
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
எல்லாப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் மேல் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் மூலமாக தங்கள் குழந்தைகளையே அழித்து விடுகிறார்கள்.
நீங்கள் உங்கள் பெற்றோர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும். எப்படி ஒரு குழந்தை தனது தாயின் கருவறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வருகிறதோ, அப்படி நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து விடுதலை பெற்று வெளியே வர வேண்டும்.
குழந்தை கருவறையில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெளிவராவிட்டால் அந்த கருவறையே அதற்கு கல்லறை ஆகிவிடும். ஒன்பது மாத வாசத்திற்குப் பின் அந்த குழந்தை கருவறையைவிட்டு வெளியே வர வேண்டும். அந்த கருவறையைத் தாங்கிக் கொண்டிருக்கும் தனது தாயைவிட்டு வெளியே வரவேண்டும்.
தாய்க்கு எவ்வளவு வலி ஏற்பட்டாலும் சரி, குழந்தை இருந்துவிட்டுப் போன அந்த வெற்றிடம் தாயை எவ்வளவு பாதித்தாலும் சரி, குழந்தை வெளியே வந்துதான் ஆக வேண்டும்.
அதே போல் ஒரு காலகட்டத்தில் அந்த குழந்தை தனது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து வெளியே வர வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தை முதன்முறையாக தனிமனிதாக உருவாகுகிறது. அதன்பின்தான் அந்த
குழந்தை தனது சொந்தக்காலில் உண்மையாகவே நிற்கத் தொடங்குகிறது. அப்போதுதான் அது உண்மையாகவே விடுதலை பெறுகிறது.
குழந்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய பெற்றோர்களாக இருந்தால் அந்த குழந்தைக்கு நல்லது. விழிப்புணர்வுடன் செயல்பட்டு குழந்தை விடுதலை பெற. தன்னிலை பெற அவர்களால் ஆன உதவியைச் செய்வார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை தங்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு மனக்கட்டுத்திட்டம் போடமாட்டார்கள். குழந்தைகளை அன்புள்ளம் கொண்டவர்களாக வளர்ப்பார்கள்.
ஒவ்வொரு தாய் தந்தையும் அப்படி இருந்துவிட்டால் இந்த உலகம் அடியோடு மாறிவிடும். அந்த உலகம் எப்படி இருக்கும் தெரியுமா? அங்கே தனக்குரிய தொழிலை மனிதன் எப்படித் தேர்ந்தெடுப்பான் தெரியுமா?
மரவேலையின் மேல் தனக்குள்ள காதலால்தான் ஒரு தச்சன் தனது தொழிலைத் தேர்ந்தெடுப்பான். பாடம் புகட்ட தனக்கிருக்கும். தணியாத தாகத்தால்தான் ஆசிரியன் அந்தத் தொழிலுக்கே வந்திருப்பான். காலணி தயாரிப்பவனும் தனது தொழில் மேல் இருக்கும் காதலால்தான் அந்தத் தொழிலில் ஈடுபடுவான்.
ஆனால் இப்போது அப்படியா நடக்கிறது? காலணி தயாரிக்க ஆர்வம் உள்ளவன் அறுவை சிகிச்சை நிபுணனாக
இருக்கிறான். அறுவை சிகிச்சை மேல் நாட்டம் உள்ளவன் காலணி தயாரித்துக் கொண்டிருக்கிறான். இருவருமே தங்களது தொழிலை ஒரு வித கோபத்தோடு செய்து கொண்டிருக்கிறார்கள். தச்சன் அரசியல் வாதியாகிவிட்டான். அரசியல்வாதி தச்சனாக இருக்கிறான். எல்லோரும் கோபமாக இருக்கிறார்கள்.
எந்த மனிதனும் அவன் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. வேறு எங்கேயோ சம்பந்தமில்லாத இடத்தில் இருக்கிறான். பொருந்தாத தொழிலில் ஈடுபடுவதுதான் இன்று பலரையும் பாதித்திருக்கும் நோய். யாரிடமும் நிறைவில்லை.
