதற்கு ஆசைப்படுவது பேராசையாகி விடும்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *அளவில்லாத ''பேராசை'' நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும்...!* 🔴 *உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ''ஆசை'' காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது...!!* ⚫ *எந்தப் பொருளின் மீது அதிக ஆசை இல்லையோ!, அவற்றினால் துன்பம் ஏதும் இல்லை...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #👪 cute family members 👪 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்#
👪 cute family members 👪 - தேவைகளுக்கும் எல்லா தொடக்கப் புள்ளி ஆசைதான். தேவைகளுக்கும் எல்லா தொடக்கப் புள்ளி ஆசைதான். - ShareChat
அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள்.... தொண்ணூறு நாட்கள் வரை புதுப் பொண்ணு மாப்பிள்ளையாக வலம் வரலாம்...!!! உலக அழகியே மனைவி என்றாலும் உலகத்தின் ஆணழகனே புருஷன் என்றாலும் பார்க்கப் பார்க்க காதல் மட்டுமே என்றால் ஒரு நேரத்திற்குப் பிறகு தெவட்டத் தான் செய்யும். ஏனெனில் பழகப் பழக பாலும் புளித்து தயிர் ஆகத் தான் செய்யும்.புளித்து தயிர் ஆனாலும் பொறுத்திருந்தால் தயிர் வெண்ணெய் ஆகி இறுதியாக மணக்கும் நெய் ஆகும். இதுதான் காதலில் வாழ்க்கையைக் கரைத்து விடாமல் பொத்திப் பொத்தி பொறுத்துப் போய் காதலை விட அன்பு மட்டுமே வலுவானால் நெய் போல தாம்பத்யம் மணக்கும். புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சின்னச் சின்ன சண்டை வரத்தான் செய்யும். சண்டை வரும்.. அதை பூதாகரமாக்கி டைவர்ஸ் வரைக்கும் இழுத்துட்டுப் போய் விடுவதென்னவோ இரு வீட்டில் உள்ள பெற்றோர்களும் உறவினர்களுமே. புருஷன் பொண்டாட்டின்னா சண்டைலாம் வரத்தான் செய்யும்..அது உங்க பாடுன்னு கண்டுக்காம போறது தான் நல்ல பெற்றோருக்கு அழகு. அத விட்டுட்டு ஐயோ என் பொண்ணு எப்பேர்பட்ட குணவதி அவளுக்குப் போயி இப்படில்லாம் ஆகணுமா.. போயும் போயும் அவனுக்குழ் போயி கட்டி வச்சுட்டனேன்னு இவங்க அனத்தும் போது.. இதெல்லாம் அந்தப் பெண்ணுக்கு ''ஹப்பாடி நம்ம சைட் தப்பில்லன்னு நம்பிட்டாங்க''ன்ற மாதிரியான மனநிலை கொடுக்கும். அதே போலத் தான் பையன் வீட்டிலும் ரெண்டு பேர் வீட்லயும் ரெண்டு பேரையும் உயர்த்தி உயர்த்தி பேசி ஏதோ தனக்கு பொருத்தமில்லாதவங்களக் கட்டி வச்சுட்டதாகவும் இத்தனை நாள் சகித்து தியாக வாழ்வு வாழ்ந்ததாகவும் நம்ப வச்சிடுவாங்க. அந்த உயர்ந்த பிம்பத்திற்கும். ஒரு பாவப்பட்ட ஆள் என்ற கழிவிரக்கதிற்கும் ஆசைப்பட்டு இவங்களும் நம்ப ஆரம்பிச்சிடுவாங்க.. டைவர்ஸ் ஆகிடும்.. ஆனா அதுக்கப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த புத்தி வேலை செஞ்சு யோசிக்கும். அதான் நரகம். பொதுவா டைவர்ஸ் என்பதை எல்லாம் ரெண்டு பேரும் உக்காந்து பேசி செட்டே ஆகாதுன்னு தெரிஞ்ச அப்பறம் எடுக்க வேண்டிய முடிவு.. அதல்லாம மற்றவர்களும் பெற்றவர்களும் உங்கள் இணை குறித்து சொல்லும் குறைகளையும் உங்களைக் குறித்து சொல்லும் நிறைகளையும் மனதில் போட்டு ஒப்பிட்டுப் பிரியும் முடிவு எடுப்பதெல்லாம் மடத்தனம். நம்ம இணையும் பெர்பெக்ட் கிடையாது நாமளும் பெர்பெக்ட் கிடையாதுன்ற புரிதல் முதல்ல வேண்டும். அதற்கு அப்பறம் தான் ஒரு பிரச்சினைய அணுகனும். இந்த டைவர்ஸ் எண்ணங்களை கடந்து தான் எல்லாருமே இப்போது குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.இன்று அவரகள் ஆதர்ச தம்பதிகள்.