
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
Night Prayer✝️🙏🏻*
Heavenly Father,
As this Thursday comes to an end,
we thank You for Your guidance, protection,
and blessings throughout this day.
Forgive us for our shortcomings
and for the moments we failed to love.
Quiet our hearts, calm our minds,
and fill us with Your peace this evening.
Lord Jesus,
be our strength and our refuge.
Renew our hope and trust in You,
especially in times of weariness.
Holy Spirit,
watch over us through the night.
Protect our families and loved ones,
and grant us restful sleep.
Into Your hands, O Lord,
we entrust our lives and our rest,
now and always.
Amen. 🌙🙏 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
ஜெபம்*
*நிலையற்ற இவ்வுலகில், நிலையாக இருக்கின்ற எங்கள் ஆண்டவரே! இந்த காலகட்டத்தில் நாங்கள் நிலையில்லாத பொருட்கள், ஆடம்பரமான வாழ்க்கை, நேர்மையற்ற செல்வம் சேர்ப்பது போன்ற, தேவையற்ற எண்ணங்களில் நாங்கள் வாழ்ந்து கொணடிருக்கிறோம். உம்மை பல நேரங்களில் மறந்து விடுகிறோம். எங்களை மன்னியும் அப்பா.*
*இருப்பினும் நாங்கள் உம்மை மறந்தாலும், நீர்தாமே எம் குறைகளை காணாமல், எங்கள்மீது இரக்கம் வைத்து இன்றைய நாள் முழுவதும், எல்லா சூழ்நிலையிலும் எங்களை அற்புதமாக வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் இறைவா.*
*இன்றைய இரவு வேளையினை உம் கரத்தில் தருகிறோம் அப்பா. உமது இரக்கம் எங்களுக்கு கிடைத்து, அதன் மூலம் மன அமைதியுடனான ஆழ்ந்த உறக்கத்தை தந்து, அதிகாலையில் முழ ஆன்ம சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கானும் ஆசிர்வாதத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.*
*நன்றி இயேசுவே! நன்றி ஆன்டவரே! மரியே வாழ்க!!* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
*புனித ஆரோக்கியநாதரிடம் ஜெபம், மற்றும் புகழ்மாலை.*
🌿❣️🌿❣️🌿❣️🌿❣️🌿❣️🌿
புனித ஆரோக்கியநாதரே..! நோயாளிகளைக் குணப்படுத் துவதற்காக கொள்ளை நோய் பரவியிருந்த ஊர்களுக்குத் தேவரீர் தேவ சிநேக உற்சாகத் தால் விரும்பிப் பிரயாணம் செய்தீர். உமக்கே அந்த வியாதி நேரிட்ட இடத்தில் உமது நம்பிக்கை தோழனாயிருந்த துஷ்ட மிருகத்தால் தேற்றரவு அடைந்தீர்.
இத்துன்ப காலத்தில் தேவரீர் எங்கள் பேரில் இரங்கி எங்களுக்காசு மன்றாடி உதவி புரிந்தருளும். இப்போது எங்கள் மேல் வந்திருக்கும் இந்த பயங்கரமான தேவ முழுவதும் அகற்ற இரக்கமுள்ள கோபாக்கினையை திவ்விய இரட்சகரிடத்தில் எங்களுக்காக மனுப்பேசியருளும், நிர்ப்பாக்கியமான கொள்ளை நோய் பரவின இருண்ட ஸ்தலங்களில் தேவரீர் ஐந்து வருட காலம் சீவித்த சுகிர்தத்தாலல்லோ கொள்ளை நோய்களை சொஸ்தப்படுத்த அற்புத வரமடைந்தீர்.
"புனித ஆரோக்கியநாதருடைய சலுகையை இரந்து மன்றாடுகிற நோயாளிகள் யாவரும் அந்த கொடிய வியாதியினின்று குணமடைவார்கள்" என்ற வாசக வாக்குறுதியடங்கிய சீட்டை ஒரு சம்மனசானவர் வைத்ததைத் தேவார் தயவாய் நினைவு கூர்ந்தருளும்.
ஓ! இரக்கமிகுந்த புனிதரே! முழு மன நம்பிக்கை யோடு நாங்கள் உம்மிடம் சரணமாக ஓடி வந்தோம். எங்களைக் கைவிடாதேயும் காவலரே..
*ஆமென்.*
*🌹🌻முதல் :* இயேசுகிறிஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாக இருக்கத்தக்கதாக.!
*🌹🌻துணை :* புனித ஆரோக்கியநாதரே,
வேண்டிக்கொள்ளும்.
