🔥🌷#இருளாயிஅம்மன்🌷🔥
🌴கருப்பனின் தங்கை பெண் தெய்வங்களில் சிறுமியாக தெய்வமானவள் தான் இருளாயி அம்மன்..
தீயில் மாண்ட காளியின் அவதாரம்.. பெண் தெய்வ வழிபாட்டில் இருளாயி வழிபாடு மிகவும் உக்கிரமான வழிபாடு..
இருளாயி அம்மன் தனது 12 வயதில் தீயில் மாண்டு மக்களை காத்தவள் என கூறுவார்கள்..
இருளாயி வழிபாடு என்னவென்றால் சாம வழிபாடு..
அதாவது நள்ளிரவு 12மணி நேரத்தில் அப்ப வாங்கிய நெல்மணிகளை அவித்து அப்பவே சாதம் வடித்து தாயிக்கு நாட்டு கோழி பலியிட்டு கறிசோறு படைத்து வழிபாடு செய்வார்கள்..
இதில் ஒரு முறை உள்ளது அதாவது ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள் திருமணம் ஆகாமல் இருந்தால் அந்த பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்..
திருமணம் முடிந்த பிறகு இருளாயி அம்மன் வழிபாட்டில் அந்த பெண் கலந்து கொள்ளகூடாது.
காரணம் இருளாயி கன்னி கழியாத பெண் சிறுமி..
மேலும் தாயிக்கு படைக்கபட்ட படையலை வெளிஆட்கள் உண்ணக்கூடாது..
நாய் கூட அந்த உணவை உண்ணக்கூடாது என்பதற்காக புதைத்து விடுவார்கள்..
இவ்வழிபாடு இருளாயிக்கு செய்யும் பூசை முறைகள்..
🌷🌷 #💖என்னை கவர்ந்த பெண்மணிகள் 👑 #🙏கோவில் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏நமது கலாச்சாரம் 🙏🏻🙏🏻
🌹நல்லதே நடக்கும் 🌹
https://youtu.be/nBnDNWePF-8?si=zaXBdsufEnfRgh5O விருச்சிக ராசி 2026 #பிரபஞ்ச ரகசியம்
இப்போ தான் நகை வேணாம்....
சொத்து வேணாம்... வரதட்சணை வேணாம்...பொண்ணு மட்டும் இருந்தா போதும்னு தோணுதா?
பொண்ணு சுலபமா...
கிடைச்சிருந்தா... இதெல்லாம் வேணாம்னு சொல்ல தோணியிருக்காது...
இன்னும் அதிகமா எவ்வளவு வாங்கலாம்னு யோசிச்சு இருப்பீங்க...வாழ்க்கை ஒரு வட்டம்...எதுவும் இங்க எப்பவும் நிரந்தரம் இல்ல... இப்ப வழிக்கு வந்தீங்களா...?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி எந்த பிரையோஜனமும் இல்ல....
😂🤣😂🤣
அதே மாதிரி பெண்களே...சொந்த வீடு இருக்கா... ? கார் இருக்கா..? கல்யாணத்திற்கு பிறகு தனிக் குடித்தனம் போகணும்...
அரசு வேலை பார்க்கணும்....
பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவாங்க...இப்படியெல்லாம் பார்த்து மாப்பிள்ளை கேட்காதீங்க....
மாப்பிள்ளையோ...பொண்ணோ...ஒரு டிகிரியாவது கண்டிப்பா படிச்சிருக்கணும்....வயது பெண்ணை விட ஆணுக்கு 3 -லிருந்து 5-க்குள் அதிகமாக இருக்கலாம்... அதற்கு மேல் போகக் கூடாது... ஆணும் வேலைக்கு போகணும்...
பெண்ணும் வேலைக்கு போகணும்... முக்கியமாக ஆணுக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது... ஆடம்பரமா திருமணத்தை நடத்தாம எளிமையா நடத்தி செவுகள இரு வீட்டாரும் பகிர்ந்திக்கிரணும்...
இப்படி தான் துணையை தேட வேண்டும்...
திருமணத்திற்கு பிறகு...
வீட்டு வேலைகள் ரெண்டு பேரும் பகிர்ந்து தான் பார்க்கணும்... வரவு செலவுகள ரெண்டு பேரும் சேர்ந்து பேசி எந்த ஒரு முடிவையும் எடுக்கணும்... பரஸ்பர மரியாதை அவசியம்...இருவருமே பிறரின் கருத்துக்களை பொறுமையா கேட்கணும்...இருவருமே தன் துணையின் குடும்ப உறுப்பினர்களை மதித்து நடக்க வேண்டும்... ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் கடன் வாங்க கூடாது... ஆடம்பரமா குடும்பம் நடத்தாம... எளிமையா நடத்த பழகிக்கணும்..இருவரும் செலவுகள குறைக்கணும்.. எதிர்கால திட்டமிடல் சேமிப்பு அவசியம்...குழந்தைகளை இருவருமே பராமரிக்க வேண்டும்... இப்படியெல்லாம் இருக்கிற மாதிரி
மனநிலை உள்ள ஆணையோ...பெண்ணையோ..
தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது இருவருக்கும் நலம்...
இரு குடும்பத்துக்கும் நலம்... சமுதாயத்துக்கும் நலம்...👍👍 #🚹உளவியல் சிந்தனை
(ஒரு பொழுது அண்டை அயலார் பெண்கள் ஒன்று கூடி பொழுது போக்காக பேசி கொண்டிருக்கையில்...)
Neighbor 1 : இன்னைக்கு என் கணவருக்கு பிடித்த சமையல் செஞ்சிருக்கேன்!ரொம்ப நல்லா ருசியா... சமைச்சிருக்கேன்...🤤🤤
New Neighbor : என்னைக்குமே உன் கணவருக்கு பிடித்த சமையல் தானா..உங்க வீட்ல..? உன் கணவர் சாப்றதுக்கு முன்னாடியே நீ சாப்ட்ருவியா?
Neighbor 1: ஆமா அப்பத்தான் உப்பு... உரப்பு...சரியா இருக்கா..இல்லயான்னு பார்த்து சரி பண்ண முடியும்!
New Neighbor : புத்திசாலி தான்...
Neighbor 1: அது மட்டுமில்லாம... நேரத்துக்கு நான் சாப்டலைன்னா...
எங்க வீட்டுக்காரர் திட்டு வாரு..ஏங்கிட்ட பேசாம கோவிச்சிக்கிருவாரு...
New Neighbor :
(mind voice:-ரொம்பத்தான்... Scene... போட்றா... என்னமோ...இவ தான் புருசன் மேல பாசம் இருக்குற மாதிரி... இவ புருசன் தான் பொண்டாட்டி மேல பாசம் வச்சு இருக்கிற மாதிரி 😤😤
பொறு... எதுத்த வீட்டுக்காரி என்ன சொல்றான்னு... கேட்போம்.....) ஏங்க...உங்க வீட்ல யாருக்கு பிடிச்ச சமையல் daily...? நீங்க எப்ப சாப்பிடுவீங்க?
Neighbor 3: எங்க வீட்ல எப்பவுமே எனக்கு பிடிச்ச சமையல் தான்...ஆனா...நான் என் வீட்டுக்காரர் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவேன்...
New Neighbor : 🤔🤔🤔
இப்ப இவுங்க என்ன சொல்ல போறாங்கன்னு எனக்கு தெரியும்!
Neighbor 1 : என்ன..என்ன...?
Neighbor 2 : என் புருசன் என் மேல அதீத அன்பு வச்சிருக்கிறாதால எனக்கு பிடிச்ச சமையல் தான் daily- அது மட்டுமில்லாம... அவர் உப்பு ...உரப்பு...சரியா இருந்தா..உன்ன சாப்பிட சொல்லுவாரு அதான்ன..
சொல்ல போற
(mind voice : இவளும் அவள மாதிரியே over...ஆ...சீன போடுறா....)
Neighbor 3: அதெல்லாம் ஒண்ணுமில்ல...
Neighbor 2: என் கணிப்பு தப்பாதே...
அப்போ..நீ என்ன சொல்ல வர்ற....?
Neighbor 3: என் வீட்டுக்காரர் சாப்றதுக்கு முன்னாடி நான் சாப்பிட்டா... கொஞ்சமா பாத்து பாத்து சாப்பிடணும்...ஆஆசைய அதிகமா...சாப்பிட்டு அவருக்கு பத்தாம போயிடுச்சுன்னா...அதேது என் புருசன் சாப்பிட்டதுக்கு அப்புறம் நான் சாப்பிட்டா... எல்லாத்தையும் போட்டு வயித்துக்கும் மனசுக்கும் குறைவில்லாம... திருப்தியா... சாப்பிடலாம்ல.. அதுக்குத்தான்....
Neighbour 1 and New :
😱😱😱😱😱😱
Neighbour 1: உன் கணிப்புல தீய வைக்க...
New Neighbour :😔😔😔
Neighbour 3:😎😎😎 #🤓தமிழ் காமெடி😄 (மிஸ்)
இந்த வீடியோவை நான் பலமுறை பார்த்து விட்டு என் பார்வையில் இருந்து சொல்கிறேன்...கை தெரியாம முதல்லபட்டது... அதை தொடர்ந்து அதையே சாக்கா வச்சு தெரிஞ்சே ஒரு தடவ வேணும்னே உரசுறது தெரியுது... ஆனா...அந்தப் பெண் நெனச்சிருந்தா.. அதை தவிர்த்திருக்கலாம்...
அங்கயே விலகி வந்திருக்கலாம்....செல்போனை பிடித்து வீடியோ எடுத்த கையை வைத்து மார்பை கவர் பண்ணியிருக்கலாம்...விரட்டி விரட்டி உரசுற நபர் மாதிரி தெரியல... கிடைச்ச சான்ஸ use பண்ண மாதிரி தெரியுது...வீடியோவ பல தடவ பார்த்திட்டு தான் சொல்றேன்...எங்கள் வீட்டிலும்... ஆண்கள் இருக்கிறார்கள்.. மூச்சு கூட விட முடியாத அளவுக்கு பேருந்தில் பயணம் செய்யும் சூழலில் என்ன செய்வது? பேருந்து நெரிசலில் எல்லா உடல் உறுப்புகளும்... பெண்களோட... பெண்களா இருக்கட்டும்.. ஆண்களோடு ஆண்களாக இருக்கட்டும்... ஆண்கள்..பெண்களாக இருக்கட்டும் தெரியாமல் உரசும் நிலை வரத்தான் செய்யும்...
இதை தவிர்க்க முடியாது...அருவருப்பாகத்தான் இருக்கும்... முடிஞ்ச வரை அதை தவிர்க்க முயற்சி செய்யணும்... உரசாத மாதிரி adjust பண்ணி நிற்க தெரியணும்..எப்படீன்னா...
பெண்கள் edge-ல் அமர்ந்திருக்கும் Seat பக்கம் நின்று கொண்டு ஆண்கள்.. நெருங்கி வரும் போதோ... கடந்து செல்லும் போதோ...பெண்கள் பக்கம் உடல் முழுவதுமாக சாய்த்து ஆண்களுக்கு வழி விட வேண்டும்...மார்பை உரசும் நிலை வந்தால் கைகளை கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும்.. பின்பக்கம் உரசுற மாதிரி சூழல் ஏற்பட்டால்..நம் கையில் உள்ள பை வைத்து பின்பக்கம் மறைத்துக் கொள்ள வேண்டும்... முடியலயா...driver Seat பக்கம் போய் நின்னுடனும்... ஒரளவுக்கு உரசுறத தவிர்க்க முடியும்... அத்துமீறல் அதிகமாகும் போது... பொறுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை... அந்த இடத்திலே கண்டிக்க வேண்டும்... உண்மையிலே இனி வரும் காலங்களில் இந்த நிகழ்வுக்கு பிறகு நிஜமாகவே நடக்கும் பட்சத்தில் பெண்கள் வீடியோ எடுத்தால் பெண்களைத் தான் குறை சொல்வார்கள்... உண்மையாக தவறான உரசுதல்..தொடுதல் உணர்ந்தால் அப்பவே react பண்ணிடனும்...Social media...ல போட்டா... Views தான் போகும் தீர்வு கிடைக்காது... தீர்வு கிடைக்கணும்னு நெனைக்கிறவுங்க அப்பவே... react பண்ணிட்டு போயிடுங்க...நிறைய பேர் நினைப்பு தப்பு பண்ணணும்..
ஆனா அது யாருக்கும் வெளியே தெரிஞ்சிடக் கூடாது.. ஏன்னா...மானம் போயிடும்ல... சுயக்கட்டுப்பாடு இருக்காது...
தான் செய்தது தவறுன்னு ஒத்துக்கவும் மாட்டாங்க.... அத்துமீறல் தொடரும் பட்சத்தில் பேருந்து ஒட்டுனர் நடத்துனர்கிட்ட சொல்லி இருந்தாலே அவர்கள் அந்த நபரை கண்டித்திருப்பார்கள்..இந்த வீடியோ எடுத்த பெண்ணையும் அந்த நபரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அந்த வீடியோவை போட்டு காண்பித்து அதில் யார் மீது தவறோ அதற்கு தகுந்த மாதிரி காவல் துறை நடவடிக்கை எடுக்க வைத்திருக்கலாம்... இதற்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை... தன் மீது தவறில்லை என நிரூபிக்க ஆயிரம் வழிகள் அந்த நபருக்கு இருக்கு...இருந்தும் அதை செய்யாமல் தற்கொலை செய்தது எதனால்? தவறு வீடியோ எடுத்த பெண் மீது என்றால் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் வரவழைத்து அந்த பெண்ணயே அந்த நபர் மீது தவறில்லை என்பதை சொல்ல வைத்திருக்கலாம்...யார் மீது தவறோ...அவர்கள் மீது
சட்டப்படி நடவடிக்கை
எடுக்க...வைத்திருக்க முடியும்!... 42 வயது நபர் தன் மீது தவறில்லாத பட்சத்தில் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்க வேண்டியதில்லை...பழிகளையும்...அவதூறுகளையும் கடந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும்... தவறு செய்திருக்கும் பட்சத்தில் அதை திருத்திக் கொள்ளலாம்... மறுபடியும் அந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம்...எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்றால் யாருமே உயிரோடு இருக்க முடியாது... திருத்தி கொள்ளக் கூடிய தவறுகளில் இதுவும் ஒன்று...
அந்த சம்பவம் உண்மையாக நடந்ததோ... இல்லையோ...அந்த நபர் இறந்ததால் அது அந்த பெண்ணின் மீது தவறு என்று ஆகிவிட்டது... பெண்களே...உங்கள் உடலை அனுமதி இன்றி யாரேனும் தொட்டாலோ..தொட முயற்சி செய்தாலோ... வீடியோவெல்லாம்... எடுக்காமல் நீங்களே.. கண்டித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள்...இது அந்த பேருந்தோடு முடிந்துவிடும்... இந்தப் ஆண் ((தற்கொலை) செய்த செயலால் உண்மையாகவே பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆண்கள் தப்பித்துக் கொள்வார்கள்... பேருந்தில் பயணம் செய்ய முடிவெடுத்து விட்டால்...சகிப்புத் தன்மை அவசியம்...சகிக்க முடியாத விசயங்கள் தினசரி ஒராயிரம் எல்லோருக்கும் நடக்கத்தான் செய்கிறது...சகித்து கொள்ள முடியவில்லை என்றால்...மகளிர் மட்டும் பேருந்தை பயன்படுத்தவும்... எல்லோரும் வீடியோ எடுத்து கயவர்களை நிரூபித்து கொண்டே இருந்தால் என்ன செய்வது? நேரம் வீண்... மன உளைச்சல்..சில நேரங்களில் தெரியாமல் நிகழும் நிகழ்வுகளுக்கு குற்றம் சுமத்தினால்... இதற்கு தீர்வு தான் என்ன?
என் பதில்:-
நம் உள்ளுணர்வு தவறான
உரசுதலையோ...தொடுதலையோ..உணர்ந்தால் கொஞ்சம் தள்ளி நில்லுங்கன்னு கோபமா... சொல்லுங்க..அப்படி சொல்லியிருந்தாலே...நம்
கோபத்தை புரிந்து கொண்டு அந்த நபர் ஒதுங்கி இருப்பார்...தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை... #🚹உளவியல் சிந்தனை






