
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
before sleeping✨*
Heavenly Father,
We come before You with humble hearts, lifting up our family into Your loving hands. You know each one of us deeply, our joys, our struggles, our spoken words, and even the silent burdens we carry. Today, we ask for Your presence to dwell in our home and in our hearts.
Lord, teach us to love one another with patience and understanding. When misunderstandings arise, give us gentle hearts that are willing to listen and forgive. When one of us feels tired, lonely, or discouraged, help the rest of us to respond with compassion, kindness, and empathy. Let us be a source of comfort to one another, not a cause of pain.
Father, strengthen the bonds that unite our family. Guide our words so they bring healing and encouragement. Guide our actions so they reflect care, respect, and selflessness. In moments of conflict, remind us that love is more powerful than pride, and unity is more important than being right.
We also pray for protection and provision. Watch over our health, our work, our studies, and our daily needs. When we face uncertainty or fear, remind us that You are with us, holding us steady and giving us hope.
Thank You, Lord, for the gift of family. Help us to cherish one another every day and to grow together in faith, love, and understanding.
In Jesus’ name, I pray.
Amen. #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
நேர ✝️ஜெபங்கள்🕯️*
🌝🌟✨🌝🌟✨🌝🌟✨🌝🌟✨
(குறிப்பு : இந்த 5 ஜெபங்களும் மிகவும் வல்லமையானவை தினமும் இரவு தூங்க செல்லும் முன் ஜெபிப்போம். இறைவனின் அருளாசீரையும், அன்னையின் அருட்காவலையும் பெறுவோம்.)
🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙
*🙏🏻† இரவு ஜெபம் †🙏🏻*
🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙
எல்லாம் வல்ல இறைவா!
இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைகளுக்கும் விரோதமாயிருப்பதால், மனம் நொந்து வருந்துகிறேன். எங்களை மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன்.
ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும். நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம். நாள்தோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும், இருப்பீராக!
நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் எங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லவற்றையே சொல்லவும், செய்யவும், எங்களை உறுதிப்படுத்துவார்களாக!
இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். என்னை இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் நிரப்பியருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக்கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும்.
என் நல்ல காவல் தூதரே!
என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
*🙏🏻ஆமென்! †🙏🏻*
🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸
*† இரவு நன்றி ஜெபம் †*
🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸
🧎♂️🧎♀️ எங்கள் அன்பின் பரலோக பிதாவே!
உம்மை போற்றுகிறேன். ஆராதிக்கிறேன். நன்றி செலுத்துகிறேன். இன்று முழுவதும் என்னோடு இருந்து என்னைக் காத்து நடத்தியமைக்காக நன்றி!
எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றியருளும். உலகெங்கும் பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டு கிறோம். ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந் துள்ளது. அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்.
கடவுளே!
என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். ஏனெனில் நீரே என் புகலிடம். என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும். நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்!
இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்!
வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே!
இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்!
நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே, *ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.* (வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி,
நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர்.
நன்றி தந்தையே!
இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே!
எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே,
*ஆமென்! †*
💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻
*🙏🏻இரவு மன்னிப்பு செபம்🙏🏻*
💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻
*🙏🏻உத்தமனஸ்தாப செபம்🙏🏻*
என் சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப் பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால் நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன்
*🙏🏻ஆமென்.🙏🏻*
🙏🏻✝️அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம்.
🙏🏻✝️எங்களை ஒரு குழுவாக குடும்பமாக நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக நன்றி கூறுகின்றோம்.
🙏🏻✝️பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும்.
🙏🏻✝️தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும்.
🙏🏻✝️பிறருடைய கடைமைகளிலே நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும்.
🙏🏻✝️எங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும் பிள்ளைகளிடமும் மனம்புண்படும்படியாக எதாவது செய்திருந்தால் எங்களை மன்னியும்
🙏🏻✝️தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும்.
🙏🏻✝️நாளை காலை மீண்டும் எழுந்து உம்மைப் போற்றிப் புகழவும் உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும்.
*🙏🏻ஆமென்🙏🏻*
🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙
*🙏🏻இரவு தூங்கும் முன் ஜெபம்🤲🏻*
🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙
என்னை நேசிக்கின்ற அன்புத் தகப்பனே!
நீர் கொடுத்த இந்த அருமையான நாளுக்காக நன்றி செலுத்துகின்றேன்!
