💞💞💞
ShareChat
click to see wallet page
@607240774
607240774
💞💞💞
@607240774
I Love Sharechat :)
எல்லாரையும் நம் இதயத்திற்குள் அனுமதித்துவிட முடியாது, அன்பிற்காகவும், உண்மையான பிணைப்பிற்காகவும் ஏங்குவது மனித இயல்புதான், ஆனால், அந்த ஏக்கத்தினால் தகுதியற்றவர்களிடம் நம்மை நாமே இழந்துவிடக் கூடாது... உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளப் பழகுங்கள், இது திமிர் அல்ல, இது சுயமரியாதை, தற்காலிகமானவர்களுக்குத் தடை போடுங்கள், உங்கள் மன அமைதியையும், உங்கள் நேரத்தையும் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருங்கள்... ஒரு சில உரையாடல்களிலேயே உங்களால் உணர முடியும், யார் உங்கள் ஆழத்தைப் புரிந்துகொள்பவர்கள், யார் வெறும் பொழுபோக்குக்காக வருபவர்கள் என்று, அத்தகைய timepass மனிதர்களுக்காக உங்கள் ஆன்மாவைத் திறந்து வைக்காதீர்கள்... ஆழமற்ற உறவுகளில் இருந்து வெளியேறுங்கள், உங்களைப் புரிந்து கொள்ளும் Capacity இல்லாதவர்களிடம், உங்கள் அன்பையும் உணர்வுகளையும் துண்டு துண்டாகப் பிய்த்துக் கொடுக்காதீர்கள், ஆழமற்ற கிணற்றில் நீர் தேடுவது போல, ஆழமற்ற மனிதர்களிடம் ஆழமான அன்பை எதிர்பார்ப்பது வீண் வேலை,உங்களைச் சரியாகத் தாங்கிப் பிடிக்கத் தெரியாதவர்களிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள்... கடந்த கால வலிகள் உங்கள் பலம், கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த துரோகங்கள், காயங்கள் மற்றும் மனப் போராட்டங்கள் உங்களை உடைப்பதற்காக வந்தவை அல்ல, உங்களைச் செதுக்குவதற்காக வந்தவை, அந்தப் பாடங்கள் உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கற்பித்திருக்க வேண்டும்... உங்களை நீங்களே மதிக்கவில்லை என்றால், வேறு யாரும் மதிக்க மாட்டார்கள், ஒரு சத்தியம் செய்துகொள்ளுங்கள் வாழ்க்கையில் இனி எதற்கும் சமரசம் செய்துகொண்டாலும், ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருங்கள், அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்வதை உங்கள் சுயமரியாதையைக் கேள்விக்குறியாக்கும், உங்கள் மதிப்பை மழுங்கடிக்கும் யாருடனும் ஒரு நிமிடம் கூட அமர வேண்டாம், தனிமை என்பது பயமல்ல, அது ஒரு தவம் தவறான எண்ணம் கொண்ட ஒருவருடன் கைக்கோர்த்து நடப்பதை விட, கம்பீரமாகத் தனிமையில் நடப்பதே மேலானது, தனிமையைக் கண்டு அஞ்சாதீர்கள், தகுதியற்ற ஒருவருக்காக உங்கள் தரத்தைக் குறைத்துக் கொண்டு, அங்கு செட்டில் ஆகிவிடுவோமோ என்று மட்டும் பயப்படுங்கள்... உண்மை என்னவென்றால், இந்த அவசரமான, போலியான உலகில்... உண்மையான அன்பு, விசுவாசம் மற்றும் நேர்மையான நோக்கங்களுடன் இருப்பது ஒரு அபூர்வம், நீங்கள் அப்படிப்பட்ட ஒரு அபூர்வமான மனிதராக இருந்தால், உங்களை அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்கச் செய்துவிடாதீர்கள்... யாரையும் நேசிப்பது கடினமல்ல... ஆனால் உங்களை அடைவதை அவ்வளவு எளிதாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆழத்தைப் புரிந்துகொள்பவர்களுக்காக மட்டும் உங்கள் கதவைத் திறங்கள், உங்களுக்கு தெரியும் உங்களின் தரம்...✍️ மனால்றியா அம்மு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
தன் மன அமைதிக்காக தான் நேசிக்கும் ஒரு ஆணிடமிருந்து விலகிச் செல்லக்கூடிய ஒரு பெண், வேறு யாராலும் பார்க்க முடியாத ஒரு அமைதியான போரில் வெற்றி பெற்றிருக்கிறாள் என்றே பார்க்க வேண்டும். பெரும்பாலான மக்கள் பிரிவதை, விடைபெறுவதை மட்டுமே பார்க்கிறார்கள். அவளின் தூக்கமில்லாத இரவுகளையோ, கண்ணீரையோ, அவள் கொடுத்த வாய்ப்புகளையோ, அவள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தன் மிஞ்சியுள்ள பகுதிகளையோ அவர்கள் பார்ப்பதில்லை. விலகிச் செல்வது எளிதானது அல்ல, அது அவளுக்கு அவசியமானது. #😔தனிமை வாழ்க்கை 😓 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
உன் மீது பழி சுமத்தி, உன்னைச் சந்தேகப்பட்டு, உன்னைத் தன் வசப்படுத்திக் கையாண்ட ஒருவரிடம் அன்பு என்ற பெயரில் நீண்ட காலம் சிக்கியிருந்தாய், அதனால் நீ பைத்தியமாகிவிடவில்லை... அவர்கள் உன்னையே உன்னைச் சந்தேகிக்க வைத்தார்கள், உன் நினைவாற்றல், உன் பார்வை, உன் எதிர்வினைகள், ஏன் உன் மதிப்பு என அனைத்தையும் கேள்விக்குறியாக்கினார்கள், சூழ்நிலைகளை அவர்கள் மிகத் திறமையாகத் திசைதிருப்பியதால், பிரச்சனை உன்னிடம்தான் இருக்கிறது என்று நீயே நம்பத் தொடங்கினாய்... நீ ஒரு அதிக உணர்ச்சிவசப்படுபவர் என்றும், எதற்கெடுத்தாலும் மற்றவர்களைச் சார்ந்திருப்பவர் என்றும் உன்னை முத்திரை குத்தினார்கள், அவர்களின் தவறுகளை நீ சுட்டிக்காட்டும் போதெல்லாம், அதை உன் பக்கமே திருப்பிவிட்டு, நீ செய்யாத தவறுக்காக உன்னை மன்னிப்புக் கேட்க வைத்தார்கள்... இது அன்பல்ல, மாதக்கணக்கிலோ அல்லது ஆண்டுகணக்கிலோ இப்படி நடத்தப்பட்ட பிறகு, நீ நிலைகுலைந்து போவது இயல்புதான், உன் மனசாட்சியை நீயே சந்தேகப்படுவதும், உன் புத்தி சுவாதீனம் சரியாக இருக்கிறதா என்று நீ யோசிப்பதும் ஆச்சரியமில்லை... ஏன்னென்றால், உன் எதார்த்தத்தை நீயே நம்பாத அளவிற்கு அவர்கள் உன்னைச் சிதைத்திருக்கிறார்கள்... ஆனால் உண்மையைச் சொல்கிறேன், நீ பைத்தியமல்ல, ஒரு இயல்பற்ற சூழலுக்கு நீ காட்டிய இயல்பான எதிர்வினைதான் இது, அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாததால் நீ பதற்றமடைந்தாய், அடிப்படை மரியாதைக்காகக் கூட நீ போராட வேண்டியிருந்ததால் நீ பாதுகாப்பற்றதாக உணர்ந்தாய், அவர்கள் உன்னைத் தொடர்ந்து காயப்படுத்தியதால் நீ உணர்ச்சிவசப்பட்டாய்... உன் மனநலம் பாதிக்கப்பட்டது உன்னிடம் குறை இருப்பதால் அல்ல, அதைச் சிதைக்க நினைத்த ஒருவருடன் நீ உறவில் இருந்ததால் மட்டுமே... இப்போது நீ மீண்டும் உன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறாய், உன் உள்ளுணர்வை மீண்டும் நம்பக் கற்றுக்கொள்கிறாய், உன் உணர்வுகள் அனைத்தும் சரியானவையே என்பதை உணரத் தொடங்குகிறாய், உனக்குள் இருந்த குழப்பம், வலி, சுயசந்தேகம் எதுவுமே தற்செயலானது அல்ல, உன் அன்பையே உனக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படுத்திய ஒருவரை நீ நேசித்ததன் விளைவு அது... நீ பைத்தியமல்ல. அன்பு என்ற பெயரில் உன்னை ஏமாற்றியவர்களால் நீ காயப்பட்டிருக்கிறாய், அவ்வளவுதான், அவர்கள் உன்னை யாரென்று நம்ப வைத்தாரோ, அந்த மாயையிலிருந்து விடுபட்டு நீ உண்மையில் யார் என்பதை உணர இப்போது நீ சுதந்திரமாக இருக்கிறாய்... ✍️ மனால்றியா அம்மு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
ஆங்கிலத்தில் Manipulation என்ற வார்த்தை சொல்வதுண்டு இதனை நாம் பலநேரங்களில் விரும்பியவர்களிடம் காட்டுவதுண்டு. அதாவது ஒருவரிடம் அதீத அன்பை வலியச்சென்று காட்டி அதன் பின்னால் அத்தனையும் சொல்லிக்காட்டி அவரை தக்க வைத்துக்கொள்வது.. ப்ரியம் என்பது இருபுறமும் ஒன்றாக சமநிலையில் இருக்கும்வரை மட்டுமே அவ்வுறவு தொடர்வதில் நியாயம் உள்ளது. இரண்டில் ஒருவர் விலக நினைத்தாலும் அதற்கு வழிவிட்டு நிற்பதே கண்ணியம்.. அதன் வலி தீவிரமாகவே நம்மை ஆட்கொண்டபோதும் பக்குவத்தை மருந்தாக நாம்தான் பூசிக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு நாம் விரும்பி அத்தனையும் செய்யும் நேரத்தில் நாமும் சந்தோசமாக இருந்ததுதான் அந்த ப்ரியத்தில் கிடைத்த லாபம் ..ஆனால் அதனை வியாபாரமாக கருதி "நான் அத்தனை குரூரத்தைக் காட்டினாலும் என் உடன் நில்" என்பது இன்னும் அதீதக் குரூரமானது .. 'உடன் நிற்பது அழகானது அதனை அவர்கள் விரும்பாத போது வழிவிடுதல் அதனைவிட பேரழகானது..' #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
வாழ்க்கை நமக்கு கொடூரமான வழியில், கற்றுக் கொடுக்கும் விஷயம், நாம் எவ்வளவு அன்பு கொடுத்தாலும், எவ்வளவு முயற்சி செய்தாலும், அல்லது எவ்வளவு ஆழமாக அக்கறை காட்டினாலும், மற்றவர்கள் நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. விசுவாசம் என்பது நீங்கள் கட்டாயப்படுத்தவோ, கெஞ்சவோ, சம்பாதிக்கவோ கூடிய ஒன்றல்ல; அது அவர்களிடம் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். இருப்பதை ஏதோ ஒரு காரணத்திற்காக காட்டாமலும் இருக்கலாம். நீங்கள் மிகவும் தன்னலமற்ற, அன்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள நபராக இருக்கலாம், ஆனாலும், பிறர் உங்கள் அற்பணிப்புக்கு ஈடாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீங்கள் எப்போதும் அவர்களுக்காக, விஷயங்கள் கடினமாகும்போது துணை நிற்பவராகவும், அவர்களை மீண்டும் மீண்டும் மதிப்பவர்களாகவும் இருக்கலாம்... அவர்கள் உங்களை ஒருபோதும் அதே வழியில் மதிப்பதில்லை என்பதை உணரும்போதுதான், அந்த வலி பெரிதாக இருக்கும். #unfilteredbyak #ak #storiezbyak #ajaykumarperiyasamy #positivemindset #ammikalammamasala #akshinifoodz #optimization #elimination #successmindset #relationshipconsultant #familycounselor #mindsetcoach #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
உன்னைச் சந்தித்த அந்த நொடிக்கே மீண்டும் போக முடிந்தால்... உன் முகம் பாராமல் நிச்சயம் கடந்து போயிருப்பேன்... ஏனோ தெரியவில்லை... உனக்காக வீணடித்த மணிக்கணக்கான பேச்சுகள், உன்னை நினைத்தே கழிந்த பகல் பொழுதுகள், உன் நினைவில் கரைந்த கண்ணீர் இரவுகள்... எல்லாம் இப்போது வெறும் சுமையாக... உன் வாக்குறுதிகளை உண்மையென நம்பி என் கனவுகளைக் கோட்டை கட்டினேன், இறுதியில் உடைந்த இதயத்தோடு தனி மரமாய் நிற்கிறேன்... நீ நான் விரும்பிக் கற்ற பாடம் அல்ல, காலம் எனக்குக் கொடுத்த கசப்பான மருந்து, ஒருவேளை நீ இருந்திருந்தால்... என்கிற ஏக்கங்களை இன்றுடன் எரித்துவிடுகிறேன்... கண்ணீர் காய்ந்துவிடும்... காலம் ஓடிவிடும்... ஆனால், உனக்காக நான் தொலைத்த அந்தப் பொன்னான காலம் மட்டும் இனி எனக்குத் திரும்பக் கிடைக்காது தானே #இன்பா ...✍️ மனால்றியா அம்மு #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
சமயங்களில் நாம் நினைத்தபடி எதுவும் அமைவதில்லை,சில நேரங்களில் நாம் உயிருக்கு உயிராக நேசித்த ஒருவரிடமிருந்து விலகி நடப்பதுதான், நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அன்பாக மாறிவிடுகிறது... இது கோபத்தால் வரும் விலகல் அல்ல, பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டிருப்பது இருவரையும் இன்னும் ஆழமாகக் காயப்படுத்தும் என்பதை உணர்ந்த பிறகு எடுக்கும் ஒரு முதிர்ச்சியான முடிவு... ஏன் இந்த அமைதியான பிரியாவிடை தெரியுமா, ஒரு கட்டத்தில், நாம் யாருக்காகக் காத்திருந்தோமோ, யாரிடம் மாற்றத்தை எதிர்பார்த்தோமோ, அங்கிருந்து எந்தப் பதிலும் வராதபோது மௌனமாக விலகுவதே கண்ணியம், ஒருவரை நேசிப்பது என்பது அவர்களைச் சிறைபிடிப்பது அல்ல, அவர்களை அவர்களின் போக்கில் விடுவதும், அவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ அனுமதிப்பதும் கூட அன்பின் ஒரு வகைதான்... அன்பு குறையவில்லை, விலகிவிட்டோம் என்பதால் அன்பு குறைந்துவிடாது, அவர்கள் இப்போதும் நன்றாகச் சாப்பிட வேண்டும், நிம்மதியாக உறங்க வேண்டும், சரியாக வாகனம் செலுத்த வேண்டும், போதிய அளவு எல்லாம் கிடைக்க வேண்டும், என்று உங்கள் மனம் இப்போதும் பதைபதைக்கும்... மௌனமான பிரார்த்தனை செய்து கொண்டே இருப்போம், உங்கள் நினைவுகளில் அவர்கள் எப்போதும் இருப்பார்கள், அவர்கள் அடையும் ஒவ்வொரு வெற்றியையும் தூரத்தில் இருந்து பார்த்து ரசிப்பீர்கள், உங்கள் மகிழ்ச்சியில் அவர்கள் பங்குபெறாவிட்டாலும், அவர்களின் மகிழ்ச்சியில் உங்கள் பிரார்த்தனை நிச்சயம் இருக்கும்... வருத்தப்படாதீர்கள்... நீங்கள் உண்மையாக இருந்தீர்கள், எல்லாமே நாம் கற்பனை செய்தபடி சுபமாக முடிவதில்லை, ஆனால், அந்தப் பயணத்தில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதுதான் முக்கியம்... நீங்கள் பொறுமையாக இருந்தீர்கள், கடைசி வரை அன்பாகவே பேசினீர்கள், உங்கள் தரப்பிலிருந்து 100% உண்மையாக நேசித்தீர்கள், ஆனால் அவர்கள் எல்லாம் கடந்து சென்றார்கள்... அவர்கள் உங்கள் வலிகளை சிரிதேனும் பொருட்படுத்தாமல், உங்கள் அன்பின் மதிப்பை உணராமல் இருக்கலாம், ஆனால், நான் என் முழு இதயத்தையும் கொடுத்தேன், என்கிற அந்த முழுமையான நிம்மதி உங்கள் மனதிற்குப் போதுமானது, நீங்கள் தோற்றுப்போகவில்லை, ஒரு அழகான உறவாக உங்கள் கடமையைச் செய்திருக்கிறீர்கள்... நிஜமான அன்பு காயப்படுத்தாது, குணப்படுத்தும், உண்மையான அன்பு எப்போதுமே முடிவில்லா தொடர்கதையாக அமைய வேண்டிய அவசியமில்லை, சில நேரங்களில் அது ஒரு பாடமாக அமையும், சில நேரங்களில் அது உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ள உதவும்... காயப்பட்டுப் பிரிந்தாலும், அவர்கள் மீண்டும் அதே பழைய துள்ளலோடும், அழகோடும், புன்னகையோடும் தன் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று விரும்புவதுதான் ஆகச்சிறந்த அன்பு... உன்னை கவனித்துக்கொள், பார்த்து வாகனம் செலுத்து, நன்றாய் சாப்பிடு, நேரத்திற்கு உறங்கு.... இந்த வார்த்தை இனி அவர்கள் காதுகளுக்கு எட்டப்போவதில்லை, ஆனால் உங்கள் மௌனத்திலும், தனிமையிலும் அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்கிற ஏக்கம் என்றும் இருக்கும்... சுயமரியாதையோடும், அதே சமயம் மௌனமான நன்றியுணர்வோடும் நகர்ந்து செல்வோம்... ✍️ மனால்றியா அம்மு #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
உறவுகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு,ஆனால், அந்த வேறுபாடுகளை நாம் கையாளும் விதம் தான் அந்த உறவு நம்மை வளர்க்கிறதா அல்லது வதைகிறதா என்பதைத் தீர்மானிக்கிறது... உறவில் கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவில்லாத போர் போலவே இருக்கும், சில உறவுகளில், நீங்கள் ஒரு மாற்றுக் கருத்தைச் சொன்னால் அது உடனே ஒரு போராக உருவெடுக்கும், இங்கே நோக்கம் தீர்வை நோக்கியது அல்ல, மாறாக உங்களை மண்டியிடச் செய்வது மட்டுமே... நீங்கள் ஒரு வலியைப் பற்றிப் பேச ஆரம்பிப்பீர்கள், ஆனால் அவர்கள் சட்டென்று அன்று நீ செய்த தவறு என்ன தெரியுமா என்று பழைய கதையைத் தோண்டுவார்கள், உங்கள் உணர்வுகள் அங்கே காணாமல் போய்விடும்... உங்கள் கருத்தைச் சொன்னதற்காக உங்களிடம் பேசாமல் இருப்பது, உங்களைப் புறக்கணிப்பது, அல்லது உங்களைக் குற்ற உணர்வுக்குள்ளாக்குவது, போன்ற தண்டனைகள் வழங்கப்படும்... அவர்களை யாராவது கேள்வி கேட்டால், அதை ஒரு பெரிய பிரச்சினையாக அவர்கள் உணர்வார்கள், நான் எப்போதும் தப்பு செய்பவனா... என்ற கேள்வியின் மூலம் உங்களை வாயடைக்கச் செய்வார்கள்... இத்தகைய சூழலில் இருப்பவர்கள் காலப்போக்கில்... பேசாமல் இருப்பதே மேல்என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள், தன் குரலைத் தானே நெரித்துக் கொள்வது அவர்களது தந்திரமாக மாறிவிடுகிறது... ஆரோக்கியமான உறவில் கருத்து வேறுபாடுகள், மனங்களின் சங்கமம் ஆரோக்கியமான மனநிலை கொண்ட ஒருவரிடம் கருத்து வேறுபாடு என்பது ஒரு உரையாடல், அங்கே இருவருமே ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடுவதில்லை, மாறாக இருவரும் சேர்ந்து அந்தப் பிரச்சனைக்க எதிராகப் போராடுகிறார்கள்... நீ சொல்வது எனக்குப் புரிகிறது, என் செயல் உன்னை இப்படி காயப்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை, இதைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்.. என்று அவர்கள் இடமளிப்பார்கள்... ஒரு விஷயத்தில் இருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம், ஆனால், உன் கருத்து எனக்குச் சம்மதமில்லை என்றாலும், உன்னை நான் மதிக்கிறேன், என்ற பக்குவம் அங்கே இருக்கும்... இந்த மோதல்கள் உறவை உடைக்காமல், ஒருவரைப் பற்றி ஒருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன,ஒவ்வொரு விவாதத்திற்குப் பிறகும் அந்த உறவு இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருக்கும்... நாம் ஏன் அமைதியைக் கடனாக வாங்குகிறோம், நமது குரல் ஒடுக்கப்படும்போது, நாம் ஒரு இருள் வட்டத்திற்குள் சிக்கிக்கொள்கிறோம், நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், நம்முடைய உண்மையான உணர்வுகளைப் புதைத்து விடுகிறோம்... ஒரு கட்டத்தில், சண்டை என்றால் இப்படித்தான் வலிக்கும், இப்படித்தான் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ள வேண்டும், என்ற தவறான புரிதல் நமக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது... கருத்து வேறுபாட்டின் போது நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வையும், அவமானத்தையும், தனிமையையும் உணர்ந்தால், அந்த உறவின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது... நினைவில் கொள்ளுங்கள், உங்கள் குரல் என்பது உங்களின் அடையாளம், உங்களை நேசிக்கும் ஒருவர் உங்கள் குரலை மதிக்கத் தயங்க மாட்டார், உங்களை நீங்களே தண்டித்துக் கொள்ளும் அமைதிbயை விட, உங்கள் உணர்வுகளை மதிக்கும் ஆரோக்கியமான மோதல் எவ்வளவோ மேலானது... வாழ்க்கையில் உங்களைப் பக்குவப்படுத்தும் மனிதர்களைத் தேடுங்கள், உங்களைப் பயமுறுத்தி பணிய வைப்பவர்களை அல்ல, கருத்து வேறுபாடு ஏற்படும்போது அங்கே கசப்புக்கு பதிலாகக் கருணை இருக்கிறதா என்று பாருங்கள், அதுவே உங்கள் மனநலத்தைக் காக்கும்... ✍️ மனால்றியா அம்மு #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
ஆண்களில் சிலர் பொதுவாக ஆலோசனைகளை தேடுவதில்லை, மாறாக, தங்கள் பொய்களை அறியாத ஒரு புதிய பெண்ணைத் தேடிச் செல்கிறார்கள், இதன் மூலம் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் தப்பித்துக்கொள்கிறார்கள்... அவர்கள் தங்களின் உணர்ச்சிக் சுமைகளையும் ஆழமான பாதுகாப்பற்ற தன்மையையும், விஷம் வாய்ந்த நடத்தைகளையும் எதிர்கொள்வதைத் தவிர்க்கிறார்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவான, அழகான தோற்றம் அல்லது சாதுர்யமான பேச்சால் மறைத்துவிட்டு, அடுத்த அப்பாவிப் பெண்ணை நோக்கி நகர்கிறார்கள்... அவர்கள் தங்கள் அகோரங்களை எதிர்கொள்வதில்லை, மாறாக, தங்கள் இடங்களை மட்டுமே மாற்றிக்கொள்கிறார்கள்... இதுவே மாறி மாறி மீண்டும் தொடர்கிறது, இது உடைந்த இதயங்களையும், குழப்பமடைந்த பெண்களையும் மட்டுமே விட்டுச் செல்கிறது, அதே சமயம், அந்த ஆண்கள் தங்கள் குறைகளையும் தவறுகளையும் ஒப்புக்கொள்ள மறுத்து, தேக்க நிலையிலேயே இருக்கிறார்கள்... அவர்கள் சுய முன்னேற்றத்தை விட தங்கள் ஈகோவுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள், அவர்களின் பொறுப்பற்றத் தன்மை இந்த விஷ சுழற்சியைத் தொடரச் செய்கிறது... அவர்கள் உதவியைத் தேடுவதில்லை, மாறாக, தங்கள் தவிர்ப்புப் பண்பை ஆதரிக்கும் ஒருவரைத் தேடுகிறார்கள், அவர்கள் ஒரு நிலைக்கு மேல் வீழ்ச்சியைச் சந்திக்கும் வரை அல்லது தங்கள் பிரச்சினைகளைத் தைரியமாக எதிர்கொள்ள முடிவு செய்யும் வரை, ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவிற்குத் தாவிக் கொண்டே இருப்பார்கள்... அவர்கள் ஒருபோதும் உண்மையாகக் தன்னை மாற்றி கொள்வதோ அல்லது புரிந்து கொள்வதோ இல்லை... சகோதரிகளே , இதன் அறிகுறிகளைக் கண்டறிந்து உங்கள் நிம்மதியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், மாற மறுக்கும் ஒரு சின்ன புத்திக்காரனை 'விடச் சிறந்த ஒருவருக்கு நீங்கள் தகுதியானவர்கள்... மாற்றத்தைத் தவிர்க்கும் நபர்கள் பெரும்பாலும் பழியை மற்றவர்கள் மீது சுமத்திவிட்டு புதிய இடங்களுக்குத் தப்பிச் செல்வார்கள், ஆனால், எல்லா ஆண்களும் இப்படி இருப்பதில்லை என்பதும், தங்களைத் திருத்திக்கொண்டு முன்னேற நினைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதும் நம்பிக்கையூட்டும் விஷயம்... உங்களை நீங்களே தற்காத்துக் கொள்வதும், உங்கள் எல்லைகளை வகுத்துக் கொள்வதும் மிகவும் அவசியம்... ✍️ மனால்றியா அம்மு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💪Motivational Quotes
7ஒரு பெண் பேசும்போது... எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண் வாதிடும்போது... எல்லாம் நன்றாக இருந்தாலும், ஏதேனும் தவறு இருக்கலாம் நம்புங்கள். ஆனால்... ஒரு பெண் அமைதியாக இருக்கும்போது... ஏதோ பெரிய தவறு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பெண்ணுக்கு மௌனம்தான் அவளுடைய கடைசி வழி. அவள் பேசுகிறாள், விளக்கம் அளிக்கிறாள், சமாதானப்படுத்துகிறாள், சமரசம் செய்கிறாள், வாதாடுகிறாள், அழுகிறாள். ஆனால்... எல்லாம் அர்த்தமற்றது, முற்றிலும் வீண் என்று அவள் உணரும்போது, அவள் மௌனத்தைத் தேர்ந்தெடுத்து தனக்குள் ஒதுங்கிக் கொள்கிறாள். ஒரு பெண் வெளியில் அமைதியாகத் தோன்றுவது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா? அது அவள் உள்ளுக்குள் உடைந்து, சிதைந்து, முற்றிலும் இனி முடியாது, என்ற பேரழிவிற்கு உள்ளாகும் போது. ஒரு பெண்ணின் மௌனத்தை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால்... ஆழமாக நேசிக்கக்கூடிய பெண், தான் மிகவும் நேசிக்கும் நபர் இல்லாமல் வாழ்வது, தாங்க முடியாத நரகம் என்று கருதுகிறாள். வாழ்த்துக்கள் நண்பர்களே. புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