வேத காலமும், மாமிச உணவும்
வேத காலமும், மாமிச உணவும், மக்களும்!
மாட்டு கறியை முதன்முதலில் சாப்பிட்டவர்கள், இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தியவர்கள், பிராமணர்கள் தான்! பிராமணர்கள் என்று இப்போது சொல்லப் படுகின்ற இவர்களின் மூதாதையர்கள், ஆன ஆரியர்களே! இது முக்காலும் நானறிந்த உண்மையாகும்! நான் மட்டும் என்றில்லை, வரலாற்று ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள், இந்துமத ஆசாரியர்கள், வேத விற்பனர்கள் பலரும் அறிந்த உண்மையாகும்! இந்த உண்மையை மறந்து விட்டதும் கூட... மாட்டுக்கறி செய்தியை நக்கீரன் வெளியிடுவதற்கும், அதை தொடர்ந்து நிகழ்ந்த சர்ச்சைகளுக்கும் காரணம் என்பேன்!!
பிராமணர்கள் மாட்டு கறியை எப்போது வரை உணவாக சாப்பிட்டார்கள்,? எந்தெந்த பிராணிகளை எந்தெந்த கடவுளின் பெயரை சொல்லி பலியிட்டு உண்டார்கள்? அவர்களது வேத நூல்களில் மாமிச உணவு பற்றி சொல்லாப் பட்டுள்ளவைகள் என்னென்ன? இராமாயணத்தில் பதினான்கு வருடங்கள் காட்டுக்கு சென்ற, ராமனும் லட்சுமணனும் வில் அம்பை வைத்து வேட்டையாடிய மிருகங்கள் என்ன? சாப்பிட்ட மாமிச வகைகள் என்ன? மகாபாரதத்தில் கிருஷ்ணனும், பாண்டவர்கள், கவுரவர்கள் முதலானோர் பசு இறைச்சியை புசித்தும்,ருசித்தும் செய்த வேலைகள் என்ன? வேதங்களில் மாமிசம் பற்றிய மகத்துவத்தை சொல்லுபவை எவை? அர்த்த சாஸ்திரம், மனு தர்மம் ஆகியவைகள் மாட்டு கரியைப் பற்றி சொல்வது என்ன? போன்ற ஏராளமான தகவல்களை இதுபோன்ற சர்சைகள் எதிர் காலத்தில் தொடரக் கூடாது என்பதற்காக தொடர்ந்து இரண்டு,மூன்று பதிவுகளாக எழுத உள்ளேன்!
நான் எழுதும் பதிவுகளுக்கு முன்னுரை இது!
பசுவைக் கொல்லும் பொது, 'ஹோதா' என்ற புரோகிதன் 'அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ சமீத்வம்;சமீத்வமத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்' (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 7 } என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து அடுத்து அதன் சதையை முப்பத்தி ஆறு பங்குகளாக பிரித்து வழங்க வேண்டும் என்றும் இதனை முறைப்படி உணர்ந்தவன் சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம் ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்! யாகத்தில் பசு கொள்ளப் பட்ட பின் அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது:
"மார்பில் இருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுதெடுக்க வேண்டும். பின் கால்களில் இருந்து இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும், முன் கால்களில் இருந்து நம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும்,தோளில் இருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும் . இவ்வாறு அந்த அந்த அவயங்களில் இருந்து இருபத்தி ஆறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்து எடுக்க வேண்டும்! " இப்படி பசுவைக் கொன்று யாகம் நடத்தி, அதனைப் பக்குவமாக சமைத்து ஆரியர்கள் அந்த நாட்களில் உண்டார்கள்!
ஆடு,மாடுகளுடன் வந்த ஆரியர்களின் பிரமாதமான,பிடித்த,முக்கிய உணவே மாட்டு கறி உணவுதான்! புத்தரின் கொல்லாமைத் தத்துவத்தை ஜீரணிக்க, புத்த மத வீழ்ச்சிக்கு பிறகு ஆரியர்களான பிராமணர்கள், மாட்டு கறியை சாப்பிடுவதை விட்டு ,பால்,நெய்,வெண்ணை,என பின்னாளில் உருமாறினார்கள்!
வேள்விகளில் இன்றும் பலியிடப்படும் உயிர்களில் மாடு முக்கியமானது! மாட்டை எப்படி பலியிட வேண்டும்,எப்படி அறுக்க வேண்டும், எப்படி எதனுடன் சேர்த்துச் சமைகவேண்டும்என்பதை இன்றுள்ள திராவிடர்களுக்கு சொன்னவர்களே ஆரியர்கள்தான்!
வேதங்கள் நான்கில் இரண்டாவதாக சொல்லப்படும் யஜுர் வேதம் தத்வமஸி என்னும் தத்துவங்களை அறிந்து கொள்ள உதவுவது என்று வேதாந்திகள் கூறுவர். கிருஷ்ண யஜுர்,சுக்ல யஜுர் என்று இரண்டு யஜுர் வேதங்கள் உள்ளன. இதில் கிருஷ்ண யஜுர் வேதம் ஆறாவது காண்டத்தில் பலிவிசயம்,தட்சணை சோம யாக விளக்கம் ஆகியவைகள் கூறப்பட்டுள்ளது!
யஜுர் வேதத்துக்கு முக்கியமாக,ஆதாரமாகவும் திகழ்வது சதபத பிரமாணம். உபநிஷமாக விளங்குவது பிரஹதாரணம் (Brihadaranya Kopanised ) இதனையே பிரம்ம ஞானம்,தத்துவ ஞானம் என்று என்று சங்கரர் கூறுகிறார். உபநிஷங்களுக்கு அந்தரங்கம், ரகசியம்,ஞானம்,பிராத்தனை என்று பலபொருள் உள்ளது!
இவைகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உள்ளது .இ. சம்பந்தாசாரியார் 108 என்று ஜே.பி.ரோட்டலர் மேலும் 17 -சேர்த்தும் எ.வேபர் என்கிற சம்ஸ்கிருத அறிஞர் 235 - என்றும்,சுவாமி சின்மயானந்தர் 238 - உபநிஷங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்!
இவைகளில் பிரஹதாரண உபநிஷம் சிறந்த பொருள்களை கூறுவதாகவும்,அளவில் பெரியதாகவும் அதனாலேயே
"பிரஹதாரன்யகம்" எனபடுகிறது . (வீர ராகவாச்சாரியார்,உபநிஷத்சாரம்,சென்னை,1965 , பக்கம்-131 ) கூறுகிறார்!
இந்த உபநிஷத்தில், ஆறாம் அத்தியாயத்தில் (நான்காம் பிராமணம்,பதினெட்டாவது வசனம்) யாக்ஞ்வல்கியாரின் குருவான ஆருணி குறு பிரவாஹன் ஆரோக்கியமான குழந்தையைப் பெறவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று கர்பிணிப் பெண்களுக்கு யோசனை கூறுவதாக வருவதே கீழே தரப்பட்டு உள்ளது !
தன் மகன் புலவனாகவும்,புகழ் பெற்றவனாகவும்,நல்ல பெசாலனகவும்,சபைகளிலே திறமை உள்ளவனாகவும் எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள்,நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் சேர்ந்த சாதம் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது!
He who desires a son reputed,eloquent and speaking words pleasant to hear, to be born to him, to be versed in aal the vedas and to live to a full age of hundred years, should have rice boiled with the meat of a bull able to breed and with his wife should eat the same mixed with ghee. Then they would be able to give birth to a son as desired. ( BRIHADARANYAKOPANISAD, Upanisad series 10, sri Ramakirushna math,mylapore,1945,p. 573.)
பசுவை வைத்து(வதைத்து கொல்லும்) யாகத்தின் பெயர்களும் நோக்கங்களும்:
கோசவம் - பசுமாடு,காளை மாடுகளை கொல்லும் யாகத்தின் பெயர்!
வாயவீயஸ் வேதபசு - வாயு தேவதைக்காக வெள்ளைப் பசுவைக் கொல்வது.
காம்யபசு - தனது எண்ணங்களை ஈடேற்றிக் கொள்வதற்கு உரிய பசு யாகம்.
வத்சொபகரணம்- கன்றுக் குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
ஏகாதசீன பசுவிதானம் - பதினோரு பசுக்களைக் கொல்லும் யாகம்.
கிறாமாரண்யா பசு பிரசம்ஷா - நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுகளைக் கொன்று யாகம் செய்வது!
ஆதித்ய வேதாகபசு- சூரிய தேவதைக்கு பசு யாகம்.
காம்யபசு விதானம்-பசுமாட்டைக் கொன்று நடத்தும் யாகம்.
ரிஷபாலம்பன விதானம்- எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி.
இவைகளை அதாவது யாகம் பற்றி எம்.கே.கேலுண்ணி நாயர் என்னும் சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் (கோலோளன்பு அம்சம்,பொன்னானி,மதவிசாரணை, பக்கம்-78 ,79 , 80 )விரிவாக தெரிவித்து உள்ளார்!
தெய்வங்களின் பெயரைச் சொல்லியும், பல்வேறு காரியங்களைச் சொல்லியும், பசுகளும் எருதுகளும் தேவைக்கு தகுந்தபடி, பலியிடப் பட்டு, உணவாக உண்ணப்பட்டு வந்தது, இவைகளை மட்டுமே தனியாக சாப்பிட்டால் என்ன " கிக்கு" இருக்கும்? அதனால் " கிக்கு" மற்றும் "கில்மா " வேலைகளுக்கு மதுவும் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது!
ஆணும் பெண்ணும் எல்லோரும் ஒன்று கூடி உண்டும்,கூடியும், ஆடியும்,பாடியும்,சேர்ந்தும் களித்தும், கலந்தும் உறங்கினார்கள்!
மது பார்க்கம் என்பது மதுவுடன் கூடிய மாமிச உணவை விருந்தாக உண்பதும் வழங்குவதுமாகும்! அதுகுறித்து அடுத்து பார்ப்போம்!
மது பார்க்கம் விருந்து!
ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்! ஆரியர்கள் 'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள் படித்து இருக்கலாம்! ஆரியர்கள் பருகியதாக கூறப்படும் சோம பானமும் சுராபானமும் தான் இன்றைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மது வகைகளுக்கும், கிராமங்களில் தயாராகும் உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியான சாராயம் ஆகியவைகளுக்கு எல்லாம் முன்னோடியும் மூத்ததும் ஆகும்!
இந்த சோம பானம்,சுராபானம் ஆரியர்களான பிராமணர்கள் ஆண், பெண் பேதமின்றியும், வயது,உறவு வித்தியாசம் இன்றியும் பருகி வந்தார்கள்! ( அது என்ன நம்ம அரசாங்கம் விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுவா? குடித்தார்கள் என்று சொல்ல?) அதுவும் ஆடு, மாடு என்று கண்டதையும் கொன்று... கறியாக்கி,விதவிதமாக சமைத்து அவற்றை சாப்பிட்டும் அதீத, "ஆரிய தயாரிப்பான" சோமபானம்,சுராபானத்தை பருகினார்கள்!
மதுபர்க்கம் விருந்தைப் பாப்போம்
பதினெட்டு சூத்திரங்களில் ஒன்றான ஆஸ்வலாயண சூத்திரத்தின் பிரிவான கிருஹஜ்ய சூத்திரம் முதல் அத்தியாயம், 24 -வது கண்டிகையில் மது பார்க்கம் கொடுக்கும் முறைகள் சொல்லப்பட்டு இருக்கிறது.
" யாகம் செய்வதற்கு ரித்விக் வீட்டிற்கு வந்தால் அவனுக்கு மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "( 1 - 24 - 1 )
" மணமகன் வீட்டிற்கு வந்தபோதும் மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! " ( மணமகனுக்கு மதுபர்க்கம் கொடுத்தால் பொண்ணு நிலைமை என்னாவது? என்று கேட்க கூடாது)
"அரசனுக்கும் மது பார்க்கம் கொடுக்க வேண்டும்! "(1 - 3 )
" குரு, பெண்கொடுத்த மாமனார், சிற்றபபன் வீட்டிற்கு வந்த காலத்துக்கும் பத்து பார்க்கம் கொடுக்க வேண்டும்! "
சரி உறவு முறையில் உள்ளவர்களுக்கு சாராயம் வாங்கி கொடுப்பதில் என்ன தப்பு ? என்று கேட்கலாம்! தமிழர்களின் நாகரீகம் கலாச்சாரம், உறவைப் பேணுதல், மதிப்பு தருதல் ஆகிய அனைத்துக்கும் எதிரானது, கட்டுப்பாடு அற்ற, காட்டு மிராண்டித்தனம் கோடானது, ஆரியர்களான பிராமணர்களின் வாழ்க்கையும், உறவு முறைகளும் என்பதை குறிப்பிடவே இதனை கூறுகிறேன்!
போகட்டும் மதுபர்க்கம் எப்படி கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
குரு முதலானவர்கள் முதலில் நீரை கொடுத்து முகம் கழுவ செய்து விட்டு, பிறகு மது பார்க்கம் கொடுக்கப் பட இருக்கும் பசுமாட்டை அவர்களுக்கு நிவேதனமாக( ஒப்புவித்தல்,கொடுத்தல்) பண்ணவேண்டும்! அவர்களுக்கு முன்னால் நிறுத்த வேண்டும் (23 ) பிறகு, "ஹதோம பாப்மா மேஹத" என்ற மந்திரத்தை சொல்லி அந்த பசுவை வீட்டிற்கு உரியவன் கொல்ல வேண்டும்!
இப்படி மாமிசமாக்கிய பசுவை கொண்டு, மது பார்க்கம் கொடுக்கப் படுகிறது! காரணம், "மாமிசம் இல்லாமல் மது பார்க்கம் முடியாது" என்று கிருஹஜ்ய சூத்திரம் இருபத்தியாறு சொல்லுகிறது! இப்படி கொல்லப்பட்ட பசுமாடு, அல்லது எருது இவைகளின் இறைச்சியை நெய்யில் வருது, தேன் விட்டு பிசைந்து, உருண்டை செய்து விருந்தினருக்கு படைப்பதே மது பர்க்கமாகும்!
மதுபர்க்கம் விருந்தை பற்றி தெரிந்து கொண்ட உங்களுக்கு.... அதன் சுவைஎப்படி இருக்கும்? என்று கற்பனை வருவதும்,சாப்பிடும் ஆசை வருவதும் இயற்கைதான்! ஆனால் அந்த கொடுப்பினை எல்லாம் நமக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை!
ராமனும், லட்சுமணனும் மது பார்க்கம் கொடுத்து இருகிறார்கள்! முனிவர்களைக் கண்டதும் விரைந்து எழுந்து வணங்கி,பாத்யம்,அர்க்கியம் முதலியவைகளால் பூஜித்து, விதிப்படி பசுமாட்டை நிவேதித்து, கொடுத்ததை அத்யாத்ம ராமாயணம்,உத்தர காண்டம் சொல்கிறது!
" எந்த பசு கொல்லப் பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிராமணர்களுக்கு படைக்க வேண்டும் "(2 .5 . 2 )என்று "அஷ்டகா விதானம்" சொல்லுகிறது! இந்த அஷ்டகா விதானம் குறித்து, அதாங்க ...பசுவை எப்படி கொல்ல வேண்டும் ?எந்த மந்திரத்தைச் சொல்லி கொள்ளவேண்டும்? என்கிற வழிமுறையை, கிருஹஜ்ய சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் நான்காவது கண்டிகையில் சொல்லப் பட்டு உள்ளது!
மது பார்க்கம் இருக்கட்டும், மற்ற வேதங்கள், அர்த்த சாஸ்திரம், மனுதர்ம நூல்கள் சொல்லவதை அடுத்து பார்க்கலாம்!
அர்த்த சாஸ்திரம் குறித்து ஒரு அறிமுகம்!
அர்த்த சாஸ்திரத்தை எழுதியவராக சொல்லப்படும் சாணக்கியருக்கு வேறு கௌடில்யர்,விஷ்ணு குப்தர் ஆகிய பெயர்களும் உண்டு! அர்த்த சாஸ்திரம் பதினைந்து பகுதி உடைய உரைநடை நூலாகும்! ஒவ்வொரு சுலோகமும் முப்பத்தி இரண்டு ஆசைகளுடன் ஆறாயிரம் சுலோகங்களைக் கொண்டது! அர்த்தா என்பதற்கு மனிதர்களின் தன்மை? என்று பொருள். சாஸ்திரம் என்பதற்கு ஒழுக்கத்தின் மேல் எல்லைச் சட்டம் என்று பொருள்? மனிதர்கள் வாழும் நிலப் பகுதியை சேர்த்துக் கொள்வதும் அதைக் காப்பதும் என்பவற்றை அருத்தசாஸ்திரம் எனபது குறிக்கும் என்பர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.
இதில் பெண்களைப் பற்றியும் வஞ்சனையான யாகங்களை செய்வது ஏன் அவசியம் என்பது பற்றி பலவித விமர்சனமான தகவல்கள் உள்ளது!
மாமிசம் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்:
அர்த்த சாஸ்திரம் இரண்டாம் அதிகாரம்,அத்தியாயம் நாற்பத்து ஏழில் மாமிசம் தயாரிப்பது விற்பனை செய்வது குறித்து சட்டமாக குறிப்பிடுவதில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்!
மிருகம் பசு இவற்றின் இறைசிகளை கொன்றவுடன் விற்பனை செய்துவிட வேண்டும்!
(எலும்பு உடையதாக இருப்பின் அதனுள் கலந்து இருக்கும் எலும்புக்கு தகுந்த படி இறைச்சியை ஈடு கொடுக்க வேண்டும்!)
இவற்றுள் கன்று,ஆனேறு,பசு இவைகளைக் கொல்ல தகாதன. ( கொல்ல அனுமதிக் பட்ட பசு இனத்தில், கன்றீனும் பசுவும்,பொலி எருதும் கொல்லக் கூடாது! ( காரணம் விருத்திக்கு பதிப்பு ஏற்படும் என்பதால்)
நோயுற்ற விலங்குகள்,தானே இறந்த விலங்குகள், காட்டில் கொன்று உண்டது போக எஞ்சிய இறைச்சியை,தீ நாற்றமுடைய இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது! அப்படி விற்பனை செய்தால் பன்னெண்டு பணம் தண்டமாக தரவேண்டியது இருக்கும்!
எனபது போன்ற சட்டங்களும் நடைமுறைகளும் இருந்து உள்ளத்தில் இருந்து யாகத்தில் மட்டுமே பசுகளும், ஏனைய உயிகளும் பலியிட்டு கொள்ளப்படவில்லை, மாமிசம் புசிக்கப் படவில்லை எப்போதும் எல்லா நேரத்திலும் மாமிசம் உணவாக பயன்படுத்த பட்டு வந்தது என்பதும், விற்பனை செய்யப்பட்டு வந்ததும் அறியா முடியும்!
ராமனும் லட்சுமணனும் உண்ட மாமிசங்கள்:
" ஸ்ரீராமர் சதா வேட்டையாடிக் கொண்டிருப்பார்.பெரும்பாலும் மான் வேட்டை அவருக்கு பிரியமானது! அவரின் ஆயுதம் வில்லும் அம்புமாக இருந்தது!" ( ஆரிய முசாபிர் பக்கம் 116 .)
"ராமரும் லட்சுமணரும் பட்சியை அடித்து கொண்டு வந்தார்கள். மாலையில் அதன் இறைச்சியை புசித்து,ஒரு விருஷத்தின் (மரத்தின்)கீழ் தங்கியிருக்க சென்று விட்டார்கள்! " ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 52 ,சுலோகம் 102 )
" ராமர் லட்சுமனரைப் பார்த்து விரைவாக ஒரு மானை வதைத்துக் கொண்டு வா! ஏனெனில்,சாஸ்திரத்தில் எழுதப் பட்டு இருக்கிறபடி நாம் செய்ய வேண்டும் என்றார்! லட்சுமணர் இவ்வுத்தரவைப் பெற்று மானை வதைத்துக் கொண்டு வந்தார். அதைக் கொண்டு, "ஹோண்" செய்து புசித்தார்கள்!" ( அயோத்தியா காண்டம்,சருக்கம் 56 ,சுலோகம் 24 -26 )
ராமர் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு சென்றபோது அவருக்கு மது பர்க்கம் வழங்கப் பட்டது!
புதிய இறைச்சியையும் காய்ந்த இறைச்சியையும் குகன் பரதனுக்கு வழங்கினான்!
" பாம்பைப் பொய்கையில் ரோஹிதம்,சக்ரதுண்டம்,நலமீன்கள் ஆகிய பெரிய முள் உள்ள மீன்கள் நிறையக் கிடைக்கும் அவை நல்ல ருசியானவை, அவைகளை வேகவைத்து சாப்பிடுங்கள்" என்று ராமர்க்கு கபந்தன் சிபாரிசு செய்தார்!! (செளரி,இந்தியாவின்களையும்,கலாச்சாரமும், பக்கம், 105 -107 )
சீதை தனது குடிலுக்கு வந்த ராவணனிடம், "அந்தண சீலரே ! அதற்குள் எனது கணவர் பலன்களையும், கிழங்குகளையும் , இறைச்சியையும் எடுத்துக் கொண்டு இங்கே திரும்பி விடுவார்! தாங்கள் அதுவரை இளைப்பாறுங்கள் " என்று உபசரித்தாள்! (அ.லே. நடராஜன்,வால்மீகி ராமாயணம்,)
இப்படி பல நிகழ்சிகள் ராமாயணத்தில் ராமனும் லட்சுமணனும் இதர கதாபாத்திரங்களும் மாட்டு கறியும்,மற்ற இறைச்சியும் உண்டது குறித்து உள்ளான. இன்று ராமர் மட்டு மல்ல, அவரை வழிபடுவதாக கூறும் விஷ்ணு தாசர்கள் பசுதோல் போர்த்திய புலிகளாக மாறி, பசுவேசம் போடுகின்றனர்! அதாவது, சாது வேடம் போடுகின்றனர்!
அதுமட்டும் இன்றி, பசுவை கொல்லக் கூடாது, பசுவதை தடை சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஆளுக்கு தகுந்த படியும், இடத்துக்கு தகுந்தபடியும் பேசியும் வருகின்றனர்! இவர்களது உண்மையான நோக்கம், பசுக்கள் மேல் இவர்களுக்கு வந்த பசுபாசமோ, பிரியமோ நிச்சயம் இல்லை என்பதை புரிந்து கொல்ல வேண்டும், தாங்கள் ஆச்சார, பவித்திரமான, ஒழுக்க சீலர்கள், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற அஷிம்ஷா வாதிகள் என்று இப்போது காட்டிக் கொள்ளவும், இன்று மாமிசம் சாப்பிடும், குறிப்பாக மாட்டுக் கறி சாப்பிடும் ஆதி திராவிட மக்கள் மீதும், இந்து மதத்தை வெறுத்து ஒதுங்கி இஸ்லாம் மார்க்கத்தை புதிதாக ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியர், கிருஸ்தவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பு உணர்வும் தான் காரணமாகும்!
இந்து மதத்தை இந்தியாவின் மதமாகவும், இந்திய நாட்டை இந்துகள் என்று சொல்லும் இவர்களின் தனி உரிமை சொத்தாகவும் எண்ணிக்கொண்டு ஆட்டம் போடும் இந்த ஆரியர்களின் வழித் தோன்றல்களுக்கு தலைவராக இருந்த டாக்டர் மூஞ்சே 1927 ஆண்டு, அம்பாலாவில் நடைபெற்ற இந்து மகாசபையிலும், பம்பாயில் நடைபெற்ற சபைக் கூட்டத்திலும் சொல்லி இருப்பதைப் பாருங்கள்!
"தர்ம சாஸ்திரத்தின் மூலமாக புலால் உண்ணல குற்றம் அல்லது அதர்மம் என்று கூற முடியாது! மேலும் மாமிசம் புசித்து வருவதால், அவர்களின் அனேக சமூகக் கஷ்டங்கள் நிவர்தியாகக் கூடியதாக இருக்கிறது!" என்று குறிப்பிட்டு உள்ளார்!
இன்று விவேகானந்தரின் பிறந்த தினம்.
"வீரத் துறவி" என்று அழைக்கப்படும் விவேகானந்தரை இந்துமத சனாதானிகள் எப்படி எல்லாம் துன்புறுத்தி, துரத்தி அடித்தார்கள் எனபது மறைக்கப் பட்டு வருகிறது! இன்று கன்னியாகுமரி விவேகானதா பாறை அவர் தவம் செய்த இடமாக காட்டப் படுகிறது! புரட்சிகரமாக பேசிய வங்காளத்திலே பிறந்த நரேந்திரரை, கடலில் கல்லைக் கட்டி தூக்கிப் போட்டு கொல்லமுயன்ற கொடூரங்கள் மறைக்கப் பட்டுவிட்டது!
நமது கவலை அவர் பற்றியது அல்ல..! பசு பாதுகாப்பு சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு அவரிடம் உதவி கேட்டு வந்தவருக்கு அவர் சொன்ன பதில் குறித்த பகிர்வு இந்த தொடர் பதிவுக்கு தேவையானது! எனவே விவேகானந்தரின், பசுபாதுகாப்பு சங்கப் பிரதிநிதி உடனான புரட்சிகர உரையாடலை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்!
njagadeedsan9@gmail.com at 19:43
Share
1 comment:
jansi kannan31 December 2018 at 09:34
This comment has been removed by the author.
Reply
‹
›
Home
View web version
About Me
njagadeedsan9@gmail.com
View my complete profile
Powered by Blogger. #👨மோடி அரசாங்கம்
நேற்று நடந்த NDTV conclave நிகழ்வில் H.Raja வுக்கு முடியாமல் போனது யாவருக்கும் தெரியும். லோ ஷுகரா அல்லது stroke எதுவுமா என்று அறுதியிட்டு சொல்லமுடியாத சூழல்.
ராஜாவும் அவரது உதவியாளர்களும் ராஜாவின் சொந்த Carலேயே Apollo சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தபோது அங்கிருந்த திமுகவின் Dr. S A S Hafeezullah அதை கடிந்து கொண்டு, Hotel ல் காரிலேயே அங்கிருந்த அருகாமை மருத்துவமனைக்கு முதலில் சென்று பின்பு அங்கிருந்து ஆம்புலன்ஸில் அபோலோ சென்றால் தான் ட்ராஃபிக் கடந்து நேரத்திற்கும் செல்லமுடியும் என்று அறிவுறுத்தியதாக தகவல்.
Golden hour ட்ரீட்மெண்ட் என்பது உடலுக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த முதல் சில மணி நிமிடங்கள் கொடுக்கும் அதிதீவிர சிகிச்சை. அதை ராஜாவுக்கு கிடைக்க வேண்டும் என்று போராடியவ ஹஃபீஸ் ஒரு மருத்துவர்.
ராஜா காலமெல்லாம் எதிர்க்கும் முஸ்லிம். அவரது நிலைப்பாட்டுக்கு முழுமையான எதிர்நிலைப்பாடு கொண்ட திமுக ஆள்.
எச்.ராஜா நல்லபடியாக உடல்தேறி வந்தபின் இனியாவது முஸ்லிம்களை கிருஸ்தவர்களை ஏதோ குற்றாவாளிகள் போல் சித்தரித்துப் பேசுவதை நிறுத்தவேண்டும்.
மேலும் கட்சி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மாற்றுகட்சிக்காரருக்கும் நேயம்காட்டும் மாண்புகொண்ட மாநிலம் தான் தமிழ்நாடு என்றும் உணரவேண்டும்.
நன்றி:
மேற்படி அழகிய பதிவை எழுதிய சகோ. Uma Pa Se அவர்களுக்கு. #👨மோடி அரசாங்கம்
மிஷனரிகள்: தேச விடுதலை வீரர்களா அல்லது துரோகிகளா? சகோ .ஜெர்ரி தாமஸ்
1. கல்வி உரிமை: அறிவார்ந்த அடிமைத்தனத்திற்கு எதிரான போர்
அக்கால இந்திய சமூகத்தில் கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது. மெக்காலே கல்வி முறையை மிஷனரிகள் ஆதரித்ததன் பின்னணியை ஜெர்ரி தாமஸ் விளக்குகிறார்.
"அவர்ண" பஞ்சமர் (தாழ்த்தப்பட்ட) மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது வெறும் சமூக வழக்கம் மட்டுமல்ல, அது மத ரீதியாகக் கட்டமைக்கப்பட்டது.
மனுதர்ம சாஸ்திரத்தின் விதிகளை அவர் ஆதாரமாக மேற்கோள் காட்டுகிறார். குறிப்பாக, ஒரு சூத்திரன் வேதத்தைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற விதியைச் சுட்டிக்காட்டி, மிஷனரிகள் இந்தக் கல்வித் தடையை உடைத்ததே ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த முதல் சுதந்திரம் என்கிறார்.
2. மனுதர்மம் Vs நவீன சட்டம்
பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாடு எப்படிப் புரட்சிகரமானது என்பதை அவர் விளக்குகிறார்.
பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு தண்டனைகள் வழங்கப்பட்ட முறையை அவர் விமர்சிக்கிறார்.
மனுஸ்மிருதியில் பிராமணர்களுக்கு மரண தண்டனை கிடையாது என்பதையும், அதே குற்றத்தைச் செய்யும் சூத்திரனுக்குக் கடுமையான சித்திரவதை தண்டனைகள் உண்டு என்பதையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார். மிஷனரிகள் வலியுறுத்திய விவிலியக் கோட்பாடு (அனைவரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்) இந்த அநீதியை மாற்ற அடித்தளமிட்டது என்கிறார்.
3. பொருளாதாரச் சுரண்டலும் நில உரிமையும்
ஒடுக்கப்பட்ட மக்கள் நிலம் வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததை அவர் முக்கிய வாதமாக வைக்கிறார்.
ஒரு அடிமைச் சமூகம் ஒருபோதும் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியாது.
'அவர்ண' மக்கள் அதாவது பஞ்சம மக்கள் சொத்துச் சேர்ப்பது பாவமாகக் கருதப்பட்டது.
மனுஸ்மிருதி 8-வது அத்தியாயத்தில், ஒரு சூத்திரன் சொத்து சேர்த்தால் அது பிராமணருக்கே சேரும் என்ற விதியை அவர் மேற்கோள் காட்டுகிறார். மிஷனரிகள் இந்த மக்களுக்கு நிலங்களை வாங்கிக் கொடுத்ததையும், சுயதொழில் செய்ய ஊக்கப்படுத்தியதையும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியாக அவர் கருதுகிறார்.
4. பெண் விடுதலை மற்றும் சமூக ஒழுக்கம்
கேரளாவின் "மறைப்புச் சீலை" (Channar Revolt) போராட்டத்தை அவர் ஒரு முக்கிய ஆதாரமாக முன்வைக்கிறார்.
மிஷனரிகள் சமயப் பணி செய்ததோடு மட்டுமல்லாமல், பெண்களின் கண்ணியத்தைக் காக்கவும் போராடினர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 20கும் மேற்பட்ட ஜாதிப் பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது என்ற சட்டத்திற்கு எதிராக மிஷனரிகள் கொடுத்த ஆதரவையும், அதன் மூலம் உருவான சட்ட மாற்றங்களையும் அவர் விளக்குகிறார். "இது கலாச்சாரச் சிதைவு அல்ல, மனித மாண்பை மீட்டெடுத்தல்" என்பது அவர் வாதம்.
5. தேசபக்தி என்பதன் மறுவரையறை
மிஷனரிகளைத் தேசத்துரோகிகள் என்று அழைப்பவர்களுக்கு அவர் ஒரு நேரடி கேள்வியை எழுப்புகிறார்.
ஒரு நாடு என்பது நிலப்பரப்பு அல்ல, அங்கு வாழும் மக்கள். 90% மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஒரு அமைப்பைப் பாதுகாப்பது தேசபக்தியா?
அல்லது அவர்களை விடுவிப்பது தேசபக்தியா?
"இந்துத்துவத்தின் படி தேசம் என்பது வர்ணாசிரம தர்மத்தைப் பாதுகாப்பதாகும்.
ஆனால் மிஷனரிகளின் படி தேசம் என்பது அதில் வாழும் அனைத்து மனிதர்களின் முன்னேற்றமாகும்" என்று அவர் வாதிடுகிறார்.
6. ஆதாரங்களாக அவர் காட்டும் நூல்கள்:
தனது உரையில் பின்வரும் ஆதாரங்களை அவர் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்:
மனுஸ்மிருதி: ஜாதி ரீதியான பாகுபாடுகளை நிரூபிக்க.
திருவிதாங்கூர் அரசாங்க ஆவணங்கள்:
மிஷனரிகளின் கல்வி மற்றும் மருத்துவப் பணிகளை உறுதிப்படுத்த.
ஜோதிராவ் பூலேவின் எழுத்துக்கள்:
மகாத்மா ஜோதிராவ் பூலேவின் பார்வை (மிஷனரிகளும் அறிவொளியும்)
ஜோதிராவ் பூலே மிஷனரிகளை "விடுதலையின் தூதுவர்களாக" பார்த்ததை ஜெர்ரி தாமஸ் சுட்டிக்காட்டுகிறார்.
பூலே தான் எழுதிய 'குலாம்கிரி' (Gulamgiri) நூலில், ஆங்கிலேயர் ஆட்சியையும் மிஷனரிகளின் வருகையையும் கடவுள் அனுப்பிய வரப்பிரசாதமாக உருவகப்படுத்துகிறார்.
மேற்கோள்: "சூத்திரர்களும் அதி-சூத்திரர்களும் பல நூற்றாண்டுகளாகப் பிராமண ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தனர். அவர்களை விடுவிக்கவே மிஷனரிகளையும் ஆங்கிலேய ஆட்சியையும் இறைவன் தந்துள்ளார்" என்று பூலே குறிப்பிட்டதை ஜெர்ரி தாமஸ் ஆதாரமாகக் காட்டுகிறார். மிஷனரிகள் அளித்த கல்வியே பூலே போன்ற தலைவர்கள் உருவாகக் காரணம் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பகுப்பாய்வு (சமூக சமத்துவம்)
அம்பேத்கர் கிறித்தவத்தைப் பற்றியும் மிஷனரிகளைப் பற்றியும் கொண்டிருந்த விமர்சனப் பூர்வமான அதே சமயம் நியாயமான பார்வையை ஜெர்ரி தாமஸ் விளக்குகிறார்.
மிஷனரிகள் கொண்டு வந்த நவீன கல்வி முறைதான் இந்தியாவில் 'சமத்துவ உணர்வை' விதைத்தது.
ஆதாரம்: அம்பேத்கர் தனது எழுத்துக்களில், மிஷனரிகள் தீண்டத்தகாத மக்களுக்குக் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்ததன் மூலம், அவர்களுக்குத் தங்களைப் பற்றிய 'சுயமரியாதை' (Self-respect) உணர்வை ஊட்டினார்கள் என்று குறிப்பிடுவதை ஜெர்ரி தாமஸ் மேற்கோள் காட்டுகிறார்.
இந்து சமூக அமைப்பால் மனிதர்களாகக் கூட மதிக்கப்படாதவர்களுக்கு, "கடவுளுக்கு முன்பாக நீயும் ஒரு மனிதன்" என்ற செய்தியை மிஷனரிகள் கொண்டு சென்றதே மிகப்பெரிய புரட்சி என்கிறார்.
மிஷனரிகள் எப்படி இந்தியச் சமூக சீர்திருத்தவாதிகளுக்கு ஊக்கமளித்தனர் என்பதை விளக்க.
சுவாமி விவேகானந்தரின் நேர்மையான ஒப்புதல்
இந்துத்துவவாதிகள் விவேகானந்தரை முன்னிறுத்தினாலும், அவர் மிஷனரிகளின் சேவை மனப்பான்மையைப் பாராட்டியதை ஜெர்ரி தாமஸ் ஆதாரமாக வைக்கிறார்.
"நமது நாட்டு மக்கள் வறுமையிலும் அறியாமையிலும் வாடும்போது, மிஷனரிகள் செய்யும் பணிகளை நாம் ஏன் செய்யவில்லை?" என்று விவேகானந்தர் தனது சீடர்களிடம் கேட்டதை அவர் நினைவுகூர்கிறார்.
மிஷனரிகளின் 'சேவை மனப்பான்மை' (Spirit of Service) இந்து சந்நியாசிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று விவேகானந்தர் கருதியதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கேரளா: அய்யன்காளி மற்றும் நாராயண குருவின் காலம்
கேரளச் சூழலில் மிஷனரிகள் ஏற்படுத்திய தாக்கத்தை ஜெர்ரி தாமஸ் விரிவாகப் பேசுகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் பொது வீதிகளில் நடப்பதற்கும், கல்வி கற்பதற்கும் மிஷனரிகள் பெரும் தூண்டுகோலாக இருந்தனர்.
அய்யன்காளி போன்ற தலைவர்கள் மிஷனரி பள்ளிகளில் இருந்துதான் தங்கள் போராட்ட உணர்வைப் பெற்றனர். மேல்ஜாதியினரின் எதிர்ப்பையும் மீறி மிஷனரிகள் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்துக் கொண்ட வரலாற்றுத் தரவுகளை அவர் முன்வைக்கிறார்.
மிஷனரிகளுக்கு எதிரான குரல்களுக்குப் பதில்
"மிஷனரிகள் இந்தியாவை அடிமைப்படுத்த வந்தவர்கள்" என்ற வாதத்திற்குப் பேச்சாளர் அளிக்கும் பதில்:
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி முதலில் மிஷனரிகளை இந்தியாவிற்குள் அனுமதிக்கவில்லை. ஏனெனில் மிஷனரிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கொடுத்தால், அவர்கள் தங்களை எதிர்த்துப் புரட்சி செய்வார்கள் என்று கம்பெனி பயந்தது.
ஆதாரம்: 1813-ஆம் ஆண்டு வரை மிஷனரிகள் இந்தியாவிற்குள் நுழையப் போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது.
எனவே, மிஷனரிகள் காலனித்துவத்தின் கருவிகள் அல்ல, மாறாக அவர்கள் அதிகாரத்தை எதிர்த்த சமூக மாற்றத்தின் கருவிகள் என்று ஜெர்ரி தாமஸ் நிறுவுகிறார்.
முடிவுரை:
ஜெர்ரி தாமஸின் வாதப்படி, மிஷனரிகள் செய்த மதமாற்றம் என்பது வெறும் ஆன்மீக மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் "சமூக விடுதலை" (Social Emancipation). இந்துத்துவா என்பது 'அவர்ண' மக்களை மீண்டும் அடிமைத்தனத்திற்குள் கொண்டு செல்லும் முயற்சி என்றும், மிஷனரிகள் அந்தச் சங்கிலியை உடைத்தவர்கள் என்றும் ஜோதிராவ் பூலே முதல் அம்பேத்கர் வரை அனைவரும் ஒருமித்த கருத்தாகக் கூறுவது
""இந்தியாவின் உண்மையான தேசபக்தி என்பது ஜாதிப் பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்குவது."
அந்த இலக்கை அடைய மிஷனரிகள் ஒரு மிகப்பரிய பாலமாக இருந்தனர் என்பதைத் தகுந்த வரலாற்று மேற்கோள்களுடன் ஜெர்ரி தாமஸ் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார்.
வீடியோ லிங்க்
https://youtu.be/8Do780DK7bs?si=ivq8xHdyJPCDirzy #👨மோடி அரசாங்கம்
யாரும் மறக்கடித்து விடக் கூடாது என்பதற்காக ஒரு நினைவூட்டல்:
• ஜனவரி 30ஆம் தேதி காந்தி இறக்கவில்லை, படுகொலை செய்யப்பட்டார்.
• காந்தியைக் கொன்றவன் கோட்சே.
• நாதுராம் கோட்சே சித்பவன பிராமணன்
• கோட்சே ஆர்எஸ்எஸ்காரன்
• ஆர்எஸ்எஸ் இந்துமதவெறி பிடித்த அமைப்பு
• காந்தியைக் கொல்ல திட்டம்போட்டு பலமுறை முயற்சி செய்தது இந்துத்துவ வெறியர்கள்.
• காந்தியைக் கொன்றவர்கள் இந்து மதவெறியர்கள்
• காந்தியைக் கொன்றவர்கள் தேசத் துரோகிகள்
- Shahjahan R #👨மோடி அரசாங்கம்
ஐநா வரை போய் கஞ்சாவை போதை மருந்து பட்டியலில் இருந்து விலக்க வேண்டும் என்று ஆதரவு கொடுத்து ஓட்டு போட்டவனுக தான் இவனுக
அதுமட்டுமின்றி இவனுக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தான் கஞ்சா தெருவோரம் சர்வ சாதாரணமாக வளர்ந்து கிடைக்கும் வீடியோக்களை பலரும் பகிர்வதை பார்த்தோம்
தமிழ்நாட்டிற்கு வரும் கஞ்சா அனைத்தும் இவனுக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்து தான் வருகிறது அதை தடுக்க வேண்டியது மாநில அரசா ஒன்றிய கோமாளிகளா
அடுத்து அதே மாதிரி போதை மருந்து மொத்தமா இவனுக என்று குஜராத் முந்த்ரா துறைமுகத்தை அதானிக்கு கொடுத்தானுகளோ அன்று முதல் தான் இந்தியாவில் போதை பொருள் அதிகம் இறங்கியது. பெயரளவில் அவ்வப்போது ஒரு சொர்ப்ப அளவை நாங்க பிடித்து விட்டோம் என்று படம் காட்டுவானுக.. அதையும் மாநிலம் விட்டு மாநிலம் வராமல் தடுக்க வேண்டியது யார் #👨மோடி அரசாங்கம்
"காந்தியும், காமராசரும் தமிழரின் கருத்தாயுதங்கள்"
காமராஜரும் காந்தியும் இன்றைக்கு தமிழருக்கு தேவையான கருத்து ஆயுதங்கள். காந்தி ஒரு கட்டத்தில் தத்துவார்த்த ரீதியில் வர்ணாசிரமத்தை பார்த்தார். ஆனால் காங்கிரசுக்குள் நடைமுறையில் அது தத்துவங்களில் இருந்து விலகிப் போய் பார்ப்பன சமூக ஒடுக்குமுறைக்கு ஓரு ஆயுதமாக பயன்படுத்துவதை நேரில் உணர்ந்த போது அதை அவர் எதிர்ப்பதற்க்கு முன் வந்தார். தன்னுடைய ஆசிரமத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். தன்னுடைய பிரார்த்தனை கூட்டங்களில் இஸ்லாமிய வழிபாட்டையும் இணைத்துக் கொண்டார். தன்னுடைய ஆசிரமங்களில் எந்தவொரு உருவத்தையும் வைத்து அவர் வழிபடவில்லை. மாறாக தனது ஆசிரமத்தில் நடைபெற்ற திருமணங்கள் ஜாதி மறுப்புத் திருமணங்களாகவே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஏராளமான சாதி மறுப்புத் திருமணங்களை அவர் நடத்தினார். ஜாதியின் அடிப்படையில் தொழில் நிர்ணயிக்கப்படுவதற்க்கு எதிர்ப்பாக தன்னுடைய ஆசிரமத்துக்குள் அனைத்து ஜாதியினரும் அனைத்து தொழிலையும் செய்ய வேண்டுமென்ற சமூக ஒழுங்குமுறையை கொண்டுவந்தார்.
ஒரு கட்டத்தில் பிராமணர்கள் பொறியியல் படிக்கக் கூடாது, மருத்துவர்கள் ஆகக் கூடாது, அவர்களுடைய பிராமண தர்மமான வேத ஓதுவதையே தான் செய்ய வேண்டும் என்று சொன்னதற்குப் பிறகு தான் காந்தியார் படுகொலை செய்யப்பட்டார். அதுவும் இந்துத்துவா என்ற கொள்கைக்காக இந்துராஷ்ட்ரம் என்ற ஒன்றை உருவாக்குவதற்கு காந்தியின் செல்வாக்கு தடையாக நிற்கிறது என்பதற்காக திட்டமிட்டு மத வெறி சக்திகளினுடைய துப்பாக்கி குண்டுக்கு பலியான மாபெரும் தலைவர் காந்தி. அப்போது பெரியார் இந்த நாட்டிற்கு காந்தி நாடு என்று பெயர் வைய்யுங்கள் என்று கூறினார்.
மத வெறி சக்திகளை எதிர்த்து களமாடுகிற நமக்கு காந்தி இப்போது அதற்காகவே தன் உயிரை நீத்த ஒரு கருத்து ஆயுதம்.
மற்றொருவர் காமராசர். காமராசர் தமிழர் என்ற அடையாளத்தோடு தான் நிற்கிறார். என்ன தான் அவர் தேசிய தலைவராக உயர்ந்தாலும் தேசியத்தின் தலைவராக அவரால் பரிணமிக்க முடியவில்லை. அங்கே வடநாட்டு எதிர்ப்பு அவரை சூழ்ந்து கொண்டு கடுமையான நெருக்கடிகளை உருவாக்கியது. ஒரு கட்டத்திற்க்கு மேல் மனம் நொந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ்நாட்டின் தனித்தன்மையோடு ஸ்தாபண காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார். அவர் ஆட்சியில் இருந்த போது தான், ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கொண்டுவந்த அனைத்து வர்ணாசிரம சட்டங்களையும் ஒழித்து சமூக நீதிக்கான திட்டங்களையும்,இலவசக் கல்வியையும்,மதிய உணவுத் திட்டத்தையும், கிராமங்கள் தோறும் பள்ளிகளையும் கொண்டுவந்து பெரியார் வழியில் தான் இந்த ஆட்சி நடைபோடுகிறது என்று அவர் சொன்னார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக அவர் இருந்த போது பசுவதை தடைச் சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியிலே இருக்கின்ற இந்துத்துவ மதவாத சக்திகள் வலியுறுத்திய போது அதை அவர் ஏற்க மறுத்தார். அதன் காரணமாகவே டெல்லியில் அவரை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் உயிருடன் எரிக்கின்ற மிகப்பெரிய வெறியாட்டத்தை நடத்தி முடித்தார்கள் அதிலிருந்து அவர் உயிர் தப்பினார். எனவே,மதவெறிக்கு பலியானவர் காந்தி. மத வெறியால் உயிருக்கு குறி வைக்கப்பட்டவர் காமராசர். சமூக நீதியினுடைய குரலாக ஒலித்தவர் காமராசர். பார்ப்பனரல்லாத 97% மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்று ஒரு கட்டத்தில் மனந்திறந்து கூறியவர் காந்தி.
எனவே காந்தியும்,காமராசரும் இன்றைக்கு தமிழருக்கு தேவைப்படுகிற ஒரு கருத்தாயுதங்களாக இருப்பதால் அந்த தலைவர்களின் நினைவுகளை நாம் போற்றுவோம்.
-விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர் திவிக ) #👨மோடி அரசாங்கம்
ஒரு ராஜஸ்தான் நண்பரோடு இன்று முழுதும் பயணம் செய்ததால், ராஜஸ்தான் பற்றிய 10% புரிதல் கிடைத்தது.!
1. ராஜஸ்தான், தங்களுடைய ராஜஸ்தானி மொழியை தொலைத்து விட்டது.!
2. ராஜஸ்தானில் ஆணாதிக்க, பெண்ணடிமைத்தன கலாச்சாரம் மேலோங்கி உள்ளது.
பெண்கள் வீட்டில் முக்காடு போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.!
மாமனாரிடம் மருமகள் பேசக் கூடாது.!
வயதில் மூத்த ஆண்களிடம் பேசும் போது, முகத்தை சேலையால் மூடிக் கொண்டுதான் பேச வேண்டும்.!
3. பெண் பிள்ளைகள் 10ம் வகுப்பு மேல் படிக்க கூடாது.!
4. வீட்டில் உணவு சமைப்பதும், ஆண்களின் பாலியல் தேவையை நிறைவேற்றுவது மட்டுமே, பெண்களின் கடமை.!
5. திருச்சி போன்ற ராஜஸ்தான் நகரத்தில் உள்ள உணவு விடுதியில் (Hotel) கூட, கீழ்சாதி மக்கள் உள்ளே அமர்ந்து உணவு உண்ண மறுக்கப்படுகிறது.!
வாகன ஓட்டுநர் (Car Driver), பிஹார் போன்ற மாநில மக்கள் ஹோட்டலுக்கு வெளியே நின்றுதான் உணவு உண்ண வேண்டும்.!
6. திருச்சி போன்ற ராஜஸ்தான் நகரத்தில் இருந்து அருகில் உள்ள தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் போன்ற ராஜஸ்தான் நகரங்களுக்கு செல்ல, 2 மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே உள்ளது.!
இரவு 7 மணிக்கு பிறகு பேருந்து வசதி கிடையாது.!
7. கல்வி, பொருளாதார, மருத்துவ வசதிகள் எல்லாம் பார்ப்பணர்கள் மற்றும் உயர்சாதி மக்களுக்கு மட்டுமே என்ற எழுதப்படாத விதி உள்ளது.!
இப்படிபட்ட வாழ்க்கை வசதிகளை வழங்கவே, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரத் துடிக்கிறது.!
இதைத்தான் நீங்களும் விரும்புகிறீர்களா, திமுக வெறுப்பாளர்களே.! சங்கிகளே.!
சங்கிகளுக்கு பெரியாரை கண்டால் ஏன் எரிகிறது என்று புரிகிறதா.!
தமிழ்நாட்டில் பார்ப்பணர்களுக்கு மரியாதை இல்லை என்று, குருமூர்த்திகள் ஏன் பேசுகின்றன
இப்பொது புரிகிறதா.!
(#Kandasamy #👨மோடி அரசாங்கம்
நீதிபதியா அல்லது சனாதனவாதியா? தொழிற்சங்கங்கள் குறித்த கூற்றும் அதன் உள்நோக்கமும்.
'தொழிற்சங்கங்களால்தான் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன' என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அண்மையில் குறிப்பிட்டிருப்பது, ஒரு தனிநபரின் சாதாரணக் கருத்தாகக் கடந்து போக முடியாத அளவுக்கு, இந்திய ஜனநாயக அமைப்பில் மிகுந்த ஆபத்தான அரசியல் தாக்கம் கொண்டதாகும். நீதித்துறையின் உச்சப் பொறுப்பில் இருப்பவர் சொல்லும் இத்தகைய கூற்றுகள், வெறும் அபிப்பிராயங்களாக அன்றி, சமூகத்தின் மீது திணிக்கப்படும் ஒரு வழிகாட்டும் அரசியல் சிந்தனையாகவே மாற்றப்படுகின்றன.
குறிப்பாகத் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான வழக்குகளில், கீழ்நிலை நீதிமன்றங்கள் இந்த வகையான கருத்துகளை ஒரு மறைமுக வழிகாட்டுதலாக (Judicial Guidance) எடுத்துக்கொள்ளும் சூழலில், இது உழைக்கும் வர்க்கத்தின் மீது சட்டபூர்வமான அழுத்தமாக மாறும் அபாயம் உள்ளது.
ஒரு நீதிபதியாகத் தரவுகளைப் பார்க்க வேண்டிய இடத்தில் இருப்பவர், தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கான உண்மையான பொருளாதாரக் காரணங்களைக் கவனிக்கத் தவறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புள்ளிவிவரங்களின்படி, 95 சதவீதத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு நிர்வாகக் குறைபாடுகள், நிதி நெருக்கடி மற்றும் சந்தைப் போட்டி ஆகியவையே காரணங்களாக உள்ளன.
தொழிலாளர் போராட்டங்களால் மூடப்படும் தொழிற்சாலைகள் வெறும் 3 சதவீதத்திற்கும் குறைவானவை. இத்தகைய தெளிவான தரவுகள் இருக்கும்போது, ஒரு நீதிபதி ஒட்டுமொத்தப் பழியையும் தொழிற்சங்கங்கள் மீது சுமத்துவது, அவர் நீதியின் தரப்பிலிருந்து பேசுகிறாரா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் தரப்பிலிருந்து பேசுகிறாரா என்ற ஐயத்தை எழுப்புகிறது.
நீதிமன்றத்தின் வாயிலாகப் பேசப்படும் இத்தகைய மொழி, உண்மையில் அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளின் குரலாகவே ஒலிக்கிறது. இது நீதியின் பார்வையல்ல; மாறாக, மூலதனவாதத்தின் தோல்விகளை மறைத்து உழைப்பவர்களையே குற்றவாளிகளாக்கும் ஒரு முயற்சியாகும். ஒரு நீதிபதி வரலாற்றையும் தொழிலாளர் சட்டங்களின் சமூகத் தேவையையும் அறிந்திருக்க வேண்டும்.
ஆனால், இங்குத் தொழிலாளர் உரிமைகளை ஒரு சுமையாகச் சித்தரிப்பது என்பது, நீதியின் அடிப்படைப் பண்பான "பலவீனமானவர்களின் பக்கம் நிற்கும் அறத்தை" கைவிட்டு, வலிமையான அதிகார மையங்களுக்குச் சேவை செய்வதாகவே அமைகிறது.
இந்தக் கூற்றில் ஒளிந்திருக்கும் மற்றொரு ஆபத்தான பக்கம், இது ஒரு சனாதனவாதச் சிந்தனையின் நவீன வடிவமாகத் தெரிவதுதான்.
உழைப்பவனுக்கு உரிமை இல்லை, அவனுக்குக் கடமை மட்டுமே உண்டு என்ற மனுஸ்மிருதி காலத்துச் சிந்தனையைத் தான் இன்றைய தொழிலாளர் கொள்கைகளும் நீதிபதியின் கூற்றும் பிரதிபலிக்கின்றன.
சனாதனப் பொருளாதாரக் கொள்கையின்படி, உழைப்பவன் என்பவன் ஒரு குடிமகனாக அல்ல, அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு சேவகனாகவே பார்க்கப்படுகிறான்.
"ஷிரம் ஷக்தி நிதி – 2025" போன்ற திட்டங்களும், 44 தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நான்கு சட்டத்தொகுப்புகளைக் கொண்டு வந்ததும் இந்தச் சனாதனச் சிந்தனையின் சட்டபூர்வமான வெளிப்பாடுகளே ஆகும்.
சனாதன மனோபாவம் என்பது உழைக்கும் மக்களை அதிகாரமற்றவர்களாகவும், கேள்வி கேட்கும் உரிமையற்றவர்களாகவும் வைத்திருக்க விரும்புகிறது.
தொழிற்சங்கங்கள் என்பது தொழிலாளர்களின் உரிமையைக் காக்கும் அரண் மட்டுமல்ல, அது நவீன அடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பும் ஜனநாயகக் கேடயமாகும்.
அத்தகைய ஒரு அமைப்பைப் பிரச்சனையாகச் சித்தரிப்பது என்பது, இந்தியாவை மீண்டும் ஒரு வர்ணாசிரமப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் தள்ளும் முயற்சியே தவிர வேறில்லை.
