S.ANTHONY✝️YESUMARY
ShareChat
click to see wallet page
@anthonymundiyampakkam
anthonymundiyampakkam
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:30
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
01:00
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:57
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
00:20
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - ShareChat
00:55
புனிதர் அருளானந்தர் நவநாள் செபம் மற்றும் மன்றாட்டுமாலை ✞🍄🌿* செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும் மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். *–🙏🏻 ஆமென்.🙏🏻* *(தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)* புனித அருளானந்தருக்குச் செபம் கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக! இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். *🙏🏻– ஆமென்.🙏🏻* *🌿🍄✞புனித அருளானந்தரின் மன்றாட்டுமாலை✞🍄🌿* சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும் சுவாமி பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.. மறைச்சாட்சியரின் மாண்புமிகு அரசியாகிய மரியாவே... மறைசாட்சியான புனித அருளானந்தரே.... போர்த்துக்கல் நாட்டிலே லிஸ்பன் நகரிலே 1647 இல் உதித்தவரான புனித அருளானந்தரே.... அரசவையிலே இளவரசர் டான் பேத்ரோவின் தோழராய் வளர்ந்தாலும் கறையிலாத் தூய்மையாலும், கண்ணியமிக்கப் பொறுமையாலும் “வானத்தூதர்” என்றும், “மறைச்சாட்சி” என்றும் அழைக்கப்பட்ட புனித அருளானந்தரே.... இளமையில் கொடிய நோயுற்றபோது, புனித சவேரியாருக்கு வேண்டுதல் செய்து குணமடைந்ததால், துறவிகளின் ஆடை அணிந்து வாழ்ந்த புனித அருளானந்தரே.... புதினைந்து வயதிலே உலகைத் துறந்து, அன்னையையும் சுற்றத்தார் நண்பர்களையும் விட்டு, இயேசு சபையில் நுழைந்தவரான புனித அருளானந்தரே.... உள்ளத்தின் தாழ்மையினாலும் உடலின் ஒறுத்தலினாலும் பெரியோருக்குக் காட்டிய கீழ்ப்படிதலாலும் ஞான வாழ்விலே உயர்ந்தவரான புனித அருளானந்தரே.... பாரத நாட்டிலே மறைபரப்ப இறைவன் அழைப்பதை உணர்ந்ததும், அன்னையின் கண்ணீரையோ, அரசரின் வற்புறுத்தலையோப் பொருட்படுத்தாமல், மனத்திடன் காட்டினவரான புனித அருளானந்தரே.... 1673-ல் பாய்மரக் கப்பலில் பயணமாகி பாரத நாட்டிற்கு வரும் வழியில், புயலிலும் நோயிலும் பயணிகள் அவதியுற்றபோது, செபத்தாலும் புன்முறுவல் மாறாத பணியாலும் அனைவரையும் கவர்ந்தவரான புனித அருளானந்தரே... கோவா நகரிலே பல்வேறு பணிகளைப் பாங்குடன் செய்ததால் இரண்டாம் சவேரியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவரான புனித அருளானந்தரே... 14 ஆண்டுகளாக மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து நாடுகளிலும் ஆர்வத்துடன் திருமறையைப் போதித்த திருத்தூதுவரான புனித அருளானந்தரே.... தமிழ்நாட்டின் மாண்புமிக்க அப்போஸ்தலரான புனித அருளானந்தரே... வேதியர்களைப் பக்குவமாகத் தயாரித்தும் ஊக்குவித்தும் அவர்கள் வழியாகத் திருமறையை நிலைநாட்டியவரான புனித அருளானந்தரே... பல புதுமைகளால் இயேசுவின் திவ்விய போதகத்தைத் துலங்கச் செய்தவரான புனித அருளானந்தரே... கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தவும், ஏனையோரை மனம் திருப்பவும் சொல்லிலடங்காத் துணிவோடும், துயர்களோடும் நாடெங்கும் விசாரணைக் குருவாய் அலைந்து பணியாற்றிய புனித அருளானந்தரே... குறையாத பக்தியும், குன்றாத விசுவாசமும், சலியாத தயையும், மெலியாத தவமும் கொண்டு நற்பண்புகளின் குன்றாக விளங்கியவரான புனித அருளானந்தரே.... துன்பங்களைத் துணிவோடு எதிர்கொண்டு துயருறும்போது எல்லையற்ற பொறுமை காட்டியவரான புனித அருளானந்தரே... தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட மக்களுக்கு அருட்பணியாற்றுவதற்காக, பண்டார சுவாமிகள் என்ற நிலையைத் தேர்ந்து கொண்டவரான புனித அருளானந்தரே.... பகைவர் உம்மைக் கொல்லப் பலமுறை முயன்றாலும் இறையருளால் பலமுறை தப்பியவரான புனித அருளானந்தரே... மறைச்சாட்சி முடி அடைய வேண்டுமென்ற ஆவலால் பற்றியெரிந்தவரான புனித அருளானந்தரே... சண்டாளர் கையில் பிடிபட்டு மங்கலம், காளையார் கோவில் பாகணி முதலிய இடங்களில் நிந்தையையும், அடிமிதிகளையும் அனுபவித்தவரான புனித அருளானந்தரே... உம்முடன் வாதிக்கப்பட்ட சிலுவை நாயக்கர் வேதியரின் தெறித்து விழுந்த கண்ணை புதுமையால் குணப்படுத்தியவரான புனித அருளானந்தரே.... உமது அருள் வாக்கிலே வியப்புக் கொண்ட சேதுபதி அரசரால் வியப்புறுவிதமாய் விடுதலையாக்கப்பட்டவரான புனித அருளானந்தரே... உயர் பொறுப்பிற்காக 1686 ஆம் ஆண்டு இறுதியில் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது அரசராலும் பெரியோர்களாலும் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டவரான புனித அருளானந்தரே.... எத்தனையோ தடைகளையெல்லாம் பொறுமையுடன் அகற்றி, மகிழ்வுடன் பயணமாகி, மீண்டும் எங்கள் நாட்டுக்கு 1690 இல் வந்தவரான புனித அருளானந்தரே.... சில மாதங்களுக்குள்ளாகவே மறவ நாட்டில் திரளான மக்களுக்கு மெஞ்ஞானத்தை ஊட்டியவரான புனித அருளானந்தரே.... புகழ் பெற்ற் தடியத்தேவரையும், இன்னும் பல பெருமக்களையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே... மறவ நாட்டின் மங்காத மாணிக்கமான புனித அருளானந்தரே. இயேசுவைப் பின்பற்றி, உம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் உம்மையே கையளித்தவரான புனித அருளானந்தரே.... கொடுமையாய்க் கட்டுண்டு, நெடும் பயணத்தில் மானபங்கமாய் இழுக்கப்பட்டு, இருண்ட சிறையில் அடைக்கப்பட்டு துயருற்றவரான புனித அருளானந்தரே... மாந்திரியக்காரரின் வித்தை சகுனங்களையெல்லாம் திரு விசுவாசத்தால் முறியடித்தவரான புனித அருளானந்தரே.... ஓரியூரிலே, 1693 பெப்ருவரி 4-ம் தேதி. புதன்கிழமை நண்பகல் வேளையிலே, எண்ணற்ற மக்களின் முன்னிலையிலே மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்டவரான புனித அருளானந்தரே.... எங்களை விசுவாசத்தில் வளர்க்க உமது இரத்தத்தையே சிந்தியவரான புனித அருளானந்தரே... மகிழ்வோடும் ஆவலோடும் இயேசுவுக்காய் உயிரைத் தந்தவரான புனித அருளானந்தரே.... அஞ்சாத நெஞ்சத்தினராய் கொலைஞன் முன் தலை நீட்டி முழந்தாளிட்டவரான புனித அருளானந்தரே.... தம் சடலத்தைக் காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிய புனித அருளானந்தரே.... தலைவெட்டுண்டதும் வேதாளைப் பங்குக்குரு அருள்தந்தை ஜான் டி கோஸ்டாவுக்கு கனவில் தோன்றி, வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியவராகக் காட்சி தந்த புனித அருளானந்தரே.... விண்ணரசில் ஒளிமிக்க மறைச்சாட்சிகள் நடுவில் முடிசூடி நிற்பவரான புனித அருளானந்தரே.... உம்மை மன்றாடுவோருக்கு எண்ணிறந்த புதுமைகளைச் செய்யும் வள்ளலான புனித அருளானந்தரே.... ஆன்மப் பிணிகளையும், உடல் நோய்களையும் அறவேயொழிக்கும் நல்ல வைத்தியரான புனித அருளானந்தரே.... மறைப்போதகர்களுக்கு முன்மாதிரியான புனித அருளானந்தரே.... உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே… இயேசுவே எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி. உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே… இயேசுவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும் சுவாமி. உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே… இயேசுவே எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி.. மு. – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி. து. – புனித அருளானந்தரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். *🌿🍄செபிப்போமாக:🍄🌿* ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ மனிதருக்கு மனவுறுதி அளிக்கும் இறiவா! மறைச்சாட்சியான புனித அருளானந்தருக்குத் தளராத் திடனையும் விடாமுயற்சியையும் கொடுத்து, உமது நற்செய்தியை எம் மக்களுக்கு அறிவிக்கச் செய்தீர். அவர் இரத்தம் சிந்தி நாட்டிய விசுவாச சாட்சியத்தை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதுடன், கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுவைத்து மகிழவும் எங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு அதை மகிழ்வோடு அறிவிக்கவும் அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். *– 🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - VIDAS EJEMPLARES San JUAn DE BRITO VIDAS EJEMPLARES San JUAn DE BRITO - ShareChat
*புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம், 7மன்றாட்டு, மற்றும் புகழ்மாலை* 🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பும் சர்வேசுரன்; பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி:க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன். தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்புபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும். ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சிய:;டவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். – *🙏🏻ஆமென்.🙏🏻* 💕🌺💕🌺💕🌺💕🌺💕🌺💕🌺 *புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு* 💕🌺💕🌺💕🌺💕🌺💕🌺💕🌺 பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத புண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்புக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா. ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து புத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபுரி முதலிய இராச்சியங்களில் விடாதநோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலான வியாதிகளில்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேணுமென்று, நீரே எங்களுக்காக பரம கர்த்தரை வேண்டிக்கொள்ளும் பொருட்டு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத்துக்காக துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும், வியாதிக்காரருக்கு தேவகிருபையால் ஆரோக்கியங்கொடுத்த புனித செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களுக்கு வி:பேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரமகர்த்தர் தற்காத்து இரட்சித்தருள வேணுமென்று தேவகிருபை சிம்மாசனத்தில் மன்றாட உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. பூலோகமெங்கும் சுகிர்த நாமம் உடைத்தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமுமாயிருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்ல மனதைக் கொடுத்தருளும். இந்த இராச்சியத்துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும் சர்வேசுரனை மன்றாடும் படிக்கு உம்மை பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா. உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் வெறுத்து இயேசுநாதரைப் பற்றிப் பிராணனைத்தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு மார்செல்லியனுக்கு புத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுகளுடன் இயேசுநாதர் வந்து உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாயென்று சொல்லக்கேட்டு சந்தோ:மடைந்த புனித செபஸ்தியாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் புண்ணிய வழியிலே காங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து கர்த்தரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா உரோமாபுரி தியோக்கிலேசியன் என்ற இராயனால் அநேகம் அம்புகளால் எய்யவும், சாட்டை, கசை பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருச்சரீரத்தை அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கஞ்செய்யப்பட்ட புனித செபஸ்தியாரே, திருச்சபையாரெல்லாம் சர்வேசுரனுடைய சித்தத்துக்கேற்ப நடக்கத்தக்கதாகவும் சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத்தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.- பர, அருள், பிதா. முதல்: இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக. துணை: புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். *🍄செபிப்போமாக:🍄* 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி! உமது அதி உன்னதமான மகிமை பெற்ற புனித செபஸ்தியார், உமக்காக பட்ட பிரயாசங்களை தேவரீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சரீர நோய்களுக்கு சரியான சுகமருந்தாக்கத் திருவுளமானீரே, அவரது பேறுபலன்களை பார்த்து எங்கள் ஆத்தும வியாதியிலும், சரீரத்திலும் உண்டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, வியாதி, பேதி முதலிய தொத்து வியாதிகளிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணுமென்று இந்த ஏழு மன்றாட்டுக்களையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி *-🙏🏻ஆமென்.🙏🏻* 🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 *புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை* 🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி. . . . . இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி. . . . வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே... உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . . இத்தாலி தேசத்தில் அதிசயப்புண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரான புனித ஜெபஸ்தியாரே. . . . வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . தரித்திரர்களுக்கு உதார தகப்பனான புனித ஜெபஸ்தியாரே. . . . . . நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் புத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித்தவரான புனித ஜெபஸ்தியாரே... அநேக அற்புதங்களால் இயேசு கிறிஸ்துவினுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணினவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . . வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவராயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . வேதசாட்சிகளுக்குத் தங்கள் சோதனைகளிலும் மரணவேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையாயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . பக்தி நிறைந்த வாக்கியங்களாலும் அநேகர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . அஞ்ஞானிகளான அநேகருக்குச் சத்தியத்தை தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . . பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தர்களை முதலாய் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . அதிசயமான சகல புண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . விசுவாசிகளுக்கு உதவியாக, சக்கரவர்த்தி, உரோமாபுரி இராயனிடத்தில் சேனை தலைவராக உயர்த்தப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . அர்ச். பாப்பானவருக்கு மிகவும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . சிலுவை அடையாளத்தில் திமிர்வாதத்தை நீக்கினவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . ஊமையைப் பேசவைத்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . அநேக வியாதிகளை அதிசயமாகத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . எண்ணப்படாத புண்ணிய நன்மை அற்புதங்களைச் செய்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . உலகம் பசாசு சரீரத்தின் தந்திரங்களையெல்லாம் ஜெயித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங்கியவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . அத்தியந்த விசுவாசத்திடனை உடையவரான புனித ஜெபஸ்தியாரே. . . .. . . இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞானச்சூளையே. . உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் புறக்கணித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . இயேசுநாதருடைய சிநேகத்துக்காக இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இழந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . . . . இயேசுநாதரைப்பற்றிப் பிராணனைத்தர மிகவும் அபேட்சித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . சத்திய வேதத்தை அனுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத்தீர்வை இடப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . திரளான அம்புகளால் எய்யப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . அம்புகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடன் இராயன் முன்னிலையில் போய் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூர அரசைக் கண்டித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . குரூர மனம் மாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத வேதசாட்சியான புனித ஜெபஸ்தியாரே. . . . விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேதசாட்சியான புனித ஜெபஸ்தியாரே. . . . உமது இரக்கத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்;பித்த உத்தம வேதசாட்சியரான புனித ஜெபஸ்தியாரே. . . . மிக தைரிய சந்தோசத்துடனே வேதத்துக்காக பிராணனைக் கொடுத்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு புண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேத சாட்சி முடி சூட்டப்பட்டவரான புனித ஜெபஸ்தியாரே. . . . வேதசாட்சிகளுக்குள் விசேச மகிமைப்பிரதாபத்துடனே பிரகாசித்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபுரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளைநோய் பெருவாரிக்காய்ச்சல் நீங்கினதால் மிகவும் பேறுபெற்றவரான புனித ஜெபஸ்தியாரே. . . . பூலோகமெங்கும் சுகிர்தவாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே, சகல கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாரான புனித ஜெபஸ்தியாரே. . . . வைசூரி முதலிய வியாதி துன்பத்தில் ஆதரவும் அடைக்கலமுமாயிருந்தவரான புனித ஜெபஸ்தியாரே. . . . உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே. . . எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி. உலகத்தின் பாவங்களைப் . . . எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி. உலகத்தின் பாவங்களைப். . . எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. மு: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக. து: புனித செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். *🍄செபிப்போமாக🍄* 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 சர்வ வல்;லபமுள்ள சர்வேசுரா சுவாமி! எங்கள் இக்கட்டுகளையும் பலவீனங்களையும் கிருபையுடனே பார்த்து அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்ப துரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி புனித செபஸ்தியாருடைய வேண்டுதலினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படியாக கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். *🙏🏻ஆமென்🙏🏻* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
*Today’s Rosary Reflections* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 03.02.2026 *(Tuesday)* *⚜️The Sorrowful Mysteries⚜️* *🌿🌹1. The Agony of Jesus in the Garden Gethsemane* In today’s Responsorial Psalm, Psalm 86:2, we read: *"Guard my life, for I am devoted to You; save Your servant who trusts in You. You are my God."* Let us offer this first decade for the countless patients in intensive care units in hospitals, praying that God may protect their lives and grant them a new lease of life. *🌿🌹2. Jesus is Scourged at the Pillar* In Psalm 86:3, we read: *"Lord, have mercy on me, for I call to You all day long."* Let us offer this second decade for the many people who are longing for the merciful gaze of the Lord in their lives, that God may hear their earnest prayers. *🌿🌹3. Jesus is Crowned with Thorns* In today’s Gospel, we read about Jairus who fell at Jesus’ feet and pleaded, *"My little daughter is at the point of death. Please come and lay Your hands on her, so that she may be healed and live."* Let us offer this third decade, praying that God may touch and heal those who are struggling for life. *🌿🌹4. Jesus Carries the Cross* We thank God for giving the Church St.Blaise, today’s saint, who is known as a healer of bodily and spiritual illnesses, a physician of souls, and a martyr who brought relief even to those suffering from throat ailments. Let us offer this fourth decade in gratitude to God. *🌿🌹5. Jesus Dies on the Cross* As Tuesday is specially dedicated to St. Anthony, let us offer this fifth decade for families, praying that all disturbances and afflictions caused by evil spirits may be removed. *🙏🏻Amen.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - Life Giuing [ord February 03 Jesus soid 1o her, Daughter, your faith has madel well; you 2 Samuel 18: 9-10, 14, in peace; and bel go 24-25,30 19:3 Psalms healed of your 86: 1-6 Mark disease 5: 21-43 Mark 5.34 US Tu Life Giuing [ord February 03 Jesus soid 1o her, Daughter, your faith has madel well; you 2 Samuel 18: 9-10, 14, in peace; and bel go 24-25,30 19:3 Psalms healed of your 86: 1-6 Mark disease 5: 21-43 Mark 5.34 US Tu - ShareChat
*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 03.02.2026 *(செவ்வாய்)* *⚜️துயர்நிறை மறையுண்மைகள்⚜️* *🌿🌹1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி பதிலுரைப் பாடல் திருப்பாடல் 86:2-ல், *"என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்."* எனக் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள எண்ணற்ற நோயாளிகளின் உயிரைக் காத்து அவர்களுக்கு புதியதொரு வாழ்வை இறைவன் அளிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 86:3-ல், *"என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்."* என கூறப்பட்டுள்ளது. தங்களது வாழ்வில் ஆண்டவரின் இரக்கப் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் மன்றாட்டுகளுக்கு இறைவன் செவிமடுத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து* இன்றையத் திருப்பலி நற்செய்தியில், யாயிர் என்பவர் *"அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார்."* என்பதை வாசித்தோம். உயிருக்குப் போராடும் மக்களை இறைவன் தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,* உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்தியவரும், ஆன்மாக்களின் மருத்துவரும், தொண்டையில் சிக்கும் பொருள்களை நீக்கி சுகமளிப்பதில் வல்லவரும், மறைசாட்சியாக மரித்தவருமான இன்றைய புனிதர் பிளெய்ஸை திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,* அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - Bog91bo5 999 50| பிர்ரவி 03 இயேசு அவரிடம், மகளே, உனது நம்பிக்கை உன்னைக் சாமுவேல் குணமாக்கிற்று 18: 9-10, 14, அமைதியுடன் போ நீ 24-25,30 19:3 திருப்பாடல் நோய் நீங்கி 86: 1-6 மாற்கு நலமாயிரு என்றார் 5: 21-43 மாற்கு 5:34 US Tuu Bog91bo5 999 50| பிர்ரவி 03 இயேசு அவரிடம், மகளே, உனது நம்பிக்கை உன்னைக் சாமுவேல் குணமாக்கிற்று 18: 9-10, 14, அமைதியுடன் போ நீ 24-25,30 19:3 திருப்பாடல் நோய் நீங்கி 86: 1-6 மாற்கு நலமாயிரு என்றார் 5: 21-43 மாற்கு 5:34 US Tuu - ShareChat
*இன்றைய நாள் சிந்தனை* 🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼 *⚜️அஞ்சாதீர், நம்பிக்கையை விடாதீர்.!⚜️* இன்றைய நற்செய்தி வாசகம் உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது. துயரம்: யாயிரின் மகள் சாகும் தறுவாயில் இருந்ததால், இயேசுவை நாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தார் என்றால், இயேசுவின் காலிலேயே விழுந்துவிட்டார். அச்சமும், அவநம்பிக்கையும்: யாயிரின் மகள் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவந்த ஆள்கள் “போதகரை இன்னும் ஏன் தொந்தரவு செய்கிறீர்?” என்று சொல்லி, அவருடைய நம்பிக்கையையும், மனவலிமையையும் குலைக்கிறார்கள். ஊக்கம்: இயேசுவோ “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று சொல்லி அவருக்கு ஊக்கமூட்டி, உடன் செல்கிறார். அழுகை, துயரம்: இறந்த வீட்டில் ஒப்பாரியும், ஓலமும், புலம்பலும் நிலவுகின்றன. துணிவான நம்பிக்கை: “சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்னும் இயேசுவின துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த சொற்கள். நகைப்பு: மக்களின் நம்பிக்கை இல்லாத நகைப்பு வியப்பும், மலைப்பும்: இயேசு சிறுமியை உயிர்ப்பித்தபோது, அங்கிருந்தோர் யாவரும் “மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்”. இத்தனை உணர்வுகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது இயேசுவின் நம்பிக்கையும், இயேசுமீது யாயிர் கொண்டிருந்த நம்பிக்யையும். அச்சம், கலக்கம், துயரம், அழுகை, ஓலம், புலம்பல், அமளி... போன்றவை இறைநம்பிக்கையின் எதிரிகள். இவை இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்காது, எனவேதான், இயேசு, “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என அறிவுறுத்துகிறார். நமது வாழ்க்கையில் எவ்வளவு கொந்தளிப்புகள் வந்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடாமல், நம்பிக்கையுடன் வாழ்வோம். *✝️மன்றாடுவோமாக:🛐* ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கின்ற அச்சம், அவமானம், கலக்கம், குழப்பம், துயரம், சாவு போன்ற வேளைகளில் நம்பிக்கை இழந்துவிடாமல், உம்மைப் பற்றிக்கொள்ளும் அருள்தாரும், ஆமென். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 03 பிப்ரவரி 2026, செவ்வாய் குழித்துறை மறைமாவட்டம் பொதுக்காலம் 4-ஆம் வாரம் dsaelruu WUHWA மலா 381-4| 2: 22-40. 06 அஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்  திபா 86:1 வாழ்க்கை பயணத்தில் பொறுமை காத்து நம்பிக்கை இழக்காமல் வாழ்வோம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு குணப்படுத்தும் இரண்டு நிகழ்வுகளை  பார்க்கின்றோம் இயசுவின் மேல் நம்பிக்கை கொண்ட இரத்தப்போக்குடைய பெண்ணிடமும் , ] யாயரிடமும் ` தன் மகளுக்காக மான்றாடிய தொழுகை கூட தலைவராகிய  எல்லை கடந்த பொறுமை  நேப்பதை பார்க்கின்றோம் , But be doers of the word | இத்தப்போக்குடைய பெண் 12 ஆண்டுகள் அவதிப்பட்டார் என்பது எளிதானது அல் அதிலும் குறிப்பாக  and not hearers onlyy deceivins yourselves ள்ளதை எல்லாம் நலம் பெறுவதற்காக அத்தனை ஆண்டுகள் செலவைழித்து இருக்கின்றார் ` SuL ' அந்தக் கூட்டத்தில் இயசுவை சந்தித்து பேச முடியாது என்று தன்றிலை அறிந்தும் அவரது ஆடையின் பெற்று விடவேண்டும் என்கின்ற அளவுக்கு பொறுமை காத்தார் அவரது விழும்பை தொட்டாவது நலம்  வளது நம்பிக்கையும் பொறுமையும்  போது  ஆபையில் என்ன இருக்கின்றது என்று பலர் எண்ற இறைவார்த்தையை னம் அவளுக்கு நலம் கொடுத்தது ` கேட்கிறவா்களாக மட்டும் அருந்து CLLETE  பாயீரின் மகளை இயேசு குணப்படுத்த செல்வதற்கு தாமதமானதால் அவள் இறந்து கூரிய உங்களை தருணத்திலும் அவர் பொறுமையோடு எதுவும் பேசாமல் நம்பிக்கையோடு இருக்கின்றார் அந்தப்  ஏமாற்றிக் பொறுமையுன் கூடிய நம்பிக்கை அவருடைய மகளுக்கு மீண்டும்  கொடுத்தது இந்தநிகழ்வுகள் ` உபிர் கொள்ன நாமும் பொறுமையோடு நம்பிக்கையுடன் வாழ்வில் செயல்படுகின்ற போது பெரிய மாற்றங்கள் ` வேண்பாம் நிகழ்வதை சுட்டிக்காட்டுகின்றது ` அதன்படி நடக்கிறவாகளாகவம் நினைத்ததுநடக்காத போது பொறுமை இழக்கின்றோமாி அல்தைு நாம் நம்முடைய  ாழ்வில்  இருங்கள் பொறுமையுடன் கூடிய நம்பிக்கையால் நினைத்ததை மீண்டும் பெறுகின்றோமாி சிந்திப்போம்  ` @ತeCಹlll 1 22 அன்பு இயேசுவே நாங்கள் நம்பிக்கையோடு வேண்டுவதை பெற்றுக்கொள்ள பொறுமையோடு  காத்திருக்க நல்மனதை தாரும் ஆமென் ` அருட்பணி அருள் வினவு  Del Vouupecomuhenaruyimedia Wwuhenanvicommunicationsin ٥٧ ٥ 6 ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 03 பிப்ரவரி 2026, செவ்வாய் குழித்துறை மறைமாவட்டம் பொதுக்காலம் 4-ஆம் வாரம் dsaelruu WUHWA மலா 381-4| 2: 22-40. 06 அஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்  திபா 86:1 வாழ்க்கை பயணத்தில் பொறுமை காத்து நம்பிக்கை இழக்காமல் வாழ்வோம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு குணப்படுத்தும் இரண்டு நிகழ்வுகளை  பார்க்கின்றோம் இயசுவின் மேல் நம்பிக்கை கொண்ட இரத்தப்போக்குடைய பெண்ணிடமும் , ] யாயரிடமும் ` தன் மகளுக்காக மான்றாடிய தொழுகை கூட தலைவராகிய  எல்லை கடந்த பொறுமை  நேப்பதை பார்க்கின்றோம் , But be doers of the word | இத்தப்போக்குடைய பெண் 12 ஆண்டுகள் அவதிப்பட்டார் என்பது எளிதானது அல் அதிலும் குறிப்பாக  and not hearers onlyy deceivins yourselves ள்ளதை எல்லாம் நலம் பெறுவதற்காக அத்தனை ஆண்டுகள் செலவைழித்து இருக்கின்றார் ` SuL ' அந்தக் கூட்டத்தில் இயசுவை சந்தித்து பேச முடியாது என்று தன்றிலை அறிந்தும் அவரது ஆடையின் பெற்று விடவேண்டும் என்கின்ற அளவுக்கு பொறுமை காத்தார் அவரது விழும்பை தொட்டாவது நலம்  வளது நம்பிக்கையும் பொறுமையும்  போது  ஆபையில் என்ன இருக்கின்றது என்று பலர் எண்ற இறைவார்த்தையை னம் அவளுக்கு நலம் கொடுத்தது ` கேட்கிறவா்களாக மட்டும் அருந்து CLLETE  பாயீரின் மகளை இயேசு குணப்படுத்த செல்வதற்கு தாமதமானதால் அவள் இறந்து கூரிய உங்களை தருணத்திலும் அவர் பொறுமையோடு எதுவும் பேசாமல் நம்பிக்கையோடு இருக்கின்றார் அந்தப்  ஏமாற்றிக் பொறுமையுன் கூடிய நம்பிக்கை அவருடைய மகளுக்கு மீண்டும்  கொடுத்தது இந்தநிகழ்வுகள் ` உபிர் கொள்ன நாமும் பொறுமையோடு நம்பிக்கையுடன் வாழ்வில் செயல்படுகின்ற போது பெரிய மாற்றங்கள் ` வேண்பாம் நிகழ்வதை சுட்டிக்காட்டுகின்றது ` அதன்படி நடக்கிறவாகளாகவம் நினைத்ததுநடக்காத போது பொறுமை இழக்கின்றோமாி அல்தைு நாம் நம்முடைய  ாழ்வில்  இருங்கள் பொறுமையுடன் கூடிய நம்பிக்கையால் நினைத்ததை மீண்டும் பெறுகின்றோமாி சிந்திப்போம்  ` @ತeCಹlll 1 22 அன்பு இயேசுவே நாங்கள் நம்பிக்கையோடு வேண்டுவதை பெற்றுக்கொள்ள பொறுமையோடு  காத்திருக்க நல்மனதை தாரும் ஆமென் ` அருட்பணி அருள் வினவு  Del Vouupecomuhenaruyimedia Wwuhenanvicommunicationsin ٥٧ ٥ 6 - ShareChat