அம்மை ஆச்சி நேசன்
ShareChat
click to see wallet page
@432439658
432439658
அம்மை ஆச்சி நேசன்
@432439658
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
தர்மர் அறம் கூறுதல் {11} தீவினை பயனாகவே இவ் உலகம் வந்தோம் மேலும் தீவினைகள் சேர்க்கும் செயல்களை ஏன் கைகொள்ள வேண்டும் ? அற நூல்களை கற்றும் பெரியோர்கள் நட்பும் ஆசி பெற்றும் பேதமை நிறைந்த செயலான வெகுளியும் பகைமை நமக்கு எதற்கு ? அற ஆயுதம் ஏந்தி எல்லோரை அரவணைத்து புது விதமான செயல்களை புரிவோமே புனித பாரத்தின் பெருமையை உணர்த்தவோமே புகழுடையிர் கேளுங்களேன் ( ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
🙏கோவில் - தர்மர் DHARMAR தர்மர் DHARMAR - ShareChat
திருவேதிகுடி ஈஸ்வரி அம்மை ஆச்சியின் அருள் செல்வன் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 75வது திருத்தலம் திருவேதிகுடி அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர் மரம்: வில்வம் வைத தீர்த்தம் பாடல் எண் : 6 பண் : சாதாரி செய்ய திருமேனிமிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து தையமிடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடமாம் வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்க அழிவிலாத வகையார் வெய்யமொழி தண் புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே. பொழிப்புரை: சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர். கரிய யானையின் தோலைப் போர்த்தவர். பிச்சையிடுங்கள் என்று இளமைவாய்ந்த உமாதேவி யாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர், நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும், மிகுந்த புகழும், குறையாத பண்பாடும் உடையவர்களும், இனிய புலவர்கட்குக் கொடை அளிக்கும்போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 75வது  திருத்தலம் திருவெங்குரு அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர் பவழமல்லி பிரம தீர்த்தம் பாடல் எண் : 3 ஓரியல் இல்லா உருவமதாகி யொன் திறல் வேடன் அது உருவது கொண்டு காரிகை காண தனஞ்சயன்ற தன்னை கறுத்தவற்கு அளித்து உடன் காதல் செய்பெருமான் நேரிசையாக அறுபதமுரன்று நிரை மலர்த்தாதுகண் மூச விண்டுதிர்ந்து வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. பொழிப்புரை: தம் இயல்பிற்குப் பொருத்தமற்ற உருவமாய் மிக்க வலிமையுடைய வேடர் உருத்தாங்கி வந்து உமையம்மைகாண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டிச் சண்டையிட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய சிவபிரான், வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரந்தங்களில் புரள, அதனால் மலர்கள் விரிந்து தேன் உதிருவதால் தேன் எங்கும் விம்மிவழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான். குறிப்புரை: உமாதேவிக்காக விசயனைக் கோபித்து அருளுஞ் செய்த பெருமான் இவர் என்கின்றது. ஓர் இயல்பு இல்லா உருவமது ஆகி - ஒருதன்மையும் இல்லாத உருவத்தை மேற்கொண்டு. காரிகை - உமாதேவியார். தனஞ்சயன் - அருச்சுனன். கறுத்து அவற்கு அளித்து எனப்பிரிக்க. நேரிசை: ஒருபண். அறுபதம் - வண்டு. முரன்று - ஒலித்து. தாது கண் மூச - மகரந்தம் கண்ணில் மூட. வேரிகள் - தேன்கள். #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
🙏கோவில் - ShareChat
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு பாடல் எண் : 19 இருந்தேன் இக் காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே . பொழிப்புரை: இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை. #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - அருமுல தேவநாயனாம் அருமுல தேவநாயனாம் - ShareChat
வள்ளலிடம் வறிய குணம் கண்டவர் உண்டு பெற்ற பிள்ளைகளிடம் பேதம் காணும் பெற்றோரும் உண்டு சுற்றமும் நட்புபிடம் குறை காண்பவர் உண்டு அறவழி வெறுத்த அரசாட்சி செய்தவரும் உண்டு அம்மை ஆச்சியே உம்மை போற்றும் எமக்கு அருளாமல் இருப்பது உண்டோ என் செல்வமே செல்லமே { S.ஜெயவீரபத்திரன்} #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
🙏கோவில் - ShareChat
தர்மர் அறம் கூறுதல் {10} சமைத்த பின்பே உயிர்கள் படைக்கபடுகிறது கர்மங்கள் நிர்ண்யத்த பின்பே உயிர்கள் பூவுலகம் வருகின்றது இயற்கை விதி அறிந்த நீங்கள் அதன் சூழ்ச்சியின் முயற்ச்சியை தவிர்க்கலாமே பிறர் அறியாமல் நன்மை செய்யும் பெரியோர்கள் ரிஷிகள் போல் புற வாழ்விலிருந்து ஒதுங்கி நன்மை செய்வோமே நல் உரையால் சாந்தம் அடைவீர்களே நமன் அஞ்சும் சகோதர்களே (ஜெயவீரபத்திரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - தர்மர் DHARMAR தர்மர் DHARMAR - ShareChat
நாளையும் கோளையும் பார்த்து கொண்டு நாயகியே நீ அருளூம் காலம் கணிக்க திணிறிக் கொண்டு மாயவனையும் ஞாலத்தையும் காத்த நீர் இந்த சேயனை காக்க திருஉள்ளம் கொள்வீரே தாயே தட்சிணகாளியே என்று தளர்ச்சி அடையால் போற்றும் எமக்கு அருள்வீரே என்றும் என் அம்மையே ஆச்சியே {S.ஜெயவீரபத்திரன்} #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
🙏கோவில் - ShareChat
கடுகு வெடித்து காயம் அடைந்தவர் உண்டோ? நின் பாராமுகத்தினால் பயன் அடைந்தவர் உண்டோ? ஆவுடை நாயகியே அம்மை ஆச்சி கோமதியே நாயேனை நலிவு அடைய செய்வதினால் நானிலித்துக்கு நன்மையோ என் அம்மையே ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன்} #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - B Palanivel 58 minutes ago Reply B Palanivel 58 minutes ago Reply - ShareChat
புத்ரான் தேஹி தனம் தேஹி ஸர்ம காமாச்ச தேஹிமே ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி தவிசோ ஜஹி {தேவிமஹாத்மியம் கீலக ஸ்தோத்திரம்} #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - OFUHUNUHUFURUUBUFUHUUفUED OFUHUNUHUFURUUBUFUHUUفUED - ShareChat
ஸ்ரீ சண்டி ஸ்தோத்திரம் முண்டமாலா தாரிணி முகுந்தபூஜித ருபினி முக்தி தாரிணிஸர்வ கார்யஸித்தி தாரிணி முத்கல கேடக தாரிணி மூலாதார ஸ்வரூபிணி பாஹிமாம் பாஹிமாம் சாமுண்டி தேஹிமே தேஹிமே பக்த இஷ்ட பிராதாயணி #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat