திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
பாடல் எண் : 10
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில் தரும்அற உரை விட்டு அழகாக ஏடுடை மலராள் பொருட்டு வன்றக்கன் எல்லையில் வேள்வியை தகர்த்த அருள் செய்து
காடு இடை கடிநாய் கலந்து உடன்சூழ கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை:
துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக்கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது, அழகிய இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்றவளாகிய தாட்சாயணியின்பொருட்டு வலிய தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து, காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.
குறிப்புரை:
புறச்சமயிகளுடைய பொருந்தா உரைக்கு அப்பாற் பட்டுத் தக்கன் யாகத்தைத் தகர்த்து, வேட்டுவ வடிவந் தாங்கிய விகிர்தர் இவர் என்கின்றது. பாடு - துன்பம். பயில்தரும் மற உரை - சொல்லுகின்ற கருணையற்ற வார்த்தைகள். விட்டு - அவ்வுரைகளுக்கு அப்பாற்பட்டு. ஏடு உடை மலராள் - தாட்சாயணியாகிய உமாதேவி. தகர்த்து - அழித்து. விளித்து - அழைத்து.
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
அறவழியில் பொருள் சேர்த்தவர் காண்பது அரிது
மறை சொன்ன வழியில் வாழ்வ்தவர் காண்பது அரிது
குறையில்லா உயிரினம் காண்பது அரிது
நின் அருள் இன்றி நின்னை அடைந்தவர் ஏது ?
#🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
தர்மர் அறம் கூறுதல் {21}
இடிமுழக்கம் போல் சிரித்து பேரரசன் கரகரத்த குரலுடன்
வேதியர் சிறுவனே
நானிலம் படைத்தவன் வந்தாலும் அவர்க்கும் அருளூம் நிலையில் நான் உள்ளேன்
என்று ஈர்ஏழு உலகில் உள்ளோரும் அறிவாரே கூறுவாரே
வேதம் படித்தும் ஞானம் அறியாத சிறுவனே
ஐவகை பூதங்கள் என் கீழ்
அமரர்களூக்கு அதிபன் என் அடிமை
(ஜெயவீரபத்திரன்) #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
ஒம் கேவலாயை நமஹ
ஒம் அனந்தாயை நமஹ
ஒம் சிவாத்மாயை நமஹ
ஒம் பரமாத்மிகாயைநமஹ
ஒம் அனாத்யை நமஹ
ஒம் அவ்யாயை நமஹ
ஒம் சுத்தாயை நமஹ
ஒம் தேவாத்மாயை நமஹ
ஒம் ஸர்வகாயை நமஹ
ஒம் அசலாயை நமஹ
ஒம் ஏகானைக விபாக ஸதாயை நமஹ {22} #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
காதலுடன் கானம் எழுதி
ஆவலுடன் நின் திருவடிக்கு சாற்றி
கண்ணே அம்மை ஆச்சியே என்று அன்புடன் தொழுது
பலமுறை கூறி
கூற்றவனை உதைத்த காலகாளியே இவ் சிறியேனை தீவினையை களைவாயே தாயே தட்சிண காளியே என் அம்மை ஆச்சியே நின் திருக்கழல் போற்றியே
{ S. ஜெயவீரபத்திரன்} #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
.பாடல் எண் : 9
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி சேறி இடைத்திகழ் வானத்து இடைபுக்கும் செலவ அறத்தவிர்ந்தனர் எழில் உடை திகழ்வெண்ணீறு உடைகோல மேனியர் நெற்றி கண்ணினர் விண்ணவர் கை தொழுது ஏத்த வேற் எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
#🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர்
மரம்: வில்வம் வைத தீர்த்தம்
பாடல் எண் : 10 பண் : சாதாரி
வஞ்ச அமணர் தேரர் மதி கேடர் தம் மனத்து அறிவிலாத அவர் மொழி தஞ்சம் என்று உணராதவர் அடி யார்
கருது சைவன் இடமாம்
அஞ்சு புலன் வென்ற
அறு வகை பொருள் தெரிந்து ஏழும் இசைக்கிளவியால்
வெஞ்சின மொழித்தவர்கள்
மேவி நிகழ்கின்ற
திரு வேதிகுடியே. #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
பத்தாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு
பாடல் எண் : 25
பிறப்பிலி நாதனைபேர்
நந்தி தன்னை
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சின் உள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடி
நின்று ஒதலுமாமே
#🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
போற்றி திருவடி துதித்தல் ஈர்எட்டு (1) {ஜெயவீரபத்திரன்}
மலர்ச்சி தரும் மங்களமே போற்றி
புகழ்ச்சியான மகிழ்ச்சியை அருள்வாய் போற்றி
தளர்ச்சி இன்றி நின் தாளை போற்ற செய்வாய் போற்றி
என் தங்கமே தயாபரியே போற்றி
வளர்ச்சியை அருளிய
வள்ளலே போற்றி முயற்சியின் சக்தியே முத்தமிழ் நாயகியே போற்றி
எழுச்சியின் வடிவே என் அம்மை ஆச்சியே போற்றி
சங்கரியே நாரணியே அம்மை கோமதியே போற்றி
#🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
ஸ்ரீ சண்டி ஸ்தோத்திரம்
முண்டமாலா தாரிணி முகுந்தபூஜித ருபினி
முக்தி தாரிணிஸர்வ கார்யஸித்தி தாரிணி
முத்கல கேடக தாரிணி
மூலாதார ஸ்வரூபிணி
பாஹிமாம் பாஹிமாம் சாமுண்டி தேஹிமே தேஹிமே
பக்த இஷ்ட பிராதாயணி
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்













