703 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், அதாவது 1323ம் ஆண்டு பங்குனி உத்திரத்தின் 8ம் நாள். ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் கொலுசு சத்தம் ரம்மியமாக இருந்தது. ஆண்களும், பெண்களும் பஜனைகள் பாடியபடி பக்தியில் திளைத்திருந்தனர். பூலோக வைகுண்டம், சொர்க்கம் போல காட்சியளித்தது.
ஆனால் அடுத்து அரங்கேறிய பயங்கரம் தமிழகத்தின் வரலாற்றையே மாற்றியது. உலுக் கான் என்கிற முகமது பின் துக்ளக் தனது படைகளுடன் ஸ்ரீரங்கத்தின் உள்ளே புகுந்து, திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்த, நிராயுதபாணியாக இருந்த சாமான்ய பக்தர்களை, மதவெறி கொண்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 12,000 பேரை வெட்டிக் கொன்றான்.
காவிரியாற்றில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. கோவில் சூறையாடப்பட்டது. கோவில் பட்டாச்சாரியார்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து, உற்சவரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். பெருமாளை காக்க, வெள்ளாயி என்பவள் நடனமாடி துக்ளக் படைகளின் கவனத்தை திசை திருப்பினார். அவனது தளபதியை கோபுரத்தின் உச்சிக்கு அழைத்து சென்று, தள்ளி கொன்று, தானும் பிறகு கீழே குதித்து உயிர் துறந்தார். உற்சவர் சிலையை, பட்டர்கள் திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.
ஸ்ரீரங்கத்தை கைப்பற்றிய துக்ளக், கோவிலை இழுத்து மூடினான். 48 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி நீடித்தது.
1371ம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தின் கம்பண்ணர் இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் சுயராஜ்யம் ஏற்படுத்தினார். கோவில் மீண்டும் திறக்கப்பட்டது...
#பங்குனி உத்திரம் #பங்குனி உத்திரம் 🙏💯 #வரலாற்றில் இன்று
இந்தியா, 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் எரிபொருள் டேங்கர் ஒன்றை இலங்கைக்கு அனுப்புகிறது.
இந்திய எதிர்ப்பு கொண்ட முட்டுச் சந்துோராளிஸ் இந்த பெட்ரோல் டீசலை பயன்படுத்துவாங்களா இல்ல புறக்கணிப்பான்களா என்று பார்ப்போம் ! #இலங்கை #🙋♂ நாம் தமிழர் கட்சி #இந்திய கடல்
#📢தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு🗳️ சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாநில முன்னாள் முதல் முதலமைச்சர்
பூ.ச.குமாரசுவாமி ராஜா நினைவு தினம்
ராஜபாளையத்தில் பூசப்பட்டி சஞ்சீவி ராஜா- முத்தம்மாள் இணையருக்குப்
1898 ஜூலை 8
இராசபாளையத்தில் பிறந்த
குமாரசாமி ராஜா மாணவப் பருவத்திலேயே அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார். ராஜபாளையத்தில் ஹோம்ரூல் இயக்க மாநாடு ஒன்றை நடத்தினார். பி.பி. வாடியா அதற்குத் தலைமை தாங்கினார்.
அப்போது சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், சென்னை மாநில முதல் முதல்வராகவும்
1949ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வரை பொறுப்பில் இருந்தார்.
1932ஆம் ஆண்டு நீதியற்ற சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் சிறை சென்றார். மேலும் 1934ஆம் ஆண்டு திருநெல்வேலி, மதுரை மற்றும் இராமநாதபுரம் அடங்கிய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
1954 முதல் 1956 வரை ஒரிசா ஆளுநராகவும் பணியாற்றினார்.அவரது பணிக்காலத்தில் மதுவிலக்கு,காதித்துணிகளுக்கு ஆதரவு மற்றும் ஆலயப்பிரவேச ஆணை ஆகியன குறிப்பிடத்தக்கன.
தமது வீட்டை காந்தி கலைமன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடை அளித்த ராஜபாளையத்தில் மண்ணின் மைந்தர்
பி.எஸ். குமாரசாமி ராஜா
1957 மார்ச் 16ல் மறைந்தார். #🔶பாஜக #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #🙏நமது கலாச்சாரம்
https://www.facebook.com/share/v/1CYqyUswky/ #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #🔶பாஜக #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🙋♂ நாம் தமிழர் கட்சி
https://youtube.com/shorts/bni-R51WLd8?si=ocS9rGWyLziBB_xW #🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
https://youtube.com/watch?v=SawEishqtvc&si=uL45O3Y97jM7YU7I #🖤 14 பிப் கருப்பு தினம் 😔 #📺ஹிந்தி சீரியல்கள் #😎கொரியன் டிராமா #🎬 சினிமா #📺அரசியல் 360🔴
#🍷டாஸ்மார்க், பார்களுக்கு🍺 விடுமுறை😄 மதுபானத்தை விட கோகோ கோலா அபாயகரமானது - சீன விஞ்ஞானிகள் கூறும் திடுக்கிடும் உண்மைகள்!
மது அருந்துவதால் மட்டுமே கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சீன விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வுகள் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளன.
கோகோ கோலா போன்ற சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள், மதுவை விடவும் கல்லீரலை மிக மோசமாகப் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதிலுள்ள அதிகப்படியான சர்க்கரை, கல்லீரலில் கொழுப்பு படிதல் (Fatty Liver Disease) மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் போன்ற தீவிர பாதிப்புகளை உண்டாக்குகிறது.
மதுவால் கல்லீரல் சேதமடையும் என்பது பரவலாகத் தெரிந்த விஷயம் என்றாலும், சர்க்கரை கலந்த பானங்களின் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.
இத்தகைய சோடா பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து, அதன் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்துகிறது. பலரும் இதன் பின்னால் இருக்கும் அபாயத்தை உணராமலேயே அன்றாடம் இந்த பானங்களைப் பயன்படுத்துவது ஒரு கவலையளிக்கும் நிதர்சனமாக உள்ளது.
நாம் பருகும் பானங்கள் விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது காலத்தின் கட்டாயம். சோடா மற்றும் செயற்கை குளிர்பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது இயற்கையான இனிப்பு கொண்ட பானங்களைத் தேர்ந்தெடுப்பது கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒரு ஆரோக்கியமான வாழ்விற்கான பயணம் நாம் எடுக்கும் இத்தகைய சிறிய மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய மாற்றங்களிலிருந்தே தொடங்குகிறது.
#✈️ இந்திய விமானப்படை தினம் ✨ விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலை யில் தேசியக் கொடி ஏற்றி சாதனை படைக்கப்பட்டது.
*1932- அக்டோபர் 8 தேசியக் கொடி பறக்க விடப்பட்டது*
மலை உச்சி யில் சுமார் 100 அடி சுற்றளவும், 60 அடி உயரமும் கொண்ட ராமர் கல் மேல் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. ராமர் கல்லை தொலைவில் இருந்து பார்த்தால் தனியாக நிற்பது போல் காட்சி தரும். இந்த கல்லில் அப்போதைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசியக் கொடி ஏற்றிவிட வேண்டும் என்ற தாகத்துடன் இருந்தனர்.
ஆனால் அப்போது தெருக்களில் தேசியக் கொடி ஏற்றினால் போலீசார் அகற்றி விடுவர் நகரில் எங்கும் கொடி பறக்க தடை இருந்த காலம் அது.
இளம் தொண்டர்களான
டி.பி.ராமசாமி . சுப்பராஜா, சக்கராஜா, வேல், ராமையா , கந்தசாமி மற்றும் அப்போது 12 வயது சிறுவனாக இருந்த வசந்தன் ஆகியோர் இராமர் கல்லில் ஏற முடிவு செய்து, அதற்குண்டான ஏணி தயார் செய்ய திட்டமிட்டனர். அது இயலாத காரியம் எனக் கருதி இரண்டு தினங்களுக்கு முன்பே அவர்கள் அதிகமான உயரம் கொண்ட மூங்கில் கம்புகள் பலவற்றை எடுத்துக் கொண்டனர். அக்கம்புகளில், வெட்டப்பட்ட கிளைகள் அனைத்தையும் படிக்கட்டுகள் போல் இருக்கும் படியாக தயார் செய்து, மூங்கில் கம்புகளையும், பெரிய விளக்குகள், சுத்தியல், கடப்பாரை போன்ற பொருட்களுடன், இராமர் கல் பகுதிக்கு சென்றனர். கல்லின் உச்சியில் ஏறும் பணியினை இருவர் ஏற்றுக்கொண்டு மூங்கில் கம்புகளையும் கட்டி ஒரே கம்பாக மாற்றி இராமர் கல்லின் இருகில் உள்ள மொட்டைப் பாறையில் சாய்த்து வைத்து இருவரும் இராமர் கல்லில் ஏறினர். ஒரு சிறு நடுக்கம் கண்டாலும் கீழே விழுந்து உயிர் விட வேண்டிய நிலை. பாறையின் கீழே நால்வர் தங்களது கரங்களால் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வசந்தன் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொடுத்தார். இரண்டு மணி நேர தீவிர முயற்சியால் இரவோடு இரவாக, ஒரு பெரிய அளவில் உள்ள தேசியக் கொடியினை இராமர் கல்லின் உச்சியில் கம்பி பதித்து, அதில் கொடி ஏற்றி பறக்க விட்டனர். ஏறக்குறைய அதிகாலை 2 மணி வரை இருந்துவிட்டு நகருக்கு அந்த குழு திரும்பிவிட்டனர்.
விடியும் பொழுது, இராமர் கல் உச்சியில் உள்ள தேசியக்கொடி பறப்பதை ஒட்டுமொத்த ஊர்மக்கள் ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும், வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இதைக் கேள்விப்பட்ட நகரின் சப்-இன்ஸ்பெக்டர் தன்னிடம் நகரில் பல வாரங்களாக முகாமிட்டுள்ள துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீஸ் படையினை இராமர் கல்லுக்குக் கூட்டிச் சென்று எப்படியாவது மேலே ஏற்றிய கொடியினை பிடுங்கிவிட முயற்சித்து ஏமாந்துபோய், கடைசியில் இராமர் கல்லினை சுற்றி 60 துப்பாக்கி ஏந்திய போலீசாரை தேசியக் கொடியினை நோக்கி சுட ஆணையிட்டார். கொடி மிகப் பெரியது என்பதால் அதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. மாறாக கொடியில் சிறு ஓட்டைகளை மட்டுமே போட முடிந்தது..முயற்சி தோல்வியுற்ற நிலையில், போலீஸ் படை திரும்பிச் சென்றது. பல மாதங்கள் வரை அந்த தேசியக் கொடி இராமர் கல்லில் பறந்த வண்ணமாய், நாளைக்கு கிடைக்கும் விடுதலைக்காக சுடர் விட்டுக் கொண்டிருந்தது
#😲தளபதி விஜய் கைது… அமைச்சர் பரபரப்பு!😱 சமூக வலைதளங்களில் இதுவரை பார்த்த வரையிலும் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் கரூர் அசம்பாவிதத்தில் உயிரிழந்த 41 உயிர்களை பற்றியோ, கதறி துடிக்கும் அவர்கள் குடும்பம் பற்றியோ துளியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை....அவர்கள் கவலை, கதறல்கள் எல்லாம் விஜய் க்கும், அவர் அரசியலுக்கும் கெட்ட பெயர் வந்து விட கூடாது என்பது பற்றியதாக தான் இருக்கிறது....
ஆரம்பத்தில் இருந்தே படத்திற்கு கூட்டம் கூடுவதை பார்த்து புளகாங்கிதம் அடையும் நடிகனின் மனநிலையில் தான் விஜய் இருக்கிறார்... தன்னால் தனக்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு தலைவனாக உடனடியாக முன் வந்து நின்றிருக்க்க வேண்டும்.... அச்சப்பட்டு ஓடியிருக்க கூடாது....
ஹீரோ வாக நடிப்பது ஈஸி...ஆனால் உண்மையான ஹீரோவா இருப்பது ரொம்ப கஷ்டம்... தலைமை ஏற்று வழிநடத்தும் பண்பு என்பது ஒரு கலை...அது இன்னும் இவருக்கு கைவர வில்லை.... சினிமா டயலாக் பேசி தலைவன் ஆகி விடலாம் என்று நினைப்பதெல்லாம் விஜய் யின் பக்குவமில்லாத முதிர்ச்சியற்ற அரசியல் அறிவையே வெளிப்படுத்துகிறது....
இங்கே வருத்தமெல்லாம், தன்னை பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் அக்கறை கொள்ளாத, விஜய் யை தீவிரமாக பின்பற்றும் நிதானமற்ற விவேகமற்ற, வெறித்தனமான உணர்ச்சிவசம் கொண்ட இன்றைய தலைமுறையினரை நினைத்து தான்....
விஜய் ரசிகையாக, நடிகராக விஜய்யை பிடித்த அளவிற்கு, அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.....













