நீங்கள் இப்போது முகநூலைக் கவனித்தால் ஓர் உண்மை புரியும்.
இத்தனை வருடங்களாய் சட்டமன்ற நிகழ்வுகளையோ பாராளுமன்ற நிகழ்வுகளையோ தொலைக்காட்சியில் பார்க்காதவர்கள் கடந்த மூன்று நாட்களாக ஒரு நாளைக்குப் பத்து பதிவுகள் போடுகின்றனர். அவர்களில் 90% பெண்கள்.
அப்படி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஆவலோடு பலரையும் தேடித் தேடிப் படித்தேன்.
செல்லத்துக்கு டிரஸ்ஸை மாத்தி விடுங்கடா
கருப்பு கோட்டைக் கழட்டிட்டு இன்னிக்கு புளூல வாங்கடி தங்கம்.
என் ஆளுக்கு நல்ல தூக்கமில்ல போல. டல்லா இருக்காரு.
சி.எம் ஷோஃபாவுல நிறைய இடம் காலியா இருக்கே. நானும் அங்க வந்துரட்டுமா புஜ்ஜிமா.
டை அடிச்சிட்டு வெள்ளை வேட்டி சட்டைல வாங்கண்ணா. அப்பத்தான் மாஸ் அள்ளும்.
நீ என்னத்தை வேணாலும் உளறுண்ணா. நா உன்னயவே பாத்துட்டிருக்கேன்.
நீ எதுவுமே செய்ய வேணாம் கியூட்டான்டி. இப்பிடி தினம் வந்து போஸ் கொடுமா.
இவைதான் அந்த மாதரசிகள் அடைந்திருக்கிற திடீர் அரசியல் விழிப்புணர்வின் எச்ச சொச்சங்கள்.. சீரியஸாய் அரசியல் பேசுகிறவர்களும் ' எங்களுக்கு ஓட்டுப் போட்ட கட்சியோட ஆதரவுலதான் நீங்க முதலமைச்சரா உக்காந்திருக்கீங்க ' என்று உதய் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம் என்று அறிவுரை வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் சட்டமன்றத்தைக் கூட audio luanch நடக்கிற இடமாகவே பார்க்கிறார்கள்.இன்னும் சிலர் இவரை பேரறிஞர் அண்ணாவோடெல்லாம் ஒப்பிட்டு எரிச்சல்படுத்துகிறார்கள்.
அண்ணா காமராஜரைப் பார்க்கப் போனது media promotionகாக அல்ல. ஆனால் இவர் நடத்திக் கொண்டிருப்பது அக்மார்க் political shooting. தளபதி பட்டத்தை ஸ்டாலினிடம் இருந்து பிடுங்கியது போல் இப்போது புகழேந்தி ஐயா என்கிற brand name க்கும் குறி வைத்திருக்கிறார். இனி நாகரிக அரசியலுக்கும் நான் மட்டும்தான் authority என்கிற திமிரான முன்னெடுப்பன்றி வேறில்லை. இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் லாட்டரி ஆன்டியின் துவார பாலகர்களை மட்டும் தனியே சந்தித்தால் எல்லோருக்கும் சந்தேகம் வந்து விடும் என்பதற்காக மீடியாக்களின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிற கண்கட்டு வித்தை.
Vijay TV நடத்தும் செல்லக் குரலுக்கான தேடலுக்கு fire விடுவது போல் தமிழக மக்கள் இந்தச் செல்ல முதலமைச்சருக்கான தேடலின் முடிவில் எந்த சீனைப் பார்த்தாலும் புளகாங்கிதம் அடைந்தபடி Tv க்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறார்கள். தேடிப் போன அரசியல் தலைமைகளின் வீடுகளிலும் ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர மற்ற இடங்களில் பிரபல நடிகர் வீட்டுக்கு வந்ததால் உருவான திடீர் பரவசத்தையும் கொஞ்சலான உடல்மொழியையும் மறைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அரசியல் தலைவர்களின் குடும்பங்களே இப்படி நடந்து கொண்டால் சாதாரண ஆன்டிகளை என்ன சொல்ல முடியும்?
