🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
ShareChat
click to see wallet page
@3454dsm
3454dsm
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - ShareChat
00:14
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
பொழுது போக்கு - ShareChat
00:12
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (02.02.2026)* ....................................................................... *''சலிப்பு...!"* ............................ வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்றால், அதன் உட்கூறுகளான கல்வி, தொழில், பொழுதுபோக்கு, வேடிக்கை பார்த்தல், சும்மா இருத்தல் என இவற்றில் ஏதோ ஒன்று உங்களின் உற்சாகத்தை உறிஞ்சுகிறது என்றுதான் அர்த்தம். ஏதாவது ஒரு கட்டத்தில் சலிப்பு வரத்தான் செய்யும். ஏனென்றால்!, நீங்கள் அந்த வேலையை நேசித்து விட்டீர்கள்... எங்கு நேசம் இருக்கிறதோ, அங்கே சலிப்பு ஏற்பட்டே தீரும். வெளி உலகத் தாக்கங்களுக்கு ஏற்ப மனநிலையில் சலிப்பு ஏற்படுவது இயற்கையானது... ஆனால்!, “வாழ்க்கை சலிப்படையதான் செய்யும்” என்று அதிக நேரம் அதில் ஆழ்ந்துவிடாமல், சலிப்பிலிருந்து விரைவில் விடுபடுகிறவர் எப்போதும் ஒரு அடி முன்னால் செல்கிறார்... இந்தச் சலிப்பை வெற்றிகொள்ள... 🔹 ஒன்று!, அனுபவப்பட்ட விளையாட்டு வீரர்களும், புகழ்பெற்ற திரைப்படக்காரர்களும் சொல்வார்களே, அதுதான். “முதன்முதலாக நுழையும்போது எப்படி நுழைந்தேனோ, அதே மனநிலையுடன் ஒவ்வொரு முறையும் காலடி எடுத்து வைப்பேன்! இன்றுதான் முதல் நாள் என்று நினைத்துக் கொள்வேன்...” இங்கே தொழில் மீதான விருப்பத்தைவிட, அவர்களை அறியாமல் அவர்கள் தவிர்க்க விரும்புவது, அல்லது வெற்றி கொள்ள விரும்புவது, ஒரே மாதிரியான வாழ்க்கை தரும் சலிப்பைத்தான்...! 🔹 இரண்டாவது!, பொழுது போக்குகளில் விருப்பத்துடன் ஈடுபடலாம். முதியவர்களையே விழாவில் ஈடுபட வைத்து சலிப்படையாமல் பார்த்துக்கொண்ட சமூகம் அல்லவா நம்முடையது... செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்தும், ஒரே மாதிரியான சிந்தனையில் உழன்றும், மன அழுத்தத்தில் சிக்கி மனபலம் இல்லாதவர்களாக காட்சி அளிப்பதோடு அவர்களுக்கு வாழ்க்கையிலும் சலிப்பு ஏற்படுகின்றது... மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் சலிப்பு என்பதே இருக்காது. உயிரோட்டமான புன்னகை இருந்து கொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்க வேண்டும்... மனநிறைவு பெறவேண்டுமானால், வாழ்க்கையில் சலிப்பு என்பதே இருக்கக் கூடாது. மகிழ்ச்சியாக இருப்பவர்களால்தான் குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *"நான் செக்குமாட்டு வாழ்க்கை வாழப்போவதில்லை" என்று சொல்லிக் கொள்ளுங்கள்!, 'இப்படியே இருக்கப் போவதில்லை' என்று தீர்மானியுங்கள்...!* 🔴 *"என்னால் எதையும் சமாளிக்க முடியும்" என்று நம்புங்கள், சமாளியுங்கள், அச்சப்படாதீர்கள், இறங்குங்கள். சவால்களை எதிர் கொள்ள தயங்காதீர்கள்...!!* ⚫ *செக்குமாட்டு வாழ்க்கையில் இருந்து சற்றே விலகி, அடைந்திருக்கும் புதிய உற்சாகம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாது. ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ ( 94429-28401) 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
கதை சொள்ளரோம் - சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்தந்தை பெரியார். சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்தந்தை பெரியார். - ShareChat
வாழ்க்கை உன் கையில்" என்பதை நீ புரிந்துக் கொள்ளும் வரை,* வாழ்க்கை என்னும் ஆசான் பாடம் நடத்துவதை நிறுத்துவதில்லை!🔴🟢 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
உற்சாக பானம்# - ShareChat
#உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு
உற்சாக பானம் - ShareChat
00:09
#பொழுது போக்கு #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம்
பொழுது போக்கு - ShareChat
#உற்சாக பானம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
உற்சாக பானம் - ShareChat
*சிந்தனை துளிகள்* 🤔 கருப்பாக இருந்தாலும் உடம்பில் ஓடும் இரத்தம் சிவப்புதான்... சிவப்பாக இருந்தாலும் நடக்கும் போது தோன்றும் நிழல் கருப்புதான்... கருப்பாக இருப்பதால் கஃபாவின் கண்ணியம் குறையப்போவதும் இல்லை... வெள்ளையாக இருப்பதால் கபன் துணி யாரையும் மகிழ்ச்சிப் படுத்துவதும் இல்லை... வண்ணங்களில் இல்லை வாழ்க்கை! மாறாக, மனித எண்ணங்களில் தான் உள்ளது!! 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - ShareChat
இன்பம், வீடு என்றால் என்ன? அறம் என்பது இரண்டு வகைப்படும், ஒன்று இல்லறம் மற்றும் துறவறம். இல்லறம் என்பது பொது நலத்தைச் சார்ந்தது. தனக்காகவும், பிறருக்காகவும் பொருள் ஈட்டித் தர்மம் செய்து வாழ்வதாகும், இது சிறந்த அறமாகும். துறவறம் என்பது சுயநலம் கருதி வாழ்வது. தான் மட்டும் தனிமையில் இருந்து பிறர் பொருளை அனுபவித்து இறைவனை அடையலாம் என்று நினைப்பதாகும். இது சரியான துறவறம் அல்ல!. பொருள் :− நேர்வழியில் பொருள் சம்பாதித்து அனைவருக்கும் கொடுத்து தானும் அனுபவித்து மற்றவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்விப்பதாகும். இது சிறந்த வழியில் பொருள் ஈட்டி வாழ்வதாகும், இன்பம் :− எல்லோரும் இன்பமுடன் வாழும் வழியைக் காட்டி அந்த இன்பத்தில் தானும் வாழும் வாழ்க்கையே சிறந்த இன்பமாகும். வீடு :− நாம் வாழும் இந்த உலகமும், உடம்பிற்குள் நாம் வாழும் வீடும் சொந்தமானது அல்ல, வாடகைக்கு குடி இருக்கிறோம் என்பதை அறிந்து, நாம் எங்கு இருந்து வந்தோம், நம்முடைய சொந்தமான வீடு எங்கே உள்ளது என்பதை அறிந்து சொந்தமான வீடு என்னும் ஆன்ம தேகம் (அதாவது ஒளி தேகம், அருள் தேகம்) பெற்று நமது அருட்பெருஞ்ஜோதி ஈசனின் இல்லத்திற்கு சென்று வாழ்வதே சொந்த வீடு பேராகும். மேலும் அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்கையும், நான்கு காலங்களில் நன்கு அனுபவித்து பின்பு பற்று அற்று இருப்பதே கடவுளை அடைய ஏதுவாக இருக்கும் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக பதிவு செய்து உள்ளார். மேலே கண்ட நான்கு வழிகளிலும் தடம் மாறாமல் வாழ்ந்து மக்களுக்கு வழி காட்டுவதே மனிதப் பிறப்பின் லட்சியமாகும், லட்சணமுமாகும். வாழ்வோம் வழி காட்டுவோம். 😊😊😊 #பொழுது போக்கு #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
பொழுது போக்கு - ShareChat
