
த.விக்னேஸ்வரன்
@540393261
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஊழல் குற்றச்சாட்டு உள்ள யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம்.. பிற கட்சியில் உள்ள மூத்த தலைவர்களும் வேண்டாம்.. முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்றால் ஓகே.. சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களுக்கு பச்சைக்கொடி.. கட்சியில் சேர்க்க கட்டுப்பாடுகளை விதித்தாரா விஜய்? மக்களிடம் மிஸ்டர் க்ளீனாக செல்ல வேண்டும் என திட்டமா?
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்வது மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது குறித்து விஜய் சில கடுமையான கட்டுப்பாடுகளையும், வியூகங்களையும் வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தியில் தனது கட்சியை ‘மிஸ்டர் க்ளீன்’ பிம்பத்துடன் நிறுத்துவதே இதன் முதன்மையான நோக்கம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கட்சியின் நம்பகத்தன்மையையும், தூய்மையையும் உறுதி செய்வதற்காக, நடிகர் விஜய் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்களைத் தனது கட்சியில் சேர்ப்பதற்கு தடை விதித்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் திராவிட கட்சிகள் அல்லது பிற கட்சிகளில் இருந்து விலகி வரும், ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களை எதிர்கொண்ட எந்தவொரு நபரையும் த.வெ.க.வில் முக்கிய பதவிகளில் சேர்ப்பதற்கோ அல்லது வேட்பாளர்களாக நிறுத்துவதற்கோ அனுமதி இல்லை.
இது, தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியலுக்கு முரணான ஒரு புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் நிலவும் ஊழல் வெறுப்பு மனநிலையை பயன்படுத்தி, தமது கட்சிக்கு ஒரு மாற்றான, தூய்மையான பிம்பத்தை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
பிற கட்சிகளில் இருந்து விலகி வரும் மூத்த அல்லது பலம் வாய்ந்த தலைவர்களையும் உடனடியாக தனது கட்சியில் சேர்த்து கொள்வதற்கு விஜய் தயக்கம் காட்டுவதாகவும், இதுவும் ஒரு திட்டமிட்ட வியூகத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் பிற கட்சியில் இருந்து வருபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற நிலையில் விஜய்யின் அணுகுமுறை வித்தியாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், வெளிப்படையான நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் மற்றும் நல்ல பெயர் பெற்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை தனது கட்சியில் இணைத்துக்கொள்ளத் விஜய் ஆர்வம் காட்டுகிறார். இவர்களின் நிர்வாக அனுபவம் மற்றும் தூய்மையான பின்னணி, த.வெ.க.வின் ‘மிஸ்டர் க்ளீன்’ திட்டத்திற்கு வலு சேர்க்கும்.
அதேபோல் சமூக பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வும், கள அனுபவமும் கொண்ட சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் நடுநிலை எண்ணம் கொண்ட பத்திரிகையாளர்களுக்கும் கட்சியில் முக்கிய பங்கு வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சேர்க்கை, கட்சிக்கு சட்டரீதியான ஆலோசனைகளையும், நம்பகமான நிர்வாக திட்டங்களையும் உருவாக்க உதவும் என்பதே விஜய்யின் எண்ணமாக தெரிகிறது.
மொத்தத்தில் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தை பழைய அரசியல் வியூகங்களின் நிழலில் இருந்து விலக்கி, தூய்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக திறன் ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் கட்டமைக்க முயற்சிக்கிறார். இந்த வியூகம் 2026-ல் அவருக்கு எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
இங்க ஒரு அதிமுக கோட்டையன் இருக்காரு. அவர் பேரு செங்கோட்டையன். அண்ணாவின் காலத்துல இருந்து கட்சிக்காக உழைச்சவர். கிட்டத்தட்ட அஞ்சு தலைமுறை கண்ட ஆலமரம் மாதிரி! எட்டு முறை எம்.எல்.ஏ., மந்திரி...ன்னு கொங்கு மண்டலத்துல அவரு ஒரு கிங்மேக்கர்!
ஆனா... சமீப காலமா, கோட்டையன் மனசுக்குள்ள ஒரு உறுத்தல். "அம்மா கட்டி வளர்த்த கட்சி, இப்ப ஒத்தர் கையில போயிடுச்சே... எல்லாரும் ஒண்ணா இருந்தா தானே மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க முடியும்?" -ன்னு நினைச்சாரு.
ஒரு நாள், அவரு மனசுல இருந்ததை வெளிப்படையா ஒரு ஆபரேஷன் யூனிட்டி-க்கு பத்து நாள் கெடுவோடு அறிவிச்சாரு. ஆனா, கட்சித் தலைமை என்ன செஞ்சது? கோட்டையன் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காம, "நீங்க கட்சியை விட்டே போங்க!"-ன்னு நீக்கத்தை ஆயுதமாக்கிட்டாங்க.
கோட்டையன் மனசு நொந்து போச்சு. பழைய நண்பர்கள், அதாவது ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் -ன்னு எல்லாரோடவும் பேசினாரு. ஆனா, அவங்களோட போனது, நீக்கத்தை உறுதிப்படுத்திருச்சு. கடைசியில், அவர் பல வருஷமா ஜெயித்த எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு வெளியில வந்தாரு.
இப்ப, புதுசா ஒரு கட்சி... ஒரு புது ஹீரோ! அவரு தான் விஜய் அண்ணன், அவருடைய தமிழக வெற்றிக் கழகம் (தவெக). "எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத கட்சி"-ன்னு எல்லாரும் சொன்னப்ப, தவெக டீம் வேற மாதிரி யோசிச்சாங்க: "எக்ஸ்பீரியன்ஸை விலைக்கு வாங்கினா என்ன?"
அப்ப தான், தவெக தலைவர் விஜய் அண்ணனை, செங்கோட்டையன் சந்திச்சாரு.
விஜய் அண்ணன் செங்கோட்டையனைப் பார்த்து, சிரிச்சுகிட்டே சொன்னாராம்: "அண்ணா... நீங்க வெறும் கொங்கு மண்டலத்து கிங்மேக்கர் இல்ல. ஒரு எக்ஸ்பீரியன்ஸ் டாங்கர்! ஒரு புதுசா ஆரம்பிச்ச கம்பெனிக்கு, உங்க அனுபவம் எவ்வளவு முக்கியம்-னு எனக்குத் தெரியும். கட்சியோட கொள்கைத் திட்டங்களை வகுக்கிறதுக்கு உங்க அனுபவம், என் ரசிகர்களோட இளைஞர் சக்தி - ரெண்டும் சேர்ந்தா, எங்களோட அரசியல் ஃபவுண்டேஷன் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்!"
அப்ப செங்கோட்டையன் சொன்னாராம்: "தம்பி... என்னோட அரசியல் பயணத்தோட இரண்டாவது இன்னிங்ஸ் இது. இத்தனை வருஷம் பழக்கப்பட்ட கட்சி இல்லாம, புதுசா ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறதுக்கு ஒரு துணிச்சல் வேணும். அந்தத் துணிச்சலை உங்க மக்கள் சக்தி எனக்குக் கொடுக்குது! கட்சிக்கு உழைக்க நான் தயார். எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். ஆனா, கட்சி நல்லபடியா நடக்கணும்!"
இந்த சந்திப்பு முடிஞ்ச மறுநாளே, செங்கோட்டையனுக்கு தவெக-ல முக்கியப் பொறுப்பு கிடைச்சிருக்கு.
அரசியல்ல நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை.
சரியான நேரத்துல, சரியான ஆட்களை, சரியான இடத்துல பயன்படுத்தினா... மாற்றத்தை உருவாக்க முடியும்.
இனி வர்ற காலத்துல, செங்கோட்டையன் மாதிரியான சீனியர் தலைவர்கள் தவெக-ல சேர்றது ஒரு 'ட்ரெண்ட் செட்டர்' ஆகலாம். ஏன்னா, புதிய கட்சியோட இளைஞர் சக்திக்கு அனுபவம் தேவை. கோட்டையை விட்டு வெளியே வந்தவங்களுக்கு ஒரு புது பிளாட்ஃபார்ம் தேவை. அந்த தேவை, இந்த மாற்றம்... ஆட்டத்தைப் புரட்டிப் போடும்! #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
#தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
#தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
#தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
#தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
#தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
#தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
விஜய்யை பெண்கள் ஒரு அண்ணனாக பார்க்கின்றார்கள்.. விஜய் அண்ணா என்பது அவர்களின் அடிமனதில் இருந்து வரும் வார்த்தைகள்.. எந்த ஒரு அரசியல்வாதிக்கும் கிடைக்காத ஒரு வரம்.. ஜெயலலிதாவை முதலமைச்சரான பின் தான் ‘அம்மா’ என்றார்கள்.. ஆனால் விஜய் அரசியலுக்கு வரும் முன்பே அண்ணன் என்கிறார்கள்.. பெண்கள் ஓட்டு பெரும்பகுதி விஜய்க்கு போக வாய்ப்பு... அரசியல் வல்லுனர்கள் கருத்து..!
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியல் களத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான சமூக மற்றும் உளவியல் அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பெண் வாக்காளர்களிடையே நடிகர் விஜய்க்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.
அரசியல் வல்லுநர்கள் பலரும் சுட்டிக்காட்டும் மிக முக்கியமான ஒரு விஷயம், நடிகர் விஜய்யை நோக்கி பெண் வாக்காளர்கள் பயன்படுத்தும் “விஜய் அண்ணா” என்ற வார்த்தை. இந்த வார்த்தை வெறும் திரை பிரபலத்தைக் குறிக்காமல், ஆழமான உளவியல் மற்றும் பாச பிணைப்பை குறிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த அழைப்பு செயற்கையானது அல்ல; அது அவர்களுடைய அடிமனதிலிருந்து வரும் ஒரு பாசப்பிணைப்பின் வெளிப்பாடு.
தமிழக வரலாற்றில், அரசியல் பிரமுகர்கள் மக்களிடம் இருந்து இத்தகைய ஒரு பாசமிகு உறவு பட்டத்தை பெறுவது மிகவும் அரிது. ஜெயலலிதா அவர்கள் அரசியலில் பல ஆண்டுகள் பயணித்து, முதலமைச்சரான பின்னர்தான் ‘அம்மா’ என்ற பாசமிகு அடையாளத்தை பெற்றார். ஆனால், விஜய் அரசியலுக்கு வரும் முன்பே, மக்கள் அவரை ‘அண்ணன்’ என்று உரிமையோடு அழைப்பது எந்தவொரு அரசியல்வாதிக்கும் எளிதில் கிடைக்காத அரிய வரமாக கருதப்படுகிறது.
இந்தியத் தேர்தல்களில் பெண் வாக்காளர்களின் பங்கு தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. தமிழகத்தில் விஜய்க்கு பெண்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, அவரது அரசியலில் ஒரு திடமான அடித்தளமாக பார்க்கப்படுகிறது:
‘அண்ணன்’ என்ற வார்த்தை, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு குடும்ப உறுப்பினராக விஜய்யை அவர்கள் கருதுவதைக் குறிக்கிறது. சமூக பொறுப்புகளுடன் அவர் திரைப்படங்களில் வெளிப்படுத்தும் கதாநாயக பிம்பமும், நிஜ வாழ்க்கையில் அவர் காட்டும் சமூக அக்கறையும் இந்த பிம்பத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
திரையில் அவர் ஏற்ற பாத்திரங்களின் நேர்மையும், நம்பகத்தன்மையும், அவரை நிஜ வாழ்விலும் நம்பகமான தலைவராக ஏற்க பெண்களை தூண்டுகிறது. மக்கள் நலப்பணிகள் மற்றும் கூட்டங்களில் பெண்கள் கூட்டம் கூடுவதும், உணர்ச்சிப்பூர்வமாக அவரை அண்ணா என்று அழைப்பதும், இந்த பாசமும் ஆதரவும் தேர்தலில் ஓட்டுகளாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகம் என்பதைக் காட்டுகிறது.
அரசியல் வல்லுநர்களின் கணிப்புப்படி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு விழக்கூடிய பெண் வாக்காளர்களின் ஆதரவை சிதறடிக்கும் வாய்ப்பு உள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு பாரம்பரியமாக உள்ள பெண் வாக்காளர்களின் கணிசமான பகுதி, தற்போது விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்கக்கூடும்.
எந்தவொரு போட்டியிலும், ஒரு வேட்பாளருக்கு பெண் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமானால், அதுவே அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் சக்தியாக மாறும். ‘விஜய் அண்ணா’ என்ற உறவு, பெண்களுக்கு அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக அல்லாமல், குடும்பத்தின் உறுப்பினராக மாற்றியுள்ளது. இந்த உணர்வுபூர்வமான பிணைப்பு, தேர்தல் முடிவுகளில் வலுவாக பிரதிபலிக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், விஜய்க்கு இருக்கும் ‘அண்ணன்’ என்ற பாசப்பிணைப்பு, வெறும் ரசிகர் பட்டாளத்தை அரசியல் ஆதரவாக மாற்றுவதற்கான உளவியல் கருவியாக செயல்படுகிறது. இந்த பிணைப்பின் மூலம், அவர் பெண் வாக்காளர்களில் பெரும்பகுதியை தன் பக்கம் ஈர்த்து, 2026 தேர்தலின் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என அரசியல் வல்லுநர்கள் உறுதியாக கருதுகின்றனர் #தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அவளை நிர்வாணமாக காண்பது தான் அவனுடைய பெரிய கனவாக இருக்கும்.....
அதேபோல் அந்தப் பெண்ணை அடைந்து நிர்வாணமாக கண்டுவிட்டால் அவன் ஏதோ சாதித்தது போலும் அந்த ஆண்மையை உணர்ந்தது போலும் பெருமிதம் கொள்வான்....
ஆனால் எத்தனை ஆண்களுக்கு தெரியும் !!!! அவளுடைய கற்பு என்பது அந்த உடல் நிர்வாணத்தில் இல்லை....
அவள் தாய் தந்தை சிறுவயதில் கண்டதையும் பிறகு அவள் தாயாகும் போது மருத்துவர் கண்டதையும் தான் ஒரு ஆணாக அவளை அடையும் போது நிர்வாணமாக பார்க்கும் சூழ்நிலை அமைகிறது !!!!
அவள் கற்பு முழுவதும் அவள் ஆள் மனதில் உள்ளது.... அவள் ஆழ் மனதில் ஆட்கொண்ட ஒரு ஆணிடம் மட்டுமே உள்ளது.... இந்த கருத்து விலைமாதுக்கும் பொருந்தும்...
அவள் உடம்பை விற்று விட்டால் நிர்வாணத்தை மிக எளிதாக கையாளுகிறாள் என்பதற்காக அவள் கற்பு பறிபோனதாக அர்த்தமில்லை.....
இங்க கற்புக்கு விதிக்கப்பட்ட விதிகளை எல்லாம் மீறி எல்லா பெண்களுக்குள்ளையும் அவளுடைய கற்பு அவள் ஆழ் மனதில் ஆட்கொண்ட ஆணிடம் மட்டுமே அவள் கற்பை இழக்கிறாள்....
அதையெல்லாம் மீறி அவள் ஆழ்மனம் விருப்பம் இல்லாமல் காமம் கூட நடந்தேறும்.....காமம் நடந்தேறியதற்காக அந்த ஆணின் மீது அவளுக்கு அதீத காதல் என்று அர்த்தம் கிடையாது.....
ஒரு பெண்ணின் கற்பு என்பது அவள் ஆழ்மனதில் வாழ்கின்ற ஆணுக்கு மட்டுமே உரியது.....அது அவன் மீதான ஆழமான புரிதல்.... ஆழமான காதல்... அவன் இருந்தாலும் இறந்தாலும் அவன் மட்டுமே அவனுக்கு மட்டுமே அவளுடைய மொத்த அன்பும் மொத்த காதலும் மொத்த காமமும் தன்னுடைய மொத்த கற்பும் கொடுக்க ஒவ்வொரு பெண்ணும் ஏங்குகிறாள்....
ஒரு பெண்ணின் காமத்தை மட்டும் பெறுவது ஒரு ஆணுக்கு பெருமை அல்ல.... அவருடைய காதலையும் கற்பையும் பெற முடிந்து அதன் பிறகு அவள் காமத்தை அடைவது தான் உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம் ஒரு ஆணாக.....
நன்றி வாழ்க வளமுடன் 🙏💐 #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்





![தினமும் ஒரு தகவல் - MuAY ANNA ] MuAY ANNA ] - ShareChat தினமும் ஒரு தகவல் - MuAY ANNA ] MuAY ANNA ] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_729832_30bfdb6d_1764070728408_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=408_sc.jpg)
