
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
மாசற்ற இருதயத்திற்கு ✝️குடும்பங்களை🛐 ஒப்புக்கொடுக்கும் ஜெபம்💘*
🌻💘🌻💘🌻💘🌻💘🌻
ஒ மரியாயின் மாசற்ற இருதயமே இயேசுவின் திருஇருதயத்தின் மாதாவே,எங்கள் இல்லத்தின் அரசியும் அன்னையுமாகிய மாமரியே,உமது அதிமிகு விருப்பத்தின்படி எங்களை உம்மிடம் அர்பணிக்கின்றோம், நீரே எங்கள் குடும்பங்களை ஆண்டருளும் எங்கள் ஒவ்வொருவரையும் வழிநடத்தும். இயேசுவின் திருஇருதயம் எவ்வாறு உம்மை ஆண்டு நடத்தினாரோ, அது போல் எங்களையும் ஆண்டு வழிநடத்தும்படி செய்தருளும். ஒ அன்பு நிறைந்த அன்னையே, நாங்கள் எப்பொழுதும் வளமையிலும், வறுமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும், வாழ்விலும், மரணத்திலும், உம்முடையவர்களாகவே இருக்கும்படி செய்தருளும்.
ஒ இரக்கமுள்ள மாதாவே, கன்னியர்களின் அரசியே, எங்கள் ஆன்மாக்களையும், இருதயங்களையும் காத்தருளும். அகங்காரம் கற்புக்கெதிரன சிந்தனைகள் அஞ்ஞானம் போன்ற தீமைகள் எங்களை நெருங்காதவாறு செய்தருளும். மாதாவே தேவரீருக்கும், தேவரீருடைய திருமகனுக்கும் எதிராக செய்யப்படும் எண்ணற்ற பாவங்களை பரிகரிக்க ஆவல் கொண்டுள்ளோம். தாயே எமது இல்லங்களிலும் உலகெங்குமுள்ள இல்லங்களிலும் கிறிஸ்து நாதரின் நேசமும் நிதியும் பிரகாசிக்க செய்தருளும்.
ஆண்டவரே, உமது புண்ணிய மாதிரிகையை நாங்கள் கண்டு பாவிக்கவும், ஓர் உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழவும், அடிக்கடி தேவநற்கருணை வாங்கவும், முகத்தாட்சன்யத்தை புறந்தள்ளவும் வாக்களிக்கின்றோம். வரப்பிரசாதத்தின் சிம்மாசனமே அரிய நேசத்தினுடைய மாதாவே நம்பிக்கையோடு உம்மை அண்டி வருகிறோம். உமது மாசற்ற இருதயத்தில் பற்றியெரியும் தெய்வீக நெருப்பு எமது இருதயத்தில் பற்றியெரியச் செய்யும்
தாயே பரிசுத்தனமும், ஆன்ம தாகமும், பரிசுத்த கிறிஸ்தவ வாழ்வும் என்மேல் சுமத்தும் அத்துனை சுமைகளையும் பரிகார கருத்தோடு தவமுயற்சியாக நாங்கள் உமது மாசற்ற இருதயத்தின் வழியாக இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். இயேசுவின் திருஇருதயத்திற்கும் மரியன்னையின் மாசற்ற இருதயத்திற்கும் முடிவில்லாத காலமும் நேசமும், புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக.
*🙏🏻ஆமென்.🙏🏻*
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
*சதா சகாய மாதா நவநாள் ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை*
🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺
சதா சகாய மாதாவே, உம்மிடத்தில் சரணடைந்து நம்பிக்கையுடன் உமது பாதத்தண்டையிலிருக்கும் நீசப் பாவியான என்னை உற்று நோக்கியருளும். இரக்கத்தின் மாதாவே! என் பேரில் இரக்கமாயிரும். பாவிகளின் அடைக்கலமும் நம்பிக்கையுமென எல்லோராலும் அழைக் கப்படுகிற நீரே என் அடைக்கலமும் நம்பிக்கையுமாயிரும். சேசுவின் நேசத்துக்காக எனக்கு சகாயம் புரிந்தருளும். சதாகாலமும் உமது பிள்ளையாகப் பாராட்டி உமக்குக் கையளிக்கும் இந்த நீசப் பாவியாகிய என்னிடம் உமது கரங் களை நீட்டியருளும். உம்மிலே நம்பிக்கை வைப் பதுதான் நித்திய ஈடேற்றத்தின் பிணை என்று நான் எண்ணுகிறேன். நான் உம்மில் வைக்கும் இந்த நம்பிக்கையைச் சர்வேசுரன் தமது இரக்கத் தால் எனக்குத் தந்ததற்காக நான் அவரை வாழ்த் தித் துதிக்கிறேன். உம்மிடம் என்னை கையளிக் காததால் இவ்வளவு காலமும் நான் அநேக தடவை களில் நீசத்தனமாய்ப் பாவச் சோதனைகளில் விழுந்திருக்கிறேன். ஆனால் உமது உதவியால் நான் வெற்றியடைவேனென்று எனக்குத் தெரியும். என்னை உமக்கு நான் கையளித்தால், நீர் எனக்கு உதவி செய்வீர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் பாவத்தில் விழப் போகும் தறுவாயில் உமது உதவியைக் கேளாமல் விட்டு விடுவேனோ என்றும், அதனால் என் ஆத்துமத்தை இழந்து போக நேரிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.
ஆகையால் இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்குப் பெற்றுத்தரும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். பசாசு என்னுடன் போர் புரியும் போது நான் உம்மிடம் சரணடையவும், “ஓ மரியாயே, எனக்கு உதவி செய்யும். சதா சகாய மாதாவே, எனது ஆத்துமத்தை நான் இழந்து போக விடாதேயும்” என்று உம்மை நோக்கி வேண்டிக்கொள்ள கிருபை புரிந்தருளும்.
ஆமென்.
(அருள் நிறை மந்திரம் 9 முறை)
பரிசுத்த மரியாயே, கஸ்திப்படுகிறவர்களுக்கு உமது சகாயம் தந்தருளும். மனத்திடம் இல்லாத வர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை மகிழச் செய்தருளும். மனுக்குலத்துக்காக மன்றாடி யருளும். குருக்கள், ஆயர்களுக்காகப் பரிந்து பேசி யருளும். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்த சந்நியாசிகள் கன்னியர்களுக்காகவும் மனுப் பேசியருளும். உமது சதா சகாயத்தை வேண்டு வோர் உமது உதவியை உணரச் செய்தருளும்.
ஓ மாதாவே! நீர் எங்களுக்கு அடைக்கல மாயிருக்கிறீர். குறைகளிலும், துன்பங்களிலும் உதவி யாகவும் இருக்கிறீர்.
*🌺பிரார்த்திக்கக்கடவோம்🌺*
ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே! உமது மாதாவாகிய கன்னிமரியாயை எப்பொழுதும் உதவி செய்யத் தயாராயிருக்கும் தாயாக எங்க ளுக்குத் தந்தருளச் சித்தமானீரே. அவருடைய அற்புதமான சாயலை வணங்கி அன்னைக்குரிய உதவியை மிகவும் ஆவலுடன் வேண்டிநிற்கும் நாங்கள் உம்முடைய இரட்சண்யத்தின் பலனை சதாகாலமும் அனுபவிக்க தகுதியுள்ளவர்களா யிருக்கக் கிருபை செய்யும்படி தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். சதாகாலமும் சீவியரு மாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற சர்வேசுரா.
🙏🏻ஆமென்.🙏🏻
பரிசுத்த பாப்பரசருக்காக வேண்டிக் கொள்வோம். ஒரு பர. அருள். திரி.
🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻
*இடைவிடா சகாய அன்னையை நோக்கி மன்றாட்டு*
🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻
நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே, உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல், புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் , விரோதிகளின்பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும்.
மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே!
*- 🙏🏻ஆமென்.🙏🏻*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻
*✝️சதா சகாயமாதா✝️*
*🙏🏻பிரார்த்தனை🙏🏻*
🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻
🌹சுவாமி கிருபையாயிரும்
🌹கிறீஸ்துவே கிருபையாயிரும்
🌹சுவாமி கிருபையாயிரும்
🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
🌻கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
🌷பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா...
🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா...
🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா...
🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா...
🌻எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர் திருநாமம் உடைத்தான சதா சகாய மாதாவே...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக் கும் ஆபத்தான வேளையில் அதனை ஜெயங் கொள்ளும்படி...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷எங்களுடைய முழுமனதுடன் சேசுவை நேசிப்பதற்கு...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக் கியத்துக்கு உள்ளாவேனாகில் அதிலிருந்து உடனே எழுந்திருக்கும்படி,
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷பசாசின் ஊழியத்தில் ஈடுபடும்படியான தகாத வளையில் நான் சிக்கிக் கொள்ளுவேனாகில் அத்தளையைத் தகர்த்தெறியும்படி...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் விரைவில் ஞான உஷ்ணம் கொள்ளும்படி....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங் களைப் பெறுவதிலும், கிறீஸ்தவ பக்திக்குரிய கடமைகளை பக்தியாய் செய்யும்படி...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷என் சீவியத்தில் வரும் துன்ப சோதனை வேளைகளில்....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷என்னுடைய சுபாவ துர்ச்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், புண்ணிய வாழ்க்கையில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும் படி நான் செய்யும் முயற்சிகளிலும்....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய் கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என் பலம் குறைந்து போகும்போது....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷என் மரண வேளையில் என் ஆத்துமம் என் சரீரத்தைவிட்டுப் பிரிய போராடும்போது.....
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, பூஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி ஓ! என் தேவ தாயாரே, என் கடைசிநாள் பரியந்தம், என் கடைசி மூச்சு பரியந்தம்...
🌻எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே...
🌻 எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே,
🌻எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே,
🌻எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
*🌻ஜெபிப்போமாக:🌻*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சர்வ வல்லவரும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்கு துணை புரிய ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாயை உமது ஏக குமாரனுக்குத் தாயாராக்கத் திருவுளமானீரே! பரிசுத்த கன்னிமரியாயின் வேண்டுதலால் அடியோர்களின் பாவநோய் தீர்ந்து, பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சிநேகித்து சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக எங்களுக்குக் கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
*சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின் பேரில் தியானங்கள்..!!*
*சாம்பல் புதனுக்குப் பின்வரும் சனிக்கிழமை*
*4 - ம் நாள் தியானம்*
சேசுநாதருடைய ஆத்துமம் அடைந்த கஸ்தி வியாகுலங்கள்
*1-ம் ஆயத்த சிந்தனை -*
“என் ஆத்துமமானது மரணத்துக்கு ஏதுவான துயரம் கொண்டிருக்கிறது” என்று சேசுநாதர் தமது சீஷர்களுக்குத் திருவுளம்பற்றுகிற வாக்கியத்தை நீ கேட்பதாக ரூபிகரித்துக் கொள்.
*2-ம் ஆயத்த சிந்தனை -*
துன்ப துயர வேளையில் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு முழுதும் அமைந்திருப்பதற்காக தேவ உதவியை மன்றாடிக் கேள்.
*தியானம்:*
சேசுநாதர் துயரமடையவும் சஞ்சலப்படவும் பயப்படவும் தொடங்குகிறார். அற்பப் பாவ முதலாய் அணுகாமலிருந்த நமது திவ்ய கர்த்தர் இவ்வளவு பயமும் நடுக்கமும் கொள்வதற்குக் காரண மென்ன? அவர் கொஞ்ச நேரத்துக்குள்ளே படப்போகிற பாடுகளை எல்லாம் தூரதிருஷ்டியால் கண்டு வேதனைப்படுகிறார். தமது கையால் கணக்கற்ற நன்மை உபகாரங்களை அடைந்த யூதாஸ் இஸ்காரியோத் சதிமானமாய்த் தம்மைப் பிடிக்கத் தேடி திரிகிறதையும் தம்மைக் கட்டக் கயிறு சங்கிலிகளையும், தம்மை அடிக்கப் பிரம்பு சாட்டைகளையும், கற்றூணில் சேர்த்துக் கட்டி? தலையில் அழுத்த முள்முடி முதலியவைகளையும், அவமானமாய்க் கொல்லுகிறதற்குச் சிலுவை மரம் இருப்பாணி முதலிய ஆயுதங்களையும் தயார் செய்கிறதையும், தாம் படப் போகும் கஸ்தி துன்பம் அவமான நிர்ப்பந்தங்களையெல்லாம் தூரதிருஷ்டியால் பார்த்து விசனப்படுகிறார்.
முன்சொன்ன பயங்கரத்துக்குரிய காரியங்களை நினைக்கும் போது அவர் ஆத்துமம் அடைந்த துக்க மிகுதி இம்மாத்திரமென்று சொல்லி முடியுமோ? முன் சொன்ன கஸ்தி துயரங்களைச் சரீரத்தில் அநுபவிக்கப் போகிறதில் திருப்தியடையாமல் நமது மட்டில் அவருக்குள்ள கரைகாணாத சிநேகத்தைக் காட்டும் பொருட்டு ஆத்துமத்திலும் அவைகளை உணரத் திருவுளமானார். இப்படிப்பட்ட நிர்ப்பந்த வேளையில் நமது இரட்சகருக்கு மனமிருந்தால் மோட்ச ஆனந்தத்தைத் தமது தெய்வீகத்தால் ஸ்பரிசித்து மேற்கண்ட கஸ்தி நிர்ப்பந்தங்களை மாற்றிக் கொள்ளக் கூடுமானவராய் இருந்த போதிலும் அந்த உபாயங்களை அவர் தேடினதில்லை. நாமும் நமது திவ்ய ஆசிரிய ரைப் பின்பற்றி நமக்கு வரும் துன்பதுயரங்களில் முறைப்படாமல் சகலத்தையும் நல்ல மனதோடு அநுபவித்து சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்போமாக.
"என் ஆத்துமம் மரணத்துக்கேதுவான துயரம் கொண்டிருக்கிறது” என்று சொல்லுகிறார். இவ்வகையாய்ச் சேசுநாதர் தம் மனதில் அநுபவிக்கும் கஸ்தியையும் வியாகுலத்தையும் வெளிப் படுத்துவது ஏன்? அவர் தமது மனதில் அநுபவிக்கும் வியாகுலத்தை மனிதர் கண்டுபிடிக்கக் கூடாததைப்பற்றித் தாம் தேவனும், மனிதனுமாயிருக்கிறபடியால் மனுஷ சுபாவத்தில் தாம் படும் துன்பதுரிதங்களை உணர்ந்து அநுபவிக்கிறார் என்று காட்டும்படியாகவும்,
இரண்டாவது, அவர் தாபோர் மலையில் மறுரூபமானபோது மூன்று சீஷர்களுடைய கண்களை மங்கச் செய்து அவர்களுக்கு மயக்கம் வருவிக்கத்தக்க தமது மகிமைப்பிரதாபத்தைக்(மோட்சம்) காட்டியிருக்க, இப்போது அப்படிப்பட்ட ஆறுதலைத் தேடாமல் நமக்காக இந்தக் கஸ்தி துன்பங்களை முழுமனதுடன் அநுபவிக்கிறாரென்று காட்டும் படியாகவும், தமக்குண்டாயிருக்கிற வருத்தத்தை மற்ற அப்போஸ் தலர்களுக்கு வெளிப்படுத்தாமல் கொஞ்ச காலத்துக்குமுன் பரலோக இன்பத்தை ருசிபார்த்த இந்த மூன்று சீஷர்களுக்கு மாத்திரம் தெரியச் செய்கிறார்.
நாமும் யாதோர் காலத்தில் சந்தோஷம் அநுபவிக்க நேரிடும்போது சர்வேசுரன் நமக்குச் சீக்கிரத்தில் அனுப்பவிருக்கும் சிலுவையை நல்ல மனதோடு ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கக்கடவோம். கடைசியாய் நமக்கு எவ்வளவான அனுகூலங்கள் கிடைத்தபோதிலும் அதிலே பிரியம் கொள்ளாமல் பின் வரவிருக்கும் இக்கட்டுகளைப் பொறுமையுடன் அனுபவிக்கத் தயாராயிருப்போமாக.
ஆமென்.
தொடரும்... #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்





![✝️இயேசுவே ஜீவன் - catholic] Worship the Lord vour God ond serve only ائهم % Matthew 4:10 Youlube Cathotc TAMIL CATHOLIC TV catholic] Worship the Lord vour God ond serve only ائهم % Matthew 4:10 Youlube Cathotc TAMIL CATHOLIC TV - ShareChat ✝️இயேசுவே ஜீவன் - catholic] Worship the Lord vour God ond serve only ائهم % Matthew 4:10 Youlube Cathotc TAMIL CATHOLIC TV catholic] Worship the Lord vour God ond serve only ائهم % Matthew 4:10 Youlube Cathotc TAMIL CATHOLIC TV - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_481917_1c12ac23_1771693479717_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=717_sc.jpg)
![✝பைபிள் வசனங்கள் - Catholic] உன் கடவுளாகிய ணீடவரைவணங் கிட 90 அவர் ஒருவருக்கேபணிசெயீ 0 முத்தேயு 4:10 Carholic loulube TAMIL CATHOLIC TV Catholic] உன் கடவுளாகிய ணீடவரைவணங் கிட 90 அவர் ஒருவருக்கேபணிசெயீ 0 முத்தேயு 4:10 Carholic loulube TAMIL CATHOLIC TV - ShareChat ✝பைபிள் வசனங்கள் - Catholic] உன் கடவுளாகிய ணீடவரைவணங் கிட 90 அவர் ஒருவருக்கேபணிசெயீ 0 முத்தேயு 4:10 Carholic loulube TAMIL CATHOLIC TV Catholic] உன் கடவுளாகிய ணீடவரைவணங் கிட 90 அவர் ஒருவருக்கேபணிசெயீ 0 முத்தேயு 4:10 Carholic loulube TAMIL CATHOLIC TV - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_460862_34cf7bc8_1771693459069_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=069_sc.jpg)