உம்முடைய கிருபை இன்று முழுவதும் என்னோடு தங்கியிருந்து என்னை வழிநடத்தி, என்னைப் பாதுகாத்துக்கொண்டீரே ஐயா, உமக்கு நன்றி!
உம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், தயவினாலும் இந்த நாளை நான் கடந்து வர எனக்கு உதவி செய்தீரே உமக்கு நன்றி!
இதோ இந்த இரவு நேரத்தில் களைப்போடும், சோர்வோடும், நான் உறங்கச் செல்கின்ற வேளையில் நீரும், நீர் எனக்கு கொடுத்த பாதுகாவலரும், அன்னை மரியாளும், என் அருகில் இருந்து என்னை தேற்றுவீர்களாக!
உமது இரக்கம் இந்த நேரத்தில், இந்த இரவிலே, எனக்கு என் அருகிருந்து என்னை பாதுகாக்கட்டும்!
இரவில் வருகின்ற கனவுகளில் உமது தயவு எனக்கு இருக்கட்டும்!
காலையில் நான் விழிக்கின்றவரைக்கும் தகப்பனே, என்னோடு தங்கியிருக்க போவதற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்!
நன்றி இயேசுவே, நன்றி! ஆமென்!
உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் உறங்கினால் சுகமான உறக்கம் பெறுவது உறுதி!
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்!
நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்!
நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு!
வைகறையில் விழித்தெழுந்து, நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை, மானிடர் தம் கடவுளின் அன்பர், தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்!
*ஆமென்! †*
🌙🪐✨🌙✨🌙🪐✨🌙🪐✨
எல்லாம் வல்ல இறைவா, என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத்
திற்கும் விரோதமாயிருப்பதால் இவைகளை மனம் நொந்து வெறுக்கின்றேன். என் பாவங்களையெல்லாம் மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். இந்த இரவில் என்னைத் திடீர் மரணத்திலிருந்தும், தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும்.
மூவொரு இறைவா, என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். குறிப்பாக என் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் என்னை நிரப்பியருளும். என் இறுதி நேரத்தில் உம்மைச் சந்திக்க மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்து என் உயிர் பிரியவும், உம் நித்திய பேரின்பப் பாக்கியத்தில் என்னை ஏற்றுக் கொள்ளவும், கருணை புரிந்தருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்க பலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
🌝✨🌟🌝✨🌟🌝✨🌟🌝
🙏🏻 *மரியாயே எங்கள் நல்ல தாயாரே...🤲🏻இந்த ராத்திரியிலே சகல பாவங்களிலும் சடுதி மரணத்தினின்றும் எங்களை தற்காத்துக் கொள்ளும்.*🙏🏻
இயேசுவுக்கே புகழ்..!
இயேசுவுக்கே நன்றி..!
மரியே வாழ்க..!
தந்தை,மகன்,தூய ஆவியாரின் பெயராலே....
*ஆமேன்🙏🏻*
🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸
*தூங்குவதற்கு முன்னர், நான்கு திசைகளிலும் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டே சொல்லத்தகும் செபம்*
🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே...
ஆமேன்.
இயேசு மரி சூசையே வாழ்க.!
✠ இதோ ஆண்டவருடைய சிலுவை.
✠ சத்துருக்களே, ஓடி ஒளியுங்கள்.
✠ யூதா கோத்திரத்தின் சிங்கம்.
✠ தாவீதின் சந்ததி வெற்றி கொண்டது.
அல்லேலூயா.
ஆமென்.
✠ சிலுவை அடையாளம்.
✠ பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே!