சிந்தனைக்கு சில நிமிடங்கள் : கேள்விகளே சாவிகள்! வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். உங்களால் வீடும் நாடும் விரிந்த உலகமும் நன்மை பெறட்டும். வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் என்றே பலர் கருதுகிறார்கள். இதன் வெற்றி, தோல்விகள் அதிருஷ்டத்தின் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. தேர்வின் முடிவு போல் தீர்க்கமானவை. என்னிடத்தில் உதவிகள் கேட்டுச் சில இளைஞர்கள் வருவதுண்டு. அதில் அதிகமான பேர் வேலை வாங்கித் தரும்படித் தான் கேட்பார்கள். ""என்ன வேலை?'' என்றால், ""ஏதாவது வேலை'' என்பார்கள். வருத்தப்படாதீர்கள். இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் நான் அவருக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? என்னுடைய வேலையைத் தான் அவருக்குத் தர முடியும்! இது மிக முக்கியமான விஷயம். எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால் தான் அதை நீங்கள் அடைய முடியும். அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடைய முடியும்? நமக்கு எது வேண்டும் என்கிற தெளிவு இருந்தால் தான் அது கிடைக்கும். கிடைத்தாலும் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம், கிடைத்ததே தெரியாது. ஹோட்டலில் கூட பல பேர் என்ன சாப்பிடுவது என்ற தெளிவேயின்றி மெனுகார்டை, பட்சணப் பட்டியலை வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள். எதையும் முடிவு செய்ய மாட்டார்கள். இந்தக் குழப்பவாதிகள் முறையாக வெற்றிக் கனியைப் பறிப்பது கடினம். எனவே, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? எவை என்கிற விழிப்பு நம்முள் தோன்றி விட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போக வேண்டும்? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்து விட்டால் வெற்றி நிச்சயம். அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப். கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப் பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார் பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, ""உன் எதிர்கால லட்சியம் என்ன?'' என்றார் கென்னடி.பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன். ""இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்'' என்றான். விழிகளை உயர்த்தி விட்டு, ""குட்'' என்று வாழ்த்தி விட்டு கென்னடி நகர்ந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக ஆவது தான் லட்சியம் என்ற அந்தச் சிறுவன் பிற்காலத்தில் அப்படியே ஆனான். அவன் வேறு யாருமல்ல புகழ் பெற்ற பில் கிளிண்டன். அவர் எண்ணம் வெறும் ஆசையோ, கற்பனையோ அல்ல. தீர்க்கமான தீர்மானம். அதனால் அது நடந்து விட்டது. எல்லோருக்கும் இப்படி நடக்குமா? இப்படி நடக்கிறதா என்று என்னை ஏளனமாகப் பார்க்கும் மூடர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நம்பிக்கைகள் நடக்காமல் போகும் பட்டியலில் நம் பெயர் ஏன் இருக்க வேண்டும்? பழித்தவர் பட்டியலில் நம் பெயர் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? நம் குடும்பத்தின் நிலை என்ன? நாம் வளர, முன்னேற என்ன செய்யலாம் என்கிற சின்னச் சின்னக் கேள்விகள் உங்களுக்குள் பிறந்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும். ஒன்றை மறந்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சின்னது தான். பூட்டோ அதை விடச் சின்னது. சாவியோ... பூட்டை விடச் சின்னது. சின்னச் சாவியால் பூட்டைத் திறக்கலாம். பூட்டைத் திறந்தால் தாழ்ப்பாளைத் திறக்கலாம். தாழ்ப்பாளைத் திறந்தால் பெரிய பெரிய கதவுகளையே சுலபமாகத் திறக்கலாம். எனவே சின்னச் சின்னக் கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாயில்களைத் திறக்கப் போகும் சாவிகள். இதை நீங்கள் உணர்ந்தால் வெற்றி நிச்சயம். 😊😊😊 #உற்சாக பானம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
உற்சாக பானம் - ShareChat