
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*சதா சகாய மாதா நவநாள் ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை*
🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺
சதா சகாய மாதாவே, உம்மிடத்தில் சரணடைந்து நம்பிக்கையுடன் உமது பாதத்தண்டையிலிருக்கும் நீசப் பாவியான என்னை உற்று நோக்கியருளும். இரக்கத்தின் மாதாவே! என் பேரில் இரக்கமாயிரும். பாவிகளின் அடைக்கலமும் நம்பிக்கையுமென எல்லோராலும் அழைக் கப்படுகிற நீரே என் அடைக்கலமும் நம்பிக்கையுமாயிரும். சேசுவின் நேசத்துக்காக எனக்கு சகாயம் புரிந்தருளும். சதாகாலமும் உமது பிள்ளையாகப் பாராட்டி உமக்குக் கையளிக்கும் இந்த நீசப் பாவியாகிய என்னிடம் உமது கரங் களை நீட்டியருளும். உம்மிலே நம்பிக்கை வைப் பதுதான் நித்திய ஈடேற்றத்தின் பிணை என்று நான் எண்ணுகிறேன். நான் உம்மில் வைக்கும் இந்த நம்பிக்கையைச் சர்வேசுரன் தமது இரக்கத் தால் எனக்குத் தந்ததற்காக நான் அவரை வாழ்த் தித் துதிக்கிறேன். உம்மிடம் என்னை கையளிக் காததால் இவ்வளவு காலமும் நான் அநேக தடவை களில் நீசத்தனமாய்ப் பாவச் சோதனைகளில் விழுந்திருக்கிறேன். ஆனால் உமது உதவியால் நான் வெற்றியடைவேனென்று எனக்குத் தெரியும். என்னை உமக்கு நான் கையளித்தால், நீர் எனக்கு உதவி செய்வீர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் பாவத்தில் விழப் போகும் தறுவாயில் உமது உதவியைக் கேளாமல் விட்டு விடுவேனோ என்றும், அதனால் என் ஆத்துமத்தை இழந்து போக நேரிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.
ஆகையால் இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்குப் பெற்றுத்தரும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். பசாசு என்னுடன் போர் புரியும் போது நான் உம்மிடம் சரணடையவும், “ஓ மரியாயே, எனக்கு உதவி செய்யும். சதா சகாய மாதாவே, எனது ஆத்துமத்தை நான் இழந்து போக விடாதேயும்” என்று உம்மை நோக்கி வேண்டிக்கொள்ள கிருபை புரிந்தருளும்.
ஆமென்.
(அருள் நிறை மந்திரம் 9 முறை)
பரிசுத்த மரியாயே, கஸ்திப்படுகிறவர்களுக்கு உமது சகாயம் தந்தருளும். மனத்திடம் இல்லாத வர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை மகிழச் செய்தருளும். மனுக்குலத்துக்காக மன்றாடி யருளும். குருக்கள், ஆயர்களுக்காகப் பரிந்து பேசி யருளும். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்த சந்நியாசிகள் கன்னியர்களுக்காகவும் மனுப் பேசியருளும். உமது சதா சகாயத்தை வேண்டு வோர் உமது உதவியை உணரச் செய்தருளும்.
ஓ மாதாவே! நீர் எங்களுக்கு அடைக்கல மாயிருக்கிறீர். குறைகளிலும், துன்பங்களிலும் உதவி யாகவும் இருக்கிறீர்.
*🌺பிரார்த்திக்கக்கடவோம்🌺*
ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே! உமது மாதாவாகிய கன்னிமரியாயை எப்பொழுதும் உதவி செய்யத் தயாராயிருக்கும் தாயாக எங்க ளுக்குத் தந்தருளச் சித்தமானீரே. அவருடைய அற்புதமான சாயலை வணங்கி அன்னைக்குரிய உதவியை மிகவும் ஆவலுடன் வேண்டிநிற்கும் நாங்கள் உம்முடைய இரட்சண்யத்தின் பலனை சதாகாலமும் அனுபவிக்க தகுதியுள்ளவர்களா யிருக்கக் கிருபை செய்யும்படி தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். சதாகாலமும் சீவியரு மாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற சர்வேசுரா.
🙏🏻ஆமென்.🙏🏻
பரிசுத்த பாப்பரசருக்காக வேண்டிக் கொள்வோம். ஒரு பர. அருள். திரி.
🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻
*இடைவிடா சகாய அன்னையை நோக்கி மன்றாட்டு*
🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻
நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே, உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல், புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் , விரோதிகளின்பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும்.
மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே!
*- 🙏🏻ஆமென்.🙏🏻*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻
*✝️சதா சகாயமாதா✝️*
*🙏🏻பிரார்த்தனை🙏🏻*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻
🌹சுவாமி கிருபையாயிரும்
🌹கிறீஸ்துவே கிருபையாயிரும்
🌹சுவாமி கிருபையாயிரும்
🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
🌻கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
🌷பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா...
🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா...
🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா...
🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா...
🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர் திருநாமம் உடைத்தான சதா சகாய மாதாவே...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக் கும் ஆபத்தான வேளையில் அதனை ஜெயங் கொள்ளும்படி...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷எங்களுடைய முழுமனதுடன் சேசுவை நேசிப்பதற்கு...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக் கியத்துக்கு உள்ளாவேனாகில் அதிலிருந்து உடனே எழுந்திருக்கும்படி,
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷பசாசின் ஊழியத்தில் ஈடுபடும்படியான தகாத வளையில் நான் சிக்கிக் கொள்ளுவேனாகில் அத்தளையைத் தகர்த்தெறியும்படி...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் விரைவில் ஞான உஷ்ணம் கொள்ளும்படி....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங் களைப் பெறுவதிலும், கிறீஸ்தவ பக்திக்குரிய கடமைகளை பக்தியாய் செய்யும்படி...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷என் சீவியத்தில் வரும் துன்ப சோதனை வேளைகளில்....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷என்னுடைய சுபாவ துர்ச்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், புண்ணிய வாழ்க்கையில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும் படி நான் செய்யும் முயற்சிகளிலும்....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய் கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என் பலம் குறைந்து போகும்போது....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷என் மரண வேளையில் என் ஆத்துமம் என் சரீரத்தைவிட்டுப் பிரிய போராடும்போது.....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, பூஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி ஓ! என் தேவ தாயாரே, என் கடைசிநாள் பரியந்தம், என் கடைசி மூச்சு பரியந்தம்...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே...
