S.ANTHONY✝️YESUMARY
ShareChat
click to see wallet page
@anthonymundiyampakkam
anthonymundiyampakkam
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - ٥٥٥٥٥٥ Catholic YouTube) PRAISG TIGLORD விவிலியம் அறிவோம் உனகிகுச்சொனீன இதோ நானி மனிதனீ இவனேஎனிமுகிகளீமீது ஆட்சிபுரிவானி எனீறுஆணீபரீயாரைப் பறிறிசாமுவேலிமிகூறினாரீ? ~au சவுலைபற்றி சாமுவேல் 9:17) ٥٥٥٥٥٥ Catholic YouTube) PRAISG TIGLORD விவிலியம் அறிவோம் உனகிகுச்சொனீன இதோ நானி மனிதனீ இவனேஎனிமுகிகளீமீது ஆட்சிபுரிவானி எனீறுஆணீபரீயாரைப் பறிறிசாமுவேலிமிகூறினாரீ? ~au சவுலைபற்றி சாமுவேல் 9:17) - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - EIEgT Catholic Yufube PRAISG TIG LORD திருச்சபை அறிவோம் எல்லாக் கிறிஸதவர்களும் பயன்படுத்த எந்த ஆண்டு மதுரையில்  பொது மொழிபெயர்ப்புதிருவிவிலியம்  வெளியிடப்பட்டது? Calolic Catholic 1995 Catholic EIEgT Catholic Yufube PRAISG TIG LORD திருச்சபை அறிவோம் எல்லாக் கிறிஸதவர்களும் பயன்படுத்த எந்த ஆண்டு மதுரையில்  பொது மொழிபெயர்ப்புதிருவிவிலியம்  வெளியிடப்பட்டது? Calolic Catholic 1995 Catholic - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - Catuoc ponot praiso individudls torthel good looks @1 loathe @nyone because  0f appearance @lones  Sirach 11:2 Cathohic Youlube TAMIL CATHOLIC TV Catuoc ponot praiso individudls torthel good looks @1 loathe @nyone because  0f appearance @lones  Sirach 11:2 Cathohic Youlube TAMIL CATHOLIC TV - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - @attoti@' அழகுகிகாக உடல் ஒருவரைபி புகழவேணீபாமீ தோறிறதிதுகிகாகஒருவரை இகழவுமீ வேணீபாமீ சீராக் 1182 Catholic Illlulg TAMIL CATHOLIC TV @attoti@' அழகுகிகாக உடல் ஒருவரைபி புகழவேணீபாமீ தோறிறதிதுகிகாகஒருவரை இகழவுமீ வேணீபாமீ சீராக் 1182 Catholic Illlulg TAMIL CATHOLIC TV - ShareChat
𝗣𝗿𝗮𝘆𝗲𝗿 𝗯𝗲𝗳𝗼𝗿𝗲 𝘀𝗹𝗲𝗲𝗽𝗶𝗻𝗴⭐ O Gracious Redeemer, In the quiet of this sacred space, I bring before You the fragments of my history. With a heart full of gratitude, I thank You for the gift of Your unending grace that washes me anew. Grant me the fortitude to step beyond the shadows of yesterday, embracing the peace that You alone provide. As I navigate the path You have set before me, may Your peace be the compass that guides my every step. Help me to embody the courage and faith of the woman who wept at Your feet, that I may live out a story of redemption and hope. In the name of Jesus Christ, my Savior and the Author of my peace, I lift this prayer. Amen. #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
⛪ வேளாங்கண்ணி சர்ச் - How great is the mercy of the Lord, and his forgiveness for those who return to Him ! Sirach 17 29 How great is the mercy of the Lord, and his forgiveness for those who return to Him ! Sirach 17 29 - ShareChat
