கவர்ச்சி இல்லாமல் வேறென்ன?
***
“த.வெ.க கவர்ச்சியில் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றது என இரண்டு காரணங்கள் சொல்ல முடியுமா?
*
போராட்டம் செய்தீர்களா?
சிறை சென்றிருக்கிறீர்களா?
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறீர்களா?
மக்களையாவது உருப்படியாக சந்தித்தீர்களா?
உங்களது வேட்பாளர்கள் பெயராவது உங்களுக்கு தெரியுமா?”
***
- முதலமைச்சர் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி! #👨மோடி அரசாங்கம்
புதிய பாதையாம்! புதிய இயக்கமாம்…!
பிரமாதமாகப் பேசுகிறார் அண்ணாமலை…!
அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இத்தனை லட்சம் பேர் சேர்ந்தனர், அத்தனை லட்சமாக கூடியுள்ளது.. என புளகாங்கிதம் அடைகின்றனர்.
அரசியல் புரிதலற்ற சாதாரண சராசரி அப்பாவி மனிதர்களிடம் அண்ணாமலையின் பேச்சு மிக வலுவான ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
’’அடடா! ஊழல்வாதிகளிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற இதோ ஒரு ரட்சகர் கிடைத்துவிட்டார்’’ எனப் பலர் புளகாங்கிதம் அடைகின்றனர்…!
அண்ணாமலை பேசுவதை அனைத்து ஊடகங்களும் லைவ்வாக டெலிகாஸ்ட் பண்ணினார்கள். அவர் தற்போது பாஜக தலைவரல்ல. எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு தனி நபர் தான். ஆனால், அவருக்கு அனைத்து ஊடகங்களும் இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன..என்றால், இதன் பின்னணியில் நடந்திருக்கும் அதிகார லாபி அவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதே உண்மை.
அண்ணாமலை மக்கள் இயக்கம் கட்டுகிறாராம்!
“We The Leaders” இயக்கமாம்!
ஏபிஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ் பயிற்சி மையமாம்!
அவரை வளர்த்த ஆர்.எஸ்.எஸ்சிலும், பாஜகவிலும் அவரால் உதாரணம் காட்ட ஒருவரும் இல்லை என்பதால், நல்லகண்ணு, அப்துல்கலாம் ஆகியோரின் நற்பெயர்களை பயன்படுத்துகிறார். அக்மார்க் பிராடான அண்ணாமலை அந்த நல்லோர்களின் பெயரை உச்சரிக்கவும் தகுதியற்றவர். இன்றைக்கு அவர்கள் உயிரோடு இல்லாததால் அவர்கள் பெயரை துஷ்பிரயோகம் செய்கிறார்.
கடந்த ஆறாண்டுகளாக அண்ணாமலையின் நடவடிக்கைகளை பார்க்கின்ற எவரும் மிக இயல்பான ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த மனிதர் பேச்சுக்கும், நடத்தைக்கும் துளியும் சம்பந்தமில்லாதவர் என்பது!
’உன் நண்பர்கள் யார் எனச் சொல் உனைச் சொல்கிறேன்’ என்றொரு அறிஞர் கூறியுள்ளார். அண்ணாமலையின் நண்பர் எனச் சொல்லதக்க ஒரே ஒரு யோக்கியவானைக் கூட நம்மால் அடையாளம் காண முடியாத அளவுக்கு தன்னைச் சுற்றிலும் மிகப் பெரிய பிராடுகளை வைத்துக் கொண்டு வலம் வந்தவர் தான் அண்ணாமலை.
