Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
தமிழகத்தை உழுது புரட்டிவிடுவேன் என்று சங்கிகள் புகழ்ந்து எழுதிய முன்னாள் காவல்துறை அதிகாரி, “எதிர்கால பிரதமர்” கே. அண்ணாமலை இன்று டெல்லி சென்று அமித் ஷாவையும், நரேந்திர தாமோதரதாஸ் மோடியையும், மற்ற முக்கிய தலைவர்களையும் சந்தித்தார். பின்னர் அமைதியாக பாஜகவிலிருந்து விலகி, ஆன்லைனில் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி சென்னை திரும்பினார். பாஜகவில் இருந்த காலத்தில், கையில் இருந்ததையும் வெளியிலிருந்து எடுத்ததையும் சேர்த்து எல்லா வகையான மதவாத அட்டைகளையும் பயன்படுத்திப் பார்த்தார். தமிழர்களுக்கு அன்பான முருகனின் வேலைக்கூட அரசியல் கருவியாகப் பயன்படுத்தினார். அங்கிருந்த பழைய பாஜகவினரையே அதிகபட்சமாக வெறுப்படையச் செய்தார். கூட்டணிக் கட்சியான அதிமுகவையும் மதிக்காமல் நடந்துகொண்டார். இப்படிப்பட்ட அரசியல் நாடகங்களை ஏராளமாகக் கண்ட தமிழர்கள் திரும்பிப் பார்த்ததே இல்லை. அவர்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. பாஜக பார்த்தபோது, இழப்பு தவிர வேறு பலன் எதுவும் இல்லை. “அண்ணாமலை கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்” என்று தமிழில் சொல்லியதாகத் தோன்றியது. இடையில் அவர் தனிமனித மேம்பாட்டு (Personality Development) தொழில் செய்யப் போகிறார் என்ற செய்திகளும் வந்தன. இப்போது புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். “உண்மையான மதச்சார்பற்ற கட்சி” என்று கூறப்படுகிறது. அதாவது, உண்மையில் மதச்சார்பற்றது அல்ல. தமிழகத்தில் உடனடியாக பாறையில் தலையிட்டு பற்களை உடைத்துக்கொள்ளாமல் இருக்க ஒரு அரசியல் உத்தி. விஜயை ஒரு மாதிரியாக மனதில் வைத்திருக்கலாம். --- இது என்ன திட்டம் என்று எனக்கும் சிறிது சந்தேகம் இருந்தது. எந்த வகையான கல்லும், முள்ளும், கரடுமுரடான அரசியல் சூழல்களையும் பெரிய சிக்கலின்றி சமாளிக்கக்கூடிய கட்சிதான் பாஜக. காஷ்மீரில் மெஹபூபா முஃப்தியின் பி.டி.பி. கட்சியுடன் கூட கூட்டணி அமைத்த அனுபவம் அவர்களுக்கு உள்ளது. சங்க் பரிவாருக்கு தங்களது கொள்கைகள் குறித்து தெளிவு உண்டு. யார் வந்தாலும், யார் சென்றாலும் அவர்கள் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. அப்படியிருக்கையில், இவருக்கு என்ன ஆனது? என்ன திட்டம்? முழுக்க முழுக்க ஒரு குழப்பமாக இருந்தது. அப்போதுதான் அண்ணாமலையின் புதிய கட்சி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பி. சண்முகம் கூறிய கருத்தைப் பார்த்தேன். “ஆர்எஸ்எஸ் ஏற்கனவே 2,500 அமைப்புகளை நடத்திக்கொண்டு இருக்கிறது. இது 2,501-வது அமைப்பு. அவ்வளவுதான். மக்களிடம் செல்ல பாஜகவுக்கு ஒரு புதிய பெயர் தேவைப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொண்டால் போதும்.” #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
உலகம் என்பதே ஒரு நாடக மேடை! அதில் உச்ச நீதிமன்றமும் தனக்குரிய பாத்திரத்தை திறம்படச் செய்கிறது! நீட் தேர்வை நடத்தும் நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்ஸி கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையாம். இது வருத்தமளிக்கிறதாம்! - உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு! ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மோசடிகள் அரங்கேறுகின்றன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்து தேசிய தேர்வு முகமை எனப்படும் என்.டி.ஏவை நீக்க வேண்டும்’’ என அகில இந்திய மருத்துவர் சங்க கூட்டமைப்பு வழக்கு தொடுத்தற்கு உச்சநீதிமன்றத்தின் ரியாக்ஷன் இது. இந்த தேர்வை கல்வியாளர்களைக் கொண்டு நமது அரசாங்கம் நடத்தவில்லை. என்.டி.ஏ எனப்படும் தனியார் ஏஜென்ஸி தான் இதை நடத்துகிறது. அந்த ஏஜென்சி தொடர்ந்து தில்லுமுல்லுகளை தில்லாகச் செய்கிறது. இதன் மூலம் தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கி, சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிரையுமே துச்சமாக மதிக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்! நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எனப்படும் தனியார் ஏஜென்ஸி. வினாத்தாள் விற்பனை மூலம் பல கோடிகள் ருசி பார்க்கிறார்கள். கருணை மதிப்பெண் என்ற வகையில் 1500 மாணவர்களுக்கு ரசசியமாக கூடுதல் மார்க் தந்து பல கோடிகள் பார்க்கிறார்கள். இந்த மோசடிகள் மீண்டும், மீண்டும் நிருபணமான நிலையில் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸியை ஏன் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும்? ஒவ்வொரு ஆண்டும் இப்படி வினாத்தாள் வெளியாகும் போது அது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வருவதும் அது குறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைப்பதும், அந்தக் குழுவிடம் பரிந்துரைகள் பெற்று அதனை அப்படியே மூலையில் தூக்கி கடாசிவிட்டு அடுத்த ஆண்டு அநீதிகளை அரங்கேற்றுவதும் வாடிக்கையாகிவிட்டதே. அப்படியானால் இந்த நிபுணர் குழு, பரிந்துரைகள் என்பதெல்லாம் அந்த நேர கொந்தளிப்பை மட்டுப்படுத்த போடும் நாடகங்கள் தானே! முதலாவதாக நீட் தேர்வு என்பது தகுதி தேர்வுக்கானது என்ற மாயையை உச்ச நீதிமன்றம் உடைக்கத் தயாரா? கஷ்டப்பட்டு தேர்வு எழுதி 700-க்கு 650-க்கும் அதிகமாக மார்க் வாங்கிய மாணவன் நிராகரிக்கப்பட்டு, மேனேஜ்மெண்ட் கோட்டாவில் வெறும் 135 மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவன் பல கோடிகள் தந்து படிப்பில் சேர வழிவகுத்து தருகிறது, இந்த நீட் தேர்வு. ஆக, இது மருத்துவ கல்வி வணிகத்திற்கு தான் வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெறுமனே வருத்தப்படத் தான் முடியும் என்பது எத்தனை பெரிய அவலம்…! தகுதியான, திறமையான மருத்துவர்களை உருவாக்க மறுப்பதும், லஞ்ச, ஊழல் முறைகேடுகளை வளர்ப்பதும் நீட் தேர்வின் நோக்கமாக உள்ளது! 2016 முதல் 2026 வரை நீட் தேர்வில் நடந்து வரும் முறைகேடுகள் இதனை அப்பட்டமாக உணர்த்துகின்றன. கல்வியிலும், மருத்துவத்திலும் மனிதாபிமானமற்ற தனியார் மயத்தை தீவிரப்படுத்தும் வணிக நோக்கம் தான் நீட் தேர்வின் உள்ளார்ந்த நோக்கம். இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கான குற்றத்தை செய்ததே உச்ச நீதிமன்றம் தான்! உச்ச நீதிமன்றம் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டால் தான் தீர்வு. சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - एजेंसी राष्ट्रीय परीक्षा National Testing Agency एजेंसी राष्ट्रीय परीक्षा National Testing Agency - ShareChat