*🙏🏻ஆமென் சேசு.🙏🏻*
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையின் வரலாறு, நவநாள் செபம் மற்றும் புகழ்மாலை.*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
*துன்ப முடிச்சிகளை அவிழ்க்கும் அன்னையிடம் ஜெபம்*
💖⚜️💖⚜️💖⚜️💖⚜️💖⚜️💖⚜️
கன்னிமரியே! அழகு அன்புத்தாயே! மன்றாடும் குழந்தையை/ ஒருபோதும் புறக்கணியாத அன்னையே! உமது திருஇதயத்திலிருந்து/ பெருக்கெடுத்து வழியும் அன்பினாலும்/ முடிவில்லாத இரக்கத்தினாலும்/ குழந்தைகள் எமக்காய் அயராது உழைக்கும்/ திருக்கரங்கள் கொண்ட திருவே/ உமது கருணைப் பார்வையை எம்மீது திருப்பி/ எனது வாழ்வைத் திணறவைக்கும் முடிச்சுக்களைக் கண்ணோக்கியருளும/ எனது துன்பம்/ வலி/ செயலிழக்கச் செய்யும் துன்பமுடிச்சுக்கள்/ அனைத்தையும் நீர் அறிவீர் / எங்கள் வாழ்க்கை நூலில் விழும் முடிச்சுக்களை அவிழ்க்க/ கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்றதாயே/ உமது திருக்கரங்களில் எனது வாழ்வை ஒப்படைக்கிறேன்/ உமது இரக்கப்பெருக்கை /ஒருபோதும் ஒருவரும் நிறுத்த முடியாதென்றும்/ உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சு/ உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகிறேன்/ வல்லமையின் தாயே/ ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் உமது பலத்தினால்/ என்னை வாட்டி வதைக்கும் இச்சிக்கலான துன்பமுடிச்சுகளை/
_*(அமைதியாக ஒரு நிமிடம் துன்ப முடிச்சுக்களை மனக்கண்முன் கொண்டுவரவும்)*_
உமது தூய திருக்கரங்களில் பெற்றுக்கொள்ளும்/ தந்தையாம் கடவுளின் உன்னத மகிமை வெளிப்படும்படி/ எனது துன்பமுடிச்சுக்களை/ இப்பொழுதும்/ என்றென்றைக்கும் அவிழ்த்துப்போடும்/ எனக்கு ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர் / எனது பலவீனத்தில் என் வலிமை நீர் / உம் திருமகன் இயேசுவிடமிருந்து/ என்னைப்பிரிக்கும் சக்திகளை அழிப்பவரும் நீரே அம்மா எனக்குப் பதில் தாரும்/ பாதுகாத்தருளும்/ வழிநடத்தும்/ காப்பாற்றும்/ ஏனெனில் நீரே என் உறுதியான அடைக்கலம்/ உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்.
*ஆமென்.*
எங்கள் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் பரிசுத்த அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
*ஆமென்🙏🏻*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
*துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையிடம் நவநாள் செபம்*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
*முன்னுரை:*
ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் 1182ல் Germany யில் உள்ள Augsburg நகரின் மத்தியில் 1182ல் கட்டப்பட்ட St. Peter am Perlach தேவாலயத்தில் தனிப்பட்ட மையச் சிறப்புத் தன்மையுடன் இவ்வன்னையின் படம் இருக்கிறது.
*இதில் சித்தரிக்கப்படும் காட்சியானது:*
நிலவு வளையத்தின் மேல் கன்னிமரியாள் நிற்பது போலவும், அவரது காலின் கீழ் பாம்பின் தலை மிதிக்கப்படுவதாகவும் அமைந்திருக்கின்றது.
பாம்பு வடிவில் இருக்கும் நெருக்கமான பல முடிச்சுக்களை உடைய கயிறு ஒன்றை அன்னைமரியாள் தனது கையில் வைத்திருக்கின்றார். வானதூதர் ஒருவர் சிக்கலான பல முடிச்சுக்களை உடைய கயிற்றை அன்னை மரியாளிடம் ஒப்படைக்க, அதை மரியாள் தனது பொறுமை, முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் அவிழ்த்து சிக்கல்கள் இல்லாத மென்மையான கயிறாக மற்றொரு வானதூதரிடம் கையளிக்கின்றார். முடிச்சுக்களின் மாதா அல்லது முடிச்சுக்களை அவிழ்ப்பவர் என்று ஓவியத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இப்படம் 1700ல் உருவாக்கப்பட்டது. வசதி படைத்த பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ieronymus Ambrosius Langenmantel இன் வேண்டுகோளுக்கிணங்க, St. Peter am Perlach தேவாலயத்தில் ஸ்தாபகம் செய்யப்பட்டுள்ள அன்னை மரியாளின் படமானது Joh ann Georg Sch midtner என்னும் பெயருடைய ஓவியரால் வரையப்பட்டது. பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த Langznmantel இன் தம்பதிகளுக்கிடையேயான சொந்தக் குடும்பப் பிரச்சனைகளை, மரியன்னை தீர்த்து வைத்தார். இந்த நம்பிக்கையின் காரணமாக, மரியன்னையின் படத்தை வரைய இம்மனிதர் பண உதவியைச் செய்தார்.
படத்தின் கீழே ஒரு வானதூதர், மனிதன் ஒருவரை மரியாளிடம் அழைத்துச் செல்வதைக் காண்கின்றோம் . நமது வாழ்க்கையில் உள்ள குழப்பங்கள், சிக்கல்கள் அனைத்தையும் நீக்கவும், நாங்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கும், இறைவனிடம் பரிந்து பேசுவதற்கு அன்னை மரியாளின் உதவியை நாடும்படியும் அவ்வானதூதர் நம்மை அழைத்துச் செல்கின்றார்.
இப்படத்தில் ஒரு வலுவான ஈர்ப்பும், அருட்சியும் உள்ளது. இங்கு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களும், பிறமதத்தைச் சேர்ந்த அனைத்து வயதுப் பிரிவினரும், மற்றும் அனைத்து சமூக அமைப்பினரும் தினமும் வந்து தங்கள் கவலைகளை முறையிடுகிறார்கள். 1985 இல் இத்தேவாலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வருகை தந்ததின் பின் இதன் பக்தி வழிபாடு, தென் அமெரிக்காவில் வெகுவேகமாகப் பரவி உள்ளது. இத்தேவாலயத்திலுள்ள மக்களின் வேண்டுதல்களை பிராத்தனை செய்யும்படி, குறிப்பிடும் பிராத்தனைப் புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளின்படி, அனைத்துக் கண்டங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் பக்தர்கள், வழிபாட்டாளர்கள் துன்பக்கட்டுக்களை அவிழ்க்கும் அன்னை மரியாவை நோக்கி வருவதைக் காட்டுகின்றது. மீண்டும் மீண்டும் இவ்வன்னையின் வழிகாட்டுதலும், அவர் முன் பிராத்தனை செய்யும் ஆசையும் சமீபத்தில் ஏராளமாக வெளிப்பட்டுள்ளது.
ஆகவே இதை நிறைவேற்றும் விதமாக துன்பக்கட்டுகளை அவிழ்க்கும் அன்னையின் நவநாள் செபம், இதே தேவாலயத்தின் பொறுப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து சமூகங்களும் இவ்வன்னையின் நவநாள் செபத்தை செபிப்பதன் மூலம், தங்கள் இறைநம்பிக்கையை அனைவரும் மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். அத்துடன் அன்னைமரியாளின் பரிந்துரையையும் நிறைவாகப் பெறமுடியும்.
*🌹செபம்🌹:*
பரிசுத்த கன்னிமரித்தாயே! நீர் கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து திறந்த மனதுடன் அதை ஏற்றுக் கொண்டீர். உமது வாழ்க்கைப் பாதை கஷ்டங்கள், பிரச்சனைகள், சோதனைகள் நிறைந்ததாய் இருந்தாலும், இறைவனில் நம்பிக்கை வைத்து புத்துணர்வுடன் இருந்தீர். ஆகவே துன்பமுடிச்சுக்களை அவிழ்க்கும் தாயே! எல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்காக பொறுமையுடனும், மகிழ்வுடனும் தங்களைத் தயார்படுத்தவும், பிள்ளைகளினதும் இளைஞர்களினதும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் அமையவும், எங்கள் குடும்பங்களின் சகல தேவைகளும் நிறைவேறவும் வேண்டும் என்று தாயே உம்மை மன்றாடுகிறோம்.
*(சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.)*
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
*ஆமென்.🙏🏻*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
*துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையின் மன்றாட்டு மாலை*
🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨🌹✨
ஆண்டவரே இரக்கமாயிரும்- 2
கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2
ஆண்டவரே இரக்கமாயிரும்-2
உலகத்தை படைத்த தந்தையே
இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட மகனே இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை நல்வழிபடுத்தும்
தூய ஆவியே இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
என்றும் ஒன்றித்து
வாழும் மூவொரு இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
இறைவனால் தோ்ந்து கொள்ளப்பட்ட எம்
துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*பெண்களுள் பேறுபெற்ற*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*கடவுளின் தாயே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*விண்ணக அரசியே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*அழகோவியமே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தூய ஆவியைப் புறா வடிவில் சிரமதில் பெற்ற*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*பன்னிரு விண்மீன்களை முடியென கொண்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தூய ஆவியைப் புறா வடிவில் சிரமதில் பெற்ற*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*பன்னிரு விண்மீன்களை முடியென கொண்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தூய்மையும்*
*கனிவும் கொண்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*சிளீத்த* *முகத்தோடு*
*பொலிவோடு இருக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*நிலவின் மேல் வீற்றிருக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*அலகையென்னும்*
*பாம்பினை* *நசுக்கிய*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தீமையை வென்ற*
*புதிய ஏவாளே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*வானதூதா்கள் புடை சூழ வீற்றிருக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*எலிசபெத்துக்கு உதவிய*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*காணவூாின்* *திருமண வீட்டாாின்*
*துயா்துடைத்த*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*அவா்சொல்வதெல்லாம்செய்யுங்கள*்
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*திருக்குடும்பத்தின்முகவொளியே*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*இயேசுவின் முதல் சீடரான*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*திருச்சபையின் துணை இரட்சகியான*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*திருச்சபையின்*
*தாயே*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*விடுதலை கீதம்*
*பாடிய*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*ஆகட்டும் என்று சொன்ன*:
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தாழ்ந்தோரை* *உயா்த்தசொன்ன*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*பசித்தோரை நலன்களால் நிரப்பச்சொன்ன*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*இறைவனிடம்*
*இடைவிடாமல்*
*பாிந்து பேசும்*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*திருமண வரம்தரும்*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*குழந்தை பாக்கியம் தரும்*
எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்தருளும்
*தாம்பத்திய வாழ்வின் குறை நீக்கும்*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*திருமண விவாகரத்தை முறியடிக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*குடும்ப உறவை நிறைவாக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*வியாபாரம்,தொழிலில்வரும் தடைகளைத் தகா்க்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*கண்ணீரோடு வருவோாின்* *துயா்*
*துடைக்கும்*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*மனபாரத்தோடு*
*வருவோா்க்கு* *மகிழ்வினை தரும்*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*உடல்* *நோய்களைத்*
*தீா்க்கும்*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*பில்லி சூனியம்,மந்திர*
*கட்டுகளை உடைக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*உல்வ்காங் சோஃபி*
*தம்பதியரை இணைத்த*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*தந்தை எரனிமாஸ்*
*என்பவரால் உருவாக்கப்பட்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*யோகன் ஸ்மித்னாா்* *என்பவாரால் தீட்டப்பட்ட ஒவியமே*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*பவோியப் புனித பேதுருஆலயத்தில்வீற்றிருக்கும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*போா்களினாலும்,விபத்தினாலும் அழியாத ஒவியமான*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*பல்வேறு சமயத்தவா்க்கும்*
*அடைக்கலமான*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*அலகு அன்பு தாயே*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*மன்றாடுவோ ரைப்*
*புறக்கணியாத*
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*எமக்கு அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*கருணைப் பாா்வையை எம்மீது திருப்பும்*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்ட*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*பலவீனத்தில் வலிமையான*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*துன்ப முடிச்சுகள் அனைத்தும் அறிந்த*:
எம் துன்ப முடிச்சுக்களை
அவிழ்த்தருளும்
*இந்திய மண்ணில்*
*முதன் முதலாய் தாழம்பூாில் ஆலயம் கொண்ட*:
எந்நேரமும் எங்களுக்காக வேண்டாக் கொள்ளும்:
எங்களுக்காக எப்போதும் காத்திருக்கும்:
எம்மோடு வாழ்ந்து வரும்:
*🌹மாியே வாழ்க- 3🌹*
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்









![✝️இயேசுவே ஜீவன் - Henry His Holiness Rev DSouza POPE LEO XIV Bishop of Bellary Hearty welcome Mount Calvary Shrine TB dam, Hospet Vijaynagar Inauguration & Dedication Sunday Feb I5th 2026 at IOAM on Hosapete at T B Dam] PLEASE COME Henry His Holiness Rev DSouza POPE LEO XIV Bishop of Bellary Hearty welcome Mount Calvary Shrine TB dam, Hospet Vijaynagar Inauguration & Dedication Sunday Feb I5th 2026 at IOAM on Hosapete at T B Dam] PLEASE COME - ShareChat ✝️இயேசுவே ஜீவன் - Henry His Holiness Rev DSouza POPE LEO XIV Bishop of Bellary Hearty welcome Mount Calvary Shrine TB dam, Hospet Vijaynagar Inauguration & Dedication Sunday Feb I5th 2026 at IOAM on Hosapete at T B Dam] PLEASE COME Henry His Holiness Rev DSouza POPE LEO XIV Bishop of Bellary Hearty welcome Mount Calvary Shrine TB dam, Hospet Vijaynagar Inauguration & Dedication Sunday Feb I5th 2026 at IOAM on Hosapete at T B Dam] PLEASE COME - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_568804_14f17578_1770216564179_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=179_sc.jpg)