காரணம்? நடைமுறைப் பயன் ஒன்றுதான் முக்கியமாகப் போய் விட்டது. அதுதான் இன்று பலரையும் ஆட்டிப் படைக்கிறது. இன்று நான் பார்க்கும் தொழிலால் எனக்கு என்ன லாபம் கிடைக்கிறது? பணம், பெயர்... என்று எல்லாரும் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். யாருமே தங்களது தொழிலை நேசிப்பதில்லை. நேசிக்கும் தொழிலில் ஈடுபடுவதில்லை.
இந்த அழகான கதையை நான் கேட்டு ரசித்தி ருக்கிறேன்.
ஒரு பெண் வயதாகி இறந்தவுடன் சொர்க்கத்திற்குப் போனாள். அங்கிருந்த தேவதையிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாள்.
"சொர்க்கத்தில் இருக்கும் ஒருவருடன் நான் பேச விரும்புகிறேன். முடியுமா?"
நீங்கள் பேச விரும்பும் நபர் சொர்க்கத்தில் இருந்தால், நிச்சயமாக முடியும்."
"அந்த நபர் இங்குதான் இருக்கிறார். எனக்கு நிச்சயமாகத் தெரியும். நான் ஏசுநாதரை ஈன்றெடுத்த தாயான கன்னி மேரியுடன் பேச விரும்புகிறேன்.'
நிச்சயமாக முடியும். கன்னி மேரி சொர்க்கத்தின் மற்றொரு பகுதியில் இருக்கிறார். உங்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்து நிச்சயம் இங்கே வந்து உங்களிடம் பேசுவார்."
சிறிது நேரத்தில் அங்கு ஒளிமயமாக வந்த கன்னி மேரியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண், பின் தயங்கித் தயங்கித் தனது கேள்வியைக் கேட்டாள்
"பல லட்சக்கணக்கான மக்கள் தெய்வமாக வணங்கும் ஒரு மகனுக்குத் தாயாக இருப்பது எப்படி இருக்கிறது என்று சொல்லுங்களேன்."
கன்னி மேரி கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார், "உண்மையைச் சொல்லப் போனால் நானும் என் கணவரும் என் மகன் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நிச்சயம் டாக்டராவான் என்று நம்பிக் கொண்டிருந்தோம். அவன் இப்படி ஆகிவிட்டானே...."
தங்கள் குழந்தை அப்படி ஆக வேண்டும் இப்படி ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் எப்போதும் நம்பிக் கொண்டே இருக்கிறார்கள். கனவு கண்டு கொண்டே இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைதான் குழந்தைக்கு விஷமாகிவிடுகிறது.
உங்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள். அதிகபட்ச அன்பைக் காட்டுங்கள். அவர்கள் உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படுவார்கள் என்ற அடிப்படையில் அந்த அன்பு இருக்க வேண்டாம். அவர்கள் உங்கள் குழந்தைகள். நீங்கள் அவர்களைப் பெற்றவர்கள். உங்கள் அன்புக்கு இது மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும்.
அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே நேசியுங்கள். உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படும் வகையில் அவர்களை மாற்றியமைக்க முயற்சி செய்யாதீர்கள். பயன் கருதி அன்பு காட்டாதீர்கள்.
உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் என்ன செய்தாலும் சரி அது நீங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பைப் பாதிக்கக்கூடாது. உங்கள் அன்பு நிபந்தனையற்ற தூய்மையான அன்பாக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் உங்களைச் சுற்றி ஒரு புது உலகம் உருவாகும். மக்கள் தங்கள் மனம் எதை விரும்புகிறதோ அதையே செய்வார்கள். எந்தத் தொழில் தங்களுக்குக் காதல் இருக்கிறதோ அந்தத் தொழிலையே தேர்ந்தெடுப்பார்கள். நடைமுறைப் பயன் கருதி எந்தத் தொழிலையும் தேர்வு செய்யமாட்டார்கள்.
