
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#
🚀 தயங்கி கொண்டே நிற்காதே…
ஒரு முறை முயற்சி செய்து விடு…
வெற்றியானால் அடுத்த கட்டத்திற்கு செல்…
தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள்…
முயன்றால் எதுவும் முடியும்!
🌱வாழ்க்கையில் மிகப்பெரிய தடைகள்
வெளியில் இல்லை.
👉 அவை நம் மனதில்.
“என்ன ஆகும்?”
“தவறிவிட்டால்?”
“நான் முடியாவிட்டால்?”
இந்த தயக்கமே
பல கனவுகளை பிறக்காமலே
அழித்துவிடுகிறது.
---
🔥 1. தயக்கம் முன்னேற்றத்தின் எதிரி
நீ நிற்கும் ஒவ்வொரு நொடியும்
நேரம் நகர்கிறது.
👉 முயற்சி செய்யாமல் இருப்பது
முன்னேற்றத்தை தள்ளிவைப்பது.
---
🔥 2. முயற்சி ஒரு கதவு
நீ முயற்சி செய்தவுடன்
ஒரு கதவு திறக்கும்.
👉 அது வெற்றியின் கதவாக இருக்கலாம்.
அல்லது அனுபவத்தின் கதவாக இருக்கலாம்.
இரண்டும் லாபம் தான்.
---
🔥 3. வெற்றி = அடுத்த நிலை
நீ சாதித்தால்
அங்கேயே நின்றுவிடாதே.
👉 அடுத்த இலக்கை நோக்கு.
வளர்ச்சி தொடர வேண்டும்.
---
🔥 4. தோல்வி = ஆசிரியர்
தோல்வி வந்தால்
அது முடிவு அல்ல.
👉 அது
“இன்னும் என்ன கற்றுக்கொள்ளலாம்?”
என்ற பாடம்.
---
🔥 5. கற்றுக்கொள்ளும் மனம் வெல்லும்
தோல்வியில் உடைந்தவன்
அங்கேயே முடிவடைகிறான்.
👉 தோல்வியில் கற்றவன்
ஒருநாள் வெற்றி பெறுவான்.
---
🔥 6. பயம் ஒரு மாயை
நீ முயற்சி செய்யாமல் இருக்கும்போது
பயம் பெரிதாக தெரியும்.
👉 முயற்சி செய்தவுடன்
அது சுருங்கும்.
---
🔥 7. சிறிய முயற்சி பெரிய மாற்றம்
ஒரு நாள்.
ஒரு செயல்.
ஒரு தைரியம்.
👉 இதுவே
பெரிய பயணத்தின் தொடக்கம்.
---
🔥 8. செயல்தான் நம்பிக்கை
நம்பிக்கை பேசுவதில் இல்லை.
👉 அது செயலில்.
நீ செயல் படும்போது
உன் மனமும் வலிமை பெறும்.
---
🔥 9. வெற்றியும் தோல்வியும்
இரண்டும் முன்னேற்றம்
ஒரு பாதை
நேரடியாக உயரத்திற்கு.
மற்றொரு பாதை
வழி திருத்தத்துக்கு.
👉 இரண்டும் உன்னை முன்னேற்றும்.
---
🔥 10. முயற்சி = சாத்தியம்
முயற்சி இல்லாத கனவு
கனவாகவே இருக்கும்.
👉 முயற்சி சேர்ந்தால்
அது இலக்காக மாறும்.
---
🌟 முடிவுரை
நீ இப்போது தயக்கத்தில் இருக்கிறாயா?
நினைவில் கொள்:
தயங்கி கொண்டே நிற்காதே…
ஒரு முறை முயற்சி செய்து விடு…
வெற்றியானால் அடுத்த கட்டத்திற்கு செல்…
தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள்…
முயன்றால் எதுவும் முடியும்!
இன்று ஒரு முயற்சி செய்.
அது உன் வாழ்க்கையை மாற்றும்
முதல் அடி ஆகலாம். 🚀🔥✨
🌹🌹🌹
#உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪
இருக்கும் இடத்தை அனுபவிக்க தெரிந்தவர்களுக்கு
எங்கு சென்றாலும் சொர்க்கம் தான்!
🌱பலர் நினைப்பது —
“அந்த இடம் சென்றால் சந்தோஷம்.”
“அந்த நிலை வந்தால் அமைதி.”
“அந்த மனிதர் இருந்தால் வாழ்க்கை முழுமை.”
ஆனால் உண்மையில்
இடம் மாறினால் மனம் மாறாது.
👉 மனம் மாறினால் தான்
எங்கும் சொர்க்கம் தெரியும்.
---
🌼 1. சந்தோஷம் இடத்தில் இல்லை
ஒரு பெரிய நகரம்.
ஒரு அழகான வீடு.
ஒரு உயர்ந்த பதவி.
👉 இவை எல்லாம் சூழல்.
சந்தோஷம் மனநிலை.
---
😊 2. அனுபவிக்க கற்றுக்கொள்
இன்று இருக்கும் தருணத்தை
நீ ரசிக்கவில்லை என்றால்
நாளைய தருணத்தையும் ரசிக்க முடியாது.
👉 பழக்கம் இன்றே தொடங்க வேண்டும்.
