
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
@479671514
நல்லதே நினை! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
#நல்லதே பேசு நல்லதே நினை தின வாழ்த்து தெரிவித்தார் முனைவர் ச.சு. ஜைனுதீன்
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது:
“தாய்மை என்ற அருமை இல்லாமல் அடுத்த தலைமுறை இல்லை; பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை. விடியாத இரவு இல்லை போல, பெண்களால் முடியாததும் எதுவும் இல்லை. தன்னம்பிக்கையுடன் உயர்ந்து நிற்கும் பெண்களுக்கும், பெண் என்பதே ஒரு பெருமை.
அன்பு, தைரியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவமாக இருக்கும் பெண்கள், அள்ளிக் கொடுத்து அன்பை பகிர்ந்து, தேவைப்படும் போது ஆறுதலாக நின்று, வாழ்நாள் முழுவதும் குடும்பத்தின் தூணாக திகழ்கின்றனர்.
நிபந்தனையற்ற நேசத்தையும் அளவற்ற பாசத்தையும் பொழியும் அனைத்து பெண்களும், நதி போல இடையறாது ஓடி வாழ்க்கையை முன்னேற்றுகின்றனர். பெண்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று மகிழ வாழ்த்துக்கள். அனைவருக்கும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
#நல்லதே பேசு நல்லதே நினை அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
திண்டிவனம் உமர் சாஹிப் தெருவில் வசித்து வந்த மர்ஹூம் முத்தலிப் மறைக்காயர் அவர்களின் மகனும் இறையனூர் இரும்பு கடை நடத்தி வரும் கே. எம் .உதுமான் அலி அவர்களின் தம்பியும் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்த எம். கரீம் அவர்கள் இன்று 8.3.2026 காலை 5: 20 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 9.3.2026 திங்கட்கிழமை திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் நடைபெறும் என்பதனை இதில் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்
குறிப்பு ஜனாஸா இருக்கும் இடம் கறிக்கடை அமான் வீடு கசாமியான் தெருவில் உள்ளது
செய்தி வெளியீடு முஸ்லிம் மக்கள் கழகம் திண்டிவனம்.
#முஸ்லீம் மக்கள் க மக்கள் கழகத்தில் இணைந்த இளைஞர்கள் – சமூகப் பணியில் ஈடுபட உறுதி
திண்டிவனம், மார்ச் 7:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் வசித்து வருகின்ற அயாத் பாஷா அவர்களின் மூத்த மகன் முகமது ஆஸிப், இன்று (7.3.2026) சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணி அளவில் முஸ்லிம் மக்கள் கழகத்தில் இணைவதற்காக மனு வழங்கினார்.
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னை முஸ்லிம் மக்கள் கழகத்தில் இணைத்துக் கொள்ள முகமது ஆஸிப் கோரிக்கை வைத்தார்.
அவருடன் அவரது நண்பர்கள் ஆர். முகமது ரேயான்,ஷ. முகமது அஷ்ரப்,ச. அஷ்ரப் ஆகிய இளைஞர்களும் கலந்து கொண்டு, சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் முஸ்லிம் மக்கள் கழகத்தில் இணைந்தனர்.
இந்த இளைஞர்களின் சமூகப் பணி மேலும் வளர அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
*திண்டிவனம் தாலுகா அலுவலக பின்பக்க கேட் திறக்க கோரிக்கை*
இது போன்ற செய்திகள் மற்றும் வீடியோக்களை பெற லோக்கல் ஆப் லிங்கை கிளிக் செய்யவும்.!
https://getlokalapp.com/share/posts/16396780?utm_source=video_link&utm_v=pdd_video_link_share&utm_constituency_id=3544 #நல்லதே பேசு நல்லதே நினை
நான் *Lokal App* பயன்படுத்துகிறேன். நீங்கள் உடனடியாக டவுன்லோட் செய்து உங்கள் மாவட்டம்/உள்ளூர் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம்.
#நல்லதே பேசு நல்லதே நினை தாலுக்கா அலுவலக பின்கேட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை – வட்டாட்சியரிடம் மனு
திண்டிவனம், மார்ச் 6:
புதிதாக பொறுப்பேற்றுள்ள திண்டிவனம் வட்டாட்சியாளர் திரு ஏழுமலை அவர்களை, முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் நேரில் சந்தித்து சாவு அணிவித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், திண்டிவனத்தில் ரூ.4.75 கோடி மதிப்பில் புதிய தாலுக்கா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அலுவலகத்தின் முன்புறத்தில் பிரதான வாசல் மற்றும் பின்புறத்தில் இரும்புக் கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்புறத்தில் உள்ள இரும்புக் கேட் கடந்த சுமார் ஆறு மாதங்களாக பூட்டப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். முன்புற நுழைவாயிலை பயன்படுத்தி வரவும் செல்லவும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் சூழல் நிலவுகிறது.
எனவே பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பின்புற கேட்டை இருசக்கர வாகனங்கள் நுழையாத வகையில் தேவையான ஒழுங்குமுறை ஏற்பாடுகள் செய்து, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது மாநில மகளிரணி அமைப்பாளர் பா. சிராஜ் பேகம், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் மு. அப்துல் ஹக்கீம், நகர செயலாளர் அ. தாவுத் அலி, நகர மகளிரணி அமைப்பாளர் இ. ஷர்மிளா, விழுப்புரம் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜை. ஆயிஷா பேகம், நகரத் தலைவர் அ. முஹம்மத் சாதிக், நகர துணை செயலாளர் அ. சேக் தாவுத், நகர துணைத் தலைவர் இ. சர்தார் அஹமத், நகர இளைஞரணி தலைவர் இ. நிசார் அஹமத், நகர இளைஞரணி செயலாளர் இ. அசேன் அஹமத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.











