முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
ShareChat
click to see wallet page
@479671514
479671514
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
@479671514
நல்லதே நினை! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
#நல்லதே பேசு நல்லதே நினை உரிமைதொகை ரூ.5000 – முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முஸ்லிம் மக்கள் கழகம் பாராட்டு சென்னை: பெண்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தை உயர்த்தும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அரசு, மகளிர் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக முதல்வர் அறிவித்த மகளிர் உரிமை தொகை ரூ.5000 வழங்கும் திட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பெண்களின் உரிமை, சுயமரியாதை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு வரலாற்று சிறப்புமிக்க பணியை செய்து வருகிறது. தமிழகத்தை பெண்கள் முன்னேறும் மாநிலமாக மாற்றும் நோக்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மகளிர் ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கும் திட்டம் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் உதவியாக இருக்கும். இதனை முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் வரவேற்று பாராட்டுகிறோம். மேலும், பெண்களின் ஆதரவு அதிகரித்து வருவதால் மீண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நிலை உருவாகி வருகிறது. அதற்காக முஸ்லிம் மக்கள் கழகம் முழு ஆதரவு அளித்து பாடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லதே பேசு நல்லதே நினை - CA( CA( - ShareChat
#நல்லதே பேசு நல்லதே நினை மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எனது பாசத்திற்கும் அன்புக்கும் உரிய சகோதரர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியை தலை வணங்கி காணிக்கையாக்குகின்றேன். நன்றி வணக்கம்
நல்லதே பேசு நல்லதே நினை - ShareChat
#நல்லதே பேசு நல்லதே நினை டாக்டர் விக்னேஷ் – பிரியதர்ஷினி திருமண வரவேற்பு விழா திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் கோ. அசோகன் – ஹேமலதா தம்பதியரின் மூத்த மகன் டாக்டர் அ. விக்னேஷ் மற்றும் ஏ. பிரியா (எ) பிரியதர்ஷினி ஆகியோரின் திருமண வரவேற்பு விழா 11.2.2026 புதன்கிழமை மாலை 7 மணிக்கு திண்டிவனம் ஜே.வி.எஸ். சக்தி மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன், திமுக மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஆர். சேதுநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் பா. சிராஜ்பேகம், முஸ்லிம் மக்கள் கழகத்தின் திண்டிவனம் நகர செயலாளர் மு. அப்துல் ஹக்கீம், ஒலக்கூர் சரஸ்வதி சட்டக் கல்லூரி மாணவி ஜை. ஆயிஷா பேகம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நல்லதே பேசு நல்லதே நினை - 41mm f/1.79 1/10Os IS0108 vivo VSOe AGEA 02/11/2026, 20:55 41mm f/1.79 1/10Os IS0108 vivo VSOe AGEA 02/11/2026, 20:55 - ShareChat
#நல்லதே பேசு நல்லதே நினை அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா – இஸ்லாமிய கண்காட்சி, ரமலான் வரவேற்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா, அரபு பாடசாலை (மக்தப்) மற்றும் மாலை தனிப்பயிற்சியகம் சார்பில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (8.2.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு புது பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஏ. ஷேக் தாவூத் தலைமையேற்று நடத்தினார். மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஹ. முஹம்மது ஜாவிது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திண்டிவனம் அனைத்து பள்ளிவாசல் முத்துவல்லிகள் மற்றும் நிர்வாகப் பெருமக்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக மதினா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ். ஹபீபுல்லாஹ் கிராத் ஓதினார். இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை இனாம் பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஏ. ஷாஹுல் ஹமீது தொடக்கி வைத்தார். வரவேற்புரையை ரஹ்மானியா பள்ளியின் செயலாளர் ஹாஜி காதர் மொய்தீன் நிகழ்த்தினார். தொடர்ந்து மௌலானா மௌலவி எஸ். சுல்தான் இப்ராகிம், மௌலானா மௌலவி எஸ். ஹபீபுல்லாஹ், கூபா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஏ. அபூபக்கர் சித்தீக், நவாப் பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஏ. நயாஸ் அஹ்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு பேருரையாக “நவீன காலத்து குழந்தைகளும் பெற்றோர்களும் – ரமலான் வரவேற்பு” என்ற தலைப்பில் பன்னூர் ஆமீர் கலீமி அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஏ. அப்துல் ஸத்தார் உரையாற்றினனார். இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகி ஷேக் இப்ராஹிம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் திரளான இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
நல்லதே பேசு நல்லதே நினை - ~றுபIயi ய்ப / திண்டவனம் அல்மத்ரஸத்தர்ரஸ்மாமியாவில் 17 ஆம்ஆண்டுிழாமற்றும்இஸ்லாமியவாழ்வியிய் கண்காட்சி ಊಊguದೇ வெற்றியநோக்கிவடுகை தடும்  வருகவடுகபஎண அண்புடன் வறவற்கிறரம்!! C9 Uஃu) தங்களின் வரவு நல்வரவாகட்டும்  ஈயாயனம பாபாராம 4 9 ~றுபIயi ய்ப / திண்டவனம் அல்மத்ரஸத்தர்ரஸ்மாமியாவில் 17 ஆம்ஆண்டுிழாமற்றும்இஸ்லாமியவாழ்வியிய் கண்காட்சி ಊಊguದೇ வெற்றியநோக்கிவடுகை தடும்  வருகவடுகபஎண அண்புடன் வறவற்கிறரம்!! C9 Uஃu) தங்களின் வரவு நல்வரவாகட்டும்  ஈயாயனம பாபாராம 4 9 - ShareChat
#நல்லதே பேசு நல்லதே நினை அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா – இஸ்லாமிய கண்காட்சி, ரமலான் வரவேற்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா, அரபு பாடசாலை (மக்தப்) மற்றும் மாலை தனிப்பயிற்சியகம் சார்பில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (8.2.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு புது பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஏ. ஷேக் தாவூத் தலைமையேற்று நடத்தினார். மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஹ. முஹம்மது ஜாவிது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திண்டிவனம் அனைத்து பள்ளிவாசல் முத்துவல்லிகள் மற்றும் நிர்வாகப் பெருமக்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக மதினா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ். ஹபீபுல்லாஹ் கிராத் ஓதினார். இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை இனாம் பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஏ. ஷாஹுல் ஹமீது தொடக்கி வைத்தார். வரவேற்புரையை ரஹ்மானியா பள்ளியின் செயலாளர் ஹாஜி காதர் மொய்தீன் நிகழ்த்தினார். தொடர்ந்து மௌலானா மௌலவி எஸ். சுல்தான் இப்ராகிம், மௌலானா மௌலவி எஸ். ஹபீபுல்லாஹ், கூபா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஏ. அபூபக்கர் சித்தீக், நவாப் பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஏ. நயாஸ் அஹ்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு பேருரையாக “நவீன காலத்து குழந்தைகளும் பெற்றோர்களும் – ரமலான் வரவேற்பு” என்ற தலைப்பில் பன்னூர் ஆமீர் கலீமி அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஏ. அப்துல் ஸத்தார் உரையாற்றினனார். இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகி ஷேக் இப்ராஹிம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் திரளான இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
நல்லதே பேசு நல்லதே நினை - ShareChat
#நல்லதே பேசு நல்லதே நினை தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! – திண்டிவனத்தில் முக்கியஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் திண்டிவனம், பிப்.7 : விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம், மயிலம், செஞ்சி சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (07.02.2026) திண்டிவனம் ஆர்யாஸ் மினி ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் செஞ்சி அமைச்சர் மற்றும் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கினார். பேராசிரியர் சபாபதி மோகன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மயிலம் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் இரா.மாசிலாமணி, மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சேதுநாதன் (எக்ஸ். எம்.எல்.ஏ), திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ சீதாபதி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பிரபா கல்வி மணி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம். முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் முக்கியஸ்தராக கலந்து கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், திண்டிவனம் நகரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பூங்காவை புதுப்பித்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என்றும், திண்டிவனம் நள்ளியக்குடன் பகுதியில் உள்ள பழுதடைந்த சிறு தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் திண்டிவனம் நகரில் உள்ள அனைத்து பிளாட்பார்ம் வியாபாரிகளுக்கும் நகராட்சி மூலம் குறைந்த கட்டணத்தில் வியாபாரக் கூடங்கள் அமைத்து வழங்க வேண்டும் என்றும், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் குறும்பு விவசாயிகள் மணிலா சாகுபடி செய்ய தடையாக உள்ள பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நகரைச் சுற்றி திரியும் நாய்களை நாய்கள் கூடாரத்தில் தங்க வைக்கவும், முக்கிய சாலைகளில் மாடுகள் தங்குவதால் ஏற்படும் விபத்து அபாயங்களைத் தடுக்கும் வகையில் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக திண்டிவனம் நகர கழக செயலாளர் ஆசிரியர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் சீனிராஜ், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒலக்கூர் பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம், முஸ்லிம் மக்கள் கழக நகரச் செயலாளர் மு.அப்துல் ஹக்கீம், பா.சிராஜ் பேகம், ஜை.ஆயிஷா பேகம் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
நல்லதே பேசு நல்லதே நினை - م a தமிழ்நாடு ঙhoribu sefluund பம்நாடு தபிழ்நாடு  ஸகுசிாது cfuelk   Mn] { VTபடD= வல்லட்டும்  III  @   தமிழ்நாடு +IL தலைகுனியாதுமயி சந்சுப்பு ` பட்தபர்தர்க ` a  م a தமிழ்நாடு ঙhoribu sefluund பம்நாடு தபிழ்நாடு  ஸகுசிாது cfuelk   Mn] { VTபடD= வல்லட்டும்  III  @   தமிழ்நாடு +IL தலைகுனியாதுமயி சந்சுப்பு ` பட்தபர்தர்க ` a - ShareChat