Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
அடேய்....இந்தியாவிலேயே முதல்வர் ஆவதற்கும், அமைச்சர் ஆவதற்கும் முழு தகுதி வாய்ந்த தலைவர்களில் முதல் இடத்தில் இருப்பது எங்கள் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தான். எந்த சனாதனத்தை எதிர்த்து பேசியதற்காக உதயநிதியை விமர்சிக்கிறாயோ, அந்த சனாதனம் என்ன கூறுகிறது என்பது உனக்கு தெரியாதா...? (மனுஸ்மிருதி - அத்தியாயம் 5, சுலோகம் 147, 148, 149) 'பெண்களுக்கு சொத்துரிமை வழங்க கூடாது, கல்வி வழங்க கூடாது, இந்த இரண்டிற்கும் பெண்கள் ஆண்களையே நம்பி வாழ வேண்டும். ஆண்களில் சூத்திரனுக்கு கல்வி வழங்க கூடாது, சூத்திரனுக்கு சொத்துரிமை வழங்க கூடாது' என்கிறது நீ சொல்லும் சனாதனம். சூத்திரன் என்பவர்கள் யார்? இந்துக்களில் 95% பேர். பெண்கள் என்பவர் யார்? இந்துக்களில் 50% பேர். ஆக, இந்துக்களில் 95% மக்களை பிறப்பால் இழிவுபடுத்தி, தாழ்வுபடுத்தி, உரிமைகளை பறித்து ஆதிக்கம் செலுத்தும் சனாதனத்தை நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்..? உங்கள் சனாதனத்திற்கு எதிராக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் சொத்துரிமை கிடைக்க காரணமாக இருந்தவர் எங்கள் கலைஞர். அதே போல், உங்கள் சனாதனத்திற்கு எதிராக பெண்களுக்கு கல்வி வழங்குவதை தான் முக்கியப் பணியாக கொண்டு எங்கள் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. அப்போ, உங்களுக்கு எங்கள் முதல்வர் மீதும், துணை முதல்வர் மீதும் வன்மம் இருக்க தானே செய்யும்...? பியூஸ் கோயல் அவர்களே....நீங்கள் அனைவரும் உண்மையில் சனாதனத்தை பின்பற்றுகிறீர்கள் என்றால்....'பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது, பெண்களுக்கு கல்வி கிடையாது' என்கிற ஒரு சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர உங்கள் பிரதமருக்கு தெம்பு, திராணி, தைரியம் இருக்கிறதா...? சட்டம் கூட வேண்டாம்....ஒரு பொது மேடையில் உங்கள் சனாதனம் கூறும் 'பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது, பெண்களுக்கு கல்வி கிடையாது' என்கிற கொள்கைகளை பேச உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா...? இவ்வாறு உங்களால் பேச முடியவில்லை எனில், நீங்கள் ஒரு போலி சனாதனவாதி. நீங்கள் அனைவருமே போலிகளாக இருந்துக் கொண்டு சமூக விரோத கொள்கைகளை கொண்ட சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதியை எப்படி விமர்சிக்க முடியும்..? Prakasam P Palani #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 22 /Jan/26 தின மலர் E 060[1 தகுதியில்லை உதயநிதி அமைச்சராக தொடரத் தகுதியில்லாதவர். சனாதனம் குறித்து வெறுக்கத்தக்க முறையில் பேசிய நீக்கம் செய்ய வேண்டும் அவரை உனே பதவி பியூஸ் கோயல் மத்திய அமைச்சர் 22 /Jan/26 தின மலர் E 060[1 தகுதியில்லை உதயநிதி அமைச்சராக தொடரத் தகுதியில்லாதவர். சனாதனம் குறித்து வெறுக்கத்தக்க முறையில் பேசிய நீக்கம் செய்ய வேண்டும் அவரை உனே பதவி பியூஸ் கோயல் மத்திய அமைச்சர் - ShareChat
நாட்டின் முதல் குடிமகனாகவே தேர்ந்தெடுக்கப் பட்டாலும் அவர் பல கோயில்களில் செல்ல அனுமதி இல்லாமல் இருப்பதற்கு அவரது பிறப்பு காரணமாக சுட்டப்படுகிறது. அதே வேளையில் பல குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டாலும் நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்டாலும்,அவரது பிறப்பு காரணமாக மரியாதை செய்யப் படுகிறார். இந்தக் கொடுமை வேறெந்த சமூகத்திலும் இல்லை. ஜனாதிபதியாகவே இருந்தாலும்,பிறப்பால் அவர் சண்டாளனாக இறுதி வரை அடையாளப்படுத்தப் படுவதும், நீதி மன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டவர்,பிறப்பால் உயர்ந்தவர் என மதிக்கப்படுவதும் சமூக சீரழிவின் அறிகுறி! படத்தில்:பிரபல ஹிந்து மடாதிபதி ஸ்ரீ குருஜி என்றழைக்கப்படும் பிரகாஷானந்தா சரஸ்வதி #சனாதனலீக்ஸ் Dinakaran Chellaih #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ஜனாதிபதியாகவே இருந்தாலும் பிறப்பால் அவர் இறுதி வரை ర600TL_IT6TT6UTITర அடையாளப்படுத்தப் படுவதும், நீதி மன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டவர் பிறப்பால் யர்ந்தவர் என மதிக்கப்படுவதும் உ சமூக சீரழிவின் அறிகுறி! ஜனாதிபதியாகவே இருந்தாலும் பிறப்பால் அவர் இறுதி வரை ర600TL_IT6TT6UTITర அடையாளப்படுத்தப் படுவதும், நீதி மன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டவர் பிறப்பால் யர்ந்தவர் என மதிக்கப்படுவதும் உ சமூக சீரழிவின் அறிகுறி! - ShareChat
உலகத்திலேயே அதிக நஞ்சுள்ளதாக எதைக் கருதுகிறீர்கள்? பாக்ஸ் ஜெல்லி ஃபிஸ் என்கிறது, ஏ ஐ.! சில விஞ்ஞானிகளோ, ‘’கண்ணாடி வீரியன் பாம்பு’’ என்கிறார்கள்! என்னைக் கேட்டால், ''தினமலருக்கு மிஞ்சி விஷத்தை கக்க, இந்த உலகில் இது வரை எந்த ஜந்துவும் பிறக்கவில்லை, பிறக்கவும் முடியாது…'' என்பேன். இதை ஏதோ, வெறுப்பில் சொல்லவில்லை. ஆழ்ந்த மனவருத்தத்தில் சொல்கிறேன். இன்றைய தலைப்புச் செய்தியே நாலு வார்த்தை தான்; 'புருடா!' அதற்கு கீழே சட்டசபையில் தனக்கு படிக்க கொடுத்த அறிக்கையை புருடா எனக் கூறும் விதமாக 13 குற்றச்சாட்டுகளை கவர்னர் ரவி வரிசைப்படுத்தி உள்ளார்…எனச் செல்கிறது செய்தி. இது செய்தியல்ல, தினமலரின் அபிப்ராயம். கவர்னர் சொன்னதை போடுவது தான் செய்தியாகும். தலைப்பே திமுக அரசு மீதான கடும் தாக்குதலாக உள்ளது. சட்டசபை நிகழ்வுகள் குறித்த கடும் விமர்சனங்கள் திமுக அரசு மீது தினமலருக்கு இருப்பதே பிழையல்ல. அதை தனிப்பட்ட கட்டுரையாகவோ, ஏன் தலையங்கமாகவே கூட அவர்கள் எழுதுவது தான் கண்ணியமான அணுகுமுறையாகும். ஆனால், இவர்கள் தமிழக கட்சிகள் குறித்து செய்தி போடும் விதமே காசிப் பாணியில் தான் உள்ளது! மற்றுமொரு உதாரணம்; 'தே.ஜ. கூட்டணிக்குள் தினகரன்? அச்சத்தில் அதிமுக மாஜிக்கள்' என்ற தலைப்பு; இதிலும் 'இன்னார் சொன்னத் தகவல்' என்றில்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது என பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டு எழுதப்பட்டவை, முழுக்கவே ஹேஸ்யமாக உள்ளது; இதோ அவை; பாஜகவுக்கு நேரடியாக அதிமுக சீட் ஒதுக்காது. பாஜகவுக்கு வழங்கப்படும் சீட்டுகள் உள் ஒதுக்கீடாக அம்முகவுக்கு ஒதுக்கப்படும். இதனால், தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை அதிமுக என்றாலும் கூட்டணி கட்சிகளின் பிடி பாஜகவிற்குள் சென்றுவிடும். அதே போல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியை வீழ்த்த வேண்டும் என்பது தான் தினகரனின் லட்சியம். எனவே அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்வது சந்தேகம். அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து உள்ளடி வேலைகளில் ஈடுபடுவார். தினகரன் வெற்றி பெற்று பலமானால் அதிமுகவிற்குள் மீண்டும் குழ்ப்பங்களை ஏற்படுத்துவார். இதனால் அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பழனிச்சாமி பிரச்சாரம் செய்யமாட்டார். இப்படி ஒருவரை ஒருவர் வீழ்த்த உள்ளடி வேலை பார்த்தால் கூட்டணிக்குள் குழப்பங்கள் ஏற்படும். எனவே அமமுகவுடன் கூட்டணி அமைந்தாலும் தேர்தல் வெற்றிக்கு உதவாது. 'அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் தினமலரின் கெடுநோக்கம் இதில் துல்லியமாக வெளிப்படுகிறது. மற்றோரு செய்தி, 'மத்திய அமைச்சர் பதவி கேட்டு தேமுதிக நிபந்தனை. பியூஸ் போன பல்பு ஆனார்' பியூஸ் கோயல்! இந்தச் செய்தியும் முழுக்க, முழுக்க ஹேஸ்யங்களாக உள்ளது! ஒரு பிரபல பத்திரிகை இப்படி செய்தி போடுவதற்கு முன்பு பிரேமலதாவிடம் நீங்கள் கேட்டதாக சொல்லப்படுவது உண்மையா? என குறைந்தப்டசம் உறுதிபடுத்திவிட்டு, என்ன வேண்டுமானலும் அந்தம்மாவை விமர்சனம் செய்துவிட்டு போகலாமே. இது எப்படி செய்தியாகும்.? இப்படி இந்த பத்திரிக்கையில் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான செய்திகள் என்பதெல்லாமே அவர்களின் உள் நோக்கத்தை வெளிப்படுத்தும் போலிச் செய்திகளாகவே உள்ளன. ஆனால், பாஜக குறித்து இவர்கள் போடும் செய்திகளை மாத்திரம் மிகவும் கவனத்தோடு கண்ணியமாக போடுகிறார்கள். தினமலர் எனும் தீய சக்தியை அம்பலப்படுத்த வேண்டிய தமிழர் மற்றும் திராவிட இயக்க தலைவர்கள் எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் எனப் புரியவில்லை. சமீபத்தில் திருமுருகன் காந்தி மே-17 இயக்கம் சார்பில் தினமலம் என்ற நூலைக் கொண்டு வந்துள்ளார். ஆனால், இது போதாது! இவர்களின் விஷமத்தனமான செய்திகளுக்கு ஒரு முடிவு ஏற்படாத வரை தமிழ்ச் சமுதாயத்திற்கு விடிவே இல்லை. சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - JUSIIIT புதிய தலைமுறை முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை 66 இந்திய துணைக்கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடு தான் ஹோமோசேப்பியன்ஸ் னத்தின் கிடைத்த இடம் தமிழ்நாடு மரபு வாழ்ந்து 60,000 ஆண்டுகளாக ங்கு நாம் கொண்டிருக்கிறோம் ஆனால் இதனை னறு முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை. இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 21.01.2026 Puthiyathalaimurai com JUSIIIT புதிய தலைமுறை முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை 66 இந்திய துணைக்கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடு தான் ஹோமோசேப்பியன்ஸ் னத்தின் கிடைத்த இடம் தமிழ்நாடு மரபு வாழ்ந்து 60,000 ஆண்டுகளாக ங்கு நாம் கொண்டிருக்கிறோம் ஆனால் இதனை னறு முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை. இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 21.01.2026 Puthiyathalaimurai com - ShareChat
உத்திரப் பிரதேசத்தில் இருந்து மாட்டுக்கறி வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதை சுட்டிக் காட்டிய சங்கராச்சாரியர் மீது மோடிக்கும், யோகி ஆதித்யநாத்திற்கும், அவர்மீது, சொல்லொண்ணா கோபம்! காவல் துறையை வைத்து மிரட்டி அவரை கங்கையில் ஸ்நானம் செய்ய விடாமல் தடுத்து, அவரது சிஷ்யர்களை அடித்து நொறுக்கியது யோகியின் காவல் துறை! இது போதாதென்று, சங்கராச்சாரியாரின் தங்கியிருந்த குடிசையின் வாசலில் அவர் ஒரு சங்கராச்சாரியார் என்பதை நிரூபிக்க சான்றிதழை உடனே அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்று அரசின் ஆணை ஒட்டப்பட்டது! இதோ மூன்று சங்கராச்சரியர்களும், அந்த சான்றிதழுடன் நிற்கும் காட்சி! மோடிக்கு இந்து மதமோ, ராமரோ முக்கியமில்லை! இந்து மத வெறியை தூண்டி விட்டு, செல்வம் சேர்ப்பதே குஜராத்திகளின் இலக்கு! மோடி + தாடி+ அதாடி +அம்பாதி! ஷாகுல் ஹமீத். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
நாம் பிராமண இந்து மதத்தை ஏன் வெறுக்க வேண்டும் என்பதற்கு50 காரணங்கள் இதோ : *"******* 1. பிராமண இந்து மதம் தான் என்னை கீழ் ஜாதி என்றது. 2. பிராமண இந்து மதம் தான் என்னை சூத்திரன் என்றது. 3. பிராமண இந்து மதம் தான் என்னை வேசிமகன் என்றது. 4. பிராமண இந்து மதம் தான் என் தாயை வேசி என்றது. 5. பிராமண இந்து மதம் தான் என்னைப் பஞ்சமன் என்றது. 6. பிராமண இந்து மதம் தான் என்னை தீண்டத்தகாதவன் என்றது. 7. பிராமண இந்து மதம் தான் என்னை தொட்டால் தீட்டு என்றது. 8. பிராமண இந்து மதம் தான் என்னை பார்த்தால் பாவம் என்றது. 9. பிராமண இந்து மதம் தான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது. 10. பிராமண இந்து மதம் தான் என்னை காலில் செருப்பு போடாதே என்றது. 11. பிராமண இந்து மதம் தான் என்னை தோளில் துண்டு போடாதே என்றது. 12. பிராமண இந்து மதம் தான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது 13. பிராமண இந்து மதம் தான் என்னை வீதியிலே நடக்காதே என்றது. 14. பிராமண இந்து மதம் தான் என்னை கோயிலுக்குள் நுழை யாதே என்றது. 15. பிராமண இந்து மதம் தான் என்னை கடவுளை தொழாதே என்றது. 16. பிராமண இந்து மதம் தான் என்னை தெய்வ சிலைகளை தொடாதே என்றது. 17. பிராமண இந்து மதம் தான் நான் சாமி சிலைகளை தொட் டால் சாமி செத்துப்போகும் என்றது. 18. பிராமண இந்து மதம் தான் என்னை நல்ல சோறு தின்னா தே என்றது. 19. பிராமண இந்து மதம் தான் என்னை நல்ல துணி உடுத்தா தே என்றது. 20. பிராமண இந்து மதம் தான் என்னை நல்ல வீடு கட்டிக்கூ டாது என்றது. 21. பிராமண இந்து மதம் தான் என்னை ஓலை குடிசையில் தான் வாழ வேண்டும் என்றது. 22. பிராமண இந்து மதம் தான் என் பாட்டனை சொத்து வைத் துக் கொள்ளாதே என்றது. 23. பிராமண இந்து மதம் தான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது. 24. பிராமண இந்து மதம் தான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்த தற்கு வரி போட்டது. 25. பிராமண இந்து மதம் தான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது. 26. பிராமண இந்து மதம் தான் என் பாட்டன் முண் டாசு அணிந்ததற்கு வரி போட்டது. 27. பிராமண இந்து மதம் தான் என் பாட்டனை முடி வளர்க் காதே என்றது. 28. பிராமண இந்து மதம் தான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது. 29. பிராமண இந்து மதம் தான் என் பாட்டியை நகை அணியா தே என்றது 30. பிராமண இந்து மதம் தான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது. 31. பிராமண இந்து மதம் தான் என்னை கிணற்றிலே நீரெடு க்காதே என்றது. 32. பிராமண இந்து மதம் தான் என்னை குளத்திலே குளிக் காதே என்றது. 33. பிராமண இந்து மதம் தான் என்னை நான் தண்ணீர் அருந் தினால் தீட்டாகிவிடும் என்றது. 34. பிராமண இந்து மதம் தான் அண்ணல் அம்பே த்கர் நீர் அருந்திய தால் குளம் தீட்டாகி விட்டது என்று அம்பேத்கரை அடி த்து உதைத்து ஊர் முன் குற்றவாளி ஆக்கியது. 35. பிராமண இந்து மதம் தான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது. 36. பிராமண இந்து மதம் தான் முப்பாட்டன் காத்தவ ராயனை கழுவிலே ஏற்றியது. 37. பிராமண இந்து மதம் தான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறு கால் மாறு கை வாங்கியது. 38. பிராமண இந்து மதம் தான் என் பாட்டன் இம்மா னுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன் றது. 39. பிராமண இந்து மதம் தான் என்னைப் படிக்காதே என்றது. 40. பிராமண இந்து மதம் தான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது. 41. பிராமண இந்து மதம் தான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது. 42. பிராமண இந்து மதம் தான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந் தால் நெஞ்சைப் பிள என்றது. 43. பிராமண இந்து மதம் தான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது. 44. பிராமண இந்து மதம் தான் சூத்திர ஏகலைவ னின் கட்டை விரலை வாங்கியது. 45. பிராமண இந்து மதம் தான் என்னை உத்தியோ கத்துக்குப் போகாதே என்றது. 46. பிராமண இந்து மதம் தான் என்னை தகுதி திறமை இல்லை என்றது. 47. பிராமண இந்து மதம் தான் எனக்கு ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது. 48. பிராமண இந்து மதம் தான் என்னை ஒட்டலில் பெஞ்சில் அமராதே என்றது. 49. பிராமண இந்து மதம் தான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது. 50. பிராமண இந்து மதம் தான் என்னை சாக்கடை அள்ளு என்றது. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ஆரம்பிக்கும் போது சபை தேசியகீதம் பாடாம தமிழ்த்தாய் வாழ்த்து பாடுறாங்கனு தானே கோவிச்சுட்டு போனாப்ல. 00 ) கர V74 0 0,99 மபுமீபோது சபை தேசியகீதம் பாடுனாங்களே! அப்ப ஏன் உள்ள வரல? தேசப்பற்று கொஞ்சம் கூட இல்ல! ஆரம்பிக்கும் போது சபை தேசியகீதம் பாடாம தமிழ்த்தாய் வாழ்த்து பாடுறாங்கனு தானே கோவிச்சுட்டு போனாப்ல. 00 ) கர V74 0 0,99 மபுமீபோது சபை தேசியகீதம் பாடுனாங்களே! அப்ப ஏன் உள்ள வரல? தேசப்பற்று கொஞ்சம் கூட இல்ல! - ShareChat
ஒரு வகையில் பார்த்தால் சலிப்பாக இருக்கிறது! எத்தனை முறை தான் இதே போன்ற காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துக் கொண்டே இருப்பது? இவ்வாறு நடக்கும் போதெல்லாம் நானும், என்னைப் போன்றவர்களும் பொங்கி எழுந்து திமுக அரசு மீதுள்ள கசப்புணர்வுகளையெல்லாம் கடந்து தமிழக அரசின் பக்கம் நின்று ஆளுநரை வருத்தெடுத்துள்ளோம். ஆளுநர் சொல்வதில் பல உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை என்னைப் போன்ற பத்திரிகையாளர்களும், இங்குள்ள எதிர்கட்சித் தலைவரும் தான் பேச முடியுமே அன்றி ஆளுனர் பேசுவது அருவெறுப்பானது. இந்தக் கருத்தில் தான் நான் இப்போதும் நிற்கிறேன். ஆனால், தொடர்ந்து தமிழக அரசுக்கும், ஆளுநருக்குமான மோதலை கூர்மையாக அவதானித்து வருகையில் மேற்படி ஆளுநர் சட்டசபையில் நடந்து கொள்ளும் போதுதெல்லாம் - அதிகார அத்துமீறல் என்று தெரிந்தே அவர் செய்வதும், இவர்கள் ஆவரை தொடர்ந்து செய்ய அனுமதிப்பதும் – திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றி அவர்களுக்கு செல்வாக்கை பல மடங்கு உயர்த்தி தருகிறது என்பதை உணர முடிகிறது. ‘’அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை தயவு செய்து இந்த ஆளுநரை மாற்றிவிடாதீர்கள்,. அவர் எங்களுக்கு நல்லது தான் செய்து கொண்டிருக்கிறார். இதை நான் மத்திய அரசுக்கு வேண்டுகோளாகவே வைக்கிறேன்’’ என்றார். ரொம்ப சிம்பிளாக நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தெலுங்கானவில் தமிழிசை தராதராமின்றி செயல்படுவதைக் கண்டு கொதித் தெழுந்த அன்றைய முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள், ‘’ஆளுநரை அழைக்காமலே நான் சட்டசபையை நான் நடத்துகிறேன்’’ என்று நடத்திக் காண்பித்தார். அதனால் ஒன்றும் அவர் ஆட்சிக்கு கேடு விழைந்திடவில்லை. மாறாக, தெலுங்கானாவின் தன்மானத்தை அவர் உரிய நேரத்தில் வெளிப்படுத்தினார் என்றே புரிந்து கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி, தமிழிசை எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கு மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரியும் போய் நின்று வரவேற்கும் மரபுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அத்துமீறலில் திளைத்த தமிழிசை தன்னை அனாதையாக உணர்ந்து புலம்பியதால் அவருக்கு பாண்டிச்சேரிக்கும் பொறுப்பு தரப்பட்டது. அவர் பாண்டிச்சேரியிலேயே பம்மிக் கொண்டார். இங்கே என்ன நடந்து கொண்டுள்ளது? ஆளுநர் அடிக்கடி குண்டக்க,மண்டக்க பேசப் பேச ஆளும் தரப்பில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ‘’ஆளுனர் அளவுக்கு மீறி செலவு செய்கிறார் ‘’ என்று அம்பலப்படுத்திய பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அமைதிபடுத்தப்பட்டு, அதற்கு பிறகு அவர் செலவுக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக அள்ளிக் கொடுக்கப்பட்டது. நாளும், பொழுதும் ஆளுநர் மாளிகை திருவிழா கோலம் காண்கிறது. தன் முன்னே பாடுகின்ற, ஆடுகின்ற, சொற்பொழிவாற்றுகின்ற கலைஞர்களுக்கும், சொல்வாணர்களுக்கும் பரிசில்களை அள்ளி, அள்ளித் தருகிறார். தமிழகத்தின் அனைத்து பெரிய கோவிலக்ளுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் குடும்ப சகிதம் படை பரிவாரங்களோடு செல்கையில் அவ்வளவு கவனிப்பும், அரவணைப்பும் தரப்படுகிறது. சதா சர்காலமும் ஒரு அரசை தூற்றி வசைபாடும் ஆளுநருக்கு ஆலவட்டம் கட்டி முதல் மரியாதைகளை இந்த திமுக அரசு வாரி வழங்குவானேன்? ஜெயலலிதாவைப் போல மம்தாவைப் போல ஆளுனர் நடமாட முடியாதபடிக்கு நெருக்கடிகளையும், பய உணர்வையும் ஏற்படுத்த வேண்டியதில்லை. குறைந்தபட்சம் அவரிடம் இருந்து விலகி நிற்கக் கூட முடியவில்லையே. கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஆளுநரை எதிர்த்து போராட்டம் செய்து கைதானாலும் திமுக போராடாது. முதல்வரும், துணை முதல்வரும் ஓடோடிச் சென்று அவரது தேனீர் விருந்தில் கலந்து கொண்டு தேனொழுகப் பேசி மகிழ்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். ஆளுனர் விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு ஆதரிக்கதக்கதல்ல, ஆரோக்கியமானதல்ல. ஆனால், இன்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதில் உள்ள ஒரு திடுக்கிடும் உண்மையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளுனர் வெளிநடப்பு செய்து வெளியேறிய போது தானும் அடுத்ததாக வெளியில் வந்த எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி, ஆளுநர் வெளியேறிச் சென்றது பற்றி என்ன செய்தி சொல்லவேண்டுமோ, அதனை முன்கூட்டியே தயாரித்து வந்து, சட்டப்பேரவையில் தீர்மானமாக கொண்டு வருகிறார் முதல்வர். ஆளுநர் இப்படி நடந்துகொள்வார் என்பது முதல்வருக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்..? என்ற கேள்வியை முன்வைத்தார். இந்தக் கேள்வி மிகவும் அர்த்தம் செறிந்தது. கூடவே அவர் மறைத்த இன்னொரு விவகாரம் ஆளுனர் வெளியேறிய அடுத்த சில மணித்துளிகளிலேயே சட்ட சபையில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்தும், ஆளுநர் வெளி நடப்பு செய்தற்கு நியாயம் கற்பித்தும் 12 பாயிண்டுகளை விரிவாகச் சொல்லி ஆளுநர் மாளிகை அறிக்கை தருகிறது. ஆளுநர் கிண்டி மாளிகையை சென்றடையும் முன்பே இந்த அறிக்கை வந்துவிட்டது. அதிலும் அந்தப் பதிவில், ‘' ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை'' என்பதும் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி சட்ட சபைக்கு வெளியில் வந்து நிற்பதற்குள்ளாக அவருக்கும் கிடைத்து விடுகிறது. ஆக, இதெல்லாம் சொல்லி வைத்து, கலந்து பேசி டிசைன் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. ஆளுநர் எத்தனை முறை அவமதித்தாலும் ''அவரை அழைக்கத் தவறக் கூடாது'' என்ற மேலிடத்தின் கட்டளையை நிறைவேற்றிக் கொண்டு, அதில் தனக்கான ஆதாயங்களை அள்ளிக் கொள்கிறார் ஸ்டாலின். அதே போல, ''ஆளுநர் என்ன செய்தாலும் அதற்கு ஆதரவாக ஆளும் கட்சியைத் திட்டிப் பேசுங்கள்'' என்ற மேலிடக் கட்டளையை பழனிசாமி நிறைவேற்றி தன் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். உண்மையில் இந்த இரு பெரும் தமிழக கட்சிகளின் தலைவர்களுமே பாஜகவின் அடிமைகளே எனப் புரிந்து கொண்டு மக்கள் தெளியாத வரை இந்தக் கூத்துகளுக்கு தீர்வில்லை. சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
யோக்கியன் வர்றான் கதவை இழுத்து சாத்து.! ஊழலில் கொடி கட்டு பறக்கும் பிஜேபி தான் தமிழகத்தை ஆள துடிக்கிறது. குரங்கு அப்பத்தை பிரித்த கதையாக, இங்கே அதிமுகவை தமிழக வெற்றி கழகத்தை பயன்படுத்த நினைக்கிறது பிஜேபி . எச்சரிக்கை #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
கேள்வி : "#தந்தை_பெரியாருக்கு கட்சி, பணம், தொண்டர்கள், பிரசாரர்கள் இருந்தும் ஏன் #தேர்தலில் நிற்கவில்லை....?? " ~~~~~~🤔🤔🤔🤔~~~~~~ , பதில் : " இது #ஜனநாயகம் அல்ல, பண நாயகம், #உயர்சாதி நாயகம் என்று பெரியார் நினைத்தார். தேர்தலை மிக #மோசமான விஷயமாக பெரியார் நினைத்தார். மக்களிடம் ஓட்டுகள் வாங்குவதற்காக மிக மிகக் #கேவலமான வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதை உணர்ந்தார். தான் நினைத்ததை #தைரியமாகச் சொல்ல முடியாது என்று உணர்ந்திருந்தார். தேர்தலில் இறங்கினால் மக்களுக்கு #விருப்பமானதைப் பேச வேண்டும்; அது நம்மால் #முடியாது என்று மறுத்தார். "இரண்டு முறை அவருக்கு சென்னை ராஜதானியின் #முதலமைச்சர் பதவி (அன்று அதற்கு #பிரதமர் என்று பெயர்!) தேடி வந்தபோதும், 'இது நமக்கு சரியா வராதுங்க’ என்று மறுத்துவிட்டார். ''நான் ஒரே நேரத்தில் #இருபதுக்கும் மேற்பட்ட பதவியில் இருந்துவிட்டேன். அது #சரிப்பட்டு வராது'' என்று சொன்னார். பெரியார் எழுதிய, '#நான்_யாரைத்தான்_எதிர்க்கவில்லை?’ என்ற கட்டுரையைத் தேடிப் படியுங்கள். அவர் #எதிர்த்த நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள், கொள்கைகள், நிறுவனங்களை அதில் சொல்லி இருப்பார். ''நான் ஒரு #அழிவு_வேலைக்காரன்'' என்பது அவரது கருத்து. அத்தனையும் #எதிர்க்கும் ஒருவரால், எப்படித் #தேர்தலில் நிற்க முடியும்? " ~~~~~🤔🤔✍️🎙️📚📖🎙️🤔🤔~~~~ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - கழகார் நதில்தூ்் கழகார் நதில்தூ்் - ShareChat
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாம் நாள் விசாரணையினை முடித்துவிட்டு தனி விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டார் விஜயண்ணா, இத்தோடு விசாரணை அவர்மேல் முடிந்துவிட்டது என சொல்லமுடியாது எப்போது அழைத்தாலும் அவர் செல்லவேண்டும் விவகாரம் கட்சியின் முக்கிய முன்னணி புள்ளிகள், விஜயணா தாண்டி இப்போது திமுகவுக்கு முரசொலி மாறன் போல விஜயண்ணாவுக்கு இருக்கும் அந்த ஜாண் ஆரோக்கியசாமி நோக்கி திரும்புகின்றது, இவர்தான் விஜயண்ணாவுக்கு சகுனி போன்ற சாயல் எல்லாமும் அவரே இனி விசாரணை எந்த நோக்கில் செல்லும் என்பதை கசியும் அல்லது கசியவிடபடும் செய்திகளில் இருந்தே அறியலாம் விவகாரம் விஜயண்ணா கட்சிக்கான நிதி ஏற்பாடு நோக்கி செல்கின்றது பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு, , எதிர்கால ஏற்பாடு என அது எங்கெல்லாமோ சுற்றுகின்றது, விவகாரம் விஜய்க்கு சாதகமாக இருப்பது போல் தெரியவில்லை, நடப்பதை இனி காலம் காட்டும் தமிழகத்தில் சினிமா நடிகர் கட்சி துவங்குவது ஒன்றும் புதித்தல்ல ஆனால் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அங்கு பிரபலமான நடிகர் கட்சி தேசிய கட்சிக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்பது ஒருமாதிரி அரசியல் எம்ஜிஆர் கட்சி துவக்கும் போது அல்ல அதற்கு முன்பே கவனமாக இருந்தவர், டெல்லியிடம் சிக்குமளவு அவர் எந்த வில்லங்கமும் செய்ததில்லை, மொழிப்போர் எனும் இந்தி எதிர்ப்பில் அவர் தார்சட்டி தூக்கியதாகவோ, திராவிட கொள்கை படி இந்துமத துவேஷம் பேசியதாகவோ இதர திராவிட குப்பைகளை தூக்கி சுமந்ததாகவோ காண முடியாது இதனால் கட்சியின் முக்கிய முகமாக இருந்தபோதே டெல்லியின் அபிமான பட்டியலில் இருந்தார்,அவர் சுடபட்டபோதும் டெல்லியின் சில நகர்வுகள் அவரை நோக்கி காவலாக வந்தன அது அவர் கட்சி தொடங்கும் போதும் இருந்தது அவர் டெல்லிக்கு எரிச்சல் தரும் எதையும் தனிகட்சியானபின்பும் செய்யவில்லை , மிக முக்கியமாக மிசா காலம் வந்தபோது அதை வரவேற்றார், அகில இந்தியாவிலே ஏன் உலகிலே மிசாவினை வரவேற்ற ஒரே தலைவர் அவர்தான் ஆயிரம் யானை பலம் கொண்ட எம்ஜிஆரின் அரசியலே இப்படித்தான் இருந்தது அதன் பின் நடிகர்கள் அரசியல் பெரிதாக சோபிக்கவில்லை, பாக்யராஜின் அரசியலோ , டி.ராஜேந்தரின் அரசியலோ இங்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை 1996ல் ரஜினி மேல் எதிர்பார்ப்பு வந்தது, அவர் லாகவமாக அரசியலில் சிக்காமல் ஆட்சிமாற்ற உதவி அதுவும் மூப்பனார் மூலம் உதவி என எதிலும் சிக்காமல் நழுவினார், காங்கிரஸ் பாஜக என இருவரையும் லாவகமாக கையாண்டு தப்பினார் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது டெல்லி காங்கிரஸின் குடுமி அய்யா கலைஞரிடம் இருந்ததால் விஜய்காந்தால் காங்கிரஸ் பக்கம் நகரமுடியவில்லை, அப்படி ஒரு பெரும் செக் வைத்துவிட்டு அவரின் மண்டபம் வரை இடித்து காட்டியது தமிழக திமுக அரசு, அதன்பின் விஜயகாந்தால் ஒருமுறை திமுக அரசை அகற்ற உதவ முடிந்தது அந்த முடிவும் ஜெயாவுக்கு சாதகமானதே தவிர விஜயகாந்த நிலமை அணில் போலவோ வானரம் போலவோ ஆயிற்று தனியாக அவரால் பெரிய அளவில் கட்சிநடத்தி சோபிக்க முடியவில்லை அதன் பின் எழாமலே போனார் ஒரு மாகாண கட்சி டெல்லியில் பிடி இல்லை என்றால் நிலைக்க முடியாது என்பதற்கு