
AMANLATCHOUMY
@amanlatchoumy637
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகளில் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்றவர் தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமணத்தின்போது உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது சிவபெருமானிடம் இருந்து தமிழை உலகிற்கு தந்தவர் முதல் தமிழ் இலக்கணம் நூல் அகத்தியம் என்று இன்றும் அவர் பெயராலேயே விளங்குகிறது இவர் பல இடங்களில் சென்று சிவபெருமானுக்கு லிங்கம் செய்து வழிபட்டு இருக்கிறார் சில கோயில்களை பார்ப்போம்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பூந்தண்டலம் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
கொளப்பாக்கம்
சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
அணைக்கட்டு சேரி சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பழைய பெருங்களத்தூர் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பவுஞ்சூர்
சென்னை
அருள்மிகு அகத்தியர் திருக்கோயில்
நெடுங்குன்றம் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
சோனானுர் மாம்பாக்கம் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
திருவான்மியூர் சென்னை
அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நாபளுர் திருத்தணி #🙏ஆன்மீகம்
ஸ்ரீரங்கத்திற்கு நிகரான திருநாங்கூர்
திருத்தெற்றியம்பலம்
108 திவ்ய தேசங்களில் மிகவும் தனித்துவமான கொண்ட ஒரு தலம்
கடலூர் மயிலாடுதுறை எல்லைக்கு அருகில் உள்ள
திருத்தெற்றியம்பலம்
திருக்கோயில் உள்ளது
108ல் இது மட்டும் தான் அம்பலம் பொதுவாக( பொன்னம்பலம் சிற்றம்பலம் ) என்ற சொல் சிவன் கோயிலுக்கே பயன்படுத்தப்படும் ஆனால் 108 திவ்ய தேசங்களில் அம்பலம் என்றே முடியும் ஒரே வைணவ தலம் இதுதான் இங்கே இறைவனே நடனமாடி சிவபெருமானுக்கு காட்சி தந்ததால் இப்பெயர் ஏற்பட்டது
இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் மறைத்து வைத்தபோது மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவனை அழித்தார் அந்த போரின் தீவிரதத்தால் பெருமாளின் கண்கள் சிவந்து போயின போருக்கு பின்னர் தலைப்பு தீர அதே சிவந்த கண்ணுடன் இங்கு வந்து பள்ளி கொண்டதால் இவருக்கு செங்கண் மால் அதாவது சிவந்த தன்னுடைய திருமால் என்று பெயர் பெற்றது
இங்குள்ள பெருமாள் ஆதிசேஷன் மீது 4 கரங்களுடன் பள்ளி கொண்டு உள்ளார் மற்ற தலங்களில் இல்லாத சிறப்பு
தனது தலையையும் வலது கையையும் தானியம் அளக்கும் மரக்கால் மீது வைத்திருக்கிறார் இது உலகிற்கு உணவளிக்கும் கரம் என்று பொருள்
படித்த படிப்புக்கு வேலை கிடைக்க பதவியில் உயர்வு பெற மற்றும் அரசியல் வாழ்வில் நியாயமான வெற்றி பெற நினைப்போர் இத்தல செங்கண் மாலை வணங்கினால் நியாயமான கோரிக்கையை நிறைவேறும்
திருநாங்கூரில் உள்ள 11 பெருமாள் கோவில்களில் இவரே ஸ்ரீரங்கம் ரங்கநாதராக கருதப்படுகிறார் இவரை தரிசிப்பது ரங்கநாதரை ரசிப்பதற்கு சமமான புண்ணியத்தை தரும் சீர்காழி இருந்து ஆறு கிலோமீட்டர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டம் காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும் #🙏ஆன்மீகம்





