மலர்ச்சி தரும் புகழ்ச்சியே மங்களமே தளர்ச்சி அடைந்த இவ் நின் அடியேன்
எழுச்சி வேண்டி இமயவளே தளர்ச்சி இன்றி நின் திருத்தாளை போற்றுகிறேன்
கிரக பெயர்ச்சியும் என் முயற்ச்சியும் பலன் இன்றி போகுதே
வீழ்ச்சி இலா இயற்கையே இனியவளே வளர்ச்சி அருள் என்றும் என் அம்மை ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
பதினொன்றாம் திருமுறை
கபிலதேவ நாயனார் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
பாடல் எண் : 17
பெருங்காதல் என்னோடு பொன்னோடை நெற்றி
மருங்காரவார்செவிகள் வீசி ஒருங்கே திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர வருவான் தன் நாமம் வரும் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய
வருத்துமுடனே அடியேன் வாழ்வதோ நாளூம்
வள்ளலே நீர் அறியாமல் இருக்கிறரே இன்னும் ஏனும்
கருத்தினில் காபாலி நீர் கலந்து பின்னும் அடியேன் வருந்தி வாழ்வது இன்னும் ஏனும்
தொடர் பருவம் உண்டோ ஒன்று தூயவளே நீரே கூறும்
தீ ஜவாலை போல் என் தீவினை அழித்து
நீரே நல்வழி அருளி என்றும் எனை காப்பது அம்மை ஆச்சியே தாயே உம் கடமை ஆகும்
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
போற்றி பதினெட்டு பொன்னம்பல நாயகி என் அம்மை ஆச்சிக்கு
அரங்கனை யோக துயில் கொளச்செய்து
அவர்மகனை அச்சபடச்செய்து தொழச்செய்து
பிறைச்செல்வனை கனலுக்குள் ஒளியச்செய்து
இருவரும் அடிமுடி காணாமல் மயங்க செய்து
மூவர்க்கும் மேலான இறை நீ என்று அவனியோர் போற்றும் ஆதிசக்தியே என் அம்மை ஆச்சியே போற்றி போற்றியே
{ S.ஜெயவீரபத்திரன்} 8 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய
போற்றி பதினெட்டு பொன்னம்பல நாயகி என் அம்மை ஆச்சிக்கு
தில்லைமில் வெகுளி திருநடனம் நாடகம்
திருமயிலையில் காதலுடன் இணைய தொழும் நாடகம்
புனலை கண்டு அஞ்சி காதலனை காப்பது போல் காதலுடன் தழுவிய நாடகம்
கண்மணியே அம்மை ஆச்சியே நின் அழகிய நாடக செயல்கள் போற்றி போற்றி
{ S.ஜெயவீரபத்திரன்} 7 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
பாராமுகமாய் இருக்கிறாயே பரமநயாபரியே என் அம்மை ஆச்சியே அன்பே
மலரவன் தவையை பறித்து அலரவனை துயில் கொள செய்து
மலையவனை கனலுக்குள் ஒளியச்செய்த மங்களமே மூம்மூர்திகளின் தலைவியே இவ் சிறியவன் செயல் ஏது
சிந்தாமணியே விரைந்து அருள்வாயே என் ஆச்சியே
{S. ஜெயவீரபத்திரன் } #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 72 வது திருத்தலம்
திருக்குடந்தைக்காரோணம்
அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர்
மரம் வில்வம் மகாமகததீர்த்தம்
எண் : 3 பண் : சாதாரி
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடியார் மறுகு எலாம் மாலை மணநாறு பழையாறை மழபாடி அழகாய மலிசீர்ப் பாலையன
நீறுபுனமார்பன் உறை
பட்டிசர மேப பரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி விண்ணுலகம் ஆளும் அவரே.
பொழிப்புரை:
பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய், மாலையில் பூசை செய்வதால் வீதிகளில் எல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில், தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக, மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.
#🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
போற்றி பதினெட்டு பொன்னம்பல நாயகி என் அம்மை ஆச்சிக்கு
காற்றினை கனலாக்கி கருத்த அரக்கனை கரியாக்கிய
மங்கள சண்டிகியே மாகாளியே என் அம்மை ஆச்சியேநின் வீர செயல்களை போற்றி போற்றியே
{ S.ஜெயவீரபத்திரன்} 6 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்
போற்றி பதினெட்டு பொன்னம்பல நாயகி என் அம்மை ஆச்சிக்கு
மலரவன் அறியா உரையை மலையவனுக்கு உபதேசம் செய்யும் குமரனை படைத்த
குமுதமே அமுதமே எங்கள் தங்கமே என் அம்மை ஆச்சியே நின் புகழ் போற்றி போற்றியே
{ S.ஜெயவீரபத்திரன்} 5
#🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
அடியவர்கள் நலனை
காப்பாய் அன்பே போற்றி
அடியவர்கள் தீவினை அழிப்பாய் போற்றி அடியவர்கள் தேவைகளை அருள்வாய் போற்றி பரமதயாபரியே என் அம்மை ஆச்சியே இவ் முத்தொழில் சேவை அடியவர்களூக்கு செய்வாய் போற்றி
விதியினை காட்டி வீழ்ச்சி அடையசெய்யாதே போற்றி { S.ஜெயவீரபத்திரன்} 4
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்