அவர் இரண்டாம் சாட்சி இப்படியான தமிழக்த்தில் விஜயண்ணாவின் வரவு ஆரம்பத்திலே காங்கிரசுக்கு ஆதரவு என்ற நிலைபாட்டில் இருந்தது ஆனால் இது இந்திரா காலம் அல்ல பாஜக காலம் அரசியல் என்பது ஆயிரம் கணக்குகளை கொண்டது, தமிழகத்தில் இழந்த பலத்தை விஜயினை கொண்டு மீட்க காங்கிரஸ் நினைத்தால் அதை பாஜக அனுமதிக்காது அது அவர்கள் நீண்டகால திட்டத்துக்கு நல்லதல்ல, திமுகவும் எளிதில் விடாது அவர்களின் கட்சிக்கும் அது நல்லதல்ல‌ இங்கு ஒருமாதிரி நெளிந்து வளைந்து வெளிவரவேண்டும் அந்த வித்தை விஜயண்ணாவுக்கு தெரியாது சிக்கி கொண்டார் எம்ஜிஆர் கட்சி துவங்கும்போது அவர் மேலும் அந்நிய செலாவணி வழக்கு மிரட்டல்கள் இருந்தன, வழக்கு பதிவாகவில்லையே தவிர அப்படியான காட்சிகள் இருந்ததை பல ஆவணங்களில் காணலாம் எம்ஜிஆரின் காலம் வேறு, அப்போதைய சூழல் வேறு எம்ஜிஆரின் பலம் வேறு என்றாலும் அவர் டெல்லிக்கு பணிந்தே சென்றார் இது வரலாறு இப்போது பாஜக அசுர பலத்தோடு இருக்க அவர்களை மீறி விஜய் வரமுடியுமா என்பது காலத்தின் கையில்தான் இருக்கின்றது என்றாலும் பல விஷயங்கள் டெல்லி கையிலும் இருக்கின்றன‌ இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் காங்கிரஸின் அமைதி, விஜயே அதில்தான் குழம்பி போயுள்ளார் என்பதுதான் விஷயம் ஆம், கரூர் சம்பவம் நடந்தபோது விஜய்க்கு முதல் ஆறுதல் ராகுலிடம் இருந்து வந்தது, விஜயும் காங்கிரசும் நெருங்கி வந்ததையும் பொங்கலுக்கு பின் காங்கிரஸ் மேலிடம் விஜயினை சந்திக்க இருந்ததையும் எல்லோரும் அறிவார்கள் இதை காட்டியே திமுகவிடம் காங்கிரசார் தைரியமாக மோத துவங்கினார்கள் இன்னும் அது ஓயவில்லை ஆனால் பொங்கல் நேரம் சரியாக சிபிஐ விசாரணைக்கு விஜய் அழைக்கபட காங்கிரஸ் தரப்பு கடும் அமைதிக்குள் சென்றது, காங்கிரஸின் மேலிடம் ஏதோ போபர்ஸ் வழக்கு, நேஷனல் ஹெரால்டு வழக்குபோல் இங்கே பெரிய மவுனம் காப்பது திமுகவுக்கே குழப்பம் அப்படியே விஜய்க்கும் குழப்பம் காங்கிரஸ் விஜயினை காட்டி திமுகவினை மிரட்டி பார்த்ததா அல்லது விஜயினை இப்போது கைவிடுகின்றதா என்பதே தெரியாமல் எல்லோரும் குழம்பியிருக்கும் நேரமிது டெல்லியில் விசாரணை முடிந்திருக்கலாம் ஆனால் விஜய் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் இவைதான் ஒன்று தைரியமாக காங்கிரசுடன் சேர்ந்து பாஜக கூட்டணி, திமுக கூட்டணியினை எதிர்க்க வேண்டும், அப்போது வரும் இருமுனை அழுத்தமும் அவர் தாங்க வேண்டும் அல்லது தனித்து நின்று கொண்டு சீமானை போல் எல்லோர்ம் மேலும் கல்லெறிய வேண்டும் அப்போதும் ஒரு கல் பாஜக மேல் விழுந்தால் நிலமை சிக்கலாகலாம் மூன்றாவது தேர்தலை புறக்க்கணித்துவிட்டு 2031ல் சந்திப்போம் உறவுகளே என சினிமாவுக்கு ஓடலாம் விஜய் உண்மையிலே சிக்கலான நேரத்தில் இருக்கின்றார், தன்னை உருவாக்கிய காங்கிரசா இப்போது தன்னை நோக்கி புன்னகைக்கும் பாஜகவா இல்லை திமுகவா இங்கு யார் எதிரி யார் நண்பன் என தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார் எது அடுத்த வழி ? எது பாதுகாப்பான் நகர்வு என்பதும் அவருக்கு தெரியவில்லை, எல்லாம் வேண்டாம் என இனி நடிக்க சென்றாலும் ஜனநாயகன் படம் படும் பாட்டிலே இனி படம் பற்றியும் யோசிக்க முடியாது அவர் மீண்டு வருவது கொஞ்சமல்ல நிறையவே சிரமம், இனி அவருக்கு எளிதில் தூக்கம் வராது, அப்படியே தூக்கம் வந்தாலும் அய்யா கலைஞர் மஞ்சள் சால்வை சூழ தன் மந்தகாச புன்னகையினை வீசியபடி "தம்பி , அரசியல் இப்போது புரிந்ததா?" என சொல்லி புன்னகைப்பார் அத்தோடு அலறி எழுவார் விஜயண்ணா எந்த பாஸ்டர், போதகர் ஏன் ஆனானபட்ட இயேசப்பா வந்தாலும் அந்த அய்யா கலைஞர் ஆவியினை விரட்ட முடியாது காரணம் அது அரசியல் ஆவி அதை விரட்டும் சக்தி யாருக்குமில்லை , அரசியல் இருக்குமிடமெல்லாம் புன்னகைத்தபடி அதுவும் இருக்கும் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
#👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat