
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐬𝐥𝐞𝐞𝐩𝐢𝐧𝐠✝️🙏🏻
Heavenly Father,
As this Sunday draws to a close,
we thank You for the gift of rest,
worship, and time spent in Your presence.
We are grateful for the blessings of this day—
for moments of peace,
for love shared,
and for the grace that renewed our spirits.
Forgive us for our shortcomings
and help us to begin the new week with faith and hope.
Lord Jesus,
remain with us this evening.
Calm our hearts, ease our worries,
and strengthen our trust in You.
May the fruits of this Sunday
remain alive in our lives.
Holy Spirit,
watch over us through the night.
Protect our families and our homes,
and prepare us for the days ahead.
Into Your hands, O Lord,
we place our lives and our rest,
now and always.
Amen. 🌙🙏 #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
செபம்..*
*ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.*
(எசாயா 64:8-9)
*குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.*
*ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.*
*ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.*
*ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.*
*- ஆமென்!* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்*
~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ்
பாகம்-4
விறகுக் கட்டுகளைத் தலையில் சுமந்து கொண்டு பெர்னதெத், தங்கை மேரி அந்துவானத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ஜேன் அபதி இதை யாரிடமாவது சொல்லத் துடித்தாள். அவள் துடுக்கானவள்! வாயாடி! வீட்டுக்குச் செல்லும் வழியில், கதை அளப்பதில் வல்லவளான ஒருத்தியை சந்தித்தாள். அவளிடம் ஒரு செய்தியை சொன்னால் போதும் ஊர் முழுவதும் பரவி விடும். இந்தப் புண்ணியவதியிடம் ஜேன் அபதி மூச்சு விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தாள். காட்டுத் தீ பரவுவது போல் லூர்து நகர் முழுவதும் இச்செய்தி பரவி விட்டது. சில தினங்களுக்குள் பிரான்ஸ் நாட்டு மூலை முடுக்குகளிலெல்லாம் பரவி விட்டது.
ஆபிரு வீடு ஒரே ஒரு அறை மட்டும் உள்ள பழைய வீடு, சுவர்களில் நீர் கசிவது போல் இந்தச் செய்தியும் வீட்டுக்குள் கசிந்தது. மேரி அந்துவானத்துக்கு இச்செய்தியை மனதிற்குள் அடக்கி வைக்க மூடிய வில்லை. பெர்னதெத் பேசாமல் ஒரு விதமாக இருப்பதைப் பார்த்த தாய் லூயிசா, அந்துவானத்திடம், “பெர்னதெத் ஏன் ஒரு விதமாக இருக்கிறாள்? பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறாளே, ஏன்? அவள் நாக்கைப் பூனை திருடிக் கொண்டு போய் விட்டதா?" என்று எரிச்சலுடன் கேட்டாள்.
"அம்மா, பெர்னதெத் மசாபியேல் குகையில் ஓர் அழகான அம்மாவைப் பார்த்தாளாம். பிரகாசமான ஒளியின் நடுவே நின்றார்களாம் அந்த அம்மா..." என்று அம்மாவிடம் அனைத்தையும் ஒப்புவித்து விட்டாள் அந்துவானத். பெர்னதெத் இது என்ன கதை?” என்று கையை ஓங்கியபடி பெர்னதெத்தை அடிக்க ஓடினாள் தாய் லூயிசா,
பெர்னதெத், என் கண்னே. இப்படிப் பொய்யெல்லாம் சொல்லாதேம்மா. ஊரெல்லாம் நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும், பைத்தியக்காரி என்று ஊரெல்லாம் உனக்குப் பட்டம் கட்டும்" என்று கூறி பொனதெத்தை அணைத்துக் கொண்டாள் தாய் லூயிசா.
“நீ பார்த்த அந்த அம்மாவை மற்ற இருவரும் பார்க்கவில்லையா? அவர்கள் மசாபியேல் கெபிப் பக்கம் வரவில்லையா? என்னம்மா நடந்தது? சொல்” என்று பெர்னதெத்தீன் தலைமுடியை அன்பாகத் தடவினாள் லூயிசாசூபிரு
பிஞ்சு உள்ளமுடைய சிறுமி பெர்னதெத் அனைத்தையும் அம்மாவிடம் விளக்கமாகச் சொன்னாள். மகளின் முகத் தோற்றம், பக்திப் பரவசமான முகக்களை இவைகளைப் பார்த்து வியந்த தாய் லூயிசா, "இருந்தாலும் மகளே. நீ சுவனமாக இருக்க வேண்டும். இது நமக்குத் துன்பத்தைக் கொண்டு வரும், பேயின் தந்திரமாகக் கூட இருக்கலாம்" என்று கூறி மகளை அன்பாக எச்சரித்தாள்.
"அம்மா, பேய் நம்மை செபமாலை செபிக்கும்படி தூண்டாதே. பிதாவுக்கும் சுதனுக்கும்... என்ற செபத்தைப் பேய் சொல்லாதே. இந்த செபத்தை அந்த அம்மா வறுமையில் வாடும் சூபீரு குடும்பம் பணம் சம்பாதிப்பதற்காக மகள் மூலம் கதை சுட்டி விடுவதாகப் பலர் நினைக்கக் கூடும் எனப் பயந்த தாய் லூயிசா, பெர்னதெத், இனி மசாபியேல் குகைப் பக்கம் நீபோகவே கூடாது” என்று கண்டிப்பான ஒரு கட்டளை கொடுத்தாள்.
ஒரே ஒரு அறை மட்டும் உள்ள அந்த வீட்டில் சூபீரு குடும்பம் முழுவதும் உறங்கிக் கொண்டிருந்தது. பெர்னதெத் தூக்கமில்லாமல், தூங்க முடியாமல், மசாபியேல் குகையில் தோன்றிய அம்மாவையே நினைத்து ஏங்கி இரவெல்லாம் அழுது கொண்டிருந்தாள்.
தொடர்ந்து இனைந்திருங்கள்.....
ஆமென்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
லூர்து அன்னை நவநாள்*
*நாள்-07*
*தொடக்க செபம்..*
என்றும் மாசற்ற கன்னியே, கருணையின் அன்னையே, நோயுற்றோரின் நலமே, பாவிகளின் அடைக்கலமே, துன்புற்றோரின் ஆறுதலே என உம்மை நோக்கி கூவி அழைக்கின்றோம். தூய லூர்து மாதாவே!
என் தேவைகள், என் கஷ்டங்கள், என் துன்பங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். கருணையின் பார்வையை என் மீது திருப்பியருளும். லூர்து குகையில் தோன்றியதன் மூலம், உங்கள் உதவிகளை வழங்கும் ஒரு புனித ஸ்தலமாக மாற்றுவதில், நீங்கள் மகிழ்ச்சியடைந்தீர்கள்.ஏற்கனவே பல பாதிக்கப்பட்டவர்கள், ஆன்மீக மற்றும் உடல் குறைபாடுகளை குணப்படுத்தியுள்ளீர்.
எனவே, உங்களைத் தாயன்போடு பரிந்து பேசுவதற்கு, மிகவும் அளவற்ற நம்பிக்கையுடன் வருகிறேன். அன்பான தாயே, எனது கோரிக்கைகள் நிறைவேற மன்றாடுங்கள்.
_(அவற்றை இங்கே குறிப்பிடவும்)_
உதவிகளுக்கு நன்றி செலுத்துவதன் மூலம், உங்கள் நற்பண்புகளைப் பின்பற்ற முயற்சிப்பேன், உங்கள் மகிமையை நான் ஒரு நாளிலே, விண்ணக வீட்டில் பகிர்ந்து கொள்கிறேன்.
*தினசரி செபம்..*
விண்ணகத் தந்தையே! புனித கன்னி மரியாவின் அமல உற்பவத்தால், உமது மகனுக்குத் தகுதியான அன்னையை ஏற்படுத்தினீரே, லூர்து மாதாவின் தரிசனத்தைத் தியானிக்கும்போது, மனமும் உடலும், ஆரோக்கியமாக இருக்குமாறு உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். மிக்க கருணையுள்ள அன்னை மரியாவே! எங்கள் மீட்பரின் அன்பான அன்னையே, நீங்கள் பெர்னதத்துக்கு அன்று செய்ததைப் போல, எங்களைக் கருணையுடன் பார்த்து, நாங்கள் இப்போது மிகவும் ஆர்வத்துடன் வேண்டுபவை, எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று எங்களுக்காக அவரிடம் பரிந்து பேசுவீராக.
_(தனிப்பட்ட வேண்டுதல்கள்)_
*நிறைவு செபம்..*
ஓ தூய்மையின் நட்சத்திரமே, மாசற்ற அன்னையே, லூர்து மாதாவே, உங்கள் விண்ணேற்பிலும், முடிசூட்டு விழாவிலும் புகழ்பெற்றவரே, உமது திருமகனின் கருணையை எங்களுக்குக் காட்டுங்கள்.
கன்னி மாதாவே, புனிதர்களின் பேரரசியே உலகோரின் தாயே, எங்களின் ஆறுதலே, நம்பிக்கையே வலிமையே, ஆமென்.
லூர்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பெர்னதத்தே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்











