
AMANLATCHOUMY
@amanlatchoumy637
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஒற்றை மார்புடன் அரிய கோலம் காட்டும் உஜ்ஜயினி காளியம்மன் வெற்றிக்கு விக்ரமாதித்தன் வழிபட்ட மாகாளி தலம்
பொதுவாக அம்மன் கோயிலுக்கு சென்றால் அன்னை ஆக்ரோசமாகவோ அல்லது சாந்தமாகவோ நான்கு கரங்களுடன் காட்சியளிப்பதை பார்த்திருப்போம் ஆனால் திருச்சி சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி என்ற திருத்தலத்தில் நாம் இதுவரை கண்டிராத ஒரு அபூர்வ கோலத்தில் அன்னை உஜ்ஜயினி காளியம்மன் அருள் பாலிக்கிறாள்
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த விக்கிரமாதித்தன் மகாராஜாவின் குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி ஆகும் இவர் காட்டில் ஆறு மாதமும் நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம் ஒரு முறை காட்டில் ஆட்சி செய்வதற்காக காவேரி காலையில் உள்ள மாகாளிக்குடி காட்டுக்குள் தான் வழிபட்ட காளி சிலை உடன் வந்தார் அங்கேயே சிலையை வைத்து வழிபாடு செய்தார் நாடு திரும்ப முயன்ற போது சிலையினை எடுக்க முடியவில்லை அப்போது அன்னை அவர் முன் தோன்றி இந்த இடத்தில் எனது சக்தி தங்கம் எனக் கூறியதால் மன்னன் அம்பிகைக்கு கோயில் கட்டி வழிபாட்டை தொடங்கினான் சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடு இல்லாதவர்கள் என்பதை உணர்த்தவே அர்த்தநாரிஸ்வரர் வடிவம் அமைத்து சிவபெருமானை போலவே தனக்கும் பூஜைகள் நடக்க வேண்டும் என பார்வதி தேவி கேட்டது விளைவாக இந்த வடிவம் உருவானதாக கூறப்படுகிறது இதனை மெய்ப்பிற்கும் வகையில் மாகாளிக்குடியில் ஒற்றைமார்புடன் அர்த்தநாரீஸ்வரர் காலத்தில் அன்னை எழுந்தருளியுள்ளார் இந்த அரிய கோலத்தை காண்பதே பெரும் பாக்கியம் இந்த கோயிலின் மற்றும் ஒரு சிறப்பு அம்மனின் திருக்கரங்கள் வழக்கமான எண்ணிக்கையில் இல்லாமல் இங்கு அன்னை மூன்று கரங்களுடன் காட்சி தருகிறாள் அசுரனை வதம் செய்த பின் அன்னை சாந்தமுகத்துடன் புன்னகை பூத்தவளாய் காட்சியளிப்பதால் இவளுக்கு ஆனந்த சௌபாக்கிய சுந்தரி என்ற திருநாமம் உண்டு திருமணத்தடை மிகவும் மாங்கல்ய பலம் அளிக்கவும் கடைகள் நீங்கவும் எழுதி தொல்லைகள் அகலவும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அம்மன் அருளால் நிறைவேறுகிறது சிவன் சக்தி இணைந்த மருத்துவமாக இருப்பதால் குடும்பத்தின் ஒற்றுமைக்கு இத்தலம் சிறப்புடையதாகும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்துக்கு மிக அருகிலேயே மா காளிக்குடி அமைந்துள்ளது தமிழகத்தில் இந்த அன்னையை உச்சிமா காளி என்று அழைக்கின்றனர் மன்னன் விக்ரமாதித்தன் போற்றி வழிபட்ட அன்னை வியக்க வைக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் மா காளிக்குடியில் அருள் பாலிக்கிறார் மனதிற்கு நிம்மதியையும் வாழ்விற்கு வளத்தையும் தரும் கோயிலுக்கு சென்று அன்னையை தரிசிப்பதால் பொறாமை தடைகள் போன்றவை அன்னையின் அருளால் விலகி நன்மை உண்டாகும் உஜ்ஜயினி மாகாளியை வழிபடுவோம் தோல்வி இல்லா வெற்றியை அடைவோம் #🙏ஆன்மீகம்
தீராத நோய் தீர்க்கும் கணக்கன்பாளையம் மலையாள பகவதி அம்மன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது
பக்தர்களின் காவல் தெய்வமாகவும் தீராத பிணைகளை தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறாள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்திலிருந்து ஒரு வியாபாரி தனது மாட்டுபொதியில் மஞ்சள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மலைப் பாதை வழியாக வந்து கொண்டிருந்தார் மூட்டைகளின் பாரம் ஒருபுறம் அதிகமாக இருந்ததால் மாடு தடுமாறி சென்றது பாரத்தை சமன் செய்ய ஏதேனும் கல் கிடைக்குமா என்று தேடிய வியாபாரிக்கு மலைக்காட்டிற்குள் ஒரு கல் மினுமினுப்புடன் தென்பட்டது அந்த கல்லை எடுத்து மாட்டுபொதியில் வைத்ததும் பாரம் சரியானது வண்டியும் சிரமமில்லாமல் நடந்தது கோபி அருகே உள்ள கணக்கன்பாளையம் மலைஅடிவாரம் பகுதிக்கு வந்த போது பொதியில் இருந்த அந்த கல் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டது ஆனால் வண்டியின் பாரத்தில் எந்த மாற்றமும் தெரியாததால் வியாபாரி அதை கவனிக்காமல் சென்று விட்டார் சில நாட்கள் கழித்து அந்த கல் விழுந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்துவிட்டது ஒரு மழைக்காலத்தில் அந்த புற்றிலிருந்து ஈசல்கள் வெளிவர அது சாப்பிட பிடிப்பதற்காக மலை அடிவாரத்தில் வசித்த வலையவன் என்பவன் அந்த புற்றை மண்வெட்டியால் வெட்டினான் அப்போது புற்றிலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஊர் மக்களிடம் விவரித்தான் மக்கள் அங்கே திரண்டு வந்த போது அங்கிருந்த ஒருவருக்கு அருள் வந்து நான் தான் மலையாள பகவதி இதே இடத்தில் வைத்து எனக்கு பூஜை செய்யுங்கள் எல்லோருக்கும் பாதுகாப்பாக இருப்பேன் என்று கூற ஊர் பெரியவர்கள் பச்சை பந்தல் அமைத்து அந்த தாய்க்கு பூஜை செய்ய தொடங்கினர் 1915 ஆம் ஆண்டு கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இன்று பிரமாண்டமான ஆலயமாக திகழ்கிறது இக்கோயிலில் அம்மன் சுயம்புவாக உருவெடுத்து அருள் பாலிக்கிறார் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 12 நாட்கள் இக்கோயில் தங்கி நந்தா தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர் எந்த நோயா இருந்தாலும் அம்மனை நினைத்து கோயில் சுற்றி உள்ள இலைதழைகளை பறித்து உடலில் பூசிக் கொண்டால் பனிபோல் நோய் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் வியாழக்கிழமை பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கும் இதில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெறும் தை மாதம் பொங்கல் திருவிழா அம்மன் திருவிழா சிறப்பாக நடைபெறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் 108 திருவிளக்கு பூஜை மற்றும் அமாவாசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும் அம்மனை வழிபடுவோம் மகிழ்ச்சியோடு வாழ்வோம் #🙏ஆன்மீகம்



![🙏ஆன்மீகம் - ஓம்காளியம்மன் திருக்கோயில் அருள்மிகு உஜ்ஜையினி ( 00="@ 094]7*00=03= ر REDDIYUR AANMIGAM_REDDIYUR AANMIGAM ANMIGAM REDDIYUR AANMIGA REDDIYUR Lu3umm ஒற்றை மார்புடன் காட்சிதரும் அம்மன் அர்த்தநாரீஸ்வரதத்துவத்தில் காட்சிதரும் காளியம்மன் ஓம்காளியம்மன் திருக்கோயில் அருள்மிகு உஜ்ஜையினி ( 00="@ 094]7*00=03= ر REDDIYUR AANMIGAM_REDDIYUR AANMIGAM ANMIGAM REDDIYUR AANMIGA REDDIYUR Lu3umm ஒற்றை மார்புடன் காட்சிதரும் அம்மன் அர்த்தநாரீஸ்வரதத்துவத்தில் காட்சிதரும் காளியம்மன் - ShareChat 🙏ஆன்மீகம் - ஓம்காளியம்மன் திருக்கோயில் அருள்மிகு உஜ்ஜையினி ( 00="@ 094]7*00=03= ر REDDIYUR AANMIGAM_REDDIYUR AANMIGAM ANMIGAM REDDIYUR AANMIGA REDDIYUR Lu3umm ஒற்றை மார்புடன் காட்சிதரும் அம்மன் அர்த்தநாரீஸ்வரதத்துவத்தில் காட்சிதரும் காளியம்மன் ஓம்காளியம்மன் திருக்கோயில் அருள்மிகு உஜ்ஜையினி ( 00="@ 094]7*00=03= ر REDDIYUR AANMIGAM_REDDIYUR AANMIGAM ANMIGAM REDDIYUR AANMIGA REDDIYUR Lu3umm ஒற்றை மார்புடன் காட்சிதரும் அம்மன் அர்த்தநாரீஸ்வரதத்துவத்தில் காட்சிதரும் காளியம்மன் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_122367_2ae97a75_1770821120706_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=706_sc.jpg)


