அம்மை ஆச்சி நேசன்
ShareChat
click to see wallet page
@432439658
432439658
அம்மை ஆச்சி நேசன்
@432439658
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 72 வது  திருத்தலம் திருக்குடந்தைக்காரோணம் அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர் மரம் வில்வம் மகாமகததீர்த்தம் பாடல் எண் : 9 பண் : தக்கேசி கரியமாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப்போய் அரிய அண்டம் தேடிப்புக்கு அளக்க வொண்கிலார் தெரிய அரிய தேவர்செல்வம் திகழும் குடமூக்கில் கரிய கண்டர் காலகாலர் காரோணத்தாரே. பொழிப்புரை: செல்வம் விளங்கும் குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர் கருநிறம் பொருந்திய திருமாலும் சிவந்த தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும் ஒருவரோடு ஒருவர் மாறுபடப் பேசியவராய் அரிய உலகங்கள் அனைத்தும் தேடிச் சென்றும் அடி முடிகளை அளக்க ஒண்ணாதவராய் உயர்ந்து நின்ற பெரியவர். முனைப்புடையவரால் காணுதற்கு அரியவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். கால காலர். குறிப்புரை: அயனும் மாலும் அறியவொண்ணாத காலகாலர் குடமூக்கின் காரோணத்தார் என்கின்றது. கழறி - ஒருவருக்கொருவர் இடித்துப்பேசி. #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
🙏ஆன்மீகம் - ShareChat
மகிழ்ச்சி தரும் செல்வமே மாயேன் நெஞ்சில் குடி கொண்ட மங்களமே வாயோனுக்கு ஆதவனுக்கும் அமரர்களூக்கும் அருளிய கருணா சாகரமே இந்த நாயேனுக்கு அருளாமல் இருப்பாயோ என் அன்பு தெய்வமே செல்லமே தாயே தயாபரியே நின் கருணை குணமும் கமல கரங்களூம் மரகத கழல்களூம் போற்றி போற்றி என் அம்மையே ஆவுடை ஆச்சியே ஆதி சக்தியே மாகாளியே {S. ஜெயவீரபத்திரன்} #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏ஆன்மீகம்
🙏🏾சனி பகவான் - OFUHUNUHUFURUUBUFUHUUفUED OFUHUNUHUFURUUBUFUHUUفUED - ShareChat
ஏற்றத்தை வேண்டும் எளியோர்கள் போற்றுதலை கேளாய் மாற்றத்தை அருளூம் திருமகள் மங்களம் அருளூம் குலமகள் என மறை உரைத்த கூற்றின்படி மாநிலம் தொழும் மங்களமே திங்களை சூடிய செல்வமே என் அம்மை ஆச்சியே நின் கருணையும் பெருமையும் போற்றி போற்றி ( S.ஜெயவீரபத்திரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
🙏🏼ஓம் நமசிவாய - OFUHUNUHUFURUUBUFUHUUفUED OFUHUNUHUFURUUBUFUHUUفUED - ShareChat
கமல திருவடிகளை வணங்கி காதலுடன் நாளூம் கை ஏந்தி பிறை சூடிய செல்வமே இவ் பிள்ளைக்கு அருளாமல் இருக்கிறாயே என நாளூம் வருந்தி உறைவிடம் நீ உற்றவளூம் நீ என்று உரைத்தாலும் மௌனமாக இருக்கிறாயே அன்பே அருள் ஆவுடையே என் அம்மையே ஆச்சியே (S.ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய
🙏🏾சனி பகவான் - 09 09 - ShareChat
பரம தயாபரி பட்டிஸ்வர தேவி அம்மை ஆச்சி அன்பு செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 73 வது திருத்தலம் திருப்பட்டீச்சரம் அருள்மிகு பல்வளைநாயகி உடனுறை பட்டீச்சுரநாதர் மரம்: வன்னி: ஞான தீர்த்தம் பாடல் எண் : 5 பண் : சாதாரி மருவ முழவு அதிர மழபாடி மலிமத்த விழ வார்க்கவ அரையார் பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேய படர் புன்சடையினான் வெருவ மதயானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே. #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
பொழிப்புரை: கரைகளோடு கூடிய காவிரியாற்று நீர் சூழ்ந்த தண்மையான குடந்தை மாநகரில் அமைந்த காரோணத்து இறைவர் மலை போன்ற திரண்ட தோள்களை உடைய மதம் மிக்க வாட்போரில் வல்ல இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க, அவ்வளவில் தம் மணம் கமழும் திருவடி நுனிவிரலால் அம்மலையில் சேர்த்து ஊன்றி, அவ்விராவணன் தலை பத்தும் நெரித்துப் புகழ்மிக்க சாமகானத்தைப் பாடக் கேட்டு, அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தவர் ஆவார். குறிப்புரை: இராவணன் கயிலையை எடுக்க, பெருவிரலை ஊன்றி நெரித்த சிரங்கள் பத்திலிருந்தும், சாமகானங்கேட்டு அருள்செய்தவர் இவர் என்கின்றது. சீபாதந்தாங்குவார் இறைவனை இருகையில் அன்போடு கூப்பிடுகிறார்கள்; இவன் மதத்தால் இருக்கிறான்; ஆதலால் அடக்குண்டான் என்பார். மதவாள் அரக்கன் என்று உரைத்தார். விரை - மணம். உரையார்கீதம் - புகழ் நிறைந்த சாமகீதம். #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய
🙏🏾சனி பகவான் - ShareChat
ஆநிரை நாயகியே அழகு திருமங்கையே என் அம்மை ஆச்சியே வான்இறையை வள்ளலை ஒருபாகம் சூடிக் கொண்ட சுந்தரியே தேனினும் இனிய தமிழால் நின் திருவடி போற்றுகிறேன் சேயன் நாளூம் மானின் விழி கொண்ட மங்களமே இந்த சேயன் தேவைகளை தீர்த்து அருள்வாயே அன்பே ஆதி சக்தியே என் அம்மையே ஆச்சியே { S.ஜெயவீரபத்திரன் } #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - Cுபப டoeபoopoooooede ತ೦೦ರಾಉಂಯಾಯಾಂಂಲ್ 3 0 Cுபப டoeபoopoooooede ತ೦೦ರಾಉಂಯಾಯಾಂಂಲ್ 3 0 - ShareChat
பதினொன்றாம் திருமுறை கபிலதேவ நாயனார் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை பாடல் எண் : 18 வருகோள் தரு பெரும் தீமையும் காலன் தமர் அவர்கள் அரு கு ஒட் டு அரு அவர் ஆண்மையும் காய்பவன் கூர்ந்த அன்பு தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத்து அறியணையும் ஒருகோட்டு இருசெவி முக்கண்செம் மேனிய ஒண்களிறே . #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏
🙏🏾சனி பகவான் - ShareChat
அகண்டானந்த ஜனகே அகால பலதாயினி ஆயுர் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் இஷ்ட ஸித்திம் தேஹிமே ஸதா நிர்மலே நிஷ்கலே நிர்குணே நிஷ்பத்ரவே ஆயுர் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் இஷ்ட ஸித்திம் தேஹிமே ஸதா #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
🙏🏾சனி பகவான் - ShareChat
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 72 வது  திருத்தலம் திருக்குடந்தைக்காரோணம் அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர் மரம் வில்வம் மகாமகததீர்த்தம் பாடல் எண் : 7 பண் : தக்கேசி ஊனார் தலைகை ஏந்தி உலகம் பலிதேர்ந்து உழல் வாழ்க்கை மானார் தோலார் புலியின் உடையார் கரியின் உரிபோர்வை தேனார் மொழியார் திளைத்து ஆடி திகழும் குடமூக்கில் கானார் நட்ட உடையார் செல்வக் காரோணத்தாரே பொழிப்புரை: விளங்கும் குடமூக்கில் உள்ள செல்வவளம் மிக்க காரோணத்து இறைவர், ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்று உழலும் வாழ்க்கையர், மான் தோலைப் பூணநூலில் அணிந்தவர். தேனார் மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து சுடுகாட்டில் நடனம் புரிபவர். குறிப்புரை: கபாலம் ஏந்திப் பலி ஏற்று உழலும் இறைவன் காரோ ணத்தார் என்கின்றது. மானார் தோலார் - மான்தோலை உடையவர். கரியின் உரிபோர்வை - யானைத்தோலால் ஆகிய போர்வையை உடையவர். திளைத்து - கூடி. தேனார் மொழியாள்என்பது இத்தலத்து அம்மையின் திருநாமம். #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
🙏கோவில் - ShareChat