*✝️ஜெபிப்போமாக:-🛐*
சர்வேசுரா சுவாமி, புனித ஆரோக்கிய நாதருடைய உதவியை இரந்து மன்றாடுகிற யாவரும் கொள்ளை நோய் முதலிய கொடிய வியாதிகளால் சிறிதளவேனும் பயப்பட வேண்டியது இல்லை என்று ஒரு சம்மனசினால் அந்த புனிதருக்கு தானே தெரியப்படுத்த திருவுளமானீரே, அந்த புனிதருடைய சுகிர்த மன்றாட்டினாலே ஆத்தும, சரீர், சகல ஆபத்துக்களினின்று நாங்கள் இரட்சிக்கப்படும் பொருட்டுக் கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்ட வரான இயேசுகிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
*🙏🏻- ஆமென்.🙏🏻*
🌿❣️🌿❣️🌿❣️🌿❣️🌿❣️🌿
*புனித ஆரோக்கியநாதர் பிரார்த்தனை*
🌿❣️🌿❣️🌿❣️🌿❣️🌿❣️🌿
சுவாமி கிருபையாயிரும் -2
கிறீஸ்துவே கிருபையாயிரும் -2
சுவாமி கிருபையாயிரும் -2
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். (2)
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும். (2)
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா...
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா...
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா...
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா...
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சம்மனசுக்களுக்கு இராக்கினியான அர்ச். மரியாயே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுநாதருக்கும் தேவமாதாவுக்கும் செய்யப் பட்ட பக்தியுள்ள வேண்டுதலால் உற்பவித்த புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
திரவிய சம்பன்னரான தாய் தகப்பனிடத் திலும் உயர்ந்த வம்சத்திலும் பிறந்த புனித ஆரோக்கியநாதரே....
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தாயின் கர்ப்பத்தில்தானே உமது சரீரத்தில் அர்ச். சிலுவை பதியப்பட்டு பிறக்க வரம் பெற்றவ ரான புனித ஆரோக்கியநாதரே....
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சிறுவயதில்தானே புண்ணியத்தின் பேரிலே மிகுந்த பிரியத்தைக் காண்பித்துப் பன்னிரண் டாம் பிராயத்திலே உமது சரீரத்தைத் தவத் தினாலும் உபவாசத்தினாலும் ஒறுத்தவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அரிய தவத்தினாலும் செபத்தினாலும் ஆசாபாசத்தைக் கீழ்ப்படுத்தினவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உமது தாய் தகப்பன் இறந்தவுடனே சகல ஆஸ்திகளையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத் துத் தகப்பன் காணியாட்சிகளை உம்முடைய நன்மாமன் வசம் ஒப்புவித்து உலகத்தை வெறுத் துத் துறந்தவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஜென்ம தேசத்தையும் சிநேகிதர்களையும் உறவினர்களையும் விட்டு அர்ச். பிரான்சீஸ்குவின் மூன்றாம் சபையில் உட்பட்டவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உரோமாபுரியில் அர்ச்சியசிஷ்ட ஸ்தலங்களைச் சந்திக்கத் தரித்திர வேஷம் கொண்டு இத்தாலி தேசத்திற்குப் போனவரான புனித ஆரோக்கிய நாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அந்தத் தேசத்திலேயும் மிகவும் பரவியிருந்த கொள்ளைநோயில் நின்று சிலுவையின் அடை யாளத்தால் திரளான சனங்களைக் குணமாக்கின புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இத்தாலி தேசத்தைச் சேர்ந்த அநேக இராச்சியங் களிலே கொள்ளை நோயால் சாவுக்கு ஆயத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் தந்த புனித ஆரோக்கியநாதரே....
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரன் உம்மைக் கொண்டு செய்து வந்த நவமான அதிசயத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஜனங்களால் மிகவும் துதிக்கப்பட்ட புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பின்னும் உமக்கு வந்த கொள்ளை நோய் முதலிய துன்ப துரிதங்களை எல்லாம் பொறுமை யோடு அனுபவித்து மகிமையான மோட்ச முடியை உறுதிப்படுத்திக் கொண்டவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆண்டவரால் அருளப்பட்ட அகோரமான காய்ச்சல் உமக்கு வந்தபோது உமது பெருந்தொடை யானது அம்பால் ஊடுருவப்பட்டாப்போல் கடும் இரணப்படப் பேறுபெற்ற புனித ஆரோக்கிய நாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அந்த நோக்காடுகளை மிகுந்த ஆச்சரியமான பொறுமையோடும் சந்தோத்தோடும் அனுப வித்தவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஜென்ம தேசத்திற்கு வரும்போது வழியிலே மறுபடியும் வியாதியால் கஷ்டப்பட்டு சர்வேசுர னுடைய ஆதரவால் மனிதருடைய சகாயமின்றிக் காட்டிலே படுத்திருந்தவரான புனித ஆரோக்கிய நாதரே....