(மனிதனின் புத்தகம்
மகன் )
_ஓஷோ #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு
கழுத்தின் முக்கியமான உட்புற அமைப்பு...*
நாம் சாதாரணமாக நினைக்கும் கழுத்துக்குள், வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான பல அமைப்புகள் மிகச் சீராக இணைந்து செயல்படுகின்றன.
இந்த பகுதியில் தசைகள், நரம்புகள், இரத்த நாளங்கள் (அர்ட்டரி & வீன்), சுரப்பிகள் மற்றும் ஆதரவு திசுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து வேலை செய்கின்றன.
•நரம்புகள் – மூளையிலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு தகவல்களை அனுப்புகின்றன.
•இரத்த நாளங்கள் – மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் சத்துகளை கொண்டு செல்கின்றன; பயன்படுத்தப்பட்ட இரத்தத்தை மீண்டும் திரும்ப கொண்டு வருகின்றன.
•கழுத்துத் தசைகள் – தலையை நகர்த்த, நிலைநிறுத்த மற்றும் முக்கிய உறுப்புகளை பாதுகாக்க உதவுகின்றன.
•காற்றுக் குழாய் & உணவுக் குழாய் – மூச்சு விடவும், உணவு எடுத்துக்கொள்ளவும் பாதுகாப்பாக செயல்படுகின்றன.
•கழுத்து என்பது ஒரு முக்கியமான வாழ்க்கை பாதை.
இங்கு ஏற்படும் சிறிய பாதிப்பே கூட
•நரம்பு
•மூச்சு
•இரத்த ஓட்டம்
என்ற முக்கிய செயல்களை பாதிக்கலாம்.
இந்த அமைப்பு மனித உடலின் அதிசயமான வடிவமைப்பையும், நம் வாழ்க்கை இயங்கும் நுட்பமான சமநிலையையும் வெளிப்படுத்துகிறது.
*குறிப்பு*
இந்த பதிவு தகவல் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகவும். #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு
சிந்தனை...*
*வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க..!!*
வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க வெகுதூரமில்லை...
மனித வாழ்க்கையில் பெரும் வாரியான நிகழ்வு பணத்தை தேடுதல் அல்லது அதை பாதுகாத்தல் என்ற நிகழ்ச்சி நிரலிலே முடிவடைந்து விடுகிறது. நமது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது, (Objectetive). பண்பு வாழ்வா? இல்லை பண வாழ்வா என்றால் பணம் தான் பிரதானம் என்பார்கள். பணத்திற்குக் கூட ஒரு கடவுளை படைத்த பண்பாளர்கள் நாம்.
இந்த உலகில் இரவும் பகலும் மாறி மாறி நிகழ்கின்றன. இரவு என்ற ஒரு தன்மை உண்டா? அல்லது பகல் என்ற ஒரு தன்மை உண்டா?
இரவு என்றால் சூரியன் மறைந்த பின் வரும். சூரியன் எழுந்த பின் வருவதை பகல் என்கிறார்கள். “சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்” என்கிறார்கள். இவ்விரண்டுக்கும் என்ன வேறுபாடு?
உண்மையில் சூரியன் மறைவதும் இல்லை எழுவதும் இல்லை.அது ஒரு நிலையான பிம்பம். இந்த உலகம் இரவு பகல் என்று கூறுவதை விட ஒளியற்ற தன்மை. இருள்ளற்ற தன்மை என்றே கூறவேண்டும். அதை போன்று தான் இந்த மனித வாழ்க்கை மாய இருளிலே ஒளி அற்ற தன்மையில் வாழும் போது பிரச்சனை விஸ்வரூபம் தாங்கி வருகிறது. அறிவு என்பது ஒளியுள்ள நிலைக்கு மாறும் போது ஞானம் என்னும் அல்லது வெற்றி மகுடம் ஒளி வெள்ளமாய் ஓடிவருகிறது. வெற்றி என்பது எங்கும் மறைந்திருக்கவில்லை.
