
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
@479671514
நல்லதே நினை! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! வட்டம், ராயப்பேட்டை, ஆப்பிரம்பட்டு, நெசல் ஆகிய பகுதிகளில் செல்லக்கூடிய சாலை மறு சீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக போடப்பட்ட தார் சாலை சிமெண்ட் சாலையை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.*
*அவர்களுடன் பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.*
*-மதிமுரசு*
*கார்த்திக் சிதம்பரம் MP கருத்துக்கு ச.சு ஜைனுதீன் எதிர்ப்பு*
இந்த தகவலை முழுமையாக படிக்கவும்:
https://getlokalapp.com/share/posts/16881388?utm_source=article&utm_v=pdd_article_share #நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! சமூக வலைதளத்தை தடை செய்ய வேண்டாம் _காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்துக்கு முஸ்லிம் மக்கள் கழகம் கண்டனம்
விழுப்புரம், ஜூன் 5:
AI என்கிற செயற்கை நுண்ணறிவு அறிவியல் தற்போது வளர்ந்து வரும் காலத்தில் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களை நான் பயன்படுத்தி ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளோம் எனவே அதனை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இதற்கு முஸ்லிம் மக்கள் கழகம் நிறுவன தலைவர் சமூக போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
.“இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பயன்பாட்டால் இன்றைய இளைஞர்கள், குறிப்பாக 15 மற்றும் 16 வயது மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குடும்பப் பெண்களும் சமூக வலைதளங்களில் பரவும் ஆபாச மற்றும் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களால் மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பரவும் பல்வேறு பதிவுகள், வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் இளம் தலைமுறையினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் அபாயம் கொண்டவை. இத்தகைய சூழலில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் எந்தத் தவறும் இல்லை என்று கூறுவது சமூக நலனுக்கு எதிரான கருத்தாகும். மேலும் இவ்வாறாக இன்ஸ்டா வலைதளத்தில் தங்களுடைய திறமைகள் என தவறான வழியில் மக்களிடத்தில் தகவல்களை கொண்டு சேர்க்கும் சில நபர்களை கண்டறிய வேண்டும்
எனவே மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, சமூக ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் தளத்தின் செயல்பாடுகளை அரசு தீவிரமாக ஆய்வு செய்து, தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, மாணவ சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் சமூக வலைதளங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் வலியுறுத்தியுள்ளார்.
#நல்லதே பேசு நல்லதே நினை சட்டக் கல்லூரி சேர்க்கை: மாணவருக்கு உதவிய முஸ்லிம் மக்கள் கழக சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன்
திருப்பதி,
இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை 9 மணி அளவில், திருப்பதி ரேணுகுண்டாவில் அமைந்துள்ள அஞ்சு மேடு ஸ்ரீ ஈஸ்வர ரெட்டி சட்டக் கல்லூரிக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் நேரில் வருகை தந்தார்.
திண்டிவனத்தைச் சேர்ந்த ஆ. அன்வர் பாஷா என்ற மாணவர் சட்டப் படிப்பில் சேர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர் கல்லூரிக்கு அழைத்து வந்தார். மாணவரின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய சமூகப் போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள், உயர்கல்வி மூலம் இளைஞர்கள் சமூகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் திண்டிவனத்தைச் சேர்ந்த பா. அலாவுதீன் உடனிருந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
#நல்லதே பேசு நல்லதே நினை நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழா: மணமக்களை வாழ்த்திய முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த வை. பன்னீர்செல்வம் – மாலதி தம்பதியரின் மூத்த மகனும், மக்கள் வெளிச்சம் புகைப்படக் கலைஞருமான ப. விஜய் மற்றும் ம. சங்கவி ஆகியோரின் திருமணம் வரவேற்பு விழா 29.05.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் பாண்டிச்சேரி – விழுப்புரம் மெயின் சாலையில் அமைந்துள்ள வடமங்கலம் ஸ்ரீ கோடீஸ்வரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, அவர்களின் இல்லற வாழ்க்கை இனிதே அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், முஸ்லிம் மக்கள் கழகத்தின் திண்டிவனம் நகர துணைத் தலைவர் இ. சர்தார் அஹமத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி நிகழ்வை சிறப்பித்தனர்.
மகிழ்ச்சியும், உறவினர்களின் வாழ்த்தொலிகளும் நிறைந்த இந்த திருமணம் வரவேற்பு விழா, அனைவரின் பாராட்டையும் பெற்றது.
#நல்லதே பேசு நல்லதே நினை கோலாகலமாக நடைபெற்ற ஈதுல் அல்ஹா (பக்ரீத்) சிறப்பு தொழுகை
விழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதியாக திகழும் திண்டிவனத்தில், நபி இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஈதுல் அல்ஹா எனும் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை இன்று (28.05.2026) வியாழக்கிழமை காலை மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
திண்டிவன நகரில் உள்ள நவாப் பள்ளிவாசல், புது பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல். தாருஸ்ஸலாம் பள்ளிவாசல், ரஹ்மானியா பள்ளிவாசல், ரோஷனை பள்ளிவாசல், உமர் புலவர் பள்ளிவாசல், மக்கா பள்ளிவாசல், காபா பள்ளிவாசல்.அபூபக்கர் சித்திக் பள்ளிவாசல், சஞ்சீவிராயன் பேட்டை பள்ளிவாசல், ஹவுசிங் போர்டு பள்ளிவாசல், கிடங்கள் நூர் பள்ளிவாசல், கோட்டைமேட்டு முபாரக் பள்ளிவாசல் , கூபா பள்ளிவாசல்.உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லி, தலைவர்கள் செயலாளர்கள், இமாம்கள் மற்றும் ஜமாத்தார்கள் அனைவரும் ஒன்றிணைந்து செஞ்சி ரோடு – நேரு வீதி மேம்பாலம் வழியாக இறைவனின் புகழைப் பாடிக்கொண்டு ஒற்றுமை பேரணியாக மயிலம் சாலையில் உள்ள சந்து இனாம்தார் திறந்தவெளி மைதானத்தை வந்தடைந்தனர்.
அங்கு காலை 7.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு ஈதுல் அல்ஹா தொழுகைக்கு நவாப் பள்ளிவாசல் டிரஸ்ட் இமாம் மௌலானா மௌலவி ஏ. நியாஸ் அஹமத் அவர்கள் தொழுகை நடத்தினார். தொடர்ந்து அபூபக்கர் சித்திக் பள்ளிவாசலின் மௌலானா மௌலவி உசேன் அவர்கள் பக்ரீத் திருநாளின் தியாகப் பெருமை , சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மௌலானா மௌலவி ஹபிபுல்லா, மௌலானா மௌலவி ஹ. முஹம்மத் ஜாவித், மௌலானா மௌலவி முஹம்மத் ஹாரூன், மௌலானா மௌல்வி. எஸ் .ஏ . சாகுல் அமீது, மௌலானா மௌலவி முஹம்மத் தாஸின், முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் ,நவாப் பள்ளிவாசல் டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் யூ. அஜ்மல் அலி, மாவட்ட முதன்மை சான்று உறுதி வழக்கறிஞர் யூ. அம்ஜத் அலி, வழக்கறிஞர்கள் இ. சர்வர்கான், கபீர், அ. அஜீஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ஏ .எல். எஸ். ஜான்பாஷா. விசிகவின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணை செயலாளர் கு. அப்துல் ஜப்பார், 27வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி.மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ., முஸ்லிம் மக்கள் கழகம் ஆகிய அமைப்புகளின் மாவட்ட, நகர, கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தப்லீக் ஜமாத்தார்கள் மற்றும் பல்வேறு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்றனர்.
இறுதியாக அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு அன்பும் ஒற்றுமையும் நிறைந்த திருவிழாவாக நிகழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.