உழைப்பவரின் கைகளில் இருக்கும் தொழிற்சங்கம் எனும் வலிமையான ஆயுதத்தைப் பறிப்பதன் மூலம், அவர்களைப் பெருமுதலாளிகளின் தயவில் வாழும் அடிமைகளாக மாற்ற இந்தச் சிந்தனை வழிவகுக்கிறது.
இந்தியா இன்று ஒரு ஜனநாயக நாடாகத் திகழ்வதற்கு இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் செய்த போராட்டங்களே அடிப்படை.
8 மணி நேர வேலை முதல் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வரை அனைத்தும் இந்தப் போராட்டங்களின் விளைவே.
தொழிற்சங்கங்கள் இல்லையென்றால், இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்திருக்காது; அது ஒரு பெரும் கார்ப்பரேட் கம்பெனியாக மட்டுமே இருந்திருக்கும்.
தொழிற்சங்கங்களை உடைக்க நினைப்பது இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பை உடைப்பதற்குச் சமமாகும்.
இடதுசாரிகள் இல்லையென்றால் இந்தியா சமத்துவமில்லை, இடதுசாரிகள் இல்லையென்றால் இந்தியா மனிதநேயமில்லை.
இடதுசாரிகள் இல்லையென்றால்
தொழிற்சங்கம் இல்லையென்றால்
மனிதநேயமில்லை.
சமத்துவமில்லை
ஜனநாயகமில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்! இந்தியாவைக் காப்போம்!
இரா.தமிழ் பெருமாள்
30.01.2026 - தேனி. #👨மோடி அரசாங்கம்
17 கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஒரு காட்டை அழிக்க அதே அளவு தீப்பந்தம் தேவை இருக்காது.ஒரே ஒரு, சிறு பொறி போதும்.
பெரும் மலையை தகர்க்க அதன் அளவு உள்ள வெடி மருந்து தேவை இல்லை.ஒரு சின்ன ஜெலட்டின் குச்சி போதும்.
அப்படித்தான் நேற்று ஒரு தீப்பொறி கிளம்பி இருக்கிறது. மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் நடந்த குடியரசு தின விழாவில் பேசிய நீர்வளத் துறை அமைச்சர், குடியரசு தினத்தின் வரலாற்றைப் பேசும்பொழுது திட்டமிட்டு புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் உடைய பெயரை தவிர்த்து விட்டு பேசி இருக்கிறார்.
அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக் கான மக்களுக்கு இது உவப்பாக இருந்ததா கசப்பாக இருந்ததா தெரியவில்லை. ஆனால் அந்த விழாவில் பங்கேற்றுக் கொண்ட வனத்துறை அதிகாரி மாதவி ஜாதவ் என்கிற புரட்சிக்காரர் அந்த நிமிடத் திலேயே பெருங்குரலெடுத்து கோஷமிட்டு தனது எதிர்ப்பை அந்த இடத்திலேயே பதிவு செய்து இருக்கிறார்.
"நெருப்பை பொட்டலம் கட்ட முடியாது"
என்று ஒரு பழமொழி உண்டு. ஆம் பொட்டலம் கட்ட முடியாத நெருப்பாக மாறி அந்த சூழலையை சுட்டெரித் திருக்கிறார் பெருமிதத் திற்குரிய
மாதவி ஜாதவ்.
அதே இடத்தில் கலகக் குரலால் எதிர்ப்பைதெரிவித்த அவர், "அதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கூறப்போவதில்லை" என்று திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார்.
மாறாக, "
என்னை நீங்கள் இடை நீக்கம் செய்யுங்கள் கவலை இல்லை. இடை நீக்கம் செய்யப்பட்ட பின் மணல் லாரி இழுக்கச் சொல்லுங்கள் கவலை இல்லை. சேற்றில் இறங்கி கூலி வேலை பார்க்க செய்யுங்கள் கவலையில்லை. ஆனால் அம்பேத்கர் அவமதிக்கபடுவதை, அம்பேத்கரை புறக்கணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
என்று முழங்கி இருக்கிறார்.
ஒரு பெரும் புரட்சியின் துவக்கம் இது போல் ஒரு சிறு சம்பவமாக இருந்ததை வரலாறு நமக்கு சொல்லிச் செல்கிறது.AFSPA 1958 என்கிற ராணுவ சட்டத்தை எதிர்த்த பெருங்கலகமும் போராட்டமும் மனோரமாதேவி என்கிற ஒரு சமூக சேவையின் இறப்பால் துவக்கி வைக்கப்பட்டது என்பதை மணிப்பூரின் வரலாறு பேசுகிறது. கப்பல் படையெழுச்சியின் துவக்கம் புள்ளி கூட அப்படித்தான்.
எனவே இந்த எதிர்ப்பை இந்த கலகக் குரலை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. இங்கு இருக்கிற ஏவல் ஊடகங்கள் ஒரு போதும் இது போன்ற சம்பவங்களை செய்தியாக்காது. மாறாக ஒரு 13 வயது பணக்காரப் பெண், "மகளிர் உரிமை தொகையை யார் கேட்டார் எங்களுக்கு ஒன்றும் தேவையில்லை என்று சொன்னால் அதை ஒரு புரட்சி குரலாக மடைமாற்றி மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்திலிருந்து சமூக ஊடகங்கள் வரை எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்யும்.
எதைப்பரபரப்பாக்கவேண்டும் எதை நீர்த்துப்போக்கச்செய்யவேண்டும் என்கிற சூழ்ச்சிக்காரர்களின் கையில் ஊடகங்களின் குடுமி சிக்கியிருக்கிறது.
அப்படிப்பட்ட கொடுங்காலத்தில் நாம் இருக்கிறோம். அந்த வியூகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறுகிற வல்லமை மக்கள் சக்திக்கு மட்டுமே இருக்கிறது . #👨மோடி அரசாங்கம்
இதைச் சொல்வதூ யார்? நாலாம் கிளாஸ்கூட தேர்ச்சி பெற முடியாமல், போலி முதுகலைப் பட்டம் அச்சடித்து வைத்திருக்கும் ஒருவர் பேசுகிறார். கொடுமை...
குஜராத் தண்ணீர் தொட்டி மாதிரியா திறப்பு விழா அன்றே மலேர்னு சாய்ந்து பப்பரப்பான்னு கிடந்துச்சே அது மாதிரியா நல்லா தரத்தை தருவீங்க சங்கி திருட்டு மூடர் கூட்டங்களா.
நீங்க போடுறது தலை முதல் கால் வரை வெளிநாட்டு பொருட்கள் மறந்துட்டாருப்போல
முதலில் தாங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும் பிறகு இதை பற்றி நீங்கள் பேச வேண்டும் ஒன்றிய பிரதமரே...
டாலருக்கு நிகரா இந்திய ரூபாயை கொண்டு வருவேன் என்று சொன்னது யார் அமெரிக்கா காரர்கள் இந்திய விசா வாங்குவதற்கு கீயூ ல நிற்க வேண்டும் என்று சொன்னது யார் டீசல் பெட்ரோல் விலை விண்ணை முட்டுகிறது அதை பாதியாக ஆக்குவேன் என்று சொன்னது யார் 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு அக்கவுண்ட்லயும் போடுவேன் என்று சொன்னது யார் இதையெல்லாம் மறந்து பேசுகிறீர்களே சார் வடநாட்டில் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டின் எப்படி விஷத்தை கக்குவது யார் பிரிவினை செய்வது யார் உண்மையை பேசினால் எல்லோருக்கும் கசக்கும்
இந்தியா சர்வதேசங்களுடன் போட்டியிடும் நிலையை 2014 க்கு முன்பே அடைந்து விட்டது. துரதிஷ்டவசமாக மத வெறியர்களிடம் நாடு சிக்குண்டு பின்தங்கி விட்டது. இருந்தாலும் முயற்சியைத் தொடர்கிறோம். அங்குட்டு உங்க ஆட்களையும் திருந்தச் சொல்லுங்க ஜி. #👨மோடி அரசாங்கம்