கரீட்டு மாமோவ் கவர்னர் போஸ்ட்ட ரிசைன் பண்ணிடு ... 😀 மெக்காலே வழி கல்வியை படித்ததால் தான் இன்று நீங்கள் கவர்னர். பிஜேபி ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் RSS நிர்வாகிகள் பொறுப்பாளர்களின் பிள்ளைகள் அத்தனை பெயரும் மெக்காலே வழி கல்வியை வெளிநாடுகளில் தங்கி படிக்கிறார்கள். வாய் கூசாமல் பேசும் வெட்கம் கெட்ட ஜென்மங்கள் சனாதன கல்வி முறைய கொஞ்சம் சொல்லு பாப்போம் சனாதன கல்வி முறை என்றால் குரு கலம் கல்வி முறை குரு குலம் கல்வி என்றால் மலம் அல்லுரவன் பையன் மலம் தான் அல்லனும் சவரம் பன்னுரவன் பையன் சவரம் தான் பன்னனும் வேறு தொழில் செய்ய கூடாது என்று சொல்லி தருவது தான் குரு குல கல்வி பெண்கள் படிக்க கூடாது, வேலைக்கி போக கூடாது. பெண்கள் கல்யாணத்துக்கு முன்பு தன் பெற்றோர்களுக்கு அடிமையா இருக்கனும். கல்யாணத்துக்கு பிறகு கணவனுக்கு அடிமையா இருக்கனும் இதை சொல்லி தருவது தான் குரு குல கல்வி பிராமணர்கள் மட்டும் தான் வேதம் கற்கனும். வேறு மதக்காரனுக வேதம் கற்க கூடாதுன்னு சொல்லுரது தான் குரு குல கல்வி இந்த கருமாந்திர சனாதனம், குரு குல கல்வி ஒழிஞ்சது சந்தோசம் தான் பிராமணர்கள் மட்டும் தான் கல்வி கற்கனும் மற்ற ஜாதிகாரங்க கல்வி கற்க கூடாதுன்னு பிராமணர்கள் ரூல்ஸ் போட்டு மக்களை படிக்க வைக்காம முட்டாளாக வைத்து இருந்தார்கள் ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வி கொண்டு வந்து இடைநிலை ஜாதி மக்கள், பட்டியல் இன மக்கள் என அனைவருக்கும் கல்வி குடுத்தான் சனாதனம், குரு குல கல்வியை விட பல மடங்கு மெக்காலே கல்வி சிறந்தது மன்னர்கள் ஆட்சியில் குலக்கல்வி முறைதான் இருந்தது. மெக்காலேயின் முயற்சியால் ஆங்கிலேய அரசு 1813 ல் 1000 பவுண்டு கல்விக்காக ஒதுக்கியது. பின் ஏராளமான பள்ளிகள் திறக்கப்பட்டன. மெக்காலே கல்வி முறையை ( எல்லோருக்கும் கல்வி) ஆளுநர் குறை சொல்வது அவரது ஆரிய சிந்தனையின் வெளிப்பாடு. தமிழர் வாழ்வியல் நெறிகளுக்கு எதிரானது ஆரியம். தமிழர் வாழ்வியல் நெறிகளில் இயற்கையே வழிபாட்டுக் கடவுளாக இருந்தது. ஆரியர்களின் கற்பனைக் கதாபாத்திரங்கள் அடங்கிய கட்டுக்கதைகள் மனிதனை கற்காலத்திலேயே வைத்திருப்பவை. சனாதனக் குப்பையை ஆதரிக்கும் ஆரியத்தைப் பின்பற்றினால் மனிதகுலம் நாசமாகப் போகும். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - பமெக்காலே கல்வி முறை புதிய 8606000600 நம் சிந்தனைபை அழித்தது ஆரியம் என்பதை தவறாகப் பொருள்  அது கொள்ளக் கூடாது; ஓர் இனமல்ல அது இந்திய மக்களின் ஒரு தரமான வாழ்க்கை முறை நம்முடைய கருத்துகள், நடைமுறைகள், கலாசாரம், சனாதன பரம்பரை அழிக்கப்பட்டது; மெக்காலே கல்விமுறை நமது சிந்தனையையும் அறிவையும் அழித்தது இப்போது நிலைமை மாறி வருகிறது;  இனிமேல் எந்த மெக்காலேவும் வர முடியாது கல்வியில் இந்திய மண் சார்ந்த ஒருங்கிணைந்த நிலையை எட்டி வருகிறோம் புதுச்சேரியில் நிகழ்வு ஒன்றில்  தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு  05.06.2026| Puthiyathalaimuraicom பமெக்காலே கல்வி முறை புதிய 8606000600 நம் சிந்தனைபை அழித்தது ஆரியம் என்பதை தவறாகப் பொருள்  அது கொள்ளக் கூடாது; ஓர் இனமல்ல அது இந்திய மக்களின் ஒரு தரமான வாழ்க்கை முறை நம்முடைய கருத்துகள், நடைமுறைகள், கலாசாரம், சனாதன பரம்பரை அழிக்கப்பட்டது; மெக்காலே கல்விமுறை நமது சிந்தனையையும் அறிவையும் அழித்தது இப்போது நிலைமை மாறி வருகிறது;  இனிமேல் எந்த மெக்காலேவும் வர முடியாது கல்வியில் இந்திய மண் சார்ந்த ஒருங்கிணைந்த நிலையை எட்டி வருகிறோம் புதுச்சேரியில் நிகழ்வு ஒன்றில்  தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு  05.06.2026| Puthiyathalaimuraicom - ShareChat
டேய் எவனாவது புயல் காத்துல உக்காந்து பொறி தின்னுட்டு இருப்பான் அவன் கிட்ட சொல்லுங்கடா... மொத்தமே 75 நிமிடம்... 436 திட்டங்களை பற்றி ஆலோசனை செஞ்சீங்களா? அது எப்படி ஒரு நிமிஷத்துக்கு ஆறு திட்டங்களை பற்றிய ஆலோசனை செய்ய முடிந்தது... எந்திரன் படத்தில் வருகிற ரோபோ சிட்டி... உங்களிடம் தோற்று விட்டான் அவ்வளவு வேகம்! #ரீல்ஸ்_அரசு #தற்குறி #தற்குறி_வெத்து_கழகம் #TVKVijay‌Fails #sofamodel #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - NEWS BREAKING SUN NEWS விரைவாக. 10.05 முதல் 11.20 மணி வரை நடந்த 806!8 கூட்டணி அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி  05 JUN 2026 | SUNNEWS 9೧ SUNNEWSTAMIL sunnewslive.in NEWS BREAKING SUN NEWS விரைவாக. 10.05 முதல் 11.20 மணி வரை நடந்த 806!8 கூட்டணி அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி  05 JUN 2026 | SUNNEWS 9೧ SUNNEWSTAMIL sunnewslive.in - ShareChat
இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை பலி வாங்கும் கார்ப்பரேட் காவி பாசிச கும்பல்! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
கவர்ச்சி இல்லாமல் வேறென்ன? *** “த.வெ.க கவர்ச்சியில் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றது என இரண்டு காரணங்கள் சொல்ல முடியுமா? * போராட்டம் செய்தீர்களா? சிறை சென்றிருக்கிறீர்களா? மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறீர்களா? மக்களையாவது உருப்படியாக சந்தித்தீர்களா? உங்களது வேட்பாளர்கள் பெயராவது உங்களுக்கு தெரியுமா?” *** - முதலமைச்சர் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - செயஸ்பாடுகளில் கோட்ட விட சடபாது முதலனமச்சர் கோட் சூட் போடுவதெல்லாம் பிரச்டை பல்ௌல ஆனால் எல்லாவிதத்திலும் கோட்ட விட்டுச்சொண்பருப்பதுதான் பிரச்னை  rulp6ulಖy nancuplulb lir !1 Ii Eamclllr Busollua அனனா பசபடது 79 எதிர்சட் 75 தபட்ட படயநி  படின mGh einjae செயஸ்பாடுகளில் கோட்ட விட சடபாது முதலனமச்சர் கோட் சூட் போடுவதெல்லாம் பிரச்டை பல்ௌல ஆனால் எல்லாவிதத்திலும் கோட்ட விட்டுச்சொண்பருப்பதுதான் பிரச்னை  rulp6ulಖy nancuplulb lir !1 Ii Eamclllr Busollua அனனா பசபடது 79 எதிர்சட் 75 தபட்ட படயநி  படின mGh einjae - ShareChat
புதிய பாதையாம்! புதிய இயக்கமாம்…! பிரமாதமாகப் பேசுகிறார் அண்ணாமலை…! அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இத்தனை லட்சம் பேர் சேர்ந்தனர், அத்தனை லட்சமாக கூடியுள்ளது.. என புளகாங்கிதம் அடைகின்றனர். அரசியல் புரிதலற்ற சாதாரண சராசரி அப்பாவி மனிதர்களிடம் அண்ணாமலையின் பேச்சு மிக வலுவான ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ’’அடடா! ஊழல்வாதிகளிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற இதோ ஒரு ரட்சகர் கிடைத்துவிட்டார்’’ எனப் பலர் புளகாங்கிதம் அடைகின்றனர்…! அண்ணாமலை பேசுவதை அனைத்து ஊடகங்களும் லைவ்வாக டெலிகாஸ்ட் பண்ணினார்கள். அவர் தற்போது பாஜக தலைவரல்ல. எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு தனி நபர் தான். ஆனால், அவருக்கு அனைத்து ஊடகங்களும் இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன..என்றால், இதன் பின்னணியில் நடந்திருக்கும் அதிகார லாபி அவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதே உண்மை. அண்ணாமலை மக்கள் இயக்கம் கட்டுகிறாராம்! “We The Leaders” இயக்கமாம்! ஏபிஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ் பயிற்சி மையமாம்! அவரை வளர்த்த ஆர்.எஸ்.எஸ்சிலும், பாஜகவிலும் அவரால் உதாரணம் காட்ட ஒருவரும் இல்லை என்பதால், நல்லகண்ணு, அப்துல்கலாம் ஆகியோரின் நற்பெயர்களை பயன்படுத்துகிறார். அக்மார்க் பிராடான அண்ணாமலை அந்த நல்லோர்களின் பெயரை உச்சரிக்கவும் தகுதியற்றவர். இன்றைக்கு அவர்கள் உயிரோடு இல்லாததால் அவர்கள் பெயரை துஷ்பிரயோகம் செய்கிறார். கடந்த ஆறாண்டுகளாக அண்ணாமலையின் நடவடிக்கைகளை பார்க்கின்ற எவரும் மிக இயல்பான ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த மனிதர் பேச்சுக்கும், நடத்தைக்கும் துளியும் சம்பந்தமில்லாதவர் என்பது! ’உன் நண்பர்கள் யார் எனச் சொல் உனைச் சொல்கிறேன்’ என்றொரு அறிஞர் கூறியுள்ளார். அண்ணாமலையின் நண்பர் எனச் சொல்லதக்க ஒரே ஒரு யோக்கியவானைக் கூட நம்மால் அடையாளம் காண முடியாத அளவுக்கு தன்னைச் சுற்றிலும் மிகப் பெரிய பிராடுகளை வைத்துக் கொண்டு வலம் வந்தவர் தான் அண்ணாமலை. பொய்யும், பித்தலாட்டமும் என்றே வாழும் அமர்பிரசாத் ரெட்டி, மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி நடத்திய வகையில் 5,000 அப்பாவி டெபாசிட்தாரர்களை ஏமாற்றி 571 கோடிகளை சுருட்டி பலரது தற்கொலைகளுக்கு காரணமான பிராடு தேவநாதன் யாதவ், சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்க பல கோடிப் பணத்தை வசூலித்து ஆட்டையப் போட்டு கைதான கார்திக் கோபிநாத், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் சம்பந்தப்பட்ட ஹரிஸ், ஆர்.கே.சுரேஷ்..போன்றவர்கள் தான் அண்ணாமலையின் சகாக்களாக வலம் வந்தனர். கிரிமினல் செயல்களுக்கு பேர் போன ரவுடிகளை பாஜகவில் சேர்த்து அவர்கள் மீதான சட்டபூர்வ நடவடிக்கைகளை தடுத்தவர் தான் அண்ணாமலை. அண்ணாமலையின் நண்பர்களான பிராடுகளைப் பற்றி பாஜகவின் ஆதரவாளரான யூடியூப்பர் மாரிதாஸே ஆதாரங்களுடன் பல காணொளிகளை வெளியிட்டு உள்ளார். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே…! பாஜகவில் உள்ள கல்யாணராமன் தொடங்கி பல பேர் அண்ணாமலையின் உண்மையான குணாம்சத்தை தோலுரித்து காட்டியுள்ளனர். அண்ணாமலையின் ஒரே ஒரு சிறப்பம்சம் என்னெவென்றால், பாஜகவில் உள்ள மற்ற தலைவர்களைப் போல பெண் சபலம் இவருக்கு இல்லை என்பதே. அண்ணாமலையைப் பொறுத்த வரை அரசியல் என்பது ஒரு ஏமாற்றும் கலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதில் அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர். மைக்கேல்பட்டி மாணவியின் மரணத்தில் மதக் கலவரத்தை உருவாக்கத் துடித்த அண்ணாமலையை நாம் மறக்கமுடியுமா? பாதயாத்திரை நடத்துகிறேன் என சொல்லி ஒரு பெரிய வசூல் வேட்டை நடத்தியதும், எந்த ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாமல் அந்த பாத யாத்திரையை நடத்தி விளம்பரம் பெற்றதும், கட்சிக்காரர்களுடனான அவரது நட்பும் அவர் பாஜகவை வளர்க்க கட்சிக்கு வரவில்லை, தன்னை வளர்த்துக் கொள்ளவே பாஜகவை பயன்படுத்திக் கொண்டார் என்பதைக் காட்டின. தன் இமேஜை பில்டப் செய்யவும், தன் எதிரிகளை துவம்சம் செய்யவும் பெரிய அளவு இணையக் கூலிப்படையை உருவாக்கி வார் ரூம் நடத்தியவர் தான் அண்ணாமலை. அண்ணாமலை திமுக அமைச்சர் ஒருவரது பினாமியுடன் சேர்ந்து Zen Path Ventures தொடங்கியதும், தன்னுடைய நண்பர்களை பினாமியாக வைத்து ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் போன்ற பத்துக்கு மேற்பட்ட புதிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கியதும் பொருளாதார ரீதியில் தன்னை மிக வலுவாக்கிக் கொண்டு தனி அரசியல் கட்சிக்கு தயாராவதற்குத் தான். திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலபடுத்தப் போவதாக திமுக பைல்ஸ் என்றது, அதன் மூலம் ஒவ்வொரு அமைச்சர்களிடமும் பெரும் வசூல் வேட்டை நடத்திய விவகாரத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள். ’’அவர் ஒன்றும் ஊழல் செய்யவில்லையே. நல்லவர்களையா ஏமாற்றி பணம் சம்பாதித்தார். ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை வாங்கியது திறமை சம்பந்தப்பட்டதே அன்றி குற்றம் சம்பந்தப்பட்டதல்ல’’ என்ற விளக்கமும் தந்தனர். தான் திரட்டிய ஆதாரங்கள், ஆவணங்கள் மூலம் ஊழல் செய்த அமைச்சர்களை சட்டப்படி கைது செய்யும் வகையில் மத்திய ஆட்சியாளர்களுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தண்டனை பெற்றுத் தந்திருந்தால் தான் அண்ணாமலை யோக்கியன் என்பதை ஏற்கலாம். ஊழலில் பங்கு பெற்று தன்னை வளப்படுத்திக் கொண்டவர் எப்படி நேர்மையான அரசியலை பேச முடியும்? குறுகிய காலத்தில் குவித்த செல்வத்தை அண்ணாமலை இலண்டன், அமெரிக்கா என்று போய் முதலீடு செய்ததையும் அந்தக் கட்சிகாரர்களே மேலிடத்திற்கு போட்டுத் தந்து மாநிலத் தலைவர் பதவியைப் பறித்தனர். மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதால் தன் அப்பாவின் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தல் வேலைகளில் ஒதுங்கியதோடில்லாமல் உள்ளடி வேலைகள் செய்து பாஜகவின் மோசமான தோல்விக்கும் காரணமானவர் தான் அண்ணாமலை. வளர்த்த இயக்கத்தையே வச்சு செய்த அண்ணாமலையை அவர் நிழல் கூட யோக்கியன் என நம்பாது. அதுவும் குறிப்பாக தமிழிசை செளந்திரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரை வீழ்த்திக் காட்டுவோம் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பகிரங்கமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். தற்போதுள்ள தமிழக அரசியல்வாதிகளிலேயே எவரையும் மிக ஆபத்தானவர் அண்ணாமலை. இனி மேல் அண்ணாமலை தமிழ், தமிழர் நலன், மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து போராட்டங்கள்.. என அரசியல் களத்தை அதகளப்படுத்துவார். அனைத்து ஊடகங்களும் அவரது ஒவ்வொரு நகர்வையும் உச்சிமோர்ந்து விளம்பரப்படுத்துவார்கள். தவெக விஜய்யின் அரசியலை எதிர்கொள்ள மாநில கட்சிகளை அண்ணாமலை தன் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கவும் பாஜக ஒதுங்கிக் கொண்டு வழிவிடலாம். ‘தமிழர்கள் அவ்வளவு ஒன்னும் இளிச்சவாயர்களல்ல’ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ٦ ٥٧٢ ٦ ٥٧٢ - ShareChat
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின்போது, ​​"நாங்கள் அனுமதிக்க மாட்டோம்...அதன் விளைவுகளைச் சந்திப்போம்" என்று கூறி மிகப்பெரிய மதக்கலவரத்தை முளையிலேயே கிள்ளி, மதநல்லிணக்கத்தை காப்பாற்றிய IPS அதிகாரி டாக்டர் ஜே. லோகநாதன், தற்போது கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்பச் சேவைகள் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - HANJAMUR 5 1* @ Oc33/ 7 HANJAMUR 5 1* @ Oc33/ 7 - ShareChat
ட்ரம்புக்கு ஏற்பட்ட அச்சம் அவரது அறிக்கைகளில் தெரிகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான்மீதான மோதலை தீவிரப்படுத்தினால், தனது அணுசக்தி திறனை நிரூபிக்கும் வகையில் ஈரான் அணு ஆயுத சோதனையை மேகொள்ள உள்ளதான இரகசிய தகவல் சென்றதன் காரணமாக ட்ரம்ப் கொஞ்சம் அடக்கி வாசிப்பதனை காணக்கூடியதாக உள்ளது. அதாவது ஈரானின் நாகரீகத்தையே அழிப்பதாக மிரட்டிய ட்ரம்ப், இன்று அவர் கூறுகின்ற வார்த்தைகள் ஆச்சர்யமாக உள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படவுள்ளதாக இதுவரையில் அடிக்கடி கூறிவந்த நிலையில், ஒப்பந்தம் தேவையில்லை, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எப்போது வேண்டுமானாலும் எங்களால் கைப்பற்ற முடியும் என்று தற்போது ட்ரம்ப் கூறியுள்ளார். அத்துடன் ஈரானிய சுப்ரீம் லீடரை சந்திப்பதனை ஒரு கௌரவமாக கருதுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் அறிக்கைகள் மூலம் ஓர் அணு ஆயுத நாட்டின் பலம் என்ன என்பதனை புரிந்துகொள்ள முடிகிறது. முகம்மத் இக்பால் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - - முகம்மத் இக்பால் SIIEIR RCUNREGu] - முகம்மத் இக்பால் SIIEIR RCUNREGu] - ShareChat
மிகப்பெரிய மோசடி ஒன்றை நடத்த இருக்கிறார்கள் என்ன எழவுடா இது 850 ml எத்தனால் 150 ml பெட்ரோல் இதுக்கு 83₹ 1லிட்டர் எத்தனால் 46 ரூபாய் தான்டா கூடுதலாக 150ML பெட்ரோல் 16.5 காசு மொத்தமாக 62.5 காசு தான்டா ..🤷‍♂️🤷‍♂️ நாட்டின் மொத்த எத்தனால் உற்பத்தியில் 89சதவீதம் இரண்டு கம்பெனிகள் தான் செய்கிறது அவை இரண்டும் கட்கரி மகன்கள் தான் 90%சதவீத பங்குகளை வைத்து இருக்கிறார்கள் ..😷😷 நாம எல்லாருக்கும் நாமத்தை போட்டு விட்டானுங்க.. மோசடிக் கும்பல்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளதால், கலப்பட பெட்ரோல்களால், வாகனங்களின் எஞ்சின்கள் வெகு விரைவில் பழுதடையும் அபாயம் உருவாகியுள்ளது.. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - NEWS BREAKING SUN INIEUS Amount (7) Volume (L) 085 benslty (Aolm ) Rta() E85 பெட்ரோல்! நாட்டின் முதல் E85 பெட்ரோல் பங்க் டெல்லியில் அறிமுகம்; விலை லிட்டருக்கு ரூ 82.12 மட்டுமே E20 பெட்ரோலை விட சுமார் ரூ 20 குறைவாக உள்ள E85 பெட்ரோலை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க 2027 ஆண்டிற்குள் 500 E85 பெட்ரோல் பங்குகளை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம் 05 JUN 2026 | D6 SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in NEWS BREAKING SUN INIEUS Amount (7) Volume (L) 085 benslty (Aolm ) Rta() E85 பெட்ரோல்! நாட்டின் முதல் E85 பெட்ரோல் பங்க் டெல்லியில் அறிமுகம்; விலை லிட்டருக்கு ரூ 82.12 மட்டுமே E20 பெட்ரோலை விட சுமார் ரூ 20 குறைவாக உள்ள E85 பெட்ரோலை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க 2027 ஆண்டிற்குள் 500 E85 பெட்ரோல் பங்குகளை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம் 05 JUN 2026 | D6 SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in - ShareChat