இந்த நிலையை அடைவதற்கு அவர்கள் இருவரில் யாரோ ஒருவர் தான் காரணம். அட்ஜஸ்ட்மென்ட். அப்படி என்னத்துக்கு அட்ஜஸ்ட் செஞ்சு குடும்பம் நடத்தனும்ன்னு திமிராகக் கேள்வி வருதா? கல்யாணம் என்பதே அட்ஜஸ்ட்மென்ட்களால் ஆனது தான். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வக்கில்லன்னா என்னத்துக்கு கல்யாணம் முடிச்ச என்ற பதில் கிடைக்கும். உங்களால் யாரையும் அட்ஜஸ்ட் செஞ்சு போக முடியாது. சுயகவுரவம் அதிகமா இருக்கு அப்படில்லாம் நினைச்சிங்கன்னா.. very sorry அட்ஜஸ்ட் செய்யாம வெறும் சுயத்தை வச்சிக்கிட்டு இங்கு யாராலும் வாழவே முடியாது. ஏதாவது ஒரு வகையில் யாருக்காவது வளைந்து கொடுத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.. அதே வளைவை கல்யாணத்துக்கும் செய்ய முடியும் என்றால் மட்டுமே கல்யாணம் என்ற அமைப்பிற்குள் செல்லுங்கள்.. இல்லியா தனியா கெத்தா வாழ்ந்து பாருங்கள் அந்த வாழ்க்கை நரகம் என்பது போகப் போகப் புரியும். கேட்பார் பேச்சு கேட்காமல் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்து பாருங்கள் அது தான் சொர்க்கம். இதை நீட்டி யோசித்து நீடுழி வாழ்க... 😊😊😊 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
உற்சாக பானம்# - ೩೦' 39 ೩೦' 39 - ShareChat
..... மனதைக் கலக்கம் அடையாமல் வைத்திருக்கும் வித்தை மிகப் பெரிது! மற்றவர்கள் சொல்லுக்குக் கலங்காதீர்கள்! உங்கள் வாழ்க்கைப் பயணம் பூக்கள் அல்ல முட்கள் மீதும் இருக்கக் கூடும்! மனது துவண்டு வீழ்ந்து விட அனுமதிக்காதீர்கள்! எது வந்த போதும் துணிவுடன் எதிர்த்து நில்லுங்கள்! பார்ப்போரிடம் எல்லாம் உங்கள் விஷயங்களைக் கொட்டாதீர்கள்! உங்களைப் பற்றி புறம் பேச நீங்களே அவர்களுக்கு வாய்ப்புத் தராதீர்கள்! போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்கின்றோம் நினைவில் கொள்ளுங்கள்! பெற்றோரை நம்புங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! எந்த ஒரு விஷயமும் நாம் அணுகும் முறையில் உள்ளது. இதை உணர்ந்து மனதை மகிழ்வுடன் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த நாள் உங்கள் அனைவருக்கும் இனிய நாளாய் அமைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்! #பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪
பொழுது போக்கு - WORLD CANCER DAY Felyruay 4 GLOBALLY 1IN 6 PEOPLE DIEDUETO CANCER  WORLD CANCER DAY Felyruay 4 GLOBALLY 1IN 6 PEOPLE DIEDUETO CANCER - ShareChat
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (04.02.2026)* ...................................................................... *"ஆசை, பேராசை என்றால் என்ன...?"* ................................................................................ ''ஆசை'' என்பது, தமக்கு எது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவடையாமல், மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசைதான் ''பேராசை...!" ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும்... அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்துவிடும். பயனற்றவை மீது வைக்கும் ஆசையே பேராசை எனப்படும். பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்பதில் அய்யமில்லை. ஆனால்!, அதைவிட இன்றியமையாதவை உள்ளன... பொருளாதாரத்திற்காக அந்த இன்றியமையாத ஒன்றை ஒருவன் புறக்கணித்து விட்டு பொருளாதாரத்தின் பின்னால் சென்றால் அவனுக்குப் பொருளாதாரத்தில் பேராசை உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்... ஒரு செயலில் ஈடுபடுவதால் ஒருவனுக்கு பணம் கிடைக்குமென்றால், அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான்... சமூகத்தைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்படும்போது, அதில் பங்கு பெறாவிட்டால், சமுதாயத்தை பாதிக்கும் என்ற நிலையில் பணம் திரட்டச் சென்றால் அதுவும் பேராசைதான்... குடும்பத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு உயர்தரமான சிகிச்சையளிக்க நம்மிடம் வசதி இருக்கும்போது, அரசாங்க மருத்துவ மனையில் சேர்த்தால் அதுகூட பேராசைதான்... சுருக்கமாகச் சொன்னால் பணத்தை விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய செயல்களுடன் பணம் மோதும்போது நாம் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே பேராசையாகும்... ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பத்து இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை அடைவதற்காக அவன் ஆசைப்பட்டால் தொகை பெரிதாக இருந்தாலும் அது பேராசையாகாது. இது நியாயமான ஆசைதான்... கூனிக்குறுகி கும்பிடு போட்டால் பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதற்கு ஆசைப்படுவது பேராசையாகி விடும்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *அளவில்லாத ''பேராசை'' நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும்...!* 🔴 *உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ''ஆசை'' காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது...!!* ⚫ *எந்தப் பொருளின் மீது அதிக ஆசை இல்லையோ!, அவற்றினால் துன்பம் ஏதும் இல்லை...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #👪 cute family members 👪 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்#
👪 cute family members 👪 - தேவைகளுக்கும் எல்லா தொடக்கப் புள்ளி ஆசைதான். தேவைகளுக்கும் எல்லா தொடக்கப் புள்ளி ஆசைதான். - ShareChat
எல்லாப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் மேல் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் மூலமாக தங்கள் குழந்தைகளையே அழித்து விடுகிறார்கள். நீங்கள் உங்கள் பெற்றோர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும். எப்படி ஒரு குழந்தை தனது தாயின் கருவறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வருகிறதோ, அப்படி நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து விடுதலை பெற்று வெளியே வர வேண்டும். குழந்தை கருவறையில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெளிவராவிட்டால் அந்த கருவறையே அதற்கு கல்லறை ஆகிவிடும். ஒன்பது மாத வாசத்திற்குப் பின் அந்த குழந்தை கருவறையைவிட்டு வெளியே வர வேண்டும். அந்த கருவறையைத் தாங்கிக் கொண்டிருக்கும் தனது தாயைவிட்டு வெளியே வரவேண்டும். தாய்க்கு எவ்வளவு வலி ஏற்பட்டாலும் சரி, குழந்தை இருந்துவிட்டுப் போன அந்த வெற்றிடம் தாயை எவ்வளவு பாதித்தாலும் சரி, குழந்தை வெளியே வந்துதான் ஆக வேண்டும். அதே போல் ஒரு காலகட்டத்தில் அந்த குழந்தை தனது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து வெளியே வர வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தை முதன்முறையாக தனிமனிதாக உருவாகுகிறது. அதன்பின்தான் அந்த குழந்தை தனது சொந்தக்காலில் உண்மையாகவே நிற்கத் தொடங்குகிறது. அப்போதுதான் அது உண்மையாகவே விடுதலை பெறுகிறது. குழந்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய பெற்றோர்களாக இருந்தால் அந்த குழந்தைக்கு நல்லது. விழிப்புணர்வுடன் செயல்பட்டு குழந்தை விடுதலை பெற. தன்னிலை பெற அவர்களால் ஆன உதவியைச் செய்வார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை தங்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு மனக்கட்டுத்திட்டம் போடமாட்டார்கள். குழந்தைகளை அன்புள்ளம் கொண்டவர்களாக வளர்ப்பார்கள். ஒவ்வொரு தாய் தந்தையும் அப்படி இருந்துவிட்டால் இந்த உலகம் அடியோடு மாறிவிடும். அந்த உலகம் எப்படி இருக்கும் தெரியுமா? அங்கே தனக்குரிய தொழிலை மனிதன் எப்படித் தேர்ந்தெடுப்பான் தெரியுமா? மரவேலையின் மேல் தனக்குள்ள காதலால்தான் ஒரு தச்சன் தனது தொழிலைத் தேர்ந்தெடுப்பான். பாடம் புகட்ட தனக்கிருக்கும். தணியாத தாகத்தால்தான் ஆசிரியன் அந்தத் தொழிலுக்கே வந்திருப்பான். காலணி தயாரிப்பவனும் தனது தொழில் மேல் இருக்கும் காதலால்தான் அந்தத் தொழிலில் ஈடுபடுவான். ஆனால் இப்போது அப்படியா நடக்கிறது? காலணி தயாரிக்க ஆர்வம் உள்ளவன் அறுவை சிகிச்சை நிபுணனாக இருக்கிறான். அறுவை சிகிச்சை மேல் நாட்டம் உள்ளவன் காலணி தயாரித்துக் கொண்டிருக்கிறான். இருவருமே தங்களது தொழிலை ஒரு வித கோபத்தோடு செய்து கொண்டிருக்கிறார்கள். தச்சன் அரசியல் வாதியாகிவிட்டான். அரசியல்வாதி தச்சனாக இருக்கிறான். எல்லோரும் கோபமாக இருக்கிறார்கள். எந்த மனிதனும் அவன் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. வேறு எங்கேயோ சம்பந்தமில்லாத இடத்தில் இருக்கிறான். பொருந்தாத தொழிலில் ஈடுபடுவதுதான் இன்று பலரையும் பாதித்திருக்கும் நோய். யாரிடமும் நிறைவில்லை. காரணம்? நடைமுறைப் பயன் ஒன்றுதான் முக்கியமாகப் போய் விட்டது. அதுதான் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது. இன்று நான் பார்க்கும் தொழிலால் எனக்கு என்ன லாபம் கிடைக்கிறது? பணம், பெயர்... என்று எல்லாரும் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். யாருமே தங்களது தொழிலை நேசிப்பதில்லை. நேசிக்கும் தொழிலில் ஈடுபடுவதில்லை. இந்த அழகான கதையை நான் கேட்டு ரசித்தி ருக்கிறேன். ஒரு பெண் வயதாகி இறந்தவுடன் சொர்க்கத்திற்குப் போனாள். அங்கிருந்த தேவதையிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாள். "சொர்க்கத்தில் இருக்கும் ஒருவருடன் நான் பேச விரும்புகிறேன். முடியுமா?" நீங்கள் பேச விரும்பும் நபர் சொர்க்கத்தில் இருந்தால், நிச்சயமாக முடியும்." "அந்த நபர் இங்குதான் இருக்கிறார். எனக்கு நிச்சயமாகத் தெரியும். நான் ஏசுநாதரை ஈன்றெடுத்த தாயான கன்னி மேரியுடன் பேச விரும்புகிறேன்.' நிச்சயமாக முடியும். கன்னி மேரி சொர்க்கத்தின் மற்றொரு பகுதியில் இருக்கிறார். உங்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்து நிச்சயம் இங்கே வந்து உங்களிடம் பேசுவார்." சிறிது நேரத்தில் அங்கு ஒளிமயமாக வந்த கன்னி மேரியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண், பின் தயங்கித் தயங்கித் தனது கேள்வியைக் கேட்டாள் "பல லட்சக்கணக்கான மக்கள் தெய்வமாக வணங்கும் ஒரு மகனுக்குத் தாயாக இருப்பது எப்படி இருக்கிறது என்று சொல்லுங்களேன்." கன்னி மேரி கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார், "உண்மையைச் சொல்லப் போனால் நானும் என் கணவரும் என் மகன் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நிச்சயம் டாக்டராவான் என்று நம்பிக் கொண்டிருந்தோம். அவன் இப்படி ஆகிவிட்டானே...." தங்கள் குழந்தை அப்படி ஆக வேண்டும் இப்படி ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் எப்போதும் நம்பிக் கொண்டே இருக்கிறார்கள். கனவு கண்டு கொண்டே இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைதான் குழந்தைக்கு விஷமாகிவிடுகிறது. உங்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள். அதிகபட்ச அன்பைக் காட்டுங்கள். அவர்கள் உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படுவார்கள் என்ற அடிப்படையில் அந்த அன்பு இருக்க வேண்டாம். அவர்கள் உங்கள் குழந்தைகள். நீங்கள் அவர்களைப் பெற்றவர்கள். உங்கள் அன்புக்கு இது மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும். அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே நேசியுங்கள். உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படும் வகையில் அவர்களை மாற்றியமைக்க முயற்சி செய்யாதீர்கள். பயன் கருதி அன்பு காட்டாதீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் என்ன செய்தாலும் சரி அது நீங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பைப் பாதிக்கக்கூடாது. உங்கள் அன்பு நிபந்தனையற்ற தூய்மையான அன்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களைச் சுற்றி ஒரு புது உலகம் உருவாகும். மக்கள் தங்கள் மனம் எதை விரும்புகிறதோ அதையே செய்வார்கள். எந்தத் தொழில் தங்களுக்குக் காதல் இருக்கிறதோ அந்தத் தொழிலையே தேர்ந்தெடுப்பார்கள். நடைமுறைப் பயன் கருதி எந்தத் தொழிலையும் தேர்வு செய்யமாட்டார்கள். (மனிதனின் புத்தகம் மகன் ) _ஓஷோ #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு
உற்சாக பானம்# - +917904270682 +917904270682 - ShareChat
கழுத்தின் முக்கியமான உட்புற அமைப்பு...* நாம் சாதாரணமாக நினைக்கும் கழுத்துக்குள், வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான பல அமைப்புகள் மிகச் சீராக இணைந்து செயல்படுகின்றன. இந்த பகுதியில் தசைகள், நரம்புகள், இரத்த நாளங்கள் (அர்ட்டரி & வீன்), சுரப்பிகள் மற்றும் ஆதரவு திசுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து வேலை செய்கின்றன. •நரம்புகள் – மூளையிலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு தகவல்களை அனுப்புகின்றன. •இரத்த நாளங்கள் – மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் சத்துகளை கொண்டு செல்கின்றன; பயன்படுத்தப்பட்ட இரத்தத்தை மீண்டும் திரும்ப கொண்டு வருகின்றன. •கழுத்துத் தசைகள் – தலையை நகர்த்த, நிலைநிறுத்த மற்றும் முக்கிய உறுப்புகளை பாதுகாக்க உதவுகின்றன. •காற்றுக் குழாய் & உணவுக் குழாய் – மூச்சு விடவும், உணவு எடுத்துக்கொள்ளவும் பாதுகாப்பாக செயல்படுகின்றன. •கழுத்து என்பது ஒரு முக்கியமான வாழ்க்கை பாதை. இங்கு ஏற்படும் சிறிய பாதிப்பே கூட •நரம்பு •மூச்சு •இரத்த ஓட்டம் என்ற முக்கிய செயல்களை பாதிக்கலாம். இந்த அமைப்பு மனித உடலின் அதிசயமான வடிவமைப்பையும், நம் வாழ்க்கை இயங்கும் நுட்பமான சமநிலையையும் வெளிப்படுத்துகிறது. *குறிப்பு* இந்த பதிவு தகவல் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகவும். #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - கழுத்துதசைகள் தைராய்டுசுரப்பி மூச்சுக்குழாம் நரம்புகள் பெருநாடி மேல் பெருஞ்சிரை இதயம் ಕಯಿಯಿಯ நரம்புகள் கழுத்துதசைகள் தைராய்டுசுரப்பி மூச்சுக்குழாம் நரம்புகள் பெருநாடி மேல் பெருஞ்சிரை இதயம் ಕಯಿಯಿಯ நரம்புகள் - ShareChat