S.ANTHONY✝️YESUMARY
ShareChat
click to see wallet page
@anthonymundiyampakkam
anthonymundiyampakkam
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
01:00
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
00:40
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
00:57
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
01:00
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
00:30
*புனித ஜார்ஜியாரிடம் வேண்டிக்கொள்ளும் நவநாள் செபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை* 👑🏇🏻👑🏇🏻👑🏇🏻👑🏇🏻👑🏇🏻 *புனித ஜார்ஜியாருக்கு நவநாள் ஜெபம்* 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻 வேதசாட்சியான புனித ஜார்ஜியாரே! நீர் விசேஷமாய் களங்கமற்ற இருதயமுள்ளவர் களுக்கும் உமது உதவியை நாடிவருபவர்களுக்கும் செய்து வரும் அற்புத அதிசய நன்மை. களால் சர்வ வல்லவரான கர்த்தருக்குண்டாகும் மகிமையைக் கண்டு நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். மென்மேலும் உமது நாமம் பிரபலியப்படவும், உம்முடைய புதுமைகள் எல்லாவிடங்களிலும் பரவவும், கிறிஸ்தவர்களாகிய உமது சகோதரர்கள் உத்தம விசுவாசிகளாய்த் திருச்சபையில் நிலைத் திருக்கவும், பதித மதம் நாளுக்கு நாள் குறைந்து போகவும், உமது வாழ்நாளில் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துநாதருடைய திருநாமம் எங்கும் ஓங்கவும், அவருடைய திருச்சபை பெருகவும், நீர்கொண்ட முயற்சி நாங்கள் கொள்ளவும், உம்மைப்போல எவ்வித வருத்தமும் உயிர்வதை நேர்ந்தாலும் பின்னடையாதிருக்கவும் சீவியத்தி லுண்டாகும் கஷ்டம் துன்பம், சோதனைகளை வெல்லவும் தேவ கிருபையை மன்றாடியருள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். வானுலகில் முடிசூட்டப்பெற்ற புனித ஜார்ஜியாரே! உமது அடியவர்களாகிய நாங்கள் மென்மேலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் திழைத்து நிற்கவும், இம்மாய உலகில் ஆன்மீகத் துறையிலும் பிற துறைகளிலும் எங்கள் எதிரிகளால் ஏற்படும் சோதனைகளை விலக்கி, தூய மனத்தோராய் இவ்வுலகில் வாழ வரம் அருள்வீராக... (வேண்டியதை உறுதியோடு கேட்கவும்) இரக்கமுள்ள இறைவா, உமது புனித ஜார்ஜியார் வழியாக இவ்வரங்களை தந்தருள்வீராக.! ஆமென். முதல் : வேதசாட்சியான புனித ஜார்ஜியாரே..! எல் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் (3. முறை சொல்லவும்.) - ஒரு. பா. அரு. பிதா. 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻 *புனித ஜார்ஜியாரிடம் மன்றாட்டு* 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻 அனைத்திற்கும் ஆதாரமாக இறைவனுக்கு மிகவும் விருப்பமுள்ளவருமாய், கிறிஸ்தவ நெறிகளுக்கு காவலருமாய், எங்களுக்கு துணையும் பாதுகாவலருமாய் எங்கள் நடுவே எழுந்தருளி இருக்கும் புனித ஜார்ஜியாரே!!! நீர், கடவுள் மேல் உண்மையான நம்பிக்கையும், அன்பும் கொண்டதால் அவர் உம்மேல் அன்பும் கருணையும் இரக்கமும் காட்டினாரே... மனிதரை கொன்று தின்று வந்த நாகப்பறவை வடிவில் உள்ள அசுத்த ஆவியை வெண் குதிரையின் மேல் அமர்ந்து ஈட்டியால் குத்திக் கொன்று, வெற்றிமாலை சூடினீரே... தியோக்கிலேசியனின் கட்டளைகளுக்கு அஞ்சாமல் கிறிஸ்தவத்தை எல்லா மக்களுக்கும் அறிவித்தீரே.... மன்னனின் கொடிய கட்டளைகளை விசுவாசம் என்னும் சம்மட்டியால் அடித்து நொறுக்கி மன்னனால் மூன்று முறை கொல்லப்பட்டு, கடவுளின் அருளால் மும்முறையும் உயிர்பெறவும் வரம் பெற்றீரே!!!! நீர் விண்ணரசு போய் சேரும் காலம் நெருங்கி வரவே தியோக்கிலேசியன் உமது தலையை வெட்டவும், உமது ஆன்மாவை வானதூதர்கள் புடைசூழ திருக்கரங்களில் ஏந்தி கடவுளின் பாதத்தில் சமர்ப்பிக்கவும், விண்ணரசில் வேதசாட்சி முடிசூட்டப்படவும், அன்று முதல் இன்றுவரை உமது கல்லறையைத் தேடி வருபவர்கள் புதுமைகள் பெற்று வரவும் கிறிஸ்துவினால் வரம் பெற்றீரே!!!! ஓ! எங்கள்மேல் அன்பும் இரக்கமும் கொண்டு எங்கள் நடுவே இருக்கும் புனித ஜார்ஜியாரே! நாங்கள் கிறிஸ்துவில் நம்பிக்கையோடு வாழவும் எங்களுக்கு ஏற்படும் பலவித நோய்களிலிருந்தும் பஞ்சம், பசி, தீய ஆவியின் செயல் பாடுகளிலிருந்தும் எங்களை காப்பாற்றும்... நாங்கள் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து சீரும் சிறப்புமாய் வாழவும், கடல் கடந்தும், வெளியூர்கள் சென்று தொழில்கள் செய்து வரும் உமது மக்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வாழவும்,இறுதி திருவருட்சாதனம் பெற்று விண்ணரசின் மகிமையை உம்முடன் சேர்ந்து கண்டடைய, உமது திருப்பாதத்தில் மண்டியிட்டு வேண்டுகிறோம்... தஞ்சம் என்று உமது உறைவிடத்தை தேடி வந்தோம். இரக்கத்துடன் எங்களைப் பாரும்! கருணைக் கடலே!!!!!, தவிப்பவர்களுக்குத் தடாகமே!!!!!! தணித்தவர்க்கு தஞ்சமே!!!!!!!! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். வறுமை, நோய் முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். உமது திருசுரூபத்தை பார்த்து ஆறுதல் அடைய முழு நம்பிக்கையோடு ஓடி வந்தோம். எங்கள் நம்பிக்கை மறுக்கப்படுமோ!... எங்கள் யாத்திரை பலனற்றதாய் போகுமோ!... நீர் ஞானத் தந்தை என்பதை எங்களுக்கு காண்பியும்.... தாய் தன் பிள்ளையை மறந்தாலும், மக்களை மறக்காத இறைவனிடத்தில் நாங்கள் கேட்கும் செபங்களைக் கேட்டு தயவாய் எங்களுக்கு தாரும். ............................................... *(தேவைகளை கேட்கவும்)* நாங்கள் உமது வழியாய் இறைவனிடம் கேட்கும் வேண்டுதல்களை நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கையோடு எல்லாம் வல்ல நம் இறைவனிடம் எங்களுக்காக மன்றாட வேண்டுமென்று உம்மை பார்த்து கெஞ்சி கேட்கிறோம். *🙏🏻ஆமென்🙏🏻* 🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 *புனித ஜார்ஜியாருக்கு புகழ்மாலை* 🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 சுவாமி கிருபையாயிரும்... கிறிஸ்துவே கிருபையாயிரும்... சுவாமி தயவாயிரும்... கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும்... கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்... பரமண்டலங்களிலே இருக்கிற எங்கள் பிதாவாகிய சர்வேசுரா.. எங்ககளை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.. உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி- - - பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி... தமத்திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயவுசெய்து இரட்சியும் சுவாமி.. சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. வேதசாட்சியான புனித ஜார்ஜியாரே... - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... பால வயதிலேயே தெய்வ பக்தி உள்ளவரான புனித ஜார்ஜியாரே... - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. பால வயதில் உரோமை தியோக்கிலேசியான் இராஜனின் இராணுவத்தில் படை சேவகனாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... தெய்வ சித்தமென்று கீழ்ப்படிதலோடு அவ்வேலையில் அமர்ந்தவரான புனித ஜார்ஜியாரே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். . ஏழை எளியவர்மீது இரங்கி அன்பாய் அவர்களுக்குத் தானதர்மம் செய்தவரான புனித ஜார்ஜியாரே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... சீவிய காலத்தின் பேரின்பம், கிறிஸ்துநாதரில் சிநேகமென்று முழுமனதோடு விசுவசித்து இடைவிடாமல் அவரை மன்றாடினவரான புனித ஜார்ஜியாரே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... துன்ப சோதனை வேளையில் தமக்கு உதவி ஒத்தாசை செய்ய வேணுமென்று புனித தேவமாதாவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. உமது பக்தி, பிறர் சினேகம் கீழ்ப்படிதலைக் கண்டு அதிகமாகச் சர்வேசுரனால் சினேகிக்கப்பட்டவரான புனித ஜார்ஜியாரே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... உமது திறமை சாமர்த்தியம் புத்திமதியைக் கண்டு அரசனால் உம்மை இராஜ தோழனாகவும் சேனாதிபதியாகவும் ஆலோசனைச் தலைவரில் ஒருவராகவும் சேர்க்கப்பட்டவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இந்த மேலான பதவி உமக்குக் கிடைத்தாலும் அதைப் பெருமையாக எண்ணாமல் அதை உமக்கு அருளிய இயேசுநாதருக்கே பெருமையும் மகிமையும் வணக்கமும் உண்டாகக்கடவது என்று வேண்டிக்கொண்டவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...... சைலானாவென்னும் இடத்தில் கொடிய பறவைநாகத்தை உமது கை வேலால் குத்திக்கொன்று ஆண்ட்ரோமேடா என்னும் இராஜகுமாரியைத் தற்காத்து அவள் தந்தையான இராஜனையும் மற்றவர்களையும் வேதத்தில் சேரச் செய்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆலோசனை சபையில் கொடுங்கோலனான தியோக்கிலேசியான் கிறிஸ்தவர்களைப் பிடித்து அடித்து உபாதித்து வேதத்தை விடச் செய்ய வேண்டுமென்றபோது தைரியமாய் எதிர்த்துப் பேசினவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... இராஜ சிநேகத்துக்காகவும் உலக மகிமைக்காகவும் உத்தியோக பெருமைக்காவும் தேவனாகிய இயேசுக்கிறிஸ்துவை மறுதலிப்பது கொடும் பாதகமென்று, இராஜ சமூகத்தில் புத்தி போதித்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... தியோக்கிலேசியான் இராயன் தான் வணங்கி வந்த அப்பெல்லோவென்னும் பசாசை வணங்க வேணுமென்று கட்டாயம் செய்தபோது சரியான நியாயம் பேசி அரசன் அடக்கினவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... தன்னுடைய சொற்படி அப்பெல்லோவென்னும் பேய்க்கு ஆராதனை செய்யவில்லை என்று அரசனால் சிறையில் அடைக்கப்பட்டவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... சிறைச் சாலையிலிருந்து திவ்விய இயேசுவை மன்றாடும்போது உம்மைப் பார்க்க வந்த முகப் பழக்கமுள்ள அஞ்ஞானிகளுக்கு சத்திய சுவிசேஷத்தை உபதேசித்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... உம்முடைய உபதேசத்தைக் கேட்டு அனேகர் வேதத்தில் சேருவதை அறிந்து உம்மை கம்பத்தில் கட்டி சாட்டை கசைகளால் அடிக்கவும் அடங்காப் புரவியின் கால்களில் கட்டி தெரு வீதியில் இழுக்கவும் இராயன் உத்தரவளித்தபடியே சேவகர் செய்வதை எல்லாம் பொறுமையாய் அனுபவித்த வரான புனித ஜார்ஜியாரே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... தேகமெல்லாம் இரத்தம் வடிந்து களைத்திருக்கும் வேளையில் இருட்டறையில் போட்டபோது, சம்மனசுகளினால் காயமெல்லாம் சுகப்படுத்தப்பட்டவரான புனித ஜார்ஜியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இந்த அற்புதத்தைக் காவல் சேவகர் கண்டு ஆச்சரியப்பட்டு வேதத்தில் மிகவும் மனம் மகிழ்ந்தவரான புனித ஜார்ஜியாரே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... இராயன் உமக்கு நேசங்காட்டி மயக்கப் பார்த்தபோது அவனை அப்பெல்லோவின் விக்கிரகங்களுக்கு முன் அழைத்துக் கொண்டு போய் அதிலிருந்த பசாசைக் கொண்டே நீர் வணங்கும் கிறிஸ்துவே உண்மையான தெய்வமென்று பேசச் செய்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... நீ உடனே நீர் அகமகிழ்வோடு, அந்த விக்கிரகங்களை நோக்கி தெய்வம் இல்லை என்றால் ஏன் இதிலிருக்கிறாயென்று சொல்லி அர்ச்சியஷ்ட சிலுவை வரைந்தவுடன் விக்கிரகமெல்லாம் கீழே விழுந்து நொறுங்கவும், பசாக அழுது அலறிக்கொண்டு ஓடச் செய்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... இதை எல்லாம் பார்த்துக்கொண்டு நின்ற சனங்கள் கிறிஸ்துவே மெய்யான தேவனென்று வணங்கி ஞானஸ்நானம் பெறச் செய்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... இராயனும் அஞ்ஞான பூசாரிகளும் இதைக்கண்டு வெட்கி தலை கவிழ்ந்துபோகச் செய்தவரான புனித ஜார்ஜியாரே... - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... அஞ்ஞான பூசாரிகள் இவன் மந்திரத்தினால் இவையெல்லாம் செய்கிறாளொன்று சொல்லக்கேட்டு இராயனால் மந்திரவாதியைக் கொண்டு மாய மந்திரத்தினால் உம்மை வசப்படுத்தப் பார்த்தும் முடியாமல் அவர்களை வெட்கமடையச் செய்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. மந்திரவாதி, நீர் வணங்கும் இயேசுவே உண்மையான தெய்வமென்று விசுவசித்து, மன்றாடினதால் அவனை வேதத்தில் சேர்த்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. இரக்கமற்ற இராயன் இரும்புச் சீப்பால் உமது தேகமெல்லாம் கீறி கழுமரத்தில் தூக்கிக் கொலைசெய்து ஒரு பெரும் பள்ளத்தில் எறியச் செய்த பின்னும் உயிர் பெற்றவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. உம்மைக் கழுமரத்தில் தூக்கி கொலைசெய்து விட்டோமென்று சேவகர் சொல்லக் கேட்ட அரசன் சந்தோஷமாயிருக்கையில், தெருவில் உபதேசித்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. ஒரு நிர்ப்பாக்கிய விதவையின் மகனின் மாடுகளிலொன்று மரித்துப் போகவே அதற்கு உயிர்கொடுத்து தாயையும், மகனையும் வேதத்தில் சேர்த்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... தியோக்கிலேசியான் பின்னும் கோபம் கொண்டு தீச்சூளையில் மிகுதியாக நெருப்புண்டாக்கி அதனருகே மூன்று நாள் போடச்சொல்லி, சேவகர் அவ்விதம் செய்தும் யாதொரு மோசமின்றி காப்பாற்றப்பட்டவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. பின்பு அரசன் உமக்கு ஆகாரம் கொடாமல் வழியோரத்தில் நின்ற பட்டமரத்தில் கட்டி அடிக்க சொல்லியபடி செய்யும் போது அற்புதமாய் பச்சை உண்டாக்கி தளிர்த்து பூத்துக் காய்த்துப் பழுத்திருக்க தேவ வல்லமையால் அற்புதஞ் செய்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. அந்த மரத்தடியில் குடியிருந்த ஏழை கைம்பெண்ணின் மகனுக்குண்டாயிருந்த பலவீனம் செவிடு, குருடு, ஊமையையும் போக்கி இருவரையும் வேதத்தில் சேர்த்தவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... அவ்வழியே சென்ற தியோக்கிலேசியான், பட்ட மரம் தளிர்த்து அலங்காரமாய்ப் பலன் கொடுத்திருப்பதைக் கண்டு வெட்கி நாணமடையச் செய்தவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... நிஷ்டூரனான தியோக்கிலேசியான் அந்த மரத்தை வெட்டி அதோடு உம்மை அலையிற் கொண்டு சுட்டெரித்துப் போட சொன்னபடியே செய்தும், மீண்டும் தேவ கிருபையால் உயிர்பெற்றவரான புனித ஜார்ஜியாரே..... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. அவ்விடத்திலுண்டான பூமி அதிர்ச்சி, மின்னல், இடி, குமுறல் கண்டு நடுநடுங்கி சேவகர் நாலுபேர் பயந்து ஓடோடி போகும் போது பின்னால் நடந்துவந்து நில்லுங்கள் நில்லுங்கள் என்று சொன்னவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... சேவகர் கண்டு பயந்து ஆச்சரியப்பட்டு இயேசு கிறிஸ்துவே உண்மையான தேவனென்று விசுவசித்து சத்தியவேதம் சேர்ந்ததால் அதிக ஆனந்தமடைந்தவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... அசரிரி திருவசனத்தால் மகிழ்ந்தவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... கொடிய அரசன், உம்மை சக்கரத்திலிட்டு அரைத்து கொப்பறையில் உருக்கிய ஈயம் குங்கிலியம் கெந்தகத்திலிட்டு பூமியில் புதைக்கச் செய்தபின்னும் உயிர் பெற்றவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... அரசன் கொடுத்த விருந்தருந்திய கூட்டத்தில் பிரவேசித்து அவர்களுக்கு உபதேசித்தவரான புனித ஜார்ஜியாரே.... - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... மரித்த நீர், உயிரோடெழுந்து வந்து அங்கே பிரசங்கித்ததைக் கேட்டு அனேகர் ஆச்சரியப்பட்டு வேதத்தில் சேரச் செய்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... மூன்றுமுறை மரணமடைந்த பின்னும் உயிர்பெற்ற வரானதால் எல்லோராலும் புகழ் வரம் பெற்றவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... கடைசியாய் உம்மை பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ள திருச்சித்தமாகவே தலை வெட்டுண்டு மரித்தவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... உம்மை அண்டியவர்களுக்கு அநேகம் அதிசயங்கள் நடத்தியதால் அற்புதவரம் உடையவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... உம்மை மன்றாடுகிறவர்களுக்கு உதவிபுரிகிறவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... பற்பல துன்ப சோதனைகளை அகற்றுபவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... தீராத நோய்களைத் தீர்ப்பவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... மனக்கவலையை ஒழிப்பவரான புனித ஜார்ஜியாரே.... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... கபடமற்ற தளமாய் உம்மிடத்தில் கேட்பதெல்லாம் தேவகிருபையால் கொடுப்பவரான புனித ஜார்ஜியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேகரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே... எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே - எங்கள் பிராத்தனையை கேட்டருளும் சுவாமி. உலகத்தின் பாலங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செப்பறிப் புருவையாகிய இயேசுவே - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி *🙏🏻செபிப்போமாக🙏🏻* கிருபை நிறைந்த சர்வேசுரா சுவாமி! தேவரீர் புனித ஜார்ஜியாருடைய நம்பிக்கை, வேண்டுதல், பக்தி முயற்சியாலும் அநேகரை வேதத்தில் சேர்ப்பித்து மும்முறை மரித்து பின்னும் அவரை உயிர்ப்பித்து வேதம் போதிக்க அருள்புரிந்தீரே! நாங்களும் இப்பூமியில் உயிரோடிருக்கும் மட்டும் சுத்த வழியில் நடக்கவும், திருச்சபைக்காக உழைக்கவும், கருணை நிறைந்த தேவரீரால் இக பரலோக நன்மைகளை அடையவும், எச்சோதனை நேர்ந்தாலும் உம்முடைய திருவடியில் தைரியமாய் நிலைத்திருக்கவும் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் உம்முடைய திருக்குமாரன் இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி... *- ஆமென்🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - arcanjomiguelnet | arcanjomiguelnet | - ShareChat
*புனித சந்தியாகப்பர் நவநாள் ஜெபம். மற்றும் புகழ்மாலை.* 🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🌻 *⚜️புனித. சந்தியாகப்பர் நவநாள் ஜெபம்⚜️* தேவ அன்னையினால் மிகவும் நேசிக்கப்பட்டவரும் சேசுவின் சீடருமான அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே திருச்சபையின் எதிரிகளால் துன்புறுத்தப்பெற்ற ஸ்பெயின் நாட்டு கிறீஸ்தவர்களுக்கு இரங்கி வெள்ளைக் குதிரை மேல் ஏறி எதிரிகள் படையை முறியடித்த புனித அப்போஸ்தலரே! அறநெறியை விரும்பாதவர்களாலும், பிசாசுகளினாலும் வீண், பொய், மாயைகளினாலும் நான் படும் துயரம் எவ்வளவோ பெரிதாகியிருக்கிறது. நான் விரும்புகின்ற நன்மையை அல்ல, நான் விரும்பாத தீமையையே செய்ய ஏவப்பட்டு பரிதவிக்கிறேன். நெருக்கப்படுகிற நாளில் என்னைக் கூப்பிடு அப்போது நான் உன்னை விடுவிப்பேன் என்ற வேத வாக்கியத்தை நினையாமல் உருக்கமாக ஜெபம்செய்ய மறந்து என் ஆபத்துக்களில் மிகவும் பரிதவிக்கிறேன். கேளுங்கள் கொடுக்கப் படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வேதவாக்கை துன்ப வேளையில் மறந்து போகிறேன். நீர் என்மீது இரக்கம்வைத்து எனக்காக கடவுளை மன்றாடி என் ஆபத்துவேளையில் நான் வெற்றி பெற எனக்குத் துணையாகவாரும். நான் பலவீனன் நான் செய்த பாவங்களே என்னை நெருக்கத் தொடங்குகின்றன. எனக்கு நேரிட்டிருக்கும் துன்பங்களாகிய சிலுவையை நான் சுமக்க வேண்டும் என்பது அவர் சித்தமானால் அவர் திருச்சித்தம் நிறைவேறட்டும். ஆபத்துக்களில் உதவுகிற அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே எங்கள் அன்புக் காவலரே, நான் என் பலவீனங்களில் தடுமாறி விழாமல் காத்தருளும். இரக்கம் நிறைந்த அப்போஸ்தலரே துன்ப வேளையில் உதவி செய்யும் அற்புதரே! என்னைச் சூழ்ந்திருக்கும் துன்பங்களிலும், ஆபத்துக்களிலும் நான் அலைக்கழிக்கப்பட்டு, கலங்காதபடி என்னைத்தேற்றி அரவணைத்தருளும் அன்று எதிரியின் படையை முறியடிக்க உம்மை நம்பி அபயமிட்ட ஸ்பெயின் நாட்டவருக்கு உதவியாய் வந்து அவர்களுக்கு வெற்றி அளித்தது போல், இருகரம்கூப்பி உம்மைநோக்கி அபயமிடும் எங்களுக்கு இவ்வேளையில் உதவியாய் வந்து, என்னைச் சூழ்ந்து நிற்கும் ஆன்ம எதிரிகளை முறியடித்துத் துரத்தி தேவ உதவியால் நான் முழுவெற்றி அடைய எனக்காக கடவுளை மன்றாடும்! ஆண்டவராகிய சர்வேசுரன் உமது மன்றாட்டினால் என் வேண்டுதலைக் கேட்டருள்வார். நீர் கூவி அழைத்த தேவ அன்னை விரைந்து வந்து உமக்கு உதவி செய்தது போல், நீரும் என் மரண நேரத்தில் வந்து எனக்கு உதவி செய்து நான் நல்ல மரணம் அடைந்து, முடிவில்லாப் மோட்ச பாக்கியத்தைப் பெற சர்வேசுரனை நோக்கி மன்றாடும். *ஆமேன்.* 🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁 *புனித சந்தியாகப்பர் பிராத்தனை* 🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁🌻🍁 ஆண்டவரே இரக்கமாயிரும்! கிறிஸ்துவே இரக்கமாயிரும்! ஆண்டவரே இரக்கமாயிரும்! கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்! கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்! விண்ணகத்திலும் மண்ணகத்திலும் இருக்கும் எங்கள் தந்தையே - எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களை மீட்ட இயேசு கிறிஸ்துவே - எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களை விசுவாசத்தில் பலப்படுத்தும் தூய ஆவியானவரே - எங்கள் மேல் இரக்கமாயிரும். மூவொரு இறைவனாகிய ஆண்டவரே - எங்கள் மேல் இரக்கமாயிரும். இறைவனின் புனித மரியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நல் மரணத்திற்கு பாதுகாவலாம் புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். வேதசாட்சியான புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தேவ அன்னையினால் மிகவும் அன்பு செய்யப்பட்ட புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். செபதேயுவின் அன்பு மகனான புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசு உம்மை அழைத்தபோது, தந்தையையும், வலைகளையும் விட்டு உடனே அவரைப் பின்சென்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவால் உம் சகோதரர் யோவானாடு, இடியின் மக்கள் என அழைக்க வரம் பெற்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசு பூங்காவனத்துக்கு போனபோது உடன் சென்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவின் விண்ணேற்றத்திற்க்குப் பின் உயிர்த்த ஆண்டவரின் சாட்சியாக அவரைவிட வேறு கடவுள் இல்லை என்று யூதேயா, சமாரியா நாடுகளில் இறைபணி செய்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஸ்பெயின் நாட்டில் எண்ணற்ற மக்களுக்கு உண்மை மறையை போதித்து, மந்திரவாதியான ரமோசான் என்பவருக்கு திருமுழுக்கு அளித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உறுதியான மனதுடன் இயேசுவைப்பற்றி போதித்ததை கேட்ட ஏரோது அக்கரிப்பா, உமக்கு மரணத்தீர்ப்பு அளித்தபோது அதை இயேசுவுக்காய் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு வேதசாட்சியாய் மரித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். கொலைக்களத்துக்கு உம்மை அழைத்துச் சென்றவன் கிறிஸ்தவன் என்பதை கேட்டு அறிந்து பெருமகிழ்ச்சியுற்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். கொலைக்களத்திற்கு உம்மை அழைத்துச் சென்ற கொலைஞன் உம்மிடம் பாவமன்னிப்பு கேட்டபோது சமாதானத்தை அளித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். வானதூதர் புடை சூழ இத்தாலி நாட்டில் உண்மை மறையைப் போதித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். எபேசு நகரில் தேவ அன்னையை அற்புதமான வகையில் கண்டு தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தேவ அன்னை உம் கரம் பிடித்து தூக்கி நிறுத்தி, அந்த விண்ணக மண்ணக அரசியின் எண்ணற்ற வரங்களையும் பெற்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். எருசலேமில் நீர் வேதசாட்சியாக இறப்பீர் என்று தேவ அன்னையின் மூலம் அறிந்து அவ்வேளையில் அன்னையின் உதவியை மன்றாடி பெற்ற புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். எருசலேமில் விசுவாசத்தோடு நீர் போதித்ததை கண்ட வேத விரோதிகள் உம்மை சிறை பிடித்தபோது தேவ அன்னையை நோக்கி மன்றாடிய புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உமது திருவுடல் கம்போஸ்தலா என்னும் நகருக்கு கொண்டு செல்ல. அங்கு பலப் புதுமைகள் நிகழவே, மக்களால் மரியாதையோடு வணங்கப்பட்ட புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நீர் விண்ணகம் சென்றபின் ஸ்பெயின் நாட்டின் கிறிஸ்துவர்களை எதிர்த்து படையெடுக்க அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக் கொண்ட போது, பகைவர் அஞ்சி ஓடும் படியாக வெள்ளைக் குதிரை மேல் ஏறி வந்து, அவர்களை விரட்டியடித்த புனித சந்தியாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எங்கள் பாவங்களை போக்கியருளும் சுவாமி. உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எங்களுக்கு சமாதானத்தை தந்தருளும் சுவாமி. *🙏🏻செபிப்போமாக🙏🏻* எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே வேதசாட்சியும், உமது சீடருமான புனித சந்தியாகப்பருக்கு உயர்ந்த வரங்களை கொடுத்து, எருசலேம் நகரிலும், ஸ்பெயின், இத்தாலி நாடுகளிலும், அவரால் பல புதுமைகளை செய்வித்து, எண்ணற்ற மக்களை திருட்சபைக்கு அழைத்தீரே அவரை போற்றி புகழ்ந்து வணங்குகிற எங்களுக்கும் இவ்வுலகின் ஆசைகள், சாத்தானின் ஆதிக்கங்கள், துன்பங்கள் அனைத்தையும் வென்று, முடிவில்லா பேரின்பத்தை பெற அருள் புரியுமாறு புனித அடைக்கலமாதா வழியாகவும், எங்கள் பாதுகாவலரான புனித சந்தியாகப்பர் வழியாகவும் உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் *- 🙏🏻ஆமென்.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝பைபிள் வசனங்கள் - Catlolic olic Catlolic olic - ShareChat
*புனித சந்தியாகப்பர் நவநாள்* ❣️💎❣️💎❣️💎❣️💎❣️💎❣️ வேதசாட்சியான புனித சாந்தியப்பரே...! உமது பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! - 3 குரு : வேதசாட்சியான புனித சாந்தியப்பரே! எங்களின் நம்பிக்கையும் வழித்துணையுமாய் இருப்பவர் நீரே! எல் : இன்று நாங்கள் அனைவரும் / உம்மிடம் வருகிறோம் / நீர் எங்களுக்கு பெற்றுத்தந்த / எல்லா அருள் வரங்களுக்கும் / இறைவனுக்கும் நன்றி செலுத்துகின்றோம். இறைவனின் புனிதரே / எங்களின் பாதுகாவலரே / நாங்கள் உம்மை நேசிப்பது மட்டுமல்லாமல், எங்கள் அன்பினால் உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும் / பிறரையும் உம்மிடம் கொண்டுவர / எங்களால் இயன்றவரை செய்வோம் என வாக்களிக்கின்றோம். குரு : இறைவனின் புனித சீடரே இயேசுவின் அன்பைப் பெற்றவரே நாங்கள் கேட்கும் இந்த மன்றாட்டுகளை இறைவனிடம் பரிந்து பேசி எங்களுக்கு பெற்றுத்தாரும். எல் : துன்ப துயரங்களை பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளவும் / சோதனைகளை வெல்லும் பலத்தையும் / இயேசு கிறிஸ்துவின் தூய அன்பையும் / நல்ல மரணம் அடையும் அருளையும் / உன் அன்பிலும், அன்னை மரியாளோடும் / உயிர்த்த கிறிஸ்துவோடும், என்றென்றும் வாழ அருள் புரியும். குரு : வேத சாட்சியான புனித சந்தியாகப்பரே எல் : எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் குரு : எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உமது அழைத்தலை ஏற்று, உம்மை பின் தொடர்ந்த சீடர்களை, உமக்குப் பின் உமது பணியை தொடர்ந்து செய்து, மறைசாட்சிகளாய் இருக்கும் அருள் அளித்தீரே அவர்களின் புனிதப் பணியால் புதுமைகளை செய்து உம்மைப் புகழும் வரத்தை தந்தீரே! எங்கள் பாதுகாவலரான புனித சந்தியாகப்பரின் மகிமையை போற்றி புகழ, இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுகளைக் கேட்டருளும். உமது அருட் செயல்களுக்காய் எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக் கொண்டு எங்கள் விண்ணப்பங்களை கேட்டு அருள்புரிவீராக. எல் : சக்தி வாய்ந்த புனித சந்தியாகப்பரே / வல்லமை நிறைந்த உமது திருப்பெயரை / கூவி அழைக்கின்றோம் / வாழ்வோரின் பாதுகாவலும் / மரிப்போரின் துணையுமாய் இருக்கிறவரே! உமது திருப்பெயர் என்றும் எங்கள் நாவில் ஒலிப்பதாக. எங்கள் சோதனை நேரங்களிலும் / மரண வேளையிலும் உமது திருப்பெயரை கூவியழைத்து / உமது திருப்பெயரின் சக்தியையும், நம்பிக்கையையும் பெறுவோமாக! இயேசுவால் அதிகம் அன்பு செய்யப்பட்ட புனிதரே / உம்மை அழைக்கும் போதெல்லாம் / எம்மோடு இருப்பீராக / நாங்கள் உம் திருப்பெயரை அழைப்பதோடு மட்டும்மல்லாமல், நீரே எங்கள் முன்மாதிரியை என்று / எங்கள் அனுதின வாழ்வில் / பிறருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்வோம் என உறுதியளிக்கிறோம். குரு : நமது தேவைகளுக்காக நம் திருத்தலப் புனிதரை நோக்கி ஒரே குடும்பமாய் மன்றாடுவோமாக. எல் : வேத சாட்சியான புனித சந்தியாகப்பாரே! எங்களின் பாதுகாவலரே / இறைவனின் அன்பு சீடரே / உம்மீதுள்ள முழு நம்பிக்கையுடன் உம் திருமுன் முழந்தாளிடுகிறோம். எங்கள் அனுதின வாழ்வில் அலைக்கழிக்கும் / துன்ப துயரங்கள், சிக்கல்கள் / ஏற்றத்தாழ்வுகள், வறுமை, பிணிகள், முதலியவற்றால் வேதனையுற்று / எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. தன்னலம் / பொறாமை, கோபம் முதலியவற்றால் கட்டப்பட்டு, எங்கள் பலவீனத்தால் / கிறிஸ்துவ வாழ்வின் / அடையாளத்தை இழந்து / வழி தெரியாது தவிக்கின்றோம். இரக்கம் நிறைந்த புனிதரே / எங்கள் மேல் இரக்கம் வைத்து தீய வாழ்விலிருந்து விடுபட்டு / உம்மைப் போல் புனித வாழ்வு வாழ / இயேசுவிடம் மன்றாடி எங்களுக்கு அருள்புரியும் / இறைவனின் திட்டத்தின் பொருட்டு வரும் துன்பங்களை ஏற்கவும் / சோதனைகளை எதிர்த்து நின்று / சாதனை புரியும் பலத்தையும் / சகிப்புத் தன்மையையும் எங்களுக்குத் தாரும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் / கிறிஸ்துவின் அன்பிலும், வல்லமையிலும் நம்பிக்கை வைத்து / உமது பரிந்துரையோடு அருள்புரிய / கெஞ்சி மன்றாடுகிறோம் - ஆமென். *🌹🌿விண்ணப்பங்கள் மற்றும் நன்றியறிதல்களை வாசித்தல் பொது மன்றாட்டுகள்🌿🌹* 1. அன்பின் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைத்து துறவியர்கள், நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், அனைவருக்கும், ஞானத்தையும் விவேகத்தையும் தந்து, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை சரியான வழியில் நடத்தி செல்ல வேண்டுமென்று. எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2. அன்பின் ஆண்டவரே! மக்கள் அனைவரும் சமாதானத்திலும், ஒற்றுமையிலும், அன்பிலும் நிலைத்து வாழ்ந்து முதல் கிறிஸ்துவர்களைப் போல், ஜெபத்திலும், பகிர்தலிலும் ஒரே அன்பியமாய் வாழ வேண்டுமென்று. எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம். 3. இரக்கம் நிறைந்த இறைவா! இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் அனைத்து இளைஞர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர், தங்கள் எதிர்கால வாழ்வை தூய ஆவியின் துணையால் கண்டுணர்ந்து தீமைகளை அகற்றி, நன்மைகளை புரிந்து, பெற்றோர், பெரியோர், வழிகாட்டுதலில் நலமுடன் வாழ வேண்டுமென்று. எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. நம்பினோர்க்கு வாழ்வளிக்கும் இறைவா! இங்கு உம்மை நம்பி வந்துள்ள அனைவரின் கருத்துகளுக்காகவும், மன அமைதிக்காகவும், உடல் நலத்திற்காகவும், குடும்பத்திலும் ஊரிலும் ஒற்றுமையையும், சமாதானத்தையும், வறுமை, வறட்சி நீங்கி வளமான வாழ்வையும் தந்து காத்தருள வேண்டுமென்று. எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம். 5. இறைவா மக்கள் அனைவரும் உமது வல்லமையை காணவும், உமது அளவில்லா அன்பை உணர்ந்து, அதில் நிலைத்து வாழவும், உம்மை நம்பி இறந்துபோன அனைத்து விசுவாசிகளின் ஆன்ம இளைப்பாற்றிக்காவும், இறக்கும் தருவாயில் அவதிப்படும் அனைவருக்கும் அமைதியான நல்ல மரணத்தை தந்தருள வேண்டுமென்று. எல் : வேதசாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம். நன்றியறிதல் ஜெபம்! இறைவா! உம் மக்களாகிய எங்களுக்கு / புதிய அருள் வாழ்வை அளிப்பதற்காகவும் / திருச்சபை மூலம் நீர் தந்துள்ள / திருவருட் சாதனங்கள் வழியாக / நாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் இந்த நவநாள் வழிபாட்டில் பங்கு பெற்று / அடைந்த எல்லா வரங்களுக்காகவும் எங்கள் நம்பிக்கையால் / நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள / அனைத்து உதவிகளுக்காகவும், வேத சாட்சியான புனித சந்தியாகப்பர் வழியாக / இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம். மென்மேலும் நாங்கள் / உம்மீது உள்ள நம்பிக்கையை இழக்காது / என்ன நேர்ந்தாலும் உறுதியான மனதோடு / உம்மை பின் செல்லும் வரம் தாரும் - ஆமென். *✝️நோயாளிகளை ஆசிர்வதித்தல்❣️* குரு : நாம் அனைவரும் இறைவனின் ஆசிரை நிறையப் பெற்று, உடல் உள்ள நோய்களிலிருந்து விடுபட ஒன்று சேர்ந்து ஜெபிப்போமாக. எல் : தந்தையே இறைவா / உடல் நோயால் வருந்தும் உம் மக்களை பாரும் / நீர் உருவாக்கிய ஆன்மாக்களுக்கு / ஆறுதல் தாரும் / நாங்கள் துன்பங்களினால் தூய்மை அடைந்து / உமது இரக்கத்தினால் விரைவில் / எங்கள் உடல் உள்ள நோய்கள் குணமாகும்படி / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் / உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம் ஆமென். குரு : (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களை / காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாக இருக்க, உங்களுக்கு பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக பிதா சுதன் தூய ஆவியின் பெயராலே. எல் :ஆமென். குரு : இங்கு கூடியுள்ள நாம் அனைவரும் புனித சந்தியாகப்பரை நோக்கி நம்பிக்கையுடன் ஜெபிப்போம். (குருவானவர் இப்போது தீர்த்தம் தெளிப்பார்) எல் : தேவ தாயினால் மிகவும் அன்பு செய்யப்பட்ட சந்தியாகப்பரே / துன்புறும் மக்களுக்கு / என்றும் உதவி செய்ய முன்வரும் புனித சீடரே / உலக, உடல் ஆசையாலும் / சாத்தானின் சோதனைகளினாலும் / நாங்கள் படும் துன்பங்கள் ஏராளம் / எங்களின் கவன குறைவினால் / உமது வார்த்தைகளை மறந்து / ஜெபத்தில் ஆர்வமின்றி / நம்பிக்கையை இழந்து / துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்றோம் / எனவே நீர் எங்கள் மீது இரக்கம் வைத்து / எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி / துன்ப வேளையில் நாங்கள் மனம் தளர்ந்து போகாமல் / இறைவனின் முழு நம்பிக்கை உள்ளவர்களாக / வாழச் செய்தருளும் / துன்பங்களை தீர்க்கும் புனித சந்தியாகப்பரே / அலகையின் எந்த சூழ்ச்சிக்கும் இடம் தராது / இடியின் மகனாய் வாழ்ந்தவரே / எங்கள் பலவீனத்தால் தவறி விழாமல் காத்தருளும் / இரக்கம் நிறைந்த புனித சந்தியாகப்பரே / எங்களை சூழ்ந்திருக்கும் இடையூறுகளிலிருந்து நாங்கள் கலங்கி தவிக்காதபடி / தேற்றி அரவணைத்தருளும் / காணாமல் போன பொருட்களை கண்டடையச் செய்தருளும் / உம்மை நம்பி வேண்டும் / எங்கள் அனைவரின் ஜெபங்களையும் / நீர் ஏற்று, வெற்றி பெறச் செய்து / எங்கள் மனம் மகிழச் செய்தருளும். எங்களை சூழ்ந்திருக்கும் / அனைத்து தீய சக்திகளையும் விரட்டியடித்து / உம்மைப் போல் இறைவனுக்கு சாட்சியம் புரிந்து / வாழும் வரத்தை பெற்றுத் தாரும் / எங்கள் புனித வாழ்விற்காக இறைவனை மன்றாடும் / உமது புனித வாழ்வில் / மரியன்னை உமக்கு துணை புரிந்தது போல / எங்களுக்கும் அன்னை துணை புரிய மன்றாடும் / எங்கள் வாழ்வை உமது புகழ்ச்சியோடு / ஒன்று சேர்த்து / இறுதியில் நல்ல மரணம் அடைந்து / விண்ணக வாழ்வின் பேரின்பத்தை பெற / இறைவனை மன்றாடும் / - ஆமென். குரு : இறைவனின் அன்னையும் நம் அன்னையுமான புனித மரியாளின் துணையை புனித சந்தியாகப்பர் போன்று நாமும் வேண்டி, புகழ்ந்து அன்னையின் வல்லமை மிக்க பாதுகாப்பில் நம்மை அர்பணிப்போமாக. எல் : அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க ... குரு : இயேசு கிறிஸ்து தரும் அன்பையும் அருள் வரங்களையும் பெற நாம் தகுதி உள்ளவர்களாகும்படியாக, எல் : இயேசு கிறிஸ்துவின் முதல் மறைசாட்சி அப்போஸ்தலரான புனித சந்தியாகப்பாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். *குரு :* *ஜெபிப்போமாக .* எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உமது சீடரான புனித சந்தியாகப்பரை போற்றி புகழும் எங்களுக்கு, என்றும் உதவி செய்ய தயாராக இருக்கும் புனிதரை எங்களுக்கு தந்துள்ளீரே அந்த புனிதரின் புதுமையை நாடி வரும் நாங்கள், உமது மீட்பின் பலன்களை இறுதிவரை அடைந்து, உமக்கும் புனித சந்தியாகப்பருக்கும், அன்னை மரியாளுக்கும் ஏற்ற மக்களாக வாழ்ந்து, உம்மை சாட்சிகளாய் என்றும் வாழ எங்களுக்கு அருள் தாரும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. *ஆமென்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
*Following are the Rosary intentions to be recited in the family prayer by all the families today.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *12.02.2026 (Thursday)* *⚜️LUMINOUS MYSTERIES⚜️* *🌿🌹First Luminous Mystery🌹🌿* *The Baptism in the Jordan.* Today's Saint St.Apollonia died as a martyr and she is the patron saint of all the dentists and for tooth problems. Let us pray for all the people who are suffering with tooth related problems and let us recite this decade for them to be healed completely. *🌿🌹Second Luminous Mystery🌹🌿* *The Wedding at Cana.* Today's Gospel Acclamation says, *"Accept and submit to the word which has been planted in you and can save your souls ".* Let us realise that the words given to us, will redeem our life and let us live as per the word of God. For this intention let us recite this decade. *🌿🌹Third Luminous Mystery🌹🌿* *The Proclamation of the Kingdom.* In today's Gospel, a Syrian woman said to Jesus, *"the house dogs under the table can eat the children's scraps."* and received healing from Jesus for her daughter. Let us learn from her the unshakable faith and for this intention let us recite this decade. *🌿🌹Fourth Luminous Mystery🌹🌿* *The Transfiguration.* Our Lady of Lourdes appeared to Bernadette 18 times and in 15 appraisal Mother Mary insisted to recite the Rosaries of Joyful, Sorrowful and Glorious mysteries. Let us practice the habit of reciting rosary in our family prayers and for this intention let us recite this decade. *🌿🌹Fifth Luminous Mystery🌹🌿* *The Institution of the Eucharist.* Today, Thursday, dedicated to our Infant Jesus and St.Jude. Let us pray for all the children who are sick. May our Infant Jesus, touch and heal them and for this intention let us recite this decade. *🙏🏻Amen.🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - Lif@ Giving Word February 12 Remember me, Lord; 0 when you show favor 1o Kings 11: 4-13 your people; help Psalms 106: when you me 3-4,35-37,40 Mark deliver fhem 7: 24-30 Psalms 106:4 US Tuu Lif@ Giving Word February 12 Remember me, Lord; 0 when you show favor 1o Kings 11: 4-13 your people; help Psalms 106: when you me 3-4,35-37,40 Mark deliver fhem 7: 24-30 Psalms 106:4 US Tuu - ShareChat
🍂🍃🍂🍃🍂🍃🍂 *இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *12.02.2026 (வியாழன்)* *⚜️ஒளி நிறை மறையுண்மைகள்⚜️* *🌿🌹முதலாவது. ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,* மறைசாட்சியாக மரித்தவரும், இன்றைய புனிதருமான புனித அப்பல்லோனியா, பல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பல் மருத்துவர்களின் பாதுகாவலராவார். பல் சம்பந்தப்பட்ட நோய்களினால் அவதியுறுவோர் அவற்றிலிருந்து பரிபூரண சுகம்பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹இரண்டாவது. ஆண்டவர் இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,* *உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது."* என இன்றைய நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் கூறப்பட்டுள்ளது. நமக்கு அளிக்கப்பட்ட இறைவார்த்தை நம்மை மீட்கவல்லது என்பதை உணர்ந்து இறைவார்த்தையின்படி நாம் எந்நாளும் நடந்திட வேண்டி இந்த 8இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்பபோம். *🌿🌹மூன்றாவது. ஆண்டவர் இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், *"சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே."* என இயேசுவிடம் கூறி தமது விசுவாசத்ததால் தமது மகளை குணம்பெற வைத்த கிரேக்கப் பெண்ணிடமிருந்து தளரா விசுவாசத்தை நாம் கற்றுக்கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹நான்காவது. ஆண்டவர் இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,* பெர்னதெத்துக்கு 18 முறை தரிசனமளித்த தூய லூர்து அன்னை, திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களில் 15 மறையுண்மைகளை நாளுக்கு ஒன்றாக தியானித்து செபிக்க வலியுறுத்தினார். குடும்ப செபமாலை செபிக்கும் பழக்கத்தை இல்லங்களில் தொய்வில்லாமல் கடைபிடிக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹ஐந்தாவது. ஆண்டவர் இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,* குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - Bog91bo5 999 குரும Oಕgoma 12 ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை  அரசர்கள் நினைவு கூரும்! 11: 4-13 அவர்களை நீர் திருப்பாடல் விடுவிக்கும்போது 106: 3-4,35-37,40 எனக்கும் மாற்கு துணைசெய்யும்ப" 7: 24-30 திருப்பாடல்கள் 106:4 US Tuu Bog91bo5 999 குரும Oಕgoma 12 ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை  அரசர்கள் நினைவு கூரும்! 11: 4-13 அவர்களை நீர் திருப்பாடல் விடுவிக்கும்போது 106: 3-4,35-37,40 எனக்கும் மாற்கு துணைசெய்யும்ப" 7: 24-30 திருப்பாடல்கள் 106:4 US Tuu - ShareChat