நேர ✝️ஜெபங்கள்🕯️* 🌝🌟✨🌝🌟✨🌝🌟✨🌝🌟✨ (குறிப்பு : இந்த 5 ஜெபங்களும் மிகவும் வல்லமையானவை தினமும் இரவு தூங்க செல்லும் முன் ஜெபிப்போம். இறைவனின் அருளாசீரையும், அன்னையின் அருட்காவலையும் பெறுவோம்.) 🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙          *🙏🏻† இரவு ஜெபம் †🙏🏻* 🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙 எல்லாம் வல்ல இறைவா! இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைகளுக்கும் விரோதமாயிருப்பதால், மனம் நொந்து வருந்துகிறேன். எங்களை  மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும். நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம். நாள்தோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும், இருப்பீராக! நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் எங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லவற்றையே சொல்லவும், செய்யவும், எங்களை உறுதிப்படுத்துவார்களாக! இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். என்னை இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால்  நிரப்பியருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக்கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும். *🙏🏻ஆமென்! †🙏🏻* 🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸 *† இரவு நன்றி ஜெபம் †* 🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸 🧎‍♂️🧎‍♀️ எங்கள் அன்பின் பரலோக பிதாவே! உம்மை போற்றுகிறேன். ஆராதிக்கிறேன். நன்றி செலுத்துகிறேன். இன்று முழுவதும் என்னோடு இருந்து என்னைக் காத்து நடத்தியமைக்காக நன்றி! எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றியருளும். உலகெங்கும் பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டு கிறோம். ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந் துள்ளது. அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும். கடவுளே! என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். ஏனெனில் நீரே என் புகலிடம். என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும். நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்! இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்! வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே! இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்! நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே, *ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.* (வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி, நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர். நன்றி தந்தையே! இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே! எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே, *ஆமென்! †* 💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻 *🙏🏻இரவு மன்னிப்பு செபம்🙏🏻* 💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻 *🙏🏻உத்தமனஸ்தாப செபம்🙏🏻* என் சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப் பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால் நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன் *🙏🏻ஆமென்.🙏🏻* 🙏🏻✝️அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம். 🙏🏻✝️எங்களை ஒரு குழுவாக குடும்பமாக நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக நன்றி கூறுகின்றோம். 🙏🏻✝️பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும். 🙏🏻✝️தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும். 🙏🏻✝️பிறருடைய கடைமைகளிலே நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும். 🙏🏻✝️எங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும் பிள்ளைகளிடமும் மனம்புண்படும்படியாக எதாவது செய்திருந்தால் எங்களை மன்னியும் 🙏🏻✝️தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும். 🙏🏻✝️நாளை காலை மீண்டும் எழுந்து உம்மைப் போற்றிப் புகழவும் உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும். *🙏🏻ஆமென்🙏🏻* 🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙 *🙏🏻இரவு தூங்கும் முன் ஜெபம்🤲🏻* 🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙 என்னை நேசிக்கின்ற அன்புத் தகப்பனே! நீர் கொடுத்த இந்த அருமையான நாளுக்காக நன்றி செலுத்துகின்றேன்! உம்முடைய கிருபை இன்று முழுவதும் என்னோடு தங்கியிருந்து என்னை வழிநடத்தி, என்னைப் பாதுகாத்துக்கொண்டீரே ஐயா, உமக்கு நன்றி! உம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், தயவினாலும் இந்த நாளை நான் கடந்து வர எனக்கு உதவி செய்தீரே உமக்கு நன்றி! இதோ இந்த இரவு நேரத்தில் களைப்போடும், சோர்வோடும், நான் உறங்கச் செல்கின்ற வேளையில் நீரும், நீர் எனக்கு கொடுத்த பாதுகாவலரும், அன்னை மரியாளும், என் அருகில் இருந்து என்னை தேற்றுவீர்களாக! உமது இரக்கம் இந்த நேரத்தில், இந்த இரவிலே, எனக்கு என் அருகிருந்து என்னை பாதுகாக்கட்டும்! இரவில் வருகின்ற கனவுகளில் உமது தயவு எனக்கு இருக்கட்டும்! காலையில் நான் விழிக்கின்றவரைக்கும் தகப்பனே, என்னோடு தங்கியிருக்க போவதற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்! நன்றி இயேசுவே, நன்றி! ஆமென்! உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் உறங்கினால் சுகமான உறக்கம் பெறுவது உறுதி! இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்! நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்! நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு! வைகறையில் விழித்தெழுந்து, நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை, மானிடர் தம் கடவுளின் அன்பர், தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்! *ஆமென்! †* 🌙🪐✨🌙✨🌙🪐✨🌙🪐✨ எல்லாம் வல்ல இறைவா, என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத் திற்கும் விரோதமாயிருப்பதால் இவைகளை மனம் நொந்து வெறுக்கின்றேன். என் பாவங்களையெல்லாம் மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். இந்த இரவில் என்னைத் திடீர் மரணத்திலிருந்தும், தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். மூவொரு இறைவா, என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். குறிப்பாக என் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் என்னை நிரப்பியருளும். என் இறுதி நேரத்தில் உம்மைச் சந்திக்க மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்து என் உயிர் பிரியவும், உம் நித்திய பேரின்பப் பாக்கியத்தில் என்னை ஏற்றுக் கொள்ளவும், கருணை புரிந்தருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்க பலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும். 🌝✨🌟🌝✨🌟🌝✨🌟🌝 🙏🏻 *மரியாயே எங்கள் நல்ல தாயாரே...🤲🏻இந்த ராத்திரியிலே சகல பாவங்களிலும் சடுதி மரணத்தினின்றும் எங்களை தற்காத்துக் கொள்ளும்.*🙏🏻 இயேசுவுக்கே புகழ்..! இயேசுவுக்கே நன்றி..! மரியே வாழ்க..! தந்தை,மகன்,தூய ஆவியாரின் பெயராலே.... *ஆமேன்🙏🏻* 🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 *தூங்குவதற்கு முன்னர், நான்கு திசைகளிலும் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டே சொல்லத்தகும் செபம்* 🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே... ஆமேன். இயேசு மரி சூசையே வாழ்க.! ✠ இதோ ஆண்டவருடைய சிலுவை. ✠ சத்துருக்களே, ஓடி ஒளியுங்கள். ✠ யூதா கோத்திரத்தின் சிங்கம். ✠ தாவீதின் சந்ததி வெற்றி கொண்டது. அல்லேலூயா. ஆமென். ✠ சிலுவை அடையாளம். ✠ பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே! *🙏🏻ஆமென் சேசு.🙏🏻*            #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது சீராக்கின்ஞானம் 17:29 ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது சீராக்கின்ஞானம் 17:29 - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - long As in 1 as am the   world, Iarck  I am the light of the 15 world. John 9:5 ISamuel [0: 1, 6-7, 10-13 Psalms 238 1-6 Ephesians 58 8-14 John 9: 1-41 US TiAa Life Giving Word long As in 1 as am the   world, Iarck  I am the light of the 15 world. John 9:5 ISamuel [0: 1, 6-7, 10-13 Psalms 238 1-6 Ephesians 58 8-14 John 9: 1-41 US TiAa Life Giving Word - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - நான் உலகில் மார்ச் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" 15 என்றார். யோவான் 9:5 சாமுவேல் 16: 1, 6-7, 10-13 திருப்பாடல் 23:  1-6 எபேசியர் 5:  8-14 யோவான் 9: 1-41 Ws Tikes வாழ்வு இறைவார்த்தை தரும் நான் உலகில் மார்ச் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" 15 என்றார். யோவான் 9:5 சாமுவேல் 16: 1, 6-7, 10-13 திருப்பாடல் 23:  1-6 எபேசியர் 5:  8-14 யோவான் 9: 1-41 Ws Tikes வாழ்வு இறைவார்த்தை தரும் - ShareChat
*புனித பாத்திமா மாதாவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை* 🌷✨🌷✨🌷✨🌷✨🌷✨🌷 *👑புனித பாத்திமா மாதாவை நோக்கி ஜெபம்👑* ஓ! பரிசுத்த செபமாலையின் இராக்கினியே ! பாத்திமாவின் மதுரமுள்ள தாயே ! போர்த்துகல் தேசத்தில் தோன்ற இரக்கம் கொண்டு , ஒரு காலத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த தேசத்தின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமாதானத்தை அடைந்து தந்தவளே , எங்கள் பிரிய நாட்டின் மேல் கிருபைக் கண் கொண்டு பார்த்தருளும். பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அதனை உமது வல்லமையால் உயர்த்தி ஞானத்திலும் உறுதியான ஒழுக்கத்திலும் அதை மீண்டும் ஸ்தாபிக்கும்படி உம்மை இரந்து மன்றாடுகிறோம் சமாதானத்தைத் திரும்பக் கொண்டு வாரும் ; அன்றியும் பூமியிலுள்ள சகல மனிதர்களுக்கும் சமாதானத்தைக் கொடுத்தருளும் ; அதனால் எல்லா தேசத்தவர்களும் , முக்கியமாய் எங்களுக்குச் சொந்தமானவர்கள் தேவரீரைத் தங்கள் இராக்கினியாகவும் சமாதானத்தின் இராக்கினியாகவும் வாழ்த்தி ஆனந்திக்கக் கடவார்கள் ஆமென் செபமாலையின் இராக்கினியே எங்கள் தேசத்துக்காக வேண்டிக் கொள்ளும் சமாதானத்தின் இராக்கினியே மனுக்குலத்துக்கு நிலையான சமாதானத்தை அடைந்து தந்தருளும். *🙏🏻ஆமென்🙏🏻* *புனித பாத்திமா மாதாவுக்கு புகழ் மாலை* 🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️ சுவாமி, கிருபையாயிரும் கிறிஸ்துவே, கிருபையாயிரும் சுவாமி, கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும். கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும். பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித பாத்திமா மாதாவே.! *🌹பதில் : எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🌹* பாத்திமாவெனும் சிற்றூரில் ஆடு மேய்க்கும் பிள்ளைகளுக்கு ஆறு முறை தரிசனையான மாதாவே,* சிறு பிள்ளைகளைப் போல் ஆவது மோட்ச இராஜ்ஜியத்துக்கு அவசியம் என்று காண்பிக்க , மூன்று ஏழை பாமர பிள்ளைகளுக்குக் காட்சியளித்த பாத்திமா மாதாவே, அமைதியான ஆத்துமத்திலே ஆண்டவர் பேசுகிறார் என்று காண்பிக்க, ஏகாந்தமும் அமைதியும் பொருந்திய மலைச் சாரலில் காட்சியளித்த பாத்திமா மாதாவே தம்மைத் தேடுகிற மக்களை தேவனும் தேடுகிறார் என்று காண்பிக்க ஜெபமாலை பக்தியில் சிறந்து விளங்கி ,'மரியாயின் நிலம்' என்று அழைக்கப்பட்ட போர்த்துகல் நாட்டில் தரிசனை கொடுக்கத் திருவுளமான பாத்திமா மாதாவே செபமும் தவமும் கிறிஸ்தவ வாழ்வுக்கு அவசியம் என்று காண்பிக்க பத்து வயதுக்கு உட்பட்ட சிறு பிள்ளைகளிடத்தில் ஜெப தவம் செய்யும்படி கேட்ட பாத்திமா மாதாவே இரட்சண்யமடையவும் உலக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஜெபமாலை ஜெபிப்பது மிகவும் முக்கியம் என்று காண்பிக்க , காட்சி தந்து அனுதினமும் ஜெபமாலை சொல்லும்படி கேட்டுக் கொண்ட பாத்திமா மாதாவே பூலோக கடமைகளில் சிக்குண்டிருக்கிற நாங்கள் பரலோகத்துடன் எவ்வித தொடர்பு கொள்ள வேண்டுமானாலும் அதற்குத் தகுந்த ஆயத்தம் அவசியம் என்று காண்பிக்க , அக்குழந்தைகளுக்கு முன்னால், ஒரு தேவதூதனை அனுப்பி ஒரு வருட காலமாய் அவர்களைத் தயாரித்த பாத்திமா மாதவே சர்வேசுரனை விசுவசித்து ஆராதித்து நம்பி நேசிப்பது ஒவ்வொரு மனிதனுடையவும் கடமை என்று காண்பிக்க , சம்மனசின் முதல் காட்சியிலேயே அதற்கேற்ற அரிய செபம் ஒன்றை எங்களுக்குக் கற்றுத் தந்த பாத்திமா மாதாவே கடவுளின் திருச்சந்நிதியில் மனிதன் மிகுந்த தாழ்ச்சியுடன் பணிந்து ஆராதனை வேண்டும் என்று காண்பிக்க நெற்றி தரையில் பட அச்செபத்தை சம்மனசானவர் சொல்லும்படி கட்டளையிட்ட பாத்திமா மாதாவே பாவத்தில் இருந்தும் நரகத்தில் இருந்தும் காப்பாற்றும்படி ஆண்டவரிடம் மன்றாடுவது அவசியம் என்று காண்பிக்க, ஜெபமாலையின் ஒவ்வொரு பத்து மணிமுடிவிலும் அதற்கான ஒரு தனி ஜெபம் சொல்லும்படி கற்பித்த பாத்திமா மாதாவே, ஒறுத்தல் முயற்சி செய்வது அவசியம் என்றும் எங்களுக்கு இவ்வுலகில் நேரிடும் எல்லாவற்றையும் பாவப் பரிகாரமாக நாங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றும் சம்மனசுக்களின் வாயிலாக போதித்தருளிய பாத்திமா மாதாவே, சுவிசேஷ போதனைகளையும் திருச்சபையின் படிப்பினைகளையும் நாங்கள் மறந்துவிடாதிருக்கும்படியாக , உங்களுடைய காட்சிகளாலும் உரையாடல்களாலும் கத்தோலிக்க ஞான உபதேசத்தை முழுமையாக போதித்து அருளிய பாத்திமா மாதாவே இயேசுக்கிறிஸ்து நாதர் உண்மையாகவே திவ்விய நற்கருணையில் இருக்கிறார் என்ற மகா உன்னத சத்தியத்தின் உண்மையை காண்பிக்க அப்ப இரச குணங்களில் நற்கருணையை ஏந்திய சம்மனசானவரை அனுப்பி, அதிலே இயேசுவை அந்த மூன்று குழந்தைகளும் ஆராதித்து அவரை உட்கொள்ளும்படி செய்த பாத்திமா மாதாவே தேவ நற்கருணையில் அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும் முந்திரிகைப்பழ இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் இயேசுநாதருடைய திருச்சரீரம், இரத்தம், ஆத்துமம், தேவசுபாவம் எல்லாம் அடங்கி இருப்பதையும் அந்த இயேசுக்கிறிஸ்து உலகத்திலுள்ள எல்லா தேவ நற்கருணைப் பேழைகளிலும் இருக்கிறார் என்பதையும் தேவதூதனின் மற்றொரு ஜெபத்தால் எங்களுக்குப் படிப்பித்தருளிய பாத்திமா மாதாவே, நற்கருணையில் தந்தை மகன் தூய ஆவியாகிய கடவுள் ஆராதிக்கப்பட வேண்டும் என்று காண்பிக்க அதற்கென ஒரு மனவல்லிய ஜெபத்தை அம்மூன்று சிறுவர்களுக்கும் உணர்த்தி அருளிய பாத்திமா மாதாவே நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாக நின்தைப்படும் நற்கருணை ஆண்டவருக்கு நிந்தைப் பரிகாரமாக , மிக பரிகார நன்மை உட்கொள்ளும்படி அச்சிறுவர்களைத் தூண்டிய பாத்திமா மாதாவே இயேசுவின் திரு இருதயத்துடன் உங்கள் மாசற்ற இருதயமும் ஒன்றாக நேசிக்கப்பட்டு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்பது கடவுளின் சித்தம் என்று கூறி அதற்காக முதல் சனிக்கிழமை பக்தியை ஏற்படுத்திய பாத்திமா மாதாவே மரியாயின் மாசற்ற இருதயத்துக்காகப் பரிகாரம் செய்யும் கருத்தோடு தொடர்ச்சியாக 5 முதல் சனிக்கிசமைகளில் பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை utkondu , 53 மணி ஜெபமாலை சொல்லி கால்மணி நேரம் ஜெபமாலை தேவ இரகசியங்களை நினைத்தபடி மாதாவுடன் தங்கி இருப்பதே முதல் சனி பக்தி என்று விளக்கிக் கூறிய பாத்திமா மாதாவே மரியாயின் அமலோற்பவம் தெய்வீகத் தாய்மை, எப்போதும் கன்னிமை ஆகிய சிறப்புகளுக்கு எதிராகவும் மாதாவின் பக்தியை அழிப்பதும் மாதாவின் திரு உருவங்களை அகற்றி அவமதிப்பதும் ஆகிய ஐந்து வகை நிந்தைகளுக்குப் பரிகாரமாகவே 5 முதல் சனி பக்தி என்று இயேசுவே விளக்கிக் கூறும் அளவுக்கு தேவ சலுகைகளைப் பெற்றுள்ள பாத்திமா மாதாவே முதல் சனி பக்தியைப் பிரமாணிக்கமுடன் அனுசரிப்பவர்களின் மரண சமயத்தில் , ஈடேற்றத்திற்கு அவசியமான சகல உதவிகளையும் அவர்களுக்குச் செய்வதாக வாக்களித்துள்ள பாத்திமா மாதாவே பாவத்தின் பலனாக யுத்தம் பஞ்சம் ஆகிய துன்பங்கள் நேருகின்றன என்று கூறி அவற்றை தடுக்க செபமாலையும் தவ முயற்சிகளும் செய்து உங்கள் மாசற்ற இருதய பக்தியைக் கைக்கொள்ளும்படி தூண்டி ,இதுவே பாத்திமா செய்தி என்று உலகிற்கு உணர்த்தி வருகின்ற பாத்திமா மாதாவே பாத்திமா காட்சிகள் கடவுளால் ஆனவை என்று எல்லோரும் நம்பும்படியாக ,1917 அக்டோபர் 13 ஆம் நாளில் 6 ஆம் காட்சியின் போது சூரியனில் மாபெரும் அற்புதத்தை நிகழ்த்திய பாத்திமா மாதாவே உங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் இரஷ்யா மனந்திரும்பும், உலக சமாதானம் வரும், இல்லாவிடில் இரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும் , யுத்தங்களையும் வேத கலாபனைகளையும் தூண்டி விடும் என்று எச்சரித்த பாத்திமா மாதாவே மனிதர்கள் போதிய ஜெப தப ஜெபமாலைகள் சொல்லாவிட்டால் இனம் தெரியாத ஒரு ஒளி ஓர் இரவில் தோன்றி அடுத்து வரவிருக்கும் மகா பெரிய ஆக்கினைகளை முன்னறிவிக்கும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ள பாத்திமா மாதாவே ரஷ்யா மனம் திரும்புவதற்கு ஏதுவாக அந்நாட்டைப் பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு பாப்பரசர் உலக மேற்றிராணிமார்களுடன் சேர்ந்து ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற இயேசுவின் நிபந்தனையை லூசியாவிடம் அறிவித்த பாத்திமா மாதாவே நாங்கள் நம்பிக்கை இழந்து போகாவண்ணம் இறுதியில் என் மாசற்ற இருதயம் வெல்லும் பாப்பரசர் ரஷ்யாவை என் இருதயத்துக்கு ஒப்புக் கொடுப்பார் உலக சமாதானம் வரும் என்று கூறி அருளிய பாத்திமா மாதாவே பாவிகளுக்காக ஜெபித்து பரித்தியாகம் செய்ய ஆளில்லாததால் அநேக ஆத்துமங்கள் நரகத்திற்குப் போகிறார்கள் என்று வேதனையுடன் கூறி பாவிகளுக்காக எங்களை மன்றாடத்தூண்டிய பாத்திமா மாதாவே நரகத்திற்குச் செல்லும் பாவிகளில் பெரும்பாலானவர்கள் கற்புக்கெதிரான பாவங்களுக்காகவே அங்கு செல்கிறார்கள் என்று ஜெசிந்தா வழியாகக் கூறி பரிசுத்தத்தனத்தின் மட்டில் எங்கள் கடமையை உணர்த்திய பாத்திமா மாதாவே பாப்பரசரும் திருச்சபையும் கொடுமையாக அலைக்கழிக்கப்படுவதை முன்கூட்டியே அறிவித்து , அதிலிருந்து காப்பாற்றும்படி அதிகமான ஜெப தவம் அனுசரித்து ஜெபமாலையைப் பக்தியுடன் தியானித்து சொல்லும்படி கற்பித்த பாத்திமா மாதாவே உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. *🌹🙏🏻செபிப்போமாக :🙏🏻🌹* தமது ஜீவியத்தாலும் உத்தானத்தாலும் எங்களுக்கு நித்திய இரட்சணிய பேறுபலனை சம்பாதித்தருளிய ஏக புத்திரனின் பிதாவாகிய சர்வேசுரா சுவாமி ! அந்தத் தேவ இரகசியங்களை முத்திப்பேறு பெற்ற புனித கன்னி மரியாளின் மகா பரிசுத்த ஜெபமாலை வழியாக நினைவுகூரும் அடியோர்கள் பாத்திமாவில் அவர்கள் காட்டிய வழியின்படியே நடந்து அதிலுள்ள வாக்குத்தத்தங்களின் பேற்றை அடையத்தக்கதாக உதவி புரிந்தருளும் இவைகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி ஆமென் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
*புனித லூர்து மாதாவை நோக்கி நவநாள் ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை* 🌸✨🌸✨🌸✨🌸✨🌸✨🌸 *🌿🌹புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்🌹🌿* அமலோற்பவ கன்னி மாதாவே ! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து , தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும் . உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும் . புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே , உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம் . உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும் தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும் . மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே , தேவரீர் எங்கள் தாயாராகையால் , எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும் ஆமென் லூர்து ஆண்டவளே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் *👑🌹புனித லூர்து மாதாவுக்கு நவநாள் ஜெபம்🌹👑* (உத்தம மனஸ்தாபப்பட்ட பின் புனித லூர்து மாதா சுரூபத்தின் அல்லது படத்தின் முன் பின்வரும் ஜெபங்களை மும்முறை சொல்லவும் ) இறைவனின் தாயாகிய புனித கன்னி மரியாயின் தூய மாசில்லாத உற்பவம் துதிக்கப்படுவதாக எங்கள் லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் மாதாவே! எங்கள் பேரில் இரக்கமாயிரும் எங்கள் லூர்து நாயகியே ! பரிசுத்த திரித்துவத்தின் நேசத்திற்காகவும் மகிமைக்காகவும் எங்களைக் குணப்படுத்தியருளும் எங்கள் லூர்து நாயகியே ! பாவிகள் மனந்திரும்புவதற்காக எங்களைக் குணப்படுத்தியருளும் வியாதிக்காரர்களின் ஆரோக்கியமே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்சிஷ்ட மரியாயே ! உம்மை மன்றாடுகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் *❣️புனித லூர்து மாதாவிடம் மன்றாட்டு❣️* மகிமை நிறை லூர்து அன்னையே , அமல உற்பவியே , இரக்கத்தின் தாயே , உடல் நலமற்றோருக்கு ஆரோக்கியமே , பாவிகளின் அடைக்கலமே , துயருருவோரின் ஆறுதலே , உம்மைத் தேடி வந்தேன் என்மேல் மனமிரங்கும் , என் தேவைகள், தொல்லைகள் , துன்பங்கள் எல்லாம் உமக்குத் தெரியும் . உம்மிடம் நம்பிக்கையோடு வந்தவர்கள் உடல் உள்ள நலம் பெற்றுள்ளனர் . இந்த நம்பிக்கையோடு தாயன்போடு கூடிய உமது பரிந்துரைக்காக நான் வந்துள்ளேன் . என் விண்ணப்பங்களைக் கேட்டு உம் திருமகனிடமிருந்து அவற்றை எனக்குப் பெற்றுத் தந்தருளும் . உமது திருப் பண்புகளை நான் பின்பற்றவும் , உம்மோடு ஒரு நாள் மகிமையில் பங்கேற்கவும் எனக்கு அருளைப் பெற்றுத் தாரும் ஆமென் *புனித லூர்து மாதா புகழ்மாலை* 🍃❣️🍃❣️🍃❣️🍃❣️🍃❣️🍃 சுவாமி, கிருபையாயிரும் கிறிஸ்துவே, கிருபையாயிரும் சுவாமி, கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும். கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும். பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி திவ்விய இரட்சகரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்* தேவ கிருபையின் அதிசயத்துக்குரிய எத்தனமான அமலோற்பவ மாதாவே லூர்து மலைக் கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த ஸ்தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே மோட்ச பிரதேசத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்களை அணிந்த திருமேனியுடன் தரிசனமான அமலோற்பவ மாதாவே ஞான சௌந்தரியத்துக்கு மிஞ்சின சௌந்தர்யம் இல்லையென்று காண்பிக்க , அழகின் அவதாரம் போல தரிசனமான அமலோற்பவ மாதாவே ஆத்துமா சுத்தத்திற்கு மேலான சுத்தம் இல்லையென்று காண்பிக்க , அந்த வெண்ணாடையை உடுத்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே கற்பென்பது வானோர்க்கு அடுத்த புண்ணியம் என்று காண்பிக்க மேகமற்ற வானம் போன்ற நீலக்கச்சையைக் கட்டிக் கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே கற்புக்குக் காவல் அடக்க ஒடுக்கம் என்று காண்பிக்க, நெடுமுக்காட்டைப் போர்த்திக் கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே நாங்கள் நாடவேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அண்ணார்ந்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே ஐம்பத்து மூன்று மணி செபத்தை அடிக்கடிச் சொல்லுதல் உத்தம பக்திக் கிருத்தியம் என்று காண்பிக்க ஜெபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரை எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள் ரோஜாச் செடியை காலாலே மிதித்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே தாழ்ச்சியும் தரித்திரமும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் மிகுந்த பட்சமாயிருக்கிறார் என்று காண்பிக்க ஒரு ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான அமலோற்பவ மாதாவே தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க , அந்த சிறு பெண் மூலமாக ஒரு நீரூற்றை பிறப்பித்தருளிய அமலோற்பவ மாதாவே தேவரீருடைய வல்லமையும் , கிருபையும் அளவிட்டுச் சொல்ல முடியாது என்று காண்பிக்க அந்த நீரூற்றைத் தாராளமாய்ச் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தை அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ மாதாவே பாவிகளை நன்னெறியில் திருப்புகின்ற லூர்து நாயகியே நீதிமான்களை ஸ்திரப்படுத்துகின்ற லூர்து நாயகியே இறந்தவருக்கு உயிரைக் கொடுக்கின்ற லூர்து மாதாவே குருடர்களுக்குப் பார்வை அளிக்கிற லூர்து மாதாவே செவிடருக்குச் செவிப்புலனைத் தருகிற லூர்து நாயகியே சப்பாணிகளை நடக்கச் செய்கிற லூர்து மாதாவே நோயாளிகளைக் குணப்படுத்துகிற லூர்து மாதாவே கஸ்தியாயிருக்கிறவர்களைத் தேற்றுகின்ற லூர்து நாயகியே சகல அவசரங்களிலும் உதவியாயிருக்கிற லூர்து நாயகியே மேன்மேலும் மன்றாடப்படுகிற லூர்து நாயகியே லூர்தென்னும் திருத்தலத்திற்கு கணக்கற்ற சனங்களை வரச்செய்கிற லூர்து நாயகியே எங்கள் தாயாகிய திருச்சபைக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே புனித பாப்பானவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே பல தண்டனைகளுக்குப் பாத்திரமாயிருக்கிற எங்களுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலை மாதாவே எங்கள் உற்றார் , பெற்றோர் , புத்திரர் , மித்திரருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே எங்கள் விரோதிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலை மாதாவே சகல பாவிகள் , பதிதர் அஞ்ஞானிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. *🙏🏻செபிப்போமாக :🙏🏻* சர்வேசுரா சுவாமி ! முழு மனதோடு தொண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் கன்னியாயிருக்கிற அமலோற்பவ லூர்து நாயகியுடைய வேண்டுதலினாலே நாங்கள் பாவ வழியை விட்டு புண்ணிய நெறியை பற்றிக்கொள்ளவும் , மரணத்தை தேவ இஷ்ட பிரசாதத்தோடு அடையவும் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தை நோக்கி தயை செய்தருளும் ஆமென் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - ShareChat