
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
@479671514
நல்லதே நினை! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
#நல்லதே பேசு நல்லதே நினை ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம்
திண்டிவனத்தில் இரங்கல் கூட்டம்
திண்டிவனம், பிப்.27–
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர், தகைசால் தமிழர் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி ஆர். நல்லகண்ணு அவர்கள் மறைவையொட்டி திண்டிவனத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி இன்பவொளி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரங்கல் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இக்கூட்டத்தில் முஸ்லிம் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஆர். நல்லகண்ணு அவர்கள் எளிமை, நேர்மை மற்றும் பொதுசேவைக்கான அர்ப்பணிப்பின் உருவகமாக விளங்கினார். அவரின் அரசியல் வாழ்வு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்” என்றார்.
மேலும் நிகழ்வில் திமுகவின் மாநில பொறுப்பாளர் மயிலம் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்இரா . மாசிலாமணி.இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர். ரங்க பூபதி, நகர தலைவர் விநாயகம், வழக்கறிஞர் அஜிஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் முனியாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நகர நிர்வாகிகள், எஸ்.டி.பி. ஐ.கட்சியின் ஜப்பார்.யூசுப், முஸ்லிம் மக்கள் கழகத்தின் இ. சர்தார் அஹமத், அ. தாவூத் அலி, முகம்மது சாதிக், ப. ராஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.
இரங்கல் கூட்டத்தின் முடிவில் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
#நல்லதே பேசு நல்லதே நினை புதிய மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை – முதல்வரிடம் முஸ்லிம் மக்கள் கழகத்தின் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வக மற்றும் மருத்துவ பணியாளர் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என முஸ்லிம் மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 4-ம் தேதி காணொளி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மருத்துவமனை திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்தும் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி பணியாளர்கள், லேப் டெக்னீசியன்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்படவில்லை.
இதனால் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக ஆய்வகப் பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பரிசோதனைகள் தாமதமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
எனவே, ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த தலைமை அரசு மருத்துவமனை முழுமையாக செயல்பட உடனடியாக போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி பணியாளர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்களை கருணை மனதுடன் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் தமிழக முதல்வரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
#நல்லதே பேசு நல்லதே நினை மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் இரங்கல்
சென்னை, பிப்.25– ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் தனது பள்ளி பருவத்திலேயே பல போராட்டங்களில் ஈடுபட்டு, தமிழுக்கும் நாட்டின் பொதுமக்கள் நலனுக்கும் tireless-ஆக போராடிய மாபெரும் போராளி நல்லகண்ணு அவர்கள். அவரின் போராட்டங்கள் வரலாறு படைத்தவை. எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வடிவமாக வாழ்ந்து காட்டிய தலைவர் அவர்.
தொடர்ந்து மக்கள் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவரது மறைவு, தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அவர் புதைக்கப்படவில்லை; மக்கள் மனங்களிலும் வரலாற்றிலும் பொறிக்கப்பட்ட தலைவராக என்றும் நிலைத்திருப்பார்.
நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு முஸ்லிம் மக்கள் கழகம் ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
#நல்லதே பேசு நல்லதே நினை மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன்:
“நோன்பு மனிதனை நற்குணங்களுடன் வடிவமைக்கும் ஆன்மீகப் பயணம்”
சென்னை, பிப்.23–
ரமலான் மாதத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் நோன்பு, மனித வாழ்க்கையில் நல்ல குணங்கள் மற்றும் ஒழுக்கங்களை உருவாக்க முக்கிய காரணமாக திகழ்கிறது என்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:–
ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பு வைப்பது இறைவன் அளித்த கட்டளையாகும். நோன்பின் மூலம் மனிதன் பசியை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ள முடிகிறது,உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.மேலும், ஏழை எளிய மக்களின் துயரங்களை உணர்ந்து, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மாதமாக ரமலான் திகழ்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதுபோல், நோன்பு கடைப்பிடிப்பதன் மூலம் மனிதனின் உடல், மனம், ஆன்மா ஆகியவை தூய்மை அடைகின்றன. பசி, தாகம் அனுபவிப்பதன் மூலம் ஏழை எளியவர்களின் துயரத்தை உணர முடியும். சகோதரத்துவம், பொறுமை, தன்னடக்கம் போன்ற நற்குணங்கள் வளர்க்கப்படுகின்றன.
நோன்பு என்பது வெறும் பசி, தாகத்தை தவிர்ப்பது மட்டுமல்ல. தீய செயல்களிலிருந்து முழுமையாக விலகி, ஒழுக்கத்துடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள உதவும் பாலமாகவும், வாழ்க்கையின் பலமாகவும் அமைந்துள்ளது.என
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
#நல்லதே பேசு நல்லதே நினை அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எங்கள் மரியாதைக்குரிய பாசத்திற்குரிய வந்தவாசி ஹாஜி காதர் மீரான் சாகிப் அமீர் சார் ஹெட் மாஸ்டர் அவர்கள் தாருல் பனாவை விட்டு தாருல் பாக்காவை அடைந்து விட்டார்கள் இன்ஷா அல்லா அவர்களின் ஜனாஸா தொழுகை நாளை லுஹர் தொழ்கை பிறகு பிறகு வந்தவாசி மஸ்ஜிதில்நடைபெறும் நீண்ட காலமாக தாவூத் உடைய பணியில் தன் வாழ்நாளை செலவு செய்தவர் அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக ஆமீன்
#நல்லதே பேசு நல்லதே நினை .பி.யை முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
விழுப்புரம், பிப். 18:
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.வி. சாய் பிரனீத் அவர்களை, முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பு 18.2.2026 அன்று நடைபெற்றது. அப்போது மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை, சமூக ஒற்றுமை மற்றும் பொதுநல தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. சமூக நல்லிணக்கம் பேணுதல் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த முயற்சிகளில் காவல்துறையுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் வி. விக்ரம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக நிர்வாகிகள், திண்டிவனம் நகர தலைவர் டி.சி.எம். உசேன், வானூர் தொகுதி செயலாளர் க. செல்வம், விக்கிரவாண்டி குமளம் சு. பழனி, திண்டிவனம் இருதயபுரம் அ. தாவூத் அலி, விழுப்புரம் மாவட்ட விவசாய சங்க செயலாளர் அன்னியூர் சு. ஏழுமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
https://www.instagram.com/reel/DU3LhNzkU1W/?igsh=MXc1aG16bDM2ZHV5OQ== #நல்லதே பேசு நல்லதே நினை
https://www.instagram.com/reel/DU3KneIEUwY/?igsh=MXExcnV4ZHFma2V2Zg== #நல்லதே பேசு நல்லதே நினை
https://www.instagram.com/reel/DU3KDLukU0V/?igsh=MXU1dzR4bHdzbnE3Zg== #நல்லதே பேசு நல்லதே நினை