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அந்தக் காட்டிலே வியாதியாயிருக்கும்போது சர்வேசுரன் தயவால் நாயைக் கொண்டு உமது சீவனத்திற்கு அப்பம் கொண்டுவர வரம்பெற்ற புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உமது ஜென்மப் பட்டணத்தில் நுழைந்தவுடன் வேவுகாரனைப் போல் பிடித்துச் சிறையில் அடைக்கப்பட்டவரான புனித ஆரோக்கிய நாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அந்தப் பட்டணத்துக்கு உம்முடைய மாமன் அதிபதியாயிருந்தாலும் உம்மை இன்னாரென்று காண்பிக்க மனதில்லாதவரான புனித ஆரோக்கிய நாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்முடைய சுய பிரஜைகளால் சேசுநாதரைப் பற்றிச் சகல நிர்ப்பந்தங்களையும் அனுபவித்து மரணமடைய ஆசை கொண்டவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உமது சாவு நெருங்கினதென்றறிந்து மிகுந்த பக்தியோடே தேவதிரவிய அனுமானங்களைப் பெற்றுச் சாவுக்கு ஆயத்தம் செய்தவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நீர் ஐந்து வருட காலமாய்ச் சிறையில் அடை பட்ட பிறகு கொள்ளை நோயால் இறக்க அஞ்சாத தைரியத்துடனே ஏக சர்வேசுரனை தியானித்த பிறகு அந்த வியாதியால் மரணமடைந் தவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கொள்ளை நோயில் உம்மை மன்றாடினவர் கள் தீமையின்றிக் காப்பாற்றப்படுவார்கள் என்று ஏக சர்வேசுரன் தமது சம்மனசைக் கொண்டு அறிவிக்க வரம் பெற்றவரான புனித ஆரோக்கிய நாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கொள்ளைநோய் கொண்டவர்கள் உம்மை மன்றாடினால் ஆரோக்கியம் அடைவார்கள் என்று உமது சரீரத்தின் பக்கத்தில் ஒரு சிறு பலகையில் எழுதப்பட வரம் பெற்றவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்மை வேவுகாரனுமாய்க் குற்றவாளியுமாய் எண்ணின உமது மாமன் உம்மை இன்னாரென்று அறிந்த மாத்திரத்தில் அவனால் மிகுந்த கஸ்தி வியாகுலத்துடனே சந்திக்கப்பட்டவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உமது திருச்சரீரம் வெகு ஆடம்பரத்துடனேயும், வணக்கத்துடனேயும் அடுத்த கோவிலிலே அவனால் நல்லடக்கம் செய்யப்பட்ட புனித ஆரோக்கியநாதரே..
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கொன்ஸ்தான்ஸ் என்கிற பட்டணத்தில் சாதாரண திருச்சங்கமாகக் கூடின மேற்றிராணி மார்கள் உமது அர்ச்சிஷ்டதனத்தை வெகு ஆடம்பரத்துடனே கொண்டாடினபோது அங்கே யிருந்த கொள்ளை நோய்களையயல்லாம் போக்கடித்தவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வெனீஸ் என்கிற பட்டணத்திலே விசேஷமாய் சரீரம் வெகு வணக்கம் பெற்றிருக்கவும், அதை சந்திக்கிறவர்களுக்கு அநேக நன்மைகளைச் செய்யவும் வரம் பெற்றவரான புனித ஆரோக்கிய நாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எங்கள் பேரில் ஆண்டவர் கொண்டிருக்கும் தேவகோபாக்கினைகளான பஞ்சம், படை, கொள்ளை, வியாதி, பெருவாரி இவை முதலான வைகளில் நின்று எங்களை இரட்சிக்க எங்களுக் காக மன்றாடுகிறவரான புனித ஆரோக்கியநாதரே...
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய சேசுவே.!
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய சேசுவே.!
எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய சேசுவே.!
எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
*🙏🏻ஜெபிப்போமாக :-🙏🏻*
சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி! கொள்ளைநோய், பஞ்சம், படை, பெருவாரிக் காய்ச்சல் இவை முதலான ஆபத்தில் துன்பப் படுகிற யாவரும் அர்ச். ஆரோக்கியநாதரை மன்றாடி வேண்டிக்கொண்டால் அவர்களுடைய பிணி தீர்ந்து குணப்படுவார்கள் என்று அவருடைய சரீரத்தின் பக்கத்தில் பதிந்ததுமன்றி, உம்முடைய சம்மனசானவரைக் கொண்டும் வார்த்தைப்பாடு கொடுத்தீரே. அவருடைய திருநாளைக் கொண் டாடுகிறவர்களும் அவருடைய வேண்டுதலின் உதவியைக் கேட்கிறவர்களுமாகிய நாங்கள் அவருடைய உத்தம மன்றாட்டினாலே எங்களுடைய ஆத்தும சரீரத்தின் ஆபத்தான கொள்ளை நோயில் நின்று எங்களை மீட்டு இரட்சிக்கும் படிக்குத் தேவரீரை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் சேசுகிறீஸ்துநாத ருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
*🙏🏻ஆமென்.🙏🏻*
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*புனித யூதா ததேயூவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை.*
⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️
மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுசே எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே புண்ணியங்கள் மின்னித்துலங்கும் தூயவரே புதுமை வரங்களில் சிறந்தவரே தம்மை தேடிவந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம் இதயபூர்வமான நன்றி நவில்கிறோம்.
எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.
*(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)*
நேசிக்கப்படத்தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர்பெற்று இயங்கும் தயாள இருதய ததேயுவே உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போகவிடாதேயும்.
யூதாசின் பெயர் ஒற்றுமையால்; உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் பரிகரித்து வகையின்றி வாடுவோருக்கு வல்லமையுடன் உதவி புரியும் அரிய வரத்தை இறைவன் உமக்கு அளித்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தருளும்.
இப்பெரிய வரத்திற்காக நாங்களும் உம்முடன் சேர்ந்து இறைவனின் புகழைப் பாடத் துணைபுரியும் அவருக்கு நன்றி செலுத்த தயை செய்யும். நீர் எங்களுக்கு செய்கின்ற இப்பேருதவிக்காக எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம் உமது வல்லமையுள்ள மன்றாட்டை மக்களிடையில் அறியச் செய்வோம். பலர் அறியாப் புனிதரே சிறப்பு இயல்புகள் பல படைத்தவரே பலன் தரும் உமது பக்தி பாரெங்கும் பரவ எங்களால் ஆன பிரயாசையெல்லாம் எடுப்போம் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறோம்.
*🙏🏻ஆமென்🙏🏻*
⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️
*புனித யூதா ததேயூ புகழ் மாலை*
⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️❣️⚜️
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
பரலோக பிதாவாகிய சர்வேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலக மீட்பரான சுதன் சர்வேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவி சர்வேசுரா
எங்கள்மேல் இரக்கமாயிரும்
பரிசுத்த திரியேக சர்வேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
பரிசுத்த மரியாயே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித யூதா ததேயுசே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
மாட்சிமை மிக்க அப்போஸ்தலரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தெய்வீக ஆசிரியரின் உத்தம மாணக்கரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தேவ பராமரிப்புகள் அமைந்த யாத்திரிகரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வேத விசுவாசத்தின் சாட்சியே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தரித்திரத்தை நேசித்தவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தாழ்ச்சிக்கும் பொறுமைக்கும் மாதிரிகையே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தேவ அன்பின் தீபமே, புனிதத்தின் விண்மீனே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இறையருளின் பேழையே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பேய்களை நடுநடுங்கச் செய்கிறவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
திருச்சபையின் தூணே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
துன்புறுவோரின் ஆறுதலே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பாவிகளுக்காக பரிந்து பேசுபவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
திக்கற்றவர்களின் சகாயமே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
திகைக்கின்றவர்களின் பிரகாசமே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நம்பிக்கையிழந்தவர்களின் ஊன்றுகோலே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
வியத்தகு அற்புதங்களைச் செய்கிறவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
தேவவரங்களை வழங்குவதில் மிகவும் பேறுபெற்றவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உம்மை மன்றாடுவோர்க்கு தப்பாமல் உதவி புரிபவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்குத் தவறாமல் உதவி செய்கிறவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அவசரமுள்ளவர்களுக்கு தாமாகவே வந்துதவும் பேருபகாரியே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இக்கட்டான வேளைகளில் உடன் உதவிபுரிய வல்லமை வாய்ந்தவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
திக்கற்றவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் பேர் பெற்றவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
உம்மை வணங்குவோர்க்கு அன்புள்ள மெய்க்காப்பாளரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் சிறப்பு பாதுகாவலரே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேஸ்வரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..!
எங்கள் மன்றாட்டை கேட்டருளும் ஆண்டவரே.
உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேஸ்வரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..!
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் ஆண்டவரே.
உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேஸ்வரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..!
எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே.
*🙏🏻செபிப்போமாக🙏🏻*
எல்லா வல்லமையும் இரக்கமும் உள்ள மீட்பரான ஆண்டவரே உமது அளவில்லாத அன்புக்குரியவரும் உமது மனித அவதாரத்தில் நெருங்கிய உறவினரும் - அப்போஸ்தலருமான புனித யூதா ததேயுஸ் வழியாக நாங்கள் கேட்கும் மன்றாட்டுக்களையெல்லாம் தயவாய்த் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
*புனித யூதா ததேயூ ஜெபமாலை*
🎊🍃🎊🍃🎊🍃🎊🍃🎊🍃🎊
*🌿🌹தொடக்க ஜெபம்:🌹🌿*
புனித யூதா ததேயூவே! மாட்சிமைமிக்க திருத்தூதரே. இறைமகன் இயேசுவின் பிரமாணிக்கம் உள்ள ஊழியரும், நண்பரும் ஆனவரே. புனித தாய் திருச்சபை உம்மை கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலராக அறிவித்துள்ளது. எங்கள் அவசரங்களிலும், இக்கட்டுகளிலும், தேவைகளிலும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறுதி நாளில் எங்களுக்கு ஆறுதலையும் மோட்ச பாக்கியத்தையும் கட்டளையிட்டருள எங்களுக்காக இறைவனை மன்றாடும். குறிப்பாக..!
(தேவைகளை கேட்கவும்)
இந்த மன்றாட்டுக்களை எங்களுக்கு அடைந்து தந்தருளும். அதனால் நாங்கள் இறைவனின் மாட்சிமையையும் பாவிகள் எங்கள் மேல் அவர் கொண்டுள்ள பரிவையும் கண்டு அவரை என்றென்றும் புகழ்ந்து பாடுவோமாக. ஆமென்.
அருள் நிறைந்த ...........
*புனித யூதா ததேயுவே! திருத்தூதரே, மறைசாட்சியே. இயேசு மேரி சூசையின் நெருங்கிய உறவினரே! எங்களுக்காக மன்றாடும். ஆமென். (9 முறை)*
*🙏🏻இறுதி செபம்:🙏🏻*
*❤🔥முதல்: இயேசுவின் மதுரமான திருஇருதயம்.!*
எல்: முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் அன்பு செய்யப்படுவதாக.
*❤🔥முதல்: இயேசுவின் மதுரமான திருஇருதயம்.*
எல்: இன்றும் என்றும் எக்காலத்திலும் புகழ்ந்து மகிமைபடுத்தபடுவதாக.
*🌹புனித யூதா ததேயுவே..!*
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
*🌹இயேசுவின் திரு இருதயம்..!*
என்றும் ஆராதிக்கப்படுவதாக.
*🌹மரியாளின் மாசற்ற இருதயம்.!*
என்றும் வணங்கப்படுவதாக
*🌹புனித யூதா ததேயு..!*
என்றும் வாழ்த்தப்படுவாராக.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
*உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கான ஜெபம்..!!*
⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺
பலர் இந்த ஜெப பக்தி முயற்சியை அறிந்து இருக்கலாம். அறியாது இருப்பவர்களுக்கு இந்த பதிவு.
உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக நாம் ஜெபிப்பது நம் இறைவனாம் ஆண்டவருக்கு மிக பிடித்தமான ஒன்று.
நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் பொழுது நம் ஜெபத்தின் பலனாக விண்ணகம் செல்லும் ஆன்மாக்கள் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்கள் என்று நாம் அறிவோம்.
உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க சிறந்த நேரம் பகல் 3.00 மணி. இந்த பகல் 3.00 மணி மாபெரும் இரக்கத்தின் நேரம், இந்த நேரத்தில் நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் போது நம் ஜெபத்திற்கு சிறப்பான பலன் கண்டிப்பாக உண்டு என்று *"புனித பாஸ்டினா அம்மாளுக்கு"* நமது இரக்கத்தின் ஆண்டவர் கூறி உள்ளார்.
(கீழ் கண்ட ஜெபத்தை, நாம் ஒவ்வெரு முறை ஜெபிக்கும் போதும் உத்தரிக்கும் நிலையில் உள்ள 1000 ஆன்மாக்கள் விண்ணகம் செல்லும் என்று நமது ஆண்டவர்
*"புனித ஜெர்த்ரூத் அம்மாளுக்கு"*
வெளிப்படுத்தி உள்ளார்.)
*🙏🏻ஜெபம்..!!🙏🏻*
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
*"என்றும் வாழும் தந்தாய்! உமது தெய்வ மகனாகிய இயேசுவின் விலைமதிப்பற்ற திரு இரத்தத்தை இன்று உலகெங்கிலும் செலுத்தப்படும் திருப்பலிகளோடு ஒன்றித்து உத்தரிக்கும் ஆன்மாக்கள் அனைவருக்காகவும், உலகெங்குமுள்ள பாவிகளுக்காகவும், அகில திருச்சபையிலுள்ள பாவிகளுக்காகவும், எனது இல்லத்திலும் குடும்பத்திலுமுள்ள பாவிகளுக்காகவும் உமக்கு அர்பணிக்கிறேன்."*
3.00 மணிக்கு ஜெபிக்க தவறினால், நமக்கு நேரம் கிடைக்கும் போது இந்த ஜெபத்தை ஜெபிக்கலாம் பலன் உண்டு.
*நாம் இந்த சிறு ஜெபத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இந்த ஜெப பக்தி முயற்சியை பற்றி அறியாத கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு நாம் இந்த ஜெபபக்தி முயற்சியை பற்றி தெரியப்படுத்தலாம்.*
நன்றி.🙏
⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️
*சகல ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ளும் செபம்*
⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️
ஆண்டவரே அளவில்லா வேதனையில் உம்மை நோக்கி கூவிஅழைக்கின்றேன்.
ஆண்டவரே என் கூக்குரலுக்கு செவிசாய்த்தருளும். என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.
ஆண்டவரே! யான் செய்த பாவங்களை நினைவுகூர்வீராகில் உமக்கு முன் யார் நிற்க முடியும்?
வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கின்றிர்.
ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்; அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது.
என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது; இரவின் காவலர் உதயத்தை எதிர் நோக்குவதைவிட, அதிக ஆர்வமுடன் எதிர்நோக்குகிறது.
காவலர் உதயத்தை எதிர்பார்ப்பதற்கு மேலாக, இஸ்ராயலர் ஆண்டவரை எதிர் பார்ப்பார்களாக்
ஏனனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது; அவருடைய மீட்புத் துனை பொங்கி வழிகின்றது.
இஸ்ராயேலரை அவர் மீட்பார்; அவர்கள் செய்த பாவங்களை; அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக்கொள்வார்.
*🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே.
*🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக.
*🙏🏻செபிப்போமாக:🙏🏻*
⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா! மரித்த உமது அடியோகளுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாடுக்களை அங்கரித்து, அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்பிக் காத்திருக்கிற பாவப் பொறுத்தலை கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்ளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்
-ஆமென்.🙏🏻
*🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் அளித்தருளும் ஆண்டவரே.
*🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக.
*🌹முதல்:* அவர்கள் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவார்களாக.
*🌻துணை:* ஆமென்.
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்



![⛪ வேளாங்கண்ணி சர்ச் - ٥٥٥٥ Catholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புனித அசிசி சிறிய சகோதரர்கள் 6IgIU பிரான்சிஸீகன் சபையை எப்போது தொடங்கினார் ? ahalic Caolic నన 12090 606 Catholic ٥٥٥٥ Catholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புனித அசிசி சிறிய சகோதரர்கள் 6IgIU பிரான்சிஸீகன் சபையை எப்போது தொடங்கினார் ? ahalic Caolic నన 12090 606 Catholic - ShareChat ⛪ வேளாங்கண்ணி சர்ச் - ٥٥٥٥ Catholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புனித அசிசி சிறிய சகோதரர்கள் 6IgIU பிரான்சிஸீகன் சபையை எப்போது தொடங்கினார் ? ahalic Caolic నన 12090 606 Catholic ٥٥٥٥ Catholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புனித அசிசி சிறிய சகோதரர்கள் 6IgIU பிரான்சிஸீகன் சபையை எப்போது தொடங்கினார் ? ahalic Caolic నన 12090 606 Catholic - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_63390_38acc46e_1770921061394_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=394_sc.jpg)








