
𝗕𝗮𝗹𝗮
@_one_man_army_
☞Hᵃᵖᵖⁱⁿᵉˢˢ Is A ᴍᴏᴏᴅ.ᴘᴏꜱɪᴛɪᴠɪᴛʏ Is A Mⁱⁿᵈˢᵉᵗ💯
#🤝நேர்மையான துணை👫 #😘மாமா பாப்பா லவ்👧 #💑நீயும் நானும் அன்பே #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖
#✨ அக்ஷய திருதியை விரைவில் 🪔 #✨ அட்சய திருதியையின் முக்கியத்துவம்🏡 #💖 அக்ஷய திருதியை சுப முஹூர்த்தம்💫 #🎊 அட்சய திருதியை கொண்டாட்டம் ✨ #🪔 அட்சய திருதியை லட்சுமி பூஜை 🌺
#🎊 அட்சய திருதியை கொண்டாட்டம் ✨ #💖 அக்ஷய திருதியை சுப முஹூர்த்தம்💫 #✨ அட்சய திருதியையின் முக்கியத்துவம்🏡 #✨ அக்ஷய திருதியை விரைவில் 🪔 #💡 தங்கம் வாங்கும் குறிப்புகள் ✨
#💡 தங்கம் வாங்கும் குறிப்புகள் ✨ #✨ அக்ஷய திருதியை விரைவில் 🪔 #✨ அட்சய திருதியையின் முக்கியத்துவம்🏡 #💖 அக்ஷய திருதியை சுப முஹூர்த்தம்💫 #🎊 அட்சய திருதியை கொண்டாட்டம் ✨
🌹 அட்சய திருதியை...!!
💰 ஒவ்வொரு நாளுக்குமே ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் ஒரு சிறப்பான நாள் தான் அட்சய திருதியை.
💰 "அட்சயம்" என்றால் வளர்வது மற்றும் குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும்.
💰 அந்த நாளில் நீங்கள் எது வாங்கினாலும் மென்மேலும் வளரும், தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நமக்கு நன்மையை கொடுக்கும்.
💰 சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியை திதியை நாம் அட்சய திருதியை என்று அழைக்கிறோம்.
💰 இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
💰 "அட்சய திருதியை" அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் வாங்க வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..
அட்சய திருதியை அன்று என்னென்ன வாங்கலாம்?
💰 அட்சய திருதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களை பெற்று தரும். எனவே, அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம்.
💰 அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம்.
💰 ஏனெனில் இயற்கை தோன்றும்போது, முதலில் வந்தவை இவைதான்.
💰 தங்கம் வாங்கினால் மட்டுமே பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பதுதான் ஐதீகம்.
💰 அன்றைய நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் உப்பு மற்றும் மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு போன்றவை வாங்கலாம். அதிலும் கஸ்தூரி மஞ்சள் வாங்கினால் இன்னும் சிறப்பு. கஸ்தூரி மஞ்சளுக்கு தனி சக்தி உண்டு. அதனால் அதை வீட்டில் வாங்கி வைக்கலாம்.
எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் யாரை வழிபடலாம்?
அஸ்வினி, மகம், மூலம் : விநாயகர்
பரணி, பூரம், பூராடம் : ரங்கநாதர்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் : சிவன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் : துர்க்கை
திருவாதிரை, சுவாதி, சதயம் : பைரவர்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி : ராகவேந்திரர்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி : சிவன்
ஆயில்யம், கேட்டை, ரேவதி : பெருமாள்
உத்திரம், உத்திராடம், கிருத்திகை : முருகன்
அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டும் அல்ல எந்த பொருளை சேமித்தாலும் அது நன்மையே...!
🙏 பா பாலா 🕉️
#🎊 அட்சய திருதியை கொண்டாட்டம் ✨ #💖 அக்ஷய திருதியை சுப முஹூர்த்தம்💫 #✨ அட்சய திருதியையின் முக்கியத்துவம்🏡 #✨ அக்ஷய திருதியை விரைவில் 🪔 #💡 தங்கம் வாங்கும் குறிப்புகள் ✨
20.04.2026 திங்கட்கிழமை....
அட்சய திருதியை சுப தினம்.....
தற்போது உள்ள செய்திகளும் புராணச் செய்திகளும் உங்களுக்காக.....
தமிழகத்தில் சென்னை மற்றும் பல நகரங்களில் தங்க நகைக்கான முன் பதிவு வேகமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை: அக் ஷய திருதியைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தாண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது, தற்போது தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. எனவே, அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க, பலரும் நகை கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 35,000 நகை கடைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக தினமும் சராசரியாக, 15,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன.
அக் ஷய திருதியை, தீபாவளிக்கு தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால், சுப தினங்களில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பாதுகாப்பு அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதனால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ததால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது.
இதையடுத்து, நம் நாட்டில் கடந்த ஜன., இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் சவரன் 1,34,400 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
கடந்த மார்ச்சில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தின.
இதனால், கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதால், பல நாடுகளில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்து, கச்சா எண்ணெயில் அதிக முதலீடு செய்தனர். இதனால், தங்கம் விலை குறைந்தது. நேற்று சவரன் 1,12,800 ரூபாய்க்கு விற்பனையானது. இம் மாதம் 20ம் தேதி அக் ஷய திருதியை வருகிறது.
செய்கூலி எனவே, தற்போது பலரும் கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
தங்கம் விலை ஜனவரியில் மிகவும் அதிகரித்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. எனவே, அக் ஷய திருதியைக்கு நகை வாங்க, நகை கடைகளுக்கு தற்போதே சென்று பலரும் முன்பதிவு செய்கின்றனர்.
முன்பதிவு செய்த நாளில் இருந்து அக் ஷய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு நகைகளை வாங்கலாம்.
குறைந்த செய்கூலி, சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடி, வைர நகைகளுக்கு தள்ளுபடி என, ஒவ்வொரு நகை கடை நிறுவனமும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
தங்கம் விலை குறைவால், பலரும் நகைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இந்தாண்டு அக் ஷய திருதியைக்கு தங்கம் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
*அட்சய திருதியை பற்றிய புராண செய்திகள்*
அட்சய திருதியை (Akshaya Tritiya) என்பது சித்திரை மாத வளர்பிறை திருதியை நாளில் கொண்டாடப்படும் ஒரு புனிதமான நாளாகும். "அட்சயம்" என்றால் தேயாதது, குறையாதது, வளருவது என்று பொருள். இந்நாளில் செய்யப்படும் தானங்கள், வழிபாடுகள், தங்கம் வாங்குதல் போன்றவை பல மடங்கு புண்ணியத்தையும், செல்வத்தையும் பெருகச் செய்யும் என்பது புராண நம்பிக்கையாகும்.
அட்சய திருதியை பற்றிய முக்கிய புராண செய்திகள் மற்றும் நிகழ்வுகள்:
*குபேரன் நிதியைப் பெற்ற நாள்* : செல்வத்திற்கு அதிபதியான குபேரன், மகாலட்சுமியை வழிபட்டு, அட்சய திருதியை நாளன்று செல்வச் செழிப்பிற்கான நிதியைப் பெற்றார்.
*பரசுராமர் அவதாரம்* : மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர், இந்த பூமியில் அவதரித்தது அட்சய திருதியை தினமாகும். இது 'பரசுராம ஜெயந்தி' என்றும் கொண்டாடப்படுகிறது.
*அட்சய பாத்திரம் பெற்ற தருணம்* : வனவாசத்தின்போது, பாண்டவர்கள் பசி தீர, சூரியனிடமிருந்து 'அட்சய பாத்திரம்' (உணவு குறையாத பாத்திரம்) பெற்ற நாள் இது.
*கிருஷ்ணர்-குசேலர் நட்பு* : குசேலர் தனது வறுமை நீங்க கிருஷ்ணரைச் சந்தித்து, அட்சய திருதியை நன்னாளில் பாக்கியம் பெற்றார்.
*திரௌபதியின் மானம் காத்தல்* : பாஞ்சாலி சபையில் திரௌபதியின் மானம் காக்க, கண்ணன் அட்சய பாத்திரத்தின் மூலம் ஆடையை (சேலை) வளரச் செய்தது இந்நாளில் தான்.
*அன்னபூரணி அவதாரம்* : பார்வதி தேவி, அன்னபூரணியாக அவதரித்து, சிவபெருமானின் பசிப்பிணி தீர்த்து, உலகிற்கு உணவளிக்கும் பொறுப்பை ஏற்ற நாள்.
பா பாலா 🕉️🙏
#✨ அக்ஷய திருதியை விரைவில் 🪔 #✨ அட்சய திருதியையின் முக்கியத்துவம்🏡 #💖 அக்ஷய திருதியை சுப முஹூர்த்தம்💫 #💵மகாலக்ஷ்மி #🎊 அட்சய திருதியை கொண்டாட்டம் ✨
🌹 அட்சய திருதியை...!
தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது ஏன்?
🌟அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கையில் செல்வம் கொழிக்கும் என்று யார் எப்போது கூறினாரோ தெரியாது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாகத் தான் இந்த அட்சய திருதியை மோகம் மக்களிடம் அதிகரித்துள்ளது. இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மக்களின் இந்த மோகம்.
🌟தங்கம், வெள்ளி நகைகளின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்திருந்தாலும் கூட அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கம் வாங்கி வருகின்றனர்.
🌟புராண காலத்தில் சித்திரை மாதம் வளர்பிறையின் மூன்றாவது நாள் செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்றும், வேத காலங்களில் சான்றோர்கள் அட்சய திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டு செல்லவும் கூறினார்கள்.
🌟அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளின் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து.
🌟அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வில் வளம் பெருகும். மேலும் தங்கம், வெள்ளி வாங்குவது சிறந்தது ஆகும்.
தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது ஏன்?
🌟வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால், தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பங்களால் நகை வாங்குவது என்பது முடியாத காரியம். தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
🌟வாழ்வில் உண்மையான வளம் பெற நாம் தங்கம், வெள்ளி நகைகளை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தர்மங்களைச் செய்யுங்கள். பூஜை புனஸ்காரங்களில் மனதை லயிக்கச் செய்யுங்கள். பண்டிகைகளின் உண்மையான நோக்கங்களை நாம் என்று சரியாகப் புரிந்து கொள்கிறோமோ அன்று தான் நமக்குத் தெளிவான சிந்தனை கிடைக்கும்.
🙏 பா பாலா 🕉️
#💵மகாலக்ஷ்மி #💖 அக்ஷய திருதியை சுப முஹூர்த்தம்💫 #✨ அட்சய திருதியையின் முக்கியத்துவம்🏡 #✨ அக்ஷய திருதியை விரைவில் 🪔 #💡 தங்கம் வாங்கும் குறிப்புகள் ✨
🥇அட்சய திருதியை...!!
ஒவ்வொரு நாளுக்குமே ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் ஒரு சிறப்பான நாள் தான் அட்சய திருதியை.
'அட்சயம்" என்றால் வளர்வது மற்றும் குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும்.
அந்த நாளில் நீங்கள் எது வாங்கினாலும் மென்மேலும் வளரும், தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நமக்கு நன்மையை கொடுக்கும்.
சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியை திதியை நாம் அட்சய திருதியை என்று அழைக்கிறோம்.
அந்த வகையில் அட்சய திருதியை இந்த வருடம் நாளை வருகிறது. இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொன், பொருள் ஆபரணங்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை!
'அட்சய திருதியை" அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் வாங்க வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..
அட்சய திருதியை அன்று என்னென்ன வாங்கலாம்?
அட்சய திருதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களை பெற்று தரும். எனவே, அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம்.
அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம்.
ஏனெனில் இயற்கை தோன்றும்போது, முதலில் வந்தவை இவைதான்.
தங்கம் வாங்கினால் மட்டுமே பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பதுதான் ஐதீகம்.
அன்றைய நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் உப்பு மற்றும் மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு போன்றவை வாங்கலாம். அதிலும் கஸ்தூரி மஞ்சள் வாங்கினால் இன்னும் சிறப்பு. கஸ்தூரி மஞ்சளுக்கு தனி சக்தி உண்டு. அதனால் அதை வீட்டில் வாங்கி வைக்கலாம்.
எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் யாரை வழிபடலாம்?
அஸ்வினி, மகம், மூலம் : விநாயகர்
பரணி, பூரம், பூராடம் : ரங்கநாதர்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் : சிவன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் : துர்க்கை
திருவாதிரை, சுவாதி, சதயம் : பைரவர்
புனர்பூசம், விசாகம், பூராட்டாதி : ராகவேந்திரர்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி : சிவன்
ஆயில்யம், கேட்டை, ரேவதி : பெருமாள்
உத்திரம், உத்திராடம், கார்த்திகை : முருகன்
அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டும் அல்ல எந்த பொருளை சேமித்தாலும் அது நன்மையே...!
அனைவருக்கும் எமது இதயங்கனிந்த அட்சய திருதியை தின முன் நல்வாழ்த்துகள்...
🙏 பா பாலா 🕉️
#💖 அக்ஷய திருதியை சுப முஹூர்த்தம்💫 #✨ அட்சய திருதியையின் முக்கியத்துவம்🏡 #🪔 அட்சய திருதியை லட்சுமி பூஜை 🌺 #✨ அக்ஷய திருதியை விரைவில் 🪔 #🎊 அட்சய திருதியை கொண்டாட்டம் ✨
#💞 உடன்பிறப்புகள் தினம் 🤗 #👫 அண்ணன் - தங்கை #💑அக்கா தம்பி💞 #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #🤗குடும்ப பாசம்
#🌼தமிழ் புத்தாண்டு விரைவில்✨ #💪தமிழன்டா ஸ்டேட்டஸ் #🎵 புத்தாண்டு பாடல்கள் & கவிதைகள் 🌸 #💪தமிழன் கெத்து ஸ்டேட்டஸ் #🤘தமிழனின் கெத்து🤙






