S.ANTHONY✝️YESUMARY
ShareChat
click to see wallet page
@anthonymundiyampakkam
anthonymundiyampakkam
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - 834019026 Catholic YouTube) PRAISG TIGLORD விவிலியம் அறிவோம் ஆணீடவரினீவாகிகிறிகிணங்க போனீறுநாகிகினாலி நாயி நீரைநக்கிகுடித்தவரீகளினீ எணீணிக்கைஎத்தனை? 300 நீதித்தலைவர்கள் 7:6 834019026 Catholic YouTube) PRAISG TIGLORD விவிலியம் அறிவோம் ஆணீடவரினீவாகிகிறிகிணங்க போனீறுநாகிகினாலி நாயி நீரைநக்கிகுடித்தவரீகளினீ எணீணிக்கைஎத்தனை? 300 நீதித்தலைவர்கள் 7:6 - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - 22.012026 Catholic Yufube PRAISG TIG LORD திருச்சபை அறிவோம் ஒவ்வொரு ஆண்டும் புனித பவுலின் மனமாற்ற பெருவிழா எந்த DII6i கொண்டாடப்படுகிறது ? cattotc Catholic ஜனவரி 25 Catholic 22.012026 Catholic Yufube PRAISG TIG LORD திருச்சபை அறிவோம் ஒவ்வொரு ஆண்டும் புனித பவுலின் மனமாற்ற பெருவிழா எந்த DII6i கொண்டாடப்படுகிறது ? cattotc Catholic ஜனவரி 25 Catholic - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - Catholic Suelygoodneand mercyshdllltolloumelthodoy 0f my life; Ang lwilldwellin fhe house of the lorg Forever Psalm 23:6 Caolie Ioulube TAMIL CATHOLIC TV Catholic Suelygoodneand mercyshdllltolloumelthodoy 0f my life; Ang lwilldwellin fhe house of the lorg Forever Psalm 23:6 Caolie Ioulube TAMIL CATHOLIC TV - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - Catholic உண்மையாகவேஎன் வாழீநாளீ எல்லாமீஹீ நலமும் பேரனிபுமி அருள் எனைப் புடைசூழ்ந்து வருமீ திருப்பாடல்கள் :23:6 Caholic loulube TAMIL CATHOLIC TV Catholic உண்மையாகவேஎன் வாழீநாளீ எல்லாமீஹீ நலமும் பேரனிபுமி அருள் எனைப் புடைசூழ்ந்து வருமீ திருப்பாடல்கள் :23:6 Caholic loulube TAMIL CATHOLIC TV - ShareChat
before sleeping⭐* Gracious Heavenly Father, I come before You with a humble heart, acknowledging the times I have neglected the temple You have given me. Forgive me for not always cherishing this sacred space, for overlooking the incredible sacrifice made for my redemption. I ask You, O Lord, to guide me in honoring my body, Your sanctuary. Grant me the wisdom and strength to nourish it with care, to rest in Your comforting embrace, and to move in ways that celebrate the life You have bestowed upon me. May my temple be a fitting residence for Your Holy Spirit, a place of purity and peace. I commit to this sacred task, knowing that my body is not my own, but Yours, bought at a price beyond measure. In the precious name of Jesus Christ, I offer this prayer. *Amen.* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - praise the Let us LORD for His great love and for thel wonderful things He has done for us ! Psalm 107 : 8 praise the Let us LORD for His great love and for thel wonderful things He has done for us ! Psalm 107 : 8 - ShareChat
இரவு ஜெபம்*_ _*எம் அன்பு ஆண்டவரே! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், புகழ்கின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம்.*_ _*கடினமான பகல்வேளைப் பணிகளின் பிறகு, பல சவால்களை எதிர்கொண்டு, உமது அளவற்ற அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பில், முழுமையாக ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். இப்போது நாங்கள் உறங்கச் செல்லும்போது, ​​இரவில் எங்களைக் காத்துக்கொள்ளவும், கவனிக்கவும், பாதுகாக்கவும், விடியற்காலையில் எங்களை எழுப்பவும் உம்மை பிரார்திக்கிறோம்.*_ _*அன்புள்ள ஆண்டவரே, நீர் எப்பொழுதும் எங்களுடன் இருப்பதை உமது வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி, "மேலும் பயப்பட வேண்டாம், நான் எப்போதும் உங்களுடனேயே இருக்கிறேன்" என்று உறுதிபடுத்துகின்றீர். இப்போது எங்களைச் சுற்றியுள்ள புயல்களின் புகலிடம், அமைதி மற்றும் வலிமையைக் காணும் ஒரே இடம் நீர்தான். இதுவே நாங்கள் தேடும் உமது முகம் அப்பா!*_ _*ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே.*_ _*எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய மகா பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †*_ _*🌹இனிய இரவு வணக்கம்! 🌹*_ #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக 4 திருப்பாடல் 107:8 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக 4 திருப்பாடல் 107:8 - ShareChat
*அப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம் மற்றும் புகழ்மாலை* 🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃 எங்கள் செல்வ நாட்டில் திருமறையைப் போதிக்க வரம் பெற்ற் புனித தோமையாரே, நீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த பற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே! காணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும், சாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும், எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில் கணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக் கொண்டு வந்தீர்! இன்னும் இந்த நாட்டில் எங்கள் சகோதரர்களில் எத்தனை கோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே மந்தையாய், கிறிஸ்துவின் அன்பரசின்கீழ் வருவது எப்போது? விசுவாசத்தில் உறுதியடைந்த அப்போஸ்தலரே, எங்கள் அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி, எங்களில் துலங்கும் விசுவாசத்தின் ஞானஒளி எங்கும் பரவி, இந்தியா முழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த விடுதலையையும் அமைதியையும் பெற்று அவருடைய அரசின்கீழ் அணிவகுத்து நிற்கும்படியாக இறைவனை மன்றாட உம்மை வேண்டுகிறோம். *🙏🏻ஆமென்🙏🏻* ⚜️🌷⚜️🌷⚜️🌷⚜️🌷⚜️🌷⚜️🌷 *அப்போஸ்தலரான புனித தோமையார் மன்றாட்டுமாலை* ⚜️🌷⚜️🌷⚜️🌷⚜️🌷⚜️🌷⚜️🌷 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி இறையன்னையை மிகவும் அன்பு செய்த அப்போஸ்தலரான புனித தோமையயாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். கலிலேயா நாட்டில் பிறந்த புனித தோமையாரே. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். முடிவில்லா அமைதி தரும் நற்செய்தியைப் போதித்த புனித தோமையாரே. தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இளம் வயதிலேயே தந்தையின் சொற்படி அவர் தொழிலை நடத்திக் கொண்டு வந்த புனித தோமையாரே. இயேசு மெய்யாகவே உலக மீட்பரென்று விசுவாசம் கொண்ட புனித தோமையாரே. இயேசு தம்முடைய சீடர்களுக்குள்ளே ஒருவராகத் தெரிந்து கொண்ட புனித தோமையாரே. இயேசுவின் மீது கொண்டிருக்கும் பற்றுதலால் நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்!? என்று கூறிய புனித தோமையாரே. ஆண்டவரே, நீர் போகிறதற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?? என்ற வினாவை எழுப்பி, வழியும் உண்மையும் வாழ்வும் நானே!? என்ற இயேசுவின் பதிலைப் பெற்ற புனித தோமையாரே. இயேசு உயிர்த்த பிறகு நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்!? என்ற புனித தோமையாரே அவர் உமக்குத் தோன்றியதும் அவரைக் கண்டு மகிழ்ந்து நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்!? என்று சொன்ன புனித தோமையாரே. இயேசு, உம்மிடம் தோமா, நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்!? என்று சொல்லக் கேட்ட புனித தோமையாரே. தூய ஆவியாரால் ஏவப்பட்டு இறையன்னையும் அப்போஸ்தலர்களும் கூடிய சபையிலே மேதியா முதலான நாடுகளில் நற்செய்தியைப் போதிக்கக் குறிப்பிடப்பட்ட புனித தோமையாரே. இறையன்னையின் அடக்கத்துக்கு மிகவும் ஆவலுடனே ஓடி வந்த புனித தோமையாரே. மாபெரும் மகிழ்ச்சியோடே இயேசுவுக்கு உயிரை ஒப்புக் கொடுத்து பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டவர் போல உமது இரத்தத்தைச் சிந்தி திருமறைக்காக உயிரைக் கொடுக்க விரும்பிய புனித தோமையாரே. மண்ணுலகில் உள்ள எல்லா பொருள்களையும் உம்மையும் விட இறைவனை அதிகமாக அன்பு செய்த புனித தோமையாரே. வேற்று நாடுகளிலே உமக்கு வரப்போகிற வேதனைகளையும் தடைகளையும் எண்ணி மகிழ்ச்சி கொண்ட புனித தோமையாரே. இயேசுவையும் இறையன்னையையும் நினைத்து இரவும் பகலும் விண்ணகத்தை நோக்கிக் கையேந்திக் கொண்டு இடைவிடாமல் செபித்த புனித தோமையாரே. தூய ஆவியாரால் ஏவப்பட்டு மக்களுக்குத் திருவுரையாற்றும்போது வானத்தூதர் போல காணப்பட்ட புனித தோமையாரே. உயிரையும் உடலையும் தத்தம் செய்து, படாத பாடுபட்டு, மக்களை மெய்மறையில் சேர்க்க ஆவல்கொண்ட புனித தோமையாரே. விண்ணுல வரங்களைத் தாங்கிய உன்னத மரக்கலமாகிய புனித தோமையாரே. மூன்று அறிஞர்களுக்கு திருமுழுக்கு அளித்து அவர்களை மெய்மறையில் சேர்த்த புனித தோமையாரே. பார்த்தியா நாட்டிலே மக்கள் மெய்மறையைக் கண்டடையச் செய்த புனித தோமையாரே. மேதியா நாட்டிலேயும் பெர்சியா நாட்டிலேயும் வெகு துன்பப்பட்டு ஈடேற்றத்தின் வழியிலே திருப்பிக் கொண்டு