
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்
செயலில் நேர்மையும், ஆர்வமும் இருந்தால்..
உன் வாழ்வின் வளர்ச்சி எவராலும் தடுக்க இயலாது! #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம் #உற்சாக பானம்#
🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳
. *திருவருட்பா*
🔳🔳🔳🔳🔳 🔳🔳🔳🔳🔳
*இரண்டாம் திருமுறை*
*மூன்றாம் தொகுதி*
*பாடல் வரிகள்101*
*🇩🇦🇹🇪 10-3-2026*
இராமநாமப் பதிகம்
அஃதாவது இராமபிரானுடைய திருப்பெயரை ஓதி யின்புறுவது பொருளாக நிற்கும் பாட்டுக்கள் பத்துக் கொண்ட சொன்மாலையாம். இதன்கண் மண்ணக வாழ்வில் உண்டாகும் துன்பங்கள் வாழ்வாரைத் தொடர்ந்து போந்து வருத்துவனவாதலால், அவற்றால் பிறக்கும் மனச் சோர்வைப் போக்கியருள வேண்டும் என்ற கருத்தால் இராம்பிரானை வழிபடு திறம் காணப்படுகிறது. வடலூர் வள்ளல் சுத்த சிவ நெறிச் செம்மலாதலின் திருமாலாகிய இராமபிரானைச் சொன்மாலையால் வணங்கி வழிபடுகிறார். “பாம்பணைப் பள்ளியானை பழிமொழி பகர்ந்த பாவி கோம்பியாய் உதரவங்கி கொளுத்திட அழிவன்” எனச் சிவதரு மோத்திரம் கூறுதலின், இராமனை வழிபடுவது சைவத்துக்கு மாறாகாமை யுணரப்படும். இராமபிரான் சிவவழிபாடு செய்யும் 'சீரியோனாதலால், அவனை வழிபடுவது சிவத்தை வழிபடுவதேயாம். சிவநெறி யுண்மை யறியாதார் மாறுபடப் பேசுவர்; உண்மை தெரியுங்கால் அவரும் தெளிவர். இப் பதிகம் கொந்தமூர் சீனிவாச வரதாசாரிய சுவாமிகள் பொருட்டு வடலூர் வள்ளல் பாடினார் என ஆராய்ச்சியாளர் குறிக்கின்றனர்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1939.
திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
தென்அரசே என்அமுதே என்தா யேநின்
மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.
உரை:
திருமகளாகிய பெருமாட்டி, உவந்து நுகரும் செழுமையான கனி போன்றவனே, கொழுவிய பாகே, தேனே, கற்பகச் சோலையிலிருக்கும் இந்திரனைக் காத்தற்பொருட்டு வெற்றியையுடைய வில்லைக் கையிலேந்திய தனிமுதல்வனே, அறக் கடவுள் பெற்ற செல்வமே, இம்மை மறுமை இரண்டிலும் என் மனத்தின்கண் எழுந்தருளும் இராம என்னும் பெயரையுடைய என் அரசே, எனக்கு அமுதமானவனே, என்னுடைய தாயே, உன்னுடைய மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற அழகிய திருவடியை வாழ்த்தி வணங்கும் சிறியவனான யான் மனத்தே சோர்வுடையனாகின்றேன்; இதனை அறிந்தும் திருவருள் செய்கின்றாய் இல்லையே; என் செய்வேன். எ.று.
திருமாலுக்குப் போக காரிகையாதலின், திருமகளை முதற்கண் எடுத்துப் பதிகத்தில் குறிக்கின்றார். பிரானுக்குப் பெண்பால் பிராட்டியாயினும், தமக்குள்ள தொடர்பு காட்டற்கு “எம்பிராட்டி” என்றும், “பிராட்டி மகிழும் வண்ணச் செழுங்கனி” எனவும் புகழ்கின்றார். கருமை வண்ணமும் மிக்க சுவையும் உள்ளமை விளங்க “வண்ணச் செழுங்கனியே” என்று கூறுகிறார். கனிக்குச் செழுமையும் பாகிற்குக் கொழுமையும் சிறப்பாதலால், “செழுங்கனியே கொழும்பாகே” என்று சிறப்பிக்கின்றார். தெய்வத் தரு - தேவருலகத்துக் கற்பக மரம். கற்பகச் சோலையில் வீற்றிருந்து தேவர்களைப் புரப்பவனாதலால், இந்திரனைத் “தெய்வத் தரு மகன்” என்று உரைக்கின்றார். வென்றித் தனு - வெற்றி கொள்வதையே குறிக்கொண்ட கொதண்டமென்னும் வில். தனி நின்று வெற்றி கொள்ளும் தகையால் முதல்வ னென்றற்கு “ஒருமுதலே” என இயம்புகிறார். அறக் கடவுட்குக் கிடைத்த அரிய செல்வம் போறலின், இராமனை, “தருமப் பேறு” எனச் சாற்றுகிறார். “அறம் வளர்க்கும் கண்ணாளன்” (யுத்த) எனக் கம்பர் குறிக்கின்றார். இனி, “புண்ணியத்தின் பயன்” என்றலுமுண்டு. தெய்வப் பிறப்பும் மக்கட் பிறவி போல நிலையில்லதாதலால், இறைவன் ஆங்கும் உள்ளத் தமர்தல் இன்றியமையாமை புலப்பட, “இருமையும் என் உளத்தமர்ந்த இராமநாமத்து என்னரசே” என இசைக்கின்றார். மருமலர் - மணம் பொருந்திய பூ. மலர் - தாமரை மலர். பொன் - அழகு. வழுத்துதல் - பெயரைச் சொல்லி வணங்குவது. மனத் தளர்ச்சி செயலறவை யுண்டாக்கிக் கீழ்மைப் படுத்துவதாதலால் “மனம் தளர்ந்தேன்” எனவும், அதனை யறிந்துவைத்தும் போக்கி யருளாமையை எடுத்தோதியும் முறையிடுகின்றார்.
இதனால், மனத்தளர்ச்சி போக்கி யருள வேண்டியவாறாம்.
*தொடரும்..*
*ပகி𑂞ᮀவு*
*ဖᩃໍ᪙᭄ᤌη*🌹
╚╩══• •✠•❀ 🦚❀•✠ • •══╩╝ #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
இருந்து சென்னை வந்தடைந்தார் அஜித்!*
*AK IS BACK*
*📍. சென்னை வந்தடைந்தார் நடிகரும் ரேஸமான அஜித்குமார்!*
*ரேஸுக்காக துபாய் சென்றிருந்த அவர், ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டு இருந்தது*
#Dubai | #AjithKumar | #IranIsrealWar #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
#𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚••••
*🔹🔸இந்தியாவுக்குள் சீன முதலீடுகள் வர ஒன்றிய அரசு பச்சைக்கொடி!*
*பச்சைக்கொடி*
*📍. கடந்த 2020ல் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன முதலீடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.*
*விதிகளை தளர்த்தி, மின்னணு மற்றும் உற்பத்தித் துறையில் சீன முதலீடுகள் எளிதாக இந்தியாவுக்குள் வர வழிவகை செய்ய முடிவு.*
#ChineseInvestment | #IndiaChinaRelation #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்கள் அறிவுறுத்தல்.*
* *தமிழகத்தில் தற்போது 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் அமைதியான முறையில் தேர்வுக்குத் தயாராவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும்.*
* *எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:*
*நேரக் கட்டுப்பாடு:*
* *இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் (Loud Speakers) அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது.*
*விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள்:*
* *காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அனைத்து மதம் சார்ந்த விழாக்கள்; அரசியல் கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள் அல்லது தனியார் இல்ல விழாக்களில் நிர்ணயிக்கப்பட்ட 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.*
*காவல்துறையின் எச்சரிக்கை:*
* *இந்த விதிகளை மீறி, மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களின் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும்.*
* *பொதுமக்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் இந்த தேர்வு காலத்தில் சமூக அக்கறையுடன் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*
* *இது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்களின் Feedback Centre 7708239100 மற்றும் 8122223319 என்ற Whatsapp எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.*
*🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏*
*🇮🇳10-03-26🇮🇳*. 𝕲𝖔𝖔𝖉 𝖒𝖔𝖗𝖓𝖎𝖓𝖌 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம்
Join rapido and earn at your will. Here is my referral code RH7A6BN. Download at https://m.rapido.cc/KKhL/mfjo8ou1 #பொழுது போக்கு
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#