பொய்யும், பித்தலாட்டமும் என்றே வாழும் அமர்பிரசாத் ரெட்டி, மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி நடத்திய வகையில் 5,000 அப்பாவி டெபாசிட்தாரர்களை ஏமாற்றி 571 கோடிகளை சுருட்டி பலரது தற்கொலைகளுக்கு காரணமான பிராடு தேவநாதன் யாதவ், சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்க பல கோடிப் பணத்தை வசூலித்து ஆட்டையப் போட்டு கைதான கார்திக் கோபிநாத், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் சம்பந்தப்பட்ட ஹரிஸ், ஆர்.கே.சுரேஷ்..போன்றவர்கள் தான் அண்ணாமலையின் சகாக்களாக வலம் வந்தனர்.
கிரிமினல் செயல்களுக்கு பேர் போன ரவுடிகளை பாஜகவில் சேர்த்து அவர்கள் மீதான சட்டபூர்வ நடவடிக்கைகளை தடுத்தவர் தான் அண்ணாமலை. அண்ணாமலையின் நண்பர்களான பிராடுகளைப் பற்றி பாஜகவின் ஆதரவாளரான யூடியூப்பர் மாரிதாஸே ஆதாரங்களுடன் பல காணொளிகளை வெளியிட்டு உள்ளார். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே…! பாஜகவில் உள்ள கல்யாணராமன் தொடங்கி பல பேர் அண்ணாமலையின் உண்மையான குணாம்சத்தை தோலுரித்து காட்டியுள்ளனர்.
அண்ணாமலையின் ஒரே ஒரு சிறப்பம்சம் என்னெவென்றால், பாஜகவில் உள்ள மற்ற தலைவர்களைப் போல பெண் சபலம் இவருக்கு இல்லை என்பதே.
அண்ணாமலையைப் பொறுத்த வரை அரசியல் என்பது ஒரு ஏமாற்றும் கலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதில் அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்.
மைக்கேல்பட்டி மாணவியின் மரணத்தில் மதக் கலவரத்தை உருவாக்கத் துடித்த அண்ணாமலையை நாம் மறக்கமுடியுமா?
பாதயாத்திரை நடத்துகிறேன் என சொல்லி ஒரு பெரிய வசூல் வேட்டை நடத்தியதும், எந்த ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாமல் அந்த பாத யாத்திரையை நடத்தி விளம்பரம் பெற்றதும், கட்சிக்காரர்களுடனான அவரது நட்பும் அவர் பாஜகவை வளர்க்க கட்சிக்கு வரவில்லை, தன்னை வளர்த்துக் கொள்ளவே பாஜகவை பயன்படுத்திக் கொண்டார் என்பதைக் காட்டின. தன் இமேஜை பில்டப் செய்யவும், தன் எதிரிகளை துவம்சம் செய்யவும் பெரிய அளவு இணையக் கூலிப்படையை உருவாக்கி வார் ரூம் நடத்தியவர் தான் அண்ணாமலை.
அண்ணாமலை திமுக அமைச்சர் ஒருவரது பினாமியுடன் சேர்ந்து Zen Path Ventures தொடங்கியதும், தன்னுடைய நண்பர்களை பினாமியாக வைத்து ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் போன்ற பத்துக்கு மேற்பட்ட புதிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கியதும் பொருளாதார ரீதியில் தன்னை மிக வலுவாக்கிக் கொண்டு தனி அரசியல் கட்சிக்கு தயாராவதற்குத் தான்.
திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலபடுத்தப் போவதாக திமுக பைல்ஸ் என்றது, அதன் மூலம் ஒவ்வொரு அமைச்சர்களிடமும் பெரும் வசூல் வேட்டை நடத்திய விவகாரத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள். ’’அவர் ஒன்றும் ஊழல் செய்யவில்லையே. நல்லவர்களையா ஏமாற்றி பணம் சம்பாதித்தார். ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை வாங்கியது திறமை சம்பந்தப்பட்டதே அன்றி குற்றம் சம்பந்தப்பட்டதல்ல’’ என்ற விளக்கமும் தந்தனர்.
தான் திரட்டிய ஆதாரங்கள், ஆவணங்கள் மூலம் ஊழல் செய்த அமைச்சர்களை சட்டப்படி கைது செய்யும் வகையில் மத்திய ஆட்சியாளர்களுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தண்டனை பெற்றுத் தந்திருந்தால் தான் அண்ணாமலை யோக்கியன் என்பதை ஏற்கலாம். ஊழலில் பங்கு பெற்று தன்னை வளப்படுத்திக் கொண்டவர் எப்படி நேர்மையான அரசியலை பேச முடியும்?
குறுகிய காலத்தில் குவித்த செல்வத்தை அண்ணாமலை இலண்டன், அமெரிக்கா என்று போய் முதலீடு செய்ததையும் அந்தக் கட்சிகாரர்களே மேலிடத்திற்கு போட்டுத் தந்து மாநிலத் தலைவர் பதவியைப் பறித்தனர்.
மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதால் தன் அப்பாவின் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தல் வேலைகளில் ஒதுங்கியதோடில்லாமல் உள்ளடி வேலைகள் செய்து பாஜகவின் மோசமான தோல்விக்கும் காரணமானவர் தான் அண்ணாமலை. வளர்த்த இயக்கத்தையே வச்சு செய்த அண்ணாமலையை அவர் நிழல் கூட யோக்கியன் என நம்பாது. அதுவும் குறிப்பாக தமிழிசை செளந்திரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரை வீழ்த்திக் காட்டுவோம் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பகிரங்கமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர்.
தற்போதுள்ள தமிழக அரசியல்வாதிகளிலேயே எவரையும் மிக ஆபத்தானவர் அண்ணாமலை.
இனி மேல் அண்ணாமலை தமிழ், தமிழர் நலன், மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து போராட்டங்கள்.. என அரசியல் களத்தை அதகளப்படுத்துவார். அனைத்து ஊடகங்களும் அவரது ஒவ்வொரு நகர்வையும் உச்சிமோர்ந்து விளம்பரப்படுத்துவார்கள். தவெக விஜய்யின் அரசியலை எதிர்கொள்ள மாநில கட்சிகளை அண்ணாமலை தன் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கவும் பாஜக ஒதுங்கிக் கொண்டு வழிவிடலாம்.
‘தமிழர்கள் அவ்வளவு ஒன்னும் இளிச்சவாயர்களல்ல’ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது.
சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின்போது, "நாங்கள் அனுமதிக்க மாட்டோம்...அதன் விளைவுகளைச் சந்திப்போம்" என்று கூறி மிகப்பெரிய மதக்கலவரத்தை முளையிலேயே கிள்ளி, மதநல்லிணக்கத்தை காப்பாற்றிய IPS அதிகாரி டாக்டர் ஜே. லோகநாதன், தற்போது கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்பச் சேவைகள் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். #👨மோடி அரசாங்கம்
ட்ரம்புக்கு ஏற்பட்ட அச்சம் அவரது அறிக்கைகளில் தெரிகிறது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான்மீதான மோதலை தீவிரப்படுத்தினால், தனது அணுசக்தி திறனை நிரூபிக்கும் வகையில் ஈரான் அணு ஆயுத சோதனையை மேகொள்ள உள்ளதான இரகசிய தகவல் சென்றதன் காரணமாக ட்ரம்ப் கொஞ்சம் அடக்கி வாசிப்பதனை காணக்கூடியதாக உள்ளது.
அதாவது ஈரானின் நாகரீகத்தையே அழிப்பதாக மிரட்டிய ட்ரம்ப், இன்று அவர் கூறுகின்ற வார்த்தைகள் ஆச்சர்யமாக உள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படவுள்ளதாக இதுவரையில் அடிக்கடி கூறிவந்த நிலையில், ஒப்பந்தம் தேவையில்லை, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எப்போது வேண்டுமானாலும் எங்களால் கைப்பற்ற முடியும் என்று தற்போது ட்ரம்ப் கூறியுள்ளார்.
அத்துடன் ஈரானிய சுப்ரீம் லீடரை சந்திப்பதனை ஒரு கௌரவமாக கருதுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அறிக்கைகள் மூலம் ஓர் அணு ஆயுத நாட்டின் பலம் என்ன என்பதனை புரிந்துகொள்ள முடிகிறது.
முகம்மத் இக்பால் #👨மோடி அரசாங்கம்
மிகப்பெரிய மோசடி ஒன்றை நடத்த இருக்கிறார்கள்
என்ன எழவுடா இது 850 ml எத்தனால் 150 ml பெட்ரோல் இதுக்கு 83₹ 1லிட்டர் எத்தனால் 46 ரூபாய் தான்டா கூடுதலாக 150ML பெட்ரோல் 16.5 காசு
மொத்தமாக 62.5 காசு தான்டா ..🤷♂️🤷♂️
நாட்டின் மொத்த எத்தனால் உற்பத்தியில் 89சதவீதம் இரண்டு கம்பெனிகள் தான் செய்கிறது அவை இரண்டும் கட்கரி மகன்கள் தான் 90%சதவீத பங்குகளை வைத்து இருக்கிறார்கள் ..😷😷
நாம எல்லாருக்கும் நாமத்தை போட்டு விட்டானுங்க..
மோசடிக் கும்பல்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளதால், கலப்பட பெட்ரோல்களால், வாகனங்களின் எஞ்சின்கள் வெகு விரைவில் பழுதடையும் அபாயம் உருவாகியுள்ளது.. #👨மோடி அரசாங்கம்
சர்ச்சைக்குரிய சங்கியான டி.கே. சிவகுமார் காங்கிரசின் முதல்வரா?
இவர் காங்கிரசின் நற்பெயரை காப்பாற்றுவாரா? இல்லை எல்லாம் கைமீறிப் போகுமா? என்பது தற்போது பெரும் விவாதமாகியுள்ளது.
குணாம்ச ரீதியில் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் நேர் எதிரானவர்கள்.
சித்தராமையா பொதுச் சமூகத்தின் பெரு மரியாதைக்குரியவர். அடிப்படையில் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி. முற்போக்கு பார்வை கொண்ட சோசலிஸ்ட். சமூக நீதி, மதச் சார்பின்மை ஆகியவற்றில் அழுத்தமான பற்றுள்ளவர். அதே சமயம் கடவுளை நம்பிக்கையை இழிவாக பேசமாட்டார். சித்தாந்த ரீதியில் தெளிவான பார்வை கொண்டவர் சித்தராமையா. நிர்வாக ஆற்றலாலும், நேர்மையாலும் சகல தரப்பிலும் நன்மதிப்பு பெற்றவர்!
டி.கே.சிவகுமார் இந்தியாவின் மிகப் பெரும் பணக்கார அரசியல்வாதி. மாணவப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ் முகாமில் வளர்ந்த வகையில் தற்போதும் மூட நம்பிக்கைகளில் ஊறித் திளைப்பவர். தப்பித் தவறி கூட மதச் சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றை உச்சரிக்கமாட்டார்.
தன்னுடைய ஜோதிடரும், ராஜகுருவுமான துவாரகநாத் கட்டளையை எப்போதும் மீறாதவர். முதலமைச்சர் பதவி ஏற்புக்கு முன்பே வேள்வி, யாகங்கள் நடத்தி தயாராகிக் கொண்டார். அவர் உட்காரும் முதலமைச்சர் நாற்காலிக்கே சிறப்பு பூஜை செய்யப்பட்ட பிறகே அமர்ந்தார்.
முதலமைச்சர் பதவி ஏற்பு மேடையிலேயே தான் கும்பிடும் சாமியார் படத்தை வைத்ததோடு அவர் பெயரில் தான் உறுதிமொழி ஏற்றார். இவரது பதவி ஏற்பில் 30க்கு மேற்பட்ட மடாதிபதிகள் வந்திருந்து ஆசி வழங்கினார்கள். விதான் செளதாவிற்குள் நுழையும் போது சாஷ்டாங்கமாக தரையில் வீழ்ந்து வணங்கினார்.
