
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
𝗯𝗲𝗳𝗼𝗿𝗲 𝘀𝗹𝗲𝗲𝗽𝗶𝗻𝗴✝️🙏🏻
Heavenly Father,
Thank You for carrying me through this day.
Thank You for the breath in my lungs, the strength to work, and the grace that covered me even in moments I did not notice.
Lord, as the night falls, I lay every burden at Your feet.
Where I made mistakes today, please forgive me.
Where I felt weak, renew my strength.
Where I worried, replace my anxiety with Your perfect peace.
Your Word says in Psalm 4:8 that You give Your children peaceful sleep.
So tonight, I choose to trust You completely.
Guard my heart and mind.
Protect my home.
Let no fear, stress, or heaviness follow me into tomorrow.
Father, restore my soul as I rest.
Speak to me in the quiet.
Align my thoughts with Your truth.
Prepare me for a new day filled with purpose and favor.
I surrender all control to You.
You are my refuge, my defender, and my peace.
In Jesus’ name, I pray,
Amen. #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
செபம்..*
*ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.*
(எசாயா 64:8-9)
*குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.*
*ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.*
*ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.*
*ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.*
*- ஆமென்!* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
*பூண்டி புதுமை மாதாவை நோக்கி ஜெபம் மற்றும் பிரார்த்தனை*
⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️
*நித்திய பிதாவே, உமது பிரிய மகளையும், மனுக்குல இரட்சகரே, உமது நேசத் தாயையும் சகலத்தையும் பரிபாலிக்கும் பரிசுத்த ஆவியானவரே. உமக்கு உகந்த பத்தினியுமாகிய புனித கன்னி மரியாயையும் நித்தியத்திலிருந்து நியமிக்கப்பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் விசேஷ விதமாய் மகிமைப்படுத்த தீர்மானித்தீரே, உமக்கே ஆராதனை!*
*திரியேக தேவனே, உமது நியமம்படி இப்பூமியில் ஒரு பகுதியாகிய இந்தியாவில் தமிழ்நாட்டில்., தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப் பள்ளியினருகில் உள்ள பூண்டி எனும் குக்கிராமத்தில் உமது விசேஷ அருள் மாரியால் அவ்வன்னை மூலமாய் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி இறைத்து வருகிறீரே உமக்கு ஸ்துதியும் ஸ்தோத்திரமும்!*
*பூண்டியில் எழுந்தருளியிருக்கும் புதுமை மாதாவே, இயற்கை சக்திக்கும் மனித வல்லமைக்கும் மேலாக உலக மக்களின் இக் கட்டு இடைஞ்சல்களைப் போக்கி அவர்கள் ஆசிக்கும் நன்மைகளை அபரிமிதமாய் அளிக்கும் உமது அன்பும் அனுக்கிரகமும் இப் பரந்த பாரத நாட்டில் மட்டுமேயன்றி உலகத்தின் பல பாகங்களிலும் பரவி இருக்கிறது. தேவனுக்கு அநவரத காலமும் ஸ்துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக!*
*இந்த சமயம் என் ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் அந்தஸ்திற்கும் ஏற்பட்ட கஷ்டத்தைப் போக்கவும் ஆசிக்கும் நன்மைகளை அடையவும் எப்பக்கமும் ஓடியாடி எவ்வித பயனுமின்றி, கடைசியாக பூண்டி புதுமை மாதாவே, நீரே தந்து மென்று உம்மைத் தேடி அடைந்து உமது பாதத்தில் விழுந்து கிடக்கிறேன்.*
*உமது வல்லமையுள்ள மன்றாட்டால் உமது அன்பு, அனுதாபம், நீதி, நியாயம், அனுசரணைகளை எமக்கு அளித்தருளும். என் ஆத்துமத்திற்கும் சரீரத்துக்கும் அந்தஸ்திற்கும் ஏற்பட்ட கஷ்டங்கள் முற்றிலும் விலகவும் எனக்குத் தேவையான நன்மைகளை நான் அடையவும் திரியேக இறைவன் சித்தப்படி எனக்கு அடைந்து கொடுத்தருளுங்கள் தாயே!*
*கடந்த காலக் குற்றங்களுக்கு மனஸ்தாபக் கண்ணீரோடு தக்க பரிகாரம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன் . மீதி யாயுள்ள என் வாழ்நாளை கடவுளின் மகிமைக்காகவும் என்னுடையவும் பிறருடையவும் நன்மைக்காகவும் செலவழித்த பின் இறுதியில் சமாதானத்தில் கண்ணை மூடி உம்முடன் சர்வேசுரனுடைய பேரின்ப பாக்கியத்தில் பங்கு பெற வரம் அடைந்து தாரும் தாயே!*
*🙏🏻ஆமென்.🙏🏻*
⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️
*பூண்டி புதுமை மாதா பிரார்த்தனை*
⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️
சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சர்வேசுரனுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கிறிஸ்துவினுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பூலோகம் போற்றிடும் புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புதுமையால் பிரகாசித்து வரும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அண்டி வந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கேட்கும் வரத்தைத் தப்பாமல் கொடுக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்மைத் தேடி வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துன்பம் விலக ஆசிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துயரப்படுவோருக்குத் தேற்றரவாய் இருக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எதிர்பார்க்கும் நன்மைகைளைப் பெறச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குடும்பம் விளங்க ஆசிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குடும்பம் ஒற்றுமையாயிருக்க ஆசிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குடும்பத்தில் சமாதானத்தை நிறுவும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வியாதியஸ்தர்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஊமையைப் பேச வைக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இருதய நோயைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சித்தபேதத்தைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பார்வை இழந்தோருக்குப் பார்வை அளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பைத்தியத்தைக் குணப்படுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஊனமான கை கால்களை வழங்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கிடைக்காத பொருளைக் கிடைக்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
காணாத பொருளைக் கண்டடையச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பதவி உயர்வு கிடைக்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மகப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் வரமளிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நம்பியவர்களுக்கு நல்ல உபகாரியாய் இருக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சிறுபிள்ளைகளுக்கு ஞான விளக்காய்ப் பிரகாசிக்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கற்புக்குக் களங்கம் வராமல் காத்திடும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பாவத்திலிருந்து விலக்கிக் காத்திடும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துஷ்டர்களை மனந்திருப்பும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துன்மார்க்கரை நல்வழிபடுத்தும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பேய்ப் பிசாசுகளை நடுநடுங்கச் செய்யும் பூண்டி புதுமை மாதாவே ,
பாவிகளை மனந்திருப்பும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அமலோற்பவம் என்னும் நாமம் பூண்ட ஜென்ம இராக்கினியாய் விளங்கும் பூண்டி புதுமை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
*🌹செபிப்போமாக :🛐*
பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவே! ஆதாம் ஏவாள் பாவத்தால் சாபத்தை அடைந்து உலகில் பிறக்கும் மனிதன் இறக்குமட்டும் கஷ்டப்பட்டே தீர வேண்டும் என்கிற உண்மை எல்லோரையும் விட உமக்கே பகல் வெளிச்சம் ஆதலின் சாதி மத பேதமின்றி துன்புறுவோரை எல்லாம் வாருங்கள் என்று அழைத்து அவர்களது துன்பத்தை அகற்றி இன்பத்தை ஊட்டி வரும் உமது அன்பே அன்பு ; அனுதாபமே அனுதாபம் ; இந்தப் பாக்கியத்தை எல்லோரும் அடைய வேண்டி தேவ சந்நிதானத்தில் மன்றாடி மனுப்பேசி அதற்கான அருளையும் ஒளியையும் அடைந்து தாரும் தாயே!
*🙏🏻ஆமென்.🙏🏻*
*👑வெளியீடு👑*
*✝️கத்தோலிக்கன்📖*
*🛡️⚔️ஜெப📿வீரர்கள்⚔️🛡️*
*வேளாங்கண்ணி மாதாவுக்கு நவநாள் ஜெபம், மன்றாட்டுகள் மற்றும் புகழ்மாலை*
🙏🏻📿🙏🏻📿🙏🏻📿🙏🏻📿🙏🏻📿
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக! ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக, ஆமென்.
மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட மணியே! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமானபோதும் ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசு அணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், ஜெபங்களினாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும், கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்.
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெரு மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறவர்களுக்கு நீர் வாக்களித்த விசேஷ உதவியையும் பாதுகாப்பையும் எனக்காக இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின்போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுக்கள் கடவுளுடைய விருப்பத்திற்கு மாறானவையாக இருந்தால், எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.
*(வேண்டுதலை உறுதியோடு கேட்கவும்)*
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையைக் காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திருஉள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து வணக்கமாக நான் செய்யும் இந்த நவநாளையும் இப்போது நான் செய்யப்போகும் 'அருள் நிறை' ஜெபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
*(அருள் நிறை ஜெபத்தை 9 முறை சொல்லவும்)*
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே, 'அருள் நிறைந்தவள்' என்று கபிரியேல் தூதர் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துதல்களைக் கூறுகிறேன், ஏற்றுக் கொள்ளும். நீர் அணிந்திருக்கும் முடியில் என் ஜெபங்கள் அத்தனையும் விண்மீன்கள் எனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு, உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திருமகனும் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும், அது போன்ற உமதன்பையும் பார்த்து, ஏழையான எனது ஜெபத்தை ஏற்று, என் மன்றாட்டை அடைந்து தந்தருளும் தாயே!
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
*வேளாங்கண்ணி மாதாவை நோக்கி மன்றாட்டு:*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
கன்னி மரியே! ஆரோக்கிய அன்னையே! வேளாங்கன்னியில் இரக்கத்தின் அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் ஆண்டவளே! எங்களின் ஆன்ம, உடல் நோய்களை அகற்றி, எங்களுக்கு ஆறுதலாயும் அடைக்கலமாயும் இருந்தருளும். உமது பேருதவியால் எண்ணற்ற பிணியாளர் நலமடைந்துள்ளனர். உமது வல்லமையையும், தயவையும் நம்பிக் கொண்டு உம்மை நாடி வந்துள்ளோம். உம் திருமகனையும், உம்மையும் அன்பு செய்து இறைத் தொண்டர்களாக நாங்கள் விளங்குமாறு செய்தருளும். எங்களின் ஆன்ம அருள் வாழ்வை வளப்படுத்தி அருளும். உலக துன்பங்களாலும், மன வேதனைகளாலும் அல்லலுறுகின்றவர்களுக்கு அருகிலிருந்து உமது தாயன்புடன் ஆறுதலளியும். இறைவனின் திருவுளத்திற்கு ஏற்புடையதானால் அத்தகைய துன்ப வேதனைகளினின்று அவர்களைக் காத்தருளும். பாவச் சேற்றில் சிக்குண்டவர்களை உமது அருள் நீரால் கழுவி புனிதராக்கியருளும். இதயத் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ள இறைமகனை ஈன்றெடுத்த தாயே! உமது உதவியை நாடியவர் எவராகிலும் உம்மால் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லையே! எங்களுடைய துயர வேளைகளில் எங்களின் தஞ்சமாயிருப்பீர் என்று நாங்கள் உறுதியாயிருக்கிறோம். ஏனெனில் ஆறுதல் அளிக்க விரைந்திடும் விண்ணகத்தாய் நீரே! இம்மண்ணகத்தில் கசிந்த கண்களையும் அவற்றினின்று வழிந்தோடும் துன்பக் கண்ணீரையும் கண்டு இரக்கமுடன் எங்களை அரவணைத்துக் கொள்வீராக. இறை மக்களுக்கெல்லாம் சகாயம் புரிந்து வரும் ஆரோக்கிய மாதாவே! நீர் எல்லாம் வல்ல இறைமகன் கிறிஸ்துவின் அன்னையாகையால் எவ்வுதவியையும் எங்களுக்கு அடைந்து கொடுக்கக்கூடியவள் அன்றோ! எல்லா ஆபத்துகளினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். எங்களைப் பற்றியுள்ள தீமைகளை அகற்றியருளும். இறை அன்பில் வளர்ந்திட, நலமும், வரமும், அருளும் பெற்று நாங்கள் ஒவ்வொருவரும் உம்மோடு கூடி என்றென்றும் இறைபுகழ் பாடி அவரை வாழ்த்துவோமாக.
*🙏🏻ஆமென்🙏🏻*
🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺
*வல்லமையுள்ள மன்றாட்டு:*
🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺
அருள் மழை பொழியும் ஆரோக்கிய தாயே! துன்பப்படுவோரின் துயர் துடைக்கும் தயை மிகு தாயே! இதோ அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன்/ உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம்.
உமது வல்லமையுள்ள மன்றாட்டினால்/ எங்களை கரம்பிடித்து வழி நடத்தும் தாயே! எல்லாவற்றிற்கும் மேலாக/ இறை இயேசுவையே அன்பு செய்யவும்/ அவருக்காகவே வாழவும்/ எங்களுக்கு துணை செய்வீராக!
ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் / அன்புடன் அரவணைக்கும் அன்னையே!எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கின்ற நீர்/ சக்தி மிக்கவளாய் இருக்கின்றீர் அம்மா/ நாங்கள் கேட்பதை தட்டாமல் தருகின்ற அன்புத் தாயே! துன்ப துயரங்களிலிருந்து எங்களை காப்பாற்றும்.
தீராத வியாதி வருத்தங்களிலிருந்து விடுவித்தருளும் / வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும்/ அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும்/ வாழ்வதற்கு அறியாது வருந்தும் எங்களுக்கு வாழ வழி காட்டும். எங்கள் குடும்பங்களையும், தொழிலையும் ஆசீர்வதித்து பாதுகாத்தருளும் தாயே!
ஆமேன்.
ஜெபிப்போமாக
சர்வ சக்தி உடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற சர்வேசுவரா! முத்திப்பேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும், சரீரமும் இஸ்பிரீத்துசாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீரிடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்தருளினீரே; அந்த திவ்ய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே, இவ்வுலகின் சகல பொல்லாப்புகளிலேயும், நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கும்படியாக கிருபை கூர்ந்தருளும்.
இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தருளும் சுவாமி
- *🙏🏻ஆமென்🙏🏻*
🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻
*ஆன்ம உடல் நலம் பெற வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு*
🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻
கன்னி மரியே! ஆரோக்கிய அன்னையே! என் ஆண்டவளே! இறைவன் எனக்களித்த உண்மையான ஆறுதலே! இடுக்கண்களில் இளைப்பாற்றியளிக்கும் விண்ணகப் பத்தினியே! பாவ இருளில் அகப்பட்டுத் தவித்திடும் ஆன்மாவின் ஒளிச் சுடரே! திருப்பயணத்தில் வழிகாட்டியே! பலவீனத்தில் வலிமையே! ஏழைகளின் ஆறுதலே! நோயுற்றவர்களின் அரும் மருந்தே! பாவிகளின் தஞ்சமே! என் மீட்பின் நம்பிக்கையே!
எல்லையற்ற முறையில் அன்பு செய்யும் இறைவனுக்கு நீர் தாயானதால், உமது மேலான மகத்துவத்திற்கேற்ப என் மீது இரக்கம் காட்டியருளும். என் தேவைகளை எல்லாம் அறிந்துள்ள உம்மிடம் என் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிக்கிறேன்.
_(உங்கள் மன்றாட்டுக்களை இப்போது மௌனமாக நினைவு கூறவும்)_
விண்ணக மண்ணக அரசியே! கருணை நிறைந்த மாமரியே! பாவிகளின் தஞ்சமே! பாவக்கடலில் அமிழ்ந்தவர்களுக்குத் தெப்பமே! உலகத்திற்கெல்லாம் தயாபரியே! அடிமையானவர்களை மீட்கின்ற ஆண்டவளே! நோயாளிகளுக்கு ஆரோக்கியமே! உள்ளம் வேதனைப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! இவ்வுலக வாழ்வின் இருப்பிடமே!
தஞ்சமென்று நாடி வந்திருக்கும் என்னைப் புறக்கணியாது, நான் கேட்கின்ற சகாயத்தை அடைந்து தந்தருள உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை மன்றாடும் தாயே.
*🙏🏻ஆமென்.🙏🏻*
👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
*வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்குப் புகழ் மாலை*
👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
🌹ஆண்டவரே இரக்கமாயிரும்…
🌻ஆண்டவரே இரக்கமாயிரும்.
🌹கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
🌻கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
🌹ஆண்டவரே இரக்கமாயிரும்…
🌻ஆண்டவரே இரக்கமாயிரும்.
🌹கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
🌻கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.
🌹விண்ணகத் தந்தையாகிய இறைவா…
🌻எங்கள் மேல் இரக்கமாயிரும்.
🌹உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
🌻எங்கள் மேல் இரக்கமாயிரும்.
🌹தூய ஆவியாகிய இறைவா…
🌻எங்கள் மேல் இரக்கமாயிரும்.
🌹மூவொரு கடவுளாகிய இறைவா…
🌻எங்கள் மேல் இரக்கமாயிரும்.
*_(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று சொல்லவும்)_*
🌸ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸உலகம் படைக்கப்படுமுன் இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸இன்ப வனத்தில் ஆதிப் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸பாவ இருளை அகற்றுகின்ற ஞான ஒளியானத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸விடிவெள்ளி என இறைவாக்கினரால் போற்றப்படும் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸மனுக்குலத்துக்கு அருள்மழை பெறுவிக்கும் மேகமானத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸எல்லா நன்மைத்தனத்துக்கும் பாத்திரமானத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸பிதாப்பிதாக்களால் பரிசுத்தமானவள் என்று அழைக்கப்பட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸அகங்காரப் பேயின் தலையை மிதித்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸இஸ்ராயேலரின் பதினாறு அரச குலங்களுள் சிறப்புற்றக் குலத்தில் உதித்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸பேறுபெற்ற அன்னம்மாள் சுவக்கீனின் திருமகளாகப் பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸அவர்களின் வேண்டுதல்களாலும் நற்செயல்களாலும் இறைவனின் அன்புக் குழந்தையாகப் பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸தூதர், புனிதர் அனைவருக்கும் மேலாக நிறைந்த அருள் ஒளியோடு பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸படைப்புப் பொருட்கள் அனைத்திற்கும் மேலாக இறைவனுக்கு மகிமையளிக்கப் பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸விண்ணுலகும் மண்ணுலகும் போற்றிடும் அழகுடன் பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸கடவுளின் கொடைகளை எல்லாம் பெற்றுத் தரும் இறை குலக்கொழுந்தானத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸நித்தியமும் இறைவனின் திருமுன் தேர்ந்தெடுக்கப் பெற்றவளாக விளங்கிடும் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸தூய்மையின் வழியில் எல்லாப் புனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸பிறப்பின் போது விண்ணக ஒளியால் சுடர்விட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸மனிதக் குலத்தின் மகிழ்ச்சியாக விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸பிறந்தவுடன் விண்ணகத் தந்தைக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸உமது அழகுக்கேற்ப மரியா என்னும் புதிய பெயர் சூட்டப்பெற்றத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸என்றும் கன்னிகையாக விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸ஆலயத்தில் அனைவருக்கும் ஆசிரியையாக விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸நோயுற்றோரின் துன்பத்தை அகற்றி நலமருளும் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியானத் தூய ஆரோக்கிய அன்னையே…
🌸புனிதர்களின் விண்ணக முடியென விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே…
🌹உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
🌻எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
🌹உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
🌻எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
🌹உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
🌻எங்கள் மேல் இரக்கமாயிரும்.
*🌸செபிப்போமாக🌸*
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
விண்ணகத் தந்தையே இறைவா, தூய கன்னித் தாயாகிய அன்னை மரியாவை எல்லா அருட்கொடைகளாலும் அலங்கரித்து, உமது திருமகனைப் பெற்று, அமுதூட்டி வளர்க்கும் தாயாக முன்னரே தெரிந்து கொண்டீரே. இந்த உத்தமத் தாய் எங்களுக்காக மன்றாடிக் கேட்கும் விண்ணப்பங்களை நாங்கள் அடைந்து, வறுமை, பிணி போன்ற துன்பங்களிலிருந்து பாதுகாக்கப் படுவோமாக. இந்தத் தாயின் வழியாக ஆரோக்கியமும், எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் பெற்றவர்களாய் தூய்மையின் வழி நடந்து, விண்ணக வாழ்வைப் பெற்றுக் கொள்ள அருள் தாரும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
*🙏🏻ஆமென்🙏🏻*
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
தவக்கால சிந்தனைகள் - 04*
*இயேசு நாதர் தீர்ப்பிடப்படுகிறார்!*
இயேசுவை தீர்ப்பிடும் முன் நம்மை நாமே தீர்ப்பிடுவோம். நான் யார்? நான் கடந்து வந்த பாதைகள் என்ன? இப்போது எப்படி இருக்கிறேன். ஒரு நல்ல கிறிஸ்தவனாக இருக்கிறேனா? ஒரு நல்ல மனிதனாக இருக்கிறேனா? ஒரு நல்ல தந்தையாக இருக்கிறேனா? ஒரு நல்ல மகனாக இருக்கிறேனா? ஒரு நல்ல இளைஞனாக இருக்கிறேனா? ஒரு நல்ல மாணவனாக இருக்கிறேனா? இதே போல் பெண்களும் ஒரு நல்ல கிறிஸ்தவளாக, நல்ல மனுசியாக, நல்ல தாயாக, நல்ல மகளாக, ஒரு நல்ல இளம்பெண்ணாக, ஒரு நல்ல மாணவியாக இருக்கிறேனா ?
அவற்றில் எதாவது சரியில்லாமல் இருந்தால் சரிப்படுத்துவோம். எது நம் பலம்? எது நம் பலவீனம்? என்பது கண்டுபிடிப்போம். அதே வேளையில் இயேசுவை முழுமையாக அனுக முடியாமல் நமக்கு தடையாக இருப்பது என்ன என்பதையும் கண்டுபிடிப்போம். நாம் ஏற்கனவே சொன்னமாதிரி நமது பலவீனங்களை நிரந்தரமாக களைய பயிற்சி எடுப்போம்.
இயேசுவை யார் யாரோ தீர்ப்பிட்டார்கள். என்ன என்னவோ குற்றம் சுமத்தினார்கள். யார் யாரோ அடித்தார்கள். யார் யாரோ “ இவனைச் சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று கத்தினார்கள்”
அவருக்கு ஆதரவாக பேச ஒரு ஜீவன் இல்லை. ஒரு நாதி இல்லை. இவர் குற்றமற்றவர் என்று சொல்ல ஒரு நாவு இல்லை. இதே போல் நாமும் சில நேரம் செய்யாக குற்றங்கள் சுமத்தப்படுகிறோம். இல்லாதது பொல்லாததால் சுமத்தப்படுகிறோம்.
அப்போது அதை எப்படி எதிர்கொள்கிறோம். ஊரைக்கூட்டுகிறோமா? கூச்சல் போடுகிறோமா? கத்துகிறோமா? அல்லது இயேசுவைப்போல் மொளனம் காக்கிறோமா?
“ நான் பேசியது தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு. பேசியது சரினால் ஏன் என்னை அடிக்கிறாய் “ அடித்தவனுக்கு ஆண்டவன் சொல்லும் பொறுமையான பதில்.
“ உண்மைக்கு சாட்சியம் சொல்வதே எனது பணி. அதற்காகவே பிறந்தேன் அதற்காகவே இவ்வுலகிற்கு வந்தேன். உண்மையை சார்ந்தவன் எவனும் என் குரலுக்கு செவி கொடுக்கிறான் “ என்று கேட்ட அரசனுக்கு உலக அரசன் அளித்த பதில்.
அங்கே சாத்தானின் ஆட்சி தாண்டவமாடியது. ஆண்டவரின் ஆட்சி டெபாசிட் இழந்தது. இதுதான் அப்போது நிகழ்ந்த உண்மையான நிலமை.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை திரும்பிப்பார்ப்போம். அதே வேளை அன்று இயேசுவுக்கு நடந்த இன்னல்கள் யாருக்காக நடந்தது என்பதையும் யோசிப்போம். நமக்காகவா அல்லவா அன்று தீர்ப்பிடப்பட்டார். நாமும் அவருக்காக ஏதாவது செய்வோமா? செய்வோம்.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு









