
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
*இயேசுவின் திரு இருதய ஜெபங்கள் மற்றும் புகழ்மாலை*
🌹🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_(இதய ஆண்டவரிடம் இந்த 3 ஜெபங்களை ஜெபித்து இறையாசீரை பெருவோம்)_
*இயேசு நாதருடைய திருஇருதயத்துக்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற ஜெபம்*
🕯️💞🕯️💞🕯️💞🕯️💞
இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்துவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம்.
நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.தவறி எங்களில் யாராவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.இதுவுமன்றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்று கோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, இந்த விசாரணையிலுள்ள சகல பிள்;ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரணசமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.
திவ்விய இயேசுவே, முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும்.
*- 🙏🏻ஆமென்.🙏🏻*
👑🌏👑🌏👑🌏👑🌏👑
*இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்*
👑🌏👑🌏👑🌏👑🌏👑
ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழித்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.
ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது.
*🌹- ஆமென்.🌹*
💖🍀💖🍀💖🍀💖🍀💖🍀
*திரு இருதய*
*மன்றாட்டுமாலை*
💖🍀💖🍀💖🍀💖🍀💖🍀
ஆண்டவரே இரக்கமாயிரும் -2
கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2
ஆண்டவரே இரக்கமாயிரும்-2
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும்-2
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்-2
பரமண்டலங்களிலிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா,
*எங்கள்மேல் இரக்கமாயிரும் சுவாமி.*
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
*எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.*
தூய ஆவியாகிய இறைவா,
*எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.*
என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - *எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.*
பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- *எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.*
உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே !
*இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.*
உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே !
*இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.*
உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே !
*இயேசுவே எங்களைத் தயை செய்து இரட்சித்தளும் சுவாமி.*
*முதல்வர்* - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே
*துணைவர்* - இயேசுவே எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்ததாக இருக்கும்படிக்கு கிருபை செய்தருளும்.
*செபிப்போமாக:*
💝💝💝💝💝💝💝
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
*-🙏🏻ஆமென்🙏🏻*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*இயேசுவின் திரு இருதயச் செபமாலை*
💞🕯️💞🕯️💞🕯️💞🕯️💞🕯️
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
கிறிஸ்துவின் திரு ஆத்துமமே, -என்னைத் தூய்மையாக்கும்
கிறிஸ்துவின் திரு உடலே, -என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை நிரப்பியருளும்.
கிறிஸ்துவின் திருவிலாத் தண்ணீரே, என்னை கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே, என்னைத் திடப்படுத்தும்.
ஓ, நல்ல இயேசுவே, எனக்கு செவி சாய்த்தருளும்.
உம் திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.
உம்மை விட்டு என்னைப் பிரியவிடாதேயும்.
பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
என் மரண நேரத்தில் என்னை அழைத்து, உம் புனிதரோடு எக்காலமும்
உம்மைப் புகழ எனக்குக் கற்பித்தருளும் - ஆமென்.
*பத்து மணிக் கருத்துக்கள்:*
🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸
1. பிற சமயத்தினரால், பிரிவினைச் சகோதரரு அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
2. மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
3. நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
4. மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
5. எல்லாரும் திருஇருதயத்தை அறிந்து அன்புசெய்யுமாறு அமல அன்னை, புனிதர் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம்.
*சிறிய மணி:* இயேசுவின் மதுரமான திருஇருதயமே - என் சிநேகமாயிரும்.!
*பத்து மணி முடிவில்:* மரியாவின் மாசற்ற இருதயமே, என் இரட்சணியமாயிரும்
*பெரிய மணி :* இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே! - என் இதயத்தை உம் இதயம் போல் ஆக்கியருளும்!
*ஐம்பது மணி முடிவில்:*
🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸
*முதல்வர்:* இயேசுவின் திரு இதயமே
*எல்லாரும் :* எங்கள்மேல் இரக்கமாயிரும்.
*முதல்வர்:* சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற திரு இருதயமே
*எல்லாரும் :* எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
*முதல்வர்:* இயேசுவின் திரு இருதயம்
எல்லாரும்: எங்கும் போற்றப்படுவதாக.
*முதல்வர்:* திரு இதயத்தின் அன்பரான புனித சூசையப்பரே
எல்லாரும் :எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இயேசுவின் திருஇருதயமே ! உமது இராச்சியம் வருக. எங்கள் பாவங்ளைப் பொறுத்தருளும். எனது செபம், தபம், அனுதின அலுவல், இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது கடைசி மூச்சு வரை உம்மை நேசிக்கவும் உமக்கு மகிமை வருவிக்கவும் வேண்டிய வரம் தந்தருளும்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்*
~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ் அவர்கள்
பாகம்-9
6-வது காட்சி
அன்று பெப்ருவரி மாதம் 21-ம் நாள். ஞாயிற்றுக்கிழமை, தவக்காலத்தின் முதல் ஞாயிறு. காலை 6 மணி. பெருங்கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் ஒரு மருத்துவர் இருந்தார். காட்சியின்போது பெர்னதெத்தின் மனநிலை, நாடித் துடிப்பு போன்ற பல தகவல்களை அறிய அனுப்பப்பட்டிருந்தார்.
வந்தாள் பெர்னதெத் வழக்கம் போல் காட்சி தொடங்கியது. முகம் மலர்ந்தது. சில நேரங்களில் முகத்தில் கவலை படர்ந்தது. விழிகளிலிருந்து கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் விழுந்து தெறித்தன.
அருகில் இருந்த மருத்துவர் சாதாரண நிலையில் பெர்னதெத்தை நன்றாகப் பார்த்திருக்கிறார். இப்போது அவளுடைய பரவச நிலை. நாடித் துடிப்பு, செயல்கள் அனைத்தையும் உற்றுக் கவனித்த அவர் மருத்துவ ரீதியாக இதற்கு விளக்கம் தர யாராலும் முடியாது என்றார். பரவச நிலை நீண்ட நேரம் நீடித்தது.
பெர்னதெத் தெளிவான. சாதாரண நிலைக்கு வந்ததும், மருத்துவர் அவளிடம் "எப்படி பரவச நிலையிலிருந்து விடுபடுகிறாய்?..." என்று பல கேள்விகளைக் கேட்டார். அதற்கு இவ்வாறு பெர்னதெத் பதில் கூறினார்.
அந்த அம்மாவின் பார்வை என்னிடமிருந்து விலகியதும் நான் சுய உணர்வு பெற்றேன். அப்போது அம்மா என்னிடம், "பாவிகளுக்காக செபி. பாவ நிலையில் தள்ளாடித் தத்தளிக்கும் உலகத்துக்காக செபி” என்றார்கள்.
பெர்னதெத்துக்குத் துன்பம் தொடங்கியது. மசாபியேல் குகையருகே பெருகி வரும் கூட்டத்தைக் காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. உண்மையை அறியவும். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். பெர்னதெத்தைக் கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்டுத் துளைத்தும், எச்சரித்தும், பயமுறுத்தியும் அவள் மீது பாய்ந்தனர். அவள் யாருக்கும் அஞ்சாமல் உண்மையை விளக்கினாள்.
பெர்னதெத்தின் தந்தை பிரான்ஸ்வா சூபீரு பெர்னதெத் குகைக்குப் போக யாரும் தடை செய்யாமல் பார்த்துக் கொண்டார். அதிகாரிகளிடம் வாதாடினார்.
காட்சி நடைபெறவில்லை
பெப்ருவரி மாதம் 22-ம் நாள், திங்கட்கிழமை, திட்டமிட்டபடி காலை 8.30 மணிக்கு கெபிக்குச் சென்றாள் பெர்னதெத். பெரும் கூட்டம் கூடியிருந்தது. பெர்னதெத் நீண்ட நேரம் செபமாலை செபித்துக் கொண்டிருந்தான்.
பின் எழுந்து கூட்டத்தில் சிலரிடம், இன்று அம்மா குகைக்கு வரவில்லை என்றாள். பெரிய ஏமாற்றம்! பெர்னதெத்துக்கு தன் அழுகையை அடக்க முடியவில்லை.
“கெபிக்குச் செல்லும்போது, கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்னைத் தடை செய்தது. மிகச் சிரமப் பட்டுத்தான் நடந்து வந்தேன்'' என்று தன் பெற்றோரிடத்தில் பெர்னதெத் சொன்னாள்.
ஏழாவது காட்சி
அன்று பெப்ருவரி மாதம் 23-ம் நாள். செவ்வாய்க் கிழமை. அதிகாலை 6 மணிக்கெல்லாம் கூட்டம் கூடி விட்டது. குகையில் தோன்றும் அம்மாவைப் பார்க்க முடியாவிட்டாலும், பெர்னதெத்தின் பரவச நிலையைப் பார்க்கவே ஆர்வம் காட்டினர் மக்கள். காட்சியை நம்ப மறுத்த மதிப்பிற்குரிய சில பெரிய மனிதர்களும் அன்று வந்திருந்தனர். இவர்கள் மசாபியேல் குகையைச் சுற்றி மேலும் கீழும் ஆராய்ந்து பார்த்தார்கள். யாரையும் அவர்கள் காண முடியவில்லை. இவர்களுள் மருத்துவர்கள் டாக்டர் டோசு (Dr. Dazous), டாக்டர் எஸ்ட்ராட் (Dr. Estrade) என்ற இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் லூர்து நகர் காட்சிகள் பற்றி நன்கு ஆராய்ந்து வரலாறு எழுதியவர்கள்.
பெர்னதெத் தன் அம்மா. தன் அத்தை, மதாம் பெர்னர்ட், மதாம் பேசில் இவர்களுடன் கெபிக்கு வந்து சேர்ந்தாள். முழந்தாளிலிருந்து “அருள் நிறைந்த மரியாயே... தொடங்கியவுடனே பரவசமானாள். ஒரு மணி நேரம் இதே நிலையில் இருந்தாள். இக்காட்சியில் அம்மா(தேவமாதா) பெர்னதெத்தைப் பெயர் சொல்லி அழைத்தார்கள்
"பெர்னதெத்!" என்று மாதா அழைத்தார்கள்
“அம்மா, இதோ இங்கேதான் இருக்கிறேன். என்றாள் பெர்னதெத்
"உனக்கு ஒரு இரகசியத்தைச் சொல்லப் போகிறேன். இந்த இரகசியம் உனக்கு மட்டும்தான்! இது உன்னைப் பற்றிய இரகசியம். இதை உலகத்தில் யாருக்கும் வெளியிட மாட்டேன் என வாக்குறுதி தருவாயா?" என்று மாதா கூறுகிறார்கள்
"ஆம், வாக்குறுதி அளிக்கிறேன் அம்மா." என்று பெர்னதெத் கூறுகிறார்
"சரி, என் மகளே, இப்போது நீ குருக்களிடத்தில் போய் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்ட நான் விரும்புவதாகச் சொல்." என்கிறார்கள் மாதா
பெர்னதெத்துக்கு தேவமாதா சொன்ன மூன்று இரகசியங்களையும் இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைத்தது போல் தன் நெஞ்சுக்குள் பூட்டி வைத்துக் காப்பாற்றினாள். பெர்னதெத். யாருக்கும் சொல்லக் கூடாது என அன்னை எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். வாக்குறுதிப்படி நடந்து வருகிறேன். நான் நித்திய பேரின்ப வீட்டுக்குச் செல்லும் வரை காப்பாற்றி வருவேன்" எனக் கேள்வி கேட்பவர்களிடம் சொல்வாள் பெர்னதெத்
தொடர்ந்து இனைந்திருங்கள்.....
ஆமென்.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்




![✝️இயேசுவே ஜீவன் - ೩ Comumo nn 88fulne 7L எரு )[0IE8{ . نث» @Nkt % IMVIK WWEW IInIT] I (II AHMM` Mnವe I=y' !(uి) EMvwy {02 9 ` Polocane 1LLLLL ea {L331s' Tourvouo cowcne ೆ೦ Dடடo` Cmoa ٥٥٨٥٥ rಯoy 50 IIILVIY ' ೩ Comumo nn 88fulne 7L எரு )[0IE8{ . نث» @Nkt % IMVIK WWEW IInIT] I (II AHMM` Mnವe I=y' !(uి) EMvwy {02 9 ` Polocane 1LLLLL ea {L331s' Tourvouo cowcne ೆ೦ Dடடo` Cmoa ٥٥٨٥٥ rಯoy 50 IIILVIY ' - ShareChat ✝️இயேசுவே ஜீவன் - ೩ Comumo nn 88fulne 7L எரு )[0IE8{ . نث» @Nkt % IMVIK WWEW IInIT] I (II AHMM` Mnವe I=y' !(uి) EMvwy {02 9 ` Polocane 1LLLLL ea {L331s' Tourvouo cowcne ೆ೦ Dடடo` Cmoa ٥٥٨٥٥ rಯoy 50 IIILVIY ' ೩ Comumo nn 88fulne 7L எரு )[0IE8{ . نث» @Nkt % IMVIK WWEW IInIT] I (II AHMM` Mnವe I=y' !(uి) EMvwy {02 9 ` Polocane 1LLLLL ea {L331s' Tourvouo cowcne ೆ೦ Dடடo` Cmoa ٥٥٨٥٥ rಯoy 50 IIILVIY ' - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_252542_17303dc0_1770986251067_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=067_sc.jpg)

![⛪ வேளாங்கண்ணி சர்ச் - ٥٥٥٥ Catholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புனித அசிசி சிறிய சகோதரர்கள் 6IgIU பிரான்சிஸீகன் சபையை எப்போது தொடங்கினார் ? ahalic Caolic నన 12090 606 Catholic ٥٥٥٥ Catholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புனித அசிசி சிறிய சகோதரர்கள் 6IgIU பிரான்சிஸீகன் சபையை எப்போது தொடங்கினார் ? ahalic Caolic నన 12090 606 Catholic - ShareChat ⛪ வேளாங்கண்ணி சர்ச் - ٥٥٥٥ Catholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புனித அசிசி சிறிய சகோதரர்கள் 6IgIU பிரான்சிஸீகன் சபையை எப்போது தொடங்கினார் ? ahalic Caolic నన 12090 606 Catholic ٥٥٥٥ Catholic YouTube] PRAISC TICLORD திருச்சபை அறிவோம் புனித அசிசி சிறிய சகோதரர்கள் 6IgIU பிரான்சிஸீகன் சபையை எப்போது தொடங்கினார் ? ahalic Caolic నన 12090 606 Catholic - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_63390_38acc46e_1770921061394_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=394_sc.jpg)