மறைப்பொருளாகவும் இல்லை. அது எங்கும் நிறைந்திருக்கும் இறைச் சக்தி தான். நாம் அதை தேடி செல்வதில்லை. வெற்றியை அலைந்து திரிந்து அனைத்துக் கொள்பவர்களை சூரிய ஒளியை போல் பிரகசிக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு தாரக மந்திரம். சொல்லச் சொல்ல தானாகவே உருவேற்றிக் கொள்ளும். உழைப்பவர்களுக்கு மட்டும். அன்று நாடோடிகளாக அலைந்து திரிந்தவர்கள் இன்றைய ஐரோப்பியர்கள். சில நூற்றாண்டுக்கு முன் ஏழ்மையில் வாழ்ந்த வெள்ளையர்கள் இன்று செல்வ செழிப்பில் இருப்பதற்கு அவர்களின் அயரா உழைப்பு மட்டும் தான்.
செல்வத்தை தேடி திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்று வார்தையில் மட்டும் நாம் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் கடல் கடந்து சென்று அடைந்த அச்செல்வத்தை கொண்டு இன்று உலகில் மகா பணக்கர்ர்களாக இருப்பதற்கு அவர்களின் செயலின் வெற்றி தான். அவர்களின் முன்னோர்கள் எடுத்த முடிவுகள், அவர்கள் பட்ட துயரங்கள் இன்று அவர்களின் சந்ததியினர் செல்வ செழிப்பில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
அன்று அந்த ஐரோப்பியர்களின் துணிகரமான முடிவுகள். அலையை கடந்து புதிய பாதையை கண்டுபிடிக்கவேண்டும் என்ற தன்முனைப்பு தான் அவர்களை செல்வம் சேர்க்கும் நிலைக்கு உயர்த்தியது. செல்வத்தை தேடி அலைந்ததானால் சாதனையை படைக்க முடிந்தது. அன்று அவர்கள் விதைத்த விதை விரிச்சமாய் வளர்ந்திருக்கிறது. முயற்சியும் உழைப்பும் உரமாய் இட்டு எதையும் சாதிக்கவேண்டும் என்ற முணைப்போடு செயலில் இறங்கி இன்றும் வெற்றி நடைப்போடுகின்றனர்.
நம்மைப் போன்று அவர்களின் மூதாதையர்கள் தயங்கி இருந்தால். அல்லது இஸ்லாமியர்களின் ஆளுமையில் மனம் தளர்ந்திருந்தால் அவர்களும் இன்று அடிமைப்பட்ட இனமாக தான் வாழ்ந்திருப்பார்கள். சரித்திரம் கூட இன்று மாறியிருக்கும். அன்று அவர்கள் எடுத்த முடிவுகள் இன்று உலக வரைப்படத்தை மாற்றி இருக்கிறது. உலக பண்பாடுகளை மாற்றி இருக்கிறது. ஏன் தனிமனித நிலைப்பாடுகள் கூட மாறி இருக்கிறது. அது தான் முடிவுகளின் வலிமை.
இன்று நாம் எடுக்கும் முடிவுகள் நாளை நமது தலைமுறைகளின் முதல் அடியா? இல்லை முதல் படியா என்பதை உணர்ந்து பார்த்தால் உழைப்பின் வெற்றியை அவர்களுக்கு சொந்தமாக்க வேண்டும்.
வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க வெகுதூரமில்லை. வெற்றி என்பது எங்கும் மறைந்திருக்கவில்லை. அது திடமான நமது நெஞ்சினில் தான் இருக்கிறது.
🌹🌹🌹 #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (03.02.2026)*
.......................................................................
*''கனவு காணுங்கள்...!"*
.....................................................
உங்கள் ஓய்வு நேரங்களில் நீங்கள் சாதிக்க நினைத்த செயலை சாதித்து முடித்து விட்டதாகக் கருதி, உங்கள் மனதிற்குள் கனவு காணுங்கள். நீங்கள் சாதிக்க நினைக்கும் செய்ய முனைப்போடு செய்யத் தொடங்குங்கள்...
அமெரிக்காவில் சிக்காகோவில் கன்சாலஸ் என்றொரு பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒருநாள் ஏழை எளிய மக்களுக்காக ஒரு சிறந்த தொழிற்கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது...
நல்லவற்றை போதிக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்க அவர் எவ்வளவு பணம் தேவை என்று கணக்கு போட்டுப் பார்த்தார். அவர் விரும்பும் அந்த சிறந்த கல்விக் கூடத்தைத் தொடங்க ஏறக்குறைய ஒரு மில்லியன் டாலர் தேவைப்பட்டது...
அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. தம்மால் இது முடியாது என்று அவர் விட்டு விடவில்லை. நாள்தோறும் இதே எண்ணமாகவே இருந்தார். எப்பொழுதும் இதைப்பற்றியே சிந்தித்து வந்தார். இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் தன் எண்ணத்தை நினைத்துப் பார்ப்பார்...
காலையில் கண் விழித்ததும் தனது கனவு கல்விக் கூடத்தை மனதில் காண்பார். இப்படியே சுமார் இரண்டு ஆண்டுகள் சென்றன...
ஒருநாள் தான் விரும்பும் கல்வி நிறுவனத்தை விரைவில் எப்படியாவது நிறுவிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசித்துப் பார்த்தபோது தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்த பின்னர் தனது எண்ணத்தை வந்திருப்போரிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தார்...
அதன்படி 1890 -ஆம் ஆண்டில் ஒரு நாள் பிரார்த்தனை முடிந்ததும் தான் நிறுவ விரும்பிய கல்விக் கூடத்தைப் பற்றி மிகச்சிறப்பாக விரிவான முறையில் எடுத்துரைத்தார்...
அந்தக்கூட்டத்தில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ஆர்மர். கன்சாலஸின் பேச்சும் எண்ணமும் அவரை மிகவும் கவர்ந்துவிட்டது. உடனே பாதிரியாரை அணுகி தான் பத்து மில்லியன் டாலர் நன்கொடை தருவதாய்க் கூறினார்...
மேலும் கன்சாலஸ் தொடர்ந்து ஐந்து வருடங்கள் அந்த கல்வி நிறுவனத்தை தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பின்னர் ஆர்மர் தான் தருவதாய் கூறிய தொகையின் ஒரு பகுதியாக ஒரு மில்லியன் டாலர் பணத்தையும் கொடுத்தார்...
கன்சாலஸ் ஒரு மில்லியன் டாலரைக் கொண்டு 1893 -ல் 'ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' என்றொரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார்...
அவரே அக்கல்லூரியின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பின்னர் 1940 -ஆம் ஆண்டில் ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் புதிய கல்வி நிறுவனம் செயல்படத் தொடங்கியது...
இன்று உலகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. கன்சாலஸின் விடா முயற்சி பலித்து விட்டது...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *விடாமுயற்சி, வலிமையான எண்ணம் இவை இரண்டையும் மனதில் நிறுத்தி முயற்சி செய்தால், யார் வேண்டுமானாலும் எதையும் சாதிக்க முடியும்...!*
🔴 *வெற்றியும் தோல்வியும் நம் மனதில்தான் இருக்கிறது. உங்களுக்கு வேண்டியது வெற்றியா!, தோல்வியா!, என்பதை முதலில் தீர்மானியுங்கள்...!!*
⚫ *எல்லோரும் விரும்புவது வெற்றியைத்தானே. விடாமல் முயலுங்கள். விரும்பியதை அடையுங்கள்...!!!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
( 9442928401)
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
#உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪
#👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (02.02.2026)*
.......................................................................
*''சலிப்பு...!"*
............................
வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்றால், அதன் உட்கூறுகளான கல்வி, தொழில், பொழுதுபோக்கு, வேடிக்கை பார்த்தல், சும்மா இருத்தல் என இவற்றில் ஏதோ ஒன்று உங்களின் உற்சாகத்தை உறிஞ்சுகிறது என்றுதான் அர்த்தம்.
ஏதாவது ஒரு கட்டத்தில் சலிப்பு வரத்தான் செய்யும். ஏனென்றால்!, நீங்கள் அந்த வேலையை நேசித்து விட்டீர்கள்...
எங்கு நேசம் இருக்கிறதோ, அங்கே சலிப்பு ஏற்பட்டே தீரும். வெளி உலகத் தாக்கங்களுக்கு ஏற்ப மனநிலையில் சலிப்பு ஏற்படுவது இயற்கையானது...
ஆனால்!, “வாழ்க்கை சலிப்படையதான் செய்யும்” என்று அதிக நேரம் அதில் ஆழ்ந்துவிடாமல், சலிப்பிலிருந்து விரைவில் விடுபடுகிறவர் எப்போதும் ஒரு அடி முன்னால் செல்கிறார்...
இந்தச் சலிப்பை வெற்றிகொள்ள...
🔹 ஒன்று!, அனுபவப்பட்ட விளையாட்டு வீரர்களும், புகழ்பெற்ற திரைப்படக்காரர்களும் சொல்வார்களே, அதுதான். “முதன்முதலாக நுழையும்போது எப்படி நுழைந்தேனோ, அதே மனநிலையுடன் ஒவ்வொரு முறையும் காலடி எடுத்து வைப்பேன்! இன்றுதான் முதல் நாள் என்று நினைத்துக் கொள்வேன்...”
இங்கே தொழில் மீதான விருப்பத்தைவிட, அவர்களை அறியாமல் அவர்கள் தவிர்க்க விரும்புவது, அல்லது வெற்றி கொள்ள விரும்புவது, ஒரே மாதிரியான வாழ்க்கை தரும் சலிப்பைத்தான்...!
🔹 இரண்டாவது!, பொழுது போக்குகளில் விருப்பத்துடன் ஈடுபடலாம். முதியவர்களையே விழாவில் ஈடுபட வைத்து சலிப்படையாமல் பார்த்துக்கொண்ட சமூகம் அல்லவா நம்முடையது...
செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்தும், ஒரே மாதிரியான சிந்தனையில் உழன்றும், மன அழுத்தத்தில் சிக்கி மனபலம் இல்லாதவர்களாக காட்சி அளிப்பதோடு அவர்களுக்கு வாழ்க்கையிலும் சலிப்பு ஏற்படுகின்றது...
மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் சலிப்பு என்பதே இருக்காது. உயிரோட்டமான புன்னகை இருந்து கொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்க வேண்டும்...
மனநிறைவு பெறவேண்டுமானால், வாழ்க்கையில் சலிப்பு என்பதே இருக்கக் கூடாது. மகிழ்ச்சியாக இருப்பவர்களால்தான் குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *"நான் செக்குமாட்டு வாழ்க்கை வாழப்போவதில்லை" என்று சொல்லிக் கொள்ளுங்கள்!, 'இப்படியே இருக்கப் போவதில்லை' என்று தீர்மானியுங்கள்...!*
🔴 *"என்னால் எதையும் சமாளிக்க முடியும்" என்று நம்புங்கள், சமாளியுங்கள், அச்சப்படாதீர்கள், இறங்குங்கள். சவால்களை எதிர் கொள்ள தயங்காதீர்கள்...!!*
⚫ *செக்குமாட்டு வாழ்க்கையில் இருந்து சற்றே விலகி, அடைந்திருக்கும் புதிய உற்சாகம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாது. ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்...!!!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
( 94429-28401)
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
வாழ்க்கை உன் கையில்" என்பதை நீ புரிந்துக் கொள்ளும் வரை,*
வாழ்க்கை என்னும் ஆசான்
பாடம் நடத்துவதை நிறுத்துவதில்லை!🔴🟢 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு










