S.ANTHONY✝️YESUMARY
ShareChat
click to see wallet page
@anthonymundiyampakkam
anthonymundiyampakkam
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*👑குழந்தை இயேசு பக்தி முயற்சி..* அன்பின் இறை மக்களே! இறை இயேசுவின் பிறப்பு விழாவினை ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டு, நம்மையே நாம் தயாரித்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக 1000 மங்கள வார்த்தை செபிக்கக்கூடிய, நவநாள் ஒன்றை உங்களோடு பகிர்கின்றோம். இந்த நவநாள் செபத்தில் ஒரு தொடக்க செபமும், 4 சிறு செபங்களும் இணைந்திருக்கும். இந்த நவநாளானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 25 வரை தினமும் குழுவில் பகிரப்படும். இதனை முழுமையாக தினசரி செபித்து முடிக்கும்போது, 1000 மங்கள வார்த்தைகளை நீங்கள் செபித்திருப்பீர்கள். இந்த 1000 மங்கள வார்த்தை இறுதி நவநாளானது, குடிலின் முன்பு 25ம் தேதி செபிப்பதோடு நிறைவுபெறும். 1000 மங்கள வார்த்தைகளை, பாலன் இயேசுவுக்கு காணிக்கையாக்க, தினமும் செபிப்போம்.. மாலையாகத் தொடுப்போம். நன்றி. பாலன் இயேசுவின் அருள் என்றும் நம்மோடு! 🕯️🎄🕯️🎁🕯️🎄🕯️ முதல் பெற்றோர் வழியாக பிறந்த எல்லாரிலும், திவ்விய குமாரனுக்குத் தாயாராயிருக்கத் தெரிந்துக்கொள்ளப்பட்ட மாதாவே, அதற்கு வேண்டிய எல்லா வரங்களையும் நிறைவாய் அடைந்த மாதாவே, அடைந்த வரங்களை கொண்டு செய்த மேலான புண்ணியங்களால் திருசுதனை கருதரித்த மாதாவே, உம்முடைய திருக்குமாரன் பிறக்கப்போகிற நாள் நெருங்கி வருகிறதென்று நீர் அறிந்திருந்தீர், அவரை பார்க்கவும், பணி புரியவும் விரும்பினீர். உமக்கிருந்த இந்த ஆவலைப் பார்த்து, எனக்கும் இந்தத் திருநாளில் அத்தகைய ஆவல் வளர வேண்டும். அவரை பார்த்து அவருக்கு பணிபுரிய, நீர் உம்மைத் தகுதியாக்கிக்கொள்ளச் செய்த தயாரிப்பை தியானித்து, நானும் அவருக்குத் தகுந்த பணிவிடை செய்ய, என்னையும் தயாரிக்க வேண்டும். நீர் செய்த தயாரிப்பினால், உமது பேரில் திவ்விய இயேசு பாலன் அடைந்த மகிழ்ச்சி ஒருபோதும் என் பேரில் அவருக்கு வரமுடியாது, இருப்பினும் நான், இந்த திருநாளைக் கொண்டாடுகிறதில் உம்முடைய திருக்குமாரனுக்கு என் பேரில் மகிழ்ச்சி வரச் செய்ய வேண்டும். இந்த 3 காரணங்களை குறித்து நான் செய்ய போகிற ஜெபத்தை, உம்முடைய திருப்பாதத்தில் அணிந்து, என்னுடைய கருத்து வீணாகாதபடிக்கு, நீர் எம் மன்றாட்டைக் கேட்டருள உம்மை வேண்டுகிறேன் சுவாமி. *- ஆமென்* 1. பரிசுத்த மாதாவே, நீர் திவ்விய குமாரனுக்கு மாதாவாகக் குறிக்கப்பட்ட நேரம், ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம். _[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_ 2. பரிசுத்த மாதாவே , நீர் திவ்விய குமாரனைப் பெற்ற மணித்துளி, ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம். _[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_ 3. பரிசுத்த மாதாவே, நீர் முதல் முறை உம்முடைய திருக்குமாரனைக் கட்டி அனைத்து முத்தமிட்ட மணித்துளி, ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம். _[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_ 4. பரிசுத்த மாதாவே, நீர் உம்முடைய திருக்குமாரனுக்கு முதல் முறை அமுதூட்டிய மணித்துளி, ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம். _[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_ *நிறைவு செபம்:* _அன்பின் இறைவா! இந்த நாளிலே எம்மை நன்முறையில் தயாரிக்க, இந்த நவநாளை செபிக்க அருள் புரிந்ததற்காக நன்றி. உம்மை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஆண்டவரே! விரைந்து வாரும்!_ _*- ஆமென்.*_ #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
கால சிந்தனைகள் - 6* திருவருகைக் காலத்தின் இரண்டு தலையாய நம் கடமைகளைப் பார்த்தோம். 1. நம்மைத்தாமே பரிசுத்தப்படுத்துதல். 2. இயேசு நம் இதயத்தில் பிறக்க ஆசைப்படுதல் இந்த நோக்கங்களை நடைமுறைப்படுத்த நான்கு வாரங்களிலும் திருவழிப்பாட்டு நிகழ்ச்சிகளில் கையாளப்படும் தேவ வாக்கியங்கள் பழைய ஏற்பாட்டில் தெறிந்து கொள்ளப்பட்ட மக்களின் மன நிலையை நம்மிடத்திலும் பிறப்பிக்கின்றன. ஜெபங்கள், ஆரம்ப வாக்கியங்கள், பாட்டுக்கள், சங்கீதங்கள் இவையாவும், மனிதனின் வீழ்ச்சி, இரட்சகர் வருமுன் அவன் அனுபவித்த துன்பங்கள் முதலியவற்றின் எதிரொலி போல இருக்கின்றன. “ எழுந்தருளி வாரும். தாமதஞ்செய்யாதேயும் “ போன்ற கூக்குரல் பலிபூசையில் அடிக்கடி ஒலிக்கின்றன. “ வானங்களே மேல்நின்று பனியை பெய்யுங்கள். மேகங்கள் நீதிமானை வருவிக்கக் கடவன. பூமி திறந்து இரட்சகரைப் பிறப்பிக்கக்கடவது “ என்ற இஸ்ராயேல் மக்களைப்போல நாமும் இரட்சகருக்காக ஏங்கி எதிர்பார்க்கச் செய்கின்றது. “ ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள் ; அவர்தம் பாதைகளைச் செம்மைப் படுத்துங்கள் ; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படுக, மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படுக, கோணலானவை நேராகவும், கரடுமுரடானவை சமமான வழிகளாகவும் ஆக்கப்படுக, மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர் “ (லூக்.3:4-6) ஆண்டவருடைய வருகை : பிதாவின் மடியில் வீற்றிருந்த தேவ வார்த்தையானவர் மனுக்குலத்தின் பாவத்தைப் போக்க எளிய மனித அவதாரமெடுத்து பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது முதல் வருகை. “ ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான் ; என் தந்தையும் அவன் மேல் அன்பு கூர்வார் ; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம் “ ( அரு 14 : 23) என்று நமதாண்டவரே கூறியுள்ளது போல, அவர் நம் ஆத்துமத்தை தேவ இஷ்ட்டப்பிரசாத்தால் தம் வசமாக்கி நம் உள்ளத்தில் ஞான விதமாய் சினேகத்தினால் எழுந்தருளி வந்து நம்மோடு வாழ்வது நமக்கென உள்ள அவரது வருகையாகும். இரட்சகரின் இரக்கமுள்ள இந்த வருகைக்கு ஆயத்தமாக நாம் நம் பாவ நிலையை நினைத்து வருந்தி இப்போது அவரது வருகையை ஆவலுடனும், நம்பிக்கையுடனும் எதிர்நோக்கி காத்திருந்தால் இயேசு பிறந்த நாளன்று அவர் நம் உள்ளத்தில் பிறந்து தம் வரப்பிரசாதத்தினால் நம்மை நிரப்புவார். இவ்வாறு நாம், “ மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் உலகத்தை நடுத்தீர்க்க வரும் “ அவரது இரண்டாவது வருகைக்கும் ஆயத்தமாக இருக்கலாம். இந்த ஆகமன காலத்திலே திருச்சபை நம்மை இருவகை வருகைக்குமே ஆயத்தமாயிருக்க நம்மை அழைக்கின்றது. நன்றி : மாதா பரிகார மலர். சிந்தனை : ஆகவே நம்மிடமுள்ள பாவத்தை அடையாளம் கண்டு அதைப் பாவம் என ஏற்றுக்கொண்டு அதைவிட்டு விடுவதே சாலவும் நன்று. அப்போது நாம் இயேசுவை நோக்கி முன்னேறுகிறோம் என்று அர்த்தம். ஆன்ம மாற்றம் இல்லாமல் நான் அடையாளமாகத்தான் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம் என்று சொன்னால் அது ஒரு அர்த்தமற்ற விழாவாகத்தான் இருக்கும். அது மனம் வீசும் மலருக்கும், காகித மலருக்கும் உள்ள வித்தியாசமே. “ குளிரும் பனியும் கொட்டிலிலே, கோ மகனோ தொட்டிலிலே ஆரீரோ ஆராரோ ஆரிராரோ “ இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க ! #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
01:01
*கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் -09* 🎄🎅🎄🎅🎄🎅🎄🎅 “ இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் “ - லூக்காஸ் 1: 38 இந்த வார்த்தையை மீண்டும், மீண்டும் வாசிக்கும்போது அன்னையின் மான்பு விளங்கும். இந்த வார்த்தைகளால் இறைவனையே கட்டிபோட்டுவிட்டாள். நான் ஆண்டருடைய பிள்ளை என்று கூட சொல்லவில்லை. நான் ஆண்டவருடைய அடிமை என்கிறாள். சற்று முன் தான் வானதூதர் “ அருள் நிறைந்த மரியே என்றும் ஆண்டவருக்கே தாயாக போகிறீர் என்று கேட்டும் கூட “ இதோ ஆண்டவருடைய அடிமை “ என்று தன்னையே தாழ்த்துவதுமட்டுல்ல.. ஆண்டவருடைய திட்டத்துக்குக்காக என்னை அடிமை போல் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் என்னையே கடவுளின் திட்டத்துக்காக அர்ப்பணித்துவிட்டேன். என்னை ஒரு கருவி போல கடவுள் பயன்படுத்திக் கொள்ளலாம்.. “ என்னை உமது கருவியாய் மாற்றிடு தேவா. உமது ஆவி ஆற்றலோடு நடத்திடு தேவா “ என்ற பாடல் போல்.. இப்போது ஆண்டவர் இயேசுவும் தன்னையே அர்ப்பனித்தது நினைவுக்கு வருகிறது. “ தந்தையே ! உமக்கு விருப்பமானால் இத் துன்பக்கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும் ஆயினும் என் விருப்பம் அன்று உம் விருப்பமே நிறைவேறட்டும் “ - லூக்காஸ் 22: 44 என் பிள்ளைகளுக்காக, என் மக்களுக்காக அவர்கள் பாவங்களுக்காக என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வதைத்து, என்னை உடைத்து அவர்களிக்காக பலியாகிறேன். என் ரத்தத்தை சிந்துகிறேன் உயிரையும் தருகிறேன். ஆனால் எனது ஜனம் பாவத்திலிருந்து மீட்பு பெறவேண்டும். மீண்டும் பாவத்தில் விழக்கூடாது. கடவுளின் திட்டத்திற்காக தன்னையே அடிமையாகத்தரும் அன்னையும், கடவுளின் திட்டத்திற்காக தன்னை வதைப்போரிடம் கையளிக்கும் அவள் மகன் ஆண்டவராகிய இயேசுவும் நமக்கு எவ்வளவு பெறிய உதாரணங்கள். “ அடப்போங்கய்யா.. என்னைப் பற்றி சிந்திக்கவே எனக்கு நேரமில்லை. இதில் கடவுளைப் பற்றி சிந்திக்க வேண்டும் அதிலும் கடவுளின் திட்டத்தை பற்றி சிந்திக்க வேண்டும். நான் என்ன புனிதனா ? இல்லை. நீங்கள் மனிதன். புனிதராகும் தூரம் கூட தொலைவில் இல்லை. அது இருக்கட்டும். கடவுளின் திட்டத்தை எப்படி அறிந்து கொள்வது ரொம்ம சுலபம். மனது கடினமாக இருக்க கூடாது. எளிதாக இருக்ககூடாது. மனது வெயிட்டா இருக்க கூடாது லைட்டா இருக்கனும். மனசு லேசா இருக்க மனதில் உள்ள பாவங்கள் அகல வேண்டும். சொந்த விருப்பங்கள் குறைந்து கடவுளின் விருப்பங்கள் என்ன என்ற ஆர்வம் வரவேண்டும். மெல்ல ஆண்டவரிடம் பேச வேண்டும். பேசிக்கொண்டே இருக்க வேண்டும். நம்மை ஆண்டவர் முன் தாழ்த்த வேண்டும். மீண்டும் மீண்டும் அவரிடம் தொடந்து பேசி " எங்கிட்ட உங்களுக்கு எது பிடிக்கவில்லை. எது புடிச்சிருக்கு. உங்களுக்கு புடிச்ச விசயங்களை நான் செய்ய எது எனக்கு தடையாய் இருக்கிறது? ஜெபம் : அன்பான இயேசுவே ! கடவுளின் திட்டத்திற்காக தன்னையே அடிமையாக கையளித்த உம் தாயின் முன் மாதிரியையும், கடவுளின் திட்டத்திற்காக தன் இன்னுடலை கையளித்த உம்முடைய முன்மாதிரியையும் பின் பற்றி எங்களை நாங்கள் தூய்மைபடுத்தி “ என்னில் உம்முடைய திட்டம் என்ன “ என்ற ரகசியத்தை அறிந்து கொள்ளவும், குறைந்த பட்சம் பாவமில்லாமல் வாழவும், எனக்காகவும், பிறருக்காகவும் ஜெபிக்கவும், உம் பிறப்பு விழாவிற்கு என்னையே தயாரிக்கவும் வரம் தாரும். ஆமென். *🕯️வாரும் ஆண்டவரே வாரும்🕯️* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
*உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கான ஜெபம்..!!* ⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺 பலர் இந்த ஜெப பக்தி முயற்சியை அறிந்து இருக்கலாம். அறியாது இருப்பவர்களுக்கு இந்த பதிவு. உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக நாம் ஜெபிப்பது நம் இறைவனாம் ஆண்டவருக்கு மிக பிடித்தமான ஒன்று. நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் பொழுது நம் ஜெபத்தின் பலனாக விண்ணகம் செல்லும் ஆன்மாக்கள் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்கள் என்று நாம் அறிவோம். உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க சிறந்த நேரம் பகல் 3.00 மணி. இந்த பகல் 3.00 மணி மாபெரும் இரக்கத்தின் நேரம், இந்த நேரத்தில் நாம் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் போது நம் ஜெபத்திற்கு சிறப்பான பலன் கண்டிப்பாக உண்டு என்று *"புனித பாஸ்டினா அம்மாளுக்கு"* நமது இரக்கத்தின் ஆண்டவர் கூறி உள்ளார். (கீழ் கண்ட ஜெபத்தை, நாம் ஒவ்வெரு முறை ஜெபிக்கும் போதும் உத்தரிக்கும் நிலையில் உள்ள 1000 ஆன்மாக்கள் விண்ணகம் செல்லும் என்று நமது ஆண்டவர் *"புனித ஜெர்த்ரூத் அம்மாளுக்கு"* வெளிப்படுத்தி உள்ளார்.) *🙏🏻ஜெபம்..!!🙏🏻* ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ *"என்றும் வாழும் தந்தாய்! உமது தெய்வ மகனாகிய இயேசுவின் விலைமதிப்பற்ற திரு இரத்தத்தை இன்று உலகெங்கிலும் செலுத்தப்படும் திருப்பலிகளோடு ஒன்றித்து உத்தரிக்கும் ஆன்மாக்கள் அனைவருக்காகவும், உலகெங்குமுள்ள பாவிகளுக்காகவும், அகில திருச்சபையிலுள்ள பாவிகளுக்காகவும், எனது இல்லத்திலும் குடும்பத்திலுமுள்ள பாவிகளுக்காகவும் உமக்கு அர்பணிக்கிறேன்."* 3.00 மணிக்கு ஜெபிக்க தவறினால், நமக்கு நேரம் கிடைக்கும் போது இந்த ஜெபத்தை ஜெபிக்கலாம் பலன் உண்டு. *நாம் இந்த சிறு ஜெபத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இந்த ஜெப பக்தி முயற்சியை பற்றி அறியாத கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு நாம் இந்த ஜெபபக்தி முயற்சியை பற்றி தெரியப்படுத்தலாம்.* நன்றி.🙏 ⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️ *சகல ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ளும் செபம்* ⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️🩸⚜️ ஆண்டவரே அளவில்லா வேதனையில் உம்மை நோக்கி கூவிஅழைக்கின்றேன். ஆண்டவரே என் கூக்குரலுக்கு செவிசாய்த்தருளும். என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும். ஆண்டவரே! யான் செய்த பாவங்களை நினைவுகூர்வீராகில் உமக்கு முன் யார் நிற்க முடியும்? வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கின்றிர். ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்; அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது. என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது; இரவின் காவலர் உதயத்தை எதிர் நோக்குவதைவிட, அதிக ஆர்வமுடன் எதிர்நோக்குகிறது. காவலர் உதயத்தை எதிர்பார்ப்பதற்கு மேலாக, இஸ்ராயலர் ஆண்டவரை எதிர் பார்ப்பார்களாக் ஏனனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது; அவருடைய மீட்புத் துனை பொங்கி வழிகின்றது. இஸ்ராயேலரை அவர் மீட்பார்; அவர்கள் செய்த பாவங்களை; அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக்கொள்வார். *🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே. *🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக. *🙏🏻செபிப்போமாக:🙏🏻* ⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️ சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா! மரித்த உமது அடியோகளுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாடுக்களை அங்கரித்து, அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்பிக் காத்திருக்கிற பாவப் பொறுத்தலை கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்ளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் -ஆமென்.🙏🏻 *🌹முதல்:* நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் அளித்தருளும் ஆண்டவரே. *🌻துணை:* முடிவில்லாத ஒளி அவர்கள் மீது ஒளிர்வதாக. *🌹முதல்:* அவர்கள் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவார்களாக. *🌻துணை:* ஆமென். 🌸🕊️🌸🕊️🌸🕊️🌸🕊️🌸🕊️🌸 #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
அன்னை நவநாள்* *நாள் 7: பிறைநிலா – இருளின்மேல் வெற்றி* சிந்தனை: மரியா கருப்புப் பிறைநிலாவின்மேல் நிற்கின்றார். இது தீமையின் மேலும், இருளும் பலியும் தொடர்புடைய, அஸ்தேக் சந்திரக் கடவுளின் மேலுமான வெற்றியைக் குறிக்கிறது. திருவெளிப்பாடு 12:1-ஐ நினைவுறுத்துகிறது: "வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்”. இது திருச்சபையின் வெற்றியையும், மாசற்ற மரியாவின் தூய்மையையும் காட்டுகிறது. குவாதலூப்பே மாதாவே, இருளை வென்ற அன்னையே, எங்களை உமது ஒளியில் நடத்தியருள்வீராக! செபம்: குவாதலூப்பே அன்னை மரியாயே, பிறை நிலாவின் மேல் உறுதியாய் நின்று, பயமும் சந்தேகமுமாகிய நிழல்களை முற்றிலும் மறைத்தருள்கின்றீர். வேதனையின் பாம்புகளை உமது பாதங்களால் நசுக்கியருளும், பழங்காலத் தரிசனங்களில் செய்ததுபோல. இருளினின்று என்னை விடுவித்து, உமது திருமகனின் என்றுமுள்ள ஒளிக்கு வழிநடத்தியருளும். ஆமென். தூய குவாதலூப்பே மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
00:16
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
00:25
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
00:50
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
00:39