S.ANTHONY✝️YESUMARY
ShareChat
click to see wallet page
@anthonymundiyampakkam
anthonymundiyampakkam
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - 12029026 Catholic YouTube) PRAISG TIGLORD விவிலியம் அறிவோம் சிமிசோனீ சோரேகிகுபி பளீளத்தாக்கிலி காதலித்த பெணீணினீபௌரீஎனீனி தெலீலா நீதித்தலைவர்கள் 1634 12029026 Catholic YouTube) PRAISG TIGLORD விவிலியம் அறிவோம் சிமிசோனீ சோரேகிகுபி பளீளத்தாக்கிலி காதலித்த பெணீணினீபௌரீஎனீனி தெலீலா நீதித்தலைவர்கள் 1634 - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - 1202.2026 Catholic Yufube PRAISG TIG LORD திருச்சபை அறிவோம் 12 ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்று புகழப்பட்டவர் யார் ? Lihalid Caolic புனிதபிரானீசிஸீ அசிசியார் Catholic 1202.2026 Catholic Yufube PRAISG TIG LORD திருச்சபை அறிவோம் 12 ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்று புகழப்பட்டவர் யார் ? Lihalid Caolic புனிதபிரானீசிஸீ அசிசியார் Catholic - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - Latloli@ whoever [indsme findslite and obfains tovontrom fhelord Proverbs 8:35 Youlube TAMIL CATHOLIC TV Latloli@ whoever [indsme findslite and obfains tovontrom fhelord Proverbs 8:35 Youlube TAMIL CATHOLIC TV - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - catholic எனீனைதிதேடி அடைவோர்வாழீவடைவரீ ஆணிீடவரினீ கருணைஅவர்களக்குகி கிடைகிகும்  நீதிமொழிகள் 8:35 Catholic loulube TAMIL CATHOLIC TV catholic எனீனைதிதேடி அடைவோர்வாழீவடைவரீ ஆணிீடவரினீ கருணைஅவர்களக்குகி கிடைகிகும்  நீதிமொழிகள் 8:35 Catholic loulube TAMIL CATHOLIC TV - ShareChat
Prayer✝️🙏🏻* Heavenly Father, as this Wednesday draws to a close, we thank You for Your presence in every moment of this day. Forgive us for our faults and failures, and cleanse our hearts with Your mercy. Grant us peace this evening, calm our thoughts, and renew our strength. Lord Jesus, be our rest and our refuge. Holy Spirit, watch over us through the night and protect our loved ones. Into Your hands, O Lord, we entrust our lives and our rest. Amen. 🌙🙏 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - Ave Maria ! Ave Maria ! - ShareChat
நேர ✝️ஜெபங்கள்🕯️* 🌝🌟✨🌝🌟✨🌝🌟✨🌝🌟✨ (குறிப்பு : இந்த 5 ஜெபங்களும் மிகவும் வல்லமையானவை தினமும் இரவு தூங்க செல்லும் முன் ஜெபிப்போம். இறைவனின் அருளாசீரையும், அன்னையின் அருட்காவலையும் பெறுவோம்.) 🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙          *🙏🏻† இரவு ஜெபம் †🙏🏻* 🌙🪐✨🌙🪐✨🌙🪐✨🌙 எல்லாம் வல்ல இறைவா! இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைகளுக்கும் விரோதமாயிருப்பதால், மனம் நொந்து வருந்துகிறேன். எங்களை  மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும். நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம். நாள்தோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும், இருப்பீராக! நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் எங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லவற்றையே சொல்லவும், செய்யவும், எங்களை உறுதிப்படுத்துவார்களாக! இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். என்னை இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால்  நிரப்பியருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக்கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும். *🙏🏻ஆமென்! †🙏🏻* 🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸 *† இரவு நன்றி ஜெபம் †* 🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸🙏🏻🌻🙏🏻🌸 🧎‍♂️🧎‍♀️ எங்கள் அன்பின் பரலோக பிதாவே! உம்மை போற்றுகிறேன். ஆராதிக்கிறேன். நன்றி செலுத்துகிறேன். இன்று முழுவதும் என்னோடு இருந்து என்னைக் காத்து நடத்தியமைக்காக நன்றி! எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றியருளும். உலகெங்கும் பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டு கிறோம். ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந் துள்ளது. அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும். கடவுளே! என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். ஏனெனில் நீரே என் புகலிடம். என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும். நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்! இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்! வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே! இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்! நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே, *ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.* (வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி, நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர். நன்றி தந்தையே! இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே! எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே, *ஆமென்! †* 💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻 *🙏🏻இரவு மன்னிப்பு செபம்🙏🏻* 💕🌻💕🌻💕🌻💕🌻💕🌻 *🙏🏻உத்தமனஸ்தாப செபம்🙏🏻* என் சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப் பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால் நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன் *🙏🏻ஆமென்.🙏🏻* 🙏🏻✝️அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம். 🙏🏻✝️எங்களை ஒரு குழுவாக குடும்பமாக நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக நன்றி கூறுகின்றோம். 🙏🏻✝️பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும். 🙏🏻✝️தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும். 🙏🏻✝️பிறருடைய கடைமைகளிலே நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும். 🙏🏻✝️எங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும் பிள்ளைகளிடமும் மனம்புண்படும்படியாக எதாவது செய்திருந்தால் எங்களை மன்னியும் 🙏🏻✝️தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும். 🙏🏻✝️நாளை காலை மீண்டும் எழுந்து உம்மைப் போற்றிப் புகழவும் உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும். *🙏🏻ஆமென்🙏🏻* 🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙 *🙏🏻இரவு தூங்கும் முன் ஜெபம்🤲🏻* 🌙🌟✨🌙🌟✨🌙🌟✨🌙 என்னை நேசிக்கின்ற அன்புத் தகப்பனே! நீர் கொடுத்த இந்த அருமையான நாளுக்காக நன்றி செலுத்துகின்றேன்! உம்முடைய கிருபை இன்று முழுவதும் என்னோடு தங்கியிருந்து என்னை வழிநடத்தி, என்னைப் பாதுகாத்துக்கொண்டீரே ஐயா, உமக்கு நன்றி! உம்முடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும், தயவினாலும் இந்த நாளை நான் கடந்து வர எனக்கு உதவி செய்தீரே உமக்கு நன்றி! இதோ இந்த இரவு நேரத்தில் களைப்போடும், சோர்வோடும், நான் உறங்கச் செல்கின்ற வேளையில் நீரும், நீர் எனக்கு கொடுத்த பாதுகாவலரும், அன்னை மரியாளும், என் அருகில் இருந்து என்னை தேற்றுவீர்களாக! உமது இரக்கம் இந்த நேரத்தில், இந்த இரவிலே, எனக்கு என் அருகிருந்து என்னை பாதுகாக்கட்டும்! இரவில் வருகின்ற கனவுகளில் உமது தயவு எனக்கு இருக்கட்டும்! காலையில் நான் விழிக்கின்றவரைக்கும் தகப்பனே, என்னோடு தங்கியிருக்க போவதற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்! நன்றி இயேசுவே, நன்றி! ஆமென்! உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் உறங்கினால் சுகமான உறக்கம் பெறுவது உறுதி! இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்! நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்! நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு! வைகறையில் விழித்தெழுந்து, நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை, மானிடர் தம் கடவுளின் அன்பர், தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்! *ஆமென்! †* 🌙🪐✨🌙✨🌙🪐✨🌙🪐✨ எல்லாம் வல்ல இறைவா, என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத் திற்கும் விரோதமாயிருப்பதால் இவைகளை மனம் நொந்து வெறுக்கின்றேன். என் பாவங்களையெல்லாம் மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். இந்த இரவில் என்னைத் திடீர் மரணத்திலிருந்தும், தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். மூவொரு இறைவா, என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். குறிப்பாக என் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் என்னை நிரப்பியருளும். என் இறுதி நேரத்தில் உம்மைச் சந்திக்க மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்து என் உயிர் பிரியவும், உம் நித்திய பேரின்பப் பாக்கியத்தில் என்னை ஏற்றுக் கொள்ளவும், கருணை புரிந்தருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்க பலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும். 🌝✨🌟🌝✨🌟🌝✨🌟🌝 🙏🏻 *மரியாயே எங்கள் நல்ல தாயாரே...🤲🏻இந்த ராத்திரியிலே சகல பாவங்களிலும் சடுதி மரணத்தினின்றும் எங்களை தற்காத்துக் கொள்ளும்.*🙏🏻 இயேசுவுக்கே புகழ்..! இயேசுவுக்கே நன்றி..! மரியே வாழ்க..! தந்தை,மகன்,தூய ஆவியாரின் பெயராலே.... *ஆமேன்🙏🏻* 🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 *தூங்குவதற்கு முன்னர், நான்கு திசைகளிலும் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டே சொல்லத்தகும் செபம்* 🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே... ஆமேன். இயேசு மரி சூசையே வாழ்க.! ✠ இதோ ஆண்டவருடைய சிலுவை. ✠ சத்துருக்களே, ஓடி ஒளியுங்கள். ✠ யூதா கோத்திரத்தின் சிங்கம். ✠ தாவீதின் சந்ததி வெற்றி கொண்டது. அல்லேலூயா. ஆமென். ✠ சிலுவை அடையாளம். ✠ பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே! *🙏🏻ஆமென் சேசு.🙏🏻*            #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - மரியே வாழ்க ! மரியே வாழ்க ! - ShareChat
*சதா சகாய மாதா நவநாள் ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை* 🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺 சதா சகாய மாதாவே, உம்மிடத்தில் சரணடைந்து நம்பிக்கையுடன் உமது பாதத்தண்டையிலிருக்கும் நீசப் பாவியான என்னை உற்று நோக்கியருளும். இரக்கத்தின் மாதாவே! என் பேரில் இரக்கமாயிரும். பாவிகளின் அடைக்கலமும் நம்பிக்கையுமென எல்லோராலும் அழைக் கப்படுகிற நீரே என் அடைக்கலமும் நம்பிக்கையுமாயிரும். சேசுவின் நேசத்துக்காக எனக்கு சகாயம் புரிந்தருளும். சதாகாலமும் உமது பிள்ளையாகப் பாராட்டி உமக்குக் கையளிக்கும் இந்த நீசப் பாவியாகிய என்னிடம் உமது கரங் களை நீட்டியருளும். உம்மிலே நம்பிக்கை வைப் பதுதான் நித்திய ஈடேற்றத்தின் பிணை என்று நான் எண்ணுகிறேன். நான் உம்மில் வைக்கும் இந்த நம்பிக்கையைச் சர்வேசுரன் தமது இரக்கத் தால் எனக்குத் தந்ததற்காக நான் அவரை வாழ்த் தித் துதிக்கிறேன். உம்மிடம் என்னை கையளிக் காததால் இவ்வளவு காலமும் நான் அநேக தடவை களில் நீசத்தனமாய்ப் பாவச் சோதனைகளில் விழுந்திருக்கிறேன். ஆனால் உமது உதவியால் நான் வெற்றியடைவேனென்று எனக்குத் தெரியும். என்னை உமக்கு நான் கையளித்தால், நீர் எனக்கு உதவி செய்வீர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் பாவத்தில் விழப் போகும் தறுவாயில் உமது உதவியைக் கேளாமல் விட்டு விடுவேனோ என்றும், அதனால் என் ஆத்துமத்தை இழந்து போக நேரிடுமோ என்றும் அஞ்சுகிறேன். ஆகையால் இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்குப் பெற்றுத்தரும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். பசாசு என்னுடன் போர் புரியும் போது நான் உம்மிடம் சரணடையவும், “ஓ மரியாயே, எனக்கு உதவி செய்யும். சதா சகாய மாதாவே, எனது ஆத்துமத்தை நான் இழந்து போக விடாதேயும்” என்று உம்மை நோக்கி வேண்டிக்கொள்ள கிருபை புரிந்தருளும். ஆமென். (அருள் நிறை மந்திரம் 9 முறை) பரிசுத்த மரியாயே, கஸ்திப்படுகிறவர்களுக்கு உமது சகாயம் தந்தருளும். மனத்திடம் இல்லாத வர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை மகிழச் செய்தருளும். மனுக்குலத்துக்காக மன்றாடி யருளும். குருக்கள், ஆயர்களுக்காகப் பரிந்து பேசி யருளும். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்த சந்நியாசிகள் கன்னியர்களுக்காகவும் மனுப் பேசியருளும். உமது சதா சகாயத்தை வேண்டு வோர் உமது உதவியை உணரச் செய்தருளும். ஓ மாதாவே! நீர் எங்களுக்கு அடைக்கல மாயிருக்கிறீர். குறைகளிலும், துன்பங்களிலும் உதவி யாகவும் இருக்கிறீர். *🌺பிரார்த்திக்கக்கடவோம்🌺* ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே! உமது மாதாவாகிய கன்னிமரியாயை எப்பொழுதும் உதவி செய்யத் தயாராயிருக்கும் தாயாக எங்க ளுக்குத் தந்தருளச் சித்தமானீரே. அவருடைய அற்புதமான சாயலை வணங்கி அன்னைக்குரிய உதவியை மிகவும் ஆவலுடன் வேண்டிநிற்கும் நாங்கள் உம்முடைய இரட்சண்யத்தின் பலனை சதாகாலமும் அனுபவிக்க தகுதியுள்ளவர்களா யிருக்கக் கிருபை செய்யும்படி தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். சதாகாலமும் சீவியரு மாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற சர்வேசுரா. 🙏🏻ஆமென்.🙏🏻 பரிசுத்த பாப்பரசருக்காக வேண்டிக் கொள்வோம். ஒரு பர. அருள். திரி. 🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻 *இடைவிடா சகாய அன்னையை நோக்கி மன்றாட்டு* 🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻 நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே, உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல், புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் , விரோதிகளின்பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும். மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! *- 🙏🏻ஆமென்.🙏🏻* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 *✝️சதா சகாயமாதா✝️* *🙏🏻பிரார்த்தனை🙏🏻* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 🌹சுவாமி கிருபையாயிரும் 🌹கிறீஸ்துவே கிருபையாயிரும் 🌹சுவாமி கிருபையாயிரும் 🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். 🌻கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும். 🌷பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா... 🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 🌷உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர் திருநாமம் உடைத்தான சதா சகாய மாதாவே... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக் கும் ஆபத்தான வேளையில் அதனை ஜெயங் கொள்ளும்படி... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷எங்களுடைய முழுமனதுடன் சேசுவை நேசிப்பதற்கு... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக் கியத்துக்கு உள்ளாவேனாகில் அதிலிருந்து உடனே எழுந்திருக்கும்படி, 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷பசாசின் ஊழியத்தில் ஈடுபடும்படியான தகாத வளையில் நான் சிக்கிக் கொள்ளுவேனாகில் அத்தளையைத் தகர்த்தெறியும்படி... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் விரைவில் ஞான உஷ்ணம் கொள்ளும்படி.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங் களைப் பெறுவதிலும், கிறீஸ்தவ பக்திக்குரிய கடமைகளை பக்தியாய் செய்யும்படி... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என் சீவியத்தில் வரும் துன்ப சோதனை வேளைகளில்.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என்னுடைய சுபாவ துர்ச்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், புண்ணிய வாழ்க்கையில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும் படி நான் செய்யும் முயற்சிகளிலும்.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய் கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என் பலம் குறைந்து போகும்போது.... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷என் மரண வேளையில் என் ஆத்துமம் என் சரீரத்தைவிட்டுப் பிரிய போராடும்போது..... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, பூஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி ஓ! என் தேவ தாயாரே, என் கடைசிநாள் பரியந்தம், என் கடைசி மூச்சு பரியந்தம்... 🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே. 🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே... 🌻 எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி. 🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, 🌻எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி. 🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, 🌻எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி. *🌻ஜெபிப்போமாக:🌻* 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 சர்வ வல்லவரும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்கு துணை புரிய ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாயை உமது ஏக குமாரனுக்குத் தாயாராக்கத் திருவுளமானீரே! பரிசுத்த கன்னிமரியாயின் வேண்டுதலால் அடியோர்களின் பாவநோய் தீர்ந்து, பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சிநேகித்து சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக எங்களுக்குக் கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - MP Oy T OPm 0411 MP Oy T OPm 0411 - ShareChat
*இடைவிடா சகாய அன்னையின் நவநாள்* 💞☘️💞☘️💞☘️💞☘️💞☘️ *தொடக்கப் பாடல்: (நிற்கவும்)* இடைவிடா சகாய மாதாவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும். (மும்முறை) *தொடக்க செபம்: (முழந்தாளிடவும்)* குரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… எல்: ஆமென். குரு: மிகவும் பரிசுத்த மரியே, மாசில்லாக் கன்னிகையே, எங்கள் இடைவிடா சகாயமும், அடைக்கலமும் நம்பக்கையுமாக இருப்பவள் நீரே! எல்: இன்று நாங்கள் அனைவரும் உம்மிடம் வருகிறோம். நீர் எங்களுக்கு அடைந்தருளிய வரங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இடைவிடா சகாயத் தாயே, உம்மை நேசிக்கிறோம். எங்கள் அன்பைக் காட்ட உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும், அனைவரையும் உம்மிடம் கொண்டுவர எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என்றும் வாக்களிக்கிறோம். குரு: இடைவிடா சகாயத்தாயே! இறைவனிடம் சக்திவாய்ந்தவளே, எங்களுக்கு இந்த வரங்களைப் பெற்றுத்தாரும். எல்: சோதனைகளை வெல்லும் பலத்தையும், இயேசு கிறிஸ்துவிடம் தூய்மையான அன்பையும், நல்ல மரணத்தையும் அடைந்து தாரும். உம்மோடும் உமது திருக்குமாரனோடும் என்றென்றும் வாழ அருள் புரியும். குரு: இடைவிடா சகாயத் தாயே! எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். குரு: ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவே, உமது திருத்தாயாகிய மரியன்னையின் சொல்லிற்கு இணங்கி, கலிலேயாவின் கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினீரே. எங்கள் தாயாகிய சகாய அன்னையின் மகிமையை போற்றிப் புகழ இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்கு செவி சாய்த்தருளும். எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக் கொண்டு, எங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு அருள் புரிவீராக. எல்: ஓ இடைவிடாத சகாயத் தாயே! சக்தி வாய்ந்த உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம். வாழ்வோரின் பாதுகாவலும், மரிப்போரின் மீட்புமாயிருப்பவள் நீரே. உமது திருப்பெயர் எங்கள் நாவில் என்றும் ஒலிப்பதாக. முக்கியமாக சோதனை நேரத்திலும், மரண வேளையிலும் உமது திருப்பெயரைக் கூவி அழைப்போமாக. உமது திருப்பெயர் நம்பிக்கையும் சக்தியும் வாய்ந்தது. ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே, நாங்கள் உம்மை அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தருளும். நாங்கள் உமது திருப்பெயரை உச்சரிப்பதோடு திருப்தியடைய மாட்டோம். நீரே எங்கள் இடைவிடா சகாயத் தாய் என்பதை எங்களது தினசரி வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவோம். குரு: நமது சரீரத் தேவைகளுக்காக மன்றாடுவோமாக. எல்: ஓ இடைவிடா சகாயத் தாயே! மிகுந்த நம்பிக்கையுடன் உம் முன் முழந்தாளிடுகிறோம். எங்கள் தினசரி வாழ்க்கைச் சிக்கல்களில் உமது உதவியைக் கெஞ்சி மன்றாடுகிறோம். துன்ப துயரங்கள் எங்களை வீழ்த்துகின்றன. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் வறுமைப் பிணிகளும் எங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. இரக்கம் நிறைந்த தாயே எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் தேவைகளை நிறைவேற்றும். எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும். ஆனால் நாங்கள் இன்னும் அதிக காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால், நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள சகிப்புத்தன்மையை எங்களுக்கு அளித்தருளும். ஓ! இடைவிடா சகாயத் தாயே இந்த வரங்களையெல்லாம், எங்கள் பேறுபலன்களைக் குறித்து அல்ல ஆனால் உமது அன்பிலும் வல்லமையிலும் நம்பிக்கை வைத்து கெஞ்சி மன்றாடுகிறோம். *🙏🏻விண்ணப்பங்கள்: (முழந்தாளிடவும்)🙏🏻* குரு: எங்கள் திருத்தந்தைக்ககும், ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்திட வேண்டுமென்று… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். குரு: மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும் சமய ஒற்றுமையிலும் சகோதரர்களைப் போல் வாழ்க்கை நடத்திட வேண்டுமென்று… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். குரு: இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் தூய ஆவியார் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். குரு: இந்த நவநாள் பக்தர்கள் உமது திருவுளத்தின்படி தங்கள் உடல் நலத்தில் நீடிக்கவும், நோயாளிகள் தங்கள் உடல் நலத்தை திரும்ப அடையவும் வேண்டுமென்று… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். குரு: மரித்த நவநாள் பக்தர்களுக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள வேண்டுமென்று… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். குரு: இந்த நவநாளில் முக்கிய கருத்துக்களுக்காகவும் இங்கு கூடியிருக்கும் அனைவருடைய தேவைகளுக்காகவும்… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். குரு: மக்கள் அனைவரும் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உமது அன்பின் ஆர்வத்தை உணரவும் வேண்டுமென்று… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். குரு: நமது இடைவிடா சகாயத் தாயிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக் கூறுவோம். *🙏🏻(சிறிது நேரம் மௌனமாக செபிப்போம்)🙏🏻* நன்றியறிதல்: (முழந்தாளிடவும்) குரு: நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும்… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். குரு: திருச்சபையின் திருவருட்சாதனங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும்… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். குரு: இந்த நவநாள் செய்வோர் பெற்றுக்கொண்ட ஆத்மசரீர நன்மைகளுக்காக… எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். குரு: நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காக நமது இடைவிடா சகாயத் தாய்க்கு மௌனமாக நன்றி செலுத்துவோம். *🙏🏻(சிறிது நேரம் மௌனமாக நன்றி செலுத்துவோம்)🙏🏻* *பாடல்: (நிற்கவும்)* தாயே மாமரி – இன்றுன் சகாயம் தேடினோம் – தாயே மாமரி உலகமெத்திசையும் மக்கள் போற்றிடும் புகழவும் உம் அற்புதப் படமுன் வந்து நிற்கும் எங்களை கண் நோக்குவீர் தாயே மாமரி – இன்றுன் சகாயம் தேடினோம் – தாயே மாமரி... *நற்செய்தி: (நிற்கவும்)* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 *மறையுரை: (உட்காரவும்)* குரு: நோயாளிகளுக்கு செபிப்போமாக; எல்: ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும். நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும். நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள்புரிவீராக.எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.🙏🏻 குரு: (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக. குரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே… எல்: ஆமென்.🙏🏻 *குழுவினர் விசுவாச அறிக்கை: (முழந்தாளிடவும்)* குரு: இங்கே கூடியிருப்பவர்களின் விசுவாச அறிக்கை. எல்: ஓ இடைவிடா சகாயத் தாயே! நீர் அருள் நிறைந்தவள், தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே. பாவிகளின் நம்பிக்கை நீரே. அன்புள்ள அன்னையே உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் மீட்பு உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான கிறிஸ்து நாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம். சோதனை வேளையில் உமது சகாயத்தை தேட அசட்டை செய்வதால், எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ இடைவிடா சகாயத் தாயே! எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்து நாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத் தாரும். *மகிமை நிறைந்த மங்கள வார்த்தை செபம்: (நிற்கவும்)* குரு: எக்காலக் கிறிஸ்தவர்களோடும் நாமும் ஒன்றித்து மரியன்னையைப் புகழுவோமாக, வல்லமை மிக்க அவளது பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போமாக. எல்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென். குரு: இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக. எல்: இறைவனின் தூய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். குரு: செபிப்போமாக ஓ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! உமது தாயாகிய மரியாவை, அவருடைய அற்புதப் படத்தை வணங்கும் எங்களுக்கு என்றும் உதவி செய்யத் தயாராக இருக்கும் மாதாவாகக் கொடுத்திருக்கிறீரே! அவருடைய தாய்க்குரிய சலுகைகளைத் தேடுகிற நாங்கள் உமது மீட்பின் பேறுபலன்களை நித்தியத்துக்கும் அனுபவிக்கும் பாக்கியவான்கள் ஆகும்படி எங்களுக்கு கிருபை செய்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி புரியும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். எல்: ஆமென்.🙏🏻 #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - शxersec 750770 DeteCTdet शxersec 750770 DeteCTdet - ShareChat
*Following are the Rosary intentions to be recited in the family prayer by all the families today.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *11.02.2026 (Wednesday)* *⚜️GLORIOUS MYSTERIES⚜️* *🌿🌹First Glorious Mystery🌹🌿* *The Resurrection of Lord Jesus Christ.* As we are celebrating the feast of Our Lady of Lourdes, let us pray for all the sick people as she is the protection from the diseases. May all the sick people be healed through the intercession of our Mother. For this intention let us recite this decade. *🌿🌹Second Glorious Mystery🌹🌿* *The Ascension of Lord Jesus to Heaven.* In today's responsorial Psalm 37:39 says, *"the salvation of the just comes from the Lord their stronghold in the time of distress."* Let us pray for the release of all the convicts in the prison who are struggling without committing any crime. *🌿🌹Third Glorious Mystery🌹🌿* *The Descent of the Holy Ghost* In today's Gospel our Lord Jesus says, *"Nothing that goes into a man from outside can make him unclean; it is the things that come out of a man that make him unclean."* Let us pray that our words should not hurt or insult others but be soothing and comforting others. For this intention let us recite this decade. *🌿🌹Fourth Glorious Mystery🌹🌿* *The Assumption of the Blessed Virgin Mary into Heaven.* Our Lady of Lourdes appeared to Bernadette 18 times and in 15 appraisal Mother Mary insisted to recite the Rosaries of Joyful, Sorrowful and Glorious mysteries. Let us practice the habit of reciting rosary in our family prayers and for this intention let us recite this decade. *🌿🌹Fifth Glorious Mystery🌹🌿* *The Coronation of the Blessed Virgin Mary, Queen of Heaven and Earth.* In Lourdes, during her appraisal Our Lady said "I am the Immaculate conception." Let the non Catholics realise this truth and believe our Mother Mary and for this intention let us recite this decade. *🙏🏻Amen.🙏🏻* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
⛪ வேளாங்கண்ணி சர்ச் - Lif@ Giving Word February 11 All fhese evill things comel Kings from within, and 10: 1-10 Psalms they defile 37: ೦ 5-6,30-31,39-40 person ' Mark 7:  14-23 Mark 7:23 US Tuu Lif@ Giving Word February 11 All fhese evill things comel Kings from within, and 10: 1-10 Psalms they defile 37: ೦ 5-6,30-31,39-40 person ' Mark 7:  14-23 Mark 7:23 US Tuu - ShareChat
*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *11.02.2026 (புதன்)* *⚜️மகிமை நிறை மறையுண்மைகள்⚜️* *🌿🌹முதலாவது. ஆண்டவர் இயேசு உயித்தெழுந்ததைத் தியானித்து,* இன்று தூய லூர்து அன்னையின் விழாவினைக் கொண்டாடும் நாம், நோயுற்றோரின் பாதுகாவலியான தூய லூர்து அன்னையை நோக்கி நல் ஆரோக்கியத்திற்காக செபிப்போம். நோயுற்ற அனைத்து மக்களும் பூரண நலம் பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹இரண்டாவது. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,* இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 37:39-ல், *"நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில்அவர்களுக்கு வலிமையும் அவரே."* என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். செய்யாத குற்றத்திற்காக சிறையில் அவதியுறும் எண்ணற்ற மக்களின் மீட்பிற்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹மூன்றாவது. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,* இன்றைய நற்செய்தியில், *"வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்."* என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். நம்முடைய வார்த்தைகள் பிறரைக் காயப்படுத்தாத, வன்மத்தைக் கக்காத அன்பையும், ஆறுதலையும் அளிக்கின்ற வார்த்தைகளாக இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹நான்காவது. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,* பெர்னதெத்துக்கு 18 முறை தரிசனமளித்த தூய லூர்து அன்னை, திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களில் 15 மறையுண்மைகளை நாளுக்கு ஒன்றாக தியானித்து செபிக்க வலியுறுத்தினார். குடும்ப செபமாலை செபிக்கும் பழக்கத்தை இல்லங்களில் தொய்வில்லாமல் கடைபிடிக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹ஐந்தாவது. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,* லூர்தூ திருக்காட்சியில் "நானே அமல உற்பவம்" (பாவம் ஏதுவுமின்றி பிறந்தவர்) என்று மொழிந்த நம் அன்னையின் திரு பக்தியை பிரிவினை சகோதரர்களும் உணர வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசு - இறைவழித்தை 999 குரும பி்வரிப 11 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் அரசர்கள் 10: 1-10 திருப்பாடல்  தீட்டுப் 37: படுத்துகின்றன ' 5-6,30-31,39-40 மாற்கு 7: 14-23 மாற்கு 7:23 இறைவழித்தை 999 குரும பி்வரிப 11 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் அரசர்கள் 10: 1-10 திருப்பாடல்  தீட்டுப் 37: படுத்துகின்றன ' 5-6,30-31,39-40 மாற்கு 7: 14-23 மாற்கு 7:23 - ShareChat