வந்த புனித தோமையாரே. ஈக்கானியா நாட்டிலே வந்த சோதனைகளை எல்லாம், அன்பினாலும், செபத்தினாலும் வென்று, அஞ்சா நெஞ்சத்தவராய் திருமறையை அவர்களுக்குப் போதித்த புனித தோமையாரே. எத்தியோப்பியா நாட்டுக்கு ஒளியாக நின்ற புனித தோமையாரே. சிந்து தேசத்தில் கந்தபோரஸ் அரச குடும்பத்துக்குத திருமுழுக்குக் கொடுத்து ஞான ஒளி பெருகச் செய்த புனித தோமையாரே. கடலில் சுற்றி வந்த பிரமாண்டமான மரத்தை உமது இடுப்பில் இருந்த கயிற்றினாலே கட்டித் திருச்சிலுவை அடையாளத்தை வரைந்து இழுந்துக் கொண்டு வந்து கரையிற் சேர்ந்த புனித தோமையாரே. இறந்த குழந்தையை இறைவனுடைய அருளாலே உயிர்ப்பித்தவரான புனித தோமையாரே. இயேசுவுக்கான பணிகளை எல்லாம் மகா அன்போடும் தாழ்ச்சியோடும் செய்த புனித தோமையாரே. உமக்குப் பின் புனித சவேரியார் பாரத நாட்டுக்கு வரப்போகிறதை தொலைப் பார்வையால் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்தின புனித தோமையாரே. ஈட்டியால் குத்தப்பட்டு பெருமகிழ்வோடே மறைச்சாட்சி முடி பெற்று முடிவில்லாக் காலம் வாழ விண்ணுலகிற்குச் சென்ற புனித தோமையாரே கிறிஸ்துவில் நாங்கள் உறுதியான விசுவாசம் கொள்ளும்படியாக, புனித தோமையாரே. கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங்கும் பரவும் படியாக, புனித தோமையாரே. உமது திருவடியைத் தாங்கிய பாரதநாடு மனம் திரும்பும்படியாக, புனித தோமையாரே. உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே.. எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே.. எங்கள் மன்றாட்டை கேட்டருளும் சுவாமி உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே.. எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி. கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக. புனித தோமையாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். *செபிப்போமாக* ⚜️🌷⚜️🌷⚜️🌷⚜️🌷 தந்தையே, எங்கள் பாரத நாட்டிற்கு உமது நற்செய்தியை முதன்முதல் கொணர்ந்த புனித தோமையார் எங்கள் நாட்டிலே மறைபரப்பி, இரத்தம் சிந்தி, அடக்கமானார் என்பதைப் பெருமையுடன் கொண்டாடி உம்மைப் புகழ்கின்றோம். குhலங்காலமாக உண்மைக் கடவைள பல்வேறு வகைகளில் தேடியலைந்து கொண்டிருக்கும் இந்தியராகிய நாங்கள், புனித தோமையாரின் வேண்டுதலால் இயேசுவே எங்கள் ஆண்டவர் என்று கண்டு. நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்!? என்று அறிக்கையிட்டு அவர் திருவடிகளில் சரணடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
*உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம் மற்றும் புகழ்மாலை* ⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️🕯️⚜️ திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் . தாவீது அரசரின் புத்திரனாகிய இயேசுவே ! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து , உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் .சுவாமி , தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும்போது பச்சாதாபக் கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல இந்த ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிருந்து, அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும் . அங்கே சகல அர்ச்சிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதாகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக ஆமென் உன்னதத்தில் வீற்றிருக்கிற பிதாவே ! உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆத்துமங்களுக்காக திவ்ய சேசுக் கிறீஸ்துவின் விலை மதியாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன் . சுவாமி! பரிசுத்தரே ! சர்வ வல்லப பரிசுத்தரே ! அட்சயரான பரிசுத்தரே , சுவாமி ! எங்கள் மேல் இரக்கமாயிரும் . பாவிகளுக்குப் பொறுத்தலைத் தந்தருளும் , மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிடும். *🌹🙏🏻ஆமென்.🙏🏻🌹* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ *🌿🌸🕯️பிரார்த்தனை🕯️🌸🌿* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் (மற்றதும் ) அர்சிஷ்ட மரியாயே , *(பதில்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்.)* சர்வேசுரனுடைய அர்சிஷ்ட மாதாவே , * கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்சிஷ்ட கன்னிகையே, அர்ச். மிக்கேலே, தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே, அர்ச். ஸ்நாபக அருளப்பரே , பிதாப்பிதாக்களும் தீர்கதரிசிகளுமாகிய சகல அர்சிஷ்டவர்களே, அர்ச். இராயப்பரே , அர்ச். சின்னப்பரே, அர்ச். அருளப்பரே , அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, அர்ச். முடியப்பரே , அர்ச் லவுரேஞ்சியாரே , வேடசாட்சிகலான சகல அர்ச்சிஷ்டவர்களே , அர்ச். கிரகோரியாரே, அர்ச். அமிர்தநாதரே, அர்ச். அகுஸ்தீனாரே , அர்ச். எரொணிமுசே , மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய அர்ச்சிஷ்டவர்களே , வேத வித்யாபாரகரான சகல அர்ச்சிஷ்டவர்களே , குருக்களும் ஆசிரியர்களுமான அர்ச்சிஷ்டவர்களே , சந்நியாசிகளும் தபோதனர்களுமான அர்ச்சிஷ்டவர்களே , அர்ச் . மரிய மதலேனே , அர்ச். கத்தரீனாளே, அர்ச். பார்பரம்மாளே , கன்னியாஸ்த்ரீகளும் விதவைகளுமாகிய அர்ச்சிஷ்டவர்களே , ஆண்டவருடைய திருவடியார்கலான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, தயாபரராயிருந்து..! அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி தயாபரராயிருந்து..! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி சகல பொல்லாப்புகளிலே நின்று , *(பதில் : அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி)* உமது கோபத்திலே நின்று..! உமது நீதி அகோரத்திலே நின்று. பசாசின் வல்லமையிலே நின்று..! கடூர வியாகுலத்திலே நின்று கொடிய ஆக்கினையிலே நின்று மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று அக்கினிச் சுவாலையிலே நின்று துயரமான அழுகையிலே நின்று உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று தேவரீருடைய திரு மனுஷ அவதாரத்தைப் பார்த்து தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து தேவரீர் கட்டுண்ட கட்டுக்களைப் பார்த்து தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து தேவரீருடைய திருச்சிளுவையைப் பார்த்து தேவரீருடைய கடூரமான மரணத்தைப் பார்த்து தேவரீருடைய ஐந்து திருக்காயன்களைப் பார்த்து எங்கள் மரணத்தை ஜெயித்து அழித்த தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து தேவரீருடைய அதிசயமான ஆரோகனத்தைப் பார்த்து தேற்றரவு பன்னுகிரவராகிய இஸ்பிரீத்து சாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து நடுத்தீர்க்கிற நாளிலே அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம் *(பதில் : எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி)* பாவியாயிருந்த மரிய மகதலேனம்மாளுக்கு பாவ மன்னிப்பு தந்தவரும் நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகின்றோம் மரணத்தின் திறவுகோலையும் நரகத்தின் திறவுகோலையும் கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம் இரட்சனியத்துக்கு உரியவர்களை இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம் எங்கள் சகோதர பந்துக்கள் உபகாரிகளுடைய ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம் பூலோகத்திலே யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும் தயை செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் கிறீஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும் குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமும் உள்ள ஸ்தலத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம் பாவ தோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் அவர்கள் துயரைச் சந்தோசமாக மாற்றிஅருள தேவரீரை மன்றாடுகின்றோம் அவர்களுடைய ஆசை நிறைவேற தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் அவர்கள் உம்மைப் புகழ்ந்து ஸ்துதிப் பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம் உம்முடைய அர்ச்சிஷ்டவர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம் கிருபையின் ஊறனியே தேவரீரை மன்றாடுகின்றோம் உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி கிருபையாயிரும் கிறீஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் 1 பர...! நரக வாசலில் நின்று..! அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும். சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக...! அப்படியே ஆகக்கடவது. சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்..! எங்கள் அபய சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது. ===================================================== *🕯️🙏🏻செபிப்போமாக🙏🏻🕯️* 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் , இரட்சகருமாகிய சர்வேசுரா , மரித்த உமது அடியார்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து , அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் . சதாகாலமும் சீவியரான சர்வேசுரா , இந்த மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி நித்திய பிதாவே ! பெற்றோர் , பந்துக்கள் , சிநேகிதர் , உபகாரிகள் முதலியவர்களைத் தக்கவிதமாய் நேசித்து , அவர்களுக்கு வேண்டிய நன்மையைச் செய்தருள கற்பித்தருளினீரே! ஆகையால் எங்களைப் பெற்று , அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் , பற்பல உபகாரங்கள் எங்களுக்குச் செய்தவர்களும் , எங்கள் பந்துக்கள் , சிநேகிதர் , முதலானவர்களும் வேதனை நீங்கி நித்திய காலம் உம்மைச் சந்தோசமாய் தரிசித்துக் கொண்டிருக்கத் தேவரீர் கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம் மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுவோமாக நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி , முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது *( கிருபை தயாபத்து மந்திரம் சொல்லவும் )* *🌹👑செபிப்போமாக👑🌹* சர்வ சக்தி உடையவருமாய் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா ! முக்திப்பேறு பெற்ற கன்னித்தாயான மரியாயுடைய ஆத்துமமும் சரீரமும் இஸ்பிரீத்து சாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்து அருளினீரே. ! அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகின் சகல போள்ளப்புகளிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும் . இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய ஏசுக்கிறிஸ்து நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. *🙏🏻ஆமென்🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
*உத்தரிகிற ஸ்தலத்தின் ஆத்துமங்களுக்கான, புனிதை ஜெர்த்ரூத்தம்மாளின் ஜெபமாலை*. 🌷📿🌷📿🌷📿🌷📿🌷📿🌷📿 *மூவொரு இறைவன் புகழ் :* தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மாட்சிமை உண்டாவதாக தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுது ம் என்றென்றும் இருப்பதாக ஆமென். ⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿 *தூய ஆவியாரை நோக்கி மன்றாட்டு :* தூய ஆவியாரே இறைவா! எழுந்தருளிவாரும்! விண்ணகத்திலிருந்து உமது அருள் ஒளியின் கதிர்களை அனுப்பும், ஏழைகளின் தந்தையே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பேரொளியே, எழுந்தருளி வாரும். நிறை ஆறுதலானவரே, ஆன்மாக்களுக்கு இனிய விருந்தாளியே, பேரின்ப இரக்கமுள்ள இளைப்பாற்றியே, நோயில் நலமே! வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் ஆறுதலே எழுந்தருளி வாரும். மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிற பேரொளியே, உம் நம்பிக்கையாளர்களுடைய இதயத்தை நிரப்பும். உமது தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. தூய்மைற்றதை தூய்மையாக்கும். உலர்ந்ததை நனையும், காயங்களைக் குணமாக்கும். வணங்காததை வணங்கச்செய்யும். குளிரோடிருப்பதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பிய எமக்கு உம் திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணிய பேறுகளையும் நல்ல இறப்பையும், முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்குத்தந்தருளும். ஆமென். 💖✨💖✨💖✨💖✨💖✨💖✨ *நம்பிக்கை அறிக்கை :* விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென் *🍄முதல் மூன்று சிறிய மணிகளில்🍄* *🌹நித்தியப்பிதாவே! நான் கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்கும் பரிகாரமாக* சேசு மரியாயின் இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும்'பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன். *ஆமென்.!* *🌹நித்தியப்பிதாவே! நான் குற்றங்குறைகளோடு செய்த நன்மையை சுத்திகரிப்பதற்காக* சேசு மரியாயின் இருதயங்களை, அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன். *ஆமென்.!* *🌹நித்தியப்பிதாவே! நான் செய்யத் தவறிய நன்மைகளுக்கு ஈடாக..!*, சேசு மரியாயின் இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். *ஆமென்.!* *🌿🌹1.பெரிய மணியில்* *தாய்த் திருச்சபையில் மரித்த சகல ஆன்மாக்களுக்காகவும் இந்த மணிகளை அர்ப்பணிப்போம்* *முதல்வர் :* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும். *ஆமென்.!* *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும், இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலி பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும், ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் . பிதாவுக்கும்.... ஓ என் இயேசுவே.... *🌿🌹2.பெரிய மணியில்* *உலகத்தில் மரித்த சகல ஆன்மாக்களுக்காகவும் இந்த மணிகளை அர்ப்பணிப்போம்* *முதல் :* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்.! *ஆமென்.!* *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் . பிதாவுக்கும்.... ஓ என் இயேசுவே.... *🌿🌹3.பெரிய மணியில்* *மரித்த, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும் இந்த மணிகளை அர்ப்பணிப்போம்* *முதல்:* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும். *ஆமென்.*! *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் . பிதாவுக்கும்..... ஓ என் இயேசுவே..... *🌿🌹4.பெரிய மணியில்* *மாசற்ற மற்றும் கருச்சிதைவு செய்யப்பட்ட குழந்தைகள் ஆன்மாக்களுக்காகவும், இந்த மணிகளை அர்ப்பணிப்போம்* *முதல்:* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்! *ஆமென்*!. *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் . பிதாவுக்கும்.... ஓ என் இயேசுவே... *🌿🌹5 பெரிய மணியில்* *நம் இல்லங்களில் மற்றும் குடும்பங்களில் மரித்த, நம் முன்னோர்களின் ஆன்மாக்களுக்காகவும் இந்தமணிகளை அர்ப்பணிப்போம்* *முதல்:* நித்தியப்பிதாவே! என் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உம் பிரியநேசமான, திருச்சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் எல்லா காயங்களையும், அவரது மகா பரிசுத்த திரு இருதயத்தின், வேதனைகளையும், அவஸ்தைகளையும், அவரது திருக்காயங்கள் அனைத்திலுமிருந்தும் வழிந்தோடிய, விலையேறப்பெற்ற அவரது திரு இரத்தத்தையும், உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்! *ஆமென்*!. *துணை :* இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! பாவிகளின் இருதயங்களை, தேவ பிதாவின் சத்தியத்திற்கும், ஒளிக்கும் திறந்தருளும்! மரியாயின் மாசற்ற இருதயமே! பாவிகள் மனந்திரும்ப இறைவனை மன்றாடும்.! *ஆமென்.*! *👑சிறிய மணியில் 10 முறை👑* நித்திய பிதாவே , எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்டதும் இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையுமான, சகல திருப்பலிப் பூசைகளோடு சேர்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், உலகின் , திருச்சபையின் , எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும் , ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் பிதாவுக்கும்.... ஓ என் இயேசுவே..... 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 *உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம்* 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 திவ்விய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் . தாவீது அரசரின் புத்திரனாகிய இயேசுவே ! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து , உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும் .சுவாமி , தேவரீர் அன்று சிலுவைப் பீடத்தில் பலியாகும்போது பச்சாதாபக் கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல இந்த ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிருந்து, அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும் . அங்கே சகல அர்ச்சிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதாகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக ஆமென் 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 *உத்தரிகிற ஸ்தலத்தின் ஆத்துமங்களுக்கான பிரார்த்தனை* 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும் அர்சிஷ்ட மரியாயே , *பதில் : மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்* சர்வேசுரனுடைய அர்சிஷ்ட மாதாவே.! கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்சிஷ்ட கன்னிகையே.! அர்ச். மிக்கேலே..! தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே..! அர்ச். ஸ்நாபக அருளப்பரே..! பிதாப்பிதாக்களும் தீர்கதரிசிகளுமாகிய சகல அர்சிஷ்டவர்களே..! அர்ச். இராயப்பரே..! அர்ச். சின்னப்பரே..! அர்ச். அருளப்பரே..! *பதில் : மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்* அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே..! அர்ச். முடியப்பரே..! அர்ச் லவுரேஞ்சியாரே..! வேதசாட்சிகளான சகல அர்ச்சிஷ்டவர்களே..! அர்ச். கிரகோரியாரே.! அர்ச். அமிர்தநாதரே..! அர்ச். அகுஸ்தீனாரே.! அர்ச். எரொணிமுசே.! மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய அர்ச்சிஷ்டவர்களே..! வேத வித்யாபாரகரான சகல அர்ச்சிஷ்டவர்களே..! குருக்களும் ஆசிரியர்களுமான அர்ச்சிஷ்டவர்களே..! சந்நியாசிகளும் தபோதனர்களுமான அர்ச்சிஷ்டவர்களே..! அர்ச் . மரிய மதலேனே..! அர்ச். கத்தரீனாளே..! அர்ச். பார்பரம்மாளே..! கன்னியாஸ்த்ரீகளும் விதவைகளுமாகிய அர்ச்சிஷ்டவர்களே.! ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே..! *தயாபரராயிருந்து..!* அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி *தயாபரராயிருந்து.!* எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி சகல பொல்லாப்புகளிலே நின்று.! *பதில் : அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி* உமது கோபத்திலே நின்று.! உமது நீதி அகோரத்திலே நின்று.! பசாசின் வல்லமையிலே நின்று.! கொடூர வியாகுலத்திலே நின்று.! கொடிய ஆக்கினையிலே நின்று.! மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று.! அக்கினிச் சுவாலையிலே நின்று.! துயரமான அழுகையிலே நின்று.! உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று.! தேவரீருடைய திரு மனுஷ அவதாரத்தைப் பார்த்து.! தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து.! தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து.! தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து.! தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து.! தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து.! தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து.! தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து.! தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து.! தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து.! தேவரீர் கட்டுண்ட கட்டுகளைப் பார்த்து.! தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து.! தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து.! தேவரீருடைய திருச்சிலுவையைப் பார்த்து.! தேவரீருடைய கொடூரமான மரணத்தைப் பார்த்து.! தேவரீருடைய ஐந்து திருக்காயங்களைப் பார்த்து.! எங்கள் மரணத்தை ஜெயித்து அழித்த, தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து.! தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து.! தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து.! தேவரீருடைய அதிசயமான ஆரோகனத்தைப் பார்த்து.! தேற்றரவு பண்ணுகிறவராகிய, இஸ்பிரீத்துசாந்துவின்ஆகமனத்தைப் பார்த்து..! நடுத்தீர்க்கிற நாளிலே..! பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம். *பதில் : எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி* பாவியாயிருந்த மரிய மகதலேனம்மாளுக்கு பாவ மன்னிப்பு தந்தவரும், நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய, தேவரீரை மன்றாடுகின்றோம். மரணத்தின் திறவுகோலையும், நரகத்தின் திறவுகோலையும், கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம். இரட்சண்யத்துக்கு உரியவர்கள், இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் சகோதர, பந்துக்கள், உபகாரிகளுடைய ஆத்துமங்களை, உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம். பூலோகத்திலே, யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும், தயை செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். கிறிஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும், குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமும்உள்ள, ஸ்தலத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம். பாவ தோஷத்தால், அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று, தேவரீரை மன்றாடுகின்றோம். அவர்கள் துயரைச், சந்தோஷமாக மாற்றிஅருள தேவரீரை மன்றாடுகின்றோம். அவர்களுடைய ஆசை நிறைவேற, தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். அவர்கள் உம்மைப் புகழ்ந்து, ஸ்துதிப் பலியை உமக்குச் செலுத்தும்படி, செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம். உம்முடைய அர்ச்சிஷ்டவர்களின் கூட்டத்தில், அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம். கிருபையின் ஊறணியே தேவரீரை மன்றாடுகின்றோம். ✝️உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..! 🌿அவர்களுக்கு *இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.* ✝️உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே..! 🌿அவர்களுக்கு, *இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி* ✝️உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே...! 🌿அவர்களுக்கு *நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.* 1 பர முதல் : நரக வாசலில் நின்று அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும். சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக. அப்படியே ஆகக்கடவது. துணை : சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். எங்கள் அபய சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது. *🌿🌹செபிப்போமாக :🙏🏻* விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் , இரட்சகருமாகிய சர்வேசுரா , மரித்த உமது அடியார்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து , அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் . சதாகாலமும் சீவியரான சர்வேசுரா , இந்த மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி ஆமென். *பிதா சுதன் இஸ்பிரித்து சாந்துவின் பெயராலே ஆமென்.* #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - St Gortrudo tho Great St Gortrudo tho Great - ShareChat
புனித அருளானந்தர் நவநாள் செபம்!* நாள் -1 செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும் மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். – ஆமென். (தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்) இறைவா, உம்மிடம் நாங்கள் சமர்ப்பித்த இவ்வேண்டுதல்களுக்கு கனிவுடன் செவிகொடுத்து, புனித அருளானந்தர் அடிகளாரின் வேண்டுதலால் அவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அருள் தாரும். இதைத் தூய ஆவியுடன், ஒரே இறைவனாக என்றும் வீற்றிருப்பவரும், ஆட்சி புரிபவருமான, உம் திருமகன், எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென். *சிந்தனை:* *புல்லூர் நெல்லூர் ஆன வரலாறு!* தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நற்செய்தி அறிவிக்கக் கூடாது என்று தான் சொல்லியிருந்த போதும், ஜான் தெ பிரிட்டோ அதைக் கேளாது நற்செய்தி அறிவித்ததால் சீற்றமடைந்த சேதுபதி மன்னர் தனது படைவீரர்களிடம், அவரைக் கொல்ல உத்தரவிட்டார். இதையறிந்த தடியர், சேதுபதி மன்னர் முன்பாக வந்து, "என் தலைவரைக் கொல்வதற்கு முன்பு என்னைக் கொல்லுங்கள்" என்று துணிவோடு முழங்கினார். இதனால் தன் திட்டம் பாழாய்ப்போய்விட்டதே என உணர்ந்த சேதுபதி மன்னர் தடியரிடம், "நான் ஒன்றும் ஜான் தெ பிரிட்டோவைக் கொல்லப் போவதில்லை; அவரைக் கண் காணாத இடத்திற்குத்தான் அனுப்பி வைக்கப் போகிறேன்" என்று‌ சொன்னதும், தடியர் அவரை விட்டுவிட்டார். சேதுபதி மன்னர் தடியரிடம் இப்படிச் சொன்னாலும் உண்மையில் அவர், ஓரியூரில் ஆளுநராக இருந்த தனது சகோதரர் உதயருக்கு இரகசியக் கடிதம் ஒன்றை எழுதி, அதில் ஜான் தெ பிரிட்டோவைத் தலைவெட்டிக் கொன்றுபோட உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 1693 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் ஜான் தெ பிரிட்டோ இராம்நாட்டிலிருந்து அறுபத்து நான்கு கிலோமீட்டர்த் தொலைவில் இருந்த ஓரியூருக்குப் பதினைந்து படைவீரர்களால் இழுத்துச் செல்லப் பட்டார். இதனால் அவர் மிகவும் களைப்புற்றார். இந்நிலையில், வழியில் ஒரு பெரிய மரம் இருந்தது.‌ அந்த மரத்தின் அடியில் சற்றுநேரம் ஜான் தெ பிரிட்டோ இளைப்பாறினார்.‌ அப்போது அவ்வழியே ஒரு பெண் வந்தார். அவரிடம் ஜான் தெ பிரிட்டோ, "குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டதற்கு, அப்பெண்மணி, "தண்ணீர் இல்லை; மோர் இருக்கிறது" என்றார்‌. "சரி, அதைக் கொடுக்க முடியுமா?" என்று கேட்க, அவரும் தாராளமாய் அதைக் கொடுத்தார். அதை வாங்கிப் பருகிய ஜான் தெ பிரிட்டோ பெரிதும் உவகையடைந்து, "அம்மா! இந்த ஊரின் பெயர் என்ன? என்று கேட்டார். அவர், "புத்தூர்" எனப் பதிலளித்ததும், "இன்று முதல் இது புல்லூர் அல்ல; நெல்லூர் என அழைக்கப்படும்" என்றார். ஜான் தெ பிரிட்டோ அந்த ஊருக்கு ஆசி வழங்கியதிலிருந்து, சுற்றிலும் உள்ள ஊர்களில் வறட்சி நிலவினாலும் நெல்லூர் என மாறிய அந்த ஊரில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் விளைச்சல் அமோகமாக இருக்கின்றது. ஆம், இறையடியாருக்கு நாம் செய்யும் ஒரு சிறு உதவிக்குக் கூட இறைவன் தக்க கைம்மாறு தருவார். அதைத் தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நற்செய்தியில் இயேசு, "இச்சிறியோர்கள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்" (மத் 10:42) என்பார். எனவே, நாம் நம் நடுவில் பணி செய்யும் இறையடியார்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, இறையாசியைப் பெறுவோம். *இறுதி செபம்:* கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக! இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். *– ஆமென்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat