Arab Tamil Daily
ShareChat
click to see wallet page
@arabtamildaily
arabtamildaily
Arab Tamil Daily
@arabtamildaily
|No.1 Tamil News Updater From Gulf|350K+Followers|
வணக்கம் அரபு தமிழ் டெய்லி வாசகர்களே....... வளைகுடா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வசிக்கின்ற நாடுக‌ளை சேர்ந்த உறவுகளின் புரிதலுக்காக இந்த பதிவு.... அன்புடன் Arab tamil daily-Team 🤝 #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - குவைத்உள்ளிட்டவளைகுடாநாடுகள், சிங்கப்பூர் மலேசியாஉட்படதமிழர்கள்வசிக்கின்றஉலகின் எந்தநாடுகளிலும் நடைபெறுகின்றதமிழ் அமைப்புகள் இந்திய சார்ந்த அமைப்புகள் நிகழ்வுகள், வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட முக்கியசெய்திகள் மரணஅறிவிப்புகள் இப்படிப்பட்ட எதுவாக இருந்தாலும் செய்திவடிவில் நிகழ்வின்முக்கியமானஓரிரு புகைப்படத்துடன்அனுப்பினால் நமதுதளத்தில் பதிவுசெய்யப்படும் சார்ந்த குறிப்பு தகவல் அனுப்பும் உறவுகள் அமைப்பு செய்திகள் என்றால் மட்டும் அந்த அமைப்பில் உங்களுடைய பொறுப்பு மற்றும் பெயரையும் குறிப்பிடவும்  குறைந்தகட்டணத்தில் உங்கள்தொழில் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் நமது சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளத்தில் வெளியிடவும் தொடர்புகொள்ளலாம் குறிப்பு விளம்பரங்கள் ஒருமுறை மட்டும் வெளியிடும் உங்களுடைய வார ம்பரமாகவும் கணக்கிலும் மற்றும் மாத கணக்கிலும் வெளியிடப்படும் மின்னஞ்சல்: ediforafdnewsQgmailoom வாட்சப்: +9194864433 52 arabtamildaily com WWW குவைத்உள்ளிட்டவளைகுடாநாடுகள், சிங்கப்பூர் மலேசியாஉட்படதமிழர்கள்வசிக்கின்றஉலகின் எந்தநாடுகளிலும் நடைபெறுகின்றதமிழ் அமைப்புகள் இந்திய சார்ந்த அமைப்புகள் நிகழ்வுகள், வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட முக்கியசெய்திகள் மரணஅறிவிப்புகள் இப்படிப்பட்ட எதுவாக இருந்தாலும் செய்திவடிவில் நிகழ்வின்முக்கியமானஓரிரு புகைப்படத்துடன்அனுப்பினால் நமதுதளத்தில் பதிவுசெய்யப்படும் சார்ந்த குறிப்பு தகவல் அனுப்பும் உறவுகள் அமைப்பு செய்திகள் என்றால் மட்டும் அந்த அமைப்பில் உங்களுடைய பொறுப்பு மற்றும் பெயரையும் குறிப்பிடவும்  குறைந்தகட்டணத்தில் உங்கள்தொழில் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் நமது சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளத்தில் வெளியிடவும் தொடர்புகொள்ளலாம் குறிப்பு விளம்பரங்கள் ஒருமுறை மட்டும் வெளியிடும் உங்களுடைய வார ம்பரமாகவும் கணக்கிலும் மற்றும் மாத கணக்கிலும் வெளியிடப்படும் மின்னஞ்சல்: ediforafdnewsQgmailoom வாட்சப்: +9194864433 52 arabtamildaily com WWW - ShareChat
குவைத்தில் நண்பனின் உடலை மருத்துவமனை வாசலில் விட்டுவிட்டு ஓடிய இரண்டு இந்தியர்கள் கைதாகியுள்ளனர்: குவைத்தில் இரண்டு இந்தியர்கள் தங்கள் நண்பரின் உடலை சிகிச்சைக்காக என்ற போர்வையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பின்னர் தலைமறைவான வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று(16/01/26) வெள்ளிக்கிழமை முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் நடந்தது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் அடையாளம் தெரியாத ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த மற்றொரு நபருடன் மருத்துவமனைக்கு வந்தார். சக்கர நாற்காலியில் இருந்த நபரை வார்டு உதவியாளரிடம் ஒப்படைத்த பிறகு, அடையாளம் தெரியாத நபர் உடனடியாக நோயாளியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு நைசாக மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே சென்றார். இதை தொடர்ந்து மருத்துவர் நடத்திய பரிசோதனையில் சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை கண்டறிந்தனர். இவருடைய மரணத்தை உறுதி செய்த பிறகு, மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் அளித்து, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உடலை தடயவியல் பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். பின்னர், உடலை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து வெளியே சென்ற நபரை அடையாளம் காண பாதுகாப்புத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது. மருத்துவமனையின் உள்ளேயும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் காரில் வந்த இருவரில் ஒருவர் காரில் இருக்க இன்னொரு நபர் இறந்த நபரை சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததை உறுதி செய்தனர். பின்னர் தலைமறைவான இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவரும் இந்தியர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான சூழ்நிலைகள் மற்றும் உடலை மருத்துவமனையில் விட்டுச் சென்றதற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த நபர் விசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமாக இவர்களுடைய அறையில் தங்கியிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார் என்றும், இவருடைய உடலை என்ன செய்வது என்று தெரியாமல், இது தொடர்பாக காவல்நிலையம் செல்லவும் பயந்தும் உடலை தங்களுடைய காரில் எடுத்து வந்து இப்படி செய்ததாக தெரியவந்துள்ளது. இவர்களுடைய இந்த செயல் காரணமாக இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவ அறிக்கையில் மரணம் இயற்கையாக நடந்தது என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - NEWS HR JUST IN DAILY mm 0ithllml [lr   17-01-2026/சனிக்கிழமை குவைத்தில் உடலை மருத்துவமனயில் விட்ட இந்தியர்கள் கைது குவைத்தில் உடன் தங்கியிருந்த நண்பன் இறந்த நிலையில் உடலை சிகிச்சைக்காக என்று பொய்யாக எடுத்து வந்து மருத்துவமனை வாசலில் விட்டு சென்ற இரண்டு இந்தியர்களை அதிகாரிகள் ன்று கைது செய்துள்ளனர் Whofsopp fo +91 94 86 44 33 52 For Advertisements Contact editoratdnews@gmail com arabtamildailycom arabtamildaily W NEWS HR JUST IN DAILY mm 0ithllml [lr   17-01-2026/சனிக்கிழமை குவைத்தில் உடலை மருத்துவமனயில் விட்ட இந்தியர்கள் கைது குவைத்தில் உடன் தங்கியிருந்த நண்பன் இறந்த நிலையில் உடலை சிகிச்சைக்காக என்று பொய்யாக எடுத்து வந்து மருத்துவமனை வாசலில் விட்டு சென்ற இரண்டு இந்தியர்களை அதிகாரிகள் ன்று கைது செய்துள்ளனர் Whofsopp fo +91 94 86 44 33 52 For Advertisements Contact editoratdnews@gmail com arabtamildailycom arabtamildaily W - ShareChat
தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பில் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது: பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தானம் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் டிசம்பர்-16 மற்றும் டிசம்பர்-17 ஆகிய இரு தினங்கள் தேசியதின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - ARIB BREAKING NEWS  DAILY Tui 13-12-2025      HRAI   1741" NATION தவெக பஹ்ரைன் பிரிவு சார்பில் இரத்ததான முகாம் நடந்தது பஹ்ரைனின் 54 வது தேசியதினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள்  இயக்கமும் தமிழக வெற்றிக்கழகமும் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில்நூற்றுக்கணக்கானவர்கள் இரத்ததானம் செய்தனர் <<செய்தியை விரிவாக படிக்க CLICK பண்ணுங்க > > Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, ardbtamildaily com Contact | ediforaldnewsOgmailcom arabtamildaily WWW . ARIB BREAKING NEWS  DAILY Tui 13-12-2025      HRAI   1741" NATION தவெக பஹ்ரைன் பிரிவு சார்பில் இரத்ததான முகாம் நடந்தது பஹ்ரைனின் 54 வது தேசியதினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள்  இயக்கமும் தமிழக வெற்றிக்கழகமும் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில்நூற்றுக்கணக்கானவர்கள் இரத்ததானம் செய்தனர் <<செய்தியை விரிவாக படிக்க CLICK பண்ணுங்க > > Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, ardbtamildaily com Contact | ediforaldnewsOgmailcom arabtamildaily WWW . - ShareChat
குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது: குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார். மேலு‌ம் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - ARAR BREAKING NEWS | DAL ILIIIL பாTறபா ரயிட 11-12-2025 CL DA குவைத்தில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது குவைத்தில் தனது மனைவியை திட்டமிட்டு உயிர்போகும் வரையில் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொன்ற வழக்கில் இந்தியருக்கு இன்று வியாழக்கிழமை விதித்து குற்றவியல் நீதிமன்றம் மரணதண்டனை அதிரடிதீர்ப்பளித்துள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, ardbtamildaily com Contact editoratdnews@gmail com ardbtamilddily WWW . ARAR BREAKING NEWS | DAL ILIIIL பாTறபா ரயிட 11-12-2025 CL DA குவைத்தில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது குவைத்தில் தனது மனைவியை திட்டமிட்டு உயிர்போகும் வரையில் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொன்ற வழக்கில் இந்தியருக்கு இன்று வியாழக்கிழமை விதித்து குற்றவியல் நீதிமன்றம் மரணதண்டனை அதிரடிதீர்ப்பளித்துள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, ardbtamildaily com Contact editoratdnews@gmail com ardbtamilddily WWW . - ShareChat
குவைத்திலிருந்து நாடுகடத்தபட்ட நபர்கள் அமீரகத்திலும் நுழைய முடியாத தகவல் பரிமாற்ற திட்டம் நடைமுறையில் வந்துள்ளது: குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டினர் பற்றிய தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்துறை அமைச்சகத்திற்கு கைமாறும் செயல்முறை நிறைவடைந்துள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கூடுதலாக, போக்குவரத்து, டேட்ரா வயர்லெஸ் தகவல் தொடர்பு திட்டம் மற்றும் மின்னணு கைரேகை பதிவு ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றமும் நிறைவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று(09/11/25) மாலையில் அறிவித்துள்ளது. இரு நாடுகளின் உள்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு இணைப்புத் திட்டங்களைப் பின்தொடர்வதற்காக இன்று நடைபெற்ற எட்டாவது கூட்டத்தில் பங்கேற்ற குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழில்நுட்பக் குழுக்களின் உறுப்பினர்களை போக்குவரத்து மற்றும் செயல்பாட்டுத் துறைத்தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல்லா அல்-அதிகி சந்தித்தார். புதிய அமைப்பு நிறைவடைந்த நிலையில், குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நுழைவுத் தடைகளை எதிர்கொள்வார்கள். மேலும் ஒருங்கிணைந்த வளைகுடா விசா நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதிலிருந்து நிலைமை இதைவிட மோசமாக மாறும், காலு வச்ச இடம் எல்லாம் கன்னிவெடி என்கிற மாதிரி ஒரு வளைகுடா நாட்டில் பயணத்தடை கிடைக்கும் எந்தவொரு வெளிநாட்டினரும் மற்ற எந்த வ‌ளைகுடா நாட்டிலும் வேலைக்காக செல்ல முடியாத நிலை ஏற்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - ARA BREAKING NEWS DALK IIIIIL H 09-12-2025   குவைத்திலும் அமீரகத்திலும் நீங்கள் இனி நுழைய முடியாது குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டினர் பற்றியதகவல்களைஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்துறை அமைச்சகத்திற்கு கைமாறும் செயல்முறை நிறைவடைந்துள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் இன்றையதினம் அறிவித்துள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements: editoratdnews@gmail com Contact arabtamildaily com arabtamildaily WWW ARA BREAKING NEWS DALK IIIIIL H 09-12-2025   குவைத்திலும் அமீரகத்திலும் நீங்கள் இனி நுழைய முடியாது குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டினர் பற்றியதகவல்களைஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்துறை அமைச்சகத்திற்கு கைமாறும் செயல்முறை நிறைவடைந்துள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் இன்றையதினம் அறிவித்துள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements: editoratdnews@gmail com Contact arabtamildaily com arabtamildaily WWW - ShareChat
குவைத்தில் மத பிரிவுகளின் அடிப்படையில் வழிபாட்டு தலங்களை அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரித்துள்ளதாக இஸ்லாமிய மத விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது: குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தெளிவான மற்றும் விரிவான வரைவுச் சட்டத்தைத் தயாரித்துள்ளதாக இஸ்லாமிய மத விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரைவுச் சட்டத்தை இறுதி ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் அமைச்சகம் சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. புதிய வரைவுச் சட்டம், குடிமக்களிடையே மத சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதோடு,வழிபாட்டுத் தலங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் புதிய வரைவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசியல், வணிகம் மற்றும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கு வழிபாட்டுத் தலங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் வரைவுச் சட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் நிதி விவகாரங்களை கடுமையாக மேற்பார்வையிடுவதை உறுதி செய்வதற்கும் வரைவு சட்டம் அழைப்பு விடுக்கிறது. நாட்டில் அவரவர் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதையும் இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள பல்வேறு மத பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்க ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குவதற்கும் வரைவுச் சட்டம் வழிவகை செய்கிறது. இதற்கான விதிமுறை மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குவது இந்தக் குழுவின் பொறுப்புகளில் அடங்கும். புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததும், நாட்டில் பிற மதங்களுக்கான பல வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும். அதே நேரத்தில்,புதிய சட்டம் பிற மதங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் நாட்டின் நலன்களை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி செயல்படுத்தப்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - ARAR BREAKING NEWS | DAIY Tamd ஏTIELI TITTTI 10-12-2025 மத விவகாரத்துறை புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது குவைத் குவைத்திலுள்ளமத பிரிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான வழிபாட்டு தலங்களை அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய LSu வரைவுச்சட்டத்தைத்தயாரித்துள்ளதாக இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகம் மத அறிவித்துள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements. arabtamildaily com] arabtamildaily  Contact editoratdnews@gmail com WWW . ARAR BREAKING NEWS | DAIY Tamd ஏTIELI TITTTI 10-12-2025 மத விவகாரத்துறை புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது குவைத் குவைத்திலுள்ளமத பிரிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான வழிபாட்டு தலங்களை அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய LSu வரைவுச்சட்டத்தைத்தயாரித்துள்ளதாக இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகம் மத அறிவித்துள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements. arabtamildaily com] arabtamildaily  Contact editoratdnews@gmail com WWW . - ShareChat
குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தனர்: குவைத்தின் அல்-ராய் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று(09/12/25) செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த ஷுவாய்க் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் கட்டிடத்தின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தலைமையில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - ARIS BREAKING NEWS | DAILY IIIIIL ميو  ٧٧٧٥ ٥  09-12-2025 குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் பலி குவைத்தின் அல்ராய் பகுதியில்  கட்டுமானப் பணிகள்நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்ததுயரமானசெய்தி வெளியாகியுள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements. Confacf editoratdnews@gmail com arabtamildaily rabfamildaily com WW . ARIS BREAKING NEWS | DAILY IIIIIL ميو  ٧٧٧٥ ٥  09-12-2025 குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் பலி குவைத்தின் அல்ராய் பகுதியில்  கட்டுமானப் பணிகள்நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்ததுயரமானசெய்தி வெளியாகியுள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements. Confacf editoratdnews@gmail com arabtamildaily rabfamildaily com WW . - ShareChat
குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்: குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்(வயது-27) என்ற இந்திய இளைஞர் சொந்த ஊரில் நேற்றிரவு நடந்த விபத்தில் மரணமடைந்தார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முண்டூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பாலக்காடு கண்ணாடி அடுத்த லுலு மால் அருகே வைத்து இரவு 11:00 மணி அளவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கொண்டார். குவைத்தில் வேலை செய்துவந்த பிருத்விராஜ், துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து,விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி கொண்டார். இவருடைய தந்தை ஹரிதாசன் முத்து குவைத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். மகனின் மரண செய்தி அறிந்த அவர் இரவு ஊருக்கு திரும்புகிறார். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - ARAR BREAKING NEWS | DALK u లLI FITTu 03-12-2025 a குவைத்தில் வேலை செய்து வந்த இளைஞர் மரணமடைந்தார் குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்வயது- 27) என்ற இந்திய இளைஞர் துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த  நிலையில் நேற்றிரவு ஏற்பட்டவிபத்தில் சிக்கியுள்ளார் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, arablamildaily Contact editoratdnews@gmail com arabtamildaily com| WWW . ARAR BREAKING NEWS | DALK u లLI FITTu 03-12-2025 a குவைத்தில் வேலை செய்து வந்த இளைஞர் மரணமடைந்தார் குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்வயது- 27) என்ற இந்திய இளைஞர் துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த  நிலையில் நேற்றிரவு ஏற்பட்டவிபத்தில் சிக்கியுள்ளார் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, arablamildaily Contact editoratdnews@gmail com arabtamildaily com| WWW . - ShareChat
துபாய் ஆட்சியாளர் இன்று அறிமுகம் செய்த புதிய சட்டம் தவறவிட்ட பொருட்களை ஒப்படைக்கும் நபருக்கு 50,000 திர்ஹம் வரை வெகுமதி வழங்கப்படும்: துபாயில் தவறவிட்ட பொருட்களை காவல்துறையிடம் திருப்பி ஒப்படைக்கும் நபர்களுக்கு 50,000 திர்ஹம் வரை வெகுமதி கிடைக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் புதிய தொலைந்து போன & கண்டுபிடிக்கப்பட்ட சட்டத்தை(Lost&Found) அறிவித்தார். சட்டத்தின்படி, பொருளின் மதிப்பில் 10 சதவீதம் வரை வெகுமதி வழங்கப்படும். இது அதிகபட்சமாக 50,000 திர்ஹம் வரையில் இருக்கும். இந்த புதிய சட்டப்படி பொருட்களை தொலைந்தது மற்றும் கைவிடப்பட்டவை என்று இரண்டாக வகைப்படுத்துகிறது. தொலைந்து போன பொருட்களில் சுயநினைவுடன் வேண்டுமென்றே கைவிடப்படாத உரிமையைக் கொண்ட பணம் அல்லது மதிப்புமிக்க சாதனங்களான பிற பொருட்கள் அடங்கும். வேண்டுமென்றே கைவிடப்பட்ட பொருட்கள் தொலைந்த பட்டியலில் சேராது. தெருவில் திரியும் விலங்குகள் இந்த வகைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. தவறவிட்ட பொருட்களைக் கண்டுபிடிப்பவர்கள் 24 மணி நேரத்திற்குள் துபாய் காவல்துறையின் மின்னணு அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து தங்களிடம் கிடைத்த பொருட்களை 48 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் யாராவது தவறவிட்ட பொருட்களை கண்டுபிடிப்பவர்கள் அதை தன்னுடைய பொருளாக பயன்படுத்த வேண்டாம், அதை தங்களுக்கு சொந்தமானவை என்று கோரக்கூடாது. இருப்பினும், உரிமையாளர் ஒரு வருடத்திற்குள் நீங்கள் ஒப்படைத்த பொருளை பெற முன்வரவில்லை என்றால், கண்டுபிடிப்பாளர் காவல்துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு சொத்தை கையகப்படுத்த விண்ணப்பிக்கலாம். ஒரு வருடம் கழித்து உரிமையாளர் முன்வந்தால், சொத்தை திருப்பித் தர வேண்டும். இவை மீறப்பட்டால், குற்றவியல் சொத்தை கண்டுபிடித்த நபர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார். மீறுபவர்களுக்கு 200,000 திர்ஹாம்கள் வரை அபராதம் விதிக்கப்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - LRR BREAKING NEWS | DALK III 25-11-2025 3 M DAIL a ஆட்சியாளர் நெகிழ்ச்சியாக புதிய சட்டத்தை அறிவித்தார் துபாய் துபாயில் தவறவிட்ட பொருட்களை காவல்துறையிடம் திருப்பி ஒப்படைக்கும் நபர்களுக்கு 50,000 திர்ஹம் வரை வெகுமதி கிடைக்கும் Lost&Found என்ற புதிய சட்டத்தை ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூம் இன்றைய தினம் அறிவித்தார் அல் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, editoratdnews@gmail com Contact arabfamildaily com arabfamildaily WWW . LRR BREAKING NEWS | DALK III 25-11-2025 3 M DAIL a ஆட்சியாளர் நெகிழ்ச்சியாக புதிய சட்டத்தை அறிவித்தார் துபாய் துபாயில் தவறவிட்ட பொருட்களை காவல்துறையிடம் திருப்பி ஒப்படைக்கும் நபர்களுக்கு 50,000 திர்ஹம் வரை வெகுமதி கிடைக்கும் Lost&Found என்ற புதிய சட்டத்தை ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூம் இன்றைய தினம் அறிவித்தார் அல் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements, editoratdnews@gmail com Contact arabfamildaily com arabfamildaily WWW . - ShareChat
குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் குடிமகன் கைதாகியுள்ளார்: குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த முயன்ற குவைத் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய இவரை தீவிர விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக்குப் பிறகு கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று(25/11/25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஒரு பயங்கரவாத அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து வெடிபொருட்களை தயாரித்து பெரும் அளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பது கண்டறியப்பட்டது. சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களின் வழியாக பயங்கரவாதக் கருத்துக்களை பரப்பி சிறார்களை ஈர்ப்பது மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை திரட்டுவதும் நோக்கமாக கொண்டு அவர் செயல்பட்டு வந்தார் என்பதையும் உள்துறை கண்டறிந்துள்ளது. இதேபோல் கடந்த மாதங்களிலும் இதே திட்டத்துடன் செயல்பட்ட சிலரை உள்துறை கண்டறிந்து கைது செய்து தாக்குதல் திட்டத்தை முறியடித்திருந்தனர். இந்நிலையில் இந்த நபர் கைது தொடர்பான செய்தியை உள்துறை இன்று வெளியிட்டுள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - LRR BREAKING NEWS | DAILY Tamd 25-11-2025 L[ DALK ~ குவைத்தில் தாக்குதல் நடத்தும் திட்டம் முறியடிக்கப்பட்டது குவைத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் இணைந்து வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டத்தை  தீட்டிய குவைத் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements: editoratdnews@gmail com arabfamildaily com arabtamildaily Contdct WW . LRR BREAKING NEWS | DAILY Tamd 25-11-2025 L[ DALK ~ குவைத்தில் தாக்குதல் நடத்தும் திட்டம் முறியடிக்கப்பட்டது குவைத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் இணைந்து வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டத்தை  தீட்டிய குவைத் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements: editoratdnews@gmail com arabfamildaily com arabtamildaily Contdct WW . - ShareChat