
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
*குழந்தை இயேசுவுக்கு ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை*
🌷✨🌷✨🌷✨🌷✨🌷✨🌷✨
*🌻குழந்தை இயேசு செபம்🌻*
⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹
அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த
*(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)*
வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம்.
எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக
- *ஆமென்🙏🏻*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
*குழந்தை இயேசு பாலனிடம் மன்றாட்டு*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
(உன் பாவங்களுக்காக துக்கிப்பதாக இயேசுவிடம் சொல்)
*🙏🏻வல்லமையுள்ள செபம்:🙏🏻*
இனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்;கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள் மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, 'தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் மனதின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்' என்று நீர் மரண அவஸ்;தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன்.
சிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாககளித்தீரே. சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக. இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன். உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக.
-🙏🏻 ஆமென்.🙏🏻
❣️🌻❣️🌻❣️🌻❣️🌻❣️🌻
*அற்புத குழந்தை இயேசுவுக்குப் புகழ்மாலை*
❣️🌻❣️🌻❣️🌻❣️🌻❣️🌻
ஆண்டவரே இரக்கமாயிரும்-2
கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2
ஆண்டவரே இரக்கமாயிரும்-2
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்-2
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாகக் கேட்டருளும்-2
வானகத் தந்தையாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகை மீட்ட, மகனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
அற்புதக் குழந்தையாகிய இயேசுவே
*(பதில் -எங்கள் மேல் இரக்கமாயிரும்.)*
வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய குழந்தை இயேசுவே...
எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே....
எங்களுக்கு உதவிட என்றும் விரைந்துவரும் நன்மனமுடைய குழந்தை இயேசுவே...
வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே...
உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் குழந்தை இயேசுவே...
எங்கள் வறுமையை ஒளிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே
துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே...
உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே...
எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே...
தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய குழந்தை இயேசுவே...
உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் குழந்தை இயேசுவே...
நரகத்தை வெல்லும் திறமையுள்ள குழந்தை இயேசுவே....
எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள குழந்தை இயேசுவே...
உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுள்ள குழந்தை இயேசுவே...
ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே...
எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் குழந்தை இயேசுவே
ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள குழந்தை இயேசுவே...
பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய குழந்தை இயேசுவே...
உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே...
கருணை கூர்ந்து. . . *எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே.*
கருணை கூர்ந்து. . . *எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே.*
எல்லாத் தீமையிலிருந்து . . . *எங்களை மீட்டு இரட்சித்தருளும் இயேசுவே.*
எல்லாப் பாவத்திலிமிருந்து, அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவ நம்பிக்கையிலுமிருந்து
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லாசந்தேகத்திலுமிருந்து
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்து
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
எல்லாத் தீமையிலும், கேட்டிலுமிருந்து
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
உமது கன்னித்தாய் தூய மரியாள், வளர்ப்பு தந்தை தூயசூசையப்பர் இவர்களின் பரிந்துரை வழியாக எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
உமது திருக்குழந்தைப் பருவத்தின் பால் எங்களுக்குள்ள அன்பையும், பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று..
*(பதில்:-உம்மை மன்றாடுகிறோம்.)*
அற்புத உம் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று
எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள் என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று
உமது திரு இருதய அன்பால் எஙகள் உள்ளங்களை மேன்மேலும் பற்றி எரியச்செய்ய வேண்டுமென்று..
நம்பிக்கையோடு உம்மை கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டுமென்று...
எங்கள் நாடு அமைதியலே நிலைத்திருக்க அருள்தர வேண்டுமென்று...
எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று...
உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்
பொதுத்தீர்வை நாளிலே இரக்கத்துடன் எங்களுக்கு தீர்ப்பிட வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்..
உமது அற்புத திருச்சுரூபபத்திலே எங்களுக்கு ஆறுதலாகவும், அடைக்கலமாகவும் நீர் இருக்க வேண்டும் என்று..
இறைமகனே, மரிமகனே, இயேசுவே
உம்மை மன்றாடுகிறோம்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
*எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே.*
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
*எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் குழந்தை இயேசுவே.*
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
*எங்கள் மேல் இரக்கமாயிரும் குழந்தை இயேசுவே.*
*செபிப்போமாக:-*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவே! தேவரீர் சிறு குழந்தையாய்ப் பிறந்து உமது தெய்வீகத்தையும் நீரெடுத்த மனுஷீகத்தையும் சிறுமையான ஸ்ததியில் தாழ்ந்து திருவுளமானீரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது. உமது பாலத்துவத்தில் உமக்கு உண்டாயிருந்த திவ்விய ஞானத்தையும் பலவீனத்தில் வல்லமையையும் தாழ்ச்சியில் மகிமையையும் நாங்கள் அறிந்து இப்பூலோகத்தில் தாழ்ந்தப்பட்டவராகிய உம்மை ஆராதித்த பின்பு மோட்சத்திலே நீர் அடைந்திருக்கிற மகிமைப் பிரதாபத்தைத் தரிசிக்கவும் நித்திய பேரின்பத்தை அனுபவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி.
*ஆமென்.🙏🏻*
🌸🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
*அற்புத குழந்தை இயேசுவுக்கு நவநாள்*
🌷👑🌷👑🌷👑🌷👑🌷👑🌷👑
*பிதா, சுதன், பரிசுத்தாவியின் பெயராலே..*
-ஆமென்.
*(வருகைப்பா)*
அற்புதக் குழந்தை இயேசுவே!
அடியோர் மேல் இரக்கமாயிரும்!
*(மும்முறை)*
*🙏🏻தொடக்கச் செபம்:🙏🏻*
எங்கள் அருமைக் குழந்தை இயேசுவே! அடியோரை ஆசீர்வதித்து வரவேற்க கரம் விரித்து காத்திருக்கின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவிபுரியும் நீரே எங்கள் ஆண்டவர் நீரே எங்கள் மீட்பர் எங்களைப் பற்றி உமக்கு எவ்வளவோ அக்கரை எங்கள் மன்றாட்டுக்களை கேட்க எங்களோடு இருக்கின்றீர். எனவே எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து எங்கள் கோரிக்கைகளை கருணை கூர்ந்து அளித்தருளும். வல்லமைமிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு இறைஞ்சி கேட்கிறோம் தந்தையோடும் தூய ஆவியோடும், இறைவனால் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் இயேசுவே. - ஆமென்.
(விண்ணப்பம், நன்றி அறிக்கை)
*🙏🏻செபம்:🙏🏻*
அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களில் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளும்படி பணிவாக உம்மை இறைஞ்சி வேண்டுகிறோம்.
எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும் நீக்கி, உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப்போற்றுவோமாக. - ஆமென்.
*🙏🏻மன்றாட்டு:🙏🏻*
பரிவிரக்கமுள்ள தந்தையே! உமது அன்பு திருமகன்ஆண்டவர் இயேசுகிறிஸ்து எங்களுக்கு வேண்டியவையெல்லாம் தம்முடைய பெயராலே உம்மிடம் நம்பிக்கையோடு கேட்குமாறு எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதே நம்பிக்கையோடு இங்கு கூடியிருக்கும் உம் மக்களின் மன்றாட்டுக்களை கேட்டருள உம்மிடம் வேண்டுகிறோம்.
அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. நமது திருத்தந்தைக்காகவும், ஆயர்களுக்காகவும், குருக்களுக்காகவும், துறவியருக்காகவும் வேண்டுவோம்: திருச்சபையின் வளமைக்கு உதவும் வற்றாத ஊற்றாக இவர்களின் வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. நாங்கள் வேண்டிய வரங்களை பெற்றுக்கொண்ட அனைவருக்காகவும் வேண்டுகிறோம். நன்றிகூறி உம்மை வாழ்த்திப் போற்றும் நல்ல உள்ளத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. நோயாளிகளுக்காகவும், திக்கற்றவர்களுக்காகவும், சோர்ந்திருப்போருக்காகவும் வேண்டுவோம்: இவர்களுக்கெல்லாம் ஆறுதலின், ஆதரவின் பிறப்பிடமாக தெய்வத் திருக்குழந்தையாகிய நீரே இருக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. யார் யாருக்கு தனிப்பட்ட வரங்கள் தேவையோ அவர்களுக்காக வேண்டுவோம்: இவர்களின் எளிய விசுவாசத்தை ஆசீர்வதித்து தம் திருவுளப்படி தெய்வத்திருக்குழந்தை, இவர்களின் விண்ணப்பங்களை அளித்தருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே!
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
5. குழந்தை இயேசுவின் பக்தர்கள் அனைவருக்காகவும் வேண்டுவோம் ; குழந்தை உயிருள்ள விசுவாசத்தை இவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்;று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
*🌷🤲🏻(நம் சொந்த தேவைகளுக்காகவும் உறுதியோடு அமைதியாக செபிப்போம்.)🤲🏻🌷*
தந்தையே! உம் திருமகன் குழந்தை இயேசு வழியாக எங்கள் மன்றாட்டுக்களை கேட்டருளியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம், வாழ்வில் என்றுமே உமது திருவுளத்தை ஏற்று வாழும் வரமருளும்.
*🙏🏻நன்றி மன்றாட்டு:🙏🏻*
வானகத் தந்தையே! எங்கள் மீட்பராம் குழந்தை இயேசுவின் பிறப்பில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். மனுக்குலத்திற்கு
நீர் அருளிய மாபெரும் கொடை அவரே. அவரின் வாழ்வும், மரணமும், உயிர்ப்பும் இவ்வுலகில் எங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பாதுகாப்பளித்து, மறுவுலகில் முடிவில்லாப் பேரின்பத்தை அளிப்பதாக் எங்கள் ஆண்டவராகிய குழந்தை இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.
*🙏🏻நோயாளிகளுக்காக செபம்:🙏🏻*
எங்கள் தந்தையாகிய இறைவா! பாவத்திலிருந்து எங்களை மீட்கவும், துன்பத்திலிருந்து எங்களை விடுவிக்கவும், உம் திருவுளப்படி ஒரு சிறு குழந்தையாக உம் திருமகன் எங்களிடையே தோன்றினார். எல்லா நோயாளிகளுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். உமது சித்தப்படி இவர்களின் வேதனையை நீக்கி நோயை குணமாக்கியருளும். உமது இரக்கத்தால் உள்ளத்திலும், உடலிலும் இவர்கள் நலம் பெற்று; மீண்டும் உமக்கு நன்றி செலுத்துவார்களாக, தந்தையாகிய உம்மோடும், தூய ஆவியோடும் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய குழந்தை இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
இரக்கமுள்ள தந்தையே! தம்மை அண்டிவந்த நோயாளிகளின் துயரைக்கண்டு மனமிரங்கி, உம் திருமகன் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து; நோயாளிகளும், அங்கம் குறைந்தவர்களும், தீராத நோயால் துன்புறுவோரும், கனிவான அவரது கரம் தொட்டவுடனே குணம் அடைந்தனர். இங்கே குழுமியிருக்கும் நோயாளிகள் எல்லோரையும் அதே அன்புக்கரத்தால் தொட்டு குணமாக்க வேண்டுமென்று தாழ்ந்த உள்ளத்தோடு உம்மை கேட்கிறோம். உடலிலும், உள்ளத்திலும் முழு நலம் பெற்று மகிழ்வார்களாக் எங்கள் ஆண்டவர் குழந்தை இயேசுவின் பெயரால் உம்மை வேண்டுகிறோம். - ஆமென்.
*✋🏻ஆசீர் பெறுதல்:✋🏻*
சிரம் தாழ்த்தி இறைவனின் ஆசியை இறைஞ்சுவோம் இறைவனின் திருமகன் குழந்தை இயேசு பாவ இருளை அகற்றி மகிழ்ச்சி ஒளியால் நம் உள்ளத்தை நிரப்ப இவ்வுலகத்திற்கு வந்தார். மனுவுருவான வார்த்தையானவர் அமைதியையும், ஆசியையும், அக்களிப்பையும் அளித்து, நம் அனைவரையும் நட்புறவில் ஒன்றாய் இணைப்பாராக.
இறைவனின் ஆவி நம்மை ஒரே குடும்பமாய் இவ்வுலகில் இணைத்து நித்திய பேரின்பத்திற்கு அழைத்துச் செல்வாராக.
🌷👑🌷👑🌷👑🌷👑🌷👑🌷👑
*ஆற்றலுள்ள குழந்தை இயேசுவுக்கு நவமணிசெபம்*
🌷👑🌷👑🌷👑🌷👑🌷👑🌷👑
*🌷🤲🏻(குறிப்பிட்ட நேரம் துவங்கி மணிக்கு ஒருமுறையாக அடுத்தடுத்து 9 முறை குழந்தைக்குரிய பற்றுதலோடு செபிக்கவும்)🤲🏻🌷*
ஓ இயேசுவே! ' கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்கு
திறக்கப்படும் ' என்று மொழிந்தீரே. உமது திருத்தாயார் தூய மரியன்னை பரிந்துரை வழியாக நான் தட்டுகிறேன், தேடுகிறேன், கேட்கிறேன். நான் கோரும் இவ்வரத்தை கொடுத்தருளுமாறு பணிவுடன் கேட்கிறேன்.
ஓ இயேசுவே! ' என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருளுவார்' என மொழிந்தீரே, உமது திருத்தாயார் தூய மரியன்னையின் பரிந்துரையின் வழியாக எனக்கு அவசரமான இந்த மன்றாட்டை அளித்தருளமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் தந்தையை இறைஞ்சி கேட்கிறேன்.
ஓ இயேசுவே! ' விண்ணும் மண்ணும் அழிந்துபோகும் ; ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா' என்று மொழிந்தீரே. உமது திருத்தாயார் தூய மரியன்னையின் பரிந்துரை வழியாக என் செபம் கேட்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*குழந்தை இயேசு செபமாலை செய்வோம்*.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
திருக்குடும்பத்தின் மகிமைக்காக...
*மூன்று கர்த்தர் கற்பித்த செபம்.*
நம் மீட்பருடைய குழந்தைப் பருவத்தின் பன்னிரு ஆண்டுகளின் நினைவாக...
*பன்னிரு மங்கள வார்த்தை செபம்.*
தூய திரித்துவத்தின் மகிமைக்காக...
*மூன்று திரித்துவ புகழ் செபம்.*
-------------------------
_இயேசுவின் முதல் குழந்தைத் திருப்பருவம்_.
*இறைவனின் மனிதப் பிறப்பு*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் இரண்டாவது குழந்தைத் திருப்பருவம்_.
*அன்னை மரியாள் - எலிசபெத்தின் சந்திப்பு*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் மூன்றாவது குழந்தைத் திருப்பருவம்_.
*இயேசுவின் பிறப்பு*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் நான்காவது குழந்தைத் திருப்பருவம்_.
*இடையரின் ஆராதனை*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் ஐந்தாவது குழந்தைத் திருப்பருவம்_.
*விருத்தசேதனம்*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் ஆறாவது குழந்தைத் திருப்பருவம்_.
*ஞானிகளின் ஆராதனை*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் ஏழாவது குழந்தைத் திருப்பருவம்_.
*இயேசுவின் காணிக்கை*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் எட்டாவது குழந்தைத் திருப்பருவம்_.
*எகிப்து நாட்டிற்குப் பயணம்*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் ஒன்பதாவது குழந்தைத் திருப்பருவம்_.
*எகிப்தில் தங்குதல்*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் பத்தாவது குழந்தைத் திருப்பருவம்_.
*எகிப்திலிருந்து திரும்புதல்*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் பதினொன்றாவது குழந்தைத் திருப்பருவம்_.
*நசரேத்தூரில் வாழ்க்கை*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_இயேசுவின் பன்னிரெண்டாவது குழந்தைத் திருப்பருவம்_.
*மறைநூல் மேதைகளுக்கிடையே இயேசு*!
*வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.*
பரலோகத்தில் இருக்கின்ற... (3)
அருள் நிறைந்த மரியே... (12)
பிதாவுக்கும்... (3)
ஓ என் இயேசுவே... (1)
-------------------------
_மேல்காணும் செபங்களைச் சொல்லி முடித்த பிறகு *ஆமென்!* என்று பதில் வழங்கவும்._
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்





