இன்றைய மருந்து தயாரிப்பு
*#பொன்னாங்கண்ணி_நெய்*
பொன்னாங்கண்ணி புளியாரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றின் சாறு மற்றும் செவ்விளநீர் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நெய் *#பித்தவெட்டை*,
*#பித்தவாயு*,
*#நீர்எரிச்சல்*,
*#நீர்ச்சுருக்கு*
மயக்கம் பித்தம் வாந்தி அரோசகம் தீரும் உடல் வலுக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
இன்றைய மருந்து தயாரிக்கும் பணி
*#ஆடாதொடை_மணப்பாகு*
*#இருமல்*,
*#காய்ச்சல்*,
*#வயிறு_நோய்*,
*#ஐயநோய்*,
*#குழந்தைகளின்_சளி*, *#இருமலுக்கு* சிறந்த மருந்து. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
இன்றைய மருந்து தயாரிப்பு
*#நத்தைபற்பம்*
(சித்த வைத்திய திரட்டு)
நத்தையை அழுக்கு போக சுத்தம் செய்து ஒரு பானையில் பாதி அளவுக்கு அவற்றை நிரப்பி பானையை வாய்க்கு பொருத்தமான ஒரு அகலை கொண்டு மூடி சீலை செய்து உலர்ந்த பின் புடமிடும் பணி
*#இரத்தமூலம்*, *#சீதபேதி*, *#ஆசனக்கடுப்பு* முதலியவை நீங்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
*#சிறுநீரகங்கள்*
சிறுநீரகங்கள் என்பது உடலின் இயற்கை வடிகட்டி மட்டுமல்ல, உயிரை பாதுகாக்கும் அமைதியான காவலர்களாகும். எப்படி ஒரு நீர் வடிகட்டி (Water purifier) தண்ணீரில் உள்ள கழிவுகளை நீக்கி தூய்மையான தண்ணீரை வழங்குகிறதோ, அதேபோல் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வடிகட்டி, உடலை சுத்தமாக வைத்திருக்கின்றன.
அப்படி பட்ட இந்த சிறுநீரகங்களை நாம் கவனிக்காமல் விட்டால், அதன் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். சிறுநீரகங்கள் உடலின் இரத்தத்தை சுத்தப்படுத்தும் முக்கிய உறுப்புகள். இவை சரியாக செயல்படாமல் போனால், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் வெளியேறாமல் இரத்தத்திலேயே சேரத் தொடங்கும். இதனால் உடல் முழுவதும் மெதுவாக பாதிப்பு ஏற்படும்.
சிறுநீரகங்கள் பலவீனமாகும் போது முதலில் உடலில் சோர்வு, உடல் வீக்கம், கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், உணவு விருப்பம் குறைவு, வாந்தி உணர்வு, மற்றும் சிறுநீர் அளவில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றும். சில நேரங்களில் சிறுநீரில் இரத்தம், நுரை போன்றவை கூட காணப்படலாம். இது சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்பதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
இந்த நிலை நீண்ட காலம் கவனிக்கப்படாமல் விட்டால், Creatinine மற்றும் Urea போன்ற கழிவு பொருட்கள் இரத்தத்தில் அதிகரிக்கும். இதனால் சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற Dialysis என்ற செயற்கை சிகிச்சை தேவைப்படலாம். Dialysis என்பது இயற்கையான சிறுநீரகத்தின் பணியை இயந்திரம் மூலம் செய்வது ஆகும்.
சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்தால், Kidney transplant போன்ற பெரிய சிகிச்சை தேவைப்படக்கூடும். இது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பெரிய சவாலாக இருக்கும்.
ஆகவே, சிறுநீரகங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவு பழக்கம், தேவையற்ற மருந்துகளை தவிர்ப்பது, மற்றும் உடல்நலத்தை நியமமாக பரிசோதிப்பது ஆகியவை சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும்.
சுருக்கமாக கூறினால், சிறுநீரகங்களை கவனிக்காமல் விட்டால் உடலில் நச்சுக்கள் சேர்ந்து, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, Dialysis அல்லது Kidney transplant போன்ற கடினமான சிகிச்சைகள் தேவைப்படும் நிலை ஏற்படலாம்.
சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
இன்றைய மருந்து தயாரிப்பு
*#முத்துபற்பம்*
வெள்ளெருக்கன் சமூலம் - இரண்டாவது புடம்
வெள்ளெருக்கன் சமூலம் செக்கில் ஆட்டி சாறு எடுத்து ஏற்கனவே புடமிட்ட முத்துவை மீண்டும் வெள்ளெருக்கன் சாறு விட்டு 72 மணி நேரம் கல்வத்தில் அரைத்து வில்லை தட்டி காய வைத்து புடமிடும் பணி
இது *#சுவாசகாசம்* (*#இரைப்பு*),
*#இருமல்*
*#குடல்புண்*
*#கொரோனா* பாதிப்பால் ஆக்சிஜன் குறைபாடுகளை களைவதற்கும்
ஈளை நோய்களைப் போக்குவதுடன் கடவுளின் குழந்தைகளாகக் கருதப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கு நரம்புகளை வலுப்படுத்தி அவர்களின் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
வயதானோருக்குக் கண் விழிகளில் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாகக் குறைத்து பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது.
*#காசம்*
*#சிலேத்துமம்_96* ஆகியவையும் இதனால் குணமாகும்.
1. கள்ளிக் கொழுந்து சாறுடன் தேன் கலந்து பற்பத்தை உண்ண வாதத்தை பற்றி வரப்பட்ட *#பிடிப்பு*, கைகால் குத்து, *#உலைச்சல்*, *#நீர்க்கோவை* போல் வயி்ற்றில் கட்டிக் கொண்டு மிகவும் வலித்தல் ஆகியவைகள் தீரும்.
2. குளிர்ந்த தண்ணீருடன் ( அரை பலம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண *#சத்தி* *#விக்கல்* *#பெரும்பாடு* *#வல்லைக்கட்டி* *#மகோதரம்* *#பாரிசவாதத்தொடர்ச்சி* *#வெப்பவாயு* *#மேகக்குட்டம்* ஆகியவைகள் தீரும்.
3. பசுவின் தயிர் ( அரை பலம் (அ) 7 ½ கிராம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண நீர்க்கோர்வை *#பாரிசசன்னி* *#பெருவயிரு* *#இராசபரு* ஆகியவை தீரும்.
4. பசுவினெய் 1 வராகன் எடை தேன் 1 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண *#உன்மத்தசோகை* *#பெரும்பாடு* *#பைத்தியவாதம்* *#பெருவயிரு* *#பித்தமூலம்* *#மயக்கபாண்டு* *#நீரிழிவு* *#சேத்துமசுரம்* *#பிரமியம்* ஆகியவைகள் தீரும்.
5. பசுவின் பால் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#இரத்தநீரிழிவு*, *#உற்பாதபெருங்கழிச்சல்*, *#உற்பாதசக்தி*, *#வெப்பானிலம்* ஆகியவை தீரும்.
6. பனங்கள் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#தேமல்* *#பாண்டு* ஆகியவைகள் தீரும்.
7. வெந்நீர் அரை பலம், தேன் 3 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண #அத்திபயோதர சிலந்தி, #எலும்புருக்கி பரு, #பாரிச வெப்ப பெரும்பாடு, #முகப்பரு, #வாய்ப்பூட்டு சன்னிப்பரு, #மேகவெட்கை, #பெருங் கழிச்சல் ஆகியவை தீரும்.
8. தேன் ஒரு வராகன் எடை இதில் பற்பத்தை மேற்கண்டபடி கலந்துண்ண *#மூத்திக்கிரிச்சரம்* *#நீரருகல்* *#மேல்மூச்சுமுட்டல்* *#விக்கல்* *#நீர்க்கட்டு* *#நீரொழுக்கு* *#நீரெரிவு* *#நீர்பீனிசம்* *#மதுமேகம்* *#யோனிப்புற்று* *#லிங்கப்புற்று* *#கிரந்திபுண்* *#வாதமூலம்* ஆகியவைகள் தீரும்.
9. திராட்சைப் பழரசம் அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#வலியுடன்கூடியஅண்டவாதம்* *#வலியில்லாதஅண்டவாதம்* என்னும் இருவகை அண்ட வாதங்கள் *#கால்வீக்கம்* *#கால்இசிவு* *#பாரிசவாதம்* ஆகியவை தீரும்.
10.கைம்மாறு வெற்றிலைச் சாறு ஒன்னெகால் வராகன் எடை தேன் ஒன்னெகால் வராகன் எடை ஆகிய இரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#இருமல்* *#தாகம்* ஆகியவை தீரும்.
11.பன்னீர் அரைப்பலம் தேன் இரண்டு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பித்தசன்னிபாதம் நேத்திரபடலிகை நேத்திரவாயு பாரிசாந்தகாரம் மாலைக்கண் பித்தகுன்மம் ஆகியவைகள் தீரும்.
12. பசுவின் வெண்ணெய் அரைபலம் தேன் இரண்டு விராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மாரிக்காலத்தில் கால்களெல்லாம் மரத்தைப்போல் திமிரடைந்து அசைக்க இயலாமல் இருப்பதும் எப்போது வலித்துக்கொண்டு உப்புசமும் பெருவயிரும் உடம்பெங்குந் தேள் கொட்டினது போன்ற கடுகடுப்பும் எரிச்சலும் விக்கலும் பிரமையும் உண்டாக்கத் தக்கதுமான இருவகை நோய்களும் தீரும்.
13. சீனிச்சர்க்கரை ஒரு வராகன் எடை ( 3 அரை கிராம் ) தேன் ஒரு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#கரப்பான்* *#சிலந்தி* *#செவ்வாப்பி* உடல் எல்லாம் மொத்தையாக கட்டிக் கொண்டு அசைக்க வொட்டாத வேதனையும் திமிரையுங் கொடுத்து அத்துடன் கோடைக் கொப்புளம் *#தேமல்* ஆகிய இவைகளை உண்டாக்கும். வாதத்தைப்பற்றிய நோய்களும் முதலில் உற்பாதக் காய்ச்சலும் குளிருங்கண்டு அத்துடன் வாந்தி விக்கல் இருமல் ஆகிய இவைகள் தோன்றி உடல் முழுவதும் சங்கம்பழத்தைப் போன்ற *#கொப்புளங்கள்* *#பருக்கள்* *#கட்டிகள்* ஆகியவை புறப்பட்டு வலியைக் கொடுக்கும். பித்தத்தைப் பற்றிய நோய்களும் வயிற்றெரிவு உடல்பருத்தல் வேதனை வீக்கம் ஆகிய இவைகளை உண்டாக்கி அவற்றுடன் *#ஒக்காளம்* *#விக்கல்* ஆகியவைகளை வரச்செய்து எருவாயைச் சேர்ந்த இரண்டு பக்கங்களிலும் புட்டங்களிலும் பருக்கள் கட்டிகள் ஆகியவைகளை வரப்பண்ணி அங்குள்ள சதைகளை வெடிக்க செய்கின்ற சேத்துமத்தை பற்றிய நோய்களும் தீரும்.
14. குளிர்ந்த நீர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பாதத்தில் *#இரணங்கண்டுதிமிருண்டாதல்* *#அக்கினிமந்தப்படுதல்* ஆகிய இக்குணங்களுடைய *#வாதக்களவுரணம்* தீரும்.
15. களாச் சமூலச்சாறு 2 வராகன் எடை தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பல்லடியில் அதிக ரணங்கொண்டு மிக வேதனை தோன்றுதல் கக்கலும் அதிக பசியும் தாகமும் உண்டாதல் ஆகிய இக்குணங்களுடைய *#பித்தக்கசிவுரணம்* தீரும்.
16. மூங்கில் கிழங்குச்சாறு 2 வராகன் எடை தேன் 5 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மூக்குத் தண்டில் அதிக இரணங்கண்டு வெகு உபத்திரவத்தை கொடுத்தல் ஒரு வேளை அதிக பசியையும் மறுவேளை அக்கினி மந்தத்தையும் உண்டாக்குதல் என்னுமிங் குணங்களையுடைய *#சேத்துமக்களவுரணம்* என்னும் நோய்கள் தீரும்.
17. விளாவிலைச்சாறு அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி உண்ண *#கண்டத்தில்இரணங்காணல்* வாயில் சுவையின்மையாக உமிழ்நீரை உண்டாக்கும் ஆகிய குணங்களுடைய *#வாதமோகைணம்* தீரும்.
18. முந்திரிகைப் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#நெற்றியில்இரணங்கண்டு* சதா எரிச்சலையும் பசி தாகத்தையும் உண்டாக்குதல் என்னும் குணத்தையுடைய *#பித்தமோகைரணம்* தீரும்.
19.நாணற் கற்கண்டு 2 வராகன் எடை ( 7 கிராம் ) தேன் 2 வராகன் எடை ( 7 கிராம் ) இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி கலந்துண்ண முழங்காலில் இரணங்கண்டு வலியுடன் பசிதாகம் இல்லாதிருத்தல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமமோகைரணம்* தீரும்.
20. வாழை சமூலச்சாறு 1 பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண இடுப்பைச் சுற்றிலும் வட்டமான ரணங்கண்டு உணர்ச்சியின்றி பசி இல்லாதிருத்தல் என்னும் குணத்தையுடைய *#வாதநகைரணம்* தீரும்.
21. சம்பு நாவல் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண கை விரல்களின் அடியில் ரணங்கண்டு தோலுரிந்து எரிச்சலும் நமைச்சலும் உண்டாகி பசியும் மயக்கமும் காணுதல் என்னும் குணத்தையுடைய *#பித்தநகைரணம்* தீரும்.
22. பசுவின் தயிர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி அளவோடு பற்பத்தைக் கலந்துண்ண அடிவயிற்றில் புண் கண்டு அதிக நீரேற்றங்கொண்டு பசி தாகமின்றி வெள்ளைப் பூண்டின் வாசனையுடைய ஏப்பத்தை உண்டாக்குதல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமநகைரணம்* தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்ய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
*#மண்ணீரல்வீக்கம்* *#Enlarged_Spleen* - 5
விரிவாக்கப்பட்ட மண்ணீரல் (ஸ்ப்ளெனோமேகலி)
உங்கள் மண்ணீரல் என்பது உங்கள் வயிற்றின் மேல் இடது பக்கத்தில், உங்கள் இடது விலா எலும்புக் கூண்டின் கீழ் அமைந்துள்ள ஒரு சாதாரண கைமுட்டி அளவிலான உறுப்பு ஆகும். உங்கள் மண்ணீரல் உங்கள் நிணநீர் மண்டலத்திற்கும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் சொந்தமானது . இது உங்கள் இரத்தத்தை வடிகட்டுகிறது, கழிவுப்பொருட்களை நீக்குகிறது மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராட வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குகிறது . மண்ணீரலையோ அல்லது அதன் வழியாகச் செல்லும் இரத்தத்தையோ பாதிக்கும் நிலைமைகள் அதை வீக்கப்படுத்தி பெரிதாக்கக்கூடும்.
வீக்கம், கொழுப்பு சேமிப்பு, தேங்கிய இரத்தம், தீங்கற்ற அல்லது வீரியம் மிக்க வளர்ச்சிகள் மற்றும் செல்களின் அதிகப்படியான உற்பத்தி உள்ளிட்ட பல விஷயங்கள் உங்கள் மண்ணீரலை பெரிதாக்கக்கூடும். சில காரணங்கள் தற்காலிகமானவை, மற்றவை நாள்பட்ட அல்லது முற்போக்கான நிலையைக் குறிக்கலாம். விரிவடைந்த மண்ணீரல் என்பது பல வேறுபட்ட நிலைகளின் அறிகுறியாகும், சில மற்றவற்றை விட மிகவும் தீவிரமானவை. விரிவடைந்த மண்ணீரல் நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது இறுதியில் செயலிழக்கத் தொடங்கலாம். அரிதான சந்தர்ப்பங்களில், கடுமையாக விரிவடைந்த மண்ணீரல் சிதைந்து, உட்புற இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.
உங்களுக்கு மண்ணீரல் பெரிதாகிவிட்டதா என்பதை நீங்கள் அறிய முடியாமல் போகலாம். உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால், அவற்றில் பின்வருவன அடங்கும்:
மேல் இடது வயிற்று வலி . இது உங்கள் இடது தோள்பட்டை அல்லது முதுகுக்கும் பரவக்கூடும்.
தொட்டுணரக்கூடிய மண்ணீரல் . உங்கள் மண்ணீரல் பெரிதாகும் வரை, பொதுவாக உங்கள் கையால் அதை உணர முடியாது.
பசியின்மை அல்லது சீக்கிரமே வயிறு நிரம்பியிருத்தல் . உங்கள் விரிவடைந்த மண்ணீரல் உங்கள் வயிற்றின் கீழே ஊடுருவக்கூடும்.
உங்கள் மண்ணீரல் செயலிழக்கத் தொடங்கினால்,
பலவீனம் மற்றும் சோர்வு போன்ற இரத்த சோகையின் அறிகுறிகள் .
அடிக்கடி சளி அல்லது தொற்றுகள்.
எளிதான இரத்தப்போக்கு மற்றும் சிராய்ப்பு.
விரிவடைந்த மண்ணீரலுக்கு தொற்றுகள் . மோனோநியூக்ளியோசிஸ் மற்றும் எச்.ஐ.வி போன்ற வைரஸ் தொற்றுகள் , காசநோய் மற்றும் எண்டோகார்டிடிஸ் போன்ற பாக்டீரியா தொற்றுகள் மற்றும் மலேரியா மற்றும் டாக்ஸோபிளாஸ்மோசிஸ் போன்ற ஒட்டுண்ணி தொற்றுகள் மண்ணீரலின் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அழுத்துகின்றன. அவை ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு செல்களை (ஹைப்பர் பிளாசியா) அதிகமாக உற்பத்தி செய்ய காரணமாகின்றன.
கல்லீரல் நோய் . நாள்பட்ட ஹெபடைடிஸ் அல்லது சிரோசிஸ் போன்ற கல்லீரலைப் பாதிக்கும் நிலைமைகள் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வழியாகச் செல்லும் இரத்த நாளங்களில் அழுத்தத்தை உருவாக்கக்கூடும் ( போர்ட்டல் உயர் இரத்த அழுத்தம் ). வாஸ்குலர் அழுத்தம் இரத்தத்தை குவித்து உங்கள் மண்ணீரலை பெரிதாக்கும்.
லுகேமியா அல்லது மைலோபுரோலிஃபெரேடிவ் நியோபிளாம்கள் (MPNகள்) மற்றும் லிம்போமாக்கள் போன்ற இரத்தப் புற்றுநோய்கள் மண்ணீரலுக்குள் வெளிநாட்டு செல்களை ஊடுருவி, தொடர்ந்து பெருகும்.
நீர்க்கட்டி அல்லது சீழ் போன்ற தீங்கற்ற வளர்ச்சிகள், அதே போல் வேறு எங்காவது இருந்து பரவும் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் போன்றவை மண்ணீரலை பெரிதாக்கும்.
ஆட்டோ இம்யூன் நோய்கள் . லூபஸ் , சார்காய்டோசிஸ் மற்றும் ருமாட்டாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நாள்பட்ட அழற்சி நிலைகள் அதிகப்படியான நோயெதிர்ப்பு மறுமொழியையும் மண்ணீரல் ஹைப்பர் பிளாசியாவையும் ஏற்படுத்தும்.
இரத்தக் கோளாறுகள் . ஹீமோலிடிக் அனீமியா மற்றும் நியூட்ரோபீனியா போன்ற நிலைமைகள் இரத்த சிவப்பணுக்களின் ஆரம்ப அழிவை ஏற்படுத்துகின்றன, அவை மண்ணீரலை அதிக சுமையாக மாற்றும், ஏனெனில் அதன் வேலை அவற்றை அகற்றுவதாகும்.
பரம்பரை வளர்சிதை மாற்றக் கோளாறுகள் . நீமன்-பிக் நோய் , காச்சர் நோய் மற்றும் அரிவாள் செல் நோய் போன்ற பல்வேறு பொருட்கள் உங்கள் இரத்தத்தில் குவிந்து உங்கள் உறுப்புகளில் சேமிக்கப்படும் நிலைமைகள் மண்ணீரலுக்குள் ஊடுருவக்கூடும்.
இரத்த உறைவு . உங்கள் கல்லீரல் அல்லது மண்ணீரலில் உள்ள ஒரு பாத்திரத்தை அடைக்கும் இரத்த உறைவு, உங்கள் மண்ணீரலில் அழுத்தம் மற்றும் இரத்தத்தை உருவாக்க வழிவகுக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
இன்றைய மருந்து தயாரிப்பு
*#உப்பு_செந்தூரம்*
புலிப்பாணி – 500
ஆகாச தாமரை சாற்றில் உப்பை அரைத்து புடமிடும் பணி
எல்லாவித *#அசீரணம்* (செரியாமை)
*#சூலை*
எல்லாவித *#குன்மம்*
*#வாதகுன்மம்*
*#விஷங்கள்* ஆகியவை தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக் கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும்.
“வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3, வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/ #சித்த மருத்துவம்
@ 9943909495, 9487553810, 04258-226495
*#Cholecystitis* பித்தப்பையின்வீக்கம்
*#பித்தப்பைநோய்* *#gallbladder* - 6
லேசான நிகழ்வுகளுக்கு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக, கொழுப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பது போன்ற உணவுமுறை மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படலாம். உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மிக முக்கியம். பித்தப்பை அகற்றப்பட்ட பிறகு, தனிநபர்கள் தங்கள் உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம், அதாவது சிறிய, அடிக்கடி உணவுகளை உட்கொள்வது மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை. இந்த மாற்றங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு செரிமான அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகின்றன.
பித்தப்பை நோய் பல உடல்நல அபாயங்களைக் கொண்டுள்ளது மற்றும் வீக்கம் அல்லது பித்தப்பைக் கற்களால் ஏற்படலாம். துல்லியமான நோயறிதல் அறிகுறி அங்கீகாரம் மற்றும் ஆரம்பகால மருத்துவ கவனிப்பைப் பொறுத்தது. ஒவ்வொரு நபரின் சூழ்நிலையும் தனித்துவமானது என்பதால், குறிப்பிட்ட சிகிச்சை சிறந்த முடிவுகளை உறுதி செய்கிறது. நோயறிதல் முறைகள் மற்றும் சிகிச்சை உத்திகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு நன்றி, மருத்துவர்கள் இப்போது பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பை வழங்க முடிகிறது. ஆரம்பகால பராமரிப்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் இந்த பொதுவான இரைப்பை குடல் நோய் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கிறது.
பித்தப்பைக் கற்கள் (பித்தப்பைக் கற்கள்) மற்றும் பித்தப்பையில் ஏற்படும் தொற்றுநோயான பித்தப்பை அழற்சி ஆகியவை பொதுவான பிரச்சினைகள். பிற சாத்தியக்கூறுகளில் வீரியம் மிக்க கட்டிகள், பித்த நாளங்களில் அடைப்புகள் அல்லது அடைப்புகள் மற்றும் பித்தப்பையில் பாலிப்கள் ஆகியவை அடங்கும். தொற்றுகள், அடைப்புகள் மற்றும் பித்தப்பைக் கற்கள் ஆகியவை பித்தப்பைப் பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகள்.
கோலிசிஸ்டிடிஸ் என்பது பித்தப்பையின் வீக்கம் ஆகும் . அறிகுறிகளில் வலது மேல் வயிற்று வலி , வலது தோள்பட்டையில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் எப்போதாவது காய்ச்சல் ஆகியவை அடங்கும். பெரும்பாலும் பித்தப்பை தாக்குதல்கள் (பிலியரி கோலிக்) கடுமையான கோலிசிஸ்டிடிஸுக்கு முன்னதாகவே இருக்கும். வழக்கமான பித்தப்பை தாக்குதலை விட கோலிசிஸ்டிடிஸில் வலி நீண்ட காலம் நீடிக்கும். பொருத்தமான சிகிச்சை இல்லாமல், கோலிசிஸ்டிடிஸின் தொடர்ச்சியான அத்தியாயங்கள் பொதுவானவை. கடுமையான கோலிசிஸ்டிடிஸின் சிக்கல்களில் பித்தப்பை கணைய அழற்சி , பொதுவான பித்த நாளக் கற்கள் அல்லது பொதுவான பித்த நாளத்தின் வீக்கம் ஆகியவை அடங்கும் .
90% க்கும் அதிகமான நேரங்களில் கடுமையான கோலிசிஸ்டிடிஸ், பித்தப்பைக் கல்லால் நீர்க்கட்டி குழாய் அடைப்பதால் ஏற்படுகிறது . பித்தப்பைக் கற்களுக்கான ஆபத்து காரணிகளில் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் , கர்ப்பம் , பித்தப்பைக் கற்களின் குடும்ப வரலாறு, உடல் பருமன் , நீரிழிவு நோய் , கல்லீரல் நோய் அல்லது விரைவான எடை இழப்பு ஆகியவை அடங்கும் . எப்போதாவது, வாஸ்குலிடிஸ் அல்லது கீமோதெரபியின் விளைவாகவோ அல்லது பெரிய அதிர்ச்சி அல்லது தீக்காயங்களிலிருந்து மீள்வதன் மூலமாகவோ கடுமையான கோலிசிஸ்டிடிஸ் ஏற்படுகிறது . ஆண்களை விட பெண்களுக்கு கற்கள் அதிகமாக உள்ளன, மேலும் அவை 40 வயதிற்குப் பிறகு பெரும்பாலும் ஏற்படுகின்றன.
பித்தப்பைக் கற்கள் உள்ள பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இருக்காது. இருப்பினும், பித்தப்பைக் கல் தற்காலிகமாக நீர்க்கட்டிக் குழாயில் தங்கும்போது, அவர்களுக்கு பித்தப்பை வலி ஏற்படுகிறது . பித்தப்பை வலி என்பது வலது மேல் நாற்புறம் அல்லது எபிகாஸ்ட்ரிக் பகுதியில் வயிற்று வலி . இது எபிசோடிக் ஆகும், இது கொழுப்பு அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு ஏற்படுகிறது, மேலும் குமட்டல் மற்றும்/அல்லது வாந்திக்கு வழிவகுக்கிறது. கோலிசிஸ்டிடிஸ் உள்ளவர்களுக்கு கோலிசிஸ்டிடிஸ் வருவதற்கு முன்பு பித்தப்பை வலி அறிகுறிகள் பெரும்பாலும் இருக்கும். கோலிசிஸ்டிடிஸில் வலி கடுமையானதாகவும் நிலையானதாகவும் மாறும். குமட்டல் பொதுவானது மற்றும் கோலிசிஸ்டிடிஸ் உள்ள 75% பேருக்கு வாந்தி ஏற்படுகிறது. வயிற்று வலிக்கு கூடுதலாக, வலது தோள்பட்டை வலியும் இருக்கலாம்.
உடல் பரிசோதனையில், வீக்கமடைந்த பித்தப்பை எப்போதும் தொடுவதற்கு மென்மையாகவும், நடுக்கிளாவிக்குலர் வலது கீழ் விலா எலும்பின் விளிம்பில் தொட்டுணரக்கூடியதாகவும் இருக்கும். கூடுதலாக, காய்ச்சல் பொதுவானது. ஆழ்ந்த உத்வேகத்துடன் கூடிய வலி, அடிவயிற்றின் வலது மேல் பகுதியில் அழுத்தும் போது சுவாசத்தை நிறுத்த வழிவகுக்கும், இது பொதுவாக கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. தோலின் மஞ்சள் நிறம் (மஞ்சள் காமாலை) ஏற்படலாம், ஆனால் பெரும்பாலும் லேசானதாக இருக்கும். கடுமையான மஞ்சள் காமாலை கோலெடோகோலிதியாசிஸ் போன்ற அறிகுறிகளுக்கு மற்றொரு காரணத்தைக் குறிக்கிறது . வயதானவர்கள், நீரிழிவு நோய் , நாள்பட்ட நோய் உள்ளவர்கள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் காய்ச்சல் அல்லது உள்ளூர் மென்மை இல்லாத தெளிவற்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
நமசிவய
ந ம சி வ ய= 51
தமிழில் மெய் எழுத்துகள் 18
அதில்
எட்டாம் எழுத்து ந்
பத்தாம் எழுத்து ம்
மூன்றாம் எழுத்து ச்
பதினான்காம் எழுத்து வ்
பதினொன்றாம் எழுத்து ய்
8+10+3+14+11=46
மெய் என்றால் உடல் நமது உடலில் இந்த ஐந்து எழுத்தும் ஐந்து இடத்தில் உடல் எழுத்தாய் விளங்கி நிற்க
அதற்கு உயிர்ப்பு கூட்ட உயிர் எழுத்தாக
அ+அ+இ+அ+அ
என்ற அட்சரத்தைக் கூட்டி
ந ம சி வ ய
என்ற மந்திரம் உருப்பெற்றது
மேற் சொன்ன எண்ணிக்கையில் உயிர்எழுத்து ஒன்று கூட்ட அதாவது
8+1=9
10+1=11
3+1=4
14+1=15
11+1=12
ஆகக் கூட்ட
9+11+4+15+12=51 என்று வரும்.
இதில் ஓம் என்பது மூலமந்திரம்
ஆகவே அது மூலாதாரத்தோடு தொடர்புள்ளது.
இந்த ஐந்தெழுத்தும் மூலத்தின் துணையின்றி வேலை செய்யாது.
ஓம் தாய் எழுத்து மற்றவை சேய் எழுத்து (தாய் எழுந்து போனால் குட்டிகள் தானே போகும்)
ஓம்நமசிவய
இது் மூலாதாரம் தொடங்கி அடுத்த ஐந்து சக்கரங்களையும் இயக்கும்
ஆகவே ஆறு ஆதாரங்களை இப்படி சூட்சமமாக சொல்லி வைத்தனர்...
51 அட்சரம்
5+1=6
6 ஆதாரங்கள்.
ஓமென்ற ஆதாரம் ஆறுக்குள்ளே உண்டப்பா நூற்றியெட்டு வர்மம் தானே!
- அகத்தியர் பாடல்
- திருமந்திர ரகசிய குறிப்புகளில் இருந்து.... சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும்.
“வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3, வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
*#குடலிறக்கம்* ( *#Hernia* ) - 7
ஹெர்னியாவில் பல வகைகள் உள்ளன, அவற்றில் இந்த 5 வகைகள் மிகவும் பொதுவானவை:
இடுப்பு (உள் இடுப்பு) சிறுநீர்ப்பை அல்லது குடல் இடுப்பு குடல் கால்வாய் அல்லது வயிற்று சுவர் வழியாக எட்டிப் பார்க்கிறது. கிட்டத்தட்ட அனைத்து இடுப்பு குடலிறக்கங்களும் இடுப்பு குடலிறக்கங்களாகும். ஆண்கள் வயதானவுடன் இந்த பகுதியில் வலிமையை இழக்கும் போக்கைக் கொண்டுள்ளனர். இந்த பலவீனத்தின் விளைவாக ஒரு இடுப்பு குடலிறக்கம் ஏற்படுகிறது.
தொடை எலும்பு (வெளிப்புற இடுப்பு) தொடை எலும்பு குடலிறக்கம், மிகவும் அரிதான ஹெர்னியாக்களில் ஒன்று, மேல்-உள் இடுப்பு மற்றும் தொடையில் வலிமிகுந்த கட்டிகள். படுத்துக் கொள்ளும்போது வலி குறைகிறது, மேலும் சிரமப்படுதல் அல்லது இருமும்போது அதிகரிக்கிறது.
வெட்டு (ஒரு வெட்டு விளைவாக) முன்பு ஏதேனும் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அது சரியாக குணமடையவில்லை என்றால், குடல் வயிற்று சுவரில் மோதி வெளியேறுகிறது. மூன்று வகையான மக்கள் வெட்டு குடலிறக்கத்திற்கு மிகவும் ஆளாகிறார்கள்: வயதானவர்கள், அதிக எடை கொண்டவர்கள் மற்றும் வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முற்றிலும் உட்கார்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
ஹைட்டல் (வயிற்றின் மேல் பகுதி) ஹைட்டல் ஹெர்னியா என்பது நுரையீரலை உதரவிதான தசைக்கு தள்ளுவதாகும். இது சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு நிலை. இது ஒரு வருடம் முதல் வாழ்நாள் வரை நீடிக்கும்.
தொப்புள் கொடி (தொப்புள் கொடி) ஒரு நபர் பிறப்பதற்கு முன்பு, தொப்புள் கொடி வயிற்று தசை வழியாக செல்கிறது. தொப்புள் குடலிறக்கத்தில், நோயாளியின் குடலின் ஒரு பகுதி அதன் வழியாக வெளியே வரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்