🌻 எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே,
🌻எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே,
🌻எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
*🌻ஜெபிப்போமாக:🌻*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சர்வ வல்லவரும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்கு துணை புரிய ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாயை உமது ஏக குமாரனுக்குத் தாயாராக்கத் திருவுளமானீரே! பரிசுத்த கன்னிமரியாயின் வேண்டுதலால் அடியோர்களின் பாவநோய் தீர்ந்து, பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சிநேகித்து சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக எங்களுக்குக் கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*இடைவிடா சகாய அன்னையின் நவநாள்*
💞☘️💞☘️💞☘️💞☘️💞☘️
*தொடக்கப் பாடல்: (நிற்கவும்)*
இடைவிடா சகாய மாதாவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும். (மும்முறை)
*தொடக்க செபம்: (முழந்தாளிடவும்)*
குரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…
எல்: ஆமென்.
குரு: மிகவும் பரிசுத்த மரியே, மாசில்லாக் கன்னிகையே, எங்கள் இடைவிடா சகாயமும், அடைக்கலமும் நம்பக்கையுமாக இருப்பவள் நீரே!
எல்: இன்று நாங்கள் அனைவரும் உம்மிடம் வருகிறோம். நீர் எங்களுக்கு அடைந்தருளிய வரங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இடைவிடா சகாயத் தாயே, உம்மை நேசிக்கிறோம். எங்கள் அன்பைக் காட்ட உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும், அனைவரையும் உம்மிடம் கொண்டுவர எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என்றும் வாக்களிக்கிறோம்.
குரு: இடைவிடா சகாயத்தாயே! இறைவனிடம் சக்திவாய்ந்தவளே, எங்களுக்கு இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.
எல்: சோதனைகளை வெல்லும் பலத்தையும், இயேசு கிறிஸ்துவிடம் தூய்மையான அன்பையும், நல்ல மரணத்தையும் அடைந்து தாரும். உம்மோடும் உமது திருக்குமாரனோடும் என்றென்றும் வாழ அருள் புரியும்.
குரு: இடைவிடா சகாயத் தாயே!
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
குரு: ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவே, உமது திருத்தாயாகிய மரியன்னையின் சொல்லிற்கு இணங்கி, கலிலேயாவின் கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினீரே. எங்கள் தாயாகிய சகாய அன்னையின் மகிமையை போற்றிப் புகழ இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்கு செவி சாய்த்தருளும். எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக் கொண்டு, எங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு அருள் புரிவீராக.
எல்: ஓ இடைவிடாத சகாயத் தாயே! சக்தி வாய்ந்த உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம். வாழ்வோரின் பாதுகாவலும், மரிப்போரின் மீட்புமாயிருப்பவள் நீரே. உமது திருப்பெயர் எங்கள் நாவில் என்றும் ஒலிப்பதாக. முக்கியமாக சோதனை நேரத்திலும், மரண வேளையிலும் உமது திருப்பெயரைக் கூவி அழைப்போமாக. உமது திருப்பெயர் நம்பிக்கையும் சக்தியும் வாய்ந்தது. ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே, நாங்கள் உம்மை அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தருளும். நாங்கள் உமது திருப்பெயரை உச்சரிப்பதோடு திருப்தியடைய மாட்டோம். நீரே எங்கள் இடைவிடா சகாயத் தாய் என்பதை எங்களது தினசரி வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவோம்.
குரு: நமது சரீரத் தேவைகளுக்காக மன்றாடுவோமாக.
எல்: ஓ இடைவிடா சகாயத் தாயே! மிகுந்த நம்பிக்கையுடன் உம் முன் முழந்தாளிடுகிறோம். எங்கள் தினசரி வாழ்க்கைச் சிக்கல்களில் உமது உதவியைக் கெஞ்சி மன்றாடுகிறோம். துன்ப துயரங்கள் எங்களை வீழ்த்துகின்றன. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் வறுமைப் பிணிகளும் எங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. இரக்கம் நிறைந்த தாயே எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் தேவைகளை நிறைவேற்றும். எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும். ஆனால் நாங்கள் இன்னும் அதிக காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால், நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள சகிப்புத்தன்மையை எங்களுக்கு அளித்தருளும். ஓ! இடைவிடா சகாயத் தாயே இந்த வரங்களையெல்லாம், எங்கள் பேறுபலன்களைக் குறித்து அல்ல ஆனால் உமது அன்பிலும் வல்லமையிலும் நம்பிக்கை வைத்து கெஞ்சி மன்றாடுகிறோம்.
*🙏🏻விண்ணப்பங்கள்: (முழந்தாளிடவும்)🙏🏻*
குரு: எங்கள் திருத்தந்தைக்ககும், ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்திட வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும் சமய ஒற்றுமையிலும் சகோதரர்களைப் போல் வாழ்க்கை நடத்திட வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் தூய ஆவியார் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: இந்த நவநாள் பக்தர்கள் உமது திருவுளத்தின்படி தங்கள் உடல் நலத்தில் நீடிக்கவும், நோயாளிகள் தங்கள் உடல் நலத்தை திரும்ப அடையவும் வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: மரித்த நவநாள் பக்தர்களுக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: இந்த நவநாளில் முக்கிய கருத்துக்களுக்காகவும் இங்கு கூடியிருக்கும் அனைவருடைய தேவைகளுக்காகவும்…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: மக்கள் அனைவரும் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உமது அன்பின் ஆர்வத்தை உணரவும் வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: நமது இடைவிடா சகாயத் தாயிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக் கூறுவோம்.
*🙏🏻(சிறிது நேரம் மௌனமாக செபிப்போம்)🙏🏻*
நன்றியறிதல்: (முழந்தாளிடவும்)
குரு: நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும்…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
குரு: திருச்சபையின் திருவருட்சாதனங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும்…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
குரு: இந்த நவநாள் செய்வோர் பெற்றுக்கொண்ட ஆத்மசரீர நன்மைகளுக்காக…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
குரு: நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காக நமது இடைவிடா சகாயத் தாய்க்கு மௌனமாக நன்றி செலுத்துவோம்.
*🙏🏻(சிறிது நேரம் மௌனமாக நன்றி செலுத்துவோம்)🙏🏻*
*பாடல்: (நிற்கவும்)*
தாயே மாமரி – இன்றுன் சகாயம் தேடினோம் – தாயே மாமரி
உலகமெத்திசையும் மக்கள் போற்றிடும் புகழவும்
உம் அற்புதப் படமுன் வந்து நிற்கும் எங்களை கண் நோக்குவீர்
தாயே மாமரி – இன்றுன் சகாயம் தேடினோம் – தாயே மாமரி...
*நற்செய்தி: (நிற்கவும்)*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
*மறையுரை: (உட்காரவும்)*
குரு: நோயாளிகளுக்கு செபிப்போமாக;
எல்: ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும். நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும். நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள்புரிவீராக.எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.🙏🏻
குரு: (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.
குரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…
எல்: ஆமென்.🙏🏻
*குழுவினர் விசுவாச அறிக்கை: (முழந்தாளிடவும்)*
குரு: இங்கே கூடியிருப்பவர்களின் விசுவாச அறிக்கை.
எல்: ஓ இடைவிடா சகாயத் தாயே! நீர் அருள் நிறைந்தவள், தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே. பாவிகளின் நம்பிக்கை நீரே. அன்புள்ள அன்னையே உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் மீட்பு உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான கிறிஸ்து நாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம். சோதனை வேளையில் உமது சகாயத்தை தேட அசட்டை செய்வதால், எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ இடைவிடா சகாயத் தாயே! எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்து நாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத் தாரும்.
*மகிமை நிறைந்த மங்கள வார்த்தை செபம்: (நிற்கவும்)*
குரு: எக்காலக் கிறிஸ்தவர்களோடும் நாமும் ஒன்றித்து மரியன்னையைப் புகழுவோமாக, வல்லமை மிக்க அவளது பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போமாக.
எல்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
குரு: இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
எல்: இறைவனின் தூய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குரு: செபிப்போமாக ஓ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! உமது தாயாகிய மரியாவை, அவருடைய அற்புதப் படத்தை வணங்கும் எங்களுக்கு என்றும் உதவி செய்யத் தயாராக இருக்கும் மாதாவாகக் கொடுத்திருக்கிறீரே! அவருடைய தாய்க்குரிய சலுகைகளைத் தேடுகிற நாங்கள் உமது மீட்பின் பேறுபலன்களை நித்தியத்துக்கும் அனுபவிக்கும் பாக்கியவான்கள் ஆகும்படி எங்களுக்கு கிருபை செய்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி புரியும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.🙏🏻
#✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
*Following are the Rosary intentions to be recited in the family prayer by all the families today.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*11.02.2026 (Wednesday)*
*⚜️GLORIOUS MYSTERIES⚜️*
*🌿🌹First Glorious Mystery🌹🌿*
*The Resurrection of Lord Jesus Christ.*
As we are celebrating the feast of Our Lady of Lourdes, let us pray for all the sick people as she is the protection from the diseases. May all the sick people be healed through the intercession of our Mother. For this intention let us recite this decade.
*🌿🌹Second Glorious Mystery🌹🌿*
*The Ascension of Lord Jesus to Heaven.*
In today's responsorial Psalm 37:39 says, *"the salvation of the just comes from the Lord their stronghold in the time of distress."*
Let us pray for the release of all the convicts in the prison who are struggling without committing any crime.
*🌿🌹Third Glorious Mystery🌹🌿*
*The Descent of the Holy Ghost*
In today's Gospel our Lord Jesus says, *"Nothing that goes into a man from outside can make him unclean; it is the things that come out of a man that make him unclean."*
Let us pray that our words should not hurt or insult others but be soothing and comforting others. For this intention let us recite this decade.
*🌿🌹Fourth Glorious Mystery🌹🌿*
*The Assumption of the Blessed Virgin Mary into Heaven.*
Our Lady of Lourdes appeared to Bernadette 18 times and in 15 appraisal Mother Mary insisted to recite the Rosaries of Joyful, Sorrowful and Glorious mysteries. Let us practice the habit of reciting rosary in our family prayers and for this intention let us recite this decade.
*🌿🌹Fifth Glorious Mystery🌹🌿*
*The Coronation of the Blessed Virgin Mary, Queen of Heaven and Earth.*
In Lourdes, during her appraisal Our Lady said "I am the Immaculate conception." Let the non Catholics realise this truth and believe our Mother Mary and for this intention let us recite this decade.
*🙏🏻Amen.🙏🏻* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*11.02.2026 (புதன்)*
*⚜️மகிமை நிறை மறையுண்மைகள்⚜️*
*🌿🌹முதலாவது. ஆண்டவர் இயேசு உயித்தெழுந்ததைத் தியானித்து,*
இன்று தூய லூர்து அன்னையின் விழாவினைக் கொண்டாடும் நாம், நோயுற்றோரின் பாதுகாவலியான தூய லூர்து அன்னையை நோக்கி நல் ஆரோக்கியத்திற்காக செபிப்போம். நோயுற்ற அனைத்து மக்களும் பூரண நலம் பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹இரண்டாவது. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,*
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 37:39-ல்,
*"நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில்அவர்களுக்கு வலிமையும் அவரே."* என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
செய்யாத குற்றத்திற்காக சிறையில் அவதியுறும் எண்ணற்ற மக்களின் மீட்பிற்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹மூன்றாவது. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,*
இன்றைய நற்செய்தியில்,
*"வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்."* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நம்முடைய வார்த்தைகள் பிறரைக் காயப்படுத்தாத, வன்மத்தைக் கக்காத அன்பையும், ஆறுதலையும் அளிக்கின்ற வார்த்தைகளாக இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹நான்காவது. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,*
பெர்னதெத்துக்கு 18 முறை தரிசனமளித்த தூய லூர்து அன்னை, திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களில் 15 மறையுண்மைகளை நாளுக்கு ஒன்றாக தியானித்து செபிக்க வலியுறுத்தினார்.
குடும்ப செபமாலை செபிக்கும் பழக்கத்தை இல்லங்களில் தொய்வில்லாமல் கடைபிடிக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹ஐந்தாவது. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,*
லூர்தூ திருக்காட்சியில் "நானே அமல உற்பவம்" (பாவம் ஏதுவுமின்றி பிறந்தவர்) என்று மொழிந்த நம் அன்னையின் திரு பக்தியை பிரிவினை சகோதரர்களும் உணர வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
*புனித லூர்து மாதாவை நோக்கி நவநாள் ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை*
🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨🌸
*🌿🌹புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்🌹🌿*
அமலோற்பவ கன்னி மாதாவே ! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து , தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும் . உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும் . புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே , உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம் . உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும்
தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும் . மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே , தேவரீர் எங்கள் தாயாராகையால் , எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும்
ஆமென்
லூர்து ஆண்டவளே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
*👑🌹புனித லூர்து மாதாவுக்கு நவநாள் ஜெபம்🌹👑*
(உத்தம மனஸ்தாபப்பட்ட பின் புனித லூர்து மாதா சுரூபத்தின் அல்லது படத்தின் முன் பின்வரும் ஜெபங்களை மும்முறை சொல்லவும் )
இறைவனின் தாயாகிய புனித கன்னி மரியாயின் தூய மாசில்லாத உற்பவம் துதிக்கப்படுவதாக
எங்கள் லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் மாதாவே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்
எங்கள் லூர்து நாயகியே ! பரிசுத்த திரித்துவத்தின் நேசத்திற்காகவும் மகிமைக்காகவும் எங்களைக் குணப்படுத்தியருளும்
எங்கள் லூர்து நாயகியே ! பாவிகள் மனந்திரும்புவதற்காக எங்களைக் குணப்படுத்தியருளும்
வியாதிக்காரர்களின் ஆரோக்கியமே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்சிஷ்ட மரியாயே ! உம்மை மன்றாடுகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
*❣️புனித லூர்து மாதாவிடம் மன்றாட்டு❣️*
மகிமை நிறை லூர்து அன்னையே , அமல உற்பவியே , இரக்கத்தின் தாயே , உடல் நலமற்றோருக்கு ஆரோக்கியமே , பாவிகளின் அடைக்கலமே , துயருருவோரின் ஆறுதலே , உம்மைத் தேடி வந்தேன் என்மேல் மனமிரங்கும் , என் தேவைகள், தொல்லைகள் , துன்பங்கள் எல்லாம் உமக்குத் தெரியும் . உம்மிடம் நம்பிக்கையோடு வந்தவர்கள் உடல் உள்ள நலம் பெற்றுள்ளனர் . இந்த நம்பிக்கையோடு தாயன்போடு கூடிய உமது பரிந்துரைக்காக நான் வந்துள்ளேன் . என் விண்ணப்பங்களைக் கேட்டு உம் திருமகனிடமிருந்து அவற்றை எனக்குப் பெற்றுத் தந்தருளும் . உமது திருப் பண்புகளை நான் பின்பற்றவும் , உம்மோடு ஒரு நாள் மகிமையில் பங்கேற்கவும் எனக்கு அருளைப் பெற்றுத் தாரும் ஆமென்
*புனித லூர்து மாதா புகழ்மாலை*
🍃❣️🍃❣️🍃❣️🍃❣️🍃❣️🍃
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
திவ்விய இரட்சகரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே
*எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*
தேவ கிருபையின் அதிசயத்துக்குரிய எத்தனமான அமலோற்பவ மாதாவே
லூர்து மலைக் கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே
உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த ஸ்தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே
மோட்ச பிரதேசத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்களை அணிந்த திருமேனியுடன் தரிசனமான அமலோற்பவ மாதாவே
ஞான சௌந்தரியத்துக்கு மிஞ்சின சௌந்தர்யம் இல்லையென்று காண்பிக்க , அழகின் அவதாரம் போல தரிசனமான அமலோற்பவ மாதாவே
ஆத்துமா சுத்தத்திற்கு மேலான சுத்தம் இல்லையென்று காண்பிக்க , அந்த வெண்ணாடையை உடுத்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே
கற்பென்பது வானோர்க்கு அடுத்த புண்ணியம் என்று காண்பிக்க மேகமற்ற வானம் போன்ற நீலக்கச்சையைக் கட்டிக் கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே
கற்புக்குக் காவல் அடக்க ஒடுக்கம் என்று காண்பிக்க, நெடுமுக்காட்டைப் போர்த்திக் கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே
நாங்கள் நாடவேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அண்ணார்ந்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே
ஐம்பத்து மூன்று மணி செபத்தை அடிக்கடிச் சொல்லுதல் உத்தம பக்திக் கிருத்தியம் என்று காண்பிக்க ஜெபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே
கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரை எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள் ரோஜாச் செடியை காலாலே மிதித்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே
தாழ்ச்சியும் தரித்திரமும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் மிகுந்த பட்சமாயிருக்கிறார் என்று காண்பிக்க ஒரு ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான அமலோற்பவ மாதாவே
தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க , அந்த சிறு பெண் மூலமாக ஒரு நீரூற்றை பிறப்பித்தருளிய அமலோற்பவ மாதாவே
தேவரீருடைய வல்லமையும் , கிருபையும் அளவிட்டுச் சொல்ல முடியாது என்று காண்பிக்க அந்த நீரூற்றைத் தாராளமாய்ச் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தை அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ மாதாவே
பாவிகளை நன்னெறியில் திருப்புகின்ற லூர்து நாயகியே
நீதிமான்களை ஸ்திரப்படுத்துகின்ற லூர்து நாயகியே
இறந்தவருக்கு உயிரைக் கொடுக்கின்ற லூர்து மாதாவே
குருடர்களுக்குப் பார்வை அளிக்கிற லூர்து மாதாவே
செவிடருக்குச் செவிப்புலனைத் தருகிற லூர்து நாயகியே
சப்பாணிகளை நடக்கச் செய்கிற லூர்து மாதாவே
நோயாளிகளைக் குணப்படுத்துகிற லூர்து மாதாவே
கஸ்தியாயிருக்கிறவர்களைத் தேற்றுகின்ற லூர்து நாயகியே
சகல அவசரங்களிலும் உதவியாயிருக்கிற லூர்து நாயகியே
மேன்மேலும் மன்றாடப்படுகிற லூர்து நாயகியே
லூர்தென்னும் திருத்தலத்திற்கு கணக்கற்ற சனங்களை வரச்செய்கிற லூர்து நாயகியே
எங்கள் தாயாகிய திருச்சபைக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே
புனித பாப்பானவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே
பல தண்டனைகளுக்குப் பாத்திரமாயிருக்கிற எங்களுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலை மாதாவே
எங்கள் உற்றார் , பெற்றோர் , புத்திரர் , மித்திரருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே
எங்கள் விரோதிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலை மாதாவே
சகல பாவிகள் , பதிதர் அஞ்ஞானிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
*🙏🏻செபிப்போமாக :🙏🏻*
சர்வேசுரா சுவாமி ! முழு மனதோடு தொண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் கன்னியாயிருக்கிற அமலோற்பவ லூர்து நாயகியுடைய வேண்டுதலினாலே நாங்கள் பாவ வழியை விட்டு புண்ணிய நெறியை பற்றிக்கொள்ளவும் , மரணத்தை தேவ இஷ்ட பிரசாதத்தோடு அடையவும் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தை நோக்கி தயை செய்தருளும் ஆமென்
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
*புனித சூசையப்பரை*
*நோக்கி ஜெபங்கள், மன்றாட்டு*
*மற்றும் புகழ்மாலை*
🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
மகா பாக்கியம்பெற்ற அர்ச். சூசையப்பரே! எங்களுடைய துன்ப வேளையில் உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு, உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம். தேவதாயாரான ஜென்ம பாவமில் லாமல் உற்பவித்த அர்ச். கன்னிமரியாயிடத்தில் உமக்குள்ள சிநேகத்தின் பேராலும், திவ்விய குழந்தை சேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தைக் குரிய அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால்
*🌷(விரும்பியதைக் கேட்கவும்.)🌷*
சேசுக்கிறீஸ்துநாதர் தமது இரத்தத் தால் நமக்காக சம்பாதித்த சுதந்தரத்தை தேவரீர் கிருபையாய்ப் பார்க்கவும் எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசையால் துணையா யிருக்கவும் மன்றாடுகிறோம்.
ஓ! திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே! சேசுக்கிறீஸ்து நாதர் தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட ஜனங்களைப் பராமரித்தருளும். ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே! நாங்கள் எவ்வித தப்பிதத்திலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும். ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே! நரக சத்துருக்களோடு நாங்கள் செய்யும் யுத்தத்திலே நீர் மோட்ச சிம்மாசனத்திலிருந்து கிருபையாய் எங்களைப் பார்த்து துணையாய் வருவீராக. திவ்ய பாலகன் முன்னாள் சாவின் ஆபத்துக்குத் தப்பித் துக் கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந் தீரோ அவ்விதமே சர்வேசுரனுடைய திருச்சபையை பசாசின் வலையிலும், எவ்வித ஆபத்திலுமிருந்து பாதுகாத்தருளும். உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக்கடவது. உமது புண்ணிய மாதிரிகையாலும், உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் பரிசுத்தமாய்ச் சீவித்து பக்தியாய் மரித்துப் பரகதியின் முடிவில் லாப் பாக்கியம் பெற்று வாழும்படி கிருபை செய்ய உம்மை மன்றாடுகிறோம்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
*🙏🏻புனித சூசையப்பரிடம் மன்றாட்டு🙏🏻*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
(இந்த மன்றாட்டு கி.பி.55-ம் ஆண்டு இயற்றப்பட்டது. கி.பி.1500-ம் ஆண்டில் பாப்பரசரால் மாமன்னன் சார்லஸ் போருக்குச் செல்லும் முன் கொடுக்கப்பட்டது.)
புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.
உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.
புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும்.
*-🙏🏻 ஆமென்.🙏🏻*
🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿
*அனுகூலமடைய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரைப் பார்த்து செபம்*
🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿
கன்னியர்களின் தந்தையும், பரிபாலனுமாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! பிரமாணிக்கமுள்ள காவலனே! பரிசுத்தமயமாகிய இயேசுவையும், கன்னியருக்கு அரசியாகிய அர்ச்சியசிஷ்ட மரியாயையும் சர்வேசுரன் உமது அடைக்கலத்தில் ஒப்படைத்தாரே. உமது அருமைப் பராமரிப்புக்கு மிகவும் உரியவர்களாயிருக்கிற இந்த இருவரைக்குறித்து நான் இரந்து கேட்கும் மன்றாட்டு ஏதென்றால்...
(வேண்டியதைக் குறிப்பிடுக)
நான் மாசற்ற சிந்தனைகளோடும், பரிசுத்த இருதயத்தோடும், கற்புள்ள சரீரத்தோடும், உத்தம தேவ சிநேகத்தோடும் பழுதின்றி நடந்து, அத்திவ்விய இயேசுவுக்கும், தேவமாதாவுக்கும் இடைவிடாமல் ஊழியம் பண்ணும்படிக்கு, எனக்கு வேண்டிய வரப்பிரசாதத்தைக் கேட்டுத் தந்தருளும்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹
*அர்ச். சூசையப்பரைக் குறித்து சுகிர்த மன்றாட்டு*
🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹
கிருபை, தயாளம் நிறைந்தவருமாய், எங்கள் நேச வணக்கத்துக்கு உரியவருமாயிருக்கிற பிதாப் பிதாவாகிய அர்ச். சூசையப்பரே! தேவரீரை மன்றாடி தேவரீருடைய அடைக்கலத்தைத் தேடி, உம்மிடத்தில் தாம் இரந்து கேட்டதை அடையாமல் போனதில்லை என்று அர்ச். தெரசம்மாள் நிச்சயித்ததை நினைத்தருளும். என் அன்புள்ள தகப்பனாரே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு, நான் உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து பாவியாயிருக்கிற நான் உமது தயாளத்துக்குக் காத்துக்கொண்டு உமது சமூகத்தில் சாஷ்டாங்கமாய் விழுகிறேன். மிகவும் இரக்கமுள்ள பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே! சொற்பமும் அயோக்கியமுமாயிருக்கிற என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரராய்க் கேட்டுக் கிருபை புரிந்தருளும்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿
*அர்ச். சூசையப்பருக்குத் தன்னை முழுதும் ஒப்புக்கொடுக்கும் செபம்*
🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿
மகிமை நிறைந்த பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே! தேவமாதாவுக்குப் பரிசுத்த பத்தாவானவரே! சேசுக்கிறீஸ்துநாதரை வளர்த்த தகப்பனாரே! தேவரீரை நம்பினவர்களுக்குத் தப்பாத அடைக்கலமே, நன்மரணத்துக்கு மாதிரிகையும் தஞ்சமுமானவரே, தேவரீருடைய தாசராயிருக்கிற நாங்கள் எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். உமது சிம்மாசனத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஏக திரித்துவமான சர்வேசுரனுடைய சமூகத்திலேயும், உமது திவ்விய குமாரனான சேசுநாதருடையவும், உமது பரிசுத்த பத்தினியாகிய தேவமாதாவினுடையவும் சகல மோட்சவாசிகளுடையவும் அண்டையிலேயும் மிகுந்த வணக்கத்துடனே தேவரீரை எங்களுக்குத் தகப்பனாராகவும், ஆண்டவராகவும், அடைக்கல மாகவும் தெரிந்து கொள்ளுகிறோம். தேவரீருக்கு எங்களுடைய ஆத்துமத்தையும், சரீரத்தையும், சக்திகளையும், உடைமையுற்பத்திகளையும், எங்களுடைய மற்ற யாவற்றையும் ஒப்புக்கொடுக் கிறோம். உமது மகிமையைக் கொண்டாடி உமக் குரிய வணக்கத்தைப் பிரசித்தம் பண்ணி ஒரு நாளாவது உமக்கு ஸ்துதியையும் வேண்டுதலையும் செலுத்தாமல் இருக்கப்போகிறதில்லை. தேவரீரும் இடைவிடாமல் எங்களை நினைத்து எங்களுடைய இக்கட்டுகளை நிவிர்த்தி பண்ணி எங்களை புண்ணிய நெறியிலே வழுவாமல் நடப்பித்தருளும். சேசுநாதருடையவும் தேவமாதாவுடையவும் திருக்கரங்களில் பாக்கியமான மரணத்தையடைந்த நீர், நாங்கள் மரிக்கும்போது இஷ்டப்பிரசாதத்தோடே மரித்து மோட்ச பேரின்ப பாக்கியத்தை அடைந்து, உம்முடனே என்றென்றைக்கும் வாழப்பண்ணியருளும். உமது பிள்ளைகளாயிருக்கிற எங்களைக் கைவிடாதேயும் தகப்பனாரே.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿
*பாப்பரசர் 13-ம் சிங்கராயர் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பேரில் செய்த செபம்*
🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿
புனித சூசையப்பரே! எங்களுடைய துன்ப துயரங்களில் உமது சரணமாக ஓடி வந்தோம். உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின், உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு மன்றாடுகின்றோம்.
தேவ தாயாரான அமலோற்பவ கன்னிமாதாவின்பேரில் நீர் வைத்திருந்த அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து, அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய் பார்த்தருளி, எங்கள் அவசரங்களில் உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.
திருக்குடும்பத்தைக் காத்து நடத்தின விவேக காவலனே! இயேசு கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும். அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே! சகல பாவங்களினின்றும் எங்களைத் தற்காத்தருளும். வல்லமை பொருந்திய பாதுகாவலனே! எங்கள் சத்துருக்களோடே நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும்.
மரண ஆபத்தினின்று திவ்விய பாலனை தேவரீர் அன்று மீட்டு இரட்சித்ததைப்போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் நின்றும் இக்கட்டு இடையுறுகளில் நின்றும் திருச்சபையை பாதுகாத்தருளும். உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரிகையைப் பின்சென்று, பரிசுத்தமாய் சீவித்துப் பக்தியாய் மரித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய இடைவிடாத உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹
*புனித.சூசையப்பருக்கு*
*புகழ்மாலை*
🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹
🌷சுவாமி கிருபையாயிரும்
🌷கிறீஸ்துவே கிருபையாயிரும்
🌷சுவாமி கிருபையாயிரும்
🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
🌷பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தாவீது ராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பிதாப்பிதாக்களின் மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தேவதாயாரின் பத்தாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கன்னிமரியாயின் கற்புள்ள காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தேவ குமாரனை வளர்த்த தகப்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கிறீஸ்துநாதரை உற்சாகப்பற்றுதலுடன் காப்பாற்றினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷திருக்குடும்பத்தின் தலைமையானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம நீதிமானான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம விரத்தரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம விவேகமுடைத்தான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம தைரியசாலியான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம பிரமாணிக்கமுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பொறுமையின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தரித்திரத்தின் அன்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷சமுசார வாழ்க்கையின் ஆபரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கன்னியர்களின் காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷குடும்பங்களுக்கு ஆதரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷மரிக்கிறவர்களுக்குப் பாதுகாவலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பசாசுக்களை நடுநடுங்கச் செய்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
🌻உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
🌻கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார். அவருடைய உடைமைகளையயல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்.
*மன்றாடுவோமாக*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சர்வேசுரா சுவாமி! உம்முடைய மகா அர்ச்சியசிஷ்ட திருமாதாவின் பரிசுத்த பத்தாவாக முத்தரான சூசையப்பரை மனோவாக்குக்கெட் டாத பராமரிக்கையினால் தெரிந்து கொள்ளத் திருவுளமானீரே. பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகிற அவர் பரலோகத்தில் எங்களுக்காக மனுப்பேசுகிற வராயிருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக, தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற ஆண்டவரே.
*🙏🏻ஆமென்.🙏🏻*
திரு இருதயத்தின் சிநேகிதராகிய அர்ச். சூசையப்பரே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
*புனித சூசையப்பரின் 7 வியாகுல மற்றும் மகிழ்ச்சி ஜெபமாலை*
💔🗡️💔🗡️💔🗡️💔🗡️💔
*முதல் வியாகுலம் மற்றும் சந்தோஷம்.*
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் கன்னி மரியாயின் கெற்பத்துக்குக் காரணமறியாமல் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் காரணத்தை சம்மனசினாலறிந்து நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.
_(அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.)_
1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
*ஆமென்.*
*இரண்டாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.*
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! சேசுநாதர் மாட்டுக்கொட்டிலில் பிறந்ததைக் கண்டு நீர் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் அவர் சம்மனசுக்களாலும், மனிதர்களாலும் ஆராதிக்கப்பட்டதைக் கண்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.
_(அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.)_
1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என்இயேசுவே...
*ஆமென்.*
*மூன்றாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.*
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! திவ்விய குழந்தை விருத்த சேதனப்பட்டதைக் கண்டு நீர் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் அவருக்கு சேசுவென்னும் திருநாமம் தரிக்கப்படுவதைக் கண்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.
_(அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.)_
1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
*ஆமென்.*
*நான்காவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.*
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! திவ்விய குமாரனுடைய பாடுகளையும், அவருடைய திருத்தாயாருடைய வியாகுலங்களையும் சிமியோன் முன்னறிவிக்கக் கேட்டு நீர் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் மனுக்குலத்தின் இரட்சண்ணியத்தை அவர் முன்னறிவிக்கக் கேட்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.
_(அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.)_
1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
*ஆமென்.*
*ஐந்தாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.*
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் எகிப்து தேசத்துக்கு ஓடிப்போனதைப் பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் நீர் திவ்விய இரட்சகரைக் காப்பாற்றினதைப் பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.
_(அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.)_
1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
*ஆமென்.*
*ஆறாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.*
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! எகிப்து தேசத்தினின்று திரும்பி வருகையில் நீர் பட்ட பயத்தைப் பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் சம்மனசின் காட்சியால் தேறுதல் அடைந்ததைப் பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.
_(அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.)_
1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
*ஆமென்.*
*ஏழாவது வியாகுலம் மற்றும் சந்தோஷம்.*
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! சேசுநாதர் சேசுநாதர் காணாமல் போனதினால் நீர் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகின்றேன். மேலும் அவரை மறுபடியும் கண்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகின்றேன். அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! நீர் அனுபவித்த இந்த துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.
_(அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.)_
1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
1 ஓ! என் இயேசுவே...
*ஆமென்.*
சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக,
அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
*பிரார்த்திக்கக்கடவோம்:*
சர்வேசுரா சுவாமி, உம்முடைய மிகவும் அர்ச்சியசிஷ்ட திருமாதாவுக்கு பரிசுத்த பத்தாவாக முத்தரான அர்ச்சியசிஷ்ட சூசையப்பரை மனோவாக்குக்கெட்டாத பராமரிப்பால் தெரிந்துகொள்ளத் திருவுளமானீரே! புலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகிற அவர், பரலோகத்தில் மனுப்பேசுகிறவராய் இருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்துசாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே!
*- ஆமென்*
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
பரிசு பெற்ற மருத்துவரை மனந்திருப்பிய லூர்து புதுமை!*
தேவதாய் காட்சியளித்த லூர்துபதியில் நடைபெற்றுவரும் அற்புதங்களும், புதுமைகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. மாதா காணப்பட்ட மசபியெல் கெபி அற்புத நீரூற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் இன்றுவரை எத்தனையோ நோயாளிகளை குணமாக்கி வருவதை நாம் அறிவோம். இந்த அற்புத குணமாகுதல்கள் கொண்டு வரும் மனந்திரும்புதல்கள் ஏராளம்!! ஏராளம்!
அப்படி லூர்து கெபியில் தேவதாய் நிகழ்த்திய புதுமை கடவுள் மறுப்பு அறிவுவாதியும், (Agnostic) மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் அலெக்ஸிஸ் காரெல் (Dr. Alexis Carrell) என்பவரை மனந்திருப்பியது!
கண்முன்னே நிகழ்ந்த புதுமை!
1902-ல் பிரான்ஸ் நாட்டின் லையோன் (Lyons) நகரின் மருத்துவ கல்லூரியின் மருத்துவரான Dr. அலெக்ஸிஸ் காரெல்லை அவரது மருத்துவ நண்பர் ஒருவர் லையோன் நகர நோயாளிகளை லூர்து நகருக்கு அழைத்துச் செல்லும் பணியில் உதவுமாறு அழைப்பு விடுத்திருந்தார். கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கப்பட்டாலும் நாளடைவில் விசுவாசத்தை இழந்து கடவுள் மறுப்பு அறிவுவாதியாகிப் போன அவருக்கு கடவுள் நம்பிக்கையோ, புதுமைகள் பற்றிய விசுவாசமோ இல்லை. ஆனாலும், நண்பர் அழைக்கவே நோயாளிகளை இரயிலில் கொண்டு செல்லும் பணியில் உதவச் சென்றார்.
இரயிலில் அழைத்துச் சென்ற ஒரு பெண் நோயாளியான மரி பெய்லி (Marie Bailly) என்பவள், அவரது கவனத்தை ஈர்த்தாள். கடுமையான எலும்புருக்கி நோயால் (Acute tuberculous pentitiotis) பிடிக்கப்பட்ட அவளது வயிற்றுப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு வீங்கி போய் உயிருக்கே அபாயமான நிலையில் லூர்து நசுருக்குக் கொண்டு வரப்பட்டாள். பாதி நினைவிழந்து போன அந்த நோயாளியின் கரங்கள் ஜெபமாலையைப் பற்றியிருக்க அவளது உதடுகள் பலவீனமாக அசைந்து கொண்டிருந்தது. அவள் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த நோயாளியின் நிலையைக் கண்ட Dr. காரெல் நிச்சயம் அவள் லூர்து நகர் செல்வதற்குள் இறந்து போவாள் என்று மனதில் நினைத்துக் கொண்டார். ஆனாலும், அந்த நோயாளியின் அசையாத நம்பிக்கையைக் கண்டு வியந்தார்.
இரயில் வண்டி, நோயாளிகளுடன் லூர்து வந்து சேரவே, உடனடியாக அவர்கள் தேவ அன்னை காட்சியளித்த மசபியேல் கெபிக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களை அங்கே கொண்டு செல்ல சிறு படுக்கை வண்டிகளோடு தன்னார்வத் தொண்டர்களும் கன்னியாஸ்திரிகளும் தயாராக இருந்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்.
எனவே, தமது கவனத்தை ஈர்த்த மரிபெய்லி நோயாளியுடன், மருத்துவ உதவி தேவையானால் வழங்க Dr.காரெல்லும் சென்றார். லூர்து கெபி அடைந்ததும் அசாதாரணமான சூழ்நிலை நிலவ, பக்தியோடு லூர்து அற்புத தண்ணீரை குவளையில் கொண்டு வந்து, நோயாளியின் உப்பி விங்கிப் போயிருந்த நோயாளின் வயிற்றின் மீது ஊற்றப்பட்டது. அற்புத நீர் வயிற்றுபகுதியை நனைக்க, நோயாளி ஒரு கடுமையான வலியை உணர்ந்தாள்: ஆனால், இரண்டாவது தடவை அற்புத நீரை ஊற்றிய போது, அந்த வலி மெல்ல குறைந்து வருவதையும், மூன்றாவது தடவையாக ஊற்றிய போது ஒரு ஆனந்தமான உணர்வை உணர்ந்தாள். என்ன ஆச்சரியம்! விங்கி போயிருந்த அவளது வயிற்றுப்பகுதி மெல்ல, மெல்ல வற்றிப்போக, அவளது இதயத்துடிப்பும் இயல்புநிலைக்கு வந்தது!!
நோயாளிக்குப் பின்னால், குறிப்புக்களை எடுத்துக்கொண்டிருந்த Dr.காரெல் தன் கண்முன்னே நிகழும் அற்புதத்தைக் கண்டு திகைத்துப் போனார். தமது குறிப்பேட்டில் "பெருவாரியாக விங்கி, உப்பி கடினப்பட்டு போயிருந்த நோயாளியின் வயிற்றுப்பகுதி மெல்ல வற்றி தட்டையாகி போகத் துவங்கியது: 30 நிமிடங்களுக்குள் வீக்கம் மறைந்து உடல் ஆரோக்கியமான நிலையை அடைந்தது. உடலிலிருந்து எந்தவிதமான நீரோ, கழிவுகளே வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.." என்று எழுதினார்.
இப்போது, உயிராபத்தில் இருந்த நோயாளி, மரிபெய்லி பூரண குணம் பெற்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள். எந்தவிதமான சிரமமுமில்லாமல் கொடுக்கப்பட்ட உணவை உட்கொண்ட பின் தானாகவே, அந்த படுக்கை தள்ளு வண்டியிலிருந்து இறங்கினாள். தேவதாயின் கெபியில் நன்றியோடு ஜெபித்த பின் ஓய்வெடுத்தாள். மறுநாள் இரயிலில் பயணித்து லையோன் நகர் திரும்பினாள்! பின்னர் மருத்துவர்களின் ஆராய்வுக்கு 4 மாதங்கள் உட்பட்ட அவள்: உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பூரண இயல்பு நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
லூர்து மாதாவால் பூரண குணம் பெற்ற மரிபொய்வி பிறர் சிநேக சகோதரிகளின் சபையில் உட்பட்டு, நோயாளிகளையும் ஏழைகளையும் பராமரிக்கும் சேவையில் தமது வாழ்வை செலவிட்டு 1937-ம் ஆண்டில் தமது 58வது வயதில் பாக்கியமான மரணமடைந்தாள்.
தமது கண்முள்ளே, மருத்துவ உலகால் கண்டுபிடிக்க முடியாத அற்புத புதுமையைக் கண்ட Dt. காரெல்லின் விசுவாச கண்கள் திறக்க உடனடியாக மனந்திரும்பினார். தாம் கண்ட புதுமையைப் பற்றி அறிக்கை வெளியிட்டார். பின்னர் அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக் கழகத்திலும், பின்னர் ராக்ஃபெல்லர் பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்ட அவர், 1912-ல் தமது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும் "Vascular anastomosis" என்ற துறையில் அவரது கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசும் பெற்றார்.
தமது வாழ்நாளில், பல தடவைகள் லூர்துபதிக்கு சென்று வந்த Dr.காரெல் ஒரு 18 மாத கண்பார்வையற்ற சிறுவன் உடனடியாக பார்வை பெற்ற புதுமையையும் காணும் வாய்ப்பு பெற்றார். 1942-ல் தாம் கண்ட இரண்டு அற்புதங்களையும், அறிக்கையிட்ட அவர், கடவுள் மீதான தமது விசுவாசத்தையும், ஆன்மாவின் நித்திய வாழ்வையும், சத்திய கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளையும் தாம் ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்து, உத்தம கத்தோலிக்க வாழ்வு வாழ்ந்து 1942-ல் மரணமடைந்தார்.
: Fr. Spitzers contemporary Miracles associated with BI. Mary, Saints and the Holy Eucharist Magis Center 2017, Sep28. Network-Aleteia
துன்பப் படுவோரின் துயர் துடைக்கும் பரிசுத்த லூர்து மலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்*
~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ்
பாகம்-7
இரண்டாவது காட்சி
அன்று பெப்ருவரி மாதம் 14-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருப்பலி பூசை முடிந்ததும் பத்துப் பன்னீரண்டு பிள்ளைகள் சூழ பெர்னதெத் குகைக்கு வந்தாள். செபமாலை செபிக்கத் தொடங்கினாள். "அதோ அம்மா வந்து விட்டார்கள்" என்று உணர்ச்சி வசப்பட்டு உரத்த குரலில் சொன்னாள் பெர்னதெத், தீர்த்தத்தைத் தெளித்தாள். அம்மா புன்னகை பூத்தார். பிரகாசம் அவரைச் சுற்றிச் சூழ்ந்து நின்றது.
பெர்னதெத் தரையில் முகங்குப்புற வீழ்ந்து வணங்கி "அருள் நிறைந்த மரியாயே.." என்று செபமாலை செபத்தைத் தொடங்கியதும் பரவசத்தில் ஆழ்ந்தாள். ஒரு மணி நேரம் நீடித்தது. குகையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். "பெர்னதெத் ஒரு சம்மனசைப் போல் தோன்றுகிறாள்" எனப் பிள்ளைகள் பேசிக் கொண்டனர்.
முகம் வெளிறிப் போயிருந்தது. கண்கள் நன்றாக மூடியிருந்தன. சுரங்களைக் கூப்பியபடி இருந்தாள். விழிகளிலிருந்து கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தன!
அம்மா எதுவும் பேசாமல் முன்போல் அமைதியாக மறைந்து விட்டார்கள்.
மூன்றாவது காட்சி
அன்று பெப்ருவரி 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை. திருப்பலி பூசை முடிந்து சுமார் ஏழு மணிக்கு பெர்னதெந் கெபிக்குப் புறப்பட்டாள். மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இரண்டு சீமாட்டிகள் அவளுடன் சென்றனர், பேனாவையும் பேப்பரையும் பெர்னதெத்திடம் கொடுத்தார்கள்,
முன்போல் பெர்னதெத் முழந்தாளிலிருந்து செபிக்கத் தொடங்கியதும் அம்மா குகையில் தோன்றினார்கள். நான் சொல்வதை நீ எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று புன்னகை பூத்தார்கள்.
சில வினாடிகளுக்குப் பின், அமைதியாக, இனிய தொனியில் “மகளே, பதினைந்து நாட்கள் தொடர்ந்து இதே இடத்திற்கு நீ அருள்கூர்ந்து வருவாயாம்மா?" என்று கனிவாகக் கேட்டார்கள்.
தன்னிடம் இவ்வாறு அந்த அம்மா(தேவமாதா) கெஞ்சிக் கேட்பதை எண்ணி பெர்னதெத் மெழுகுபோல் உருகினாள்.
"என் உள்ளமெல்லாம் நெகிழ்ந்தது. உள்ளத்தில் தெய்வீகமான ஒரு உவகை ஊற்றெடுத்துப் பொங்கி வழிந்தது.
நான் வணங்கி, "ஆம் அம்மா, நீங்கள் விரும்புவது போல் பதினைந்து தினங்கள் தவறாமல் வருவேன்" என வாக்குறுதி அளித்தேன். இதைக் கேட்டு மகிழ்ந்த அம்மா என்னிடம் சொன்னார்கள்.
"மகளே, உன்னை இந்த உலகத்தில் பாக்கியவதியாக ஆக்க மாட்டேன். ஆனால் மறுவுலகத்தில் உன்னைப் பாக்கியவதியாக ஆக்குவேன் என்று உளக்கு வாக்குறுதி தருகிறேன்.*
அருகில் இருந்த சீமாட்டியிடம் "அம்மா உங்களைப் பார்க்கிறார்கள்" என்றாள் பெர்னதெத் காட்சி மறைந்தது.
அன்னை நம் ஒவ்வொருவரையும் இதுபோல் உற்றுப் பார்க்கிறார்கள். துன்பத்திலும், துயரத்திலும், வேதனையிலும், பல சோதனைகளிலும் இந்த உலகில் அல்லல்பட்டு அழுது வருந்தும் நம் ஒவ்வொருவருக்கும் இதே வாக்குறுதியைத் தருகிறார்கள்.
துன்பங்கள் நம்மைத் தொடரும்போது, நம் இனிய தாயின் பாதங்களைப் பற்றிப் பிடிப்போம். அவர் தன் மகன் சேசுவிடம் நம்மை அழைத்துச் சென்று நம் துயர் துடைப்பார்கள்.
தொடர்ந்து இனைந்திருங்கள்.....
ஆமென்
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்