---
🌅 3. நன்றி உணர்வு
“இன்னும் வேண்டும்” என்ற எண்ணம்
அமைதியை கெடுக்கும்.
👉 “இது போதும்” என்ற மனநிலை
அமைதியை தரும்.
---
🌿 4. எளிமையின் அழகு
ஒரு காலை காற்று.
ஒரு சாதாரண சிரிப்பு.
ஒரு அமைதியான மாலை.
👉 இவற்றை உணரத் தெரிந்தால்
வாழ்க்கை நிறைவு.
---
🔥 5. ஒப்பிடாதே
மற்றவர்களின் வாழ்க்கையைப் பார்த்து
உன் வாழ்க்கையை அளவிடாதே.
👉 உன் தருணம்
உனக்கே உரியது.
---
🌸 6. மன அமைதி = சொர்க்கம்
வெளியில் சொர்க்கம் தேடாதே.
👉 உள் அமைதி இருந்தால்
அதே இடம் சொர்க்கமாகும்.
---
🌄 7. வாழ்க்கை ஓர் அனுபவம்
அது இலக்கு மட்டும் அல்ல.
அது பயணமும்.
👉 பயணத்தை ரசிக்காதவன்
இலக்கையும் ரசிக்க மாட்டான்.
---
💛 8. முழுமை உள்ளே
நீ முழுமையாக இருந்தால்
எங்கும் குறை தெரியாது.
👉 நீ குறையோடு இருந்தால்
எங்கும் குறையே தெரியும்.
---
🌟 முடிவுரை
சொர்க்கம்
ஒரு இடம் அல்ல.
ஒரு மனநிலை.
இருக்கும் இடத்தை அனுபவிக்க தெரிந்தவர்களுக்கு
எங்கு சென்றாலும் சொர்க்கம் தான்!
இன்று
உன் அருகிலுள்ள சிறிய விஷயத்தை ரசிக்க தொடங்கு.
👉 வாழ்க்கை
உன்னிடம் இருந்தே
அழகாக தெரியும். 🌿😊✨
🌹🌹🌹 #உற்சாக பானம் #👪 cute family members 👪 #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜
*சிந்தனை துளிகள்* 🤔
உங்களை வெறுப்பவர்களிடம் ஒருபோதும் வாக்குவாதம் செய்ய நினைக்காதீர்கள்...
ஏனென்றால்,
ஏற்கனவே அவர்கள் உங்களை வெறுத்து விட்டார்கள்...
வாக்குவாதம் செய்வதால், உங்கள் சுயமரியாதை தான் அங்கு இழக்கப்படும்...
இந்த உலகத்தில் நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரும் இல்லை...
மற்றவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்தால் அவன் நல்லவன், தனக்குப் பிடித்த மாதிரி நடந்தால் அவன் கெட்டவன்...
வாக்குவாதம் தவிர்ப்போம், நம் எண்ணம் போல் வாழ்வோம்.
🍁🪻🍁🪻🍁🪻🍁🪻 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
உனக்கு அளித்த சந்தோஷம்
யாராவது சந்தோஷமாக இருக்கிறார்களா ? எல்லோரும் சந்தோஷத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் அதை அடைந்த மாதிரி தெரியவில்லை.
நான் சந்தோஷத்தை அடைந்து விட்டேன் என்று யாராவது சொல்கிறார்களா?
அதை மட்டும் அடைந்து விட்டால், அப்புறம் சந்தோஷமாக இருப்பேன் என்று எத்தனையோ நினைத்து அடைந்தும் இருக்கிறோம்.
சந்தோஷம் வந்ததா ?
இல்லை.
எதை அடைய வேண்டும் என்று நினைத்தோமோ, அதை அடைந்தவுடன், அதை விடப் பெரியது வேண்டும் என்று மனம் அடுத்ததை நோக்கிப் பயணப் படுகிறது. சந்தோஷம் என்பது ஒரு கானல் நீராகவே இருக்கிறது.
உங்களுக்கு இருப்பதை எல்லாம் ஒரு பட்டியல் போடுங்கள். அவை வேண்டும் என்று கனவு காண்பவர் உலகில் கோடி. அவை எல்லாம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு நிமிடம் சந்தோஷமாக இருந்து பாருங்களேன்.
இதற்கு காரணம் என்ன ?
எல்லாம் இருந்தும் ஏன் நாம் ஏன் சந்தோஷமாக இருக்க மாட்டேன் என்கிறோம்?
சந்தோஷமாக இருப்பது ஒரு குற்றம் என்று நம் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
துக்கம் தான் நமது இயற்கையான நிலை. சந்தோஷம் என்பது எப்போதாவது வந்து போவது என்று நினைக்கிறோம்.
சந்தோஷமாக இருந்தால் ஏதோ தவறு என்று நினைக்கிறோம்.
நினைத்துப் பார்த்தால் சந்தோஷப்பட அவ்வளவு இருக்கிறது. ஒவ்வொன்றையும் நினைத்து அவ்வளவு சந்தோஷப்படலாம்.
எல்லாவற்றையும் விடுங்கள். சொத்து, சுகம், கார், வீடு, வாசல், நகை, பதவி, பணம் எல்லாவற்றையும் விடுங்கள்.
முயற்சி இல்லாமல் இயல்பாக மூச்சு விட முடிகிறதா? எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம். ஆஸ்துமா வந்து துன்பப்படுகிறவர்களிடம் கேட்டுப் பாருங்கள். மூச்சு விடுவது எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்று சொல்லுவார்கள்.
நேற்று இரவு தூங்கினீர்களா? என்ன சுகம்.
இப்படி யோசித்துப் பார்த்தால், சந்தோஷம் கொட்டிக் கிடக்கிறது. அள்ள அள்ளக் குறையாத அளவு சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறது.
அதை எல்லாம் விட்டு விட்டு, இல்லாத ஒன்றை நினைத்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
முயற்சி செய்ய வேண்டியது தான். பெரிதினும் பெரிது கேட்க வேண்டியது தான். ஆனால், அது கிடைத்தால் தான் சந்தோஷமாக இருப்பேன் என்று சொல்லாதீர்கள்.
இப்போது சந்தோஷமாக இல்லாவிட்டால், அது கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க மாட்டீர்கள்.
கிடைத்த ஒவ்வொரு சந்தோஷத்தையும் அனுபவியுங்கள். இந்த நொடியில் எப்படி சந்தோஷமாக இருப்பது என்று பாருங்கள். நாள் முழுவதும் சந்தோஷத்தால் நிறையுங்கள்.
இருப்பதில் சந்தோஷம் காண வேண்டும்..
நமது இயற்கையான நிலையே சந்தோஷமாக இருப்பது தான். துக்கம் நாமே தேடிக் கொள்வது.
எதையும் தேடாமல் இருப்பது சந்தோஷம்..
அன்பைக் கொடுங்கள். . கிடைத்த அனைத்துக்கும் நன்றி சொல்லுங்கள்.
பரமானந்த சாகரத்தே என்பார் அருணகிரி.
கடல் போல் ஆனந்தம் முன்னே கிடைக்கிறது. கிளிஞ்சல்களைத் தேடி பொறுக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
அவனுக்கு அவ்வளவு கிளிஞ்சலா ? என்னை விட அவனுக்கு அதிகமா என்று பொறாமை வேறு.
சந்தோஷமாக இருங்கள். ஒரு குறையும் இல்லை.
உன் உள்ளத்தில் இறைவன் குடியிருக்கிறான், அதை உணர்ந்து ஆனந்தமாக இருங்கள்..
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 😊😊😊 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜
போராட்டமா
போராட்டமே வாழ்க்கையா"
போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தநாள் முதல் இறக்கும் நாள் வரையிலும் போராட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து,
போராட்டத்தில் மடிவது தான் வாழ்க்கை.
பூந்தோட்டத்தில், தினம் தினம்,
புதுப்புது மலர்கள் பூப்பது உண்டு. ஆனால் அவை நிலைப்பது இல்லை,
அது நியதியும் இல்லை.
அதுப்போலத் தான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் இன்பம், துன்பம் வருவதும், போவதும். எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த
ஓரு பூ நிலைப்பது இல்லையோ அதேபோல் தான் வாழ்க்கையும்
இன்பமும், துன்பமும் கலந்தது.
சரியான நேர்மையான வாழ்க்கை
பயணப் பாதை முட்கள் நிறைந்த
கரடு முரடான பாதை தான்.
இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் ஆவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும்,
நியாயமில்லாத விமர்சனங்களும் தான் நிறைந்து இருக்கும்.. வாழ்க்கையில்
போராட்டங்கள் இடை விடாது தொடரும் போது மனம் தளர்வது இயல்பானது தான். வாழ்க்கையே வெறுத்து விடும்.
உறவுகள் கூட கசக்கும்.
எதற்காக இவ்வளவு துன்பங்களுடன்
வாழ வேண்டும் என்று கூட மனம் கேள்வி எழுப்பும். எல்லோரும் நம்மை
கை விட்டது போல் தோன்றும்.
இன்று மனிதன், போராட்டம் இல்லாத
வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத்தான் விரும்புகின்றான்.
வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்தி கொள்ள ஓவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டி உள்ளது.
போராட்டமே இல்லாத வாழ்க்கை இவ்வுலகில் இல்லை என்பதை
நாம் முதலில் அறிய வேண்டும்.
வாழ்க்கையில் துன்பங்கள் வரும் போது அவற்றை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும், மனத் தெளிவு உதவும். துன்பங்கள் வாழ்க்கையில் வரலாம்; ஆனால் துன்பமே வாழ்க்கை என்றால் ?
துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலருக்கு
அவர்கள் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விடுகிறது.
இந்த மாதிரி கடினமான சமயங்களில், நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மனதை சோர்ந்து போக விடக் கூடாது.
எது நடந்தாலும் பரவாயில்லை என்ற மன உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.. நமக்கு இருக்கிற பிரச்சினை என்னவென்றால்
மற்றவர்கள் முன் நம் கவுரவம் குறைந்து விடுமோ என்ற பயம்,
அவமானம் ஏற்பட்டு விடுமோ
என்ற பயம்..
இவற்றை விட்டு ஒழியுங்கள்.
வாழ்க்கை எளிதாகி விடும்.
ஆம்.,நண்பர்களே..,
உங்கள் வாழ்க்கைப் பாதையை
நல்ல சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள்.
வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும்.
கப்பலை வடிவமைப்பது கரையில் நிறுத்தி வைக்க அல்ல!
வாழ்க்கையும் கரையில் நின்று
வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல!
கடலில் புயலும் வீசும்.
தென்றலும் அடிக்கும்.
இரண்டையும் கடந்து
வாழ்க்கைப் பாதையில்
வாழ வாருங்கள்..!
வாழ்க்கைக்கு
வழிகள் ஆயிரம்..!!
வாழ்க்கை வாழ்வதற்கே....
வாழ்க்கை அழகானது
அதை ரசித்து ருசித்து
வாழப் பழகுவோம்....... 😊😊😊 #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம் #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜
26. இன்றைய தினம் வரலாற்றில் 1986 இல் மனிதன் மிகப் பெரிய தவறு இழைத்த தினம்.
மனித அஜாக்ரதையால் உலகின் மிகக் கொடூர விபத்து நடந்த தினம். இதைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை மறு பகிர்வு செய்கிறேன்.
"செர்னோபில்பயங்கரம்"
(உலகின் மிகக் கொடூரமான விபத்து)
அறிவியல் காதலன்
-ரா.பிரபு-
''அறிவியல் ''-
இது சரியாகக் கையாண்டால் அள்ளித் தரும் அரசன் .
தவறாகக் கையாண்டால் அழித்தொழிக்கும் அரக்கன்.
அறிவியல் ஒரு சக்தி இது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல .இதை நல்லது கெட்டதாக நிர்ணயிப்பது இதை கையாளுபவன் கையில் உள்ளது.
அப்படி மிகத் தவறாக அஜாக்ரதையாக கையாண்டு மிகப் பெரிய அடியை மனிதன் வாங்கிக் கட்டிக் கொண்ட ஒரு சம்பவம் தான் செர்னோபில் அணு உலை விபத்து.
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று ரஷ்யாவின் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. உலகை திடுக்கிடச் செய்த மாபெரும் அழிவை ஏற்படுத்திய அந்த விபத்து ...ரஷ்ய கம்யூனிச ஆட்சியையே வீழ்த்திய ஒன்று.
விபத்தின் கோர தாண்டவத்தை நேரில் கண்டவர்களை கதி கலங்க செய்த கொடூர விபத்து அது.
உலக அளவில் அணுவெளியீட்டு நிகழ்வில் 7 வது நிலையை அடைந்த ஒரே விபத்து அது.
உலக வரலாற்றில் இதுவரை ஏற்பட்டுள்ள மாபெரும் விபத்துகளை டாப் டென் பட்டியட்டிலிட்டால்... செர்னோபில் க்கு அதில் முக்கிய இடம் உள்ளது.
இன்று வரை தனது பாதிப்புகளை தொடர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த விபத்து அது.
அணுக் கதிர் வீச்சின் கோர தாண்டவத்தை மக்களுக்கு ரத்தமும் சதையுமாக காட்டிய அந்த விபத்து ஏற்பட்டது முழுக்க முழுக்க மனித அஜாக்ரதையால் தான்.(குளிர்விக்கும் சாதனம் சரியாக வேலை செய்யவில்லை என்று கொஞ்ச நாள் சப்பை கட்டு கட்டியது அரசு)
'நியக்ளியர் ரியாக்டர் ' எனும் பெரும் பூதத்தின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டது தான் அங்கே நடந்த முதன்மையான தவறு.
அன்று இரவு அங்கே நடந்தது என்ன ?ஏன் அந்த அணு உலை வெடித்தது?
வெடித்த பின் அதன் விளைவு என்னவாக இருந்தது?
வாருங்கள் அன்றைக்கு இரவைக் கொஞ்சம் நெருக்கமாக சென்று பார்க்கலாம்.
செர்னோபில் இன் அணுஉலைகள் இருந்த இடம் அது.
மொத்தம் 4 அணுஉலைகள் இருந்தன ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை . அதில் அந்த குறியிட்ட 4 ஆவது அணுஉலை மிக சமீபமாக அமைக்கப்பட்டு இருந்தது. அணு உலையில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர்களுக்கு அந்த நிமிடம் வரை எப்பவும் போல அது ஒரு சாதாரண இரவு ஷிப்ட்.
உலையில் இருந்து கொஞ்சம் தள்ளி அமைந்திருந்த கண்ட்ரோல் ரூம் இல் அந்த மூவர் இப்போதைக்கு குறிப்பிடத் தகுந்தவர்கள். அதில் முதலாமவர் வயதான ஷிப்ட் ஃபோர்மேன் அவர் தான் அங்கு தலைமை . அடுத்தவர் சீனியர் கண்ட்ரோல் இன்ஜினீயர் . ரியாக்டர் ஏற்படுத்தும் அபரிமிதமான சக்தியை கட்டுப்படுத்தும் வல்லுநர். மூன்றாமவர் டெபுடி சீப் இன்ஜினீர்.
மூவருமே இன்னும் சில நிமிடத்தில் ஒரு வரலாற்றுப் பிழையை செய்யப் போகிறார்கள்.
கொஞ்சம் அதிருப்தியில் இருந்த டெபுடி இன்ஜினீரை பார்த்தார் கண்ட்ரோல் இன்ஜினீர் ,
"என்ன செய்வது சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாரே" என்றார் கடுப்புடன்.
"இன்னொரு முறை சொல்லிப் பார்கலாம் எதற்கும்"
அவர்கள் பேசிக் கொண்டு மேலும் ஒரு முறை போர்மேன் ஐ நெருங்கி மீண்டும் அதை சொன்னார்கள்
"சார் மன்னிக்கணும் குறைந்தது 600 மெகா வாட் சக்தியாவது இருக்கணும் நாம பரிசோதனை பன்றதுக்கு ஆனா இப்போ வெறும் 200 மெகா வாட் பவர்ல இருக்கும் போது செக்கிங் .என்பது சரியான முறை அல்லவே"
அவர்கள் அன்றிரவு செய்து கொண்டிருந்தது என்ன தெரியுமா? பரிசோதனை(safety test ).அதாவது அவசர காலத்தில் பவர் இழப்பின் போது டீசல் ஜெனரேட்டர்கள் ஆன் ஆகி கூலிங் பம்புகளை இயக்கும் வரை டர்பைன் ஜெனரேட்டர் அந்த கூலிங் பம்புகளை இயக்கும் அளவு சக்தி கொண்டவையா என்பதைத் தான் அவர்கள் பரிசோதனை செய்து பார்த்து கொண்டிருந்தார்கள்.
இந்த சோதனைக்கு ரியாக்டர் தனது பவர் இல் 25 சதமாவது இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆய்வின் போது தனது திறனில் 1 சததிற்கும் கீழே அது சென்று இருந்தது.
அந்த தலைமை அதிகாரி நிமிர்ந்து பார்த்து சொன்னார்.
"பாரா மீட்டர்கள் பற்றி எனக்குச் சொல்லி தாராதீர்கள் தலைமை அதிகாரியாக பாரா மீட்டர் என்ன என்பதையே நான் மாற்ற நிர்ணயிக்க முடியும்"
அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து அந்த உலையை சூடேற்றி வேடிக்கை பார்த்தார்கள் . உள்ளே குளிர்விக்கும் தண்ணீர் சப்ளை குறைந்தது பற்றியும் கவலை கொள்ளவில்லை. தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்க வெப்பத்தை உண்டு பண்ணும் அந்த ரியாக்டர் தனக்குள் அளப்பரிய வெப்பதையும் அழுத்தத்தையும் சேர்த்து கொண்டே வந்தது.
பூதத்தை அடக்கிப் பார்க்க ஆசைப்பட்டவர்கள் மந்திரக்கோலையும் தூர எறிந்தது அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு. இங்கே மந்திரக் கோல் என்று நான் சொன்னது கண்ட்ரோல் ராடுகளை. இவைகள் தான் அணு உலையின் ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ரெண்டுமே. அந்த கண்ட்ரோல் ராடுகளையும் அவர்கள் உள்ளே செலுத்தாமல் வெளியே எடுத்து விட்டார்கள்.
கண்ட்ரோல் ராட் என்றால் என்ன ? ரியாக்டரின் தத்துவம் என்ன ? டர்பைன் ஜெனரேட்டர்??
பொறுங்கள்...
இப்போது மணி 1.18 am அணுஉலை வெடிக்க இன்னும் 5 நிமிடம் உள்ளது. வாருங்கள் அதற்குள் ஒரு பொதுவான அணுஉலை என்றால் என்ன அதன் இயங்கு தத்துவம் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விட்டு மீண்டும் செர்னோபில் வந்து விடலாம்.
ஒரு பவர் பிளான்ட் இல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பின் பெயர் தான் ஜெனரேட்டர்.
மின் உற்பத்தி நடக்க ஜெனரேட்டர் சுழல வேண்டும்.
அந்த ஜெனரேட்டரை சுழற்ற தான் அதனுடன் டர்பைன் என்ற அமைப்பு இணைக்கப்பட்டு இருக்கும்.அந்த டர்பைன் எப்படி சுற்றும்?
அதில் வேகமாக நீராவியைப் பீச்சி அடித்தால் அந்த விசையில் தாக்கப்பட்டு அது சுற்றும்.
அந்த நீராவி எப்படி உற்பத்தி ஆகும் ?
நீரை சூடாக்கினால் ஆகும் . அந்த நீரை சூடாக்கத் தான் அந்த நியூக்ளியர் ரியாக்டர் .
அதாவது ரியாக்டரில் உண்டாகும் வெப்பத்தால் நீராவி உண்டாகும் அந்த நீராவியை டர்பைனில் பீய்ச்சி டர்பைனை வேகமாக சுழற்றினால் அதனுடன் இணைக்கப் பட்ட ஜெனரேட்டர் சுழன்று மின் உற்பத்தி நடக்கும்.
ஒரு ரியாக்டர் ,ஒரு எக்ஸ்சேஞ்ர் ஒரு டர்பைன் , ஒரு ஜெனரேட்டர் கொண்ட மொத்த அமைப்பு தான் ஒரு பவர் பிளாண்ட்.
இதில் அந்த நியூக்ளியர் ரியாக்டர் எப்படி அவ்வளவு வெப்பத்தை தருகிறது? அணு கரு பிளவு மூலமாக .
அணு கரு பிளவென்றால் என்ன ? அது எப்படி நடக்கிறது ?
சொல்கிறேன்..
ஒரு கனமான தனிமமாகிய யுரேனியம் 235 ஐ எடுத்து கொண்டு அதை நியூட்ரான் கொண்டு தாக்கினால் அது யுரேனியம் 236 ஆக மாறுகிறது. இந்த U236 இது ஒரு நிலைத்தன்மை அற்ற யூரேனியத்தின் ஐசோடோப். எனவே நீண்ட நேரம் நிலைத்து இருக்காமல் பேரியம் மற்றும் க்ரிப்ட்டான் அணுவாக மாறுகிறது .அப்படி மாறும் போது எக்கச்சக்க ஆற்றலை வெளியிடுகிறது. கூடவே 3 பிரீ நியூட்ரான்களையும் வெளியிடுகிறது.
அந்த மூன்று நியுட்ரான்ங்கள் மேலும் வேறு U 235 அணுவுடன் மோதி முன்பு போலவே நிறைய ஆற்றலும் 3 ஃபிரி நியுட்ரானையும் உண்டு பண்ணுகிறது.
அந்த நியூட்ரான்ங்கள் மீண்டும்.............
மேலே இரண்டு வரிகள் டிட்டோ .
இப்படித் தொடர்ந்து நடக்கும் நிகழ்விற்கு பெயர் தான் செயின் ரியாகஷன். இதை கண்ட்ரோல் பண்ண தான் கண்ட்ரோல் ராடு. இது கேடியம் மற்றும் போரான் பொருட்களால் செய்யப்பட்டு இருக்கும் .இது ரியாக்டரில் உள்செலுத்தப்படும் போது நியுட்ரானை உறிஞ்சி செயின் ரியாக்சனை கட்டுக்குள் கொண்டு வரும்..
இப்படி ரியாக்டரில் உண்டான வெப்பம் எக்ஸ்சேஞ்சரில் நீருக்கு கடத்தப்பட்டு டர்பைன் ஜெனரேட்டர் சுழற்றப்பட்டு மின் உற்பத்தி நடக்கிறது.
போதும்...
5 நிமிடம் முடிந்து விட்டது இப்போ மீண்டும் செர்னோபில்......
செர்னோபிலில்.... பரிசோதனையில்.....
டர்பைன் ஜெனரேட்டர் திறனை பரிசோதிக்கும் நேரத்தில் ரியாக்டரின் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கருவிகளை வேண்டும் என்றே அணைத்து வைத்திருந்தார்கள். சோதனை தொடங்கிய போது 25 சதம் திறன் இருக்க வேண்டிய ரியாக்டர் மிக குறைந்த திறன் உடன் இருந்தது .சோதனை தொடங்கிய 30 செகண்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட பவர் சர்ஜ் ஒன்றால் ரியாக்டரின் செயின் ரியாக்சனை கட்டுப்படுத்தும் கருவிகள் செயலிழந்தன.
அங்கே சோதனையே.. அவசர காலத்தில் ஓடி கூலிங் பம்புகளை இயக்கும் தானியங்கி ஜெனரேட்டர் 30 வினாடியில் இயங்கி பின் 40..45 வினாடிகளில் முழு வேகம் பிடித்து பம்புகளை இயக்குகிறதே அந்த இடைப்பட்ட நேர இடைவெளியை டர்பைனின் ஜெனரேட்டர்கள் (பவர் இல்லாத போது ஏற்கனவே செயல்பட்ட பழைய விசையை கொண்டு) நிரப்ப முடியுமா என்று தான். ஏற்கனவே இந்த சோதனையை 2 முறை செய்து அவர்கள் தோல்வியை தழுவி இருந்தார்கள். இம்முறை அணுஉலையை புதிய முறையில் மேம்படுத்தி இருந்தார்கள் என்பதால் மீண்டும் இதை சோதித்தார்கள்.
ஆனால்...
இம்முறை நடந்தது தான் கடந்ததை விட மிக மோசம். ரியாக்டர் சுத்தமாக கட்டுப்பாடு இழந்து தனது செயின் ரியாக்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. விளைவாக அதன் core வெப்பமயமாகி அதன் எரி பொருளை தாங்கி நிற்கும் குழாய்களை சப்தமாக வெடித்தது. உள்ளே இருந்த எரி பொருட்கள் தண்ணீருடன் இணைந்து வெப்பத்தால் பெரும் நீராவியாக மாறியது.
அதிகாலை 1.23 ..
அணுஉலை தனது அதீத வெப்பம் மற்றும் அழுத்ததை தாங்க முடியாமல்
முதல் வெடிப்பை நிகழ்த்தியது. சில வினாடிகள் கழித்து இன்னும் பிரம்மாண்டமாய் இரண்டாவது வெடிப்பும் நடந்தது. அணு உலையின் 1000 டன் மேற் கூரை பெயர்த்து கொண்டு போனது. 2000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு ரியாக்டரை போர்த்தி இருந்த க்ராபைட் லேயர் தீ பற்றி எரிய தொடங்கியது.(அந்த தீ பின்னால் 9 நாட்கள் தொடர்ந்து எரிந்தது )
மந்திரப் பிடிக்குள் சிக்கி இருந்த பிசாசு தப்பி போவதைப் போல இவ்வளவு நாளாக கடும் பாதுகாப்பில் வைக்கப் பட்டு இருந்த 20 வகையான கதிரியக்க பொருட்கள் காற்றில் சுதந்திரமாக கரைந்து சென்று பரவியது. சுற்று வட்டாரத்தில் காற்றில் மண்ணில் நீரில் ஆசை தீர கலந்தது.
கண்ட்ரோல் ரூமில் இருந்தவர்கள் உலை பகுதிக்கு ஓடி வந்து பார்த்த போது அங்கே அந்த பயங்கரத்தை பார்த்தார்கள் .தன்னுடன் பணியாற்றிய பணியாளர்கள் இப்போது தனக்கே அடையாளம் தெரியாமல் குரலை வைத்து தான் அடையாளம் காணும் அளவு முகங்கள் வெப்பத்தில் வெந்து கருகிப் போய் துடித்துக் கொண்டு இருந்தார்கள். அணு உலையின் கூரை பிய்த்தெரியப் பட்டு இரவு வானின் நட்சத்திரங்கள் தெரிந்தது.
விபத்து நடந்த போது ஏற்பட்ட வெடிப்பில் 30 பேர் இறந்தார்கள் . ஆனா இது எல்லாம் சுனாமிக்கு முன் கடல் உள்வாங்கும் போது சில சில்லறை மீன்கள் சாவதற்கு சமம் .
நிஜமான சுனாமி பாதிப்பு அது கரையில் வந்து அடிக்கும் போது தான் அது போல கதிர்வீச்சின் பாதிப்பு அது பரவும் போது தான் .
அதன் விபரீத விளைவுகள் தெரிய வருவது அப்போது தான்.
விபத்து நடந்த சில மணி நேரத்தில் இதை சாதாரண தீ விபத்து போல நினைத்து தீ அணைப்பு படை ஒன்று ஹெலிகாப்டரில் வந்து நீரைப் பீச்சியது.
அப்போது....
நீர் அணைப்பதற்கு பதிலாக ரியாக்ட் ஆகி நிலைமை இன்னும் மோசமானதைக் கண்டு தீ அணைப்பு படை மிரண்டது. இது சாதாரண தீ விபத்து அல்ல என்பதைப் புரிந்து கொண்டது.
ஆனால் புரிந்து கொண்ட போது காலம் கடந்து விட்டிருந்தது. அணைக்க வந்த அந்த முதல் குழு அங்கேயே இறக்க நேரிட்டது.
அவர்கள் ஊற்றிய தண்ணீரில் கதிரியக்கம் கலந்து அங்கிருந்த டினிப்பர் நதிகளில் கலந்து சோவியத் நாடுகளைத் தாண்டி ஐரோப்பாவில் உள்ள சுவீடன் வரை பரவி இன்னும் நிலைமையை மோசமாக்கியது.
முதலில் நடந்தது பெரிய விபத்து அல்ல அது ஒரு சாதாரண விபத்து தான் என்பதைப் போல அரசாங்கம் நடந்து கொண்டது ஆனால் ஏப்ரல் 27-ல் அதாவது விபத்து நடந்த அடுத்த நாள் பிரிப்யாட் நகரில் வசித்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களை அரசு அப்புறப்படுத்தியது. எனினும், விபத்து பற்றி முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதற்குள் அவர்கள் உடலில் கதிரியக்கம் போதிய அளவு தாக்கி இருந்தது.
ஏப்ரல் 28 அன்று சுவீடனைச் சார்ந்த கண்காணிப்பு அமைப்புகள் இதை கவனித்து விட்டு கேள்விகள் எழுப்பின .
இதற்கு மேலும் முழுப் பூசணியை மறைக்க முடியாது என்பதை உணர்ந்த அரசு விபத்து நடந்ததை ஒத்துக் கொண்டது.
இனி பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றுவதைத் தவிர செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்த அரசு விபத்து நடந்த 36 மணி நேரத்தில் இந்த வெளியேற்றலை தொடங்கியது . விபத்து பகுதியில் இருந்து 30 கி.மி சுற்று வட்டாரத்தில் ஒரு மாதம் கழித்து மொத்தம் 1 லட்சத்தி 16 ஆயிரம் பேரை வெளியேற்றி இருந்தது அரசு. பின்னாளில் இந்த விபத்தால் மொத்தமாக இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 135000 பேர் என்று கணக்கெடுப்பு தெரிவித்தது.
இடிந்த உலையை உடனே சமாதி கட்டி மூடினார்கள் அதோடு நில்லாமல் அதைச் சுற்றி கான்கரீட் வளைவு குடோன் ஒன்று (உள்ளே அமெரிக்க சுதந்திர தேவி சிலை வைக்கும் அளவு பெரிய குடோன் போன்ற அமைப்பு) வைத்து மூடினார்கள் . அரசாங்க சொத்தில் மிகப் பெரிய பங்கு இந்த விபத்தை சரி செய்யவே செலவாகிப் போனது. சொல்லப் போனால் விபத்திற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் உலகத்தாரால் பாராட்டப் பட்டது.இருந்தும் நியூக்ளியர் பூதத்தின் பிடியில் மக்கள் சிக்குவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
அதன் விளைவுகள் வெளிப்பட்ட போது கதிர்வீச்சு ருத்ர தாண்டவம் ஆடி இருப்பது தெரிந்தது.
விபத்து நடந்த அடுத்த சில தினங்களில் அயிரக்கணக்காண மக்கள் இறந்து போனார்கள்.
கதிரியக்க நேரடி பாதிப்புக்கு ஆளானவர்கள் தோல் கழட்டிக் கொண்டு வந்தது .தலை முடி கையோடு வந்தது . ரத்தமும் சீழும் ஆக பேதி போனார்கள் . கடுமையான சிதர்வதை அனுபவித்து இறந்தார்கள்.
இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. காற்று, நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது.
பொதுவாகவே அணுஉலைகளை பாதுகாப்பு காரணமாக 25 ஆண்டுகளுக்கு தான் பயன்படுத்துவார்கள் அதன் பின் அதன் ரியாக்டர்களை கொண்டு போய் பூமியில் ஆழமாக குழி தோண்டி கான்க்ரீட் சமாதி கட்டி புதைத்து விடுவார்கள். அப்படி புதைக்கப்பட்ட உலையை 5000 வருடம் கழித்து திறந்தால் கூட அதே கதிர் வீச்சு பாதிப்பை கொண்டு அழிக்க தயாராக இருக்கும். நியூக்ளியர் பவர் என்பது நிஜமாகவே ஒரு பூதம் தான் அதற்கு ஒரு முறை உயிர் கொடுத்து விட்டால் பிறகு அதை அழிக்க முடியாது கடைசி வரை சிறையில் போட்டு பூதம் வெளியேறாமல் காக்க வேண்டியது தான்.
மனிதன் என்றால் அவனுக்கு ரெண்டு கை ரெண்டு கால் இந்த இடத்தில் கண் இந்த இடத்தில் பல் என்று இருக்கும் மனிதனின் கட்டமைப்பு திட்டத்தையே கதிரியக்கம் செல்களில் ஊடுருவி மாற்றக் கூடியது.விளைவாக அதன் பின் பிறந்த பல குழந்தைகள் இது வரை மனித வரலாற்றில் பார்த்திராத புதிய வடிவமைப்போடு ஏதோ ஏலியன் போல பிறந்தார்கள். அவர்களை நேரில் பார்த்தவர்கள் நெஞ்சில் அணு சக்தியை பற்றிய நீங்காத கிலியை ஏற்படுத்தியது. (உதாரணத்திற்கு சில படங்களை இணைத்து இருக்கிறேன் பாருங்கள்)
அப்பகுதிகளில் வசித்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விவரிக்க இயலாத பாதிப்புகளுடன் பிறக்கிறார்கள். உடனடி மரணம், புற்றுநோய் பாதிப்புகள் என்று லட்சக் கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணு குண்டுகளை விட அதிக அளவில் அணுக் கதிர்வீச்சு இவ்விபத்தின் மூலம் வெளியேறியுள்ளது.
அடுத்த வரும் 70 ஆண்டுகளில் கேன்சர் ரேட்டிங் 28 % உயர இந்த விபத்து காரணமாக இருக்கப் போகிறது என்று நிபுணர்கள் கணித்தார்கள்.
(UNSCEAR ) அதாவது United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation என்ற அமைப்பு இறுதியாக மொத்தமாக இந்த விபத்தின் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று பதிவு செய்தது . அது கொடுத்த கணக்கு எவ்வளவு தெரியுமா?
மொத்தம் 6 லட்சம் பேர்.
இப்படி பெலாரஸ், ரஷ்யா, உக்ரைனில் காற்றின் மூலம் பரவிய அணுக்கதிர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி வரை பரவின.
அதுமட்டும் அல்ல விபத்து நடந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் பிப்ரியாட் மற்றும் செர்னோபில் நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக இருக்கின்றன.
அதன் பாதிப்பு இன்னும் 20000 வருடத்திற்கு நீடிக்கும் என கிலியேற்றுகிறார்கள்.
கடைசியாக,
ஒரு அறிவியல் காதலனாக ..இந்த கட்டுரையின் ஆரம்ப வரிகளை மீண்டும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
'அறிவியல்... '
இது சரியாக கையாண்டால் அள்ளித் தரும் அரசன் .
தவறாக கையாண்டால் அழித்தொழிக்கும் அரக்கன்.
அறிவியல் ஒரு சக்தி இது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல .இதை நல்லது கெட்டதாக நிர்ணயிப்பது இதை கையாளுபவன் கையில் உள்ளது.
😊😊😊 #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #உற்சாக பானம்# #பொழுது போக்கு
தினம் இன்று*
*ஏப்ரல் 26*
கணித மேதை ராமானுசன் 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.
🖊️ கணித மேதையான ராமானுசம் சீனிவாசன்-கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்து போயினர்.
🖊️இராமானுசனின் தந்தையாரும் தந்தை வழி பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தராக பணியாற்றி வந்தனர். தாய் வழி பாட்டனாரும் ஈரோட்டு முனிசிப் அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே அவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.
🖊️இராமானுசன் தாய் வழி தாத்தா வேலை பார்த்த கடை 1891-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்துக்கு மாறியதால் இவரது குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் ராமானுசன் தொடக்க கல்வியை தொடங்கினார்.
🖊️1894-ஆம் ஆண்டு அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்க கல்வியில் சேர்ந்து கல்வி கற்றார். 1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக் கல்வியை நிறைவு செய்தார். 1897-ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.
🖊️சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
🖊️1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் ‘The Ramanujan Journal’ என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
😊😊😊 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#