இன்னும் கொஞ்ச நாட்களில் சட்டமன்றத்தில் விஜய்யை எதிர்த்து யாராவது பேசினால் இந்த அரை மேக்கப் ஆன்டிகள்
" நீ பேசாம திரும்பி நடிக்க வந்துருண்ணா. இவனுகள்லாம் காட்டு மிராண்டிகள்." என்று அழுத விழிகளோடு வீடியோ போடுவார்கள்.ஆண் ஆச்சர்யக் குறிகள் ' சட்டமன்றத்திற்குள் புகுந்து எதிர்கட்சியினரை சுட்டுக் தள்ளும்படி ' போலீஸை வலியுறுத்தி மிரட்டல் ரீல்ஸை வெளியிடுவார்கள்.
தரவுகள் மக்கள் பிரச்சினைகள் அறிவுப் பூர்வமான விவாதங்கள் தவறுகளைச் சுட்டுதல் தமிழகத்தின் வளர்ச்சி சமூக நீதி நலத்திட்டங்கள் மதச்சார்பின்மை எதுவுமே இவர்களுக்கு முக்கியமில்லை. இவர்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது தனிநபர் சாகசத்துக்கான கொண்டாட்டம். அதற்கு எதிராக கருத்துச் சொல்லும் அத்தனை பேரும் toxic boomers.
அரசியல் தலைவர்கள் ஊடகங்கள் உயர் அரசு அதிகாரிகள் காவல்துறை என்று மொத்தச் சமூகமும் முழு அரசியல்வாதியாக மாறி விட்ட காரியக்கார நபரை இன்னும் உச்ச நடிகராகவே கருதிப் புளகாங்கிதம் அடைகின்றனர். இதன் விளைவுகளை நாம் எதிர்காலத்தில் கண்டிப்பாக அனுபவிக்கப் போகிறோம். Full mejarity யில் ஜெயித்திருந்தால் விஜய் சட்டமன்றத்தில் காட்டியிருக்கிற முகமே வேறு. வேல் பெல் கோஷ்டிகள் தவெகவில் முழுமையாக ஐக்கியமாகிற நாளில் பக்கா மாஸ் தன் original முகத்தை உலகிற்கு வெளிக்காட்டுவார். இப்போது fire விட்டுக் கொண்டிருக்கிற innocent முற்போக்குகளுக்கு அப்போதுதான் பித்தம் தெளியும். காரியக்கார முற்போக்குகள் அப்போதும் தம் கட்டிப் பேச மார்க்ஸ் பெரியார் ஏங்கல்ஸ் அம்பேத்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்களில் இருந்து ஏதாவது ஒரு வரியை இப்போதே கண்டுபிடித்து பாதாள அறையில் ஒளித்து வைத்திருப்பார்கள்.
மொத்தத் தமிழகமும் ஒரு நடிகன் மீதான வெறியில் பைத்தியம் பிடித்து அலைவதைப் பார்ப்பதற்கே எரிச்சலாய் இருக்கிறது. இந்த எழவுக்காகவா அத்தனை தலைவர்களும், போராட்டங்களும். இரண்டே மாதங்களில் நோகாமல் முதலமைச்சராவது எப்படி ? என்றொரு புத்தகம் எழுதினால் தமிழ்நாடு உலகப் புகழை அள்ளும் வாய்ப்பிருக்கிறது. #👨மோடி அரசாங்கம்
அட நீங்க வேற மேடம்...
நம்ம மோடி ஜி அங்க ஒன்றியத்துல அப்டி தான ஆரம்பத்துல செய்தியாளர்களையே சந்திக்காம; மாதங்களையும் வருங்களையும் ஓட்டுனார்லே; அதே ட்ரிக் தான்...
அப்படி நாமும் இருந்தால் மூன்று முறை தமிழ் நாட்டை ஆளலாம் னு அந்த ஜோசியக்காரன் சொல்லியிருக்கலாம்...
தமிழக அரசியல் வரலாற்றில்; முதல்முறையாக ஒரு முதல்வர் செய்தியாளர்களை சந்திக்க பயப்படும் ஒரு துரதிஷ்டமான சம்பவம் அரங்கேறி வருகிறது...
இப்படி நடிப்பு கவர்ச்சியை காட்டி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தால்; இதுபோல் ஒளிந்து மறைந்து தான் ஆட்சி நடத்த முடியும்... வேறெப்படி ஆட்சி நடத்துவது...
இதற்கு அறிவு ஜீவிகள் தவெக கும்பலின் நிலைப்பாடு என்ன?...
செய்தியாளர்களை சந்திக்காத முதல்வரின் நிலைப்பாடு; அவரை நம்பி வாக்களித்தோருக்கு இழைக்கப்படும் அநீதி துரோகம் ஆகும்...
இதை இன்றைய முதல்வர் சரிசெய்து கொள்வாரா?... #👨மோடி அரசாங்கம்
*இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல.”*
*-மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியதற்கு எழுந்த எதிர்ப்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில்*
*பயம் இல்லை*
*“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிற சனாதனத்தை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.”*
*-மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியதற்கு எழுந்த எதிர்ப்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் :-*📡 #👨மோடி அரசாங்கம்
தூய சக்திக்கு அழகல்ல!
அமுதா ஐஏஎஸ் ஒரு சிறந்த ஆளுமை மிக்க நேர்மை வாய்ந்த அதிகாரி. அவர் ஓசூர் உதவி ஆட்சியராக தருமபுரி மாவட்ட ஆட்சியராக திறம்பட பணி புரிந்தவர்.
திட்டப் பணிகளில் ஊழல் நடைபெறாமல் சிறந்த முறையில் நிர்வாகம் செம்மையாக நடைபெற பாடுபட்டவர். அரூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மக்கள் கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை ஏற்று வளர்ச்சி கோரிக்கைகளை ஏற்று அமலாக்கிட முயற்சிகள் மேற்கொண்டவர்.
2008- ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியில் நடைபெற்ற சாலைப் பணியை ஆய்வு செய்த போது கட்டுமான பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பதைக் கண்டறிந்த அவர் உடனடியாக அவற்றை அகற்றி விட்டு தரமான கட்டுமான பொருட்களைக் கொண்டு சாலை அமைக்கஉத்தரவிட்டார். ஆய்வின் போது அதனை அகற்றுவதாக ஒப்புக் கொண்ட ஒப்பந்ததாரர் பின்னர் இரவு நேரத்தில் அதே தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைத்தார். இதனை அப்போது செய்தியாளராக பணியாற்றிய நான் போட்டோ எடுத்து ஊடகத்தில் செய்தி வெளியிடச் சென்ற என் மீது ஒப்பந்ததாரர்களின் அடியாட்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாக்கப்பட்ட நான் தருமபுரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அமுதா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி என்னிடம் நலம் விசாரித்தார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கும் பேரூராட்சித் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டதின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒகேனக்கல் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் சிறப்பாகச் நடத்தி திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்ற ஊக்கமாக செயல்பட்டவர். பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில் பெண் கல்வி மேம்பட பள்ளிகளில் மாணவிகளுக்கு நேப்கின் விநியோகிக்கும் இயந்திரம் வழங்கும் முன்னோடி திட்டத்தை பில்கேட்ஸ் மனைவி நடத்திய சேவை நிறுவன உதவி மூலம் பரீட்சார்த்த மாக் அமுல் படுத்தினார்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் வண்ணமீன் காட்சி உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட மேம்பாடு பணிகளை மேற்கொண்டவர். அரசு செயலராக பணியாற்றிய போது தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பெரு முயற்சி மேற்கொண்ட அதிகாரி.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அவரது இறுதி நிகழ்ச்சியை நடத்த பொறுப்பளிக்கப்பட்டு திறம்பட செய்து முடித்தவர்.
குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசாரிடமே லஞ்சம் வாங்கும் ஆட்சியர்கள், பஞ்சாயத்துகளில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை ஒட்டுமொத்தமாக தங்கள் உறவினர்களிடம் கொள்முதல் செய்வது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் பணியமர்த்தப்பட்டுள்ள சூழலில் விடுதலைப்போராட்ட தியாகி குடும்பத்தில் பிறந்த நேர்மையான திறமையான மூத்த பெண் அதிகாரி அமுதா அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது தூய ஆட்சி நடத்துவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்து பொறுப்பேற்றுள்ள தூய சக்திக்கு அழகல்ல!
-வே.விசுவநாதன்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ்
தருமபுரி #👨மோடி அரசாங்கம்
எப்பொழுதெல்லாம் முதலாளித்துவம் நெருக்கடியை சந்திக்கின்றதோ அப்போதெல்லாம் அதன் இருப்பைக் காப்பாற்ற புதிது புதிதாக ஒருவரை ஆபத்பாந்தவனாக உருவாக்கி சமூகத்தில் உலவவிடும். மக்கள் தமக்கு ஏற்படும் அதிருப்திக்கான நேரடியான காரணிகளை கண்டறியவிடாமல் தடுத்து, அவர்களுக்கு ‘எல்லாம் வல்ல மீட்பர்’ என ஒருவரை உருவாக்கி அவர்கள் தலையில் திணிக்கும்.
தனியார்மய, தாராளமயத்தின் உழைப்புச் சுரண்டலால். அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பெரும்பாடுபடும் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்நிலை மாறாதா என்று மாற்றத்தை நோக்கி எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றே. அப்படி மாற்றத்தை நோக்கும் மக்களை திசை திரும்பி போராடாமல் தடுக்க, இத்தகையவர்களை முதலாளித்துவம் உருவாக்குவது ஒன்றும் புதிதல்ல!
இதன்படியே "விஜய்" போன்ற ஒரு நடிகர், கொள்கை கோட்பாடு எதையும் முன்வைக்காமல், எதை மாற்றப் போகிறோம் எவ்வாறு மாற்றப்போகிறோம் என்ற எந்த வழிமுறையையும் கூறாமல், தான் வந்தாலே மாற்றம் வந்து விடும் என்று நம்பவைத்து ஆட்சிக்கு வந்துள்ளார்.
உண்மையில், இப்படியொரு நாயக பிம்பத்தின் மூலம் முதலாளித்துவம் தன்னை எதிர்க்கும் புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக விஜயின் நாயக பிம்பம் மூலம் ஒரு அகழியை உருவாக்கி, அதையே மக்களை பாலாறு என்று நம்பவைக்க முயற்சி செய்கிறது. உண்மை புலப்படும் நாளில் அந்த அகழிகளை தாண்டி முதலாலிகளின் கோட்டையை மக்கள் சக்தி உடைத்தெறியும்.
#tvkvijay #Tvk #senkanal #capitalism #tvkitwing #👨மோடி அரசாங்கம்
மாற்றமென்று சொல்லி ஆட்சிக்கு வந்த நடிகர் விஜய்! அஇஅதிமுகவை இரண்டாக பிளவுபடுத்தியதும்! அமமுக சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கியதும்தான் மாற்றுபோல!
திமுகவாலேயே முடியாததை தவெக தலைவர் விஜய் ஆதவ் அர்ஜுனா மாமியார் லீமாரோஸை வைத்து அஇஅதிமுகவை உடைத்தது மிகப்பெரிய சாதனைதான்!
தமிழ்நாட்டை மார்ட்டின் லாட்டரி குடும்பமே ஆளுகிறது தவெக கட்சியின் உருவில்! இன்னும் எத்தனை கட்சிகளை உடைக்கப்போகிறானோ? தெரியலை!
அமமுகவின் சட்டமன்ற உறுப்பினரையும் விலைக்கு வாங்கியாச்சு! அஇஅதிமுகவையும் உடைச்சாச்சு! பாக்கி விசிகவைத்தான் அடுத்து கைவைப்பான்!
தவெக என்கிற மாயமயக்கத்திலும்! மேஜிக் டிஜிட்டல் ரூட்மாஃபியா மோசடிவளையிலும் விழ்ந்த மக்களுக்கு இன்னும் நெறைய காத்திருக்கிறது!
நேற்று சபாநாயகர் நடந்துகொண்டவிதம் மிகத்தவறானது! அஇஅதிமுக கட்சியின் அங்கீகாரமான சட்டமன்ற கட்சித்தலைவர் EPS பேசியவுடன் SP.வேலுமணியை பேச அழைத்தது மரபல்ல! முழுமையான தவறு! சபாநாயகரின் சர்வாதிகாரத்தனம்!
அஇஅதிமுகவின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அதிகாரமேயொழிய TEMPORARY STAND எடுத்த வேலுமணியை பேச அழைத்தது சபாநாயகர் செய்த பிழை! இது நீதிமன்றத்திலும் அம்பலமாகும்!
தூய கட்சி! தூய ஆட்சின்னு சொல்லிட்டு! கடைசியில கட்சிகளை உடைக்கிற சாக்கடையின் துர்நாற்றம் பிடித்த ஆட்சியை கொடுப்பதுதான் மாற்றமா.?
இதுக்குத்தான் CONFIDENTஆக இருங்கன்னு சொன்னதுக்கு அர்த்தமா?
SP.வேலுமணி கோஷ்டியிலும் லீமாரோஸா? சசிகலாவா என்கிற ரேஸில் லீமாரோஸே வெற்றிபெற்று பொதுச்செயலாளர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இப்பவே காண்டிராக்டர்கள் பூராப்பேருமே மார்ட்டினிடம் சரண்டராவது கட்டிங்க்! பெட்டிங்கை பரிமாறிக்கொள்ளத்தானாம்! ஆயிரம் கோடி கைமாறியதாக செய்திகள் வருவதை விஜய் ரசிக்கிறார்போலும்!
உச்சத்தை விட்டு வந்துட்டேன் எனச்சொல்லிட்டு! சொச்சத்தை வாரிச்சுருட்டுவதுதான் தூயசக்தியோட ஆட்சியா?
இதையெல்லாம் புரியாமத்தான் இந்த மடப்பயலுக கூட்டம் விசிலுக்கு ஓட்டை போட்டுட்டு! கண்ணத்துல கைய்யை வச்சுக்கிட்டு காத்துக்கிடக்குக....! #👨மோடி அரசாங்கம்
முதல்வர் விஜயின் கல்லாப்பாட்டி காலியா இருக்கு என்கிற கருத்திற்கு பிக்பாஸ் மஞ்சரியின் காட்டமான பதில்:
கஜானா என்றால் நகைகளும் பொற்காசுகளும் பணக்கட்டுகளும் நிரம்பி இருக்கும் மன்னர் காலத்து கஜானா என்று கற்பனையா? புது அரசு செயல்பட நிச்சயம் அவகாசம் தேவைதான்.
ஆனால், தொடர்ந்து Double Digit GDP வளர்ச்சியுடன் இருக்கும், நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் கஜானா "துடைத்து வைக்கப்பட்டிருக்கு" என்று எப்படி வாய் கூசாமல் சொல்ல முடிகிறது?
பிரச்சனை "கடன் இருக்கிறதா?" என்பதில் இல்லை. அந்த கடனை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு பொருளாதாரம் வளருகிறதா?" என்பதில்தான் உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார அளவு இன்று சுமார் ₹35 லட்சம் கோடியை கடந்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். மாநிலக் கடன் சுமார் ₹9-10 லட்சம் கோடி இருந்தாலும், நமது கடன் borrowing limit-க்குள் தான் உள்ளது.
"உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும்" என்றால், தேர்தல் அறிக்கை வெளியிடும் போது எந்த தரவின் அடிப்படையில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன? அப்போது இருந்த அதே கடன் தான் இப்போதும் இருக்கிறது அல்லவா?
உண்மைகள் மக்களை சேராமல் கடன் கடன் என்று உணர்ச்சி வசப்பட்டவர்களாய் மக்களை வைத்திருப்பது என்று தொடங்கலாம், அதே யுக்தியை தொடர முடியாது.
இப்போதாவது "கடன், காலி கஜானா" என்ற அரசியல் வசனங்களைத் தாண்டி, accountability உடன் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.
மக்கள் காரணங்கள் அல்ல, முடிவுகளை தான் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் அமைச்சரவைக்கு வாழ்த்துகள்.
- மஞ்சரி #👨மோடி அரசாங்கம்
அண்ணாமலை அலறவில்லை
திருப்பதி நாரயணன் கதறவில்லை
வானதி வாய் திறக்கவில்லை
நயினார் காணவில்லை
சவுக்கின் புரோக்கிங் வேலை துவங்கவேயில்லை
ஆளும் தவெகவை எதிர்த்து யாருமே பேசவில்லை
வன்புணர்ந்து கொலை செய்யப்படும் செய்திகள் கடைசி பக்கத்தில் சிறு பெட்டிச்செய்தி
கஞ்சா இளைஞர்களின் பயங்கரக் கொலை அரைநாள் தகவல்
காவல் நிலையம் தாக்கப்பட்ட தகவலே எங்குமில்லை
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை (நார்மலைஸ்) இயல்பாக்குகிறார்கள்
சட்டமன்ற உறுப்பினர்களின் தவறுகள் கண்டுக் கொள்ளப்படுவதேயில்லை
கை மாறும் பணம் குறித்து எதிர்கட்சித் தலைவரும் பேசாவிட்டால்,
"புஷ்பா மாடல்" குறித்து யாருக்குமே தெரிந்திருக்காது
திமுககாரனின் ஒன்று விட்ட அத்தை மகனின் மருமகனுக்குப் பிறந்த மகள்வழி பேரன் பிரியாணி கடையில் சண்டை போட்டால் தலைப்புச் செய்தி!
தவெக MLA அறிவாள் எடுத்து கேக் வெட்டினாலும் நகைச்சுவை செய்தி!!
ஊடகங்கள் மக்களின் மனங்களில் விளையாடுகிறது,
மூளைகளில் விலங்கிடுகிறது!
ஊடகங்கள்,
இணையம்,
சனாதனவாதிகள்,
சாதியம்,
மதவாதிகள்,
பிற்போக்கு சோதிடக் கூட்டம்,
விலைபோனக் கூட்டம் என அத்தனைபேரின் கள்ள மௌனத்தில்
ஒரு காட்டு தர்பார் துளிர்கிறதென அறிகுறிகள் தெளிவாக தென்படுகின்றன.✍🏼🌹
#tvkfail
#mainority_government
#sofa_government #👨மோடி அரசாங்கம்
ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்று ஐந்து நாட்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்றுவரை அவர்களுக்கு எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை, அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஏன் இந்தத் தயக்கம்? எதற்காக இந்தக் காத்திருப்பு?
அ.தி.மு.க-விலிருந்து தடம் மாறி வரும் 'விலை போன' நபர்களுக்கு அமைச்சர் பதவிகளை வாரி வழங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா?
ஜோசியக்காரன் இன்னும் நாள் குறித்து கொடுக்கவில்லையா?
குதிரை பேரம் முடிந்துவிட்டாலும், எடப்பாடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் நாளை என்னாகும் என்று ஸ்தம்பித்து போயிருக்கிறீர்களா?
"தூய ஆட்சி", "ஊழலற்ற நிர்வாகம்" என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு ஒவ்வொரு மந்திரியின் கடந்த காலத்தை பார்த்தால் தலை சுற்றுகிறதா?
இதை ஏன் என்று எந்த ஊடகங்களோ அல்லது நடுநிலை நக்கிகளோ கேள்வி எழுப்பாதது ஏன்?
#Disaster
#TVKFails #tvk #tamilnadu #DMK #👨மோடி அரசாங்கம்
🚨 மத்தியில் ஜனநாயக அரசு அல்ல...
கொள்ளைக்கார சந்தை நடத்தும் ஆட்சி! - Rahul Gandhi
🗳️ தேர்தலில் வாக்கு திருட்டு
📄 தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவு
🌳 ஆதிவாசிகளின் காடுகள் பறிப்பு
🌾 விவசாயிகளின் MSP உரிமை பறிப்பு
🏠 ஏழைகளின் நிலம் பறிப்பு
👥 OBC மக்களின் பங்கு பறிப்பு
💻 வெளிநாட்டு ஒப்பந்தங்களில் டேட்டா திருட்டு
⚠️ நாட்டின் உரிமைகள் ஒன்றன் பின் ஒன்றாக பறிக்கப்படுகின்றன!
🔥 இந்த அநீதிக்கு எதிராக
இளைஞர்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது!
✊ “நாட்டை காப்பாற்றும் பொறுப்பு
நாட்டு இளைஞர்களுக்கே உள்ளது!”
🇮🇳 உரிமைக்காக குரல் கொடுப்போம்
🛡️ ஜனநாயகத்தை பாதுகாப்போம்
📢 உண்மையை மக்களிடம் கொண்டு செல்வோம்.- #RahulGandhi #Congress #RahulGandhiVoiceOfIndia #👨மோடி அரசாங்கம்