மொத்தத்தில் ஒரு பாஜக முதல்வர் பதவி ஏற்பை போலவே சிவகுமாரின் பதவி ஏற்பும் நிகழ்ந்தது. இவர் முதல்வர் ஆவதற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் லாபியும் பலமாக இருந்தது என்பது புதிய செய்தியல்ல.
கோவில் கோவில்களாக செல்வதாலும், மடாதிபதிகளை தேடிச் சென்று ஆசி பெறுகின்ற தீவிர பக்திமான் என்பதாலும் இவரை சாது என மதிப்பிட முடியாது. அதிரடி அரசியல்வாதி. குவாரி பிசினஸ்சில் கொடி கட்டி பறப்பவர். சட்ட அத்துமீறல்களுக்காக கைதாகி திகார் சிறையில் கைதியாக இருந்தவர். ஏற்கனவே ஒரு முறை அமைச்சராக இருந்த போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். குடிப் பழக்கம் உள்ளதை மறைக்காமல் பொதுவெளியிலேயே தள்ளாடி நடந்து வருவார். நிர்வாக அறிவில் நிகரற்றவர் அல்ல. ஆனால், அரசியல் டீலிங்கில் இவரை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.
டி.கே.சிவகுமார் முதல்வராகி சித்தராமையா கட்டிக் காப்பாற்றிய மரியாதையை தக்க வைப்பாரா? நேர்மையான நிர்வாகத்தை தருவாரா? குறைந்தபட்சம் கெட்ட பெயர் உருவாகாத வண்ணமாவது நடந்து கொள்வாரா? என்பதற்கு இன்று வரை யாராலும் உத்திரவாதம் தர முடியாது.
பிறகு ஏன் இவரை முதலமைச்சர் ஆக்கினார்கள்? என்பதை அறம் இணைய இதழில் எழுதியுள்ளேன். அதன் இணைப்பை கீழே பின்னூட்டம் பகுதியில் அறம் வாட்ஸ் அப் சேனலில் தந்துள்ளேன்.
இதில் இணையதவர்கள் உங்களை இணைத்துக் கொள்ளலாம். அறம் இணையத்தில் நான் எழுதுவதையும், முக்கிய ஆளுமைகள் எழுதுவதையும் நீங்கள் விருப்பப்படும் நேரங்களில் சென்று வாசிக்கலாம். பழைய கட்டுரைகளையும் பின்னோக்கிச் சென்று வாசிக்கலாம்.
கர்நாடக அரசியலில் நடந்தது அதிகார மாற்றமா? ஏமாற்றமா?
சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
ஒரு கட்சியில் இருந்து விலகி புதிதாக கட்சி ஆரம்பிக்க இருக்கும் ஒரு நபர் இப்படி ஒரு ராஜினாமா இதுவரை செய்தது உண்டா??
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையே இது..
தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பை எந்த காலத்திலும் மாற்ற முடியாது என்பதை உணர்ந்த பாசிச பாஜக,
வெறுமனே EVMல் தில்லு முல்லு செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் பிரச்சனை ஏற்படும் என்பதை உணர்ந்து விஜயை முன்னிறுத்தி ஒரு மோசடி ஆட்சியை அமைத்து விட்டார்கள்..
இனி ஒரு டம்மி பாஜக எதிர்ப்பாளரை உருவாக்கி அவர் மூலம் கூட்டணி ஏற்படுத்தி புறவாசல் வழியாக பாஜக தன் கரத்தை இறுக்கும்.
அதற்குள் தவெக அல்லுசில்லுகள் அமைச்சர்கள் கண்டிப்பாக பல்வேறு சிக்கல்களில் சிக்கி விடுவார்கள்..
அப்புறம் என்ன
பாஜக முழுமையாக தமிழகத்தை மறைமுகமாக ஆளும்...
ஆனால் அதில் உள்ள இன்னொரு அஜெண்டாவான திமுகவை ஒழிப்பது என்பது ஒரு காலத்திலும் நடக்காது..
இந்த சதிகளை எல்லாம் மக்கள் துணையுடன் திமுக உடைக்கும். 🖤❤🔥🔥🔥
#DMK4TN #TVKVijay #TVKFails #TVKITWING #BJPFailsIndia #TVKparty #vijay #sangeetha #trisha #👨மோடி அரசாங்கம்
*சங்கத்தமிழனை வைத்து ஷாநவாஸை ஒருமையில் பேசவைத்தது!(திமுக தலைவர்களையும் கூட்டணியில் இருந்துகொண்டே)
*பிறகு ஷாநவாஸுக்கு புதிய பொறுப்பை வழங்கியது!
*நானே கட்டுமன்னார்குடியில் போட்டி!
*அடுத்தநாள் நான் போட்டியிடவில்லை!
*இளையபெருமாள் மகன் என்பதால் போட்டியிட வைத்தோம்(வாரிசு பிரச்னை இல்லை)
*KV குப்பத்தில் வேற ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாய (சொந்த சாதி) தலைவர் நிற்பதால் போட்டியிடவில்லை!
*திருவிக நகரில் போட்டியிடும் அக்கா பொற்கொடிக்கு வாழ்த்து!
*தேர்தல் முடிந்த பிறகு ஒரு நேரலையில் -நம்ம கட்சி நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை!
*தேர்தல் முடிவு வந்த பிறகு - நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்!
*திமுக தலைவர் ஒப்புதலுடன் தான் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாடு!
*கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு!
*திமுக அதிமுக கூட்டணி என்றும் ,என்னை முதல்வர் என்றும் தகவல் சொன்னார்கள்!?
*அது கிசுகிசு தான் உண்மையல்ல!
*அமைச்சரவையில் விசிக பங்கேற்கும் -திமுக கூட்டணி தொடரும்!
*விஜயின் ஆலோசகர், ஜோதிடர் என்ற முறையில் இல்லாமல், கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற தகுதியின் அடிப்படையில் அந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம்!
*சோபா நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்து வைத்தது!
*பக்ரீத் பெருவிழா நாளில் மாடு வெட்ட தடையை,எதிர்த்து இன்றுவரை பேசவில்லை!
*அரியலூர் கட்சிக்காரர்களை வைத்து ராசாவுக்கு எதிரான போராட்டம் என்று சொல்லி ,ரௌடியைகளை வைத்து திமுக பெண்களை ஆபாசமாக பேசவைத்தது!
*கரூர் சம்பவத்தின் பொழுது -ஆதவ் க்கு தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னதாக சொல்லியது -பழைய காணொளியில் விஜய்யை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டது!
*விஜய் rss பெற்றடுத்த பிள்ளை என்று பேசியது -கூட்டணிக்கு பிறகும் அந்த கருத்தில் மற்றம் இல்லை என்றது -பிறகு விஜயுடன் அதே நாள் கைகுலுக்கி கூட்டணி அமைச்சரவையில் இணைந்தது!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆசானை பற்றி -இனி அவரை பேசுவது வீண்!
ஒன்றே ஒன்று : சொல்லி கொள்கிறேன்!
விசிக தோன்றுவதற்கு முன்பே திமுக மூன்று முறை ஆட்சியில் இருந்திருக்கிறது -ஆனால் திமுக தயவு இல்லாமல் திருமாவளவன் சட்டமன்றமோ மூன்று முறை பாராளுமன்றமோ போனதே இல்லை !
நன்றி ஆசானே!
முரணின் முழுவுருவம் thiruma!
#நந்தன் #👨மோடி அரசாங்கம்
ஆ.ராசாவின் சரவெடி பத்திரிக்கையாளர் சந்திப்பு அபாரம்!
எந்த ஒரு விவகாரத்தையும் அவர் அணுகும் முறை,
அதை வெளிப்படுத்தும் விதம்,
தடங்கலின்றி பேசிச் செல்லும் வேகம்..
ஆகியவற்றை பார்க்கும் போது திமுகவிற்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் தான் ஆ.ராசா…!
நேற்றைய தினம் விஜய் குறித்தும், இந்த ஆட்சி குறித்தும் அவர் வைத்த விமர்சனங்கள் சில ஏற்கத்தக்கவையே!
தோல்வி குறித்து துவண்டிருந்த திமுக தொண்டர்களை சுறுசுறுப்படைய வைத்தது அவரது பேச்சு. இது போன்ற மடை திறந்த வெள்ளமென வார்த்தைகள் வந்து விழும் ஒரு நேர்காணலை இன்றைய திமுக தலைவர் ஸ்டாலினாலோ, உதயநிதியாலோ நினைத்துக் கூட பார்க்க முடியாது.
இன்றைக்கு திமுகவை அதன் பழைய வீரியத்திற்கு மீட்டெடுக்க உண்மையிலேயே அதன் தலைமை விரும்பினால் ஆ.ராசா அவர்களை பொதுச் செயலாளர் ஆக்கலாம். ஏன், திமுகவின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகவும் அவரை முன் மொழியதக்க ஆற்றல் கொண்டவரே அவர்.
ஏனென்றால் மிகப் பெரிய பூகம்பமாக எழுந்த 2ஜீ விவகாரத்தில் அவரிடத்தில் வேறு யார் இருந்தாலும் தடயமின்றி அழிந்திருப்பார்கள். ஆனால், ஆ.ராசாவோ தன்னந்தனியாக அதை எதிர்கொண்டு வென்று ஒரு பீனிக்ஸ் பறவை போல வெளி வந்தார். அமேசிங்! இந்த பேராற்றலுக்கு இணை சொல்ல இந்திய அளவில் கூட சமகாலத்தில் நான் பார்த்த அளவில் இன்னொருவரில்லை.
மேலும், அவர் மத்திய அமைச்சராக இருந்த வகையில் டெல்லி அரசியல்வாதிகளை எப்படி டீல் பண்ணுவது என்பதிலும் கைதேர்ந்தவர். ஆகவே, சோனியா காந்தி செய்ததைப் போல – மன்மோகன் சிங்கை பிரதமராக்கி கட்சித் தலைவராக அவர் இருந்ததைப் போல - ஸ்டாலின் அவர்களும் யோசிக்க வேண்டும்.
தலைவராக ஸ்டாலின் அவர்களே இறுதி வரை தொடரட்டும். கட்சியின் அனைத்து சொத்து யாவற்றுக்கும் கூட அவர் உதயநிதியை வாரிசாக்கிக் கொள்ளட்டும். அதே சமயம் திமுக என்ற திராவிட இயக்கத்தை வலுப்படுத்த அந்த சித்தாந்தத்தை ஆழமாக உள்வாங்கிய ஆ.ராசாவுக்கு உரிய அங்கீகாரம் தந்தால், அந்தக் கட்சி உயிர்ப்போடு மீண்டும் தலையெடுக்கும்.
சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
டேய் குஜராத் மங்கிகளே இது தெரியுமாடா உங்களுக்கு....? #👨மோடி அரசாங்கம்







![👨மோடி அரசாங்கம் - - முகம்மத் இக்பால் SIIEIR RCUNREGu] - முகம்மத் இக்பால் SIIEIR RCUNREGu] - ShareChat 👨மோடி அரசாங்கம் - - முகம்மத் இக்பால் SIIEIR RCUNREGu] - முகம்மத் இக்பால் SIIEIR RCUNREGu] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_362862_392be44d_1780709360653_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=653_sc.jpg)





