Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, நான் பாடிக்கீர்த்தனம் பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.
சங்கீதம் 108:1
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
சங்கீதம் 108:2
கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன், ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 108:3
உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
சங்கீதம் 108:4
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும், உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
சங்கீதம் 108:5
உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.
சங்கீதம் 108:6
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன், சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்து கொள்ளுவேன்.
சங்கீதம் 108:7
கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.
சங்கீதம் 108:8
மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன், பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
சங்கீதம் 108:9
அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
சங்கீதம் 108:10
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
சங்கீதம் 108:11
இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும், மனுஷனுடைய உதவி விருதா.
சங்கீதம் 108:12
தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம், அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
சங்கீதம் 108:13
Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=108
Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 112:1
அவன் சந்ததிபூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
சங்கீதம் 112:2
ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும், அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
சங்கீதம் 112:3
செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும், அவன் இரக்கமும்மனஉருக்கமும்நீதியுமுள்ளவன்.
சங்கீதம் 112:4
இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 112:5
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
சங்கீதம் 112:6
துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான், அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
சங்கீதம் 112:7
அவன் இருதயம் உறுதியாயிருக்கும், அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
சங்கீதம் 112:8
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
சங்கீதம் 112:9
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக்கரைந்துபோவான், துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
சங்கீதம் 112:10
Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=112
Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
கர்த்தரைத் துதியுங்கள், நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
சங்கீதம் 147:1
கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார், துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார்.
சங்கீதம் 147:2
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
சங்கீதம் 147:3
அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
சங்கீதம் 147:4
நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார், அவருடைய அறிவு அளவில்லாதது.
சங்கீதம் 147:5
கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
சங்கீதம் 147:6
கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள், நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.
சங்கீதம் 147:7
அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
சங்கீதம் 147:8
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
சங்கீதம் 147:9
அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார், வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
சங்கீதம் 147:10
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
சங்கீதம் 147:11
எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி, சீயோனே, உன் தேவனைத் துதி.
சங்கீதம் 147:12
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
சங்கீதம் 147:13
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
சங்கீதம் 147:14
அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார், அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
சங்கீதம் 147:15
பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார், சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
சங்கீதம் 147:16
அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
சங்கீதம் 147:17
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார், தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
சங்கீதம் 147:18
யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
சங்கீதம் 147:19
அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை, அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.
சங்கீதம் 147:20
Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=147
Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள், கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
சங்கீதம் 113:1
இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடையநாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
சங்கீதம் 113:2
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
சங்கீதம் 113:3
கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர், அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
சங்கீதம் 113:4
உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
சங்கீதம் 113:5
அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
சங்கீதம் 113:6
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
சங்கீதம் 113:7
அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
சங்கீதம் 113:8
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
சங்கீதம் 113:9
Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=113
Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
சங்கீதம் 66:1
அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
சங்கீதம் 66:2
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர், உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.
சங்கீதம் 66:3
பூமியின்மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள், அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.)
சங்கீதம் 66:4
தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
சங்கீதம் 66:5
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார், ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள், அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
சங்கீதம் 66:6
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார், அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது, துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.)
சங்கீதம் 66:7
ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.
சங்கீதம் 66:8
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
சங்கீதம் 66:9
தேவனே, எங்களைச் சோதித்தீர், வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
சங்கீதம் 66:10
எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
சங்கீதம் 66:11
மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர், தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம், செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
சங்கீதம் 66:12
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்.
சங்கீதம் 66:13
என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
சங்கீதம் 66:14
ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன், காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.)
சங்கீதம் 66:15
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள், அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
சங்கீதம் 66:16
அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
சங்கீதம் 66:17
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
சங்கீதம் 66:18
மெய்யாய்த் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 66:19
என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
சங்கீதம் 66:20
Shared from Tamil Bible 8.9
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com
Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=66








